Friday, April 17, 2026

சின்ன ஆவுடையார் கோவில்(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள் 12.04.26

சின்ன ஆவுடையார் கோவில்
(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்
மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள்.
அமைவிடம்⛳
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராமபட்டினம்-மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ளது சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) எனும் கிராமம்..

அதிராம்பட்டினத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும்   பட்டுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

💥ஆலய சிறப்புகள்
திருப்பெருந்துறையில் யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதசுவாமி எனும் திரு நாமத்தில் அருள்பாலிக்கும்
சிவபெருமான் ஆலயம். திருப்பெருந்துறை போலவே  கொள்ளுக்காட்டில் உள்ளது
சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில்
குறித்து தல ஆராய்ச்சி செய்த உ. வே. சா. அவர்கள் தனது நூலிலும் இந்த இடத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஆவுடையார்கோயிலின் (திருப்பெருந்துறை) ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமையான சிவன் கோயிலாகும். 
மேலும் தம்பிக்கோட்டை அருகில் உள்ள பரக்கலாக்கோட்டை ஆவூடையர் கோவில் அடுத்து, ராசாமடம் அருகில் உள்ள இந்த சின்ன ஆவுடையார்  சிவத்தலம், பெரிய ஆவுடையார் கோயிலின் சார்புத் தலமாகக் கருதப்படுகிறது. 

இக்கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி, சிதிலமடைந்த நிலையில் இருந்து, பின் 28 ஜனவரி 2026 ல் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்றுள்ளது 

தலவரலாறு
மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் முதன்மை அமைச்சராக இருந்தவர் வாதவூரர். இவர் மன்னனின் ஆணைப்படி குதிரை வாங்குவதற்காக பொற்காசுகளுடன் புறப்பட்டார். அப்படிச் சென்ற அவரை, வழியில் குருந்த மரத்தின் கீழ் அமர்ந்து குரு வடிவிலான இறைவன் ஆட்கொண்டு மாணிக்கவாசகர் ஆக்கிய தலம் திருப்பெருந்துறை. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் ஆவுடையார் கோவில் என்றும், இத்தல இறைவன் ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். தன்னிடம் இருந்த பொற்காசுகளைக் கொண்டு, மாணிக்கவாசகரே எழுப்பிய ஆலயம் இது.

குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் என்னும் மாணிக்கவாசகர், காலம் கடந்தும் மதுரை திரும்பாததால் ஆத்திரமடைந்த அரிமர்த்தன பாண்டியன், தனது தளபதியை அனுப்பி பார்த்து வரச் சொன்னான். மன்னன் ஆள் அனுப்பியதை அறிந்த மாணிக்கவாசகர், ‘குதிரை வாங்க கொடுத்த பணம் கோவில் கட்ட செலவாகி விட்டதே. இப்போது என்ன செய்வது’ என்று நினைத்தவர் இறைவனிடம் தன்னுடைய நிலையை சொல்லி இறைஞ்சினார்.

இதையடுத்து இறைவன் ஒரு ஆவணி மூல நட்சத்திர நாளில் நரிகள் அனைத்தையும் பரி (குதிரை)களாக்கினார். அந்த இடம் இன்றும் நரிக்குடி என்று வழங்கப்படுகிறது. நரிகளாக மாறிய பரிகளுக்கு மாணிக்கவாசகர் கொள்ளு வாங்கிக் கொடுத்த இடம் ‘கொள்ளுக்காடு’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் திருப்பெருந்துறை பெரிய ஆவுடையார் கோவில் போன்று, சிறிய ஆவுடையார் கோவில் அமைந்திருக்கிறது.

ஆலய அமைப்பு🛕
திருப்பெருந்துறையைப் போலவே இத்தல இறைவனின் பெயரும் ஆத்மநாதர் தான். இறைவியின் திருநாமமும், யோகாம்பாள் என்பதே ஆகும். கொள்ளுக்காடு தலத்தில் ஆத்மநாதர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயம்
6ம் நூற்றாண்டில் சோழரும் 7ம் நூற்றாண்டில் பாண்டியரும் ஆலயம் பராமரிக்க உதவிய செய்திகள் கல்வெட்டுகளில் உள்ளன.

