Showing posts with label திருவாலவாயும். Show all posts
Showing posts with label திருவாலவாயும். Show all posts

Sunday, August 29, 2021

வினாவுரை பதிகம் - பதிவு 11 திருநள்ளாறும், திருவாலவாயும்

#வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும். 
🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
🔱திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
🔱பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். 
🔱ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும், தமிழின் கவியின் உயர் சிறப்பும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் உணரலாம். 
🔱எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.
🔱வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன்,  இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.

🔱இந்தத் தொடரில் நாம் சிந்திக்கவிருக்கும் பதிகம்.

🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.
💚
பாடல் : 11
அன்புடை யானை அரனைக் கூடல்
ஆலவாய் மேவியது என் கொல் என்று

நன்பொனை நாதனை நள்ளாற்றானை

நயம் பெறப் போற்றி நலம் குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக் காழிப்
பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன

இன்புடைப் பாடல்கள் பத்தும் வல்லார்
இமையவர் ஏத்த இருப்பர் தாமே.

🔱பொருள் :
அன்பு கொண்ட அரணைக் கூடல் ஆலவாய் மேவியது என் கொல் என்று திருநள்ளாற்றுப் பதியில் வீற்றிருக்கும் தலைவனை,

 விருப்பத்தினால், காழியின் ஞானசந்தப் பெருமான் மொழிந்த இன்பம் பெருகும் பாடல்களை ஏற்றுப் பாடிட, தேவர்கள் போற்றுவார்கள் என்று திருக்கடைக்காப்பில் அருளினார்.

🛐தலச்சிறப்பு :
திருநள்ளாறு:
காவிரி தென்கரை தலம்.
சப்தவிடங்களில் ஒன்று.

சுவாமி : தர்பாரண்யேஸ்வரர்,
நள்ளாற்று ஈசர்.
அம்பிகை: போக மார்த்த பூண்முலையாள்.
தல மரம்: தருப்பை
தீர்த்தம் : நளதீர்த்தம்.

🟩ஞானசம்பந்தர் அனல் வாதத்தில்," போகமார்த்த பூண்முலையாள் " என்றெழுதியிட்ட பதிகம் அனலில் அழியாது, மீண்டதால், பச்சைப் பதிகம் என்று சிறப்பிக்கப்பட்ட பதிகம் இத்தலத்திற்குரியது
 (பதிகம் எண் 1.49)

🟪நளச்சக்கரவர்த்தி இத்தலத்தில் வந்து ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை தரிசிக்க, சனிக்கிரகத்தின் இடர் நீங்கிற்று. 

🟩ஸ்ரீ சனிபகவான் இவ்வாலய இறைவரின்  கோபுரத்தின் இடதுபுறம்,  அம்மன் ஆலயத்திற்கு முன்புறமாக இருந்து அருள் தருகிற கோல அமைப்பு.

🔆திரு ஆலவாய் :

சுவாமி : சோமசுந்தரக் கடவுள், சொக்கநாதர்.
அம்பிகை: மீனாட்சி
தலமரம்: கடம்ப மரம்
தீர்த்தம்: பொற்றாமரைத் தீர்த்தம்

🔺பாண்டிய நாட்டுத் தலம்
மதுரை என்பது தடாதகைப் பிராட்டியார் (மீனாட்சி அம்மை)
திருவவதாரம் செய்து பாண்டிய நாட்டை ஆண்டு ஈசனைத் திருமணம் செய்து கொண்ட திருத்தலம்.

♦️ஈசன் செளந்தர பாண்டியனாக வீற்றிருந்து அரசு புரிந்தார். 

💜ஐந்து சபைகளுள் இது வெள்ளிச் சபையுடையது. வெள்ளியம்பலம் எனப்படுகிறது. 

💚இறைவன் கால் மாறி ஆடியதலம்.

♾️சிவபெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல்கள் புரிந்த இடம். மூன்றாம் (கடை) தமிழ்ச் சங்கம் இருந்த பதி. புலவர்களில் ஈசனும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆய்ந்த, சங்கத் தமிழ் கண்ட பதி.

