Monday, March 30, 2026

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

⛳ இருப்பிடம்
திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எண்கண் திருத்தலம். 

📚தலவரலாறு - 1.
சபீப வனம் எனும் வன்னி மரக்காட்டின் நடுவே தவம் செய்து கொண்டிருந்தார் பிருகு முனிவர். 

அப்போது அரசன் தன் படையுடன் வந்து சிங்க வேட்டையாடி முனிவரின் தவத்தை கலைக்க , அரசன் சிங்க முகத்துடன் காட்டில் அலையுமாறு சாபம் இடப்படுகிறான்.

இதையடுத்து, சிம்மவர்மன் என்ற அந்த மன்னன் சிங்க முகத்தைப் பெற்றான் அந்த மன்னன், தினமும் விருத்த காவேரியில் (வெட்டாற்றில்) நீராடி, சிவனையும், எண்கண் வேலவனையும் தரிசித்து வந்தான். 

அரசனும் தை பூசமும் பௌர்ணமியும் சேரும் நாள் வரை காத்து நீராடி இறைவனை வணங்க நாராயணன் தன் கருட வாகனத்திலும், முருகன் தன் மயில் வாகனத்திலும் தோன்றி அருள் புரிகின்றனர்.

📚தல வரலாறு 2.
 படைப்பின் மறைபொருளான பிரணவத்திற்கு பொருள் தெரியாததால், பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு படைக்கும் தொழிலையும் தானே ஏற்றார். சிவபெருமான், பிரம்மனை விடுவித்து படைப்புத் தொழிலை அவரிடமே ஒப்படைக்கக் கூறினார். ஆனால் பிரணவப் பொருள் தெரியாமல் படைப்புத் தொழில் செய்யலாகாது என்று முருகன் மறுத்து விட்டார். இதையடுத்து சிவன், “அப்படியானால், பிரணவத்தின் பொருளை நீயே பிரம்மனுக்கு எடுத்துரைத்து, படைப்புத் தொழிலை அவரிடம் ஒப்படைத்து விடு” என்று கூறினார். இதையடுத்து பிரம்மனுக்கு பிரணவப் பொருளை உபதேசித்து, படைப்புத் தொழிலை அவரிடம் ஒப்படைத்தார், முருகப்பெருமான். இதையடுத்து பிரம்மதேவன், தன்னுடைய எட்டு கண்களைக் கொண்டு முருகனுக்கு பூஜை செய்து வழிபட்டார். இதனால் இத்தலம் ‘எண்கண்’ என்றானது.

எண் என்பது 8 என்ற கணக்கை குறிக்கின்றது. நான்கு தலைகளை கொண்ட பிரம்மனுக்கு எட்டு கண்கள். பிரம்மன் சிவனை நினைத்து இத்தலத்தில் வழிபட்டதால் இதற்கு எண்கண் என்ற பெயர் வந்தது.

⭐ஆலய சிறப்பு

இந்த கோவிலில் ஈஸ்வரன் ப்ரஹ்மபுரீஸ்வரர், அம்பாள் ப்ரஹன் நாயகி. ஈஸ்வரன் கிழக்கு நோக்கியும், அம்பாளும் முருகனும் தெற்கு நோக்கியும் அமர்வு.
சோமஸ்கந்தர் அமைப்பு.
சிவனும், திருமாலும், மால் மருகனாகிய முருகனும் அருள் தரும் ஆலயம்.
தெற்கு வாயிலில் ஸ்ரீஆதி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறார். நித்திய கருட சேர்வை.

பிரம்மபுரிஸ்வரர்:
பிரம்மா தன் எட்டு கண்களால் இறைவனை பூஜித்ததால் இத்தலம் எண்கண் என அழைக்கப்படுகிறது. 

கண் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவிலில் உள்ள சிவனை வழிபட்டு வந்தால் கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், இத்தல பிரம்மபுரீஸ்வரர் மீது சூரிய ஒளி விழும். 

சுப்பிரமணியர் அருள் சிறப்பு
இந்த ஆலயம், சிவனுக்கானது என்றாலும், இங்கு முருகப்பெருமானே பிரதான தெய்வமாக இருக்கிறார்.
தெற்கு நோக்கி அருள் புரிகிறார் சண்முகர். 

