Saturday, June 27, 2026

பெருந்தலையூர் -பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம் 14.06.2026

பெருந்தலையூர் -
பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம்

கோபிச்செட்டிப்பாளையம் - ஈரோடு பிரதான சாலையில் உள்ள கவுந்தப்பாடிக்கு வடக்கில் உள்ள ஊர்
அ/மி பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம்
பவானி ஆற்றின் கரையோரம்,
பசுமை சூழ அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில்,
நம் இனிய ஈசன், திருமகழீசராக
(சுயம்பு லிங்க திருமேனியராய்) அருட்காட்சியளிக்கிறார்.

தனி சன்னதியில் யோக பீடம் எனும் சதுர பீடத்தில் நம் அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அழகுற அருள்பாலிக்கிறாள். அம்பாளின் மகுடம்
ஜடா மகுடமாக (வரிவரியாக சடை முடிய பெற்றது) அணிந்திருப்பது விசேஷம்.

பவானி ஆற்றின் கரையில்,
துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த ஐந்து சிவஸ்தலங்களில் ஒன்றான இத்திருத்தலத்தின் இறைவனை,
பல சித்தர்களும், முனிவர்களும், அரசர்களும் வழிபட்டு இறையருள் பெற்றுள்ளனர்.

முற்காலத்தில், மகிழ மரங்கள் அடர்ந்து
வளர்ந்திருந்த வனமாக இருந்த இங்கு இறைவன் சுயம்புவாக தோன்றியதால்,
மகிழ வனமுடைய நாயனார் எனும் காரணப்பெயரிட்டு வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.
(பாண்டியர்களின் மீன் கொடி சின்னமும், சோழர்களின் கல்வெட்டும் காணப்படுகிறது.
 இத்திருத்தலம், உள்ளூர் மக்களைத் தவிர வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான சிறப்புமிக்க சிவத்தலங்களில் ஒன்றாகும்

நம் ஈசன் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில், மஹா சிவராத்திரி மற்றும் நவராத்திரி விழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பொன்னாச்சியம்மன் ஆலயம்
மேலும், இவ்வாலயத்திற்குத் தெற்கில் இவ்வூரில் உள்ள சிறப்புவாய்ந்த அ/மி ராஜராஜேஸ்வரி பொன்னாச்சியம்மன் ஆலயம் மற்றும் பாலமுருகன் ஆலயங்கள் மிகவும் புகழ் பெற்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது 
14.06.2026 தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள் 
Temple worship is truly virtuous🙆🏼🔱
Spiritual Bharat: The Pinnacle of the World🇮🇳🕉️


பண்ணாரி மாரியம்மன் கோயில் 14.06.26

பண்ணாரி மாரியம்மன் கோயில்
அனைத்து ஆற்றல்களுக்கும் ஆதாரமாக இருப்பது இறையாற்றலாகும். அவ்விறையாற்றலே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு திருவிடங்களில் குடி கொண்டுள்ளது. இவ்வாற்றலே கொங்குநாட்டின் வடமேற்கு எல்லையருகில் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் என்னும் பேராற்றலாக எழுந்தருளியுள்ளது.
 தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வாய்ந்த கோவிலாகும்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 209 இல் பண்ணாரி எனும் ஊரில் அமைந்துள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து மேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்தினிடையே இக்கோவில் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம்
 பண்ணாரி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும்.

ஆலய அமைப்பு
இத்தலத்தில் தெற்குப் பார்த்த சதுர வடிவ கருவறையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் சுயம்பு வடிவமாக உள்ளது. பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது.

இத்திருக்கோயிலில் மூலவர் சன்னதியின் மேல் ஐந்து கலசங்கள் கொண்ட சுமார் 25அடி உயரமுள்ள விமானம் கோபுர அமைப்பில் உள்ளது.

அருள்மிகு சந்தான விநாயகர் சன்னதி
உபசன்னதியாக அமைந்துள்ளது.
திருக்கோயில் சுற்றுப்பிரகார மண்டபத்தில் திருக்கோயில் தல புராணம் தற்கால ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் தீமிதி (பூக்குழி) திருவிழா.பெரிய திருவிழாவிற்கு கோவை, ஈரோடு, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருவிழா அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும்.