💙திருஞானசம்பந்தர் அனல்வாதம் புனல்வாதம் புரிந்து இப்பதியில் சமணர்களை வென்றார். 

❤️கூன்பாண்டியனுடைய வெப்புநோய் திருஞானசம்பந்தரால் தீர்க்கப்பட்ட இடம் இதுவே. பின் அப்பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனாய், கூன் முதுகு சீராகிய சிறப்பு உண்டு.

💚ஆலவாய், கூடல், கடம்பவனம், பூலோக கயிலாயம் என்றும் இவ்வூரைக் குறிப்பிடுவார்கள்.

🔱இவ்வாறு, ஒரே பதிகத்தில், இரு தலங்களின் சிறப்பும், இறைவரின் சிறப்பும் வினாவுரையாக அமைத்து
அருளிய தமிழாகரரின் அருமை தமிழ் பாடல் சிறப்புணர்வோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.
🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
முன்பதிவு : 10
https://m.facebook.com/story.php?story_fbid=6101769073231632&id=100001957991710

Friday, August 27, 2021

வினாவுரை பதிகம்: திருநள்ளாறும், திருவாலவாயும் பதிவு : 10

#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 10
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும். 
🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
🔱திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
🔱பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். 
🔱ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும், தமிழின் கவியின் உயர் சிறப்பும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் உணரலாம். 
🔱எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.
🔱வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன்,  இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.

🔱இந்தத் தொடரில் நாம் சிந்திக்கவிருக்கும் பதிகம்.

🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.

🔱பாடல்:10.

'தடுக்குடைக் கையரும் சாக்கியரும்
சாதியில் நீங்கிய அத்  தவத்தர்
நடுக்குற நின்ற நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்

எடுக்கும் விழவும் நன்னாள் விழவும் இரும்பலி இன்பினோடு எத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே'

🔱பொருள் :
ஓலையால் செய்த தடுக்கில் அமரும் சமனரும், சாக்கியரும், பழம் பெருமை நீக்கி, திரிந்து வாழுபவர்கள். அவர்கள் அதிர்ந்து போக, திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே, 

எல்லாத் திசைகளும் இன்பம் பெருக
திருவிழாக்கள் நடத்தி பெருமையுறும், திருவாலவாய் அமர்ந்தருளும் சிறப்பு என்ன?

🔱பொருள் சிறப்பு:
அடியவர்கள் வேண்டுதலின் பொருட்டும், மற்றும் சுபகாரிய களை மேற்கொள்ளவும் 'எடுக்கும் விழவு' எனவும், இறைவன் திருநட்சத்திரங்களில், நாள்களில் 
(திருவாதிரை, பூசம் மற்றும்  பிரதோஷம் போன்ற நாட்கள்) நடத்தும் திருவிழாக்கள் மக்களைக் காத்தலையொட்டி நடைபெறுவதால் . இரும்பலி இன்பினோடு' எனப்பட்டது. காத்தல் செய்யும் திருவிழாக்கள் இன்பம் தரவல்லது என்பதாம்.

(பொருள் : சாதியில் நீங்கிய = பாரம்பரியத்திலிருந்து மாறிய
நடுக்குற = அதிர்ச்சியுற, 
இரும்பலி இன்பினோடு = இன்பத்தின் அளவு மிகுந்த இன்பம் இரு = பெரிய  பலி = காக்கும் தன்மை   அடுக்கும் பெருமை = பெருமைகளின் திரட்சி)

🔱இவ்வாறு, ஒரே பதிகத்தில், இரு தலங்களின் சிறப்பும், இறைவரின் சிறப்பும் வினாவுரையாக அமைத்து
அருளிய தமிழாகரரின் அருமை தமிழ் பாடல் சிறப்புணர்வோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙇‍♂️🙏🙇‍♂️
பதிவு : 9
https://m.facebook.com/story.php?story_fbid=6080766251998581&id=100001957991710

Thursday, August 19, 2021

வினாவுரை பதிகம் - திருநள்ளாறும், திருவாலவாயும் - பாடல் - 8

திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன்,  இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.

🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.
பாடல்: 8
இலங்கை இரவணன் வெற்பெடுக்க
எழில்விரல் ஊன்றி இசை விரும்பி

நலங்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய
நம்பெருமான் இது என் கொல் சொலாய்.

புலன்களைச் செற்றுப் பொறியை நீக்கிப்
புந்தியிலும் நினைச் சிந்தை செய்யும்

அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே.

🔱பொருள் :
இரவணன், கயிலையை பெயர்த்து எடுத்த போது, அவ்வரக்கன் இசையை விரும்பி, அவனுக்கருள் செய்த பெருமாளே, நள்ளாற்றில் வீற்றிருப்பவரே,

ஐந்து புலன்களையும் அடக்கி, மனத்தினால் எந்நாளும் உன்னை சிந்தித்து மகிழும் அடியார் பெருமை பெற்ற நல்லோர்கள் அமரும் ஆலவாயின் அமர்ந்து அருள்செய்வது என் கொல்? என்றார்.
படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️

முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=6028530850555455&id=100001957991710

Friday, August 13, 2021

வினாவுரை பதிகம் - திருநள்ளாறும், திருவாலவாயும் - பதிவு - 7

#வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 7
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும். 
🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🔱ஏழாம் நூற்றாண்டில் சைவமும் தமிழும் பிற சமயத்தவா்களால் கடுமை யான நெருக்கடிகளைச் சந்தித்த காலகட்டத்தில் ஈசனுடைய திருவருளால் சீா்காழியில் திருஅவதாரம் செய்தவா் திருஞானசம்பந்தப் பெருமான். தம் உணா்வு சிறிதுமின்றி, ஈசனது பேரறிவினுள் அடங்கி நின்ற சிவஞானிகளுள் முதன்மையானவா் திருஞானசம்பந்தா். 

🔱"வண்டமிழால் எழுதுமறை மொழிந்த பிரான்" என்று சம்பந்தப் பெருமானைப் போற்றுகின்றாா் திருத்தொண்டா்களின் வரலாற்றை அருளிச் செய்த சேக்கிழாா் பெருமான். எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளை வழிபடுவதற்கு உகந்த மொழியும் ஏற்ற மொழியும் தமிழ் மொழியே என்பதையும் தமிழ்மொழிக்கு அளவற்ற மந்திர ஆற்றல் உண்டு என்றெல்லாம் நிரூபித்துக் காட்டியவா் இவரேயாவாா். 

🔱தமிழராகப் பிறந்த அனைவரும் ஞானசம்பந்தரை எப்போதும் நினைத்துப் போற்றிக் கொண்டாடவேண்டும். "தமிழாகரன்" என்று தம்மைக் கூறிக் கொண்டவா் ஞானசம்பந்தா். "தமிழாகரன்" என்ற சொல்லுக்கு" தமிழே உடம்பாக உடையவா்" என்பது பொருளாகும். இவரது உடல், உயிா் எல்லாம் தமிழால் நிரம்பி இருந்ததால் தமது பதிகங்களில் "தமிழ் ஞானசம்பந்தன்" என்று தம்மைக் கூறிக்கொண்ட முதல் தமிழ்க்குடிமகனும் இப்பெருமானே ஆவாா். 

🔱பெருமைமிக்க திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன், இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.

🔱இந்தத் தொடரில் நாம் சிந்திக்கவிருக்கும் பதிகம்.

🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும் ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.

🔱பாடல் : 7.

கோவண ஆடையும் நீறுப்பூச்சும்
கொடுமழு ஏந்தலும் செஞ்சடையும்

நாவணப் பாட்டு நள்ளாறுடைய
நம்பெருமான் இது என் கொல் சொல்லாய்.

பூவணமேனி இளைய மாதர்
பொன்னும் மணியும் கொழித்தெடுத்து

ஆவண வீதியில் ஆடும்கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே.