அருணகிரி பாடிய திருப்புகழ் தலம். 

🛕ஆலய அமைப்பு
இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்ட ஆலயம் இது.

கிழக்கு நோக்கிய ஆலயம்.

ஆலயம் முன்புறம் வன்னிமரம் சில்ப முனிவர் மற்றும் விநாயகர் வணங்க வேண்டும்.
கண் நோய் நீக்கும் கவலைப் போக்கும் ஆலயம். 5 நிலை ராஜகோபுரம் கடந்து நீண்ட உள் மண்டபம் உள்ளது.
மூலவர் பிரம்மபுரிஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவரை, அடுத்து சுப்பிரமணிய சுவாமி வள்ளிதெய்வானையுடன் முருகன் மயில் மீது தெற்கு நோக்கி அமர்ந்த கோலம்.
முருகன் உற்சவர் தெற்கு நோக்கிய தனி சன்னதி. அம்பாள் பெரிய நாயகி தெற்கு நோக்கிய தனி கருவரைமேலும், அம்பாள் சன்னதி முன்புறம் உத்திராபுரிஸ்வரர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார்.

கோஷ்ட்டத்தில், நர்த்தன விநாயகர், தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சன்டிகேஸ்வரர் அமைந்துள்ளனர். சுற்றுப் பிரகாரத்தில், மேற்கில் பிரதான விநாயகர், பிரகார மண்டபத்தில்
பஞ்ச லிங்கங்கள் தனித்தனியாக, மற்றும், பாலசுப்பிரமணியர், மகாலெட்சுமி.
வடக்கில் உள்ள மிகப்பெரிய மிக நீளமான வெளவால் நெற்றி மண்டபம் .
கிழக்கில் விஸ்வநாதர், விசாலாட்சி, நவகிரகங்கள், பைரவர். இன்னும் லிங்கோத்பவர் முதலிய சிலைகள் வைத்துள்ளனர்.
வலது புறம் தனியாக ஆதிநாராயணப் பெருமாள் இணைந்துள்ள ஆலயம்

💥இங்கு உள்ள முருகனின் சிற்பம் 
அற்புத சிற்பியின் கலைப்பொக்கிஷம்.
தனி சிறப்பு பெற்றது. இறைவனின் முழு எடையை யும் மயிலின் கால்கள் தங்கி நிற்கிறது. சிக்கல் ( பொரவாச்சேரி) எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் ஆறுமுகப்பெருமான் சிலைகள், ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை. முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அருள்கிறார். முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகம் கொண்டிருக்கிறார். பன்னிரு கரங்களில், வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி, அங்குசம் தாங்கியிருக்கிறார்.
மூலவரான ஆறுமுகப்பெருமான், மயில் வாகனத்தில் தனியாக அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை இருவரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர்.

💥ஆறுமுகன் சிற்பத்தின் கதை :

பொருள்வாய்த்த சேரி, எட்டுக்குடி சிற்பங்களை அமைத்த சிற்பி முதலில் தன் விரலையும், பின்னர் கண் பார்வையும் இழந்த பின் அமைத்த சிற்பம். 

 முத்தரச சோழன் என்ற மன்னனின் உத்தரவுப்படி, சிக்கல் (பொரவாச்சேரி) என்ற ஊரில் உள்ள முருகப்பெருமானின் சிலையை வடித்தார் ஒரு சிற்பி. அதன் அழகில் மயங்கிய மன்னன், இதுபோல் வேறு ஒரு சிலையை செய்துவிடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் வலது கட்டை விரலை வெட்டிவிட்டான். கட்டை விரலை இழந்த நிலையிலும் கூட, அந்த சிற்பி எட்டுக்குடியில் மற்றொரு முருகன் சிலையை சிக்கலில் (பொரவாச்சேரி) உள்ளது போலவே வடித்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், சிற்பியின் இரண்டு கண்களையும் பறித்து விட்டான். சமீவனம் என்ற இத்தலத்திற்கு வந்த சிற்பி, ஒரு சிறுமியின் உதவியுடன், மீண்டும் ஒரு முருகன் சிலையை வடித்தார். சிற்பம் அமைக்கும்போது உளி பட்டு ஒரு பொறியால், அவரது கையில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அந்த ரத்தம் கண்களில் பட்டுபார்வை மீண்டும் பெற்ற.சிற்பிக்கு கண்பார்வை வந்ததும், என்கண், என்கண் என்று பரவசத்துடன் கூற இத்தலம் என்கண் என பெயர்பெற்றதாக கூறுவர்.