தலவரலாறு - 1.
பண்ணாரி மாரியம்மனது வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.அக்காலத்தில் வண்ணார் சமுதாயத்தைச் சார்ந்த கணவன் மனைவியும் சலவைத் துணி துவைப்பதற்காக ஒரு பெரிய மலை கீழ் அமைந்து இருந்த ஆற்றில் துணி சலவை செய்ய எடுத்து சென்றனர்.அப்போது அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.பின் சலவை துணி துவைக்கும் வேளையில் கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.பின் அந்தக் கணவனோ தான் சலவைக்கு கொண்டு வந்த சேலைகளை கொண்டு நால்புறமும் கட்டி தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண வரலாறும் செவி வழி வரலாறுமாக உள்ளது. பின் ஒரு குழந்தையை அவர் தூக்கியதாகவும் மற்றொரு குழந்தையை இருவராலும் தூக்க முடியவில்லை.பின் அவர்கள் அந்த குழந்தையை அருகில் இருந்த தாழியில் வைத்துவிட்டு மூவரும் சென்று நடந்ததை ஊர் கவுண்டரிடம் முறையிட்டுள்ளனர். பின் அவர்களுடன் அந்த குழந்தை இருக்குமிடம் சென்று அந்த குழந்தையே அவர்களால் தூக்க முடியவில்லை. பின் இரும்பு கடப்பாரை கொண்டு அந்த தாழியை தூக்க முற்பட்டனர். அப்போது அந்த குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு இரத்தம் கசிந்துள்ளது.(அதை இன்றளவும் நாம் பூசையில் உண்ணிப்பாக கவனித்தால் அம்மனின் வலது மார்பில் சிறு காயங்கள் தென்படும்). அந்த தாழியின் உள்ளேயே இருந்த குழந்தை காலையில் சென்று பார்க்கும் பொழுது பெண் குழந்தை வடிவாகவே அம்மனாக எழுந்தருளி இருந்தது. அம்மனே கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கூறியதாக வரலாறு கூறுகிறது. பின் ஊர் திருவிழா அன்று அனைவரும் கொங்கு நாட்டு வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர். அப்போது அந்த சலவைத் தொழிலாளி பெண் தனது குடும்ப வறுமை காரணமாக பச்சைமாவுக்கு பதில் புளியங்கொட்டையைக் கொண்டு இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி கொண்டு சென்றிருந்தாள். அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தது. அது இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது. இது இன்றளவும் வண்ணார் சமுதாய கடவுளாக, வண்ணார் பெண்ணாக காணப்படுகிறது, 
தலவரலாறு 2.
இன்றைக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும்.காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும்.இக்காட்டாறு இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது. திம்பம் மலையின் அடிவாரம் தென்குமரி தெய்வத்தின் அவதாரம் இவ்விடத்தில் நிகழப்போகிறது என்பதை உலகினுக்கு அறிவிக்கவோ என்னவோ இக்காட்டாற்றின் துறையில் பசுவும் புலியும் ஒரே இடத்தில் நீர் குடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
இச்சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு இவ்வனப்பகுதிக்குச் செல்வது வழக்கம்.இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப்பகுதியிலேயே தங்கிக் கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள். பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள்.காலையிலும், மாலையிலும் பாலைக் கறந்து மாட்டின் உரிமையாளருக்குக் கொடுப்பார்கள்.ஒரு பட்டியிலிருந்து காராம்பசு ஒன்று கறக்கச் சென்றால் கறப்பதற்கு நில்லாமல் தன் கன்றுக்கும் கொடுக்காமல் இருப்பதை மாடுகளை மேய்ப்போன் அறிந்தான். மறுநாள் மாட்டினைப் பின் தொடர்ந்து சென்று கவனித்தான். அப்பசு தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாகப் பால் பொழிவதை மறைவிலிருந்து பார்த்தான். இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்ற அவன் மறுநாள் சுற்று வட்டார கிராம மக்கள் ஊர்ப் பெரியோர்களிடமும் விபரத்தைச் சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு மாட்டினைப் பின் தொடர்ந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் ( மாடு ) காராம்பசு பால் சொரிவதைக் காண்பித்தான். அனைவரும் இவ்வரிய நிகழ்ச்சியனைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றார்கள்.இது தெய்வத்தின் திருவிளையாடல் என்றெண்ணிக் கைகூப்பித் தொழுதார்கள். மக்கள் அனைவரும் அவ்விடத்தைச் சுத்தம் செய்யும் போது கணாங்கு புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும் அதனருகில் சுயம்புலிங்கத் திருவுருவும் வேங்கை மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டார்கள். அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி தான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு ( மண்ணார்க்காடு ) என்ற ஊரிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன் என்றும் எழில் மிகுந்த இவ்வியற்கை சூழலில் தான் தங்கி விட்டதாகவும் தன்னை இனிமேல் பண்ணாரி மாரியம்மன் எனப் போற்றி வழிபட்டு வாருங்கள் எனவும் அருள்வாக்கில் கூறினார். அன்னையின் அருள்வாக்கின் படி அவ்விடத்தில் கணாங்குப் புற்கள் கொண்டு ஒரு குடில் அமைத்துக் கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அன்னையை வழிபட்டு வந்தனர். பின்பு ஊர் மக்களும் பெரியதனக்காரர்களும் அன்னையின் சிறப்புக் கருதி அன்னைக்கு விமானத்துடன் கூடிய சிறு கோயில் அமைத்து பத்மபீடத்துடன் திருவுருவம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

