Thursday, September 17, 2026

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல் 
திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில்
வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொலைவில் திண்டல் மலை மீது 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படும் ஒரு முருகன் கோயில் ஆகும். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று.
திண்டு போன்று மலையின் அமைப்பு உள்ளதால் திண்டல் என்ற பெயர் பெற்றதாகக் கூறப்படும் இந்த திருக்கோயிலுக்கு ஈரோடு- கோவை நெடுஞ்சாலைகளிலேயே நுழைவாயில் அமைந்துள்ளது. நுழைவாயிலைக் கடந்ததும், குன்றின் அடிவாரத்திலேயே நெடுதுயர்ந்த அரச மரத்தின் கீழ் நாகர்கள் சூழ அமைந்திருக்கும் அரச மரத்தடி விநாயகரையும், அடுத்து இரண்டு நாகர்களுடன் ஸித்தி விநாயகரையும் தரிசிக்கலாம். இந்த விநாயகர் தரிசனம் நாகதோஷங்களைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. முன்மண்டப முகப்பில் வேலாயுத சுவாமி சிலை அமையப்பெற்றுள்ளது. இந்த திண்டல் மலை 60மீ உயரத்துடன் நூற்று எட்டு படிகளைக் கொண்டுள்ளது. பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்படாமல் இருக்க படிகள் முழுவதும் நிழல் மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. சில படிகள் கடந்ததும் மலைப் பாதையில் நடுவில் அழகிய மண்டபத்துடன் வடக்கு நோக்கிய சந்நிதியாக இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பன் மண்டபம் சுற்றியும் இடும்பர் வரலாறு வரையப்பட்டுள்ளது
இச்சந்நிதிக்கு எதிரில் அழகிய செயற்கை அருவி அமைக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் மூன்று நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே ஒரே கல்லால் நீண்டு உயர்ந்து நிற்கும் வண்ணம் தீப ஸ்தம்பம் உள்ளது. பின்னர் உள்ளே நுழைந்தவுடன் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி சுற்று மண்டபத்தின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு முருகப்பெருமான் கருவறையில் கிழக்கு நோக்கி நின்று குழந்தை வேலாயுத ஸ்வாமியாக தீராவினை தீர்க்கும் வேலுடன் அருள்பாலிக்கிறார். அருகே உற்சவர் சந்நிதியில் விநாயகர். வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், தனியே குழந்தை வேலாயுதனாயும் அருள்பாலிக்கிறார். வடகிழக்கு மூலையில் தங்கரத மண்டபம் உள்ளது. கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்றுத் தாழ்வான பகுதியில் தன்னாசி குகை உள்ளது. இந்தத் தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. மலையின் வடகிழக்கு பகுதியில் உள்ள அழகிய இயற்கைச் சுனையில் உள்ள வற்றாத நீரூற்றானது முருகப்பெருமானின் அபிஷேகத்திற்கும் மற்றும் பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது.

குன்றுகளும் குமரன் கோயில்களும் நிறைந்த கொங்கு தேசத்தில் உள்ள திண்டல் மலைக்குத் தனிச் சிறப்பு உண்டு.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேனுலவும் நாககிரி திண்டல்மலை எனப் புகழப்படும் இத்திருத்தலம் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கோயிலாகக் கட்டப்பட்டு, பின்னர் நாளடைவில் வளர்ச்சி அடைந்து இன்று சிறப்புடன் விளங்குகின்றது.
ஆலயம் அடிவாரத்தில் தனியாக ஒரு சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது. சுவாமி அம்பாள் கிழக்கு நோக்கி தனித்தனி முன்மண்டபத்துடன் கருவரைகளுடன் உள்ளனர் கோஷ்ட்டத்தில் வழமையான கோஷ்ட்ட தெய்வங்களும், முன் 
மன்டபப்பகுதிகளில், நால்வருடன் காரைக்கால் அம்மையார், மற்றும் தனி சனி பகவான் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது
ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் ஆலய வளாகம் பெரிதாக்கி வாகன நிறுத்துமிடம் தங்கும் கூடம் முதலிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
 இக்கோயில் முருகன் ஸ்ரீவேலாயுதசுவாமி, குழந்தை வேலாயுதசுவாமி, திண்டல் மலை முருகன், குமார வேலாயுதசுவாமி எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இடம்பெற்றுள்ள இந்த திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
ஸ்தல வரலாறு:
பண்டைய கொங்குநாட்டில் உள்ள 24 நாடுகளில் திண்டலும் ஒன்று. அப்போது சேர மன்னர்களால் ஆண்ட கொங்குநாடு, கடந்த காலத்தில் ஆட்சி வசதிக்காகப் பிரிக்கப்பட்டது. இந்த திண்டல் முருகன் கோயில் திராவிட கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
ஒரு சமயம், இப்பகுதியை ஒட்டி அமைந்திருந்த பூந்துறை நாட்டில் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பெரும் துன்பத்துக்கு ஆளான வேளாளர்கள் ஒன்றுகூடி, இங்கு சந்நிதி கொண்டிருக்கும் இடும்ப குமாரனைப் பிரார்த்தித்து, மழை வளம் அருளும்படி வேண்டிக் கொண்டார்களாம். அவர்களின் வேண்டுதலை ஏற்று இடும்பன் மழைவளம் அருளியதாக ஸ்தல வரலாறு. இதனைச் சித்திரிக்கும் படங்களும் கோயில் சுவர்களில் தீட்டப்பட்டுள்ளன. இக்கோயில் கடம்பனுக்கு மட்டுமின்றி, அவன் அணுக்கனான இடும்பனுக்கு சிறப்புகள் தரும் ஸ்தலம். இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளைப் பெற்று வருவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

