Saturday, May 30, 2026

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் 17.05.26 தரிசனம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் 
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் , அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றது. 
திருத்தளிநாதர் கோவில்
இறைவன் திருநாமம் திருத்தளி நாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி.

அமைவிடம்
இத்தலம் தமிழ்நாடு , சிவகங்கை மாவட்டம் ,திருப்பத்தூரில் மதுரை-காரைக்குடி அல்லது மதுரை-புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது.
 காரைக்குடியில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 35 கி.மி. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 65 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது. 
சிறப்புகள்
இத்தலத்தில் பெருமான் ஆடியருளிய கௌரி தாண்டவத்தைக் கண்டு இலட்சுமி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.

சுவாமி : திருத்தளி நாதர்.
அம்பாள் : சிவகாமி.
மூர்த்தி : சோமாஸ்கந்தர்.
தீர்த்தம் : ஸ்ரீதளி தீர்த்தம்.
தலவிருட்சம் : கொன்றை.
தலவரலாறு
திருப்புத்துரின் புராண பெயர் கொன்றைவனம். இவ்வூர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சரக்கொன்றை மரங்கள் நிறைந்த கொன்றை வனமாக திகழ்ந்துள்ளது. தவம் செய்வதற்கு ஏற்ற பூமியாக சிறந்த தவநிலையுடைய இடம் என்ற பேறுபெற்ற ஸ்தலமாக இருந்துள்ளது. இதனை தொடர்ந்து எண்ணற்ற முனிவர்களும் சாதுக்களும் இவ்வூரில் தொடர்ந்து தவம் செய்து வந்துள்ளனர். முனிவர்களும் சாதுக்களும் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் அசையாது அமர்ந்து தவம் செய்தமையால் அவர்களை சுற்றி கரையான் புற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்விடம் முழுவது பல புற்றுகள் காணப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் இவ்விடத்தை புத்தூர் என அழைக்க ஆரம்பித்து நாளடைவில் திரு என்ற அடைமொழி சேர்ந்து திருப்புத்தூர் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு
இக்கோயில் ராஜகோபுரம், பிரகாரங்கள், முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர், யோகநாராயணர், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், நடராஜர்-சிவகாமி, சந்திரசேகரர் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.

முன்மண்டபம்
முன்மண்டபத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பிள்ளையார், பொல்லாப்பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், பைரவர், சூரியதேவர், சரஸ்வதி, லட்சுமி, சந்திரன் ஆகியோர் காணப்படுகின்றனர். இந்த மண்டபத்தில் உள்ள ஆடல்வல்லான் சன்னதியின் தூண்கள் கலை வேலைப்பாடுகளுடன் உள்ளன.

உட்பிரகாரம்
உட்பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், 27 நட்சத்திரங்கள், வீரபத்திரர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திரானி, சாமுண்டி, விநாயகர், சேஷ்டாதேவி, பிரகார விநாயகர், வர்ணலிங்கம் ஆகியவை உள்ளன. அப்பிரகாரத்தில் கருவறைக்குப் பின்னர் சரக்கொன்றை மரம் உள்ளது. அருகே வால்மீகி தவமிருந்ததாக ஒரு இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து அகத்திய முனிவர் பூசை செய்த அகத்தியலிங்கம் ஒரு சன்னதியில் உள்ளது. தொடர்ந்து உட்பிரகாரத்தில் யோகநரசிம்மப்பெருமாள், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை ஆகியோர் உள்ளனர்.

வெளிப்பிரகாரம்
வெளிப்பிரகாரத்தில் வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதியும், வன்னிமர விநாயகர் சன்னதியும் உள்ளன. அதே பிரகாரத்தில் யோக பைரவர் சன்னதியும், திருநாகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. அதற்கடுத்து சிவகாமி அம்மன் சன்னதி உள்ளது.

ஆலயச் சிறப்பு
இங்கு உறைந்திருக்கும் இறைவன் புத்தூரீசர் என்றும் திருத்தளிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். அன்னை சிவகாமி அம்பாளாக, சௌந்தரநாயகியாக அருள் பாலிக்கிறார்.

கௌரி தாண்டவத்திருத்தலம்
திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

தலச்சிறப்பு : 
இத்தல இறைவன் தானே தோன்றிய லிங்கமாக அருள்பாலிக்கிறார். அஷ்ட பைரவர் தலம். சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 196 வது தேவாரத்தலம் ஆகும்.