மணிவாசகர் அக்னி நதியின் தென்புறம் உள்ள இந்த ஆலயத்தை வழிபட்டார் என்று தகவல் குறிப்பு உள்ளது

இந்த பழமையான ஆலயம்  முற்றிலும் சிதைந்து போன நிலையில்   பெரும் முயற்சி செய்து தற்போது முழு ஆலயமும் புதியதாக எழுப்பி பொலிவுடன் உள்ளது. 28.1.2026ல் குடமுழுக்கு செய்யப்பெற்றுள்ளது

கிழக்கு நோக்கிய ஆலயம் முன்புறம் தென் பகுதியில் தனி வினாயகர் சன்னதி  உள்ளது.
அடுத்து, கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம் கடந்தால், பிரகாரத்தில்  நந்தி தனி மன்டபத்தில் சுவாமி நோக்கி உள்ளார். நீண்ட முன்மண்டபம் சுவாமி அம்பாள்  இரண்டு கருவரைகளையும் இணைத்துள்ளது.முன் மண்டபத்தில் வடதுபுறமாக தென்முகம் நோக்கி யோகாம்பாளுக்கு தனி கருவரை மற்றும் கிழக்கு நோக்கிய கருவரையில் சுவாமி உள்ளனர். ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவற்றுடன் உள்ளன.
சுவாமி அம்பாள் கருவரை முன் துவார பாலகர்கள் உள்ளனர். சுவாமி கருவரை முன்பு இருபுறமும் சிறிய அனுங்கை விநாயகர் மற்றும் தண்டபாணி அமைத்துள்ளனர்.

ஆலய தென்புறம் கோஷ்ட்டத்தில் பெருமாள்  மற்றும் யோகதட்சினாமூர்த்தி முன் மன்டபத்துடன் உள்ளார்

பிரகாரத்தில்தென்மேற்கில் தனி  சன்னதியில் இரண்டு விநாயகர்கள் உள்ளனர்.
மற்றும் வட புறம் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியரும் அருள்பாலிக்கின்றனர். 
மேலும், கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர்   பிரும்மா, துர்க்கை தனி சண்டிகேஸ்வரர் உள்ளனர்.

வடக்கு பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் குருந்தமரமும், அதன் கீழே மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சியும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்குப்புறத்தில் பைரவர் சூரியன் மற்றும் மேற்கு நோக்கி தனி சனீஸ்வரர் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயம் சமீபத்தில் புனரமைப்பு செய்துள்ளதால் மிகவும் பொலிவுடன் உள்ளது. திருக்கோவிலின் எதிர் புறம் தீர்த்தக்குளம் ஒன்றும் உள்ளது. 

இங்கு கார்த்திகை சோமவார விழா சிறப்பாக நடைபெறும்.

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

ECR சாலையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆலய வளாக முன்புறம் வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது.
அருகில் பெரிய கடைகள் ஏதும் இல்லை.
சிற்றூர் என்பதால் நெருக்கடிகள் இல்லை  அமைதியான இடமாக உள்ளது

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

ஆத்தாளூர் ஸ்ரீ பிரகதாம்பாள் சமேத ஸ்ரீதிருக்காளநாதர் ஆலயம் 12.04.26

ஆத்தாளூர் ஸ்ரீ பிரகதாம்பாள் சமேத ஸ்ரீதிருக்காளநாதர் ஆலயம்

பேராவூரணி நகருக்கு கிழக்கில் சுமார் 2 கி.மி. தூரத்தில் உள்ள ஆத்தாளூர் என்ற ஊரில் உள்ள பிரபலமான காளியம்மன் ஆலயத்துடன் இணைந்த ஆலயம் 

ஆலய அமைப்பு🛕
கிழக்குப்பார்த்த ஆலய அமைப்பு இராஐகோபுரம் கிடையாது. சுற்றுச்சுவர் உள்ளது.
உள்ளே நந்தி மன்டபத்தில் ஆலயம் நோக்கியுள்ளார். முன்மண்டப முகவாசல் மேல் பகுதியில் காட்சி நாயனார் சுதை சிற்பம் உள்ளது. 
சுவாமி திருக்காளநாதர் கிழக்கு நோக்கி உள்ளார். கருவரை அர்த்த மண்டபம் உள் மண்டபம் முன் மண்டபத்துடன் உள்ளது.
தெற்கு நோக்கிய தனி கருவரையில் ஸ்ரீ பிரகன்நாயகி உள்ளார்