💫விழாக்கள் /பிரார்த்தனைகள்

இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, 14 நாள் பிரம்மோற்சவமாக நடைபெறும்.

இத்தலத்தில் கண்நோய் பார்வை குறை உள்ளவர்கள், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் விசாக நட்சத்திரம் அன்றும், குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானுக்கு ‘சண்முகார்ச்சனை’ செய்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து 12 மாதங்கள் வழிபட்டால் கண் குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம்.
 
வியாழக்கிழமை தோறும் இங்குள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி விரதம் இருந்து வழிபட்டால் குரு தோஷம் இருந்தால் நீங்கிவிடும்.
மாணவர்களுக்கான கல்வி தடைகளும், தோஷங்களும் இத்தலத்தில் உள்ள குரு பகவானால் நீக்கப்படுகிறது.

செவ்வாய் கிழமையில் இங்குள்ள முருகனை தரிசித்து வந்தால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
மீள் தரிசனம் 8.3.2026.
பிரும்மபுரீஸ்வரர் ஆலயம் 1991, 2010ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது திருப்பணிகள் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அருகில் உள்ள நாராயணப்பெருமாள் ஆலயம் 2000, 2012, மற்றும் (இன்று) 8.3.2026 ல் சம்ப்ரோஷணம் நடைபெற்றுள்ளது.

ஆலயம் முன்புறம் வாகனங்கள் நிறுத்தலாம்.
பேருந்து வசதிகள் உண்டு. ஆலயம் தென்புறத்தில் சில கடைகள் உண்டு. தெற்கில் 2 கி.மீ யில் முகுந்தனூர் நாகை - தஞ்சை பிரதான சாலை.
வடக்கில் 3 கி.மீ. திருவாரூர் - குடவாசல் பிரதான சாலை. உள்ளது.
சிவனும், மாலும், மருகனும், அருளும் ஆலயம். தமிழகத்தின் மிக சிறப்பு பெற்ற முருகன் தலங்களின் ஒன்று. வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயங்களில் ஒன்று.

8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#அம்மாப்பேட்டைஅருகில் உள்ள தலங்கள்8.3.26

தஞ்சை புன்னைநல்லூர் மகாமரியம்மன் ஆலயம்.

6.தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம்.

தஞ்சை புன்னைநல்லூர் மகாமரியம்மன் ஆலயம்.

⛳ இருப்பிடம்
தஞ்சை - நாகை பிரதான சாலையில் உள்ள புகழ் பெற்ற ஊர்.

🏵️ஆலய சிறப்பு.
புன்னை வனம் என்ற புன்னை நல்லூர் என்னும் கிராமத்தில் முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் புராதான புகழ் பெற்ற அம்மன் கோவில் வரிசைகளில் முதன்மையானது. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.

📚ஆலய வரலாறு.
சிறு கோயிலுள் குடிகொண்டிருந்த முத்துமாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் சோழ மன்னர்களால் சிறிய கோவிலாக அமைக்கப்பட்டது. பின்னர் வழிபட்ட மராட்டிய மன்னர்கள் நேரடியாக அருள் . பெற்றளால் மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது.

தற்போது இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது. 

சூலை 2014இல் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இக்கோயிலுக்கு வருகை தந்து முத்துமாரியம்மனையும், துர்கையையும் வழிபட்டுச் சென்றார்.

சிறப்பு திருவிழாக்கள்:
ஆடி முத்துப்பல்லக்கு, ஆவணி தேர், புரட்டாசி தெப்பம் திருவிழாக்கள் சிறப்பானவை.