ஈரோடு நகரம் பல்வேறு தொழில் வசதிகளுடன் முன்னேறிச் செல்வ வளம் கொழிப்பதற்கு ஈரோட்டை நோக்கி கிழக்கு முகமாகக் குன்றினில் நின்றிருக்கும் திண்டல் முருகன் அருட் கண்பார்வையில் இந்நகரம் அமைந்திருப்பதே காரணம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களால் இச்சிறப்புடைய கோயில் சிறிய கோயிலாகக் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் திருப்பணி செய்யப்பட்டு வளர்ச்சி அடைந்து இன்று சிறப்புடன் விளங்குகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் இத்தலத்து முருகனைக் குருசாமி புலவர் என்பவர் போற்றி ‘திண்டல் வேலாயுத சுவாமி சதகம்’ எனும் நூலை இயற்றியுள்ளார்.
கொங்கு நாட்டு ஆலயங்களில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். அது போன்ற தீபஸ்தம்பம் திண்டல் மலையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஸ்தம்பத்தில் அடிப்புறத்தில் நான்கு புறத்திலும் சமயத் தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. திருக்கார்த்திகை அன்று இந்த தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
இங்கு ஒவ்வொரு நாளும் இரவு 7.00 மணிக்குத் தங்க ரதத்தில் குழந்தை வேலாயுத ஸ்வாமி மலை மேல் சுற்றி வலம் வருகின்றார்.
ஒரு நாளைக்கு மூன்றுகாலப் பூசை நடக்கிறது. காலை 7 மணிக்குகீ காலை சந்தி பூசையும், 12 மணிக்கு உச்சிக்கால பூசையும், மாலை 6 மணிக்குச் சாயரட்சை பூசையும் நடக்கிறது. காலை 6 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணியளவில் அபிடேக ஆராதனை நடக்கிறது.
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
Check out this review of Thindal Murugan Temple on Google Maps
https://goo.gl/maps/aowc347AsQj1K8Y89?g_st=ac

இரட்டை சுற்றி பாளையம் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிபாளையம் காலபைரவர் கோயில் 6.09.26

இரட்டை சுற்றி பாளையம் பைரவர்
இரட்டை சுற்றி பாளையம் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிபாளையம் காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான பைரவர் கோயிலாகும். முக்கிய சிறப்பம்சங்கள்: உயரம்: இங்குள்ள பிரம்மாண்ட கால பைரவர் சிலை 39 அடி உயரம் கொண்டது. சிறப்பு வடிவங்கள்: சிவபெருமானின் 64 திருவுருவங்களை நினைவூட்டும் வகையில் 64 வெவ்வேறு பைரவர் வடிவங்கள் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன. மற்றொரு பெயர்: இக்கோயில் 'தென்னக காசி' என்றும் அழைக்கப்படுகிறது.
ஆலயமுன்புறம் ஒரு பெரிய பைரவர் வாசலில் உள்ளார்.
ஆலயம் உள்ளே மிகப்பெரிய தோற்றத்துடன் கால பைரவர் அடுத்து நீண்ட பெரிய மண்டபம் கருவரையில் அலங்காரமாக சொர்ன ஆகாச பைரவர் உள்ளார் மேலும் ஒரு உற்சவர் பிரகாரத்திலேயே உள்ளார்
அமைவிடம்: ஈரோடு - காங்கேயம் முக்கிய சாலையில், அவல்பூந்துறை அருகில் பிரதான சாலையிலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Kala Bhairavar Temple (Erode) on Google Maps
https://goo.gl/maps/M4uJoEzcnScaeGLw6?g_st=ac

அவல்பூந்துறை அருள்மிகு பாகம்பிரியாள் சமேத புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் 6.09.2

அவல்பூந்துறை
புஷ்பவனேஸ்வர்
அவல்பூந்துறை அருள்மிகு பாகம்பிரியாள் சமேத புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்
சிவன் கோயில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.