முன்மன்டபத்தின் தென்புறம் உள்ள வாசல் வழியாக ஆலய பிரகாரம் செல்லலாம் 
தென் பகுதி கோஷ்ட்டத்தில் சிறிய அழகிய நர்த்தன விநாயகர் சிற்பமாக உள்ளார்.
தட்சினாமூர்த்திக்கு முன் முகப்பு மாடம் அமைக்கப்பட்டுள்ளது.

தனிவிநாயகர் கன்னி மூலையில், மேற்கு கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மர் துர்க்கை அமைக்கப்பட்டுள்ளது

வடமேற்கில் வள்ளி தெய்வாணையுடன் முருகர் தனி சன்னதி மற்றும் மகாலட்சுமி உள்ளனர்
கிழக்கில் பைரவர், மற்றும் நவகிரகங்கள் மண்டபத்துடன் அமைந்துள்ளது.
வரிசையாக சில நாகர்கள் ஆலயம் உள்ளே வைத்துள்ளனர்

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

ஆத்தாளூரில் உள்ள புகழ்பெற்ற காளியம்மன் ஆலயம் முன்புறம் ஒரு பெரிய குளம் உள்ளது. கிழக்குப்பகுதியில் இந்த சிவன் ஆலயம் உள்ளது. இரண்டுக்கும் ஒரே குருக்கள் ஆலயம் தூய்மையுடன் பராமரிப்பில் உள்ளது. 
வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது.
அருகில் பெரிய கடைகள் ஏதும் இல்லை.
சிற்றூர் என்பதால் நெருக்கடிகள் இல்லை பெரியவளாகம் மரங்கள் உள்ளது. அமைதியான இடமாக உள்ளது

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

பேராவூரணி - முடப்புளிக்காடு - ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோயில் 12.04.26

பேராவூரணி - முடப்புளிக்காடு - ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோயில் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி - முடப்புளிக்காடு - ஏந்தல் என்ற இடத்தில் உள்ளது புகழ் பெற்ற விநாயகர் கோயிலாகும்.

அமைவிடம்⛳
இக்கோயில் பேராவூரணி-அறந்தாங்கிசாலையில் முடப்புளிக்காடு ஏந்தல் என்னுமிடத்தில் உள்ளது. பேராவூரணியிலிருந்து 1/2 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன்
இக்கோயிலின் மூலவர் நீலகண்டப் பிள்ளையார் ஆவார்.ஆனால் விழாக்கள் வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகனுக்கு நடத்தப்பெறுகின்றன.

தலவரலாறு📚
தஞ்சாவூரை ஆண்ட துளசி மகாராஜா தன் அமைச்சருடன் ஆவுடையார் கோயிலை நோக்கிச் சென்றார். நீரழிவு நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அவருடைய அமைச்சருக்கு மருந்து காணச் சென்றார். அப்போது நீலகண்டப் பிள்ளையாரை பலர் வணங்குவதைக் கண்டார். அக்கோயிலின் திருநீற்றினை தரித்தவுடன் அமைச்சருக்கு நோய் நீங்கியது. மன்னர் மகிழ்ச்சியடைந்து கோயிலை விரிவாக்கம் செய்தார். பேராவூரணியை அடுத்துள்ள தென்னங்கொல்லையில் ஒரு வேலி நிலத்தையும் மன்னர் அளித்துள்ளார்.

விழாக்கள்
எந்த விநாயகர் கோயிலிலும் நடைபெறாத தீமிதித் திருவிழா இங்கு நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் நடைபெறுகின்ற காவடித்திருவிழாவின்போது பால் குடம், பால் காவடி, கரும்பு கட்டுதல் போன்றவை நடைபெறுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மார்கழி மாதத்தில் தினமும் காலையில் நந்திக்கு தண்ணீர் எடுத்து ஊற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

