அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆஞ்சநேயரின் தாகத்தை போக்குவதற்காக முருகன் நீர் ஊற்று ஏற்படுத்திய கோவில் இதுவாகும். மன அமைதியை தரும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது.
அமைவிடம்: கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தூரம் சென்றால் சின்னதடாகம் என்ற பகுதி உள்ளது. இங்கிருந்து இடதுபுறம் திரும்பி 2 கி.மீ. தூரம் சென்றால் இத்திருக்கோவிலை அடையலாம்.
மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், பெரிய தடாகத்தில் கணுவாய் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் உண்மையில் மருதமலை மலைகளின் வடக்குப் பக்க சரிவில் அமைந்துள்ளது. கோயிலின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை அகலமான சுமார் 500 படிகள் உள்ளன.
சிறப்பம்சம்: இங்குள்ள சிறிய சுனை நீர் (தீர்த்தம்) மிகவும் பிரசித்தி பெற்றது.
இத்திருக்கோவிலுக்கு வடக்கே குரு விருட்சமலை, தெற்கே அனுவாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று 3 பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
தலவரலாறு
இந்த கோவில் ராமாயண கால தொடர்பு உடையது. அதாவது இலங்கையை ஆண்ட ராவணன், சீதையை கடத்தி சென்று சிறை வைத்திருந்தான். தனது மனைவியை மீட்க ராமபிரான் ராவணனுடன் போர் புரிந்தபோது, ராவணனின் மகனால் விடப்பட்ட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையாகிப்போனான்.
அவரை காப்பாற்ற சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகை தேவைப்பட்டது. அதை கொண்டு வர அனுமான் அனுப்பி வைக்கப்பட்டார். மூலிகையை பறிக்க நேரம் ஆகும் என்பதால் அந்த மலையை பெயர்த்து எடுத்து கொண்டு அனுமான் பறந்து சென்றார். சஞ்சீவி மலையை இலங்கைக்கு எடுத்துச் செல்லும்போது அனுமான் மிகவும் தாகமாக உணர்ந்ததாகவும், தாகத்தைத் தணிக்க வேண்டி அப்போது அவர் முருகப்பெருமானை வேண்ட, தனது வேல் கொண்டு ஒரு சுனையை
முருகன் தனது ஈட்டியை எறிந்து, இந்த நீரூற்று நீரை அனுமன் முன் தோன்றச் செய்து, அனுமனது தாகத்தைத் தணித்தார். என்பது தலவரலாறு.
அனு என்பது அனுமனையும் வாவி என்பது நீர் என்ற பொருளையும் குறிப்பதால் இவ்விடம் அனுவாவி என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இங்கு அனுமார் தீர்த்தம் உள்ளதால் இந்த பகுதி அனுமார்வாவி என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி அனுவாவி என்று அழைக்கப்பட்டு வருகிறது.
அடிவாரத்தில் இருந்து 586 படிக்கட்டுகள் ஏறி கோவிலை அடைந்து சாமி தரிசனம் செய்யலாம். படிகள் அதிக செங்குத்து உயரம் இல்லாது இருப்பதால், மலைக்குச் செல்வது அதிக சிரமம் இல்லை.
மலை ஏறும் போது நடுவில் வடக்கு நோக்கி ஒரு பெரிய மற்றும் மிகப்பெரிய அனுமான் சிலையுடன் ஒரு துணை சன்னதியும் உள்ளது.
அணுவாவி முருகன் கோவில் கிபி 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னதியும் இங்கு உள்ளது. சற்று உயரத்தில் சுமார் 20 படிகள் உயரத்தில் சிறிய கருவரையில் சிவபெருமான் அருணாசலேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
முனிவரும், சித்தருமான அகத்தியர், முருகக்கடவுளின் சீடராக அறியப்படுகிறார். குருவுக்கும், சீடருக்கும் ஒரே இடத்தில் இங்கு கோவில் உள்ளது. குருவான சுப்பிரமணியசுவாமி மலை உச்சியில் இருந்து அருள்பாலிக்கிறார். சீடரான அகத்தியர் மலை அடிவாரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அடிவாரத்தில் உள்ள அகத்தியர் தினமும் மலைக்கு சென்று சுப்பிரமணிய சுவாமியை வணங்கி விட்டு வருவதாக நம்பப்படுகிறது. அங்குள்ள குகையில் தான் அகத்தியர் கோவிலை 2-ம் தலைமுறையாக பராமரித்த காட்டுசுவாமிகள் தவம் மேற்கொண்டு இருக்கிறார்.
சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிப்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு சென்று வேண்டினால் உடனடியாக திருமணம் ஆகும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், இங்குள்ள அனுமன் குளத்தில் அதிகாலையில் குளித்தால் சகல நோயும் உடனடியாக குணமாகும் என்ற ஐதீகமும் உண்டு.சூரசம்காரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் மற்றும் கிருத்திகை ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
திருக்கோவில் மிகவும் அமைதியான, இயற்கையான சூழல் கொண்ட கோவில்.
14.06.2026 தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள்
Temple worship is truly virtuous🙆🏼🔱