தல விருட்சம் : வேம்பு, புன்னை மரம்

தீர்த்தம் : வெல்லகுளம்
உற்சவர் முத்து மாரியம்மன்

🛕ஆலய அமைப்பு
பிரதான சாலைக்கு வடபுறம் சிவன் கோவில் அடுத்து ஒரு பெரிய குளம். அதை அடுத்து
கிழக்கு நோக்கிய ஆலயம்.
5 நிலை ராஜகோபுரம் மற்றும் நீண்ட மண்டபம், நிலை கோபுரம்
ஆலயம் உள்பகுதியில் ஒரு சிறிய குளம்
அதையடுத்து நீண்ட உள் மண்டபமும், கிழக்கு நோக்கிய கருவரையும் உடையது.
முத்துமாரியம்மன் அழகு தரும் கம்பீர தோற்றத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் அருள் தருகிறார்.

கருவரை முன் பகுதியில், 
மூலவர், முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மன் வடக்கு நோக்கி, தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. 

அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் தனி சன்னதியாக பிரகாரத்தில் உள்ளது. கோயிலின் கருவரை பிரகாரம் தவிர மேலும் 2 பிரகாரங்கள் உள்ளன. வெளிப் பிரகாரமேற்கு பகுதியில் தல மரங்களும் உள்ளன.

வழிபாடு

சோழ தேசமக்களுக்கு மட்டுமல்லாது பொதுவான குல தெய்வக் கோவிலாக இன்றும் இருந்து வருகிறது.
 வேண்டுபவர்களுக்கு அருளும் நோய்தீர்க்கும் கண்கண்ட தெய்வமாகப் போற்றி வணங்கப்படும் தெய்வம்.
எந்த காரியத்தையும் செய்யும் போது அம்மனை எண்ணி செயல்படும் பழக்கம் தொன்று தொட்டு உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தவர். எளிமையான வேண்டுதல்கள் ஏராளமான பக்தர்கள்.

வழிபாட்டு முறைகள்
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு எடுப்பது, உப்பு, மிளகு இடுவதும், வேப்பஞ்சேலையை உடுத்தி, அக்கினி சட்டி எடுப்பதும், கோயில் தீர்த்தமான வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கி போடுவதும் பக்தர்களால் செய்யப்படுகின்றது. மேலும் பக்தர்கள் நோய்களுக்கு, புற்று மண்ணை பிரசாதமாகக் வழங்கப்படுகின்றது.

⭐குடமுழுக்கு
பொ.ஊ. 1727 முதல் 1735 வரை தஞ்சாவூரை ஆண்ட துளஜா மகாராஜாவினால் சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது. 

பொ.ஊ. 1798 முதல் 1832 வரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மகாமண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய இரண்டாவது திருச்சுற்று முதலியவற்றைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.1950இல் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 6.7.1987இல் குடமுழுக்கு நடைபெற்றது. இறுதியாக 27.06.2004இல் குடமுழக்கு நடத்தப்பட்டது . அதனை தொடர்ந்து சுமார் 21 ஆண்டுகள் கழித்து 10-02-2025 அன்று குடமுழக்கு நடைபெற்றது.

விழாக்கள்
ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிகிழமை அம்மனுக்கு பூச்சோரிதல் விழா நடைபெறும்.
ஆடி கடை ஞாயிற்றுக்கிழமை முத்துப்பல்லக்கு பெருவிழா நடைபெறும்.
ஆவணி மாதம் தேரேட்டம் நடைபெறும்.
புரட்டாசி மாதம் தேப்பம் விழா நடைபெறும்.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 

தஞ்சை நாகையின் பிரதான சாலையின் வடபுறம் ஆலயம். வாகன நிறுத்துமிடங்கள், ஓய்வு அறைகள், கடைகள் உள்ளன. வருடம் முழுதும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் இருந்தாலும், விழாநேரங்களில் அதிகரிக்கும்.

தற்போது ஆலய பிரகாரங்கள், புறப் பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டு, பக்தர்களுக்கான வசதிகளும் செயல்பட்டு வருகின்றன.
காலையிலிருந்து இரவு வரை ( 6-8 )நடை சாத்தப்படாமல் தரிசிக்கும் வகையில் அமைந்த திருக்கோவில்களில் ஒன்று.

வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயங்களில் ஒன்று.

8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

வாளமர்கோட்டை, சுந்தர நாடு, சௌந்தரநாயகி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம்.

5. வாளமர்கோட்டை, சுந்தர நாடு, சௌந்தரநாயகி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம்.

⛳இருப்பிடம்
சுந்தரவள நாடு, வாளமர் கோட்டை
தஞ்சாவூர் - நாகப்பட்டினம் பெருவழி சாலையில், புகழ்பெற்ற தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து தென்கிழக்கில் 8 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. 
பிரதான சாலையில் வையச்சேரி என்ற ஊரிலிருந்து தெற்கில் வர வேண்டும்.

📚தலபுராணம் - 1.
ராஜராஜ சோழன் ஒரு மரத்தின் அடியில் தன் வாளை வைத்துவிட்டு, பின்னர் எடுக்க முடியாமல் போனதால், அந்த இடத்தில் சிவனுக்குக் கோவில் கட்டினார். "வாள் அமர்ந்த கோட்டை" என்பது காலப்போக்கில் வாளமர்கோட்டை என மருவியது.
வரலாற்றுச் சிறப்பு: இக்கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூர்ணாம்பிகா ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 

📚தல புராணம் - 2
முன்னொரு காலத்தில் ஸ்ரீ விக்கிரம சிங்க பாண்டியன் என்னும் மன்னன் சீரும் சிறப்புமாக இந்தப் பகுதியில் உள்ள நாடுகளை ஆண்டு வந்தான் அவன் சிறந்த சிவ பக்தன் ஆவான் அவனுக்கு ஒரு நீண்ட நாள் ஆசை இருந்தது அது என்னவென்றால் சிறந்ததொரு சிவன் ஆலயம் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே ஆகும். அதே நினைப்புடன் இந்த மன்னன் நாடு முழுவதும் வலம் வரும் பொழுது ஆலங்காட்டில் கல்லால மரத்தின் மரத்தின் அடியில் சிவலிங்கம் ஒன்று காட்சியளித்தது உடனே மன்னன் விக்கிரம சிங்க பாண்டியன் தனது உடைவாளை எடுத்து கீழே வைத்து சிவ லிங்கத்தை தரிசித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான். பிறகு தன்னுடைய உடைவாளை எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை மன்னன் இது சிவனுடைய வேலை என்று அறிந்து சிவனை மனதார நெஞ்சு உருக வேண்டினான். உடனே சிவபெருமான் இடப உருவமாகி காட்சியளித்து இவ்விடத்திலேயே கோயில் எழுப்பு என ஆசீர்வதித்தார் மன்னன் இத்தல மூர்த்தியான சுந்தரேஸ்வரர் எனவும் அம்மை சௌந்தரநாயகி எனவும் பெயரிட்டு திருக்கோயில் எழுப்பி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

📚ஆலய வரலாறு.

இந்த சுந்தர நாட்டில் வசித்து வந்த தவத்திரு மாதவமணி காத்தையா சுவாமிகள் அவர்கள் 1901ம் ஆண்டு பிறந்தவர். அவர் இந்தத் திருக்கோயிலை அடைந்து, அரன் திருவருளால், அன்பர்கள் உதவியுடன், கிராமங்கள் தோறும் சென்று தாய்மார்கள் பெரியோர்களிடத்தில் வாழ்த்தும், ஆசியும், பெற்று, 1915ம் ஆண்டு திருப்பணி தொடங்கி 96 வருடம் பல சீர்த்திருத்தங்களும், புதிய மண்டபங்கள், மற்றும் பல்வேறு பணிகள் செய்து, பல குடமுழுக்குகளை செய்து தனக்குப் பிறகு இவ்வாலயத்தைத் தொடர்ந்து செம்மையாக பராமரித்து வர வேண்டி தமக்கு உதவியாக இருந்த நாட்டார்களை அங்கீகாரம் செய்து 28.10.1996 ல் முக்தி அடைந்தார். 
அவர் காலத்தில் 1938லும், 1963லும், 1986லும், குடமுழுக்கு செய்துவிக்கப்பட்டுள்ளது.

