Showing posts with label பரமக்குடி அருகில். Show all posts
Showing posts with label பரமக்குடி அருகில். Show all posts

Friday, May 29, 2026

எமனேஸ்வரம் : அருள்மிகு எமனேஸ்வரமுடையவர் திருக்கோயில் 17.05.2026 தரிசனம்

எமனேஸ்வரம் : அருள்மிகு எமனேஸ்வரமுடையவர் திருக்கோயில்
பரமக்குடியை அடுத்த எமனேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருத்தலம் அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில் ஆகும்.

அமைவிடம்: பரமக்குடியிலிருந்து இளையான்குடி செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் எமனேஸ்வரம் அமைந்துள்ளது. பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன
தல சிறப்பு
திருக்கடையூரில் எமனை சம்ஹாரம் செய்த "கால சம்ஹாரமூர்த்தி'யாக அருளும் சிவன், இத்தலத்தில் "அனுக்கிரமூர்த்தி'யாக இந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.ஆயுள் விருத்தி பெறவும், சனிதோஷம் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது, எண்பதாம் திருமணம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

தலபுராணம்
சிவபக்தனான மார்க்கண்டேயர், அற்ப ஆயுளில் உயிர் பிரியும்படியான வரம் பெற்றிருந்தார். அவரது இறுதிக் காலத்தில் எமதர்மன், அவரது உயிரை எடுக்க வந்தார். அப்போது மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.

திருக்கடையூர் தலத்திற்கு அவர் சென்றபோது, எமன் பாசக்கயிறை வீசினான். அவ்வேளையில் அவர், சிவபெருமானை தழுவிக்கொள்ளவே பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. பணியை சரியாக செய்யாத எமதர்மனை, சிவபெருமான் இடது காலால் எட்டி உதைத்தார்.
அவ்வாறு எமன் வந்து விழுந்த இந்த இடத்தில், அவர் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டுத் தனது தவறை மன்னிக்குமாறு சிவலிங்கத்தை வேண்டி வழிபட்டார். இதனை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், எமதர்மரை மன்னித்ததுடன், அவருக்கு மீண்டும் பதவியைக் கொடுத்தார். பின்பு எமன் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். இந்த நிகழ்வுக்கு பின்னர் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பப்பட்டு, எமனேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்டது
எனவே, இங்குள்ள சிவபெருமான் "எமனேஸ்வரமுடையார்" என்றும், 'அனுக்கிரக மூர்த்தி' என்றும் அழைக்கப்படுகிறார். என்பது புராணம்.
ஆலய அமைப்பு:
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
ராஜகோபுரம் கிடையாது. ஒரு சிறிய நுழைவு வாயிலும், அதன் மேல் காட்சி நாயகர் சுதையில் அமைக்கப்பட்டுள்ளார்.
உள் நுழைவில் முன்புறம் பெரிய வளாகமாகக் காணப்படுகிறது.
பலிபீடம் கொடி மரம் நந்தி தனி கல் மன்டபத்தில் உள்ளார்.
பெரிய மண்டபத்தின் தெற்கு பார்த்து ஸ்ரீசொர்ன குஜாம்பிகை அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்
சுவாமி முன் மண்டபம் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. கருவறை முன்புறம் ராஜகணபதி கிழக்கு நோக்கியும் வள்ளி தெய்வானையுடன் முருகரும் இருபுறம் உள்ளார்கள். கருவரையில் தனித்துவமாக 
ஸ்ரீ எமனேஸ்வரர் இருந்து அருள் பாலிக்கிறார்.
மண்டபத்தில் வடபுறம் நடராஜர் சபை உள்ளது.
வெளிப்பிரகாரத்தில் தலவரலாறு கல்வெட்டும் ஆலய உபயதாரர்கள் விபரமும் உள்ளன.
தென் பிரகாரத்தில் தனிசன்னதியாக கிழக்குப் பார்த்து ஸ்ரீ மல்லிகார்ஜுனர் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் ஒரு நந்தியும் உள்ளார்.
மூலவர் கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரும்மா துர்க்கை மற்றும் தனிசன்னதியில் சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்கள். 
பிரகாரத்தின் வடகிழக்கில் தென்திசை நோக்கி தனி பைரவர் நாய் வாகனம் இன்றி தன்டம் சூலத்துடன் உள்ளார். 

