Monday, March 30, 2026

கோவில்வெண்ணி,ஸ்ரீ வெண்ணீஸ்வரர் ஆலயம்ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ கரும்பீஸ்வரர் ஆலயம். (அம்மாப்பேட்டை பகுதி) திருமுறை தலம்

கோவில் வெண்ணி
கோயில் வெண்ணி வெண்ணி கரும்பேஸ்வரர் கோயில் (Venni Karumbeswarar Temple) 
கோவில்வெண்ணி,
ஸ்ரீ வெண்ணீஸ்வரர் ஆலயம்
ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ கரும்பீஸ்வரர் ஆலயம்.

⛳இருப்பிடம்
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
நீடாமங்கலம் - தஞ்சாவூர் பிரதான சாலையில் கல்லூரிக்கு எதிர்புறம் - வடபுறம் தனி சாலை 500 மீட்டர் தூரத்தில் ஆலயம். 

🏵️சிறப்பு
 சர்க்கரை நோய் (Diabetes) தீர்க்கும் பரிகாரத் தலமாகப் போற்றப்படும், தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். கரும்புகளைக் கட்டியது போன்ற லிங்கத் திருமேனி கொண்ட இத்தலம், கரிகால் சோழன் வெண்ணிப் போரில் வென்ற சிறப்பு வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும். 
🛐மிகவும் பழமை வாய்ந்த இத்தலத்து இறைவனை, நான்கு யுகங்களிலும் பலரும் வழிபட்டதாக தலவரலாறு சொல்கிறது. 
💫இத்தலம் முசுகுந்த சக்கரவர்த்தி திருப்பணி செய்த தலமாகும். சங்ககாலப் புலவர் வெண்ணிக் குயத்தியார் இங்கு வாழ்ந்துள்ளார்.

கோயில் சிறப்பம்சங்கள்:
மூலவர்: வெண்ணிகரும்பேஸ்வரர் (திரயம்பகேஸ்வரர், வெண்ணிநாதர்).
அம்மன்: அழகிய நாயகி (சவுந்தர நாயகி).
தல விருட்சம்: நந்தியாவர்த்தம்.
சிறப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்கள் வழிபட்டால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் சூரிய மற்றும் சந்திர தீர்த்தங்கள் உள்ளன. கரும்பும் நந்தியாவர்த்தமும் செழித்திருந்த இடமாதலால் 'வெண்ணி' எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. 

பங்குனி மாதம் 2, 3, 4, ஆகிய நாட்களில் இறைவன் திருமேனியை, சூாியன் தீண்டுகிறது.

🛕ஆலய அமைப்பு :
ஆலயம் கிழக்கு நோக்கியது. முன்புறம் அழகிய குளம் அமைந்துள்ளது.

3 நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கியது.
உள் நுழைந்தவுடன், பலிபீடம், நந்தி மண்டபத்துடன் உள்ளது.

⚡ஆலயம் முன்மண்டபத்துடன், சுவாமி அம்பாள் கருவரைகளுடன் உடையது.
சுவாமி கிழக்குப் பார்த்து அமைந்துள்ளார்.
கருவரை அர்த்தமண்டபத்தின் முன் ⚡துவாரபாலகர்கள் சுதையில் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய விநாயகரும் உள்ளார். முன் மன்டபத்தில் ஒரு உலோக நந்தியும் சுவாமி நோக்கியுள்ளது.
அம்பாள் தெற்கு நோக்கிய தனி கருவரை.

🏵️பிரகாரம் முழுதும் புதிய கல் தரை அமைப்பு. பிரகாரத்தில், வண்ணி மரத்துடன் ஒரு விநாயகர், கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, தனி சண்டிகேஸ்வரர். 
மேற்கு பிரகாரமண்டபம் முழுதும் வெளவால் நெத்தி மண்டபம்
தனித்தனியாக, விநாயகர், வள்ளிதெய்வானை சுப்பிரமணியர், மகாலெட்சுமி அமைந்துள்ளனர்.
கிழக்கில், பைரவர், சூரியன், நவகிரகங்கள் உள்ளனர்.
⚡நகரத்தார் கட்டிய கற்றளி ஆலய அமைப்பு.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
தற்போது நல்ல சாலை வசதி உள்ளது.
2025 ல் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஆலயம் தற்போது பொலிவுடன், நல்ல பராமரிப்புடன் உள்ளது.
ஏராளமான பக்தர்கள் - பரிகாரம் செய்வதற்கும், அர்ச்சனை வழிபாடு செய்வதற்கும் வருகிறார்கள்.
காலை 9 மணிக்குத்தான் ஆலயம் திறக்கப்படுகிறது.
ஒரே ஒரு பூசை பொருட்கள் விற்கும் கடையைத் தவிர வேறு எந்த கடைகள், வீடுகள் அருகில் இல்லை.
வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.
தனியார் பராமரிப்பில் உள்ள ஆலயம்.
மீள் தரிசனம் 8.3.24 ல் மற்றும் 8.3.26 ல் தரிசனம் கிடைத்தது.
#திருமுறைதலம்
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#அம்மாப்பேட்டை பகுதியில் சில தலங்கள்8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...