அவரிக் கட்டளைப்படி தொடர்ந்து 
அவரின் நினைவுகளைப் போற்றி தனி அறக்கட்டளை ஏற்படுத்திய சுந்தர நாட்டார்கள், அங்கு அவருக்கு தனியாக மணி மண்டம், ஆலய வளர, பல வசதிகள், மண்டபம், மற்றும் திருமண மண்டபம், அன்னதான வசதிகள், ஆஸ்ரமம், அமைத்தும், பக்த பொதுமக்களுக்கு பல வசதிகளை செய்தும் 2008 மற்றும் 2025 முதலிய ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ஆலயம் முழுமையாக சிறப்பாக தற்போதும் பராமரிக்கப்ட்டு வருகிறது.

தமிழக அரசின் மூலம் இவ்வாலயத்தில் தவத்திரு காத்தையா சுவாமிகள் மடம் ஒரு கால பூசை செய்ய ஏற்பாடுகளும் செய்துள்ளது.

🛕ஆலய அமைப்பு
ஆலயவளாகம் மிகப்பெரியது. ஆலயம், மணி மண்டம், சுவாமிகள் மடம், திருமண மண்டபம், இவற்றுடன் பெரிய குளம் ஒன்றும் கிழக்கில் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய பெரிய ஆலயம்.
முன்புறம் அழகாக அமைந்துள்ள குளம். குளக்கரையில் சிறிய விநாயகர், அடுத்து 
மிகப்பழமையான அரசமரம் ஒன்றும் அதனையில் ஒரு சிவலிங்கம் ஒன்றும் உள்ளது.

அடுத்து புதிய அமைப்புடன் அமைக்கப்பட்ட ஆலய நுழைவு வாயில் உள்ளது.

இடது புறம் திருமண மண்டபம் வலதுபுறம் தவத்திரு காத்தையா சுவாமிகள் மணி மண்படம் ஆசிரம வளாகம்.

கிழக்கில் உள்ள 5 நிலை ராஜகோபுரம் முன்புறம் இரண்டு புறங்களிலும், விநாயகர், பாலமுருகன் சிறிய சன்னதிகள் மற்றும் தென்புறம் 3 நிலை ராஜகோபுரம் உடையது. 

ராஜகோபுரம் கடந்து நீண்ட மண்டபத்தில் கணபதி, கொடிமரம், பலிபீடம், நந்தி.

தென்புறம் நோக்கிய சன்னதியில் ஸ்ரீ பூர்ணாம்பிகை. 

அடுத்து ஆலயம் உள்ளே துவார பாலகர்கள் மற்றும், கிழக்கு நோக்கிய கருவரை அமைப்பில் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கிறார்.
ஸ்ரீ சௌந்தரநாயகி தெற்கு நோக்கிய தனி கருவரையில் உள்ளார்.

சுவாமி கோஷ்ட்டத்தில், தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், வடக்கில் பிரும்மா, பைரவர், உள்ளனர்.
 63 நாயன்மார்களும் உள்ளனர். வள்ளிதெய்வானையுடன் முருகர், மற்றும் சேக்கிழார், மாணிக்கவாசகர் முதலியோர்கள் உள்ளனர்.

அடுத்துள்ள பிரகாரத்தில், மேற்கில், ஸ்ரீ கணபதி, கருடாழ்வார், ஶ்ரீதேவி, மகாவிஷ்ணு, பூதேவி சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தனி சன்னதி, வன்னி மரம், கெஜலெட்சுமி தனி சன்னதி உள்ளது.

மற்றும் துர்க்கா பரமேஸ்வரி, ஆஞ்சநேயர் தனி சன்னதி, கிழக்கில்
நவகிரகங்கள், பைரவர், சூரியன், 

ஆலயம் கற்றளியாக அமைந்துள்ளது பொலிவுடன் உள்ளது.
சிறப்பான அமைப்பு.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
ஆலயம் மிகவும் முறையான பராமரிப்பில் பூசைகளில் உள்ளது. நாட்டார்கள் அமைப்பு பராமரிப்புடன் நடத்தி வருகிறது.