ஈரோட்டிலிருந்து அறச்சலூர் வழியாகச் செல்கின்ற தாராபுரம் சாலையில் பூந்துறை என்னுமிடத்தில் பிரதான சாலையிலேயே உள்ளது. அவல் பூந்துறை, பூந்துறை எனப்படுகின்ற இரு பெயர்களும் ஒன்றேயாகும்.
1500 ஆண்டுகள் பழமையானது. 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது,
கிபி 7ஆம் நூற்றாண்டில் அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்ற தலம் எனப் புராணங்கள் கூறுகின்றன. லிங்க ரூபத்தில் புஷ்பவனேஸ்வரர் தனி சன்னதியில் மேற்குநோக்கி காட்சி தருகிறார். அம்பாள் பாகம்பிரியாள் என்ற திருநாமத்தில் தனி சன்னதி முன் மண்டபத்துடன் மேற்கு நோக்கி தனி கோவிலில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தெற்கு நோக்கி ஆறுமுகத்துடன் கல்யாண கோலத்தில் அமர்ந்திருப்பதும் இக்கோவிலின் சிறப்பாகும்.
திருச்சுற்றில் நவக்கிரகங்கள், சனி, பைரவர், கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் தான்தோன்றீஸ்வரர் லிங்கத்திருமேனி, தர்மசம்வர்த்தனி, 
காசிலிங்கம், சூரியன் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.தலவிருட்சம் வன்னி மரத்தடியில் விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர்
மேலும், இக்கோவிலின் வளாகத்தில் ஸ்ரீ விசுவேசர், ஸ்ரீ விசாலாட்சி தனி தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர்.

இது பூ நிறைந்த ஊராக இருந்தமையால் பூத்துரை என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி பூந்துறை எனப் பெயர் பெற்று விளங்குகிறது. 
பழமையான ஆலயம் சமீபத்தில் குடமுழுக்கு செய்விக்கப்பட்டு புதுப்பொலிவுடன் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
Check out this review of Pushpavaneswarar Sivan Temple on Google Maps
https://goo.gl/maps/1q9423DS1yRYgGYV7?g_st=ac

சென்னிமலைகைலாசநாதர் பெரியநாயகியம்மன் ஆலயம் 6.09.26

சென்னிமலை
கைலாசநாதர் பெரியநாயகியம்மன் ஆலயம்
சென்னிமலை ஊரின் நடுவில் உள்ள கிழக்குப்பார்த்த ஆலயம்
முன்புறம் மிகப்பழமையான அரச மர விநாயகர், கல் விளக்குத் தூண் உள்ளது
 ராஜகோபுரம் அடுத்து பலிபீடம் கொடிமரம், முன்மண்டபம் அடுத்து உள் மன்டபம் கிழக்கு நோக்கிய கருவரையில் கைலாசநாதர்
கோஷ்ட்டத்தில் விநாயகர் தட்சினா மூர்த்தி லிங்கோத்பவர், பிரும்மா, துர்க்கை மற்றும் சண்டீஸ்வரர்
பிரகாரத்தில் தனித்தனி சன்னதிகளில் விநாயகர் பஞ்சலிங்கங்கள் சுவாமி இடது புறம் தனி சன்னதியில் சுப்பிர மணியர் சன்னதி அடுத்து அம்பாள் பெரியநாயகி தனி ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளது கல் விளக்குத்தூண் முன்மன்டபம் உள் மண்டம் அடுத்து கிழக்கு நோக்கிய கருவரையில் அம்பாள் அருள்பாலிக்கிறார்கள்.
காலபைரவர் தெற்கு நோக்கிய சன்னதியில் உள்ளார்.
பழமையான ஆலயம் சமீபத்தில் குடமுழுக்கு செய்விக்கப்பட்டு புதுப்பொலிவுடன் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம் 
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Kailasanathar Temple on Google Maps
https://goo.gl/maps/W72MYsTCV8uZ8hJo9?g_st=ac

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...