பயணஅனுபக்குறிப்புகள் 🕊️

பேராவூரணி பிரதான சாலையில் அமைந்துள்ள ஆலயம் முன்புறம் பெரிய மண்டபம் அமைந்துள்ளது.
முன்மன்டபத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.
அதை அடுத்து உயரமான கருவரை அர்த்த மண்டபத்துடன் அமைந்துள்ளது. கிழக்குநோக்கிய கருவரையில் அழகுடன் நீலகண்ட பிள்ளையார் அருள்தரும் கோலத்தில் உள்ளார் உள் சுற்றுப் பிரகரம் உள்ளது. 
வடக்குப்புறத்தில் பெரிய குளம் ஒன்று பாதுகாப்புடன் நீராட வசதியுடன் அமைந்துள்ளது. நல்ல பராமரிப்பில் உள்ளது
குளத்தின் மேல் கரையில் பொங்கல் வைத்து சமைக்க தகுந்த ஏற்பாடுகள் உள்ளன. ஏராளமான பக்தர்கள் பொங்கல் செய்து வழிபட்டு செல்கிறார்கள் குளம் சுற்றிலும் ஆலய நிர்வாகக்கட்டுப்பாடுடன் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

பிரதான சாலையிலேயே ஆலயம் உள்ளதால் வாகனங்கள் நிறுத்த தனி இடம் இல்லை பரபரப்பாக போக்குவரத்தும் உள்ளன.

ஆலயபிள்ளையார் மிகவும் சக்திவாய்ந்தவர் என்பதால், பக்தர்கள் பெருவெள்ளமாக வந்து தரிசித்து அருள்பெற்று செல்கிறார்கள்.

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்



எட்டியத்தளி அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் கோயில் 12.04.26

எட்டியத்தளி அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் கோயில்

அமைவிடம்⛳
 தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நகரத்திலிருந்து பேராவூரணி சாலையில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது, டவுன் பஸ் எண் 21 எட்டியத்தளியில் நிற்கிறது.
எட்டியத்தலியில் உள்ள கோயில் எட்டியத்தலி மெயின் ரோடு பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது. 
அறந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவிலும், ஆவுடையார்கோயிலில் இருந்து 22 கிமீ தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 41 கிமீ தொலைவிலும் எட்டியதலி உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் அரந்தாங்கி.

📚தலபுராணம்
புராணத்தின்படி, அகத்தியர் காசியில் சிவனை வழிபட்ட பிறகு, பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் சந்தியாவந்தனம் செய்வதற்காக இங்கு தங்கினார். அவர் எட்டியத்தாலியில் உள்ள இந்த சுயம்பு சிவலிங்கத்தை வழிபட்டு இரவில் தங்கினார். அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் கலிங்கராயன் இந்த இடத்தைக் கடந்து செல்கிறான். அஷ்டம சனி தோஷத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை மன்னன் அகத்தியரிடம் கேட்டபோது, ​​அகத்தியர் பதிலுக்கு சுயம்பு லிங்கத்திற்கு ஒரு கோயில் கட்டுமாறு மன்னனிடம் கூறினார். மேலும், சிவனிடமிருந்து அதிக சக்தியைப் பெறுவதற்காக நவகிரகங்களை ஈசான்ய திசையில் நிறுவுமாறும் மன்னனிடம் கூறினார். மேலும், நவகிரகங்கள் அகிலாண்டேஸ்வரி அம்பாளின் சன்னதிக்கு முன்னால் அமைந்துள்ளன, நவகிரக நாயகி என்றும் அழைக்கப்படும் அம்பாளிடமிருந்தும் அவர் அதிக சக்தியைப் பெறுகிறார். அவ்வாறு
இக்கோவில் தொண்டை நாட்டு மன்னன் காளிங்கராயனால் கட்டப்பட்டது. 

நவகிரகங்கள் குழுவில் ராகு மற்றும் கேது இருவரின் நிலைகளும் ஒன்றுக்கொன்று மாற்றப்படுகிறது. எனவே இது சனி, ராகு மற்றும் கேது தோஷ பரிகார ஸ்தலம். மேலும் இது களத்திர தோஷ நிவர்த்தி தலமாகும்.

💥தல சிறப்புகள்
சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம்

இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம். பொதுவாக, கோயில்களில் சனீஸ்வரருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறதாம். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும்.