எல்லா விஷேச கால நடைமுறைகளும் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.

ஆலயம் வளாகம் பெரியதாக உள்ளதால்
வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு. பூசா காலங்களில் தரிசனம் செய்யலாம். 

ஆலயம் அருகில் வேறு எந்த கடைகள், குடியிருப்புகள் ஏதும் அருகில் இல்லை.
சிறப்பான ஆலயம், பக்தி உணர்வுடன் கூடிய அமைதி, இயற்கையான மரம், சோலை அமைப்புகளுடன் கூடியது. அற்புத உணர்வுகள் தரும் தலமாக விளங்குகிறது.

8.03.2026 ல் தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

பூண்டி - புஷ்பவனேஸ்வரர்புஷ்பவனநாயகி உடனுறை புஷ்பவனேஸ்வரர் ஆலயம்.

4.பூண்டி - புஷ்பவனேஸ்வரர்
புஷ்பவனநாயகி உடனுறை புஷ்பவனேஸ்வரர் ஆலயம்.
பூண்டி வாண்டையர் குடும்பத்தாருக்குச் சொந்தமான ஆலயம். நல்ல பராமரிப்பில் பாதுகாப்பில் உள்ளது.

⛳ இருப்பிடம்

தஞ்சாவூர் - நாகை பிரதான சாலையில்,
அம்மாப்பேட்டைக்கு மேற்கே உள்ளது. சாலைக்கு வடக்கில், பூண்டி என்ற ஊரில் ஈசான பாகத்தில் உள்ள பெரிய ஆலயம்.

🛕ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய ஆலயம். தென்புறம் ஒரு குளம் உள்ளது. 
கிழக்குப்புறம் 5 நிலை ராஜகோபுரம் ஒன்றும், தென்புறம் 3 நிலை ராஜகோபுரம் ஒன்றும் உள்ளது.
வசந்தமண்டபம், கொடிமரம், நந்தி அமைக்கப்பட்டுள்ளது.  

 நுழைவில், மேல் பகுதியில், சிவக்குடும்ப சிற்பங்கள் அழகிய முறையில் பாதுகாப்புடன் உள்ளது. நுழைவு அடுத்து, சுவாமி கிழக்குப் பார்த்து தனி பிராகாரத்துடன் அமைந்துள்ளார். 

அம்பாள் தென் திசை நோக்கி தனி கருவரை அமைப்புடன் உள்ளார்.

தெற்கு பிரகார மண்டபத்தில், 63 வர் உள்ளார்.

கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரும்மா, துர்க்கை, தனி சண்டிகேஸ்வரர்.

மேற்கு பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகர், மகாலெட்சுமி, முதலியோர் அமைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்குப் புறத்தில் தனி நவகிரகம், பைரவர் முதலியோரும் இருக்கின்றனர்.

தென்புறம் தேரடி மண்டபம், மற்றும் பெரிய குளம் ஒன்றும் உள்ளது.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
இவ்வாலயம் பூண்டி வாண்டையார் குடும்பத்தினருக்குச் சொந்தமானது.
இராவ்பகதூர் அ. வீரைய்யா வாண்டையார் அவர்கள் முதன் முதலாக 1948 ல் ஆலயத்தை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்துவித்தார்கள், தொடர்ந்து, ஆலயம் வளர்ச்சி அடைந்து அடுத்ததடுத்த ஆண்டுகளில் முறையாக கும்பாபிஷேகம் நடத்தி பராமரிப்பில் வைத்துள்ளார்கள்.

ஆலயம் மிகவும் முறையான பராமரிப்பில் பூசைகளில் உள்ளது. 6 கால பூசை ஸ்ரீ புஷ்பவனேஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

எல்லா விஷேச கால நடைமுறைகளும் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.

ஆலயம் வளாகம் பெரியதாக உள்ளதால்
வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு. பூசை குருக்கள் வீடும் ஆலயம் அருகிலேயே உள்ளது. தெரிவித்து தரிசனம் செய்யலாம்.

ஆலயம் அருகில் வேறு கடைகள் ஒன்றும் அருகில் இல்லை.

8.03.2026 ல் தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...