வடகிழக்கில் தனி நவகிரக சன்னதியும் கிழக்கில், சந்திரன் மற்றும் சூரியன் உள்ளனர்.
கோயில் சிறப்புகள்:
ஆயுள் விருத்தி: எமதர்மன் வழிபட்ட தலம் என்பதால், நீண்ட ஆயுள் பெறவும், சனிதோஷம் நீங்கவும் இங்கு சிறப்பு வழிபாடுகள்செய்யப்படுகின்றன. திருமண மற்றும் குழந்தை வரம்: இங்குள்ள அன்னை 'சொர்ணகுஜாம்பிகை' சன்னதியில் பெண்கள் தங்களின் மாங்கல்யம் மற்றும் வளையல்களைக் கட்டி வழிபடுவதால் திருமணத் தடைகள் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. வாழ்நாள் சடங்குகள்: அறுபதாம் கல்யாணம், எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்வதற்கு இது மிகவும் உகந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.
பரமக்குடியில் உள்ள சௌராஷ்ட்ரா இன மக்கள் பெரும் உதவியும் ஆலய வளர்ச்சியிலும் பங்குபெற்று வருகிறார்கள்.
பூசைகள் விழாக்கள் நடைபெற்றுக் கொண்டும் பராமரிப்பிலும் உள்ள ஆலயம்

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

இளையான்குடி மாறனார் மடம் /கோவில் 17.05.2026

இளையான்குடி மாறனார் மடம் /கோவில்.

இறையான்குடி சிவன் ஆலயம் எதிரில் உள்ள சிறிய தெருவில் உள்ளது.
இந்த இடம் நாயனார் வாழ்ந்த இடமாகக் கருதி இந்த புனித இடத்தை அடியார்கள் வந்து தொழும் மடமாக மாற்றி உள்ளனர்
இது ஒரு நீள் செவ்வக மண்டபம் கிழக்குமேற்கு அமைப்பில் தெரு இருந்தாலும் மடத்தின் வாசல் தென்புறம் உள்ளது.
உள்ளே நாயன்மார் துணைவியுடன் உள்ள சிலை வைத்து வணங்கப்படுகிறது.
மேலும், மன்டபத்தின் ஒரு பகுதியில்மேற்கில் சிறிய அளவில் விநாயகர்,மீணாட்சி சொக்கநாதர், நந்தி மற்றும் பாலமுருகன் ஒரு பெரிய மேடையில் வைத்து வணங்கி வருகிறார்கள்.
63 நாயன்மார்களில் ஒருவரான மாறநாயனார் அவதரித்த மற்றும் முத்தி பெற்ற இடம்.  

அடியவர் வேடத்தில் வந்த
நம் ஈசனாருக்கு உணவளித்த இடம் என்பது சிறப்பு 

அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு தொண்டு இன்றும் நடைபெறுகிறது.

நாயன்மார் குரு பூசை ஆவணி மகம் அன்று மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
தனியார் டிரஸ்ட் மூலம் இந்தக்கோயில் /மடம் பராமரிக்கப்பட்டு வருகிறது

இளையான்குடி சிவன் ஆலயம் மிகவும் அருகாமையில் இருப்பதால், நடந்து வந்து இந்தமடம் தரிசனம் செய்து பக்தர்கள் செல்வது வழக்கம்.

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

இளையான்குடி அருள்மிகு ஶ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் 17.05.2026 தரிசனம்

இளையான்குடி அருள்மிகு ஶ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் 

இளையான்குடி எனும் சிற்றூர், சிவகங்கை மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ளது . பரமக்குடி - காரைக்குடி செல்லும் பிரதான சாலையில் உள்ளது.
சுமார் 1000-ஆண்டுகள் பழமையான,
சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.
ஆலய அமைப்பு
பிரதான சாலையில் கிழக்கு நோக்கிய ஆலயம் வடபுறம் பெரிய குளம் உள்ளது. குளத்தின் தென்கிழக்கில் பெரிய அரசமரம் மற்றும் ஒரு விநாயகர் ஆலய வளாகத்தின் முன் உள்ளது.
கிழக்குப்பார்த்து மூன்று நிலை ராஜகோபுரம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயம் முன்புறம் புத்தர் சிலை ஒன்றும் கண்டு எடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது
அம்மன் சன்னதிக்கு தனி நுழைவு வாயிலும் காட்சி கோபுரத்துடன் அமைந்துள்ளது.
ஆலய ராஜகோபுரம் நுழைவில் விநாயகர் முருகர் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன
உட்புறம் சூரியன் சந்திரன் மேற்கு நோக்கிய அமைப்பில் உள்ளன.
ஆலயம் உள்ளே பெரிய மண்டபத்தில் பலிபீடம் கொடிமரம் நந்தி அமைக்கப்பட்டுள்ளது

சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்த்தானம் கட்டுப்பாட்டில் இளையான்குடி ஆயிர வைசியசபையினரின் பேராதரவுடன் ஆலயம் பராமரிக்கப்படுகிறது.

கருவறை மண்டபம் முன்பு வெளி சுவற்றில் இளையான்குடி மாற நாயன்மாரின் வாழ்க்கைச் சித்திரம் பழமையான ஓவியம் உள்ளது.
 நுழைவில் ஒரு விநாயகர் உள்ளார்.
உள் மன்டபத்தில் நால்வர் மற்றும் சேக்கிழார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் 
சோமஸ்கந்தர் மற்றும் நாயன்மார் தம்பதியுடன், விநாயகர், முருகன் வள்ளி தெய்வானையுடன், உலோக சிலைகளும் உள்ளன. பதஞ்சலி வியாக்கிரபாதருடன் நடராஜர் சபையும் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கிய கருவரை.
 நுழைவு முன் மண்டபத்தில் சிறிய நந்தி கிழக்கு நோக்கிய விநாயகர் மற்றும் முருகன் அமைத்துள்ளனர்.
கருவரையில் ஸ்ரீ இராசேந்திர சோழீஸ்வரர் அருள்பாலிக்கின்றார்.

பிரகாரத்தில் இளையான்குடி மாற நாயனார் மற்றும் புனிதவதியார் தம்பதிகளுக்கு வடக்கு நோக்கி தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
வாழ்கை வரலாறும் புடைசிற்பமாக கல்லில் சுவற்றில் அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய புராணம் நாயனார் வரலாறு கல்வெட்டாக பாடல்கள் சிறப்பாக அமைத்துள்ளனர்.
ஆலய தென்பிரகாரத்தில் முன்மண்டபத்துடன் தனி சன்னதியாக கிழக்கு நோக்கி ஸ்ரீ ஞானம்பிகை அருள் தருகிறார்.

சுவாமி கருவரை கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி லிங்கோத்பவர் துர்க்கை தனி சன்டிகேஸ்வரர் உள்ளார்.

ஆலய பிரகார கன்னிமூலையில் தனி விநாயகர் சன்னதி உள்ளது.
தனி சரஸ்வதி சன்னதியும், வெங்கடேஸ்வரர் சன்னதியும் மற்றும் முன்மன்டபத்துடன் தனி சன்னதியாக வள்ளி தெய்வானையுடன் முருகன் உள்ளன.

தெற்கு நோக்கிய கால பைரவர் தனி சன்னதி ஆலயம் வடகிழக்கில் உள்ளது.
அருகில் நவகிரகம் தனி சனிஸ்வரர் உள்ளார்
சிறப்புகள்
63 நாயன்மார்களில் ஒருவரான மாறநாயனார் அவதரித்த மற்றும் முத்தி தலம். அடியவர் வேடத்தில் வந்த
நம் ஈசனாருக்கு உணவளித்த தலம் என்பது தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும்.

தேவார வைப்புத்தலமாக போற்றப்படும்
இத்திருத்தலத்தில்,
இந்திரன் பூஜித்ததால், முற்காலத்தில்
(இத்திருத்தலத்தின் ஊர் பெயர்)
'இந்திர அவதாரநல்லூர்' என அழைக்கப்பட்டனவாம்.

சோழர்களால் கட்டப்பட்ட பழமையான இத்திருத்தலத்தில், மூலவரின் சன்னதியின் பின்னே, ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பதும்,
சுவாமி கருவரை முன் ஸ்ரீவள்ளி இல்லாமல்
எம்பெருமான் முருகன் 
திருவருள்புரிவதும்
தலச்சிறப்புக்களில் சிலவாகும்.
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...