ஆலய அமைப்பு🛕
இந்தக் கோவிலின் சில முக்கிய அம்சங்கள்...
இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இதன் நுழைவாயிலில் ராஜகோபுர அடித்தளம் மட்டுமே உள்ளது. நுழைவாயிலின் மேல் பகுதியில், ரிஷப ரூடராகக் காட்சியளிக்கும் சிவன் மற்றும் பார்வதியின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. முக மண்டபத்தில் பலிபீடமும் ரிஷபமும் உள்ளன. கருவறையின் நுழைவாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சதுர ஆவுடையார் மீது எழுந்தருளியுள்ளார். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்கை ஆகியோர் உள்ளனர்.

மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் அம்பாள் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. ஒரு அம்பாள் அகிலர என்றும், மற்றொரு அம்பாள் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். அர்த்த மண்டபத்தில் நால்வர் மற்றும் நடராஜர் சபை அமைந்துள்ளது. மகா மண்டபத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் நவகிரகங்கள் உள்ளன. ராகுவும் கேதுவும் இடம் மாறி காணப்படுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர், சந்திரன் (சூரியன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது)

பெரிய தீர்த்தக் குளம் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ளது

கட்டிடக்கலை
இக்கோயில் கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம் மற்றும் ஒரு மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது . கருவறை வ்ருத குமுதத்துடன் கூடிய பாத பந்த அதிஷ்டானத்தில் உள்ளது. ஸ்தம்ப பஞ்சரங்கள் அந்தரளப் பகுதியில் உள்ளன. பிட்டி வேதிகையில் தொடங்குகிறது. சதுர அடித்தளம் மற்றும் நாக பந்தம், விஷ்ணு காந்த உடல், மாலை தொங்கல், கலசம், குடம், தாமரை இதழ்கள் மண்டி, பலகை, வீர காண்டம் மற்றும் பூ மொட்டு பொத்தியல் ஆகியவற்றுடன் பைலஸ்டர்கள் உள்ளன. பிரஸ்தாரம் தாமரை இதழ்கள் வலபி, வெற்று நாசி கூடுகளுடன் கூடிய கபோதம் மற்றும் சந்திர மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. யாழி வரி கபோதம் மேல் உள்ளது. பூமிதேசத்தின் மீது இரண்டு அடுக்கு ஸ்டக்கோ வேசர விமானம் உள்ளது. தாளம் மற்றும் கிரீவ கோஷ்டங்களில் சிவன், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு (நரசிம்மர்), பிரம்மா ஆகியோர் உள்ளனர். முதல் தளத்தின் மேற்குப் பக்கத்தில் லிங்கோத்பவர் சுதைச்சிற்பம் உள்ளது .

சண்டிகேசுவரர், விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் பகுதியளவு செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.

வரலாறு மற்றும் கல்வெட்டுகள்
மூலக் கோயில் முற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம், பின்னர் மண்டபங்கள் சேர்க்கப்பட்டன. சுவரில் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் ஒன்று ஒரு அறக்கட்டளையையும், சிவனைத் திருவாகதீச்சுரமுடையராகவும் குறிப்பிடுகிறது . 

பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள்
வழக்கமான பூஜைகள் தவிர, பிரதோஷம், மகா சிவராத்திரி, சனிப்பெயர்ச்சி நாள் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

ஆலயத்தின் தனிச் சிறப்புகள்
இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, கல்யாண தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திருமணம் தடைப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்று கூறப்படுகிறது. இக்கோவில் நவக்கிரகத்தின் அருகில் ஜாதகத்தை வைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது
மேலும், இக்கோயில் பற்றிய முக்கியத்துவம்:

 1) நவகிரகங்களில், சனி பகவான் அகஸ்தீஸ்வரருக்கும் தேவிக்கும் தெரியும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இது எந்தவொரு கோயிலிலும் அரிதான நிகழ்வாகும். 
2)இங்கு அகிலாண்டேஸ்வரி மற்றும் அகிலா என இரண்டு தேவியர் உள்ளனர். 

