Showing posts with label ஆலயதரிசனம். Show all posts
Showing posts with label ஆலயதரிசனம். Show all posts

Thursday, March 31, 2022

ஆலயதரிசனம் - செம்மங்குடி (திருவீழிமிழலை - வடக்கில் 3. கி.மீ.)

செம்மங்குடி:
ஸ்ரீ சுந்தரேஸ்வரர்,
ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ ஹரிஹர புத்ரார், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயங்கள் கும்பாபிஷேகம் 27.03.2022 அன்று கிராம மக்கள் பெரும்பங்களிப்பில் சிறப்பாக   நடைபெற்றுள்ளது.  
இடம், வழி:
1.திருவீழிமிழலைக்கு வடக்கில் வடகரை சாலையில் 3 கி.மீ. தூரத்திலும்,
2. ஸ்ரீ கண்டபுரம் தெற்கில் 3 நாகம்பாடி அருகில் பிரிந்து இவ்வூர் வரலாம்.
3. புகழ்பெற்ற கோனேரிராஜபுரம்,பாடல் பெற்ற தலமான அன்னியூர் வந்து கிழக்கில் 2 கி.மீ.
4.கடகம்பாடியிலிருந்து, செவ்வாய் தலம் சிறுகுடி யிலிருந்து மேற்கில் 1 கி.மீ.தூரம். 

கீர்த்திமான் ஆறு என்ற சிற்றாற்றின் வட கரையில் அமைந்துள்ள சிறு கிராமம்.
ஆழமான குளம் ஒட்டி கிழக்கு நோக்கிய வினாயகர் ஆலயம் தாண்டி சற்று அருகில் புதிய சுற்றுச்சுவர் கூடிய சிவன் ஆலயம். 

ஆலயம் முன்பு, பெரிய அளவில், அமைக்கப்பட்டு இருக்கலாம். சிதைந்து விட்டதால், புதியதாக நிர்ணயம் செய்துள்ளனர்.
கிழக்கு நோக்கிய, ஸ்ரீ சுந்தரேஸ்வரர், முன்புறம் சிறிய விநாயகர், மற்றும் முருகன் அமைந்துள்ளனர். 
தெற்கு நோக்கிய ஸ்ரீ சௌந்தரநாயகி
தனித்தனி கருவரை மண்டபத்தில் உள்ளனர். கோஷ்ட்டத்தில், தட்சினாமூர்த்தி, வில்வமரத்துடன் பெரிய சிவலிங்கம் சிறப்பாக அமைந்துள்ளது.
சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளது.
அனத்தும் கொண்ட ஒரே பிரகாரம்.
சுவாமி, அம்பாள் ஒரே மண்டபத்தில், மேற்கு நோக்கிய தனி காலபைரவர் சன்னதியும் உள்ளது. 

சிவன் ஆலயம், தாண்டி சற்று தூரத்தில், தனி ஆலயமாக ஸ்ரீஹரிஹர புத்தர் மற்றும், அழகிய குதிரையுடன் வீரன் அமைந்துள்ளதால், மருளாலிகளும் இணைந்து ஆலயங்கள் சிறப்பாக புனரமைக்கப்பட்டுள்ளது. 

கிராம மக்கள் ஒன்றிணைந்து 27.03.2022 அன்று குடமுழுக்கும் செய்துள்ளார்கள். 

27.03.2022
#கும்பாபிஷேகம்
#ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

ஆலயதரிசனம் - நன்னிலம்

நன்னிலம் :
ஸ்ரீ மதுவனேஸ்வரர், ஸ்ரீமதுவன நாயகி
பாடல் - சுந்தரர் 
மாடக்கோவில்.
கிழக்குப் பார்த்து சுவாமி, தெற்கு நோக்கிய அம்பாள் தனி தனி ஆலயம் போன்று.
ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீ அகத்தீஸ்வரர் தனித்தனி சன்னதிகள்.
இரண்டு சண்டிகேஸ்வரர் உள்ளனர்.

ஆலயம் மிக நன்கு பராமரிப்பில் உள்ளது.
பிரகாரத்தில் பலவித மரங்களை வளர்த்து உள்ளார்கள்.
புரைமைத்து, குடமுழுக்கு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வருகிற 6.04.2022 அன்று பாலாலயம் செய்யவிருக்கின்றனர்

#27.03.2022

#ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...