🔱பொருள் :
கோவண ஆடை, திருநீற்று மேனி, மழு ஆயுதம், செஞ்சடைமுடி, அடியார்நாவினால் பாடப்படும் பல வண்ணப் பாடல் இசை கேட்டுக் கொண்டு விளங்கும், நள்ளாற்று ஈசனே,

பூப்போன்ற மென்மேனி இளம் மகளிர் பொன்னும், மணியும் திரளாகக் சேர்த்து கடைவீதியில் உலவும் கூடல் நகரில் அமர்ந்தவாறு என் கொல் சொல்லாய்?

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
பதிவு: 6
https://m.facebook.com/story.php?story_fbid=6015305901877950&id=100001957991710

Monday, August 9, 2021

வினாவுரை பதிகம் - திருநள்ளாறும், திருவாலவாயும் - பதிவு - 5

இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
பதிவு: 5
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
🔱திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
🔱பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். 
🔱ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும், தமிழின் கவியின் உயர் சிறப்பும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் உணரலாம். 
🔱எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.
🔱வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன்,  இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.

🔱இந்தத் தொடரில் நாம் சிந்திக்கவிருக்கும் பதிகம்.

🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.
💚
பாடல்:5.
செம்பொன்செய் மாலையும் வாசிகையும்
திருந்து புகையும் அவியும் பாட்டும்

நம்பும் பெருமை நள்ளாறுடைய
நம்பெருமான் இது என் கொல் சொல்லாய்!

உம்பரும் நாதர் உலகம் தானும்
ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும்

அம்புத நால்களால் நீடும் கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே.

🔱பொருள் :
பொன்மாலை அலங்காரம், வாசிகை எனும் திருவொலி,  மணம் வீசும் அகிற்புகை, நைவேத்தியம், இசை, பாட்டு என்று பக்தர்கள் வழிபடும், சிறப்புடைய நள்ளாற்று பெருமானே,

தேவரும், நாகரும், கடல்சூழ் உலகத்தாரும் போற்ற 
குளிர் மேகங்கள் நிறைந்த நான் மாடக்கூடல் அமர்ந்த சிறப்பு என்ன?
என்கிறர்.
படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙇‍♂️🙏🙇‍♂️
முன் பதிவு : 4
https://m.facebook.com/story.php?story_fbid=6002020843206456&id=100001957991710

Tuesday, August 3, 2021

வினாவுரை பதிகம் - திருநள்ளாறும், திருவாலவாயும் பதிவு - 2

வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 2
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும். 
🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
🔱திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
🔱பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். 
🔱ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும், தமிழின் கவியின் உயர் சிறப்பும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் உணரலாம். 
🔱எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.
🔱வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன்,  இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.

🔱இந்தத் தொடரில் நாம் சிந்திக்கவிருக்கும் பதிகம்.

🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.
🔱பாடல்: 2.
திங்கள் அம் போதும் செழும்புனலும்
செஞ்சடை மாட்டுஅயல் வைத்து உகந்து

நங்கண் மகிழுநள்ளாறுடைய
நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்

பொங்கு இளமென் முலையார்களோடும்
புனமயில் ஆட நிலாமுளைக்கும்

அங்கழ கச்சுதை மாடக்கூடல்
ஆலவாயின்கண் அமர்ந்தவாறே.

🔱பொருள் :

திங்களையும், கங்கையையும் சடைமுடியில் தனித்து வைத்து, நம் நெஞ்சத்திலும் இருந்து மகிழும் நள்ளாற்றில் இருக்கும் இறைவரே

இளம் மகளிருடன் மயில்கள் ஆட, நிலவு எழுந்து ஒளிர, சத்சங்கங்கள் இருக்கும் மண்டபங்களும், மாளிகைகளும் நிறைந்த ஆலவாயில் அமர்ந்த விதம் சொல்லாய்! என்கிறார்.

இவ்வாறு, ஒரே பதிகத்தில், இரு தலங்களின் சிறப்பும், இறைவரின் சிறப்பும் வினாவுரையாக அமைத்து
அருளிய தமிழாகரரின் அருமை தமிழ் பாடல் சிறப்புணர்வோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙇‍♂️🙏🙇‍♂️
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5971460836262457&id=100001957991710

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...