 3)சனீஸ்வரரின் வலது பக்கத்தில் ராகுவும், இடது பக்கத்தில் கேதுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக அனைத்து நவகிரகக் கோயில்களிலும் ராகு மற்றும் கேதுவின் நிலைகள் தலைகீழாக இருக்கும், அதாவது சனீஸ்வரர் பெருமானின் இடப்புறத்திலும் கேது வலப்புறத்திலும் அமைந்திருக்கும்

3) இக்கோயிலின் மற்றொரு தனித்துவம் என்னவென்றால், நவகிரக நாயகி என்றும் அழைக்கப்படும் அகிலா தேவி, நவகிரகங்களுக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக, இங்குள்ள நவகிரகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன .  

4) மற்ற கோயில்களைப் போலல்லாமல், இங்கு நடராஜர் கல்லால் ஆனவர். பொதுவாக நாம் நடராஜரை உலோகத்தால் ஆன உற்சவமூர்த்தியாகவே காண்கிறோம்.

 5) மூலக்கருவறையில் உள்ள ஆவுடை, நடுவில் செவ்வக வடிவில் சந்திர ஆவுடை என்று அழைக்கப்படுகிறது.

 6) பிரகாரத்தில் உள்ள பெருமாள் சிலை லிங்கோத்பவரை நோக்கியவாறு அமைந்துள்ளது.

 7) சண்டிகேஸ்வரர் பால ரூபத்தில் உள்ளார்.

8) இக்கோயிலின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் விநாயகர் ஆவார் – இவர் “பொல்லா பிள்ளையார்” என்றும் அழைக்கப்படுகிறார். பொல்ல பிள்ளையார் என்றால், இந்த சிலை செதுக்கப்படவில்லை, மாறாக சுயம்புவாகத் தானாகத் தோன்றியது என்று பொருள். திருநாரையூரில் இதுபோல ஒன்று மட்டுமே உள்ளது, அடுத்து இந்தக் கோயிலில் உள்ளது.

 9) வாகனத்தில் சனி மட்டுமே உள்ளார்.

 10) கலிங்கராயர் மன்னனின் மனைவியின் அஷ்டமத்து சனி இங்கு வழிபட்டதால் நீங்கியதாக நம்பப்படுகிறது. 

11) அஷ்டமத்து சனியின் தீய விளைவுகள், களத்ர தோஷம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான பிரார்த்தனைகளுக்கு இந்த ஸ்தலம் பெயர் பெற்றது. 

மேலும், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது சிறந்ததாகக் கருதப்படுகிறது. 

12) இந்தக் கோயிலிலிருந்து சில அடி தூரத்தில், லட்சுமியை மடியில் வைத்தபடி ஒரு விநாயகர் இருப்பது அரிதான காட்சியாகும்.

கோவில் நேரங்கள்
கோயில் காலை 07.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 17.00 மணி முதல் 20.00 மணி வரையிலும் திறந்திருக்கும்
குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மட்டுமே திறந்திருக்கும். வருகை தரும் முன் அர்ச்சகரை தொடர்புகொள்வது நல்லது.
🙏நன்றி வலைதளம்

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

ஆலயம் முழுதும் திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன. இரண்டு பிரகாரங்கள் கொண்ட ஆலயம் முழுவதும் கற்றளியால் ஆன ஆலயம் இந்து அறநிலையத்துறையின்கீழ் உள்ளது.
ஆலயம் சிற்றூரில் உள்ளது. பெரிய வீடுகள், கடைகள் ஏதும் அருகில் இல்லை. ஆலயம் முன்புறம் வாகனங்கள் நிறுத்திக் கொள்கிறார்கள்.

பூசை விஷேச காலங்கள் அன்றி சாதாரண நாட்களில் முன் தகவல் தந்து செல்வது மிகவும் நல்லது 

புராதான பிரார்த்தணைத் தலமாக விளங்குகிறது.

பெரிய குளம் ஒன்று உள்ளது. அதையும் ஆலய திருப்பனிகளுடன் சீர் செய்து அழகு செய்தால், மிகவும் அழகாக அமைக்கலாம்.

அருகில் பெருமகளூர், விளங்குளம், மருங்கப்பள்ளம் பேராவூரணி சேதுபாவாசத்திரம் முதலிய சிறப்பு தலங்களும் உள்ளன.

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

சின்ன ஆவுடையார் கோவில்(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள் 12.04.26

சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம் மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள். அமைவிடம்⛳ தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்...