பிராத்தணைத்தலமாக இருப்பதால், பக்தர்கள் வருகை தொடர்ந்து இருந்து வருகிறது.
மாலை 6.00 மணி அளவில் தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.

14.06.2026 தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள் 
Temple worship is truly virtuous🙆🏼🔱
Spiritual Bharat: The Pinnacle of the World🇮🇳🕉️
https://www.facebook.com/share/v/17veRChngh/பண்ணாரி

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் 14.06.26

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆஞ்சநேயரின் தாகத்தை போக்குவதற்காக முருகன் நீர் ஊற்று ஏற்படுத்திய கோவில் இதுவாகும். மன அமைதியை தரும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. 
அமைவிடம்: கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தூரம் சென்றால் சின்னதடாகம் என்ற பகுதி உள்ளது. இங்கிருந்து இடதுபுறம் திரும்பி 2 கி.மீ. தூரம் சென்றால் இத்திருக்கோவிலை அடையலாம்.
மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், பெரிய தடாகத்தில் கணுவாய் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் உண்மையில் மருதமலை மலைகளின் வடக்குப் பக்க சரிவில் அமைந்துள்ளது. கோயிலின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை அகலமான சுமார் 500 படிகள் உள்ளன.
சிறப்பம்சம்: இங்குள்ள சிறிய சுனை நீர் (தீர்த்தம்) மிகவும் பிரசித்தி பெற்றது. 
இத்திருக்கோவிலுக்கு வடக்கே குரு விருட்சமலை, தெற்கே அனுவாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று 3 பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
தலவரலாறு
இந்த கோவில் ராமாயண கால தொடர்பு உடையது. அதாவது இலங்கையை ஆண்ட ராவணன், சீதையை கடத்தி சென்று சிறை வைத்திருந்தான். தனது மனைவியை மீட்க ராமபிரான் ராவணனுடன் போர் புரிந்தபோது, ராவணனின் மகனால் விடப்பட்ட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையாகிப்போனான்.
அவரை காப்பாற்ற சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகை தேவைப்பட்டது. அதை கொண்டு வர அனுமான் அனுப்பி வைக்கப்பட்டார். மூலிகையை பறிக்க நேரம் ஆகும் என்பதால் அந்த மலையை பெயர்த்து எடுத்து கொண்டு அனுமான் பறந்து சென்றார். சஞ்சீவி மலையை இலங்கைக்கு எடுத்துச் செல்லும்போது அனுமான் மிகவும் தாகமாக உணர்ந்ததாகவும், தாகத்தைத் தணிக்க வேண்டி அப்போது அவர் முருகப்பெருமானை வேண்ட, தனது வேல் கொண்டு ஒரு சுனையை
முருகன் தனது ஈட்டியை எறிந்து, இந்த நீரூற்று நீரை அனுமன் முன் தோன்றச் செய்து, அனுமனது தாகத்தைத் தணித்தார். என்பது தலவரலாறு.

அனு என்பது அனுமனையும் வாவி என்பது நீர் என்ற பொருளையும் குறிப்பதால் இவ்விடம் அனுவாவி என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இங்கு அனுமார் தீர்த்தம் உள்ளதால் இந்த பகுதி அனுமார்வாவி என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி அனுவாவி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

அடிவாரத்தில் இருந்து 586 படிக்கட்டுகள் ஏறி கோவிலை அடைந்து சாமி தரிசனம் செய்யலாம். படிகள் அதிக செங்குத்து உயரம் இல்லாது இருப்பதால், மலைக்குச் செல்வது அதிக சிரமம் இல்லை.
மலை ஏறும் போது நடுவில் வடக்கு நோக்கி ஒரு பெரிய மற்றும் மிகப்பெரிய அனுமான் சிலையுடன் ஒரு துணை சன்னதியும் உள்ளது.
அணுவாவி முருகன் கோவில் கிபி 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னதியும் இங்கு உள்ளது. சற்று உயரத்தில் சுமார் 20 படிகள் உயரத்தில் சிறிய கருவரையில் சிவபெருமான் அருணாசலேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
முனிவரும், சித்தருமான அகத்தியர், முருகக்கடவுளின் சீடராக அறியப்படுகிறார். குருவுக்கும், சீடருக்கும் ஒரே இடத்தில் இங்கு கோவில் உள்ளது. குருவான சுப்பிரமணியசுவாமி மலை உச்சியில் இருந்து அருள்பாலிக்கிறார். சீடரான அகத்தியர் மலை அடிவாரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அடிவாரத்தில் உள்ள அகத்தியர் தினமும் மலைக்கு சென்று சுப்பிரமணிய சுவாமியை வணங்கி விட்டு வருவதாக நம்பப்படுகிறது. அங்குள்ள குகையில் தான் அகத்தியர் கோவிலை 2-ம் தலைமுறையாக பராமரித்த காட்டுசுவாமிகள் தவம் மேற்கொண்டு இருக்கிறார்.
சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிப்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு சென்று வேண்டினால் உடனடியாக திருமணம் ஆகும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், இங்குள்ள அனுமன் குளத்தில் அதிகாலையில் குளித்தால் சகல நோயும் உடனடியாக குணமாகும் என்ற ஐதீகமும் உண்டு.சூரசம்காரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் மற்றும் கிருத்திகை ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
திருக்கோவில் மிகவும் அமைதியான, இயற்கையான சூழல் கொண்ட கோவில். 
14.06.2026 தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள் 
Temple worship is truly virtuous🙆🏼🔱
Spiritual Bharat: The Pinnacle of the World🇮🇳🕉️https://www.facebook.com/share/p/14dECjtF2to/


சரவணம்பட்டி முருகன் கோவில் 14.06.26

சரவணம்பட்டி முருகன் கோவில் 
இரத்தினகிரி குமரக்கடவுள் என்ற
மருதாச்சலக்கடவுள் திருக்கோவில்
என்றும் அழைக்கப்படும் கரட்டுமேடு கோயில், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதியான சரவணம்பட்டியில் அமைந்துள்ள ஒரு அமைதியான மற்றும் ஆன்மீக எழுச்சி தரும் முருகன் கோயிலாகும்.
 ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இக்கோயில், நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகி ஓர் அமைதியான ஓய்விடத்தை வழங்குவதோடு, அதன் அமைதியான சூழல் மற்றும் பரந்த காட்சிகளுக்காகவும் போற்றப்படுகிறது.

அடிவாரத்தில் வாகன நிறுத்துமிட வசதி உள்ளது. கிழக்குப்பார்த்த அமைப்பில் ஆலயம். மலை அடிவாரத்தில் வடபுரம் தலவிருட்சம் வன்னி மரமும், அதன் அடியில் மேற்கு நோக்கிய அமைப்பில், வன்னீஸ்வரப்பெருமான் என்ற திருநாமத்துடன் லிங்கமூர்த்தியாக சிவன் உள்ளார்.

குமரக்கடவுள் மலைக்கோவில் :

மலை அடிவாரத்தில் உள்ள நுழைவுவாயில் அடுத்து ஒரு பெரிய மண்டபம் அமைந்துள்ளது. ஒரு விநாயகர் ஆலயமும் உள்ளது. தொடர்ந்து இடும்பன் சன்னதி மற்றும் கன்னிமார் சன்னதிகள் கடந்து பக்தர்கள் சுமார் 150 படிக்கட்டுகள் வழியாக ஏறி குன்றில்மேல் உள்ள ஆலயம் அடையலாம்.
செல்லும் வழி எல்லாம் மரங்கள் உள்ளதால் மர நிழல்கள் கலைப்பை போக்கும்.
குன்றின் உச்சியில் நீண்ட செவ்வக பெரிய மண்டபத்தில், முருகப்பெருமான் கருவறை உள்ளது. அங்கு மிகவும் பிரியமானதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் வர்ணிக்கப்படும் வடிவத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
முன்புறம் தீபத்தூன் அமைந்துள்ளது
மூலவர் கருவரை வலதுபுறம் தனி விநாயகர் சன்னதியும் உள்ளது.
மேல் பிரகாரத்தில் தனி விநாயகர் மற்றும் ஒரு வேல் கருவரையும் அமைக்கப்பட்டுள்ளது.  

பிரகாரத்திலிருந்து கோவைப்பகுதி முழுமையும் காட்சிப்பெறலாம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ் நகரின் பல பகுதிகள் தூரத்துக்காட்சியாகவும் பார்க்கலாம்.
இக்கோயில் தினமும் அதிகாலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரையிலும், மீண்டும் மாலை 4-7.00 மணிவரையிலும் திறந்திருப்பதால், ஆன்மீகத் தேடலில் இருப்பவர்களுக்கும், அமைதியான ஓர் இடத்தைத் தேடிச் சிந்திக்க விரும்பும் குடும்பங்களுக்கும் இது ஒரு பிரபலமான இடமாக விளங்குகிறது.

இது ஒரு சிறப்பான வரலாற்றுக் கதையைக் கொண்டுள்ளது. ஒரு அரக்கன் சிவபெருமானை பல நூற்றாண்டுகளாக தவம் செய்து, அனைத்து உலகங்களையும் ஆளும் வரத்தைப் பெற்றான். வரம் மற்றும் அவரது வல்லமையின் சக்தியால் போதையில், அவன் மிகவும் கொடூரமான முறையில் தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான், . ஒருமுறை அரக்கன் தன் மறைவிடத்தில் தேவர்களின் ராஜாவாகிய இந்திராவைப் பார்த்தான். இந்திரன் ஓட ஆரம்பித்தான் ஆனால் அவனை துரத்தியது. இந்திரன் இந்த ரத்னகிரி மலையை அடைந்தார், அங்கு முருகப்பெருமான் அவரை தனது வாகனமான மயிலாக மாற்றினார். ஏமாற்றத்துடன் அரக்கன் திரும்பினான். சாஸ்திரப்படி இங்குதான் அந்த அதிசயம் நடந்தது.
சுற்றுப்புறம் அமைதியாகவும் பசுமையாகவும் உள்ளது. கோயில் உயரமான இடத்தில் அமைந்திருப்பதால், இதமான காற்றும் ரம்மியமான காட்சிகளும் தியானச் சூழலை மேம்படுத்துகின்றன. சிலருக்கு இந்த ஏற்றம் சற்று செங்குத்தாகத் தோன்றினாலும், அந்த முயற்சிக்கு மன அமைதியும் மன இணைப்பும் வெகுமதியாகக் கிடைக்கின்றன
14.06.2026 தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள் 
Temple worship is truly virtuous🙆🏼🔱
Spiritual Bharat: The Pinnacle of the World🇮🇳🕉️


பெருந்தலையூர் -பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம் 14.06.2026

பெருந்தலையூர் - பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம் கோபிச்செட்டிப்பாளையம் - ஈரோடு பிரதான சாலையில் உள்ள கவுந்தப்பாடிக்கு வடக்கில் உள்ள ...