யோக பைரவர்
இந்தத் தலத்தின் திருத்தளிநாதரைத் தரிசிக்க வந்த காசி பைரவரே, இங்கு யோக பைரவராக அருள்கிறார் என்பது ஐதீகம். ஆக, இவரை ஆதி பைரவர் என்றும் போற்றுகிறார்கள். நம் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அருளும் பைரவ மூர்த்திகளும் இவரிடமிருந்தே தோன்றியதாக திருத்தளிநாதர் கோவில் தல வரலாறு சொல்கிறது.

இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. . பூஜை முதலியன முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு உக்கிரமானவர்.

இவரை, குலதெய்வமாகக் கொண்ட மருது சகோதரர்கள், எப்போது போருக்குச் சென்றாலும் இந்த யோக பைரவரை வழிபட்ட பிறகுதான் செல்வார்களாம்.

இக்கோவிலில் தனிச் சன்னதியில் யோகபைரவர் எழுந்தருளி இருக்கிறார். இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் 'யோக பைரவர்' என்று அழைக்கப்படுகின்றார். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு நாய் வாகனம் கிடையாது.
இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம். இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று.

இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீ யோக நாராயணர் சந்நிதி. 
ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். 
யோக பைரவர் சந்நிதியை அடுத்து பிராகாரம் வலம் வரும்போது நாகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத்திருத்தலத்தில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இந்திரனின் மகன் ஜயந்தன் இங்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

கோவிலுள் உள்ள நடராஐரின் உருவமும் சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கன. இங்கு நடராஐர் கெளரி தாண்டவ மூர்த்தியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.

அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்களும் இங்குள்ளன.

 துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றாள். ஸ்ரீ விநாயகரும் வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால் யோகத்துக்கும் தவத்துக்கும் இதுவோர் அற்புதமான திருத்தலமாக விளங்குகின்றது. இத்தலத்திலும் பிரான்மலையில் உள்ளது போலவே நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.
காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில் கண்டராமாணிக்கம் 17.05.2026 தரிசனம்

பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில் கண்டராமாணிக்கம்

⛳அமைவிடம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் கண்டரமாணிக்கம் என்னுமிடத்தில் அமைந்துள்ள பெரிச்சி கோவில் (சுகந்தவனேஸ்வரர் கோவில்) ஒரு பழமையான சிவன் கோயிலாகும்.
பட்டமங்கலம் தட்சிணா மூர்த்தி ஆலயம் மிக அருகில் உள்ளது
திருப்பத்தூரிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது
💥சிறப்புகள்
இறைவன்: சுகந்தவனேஸ்வரர் 
  (எ) ஆண்ட பிள்ளை நாயனார் 
இறைவி: சமீபவல்லி அம்பாள்
தல விருட்சம்: வன்னி
இக்கோயில் சித்தர் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர் மற்றும் கடுமையான சக்தி வாய்ந்த காசி பைரவருக்காக மிகவும் பிரசித்தி பெற்றது.
வன்னி மரத்தடி ஒற்றை சனிஸ்வரர் தனித்துவமானது
🛕ஆலய அமைப்பு
கிழக்குப்பார்த்த அமைப்பில் உள்ளது
முன்வாசல் காட்சி கோபுர அமைப்பு
உள் நுழைவில் அகண்ட பிரகாரம் இடதுபுறம் வன்னி மரத்தடியில் விநாயகர் 
நாகர் உள்ளனர் 
கல் மன்டபத்தில் கொடி மரம் பலிபீடம் அடுத்து நந்தியம் பெருமான் உள்ளார். சுவாமியை நோக்கியிருக்கிறார். சிறிய முன்மண்டபம் தாண்டி உள்ளே
கிழக்கு நோக்கிய கருவரையில் சுவாமி
சுகந்தவனேஸ்வரர் (எ) ஆண்ட பிள்ளை நாயனார் உள்ளார். சுவாமி சுவாமி கருவறை வலது புறம் அம்பாள் சமீபவல்லி அம்பாள் தனி சன்னதி கருவறை முன் மண்டபம் நந்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது
கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி துர்க்கை தனி சண்டேஸ்வரர் சன்னதியும் உண்டு
பிரகாரத்தில் கன்னி மூலையில்
விநாயகர் சன்னதி மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தனி சன்னதியில் உள்ளார் 
காசி நவபாஷாண பைரவர் சன்னதி
வடக்கு பிரகாரத்தில் அம்பாள் சன்னதி
அடுத்து மேற்கு நோக்கி தனி சன்னதியில்
காசி நவபாஷாண பைரவர் உள்ளார்.

சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட 2 அடி உயரமுள்ள பைரவர் சிலை தனி சன்னதியில் கருவறையுடன் மேற்கு பார்த்து இங்குள்ளது. பழனி தண்டாயுதபாணி சிலைக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த சிலை, பிட்சாடணர் தோற்றத்தில் சற்று உடலைச் சாய்த்து காட்சி தருகிறது.
கபால மாலை அணிந்தவர் வலது இடது இரண்டு பக்கங்களிலும் நான்கு திருக்கரங்கள் உடையவர் ஒவ்வொரு கையிலும்தீமைகளை அழிக்கும் ஆயுதங்களை உடையவர் குறிப்பாக இடது நான்காவது திருக்கரம் ஒரு தீய அரக்கன் தலையை வெட்டி கையில் பிடித்துள்ளார்
அந்தத் தலையில் இருந்து சொட்டும் குருதியை பைரவர் வாகனமாகிய நாய் சுவைத்த வண்ணம் உள்ளது 
பைரவர் கருவறையின்முன் மண்டபத்தில் தனி பைரவர் ஒன்றும் உள்ளது

அதிசய சக்தி: மூலவர் காசி பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் மற்றும் வடை மாலை பிரசாதம் பக்தர்களுக்குத் தரப்படுவதில்லை. அவற்றின் வீரியம் மிக அதிகமாக இருப்பதால், வடை மாலைகள் கோயிலின் மேல் பகுதியில் போடப்படுகின்றன. 
தோஷ நிவர்த்தி: பித்ரு தோஷம், ஸ்திரீ தோஷம் மற்றும் கடுமையான சனி தோஷங்களை நீக்க பக்தர்கள் இங்குள்ள பைரவரை வழிபடுகிறார்கள்.
சனீஸ்வரர் சன்னதி
பைரவர் சன்னதிக்கு அடுத்து பின்புறம் வன்னி மரத்தடியில்ஒற்றை சனீஸ்வரர் எழுந்தருளி உள்ளார்
சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். வன்னி மரத்தின் அடியிலிருந்து அவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்கிறார்கள். பௌர்ணமி அன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

சிவகங்கை தேவஸ்த்தான நிர்வாகத்தில் உள்ள ஆலயம்
வழிபாட்டு நேரம்: 
தேய்பிறை அஷ்டமி நாட்கள் பைரவர் வழிபாட்டிற்கு மிகவும் விசேஷமானவையாகும். சாதாரண நாட்களில் பகலில் திறந்திருக்கும் திறந்திருக்கும் மாலை 6 மணி வரை தரிசிக்கலாம் 
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில் 17.05.2026 தரிசனம்

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, 7 கி.மீ. தொலைவில் உள்ள பட்டமங்கலம் ஒரு குருஸ்தலமாக விளங்குகிறது.
⛳அமைவிடம்: 
சிவகங்கையில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலும் பட்டமங்கலம் அமைந்துள்ளது. நல்ல சாலை வசதி உள்ளது.
 திருப்பத்தூர் மற்றும் சிவகங்கையில் இருந்து இக்கோயிலுக்குச் செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. அருகில் உள்ள காரைக்குடி மற்றும் மதுரையில் இருந்தும் சாலை வழியாக எளிதில் சென்றடையலாம்.
💥சிறப்பு
 இந்தியாவிலேயே தட்சிணாமூர்த்தி (குரு பகவான்) தெற்கு திசையைப் பார்க்காமல், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் ஒரே தலம் இதுவாகும்.
மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில் இந்தக் கோயிலைப் பற்றிப் பாடியுள்ளார்

🛕ஆலய அமைப்பு /வரலாறு
மிகப்பெரிய வளாகப்பகுதியில் ஆலமரம் படர்ந்து பல கிளை விழுதுகள் அமைப்புடன் பெருகி வளர்ந்து உள்ளது.
ஆலமரத்தின் கீழ் அதன் கிழக்குப் புறத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதியும் அதனை அடுத்து 5 நிலை கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அழைக்கப்பட்டுள்ளது.
மையக் கோயில் மிகவும் பழமையானதாகக் கருதப்பட்டாலும், இங்குள்ள அசல் கோயில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது. இன்று நாம் காணும் கட்டமைப்பு கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது, பல புதுப்பித்தல்களுடன், நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரால் வெற்றிகரமாகக் கட்டப்பட்டது. இதை ஒரு தனியார் கோயிலாக வைத்திருக்க சட்டப் போராட்டங்களை நடத்தினார். இங்குள்ள முதல் கோயில் தட்சிணாமூர்த்தி சன்னதி என்றும், பின்னர்தான் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் மற்றும் பிற தெய்வங்களின் சன்னதிகள் கட்டப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன

முன்காலத்தில் ஆலமரத்தின் அடிப்புறத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்து பின் 1930 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டியபோது ஆலயத்திற்குள் வைத்து வழிபாடு தொடர்கிறது.
🔱சிவன் ஆலயம் உள் மண்டபம் அர்த்த மன்டபம் கருவரைகள் கொண்டது. கிழக்கு நோக்கிய கருவறையில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரும், தெற்கு நோக்கிய அமைப்பில் உள்ள கருவரையிலிருந்து ஶ்ரீ மீனாட்சியம்மனும் அருள்பாலிக்கிறார்கள். 
மற்றும் நடராஜர் சன்னதி பள்ளியரை முதலியவைகள் உள்ளன. பிரகாரத்தில் விநாயகர் உள்ளார் தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரும்மா, துர்க்கை சன்டிகேஸ்வரர் மற்றும் பைரவர், நவகிரகங்கள், சூரியன் சந்திரன் உள்ளனர்
புராணங்களிலிருந்து பல்வேறு காட்சிகள்.
கல் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆலயம் நுழைவில் உள்ள காளி மற்றும் ஊர்த்துவதாண்டவர் சிலைகள் அற்புதம்.
மேலும் கண்ணப்பர் கஜசம்கார மூர்த்தி முதலிய பல்வேறு சிலைகள் மன்டபத் தூன்களில் சிறப்பு கற்களால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது 
மையக் கோயிலின் பெரும்பகுதி கருப்பு கிரானைட்டால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் விதிவிலக்கான கட்டிடக்கலையை சித்தரிக்கிறது. 

இந்தக் கோயிலுக்கும் மதுரைக்கும் இடையே சில தொடர்புகள் உள்ளன. திருவிளையாடல் புராணத்தின் வீடாகக் கருதப்படும் மதுரையிலிருந்து சிவன் இங்கு வந்ததால், இந்தக் கோயிலில் உள்ள மூலவரும் அம்மனும் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி என்று அழைக்கப்படுகிறார்கள். கோயிலின் மேற்கில் மிகப் பெரிய கோயில் குளம் உள்ளது, நடுவில் ஒரு தனி மண்டபம் உள்ளது. மதுரையைப் போலவே, இந்த குளத்திலும் பண்டைய காலத்தில் ஒரு தங்கத் தாமரை (போர்-தாமரை) இருந்ததாகக் கூறப்படுகிறது.

முருகன் கோயிலின் நுழைவாயிலில், அஷ்டம-சித்தி சுப்பிரமணியராக இருக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறமுள்ள உள்கோயிலில், ஐந்து தலைகளுடன் கூடிய சண்முகநாதர், வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
🔱 தட்சினாமூர்த்தி ஆலயம்
சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வடக்கே தனி ஆலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி உள்ளது, சிவன் கோயில்களில், தட்சிணாமூர்த்தி பொதுவாக கோஷ்டத்தில் காணப்படுகிறார். கர்ப்பகிரகம் தெற்கு நோக்கி உள்ளது. இருப்பினும், இங்கே, கோஷ்டத்தைத் தவிர, தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கிய ஒரு தனி சன்னதியில் இருக்கிறார், இது தமிழ்நாட்டில் தட்சிணாமூர்த்தியின் ஒரே பிரதிநிதித்துவமாக இருக்கலாம்,
பொதுவாக எல்லாத் தலங்களிலும், கல்லால் ஆன ஆலமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்குதான் உண்மையான ஆலமரத்தடியில் உள்ளார்.
கருவறையில் தட்சிணாமூர்த்தி, புன்னகை தவழும் முகத்துடன் பிறைமதி, கொன்றை மலர்களால் ஆன கிரீடம், நான்கு கரங்களுடன் அக்னி, ஞான-முத்திரை மற்றும் பாம்பைக் காட்டுகிறது, அவரது கீழ் இடது கை அவரது தொடையில் உள்ளது. வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞான முத்திரையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, இடது கீழ்க்கரத்தை தொடையில் வைத்தபடி காட்சியளிக்கிறார்.

மேலும் சன்னதிக்குப் பின்னால் ஒரு பெரிய ஆலமரம் உள்ளது, அதன் கீழ் ஆறு கிருத்திகைகளின் மூர்த்திகள் உள்ளன.

இக்கோவிலின் மூலவராக தட்சிணாமூர்த்தி உள்ளார். தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரை குளமும் உள்ளது.

🛐தலசிறப்புகள்
மூலவர்: இக்கோயிலின் மூலவராக சிவபெருமான் வீற்றிருந்தாலும், குரு தட்சிணாமூர்த்தியே பிரதான தெய்வமாக வழிபடப்படுகிறார்.
தல விருட்சம்: கற்பனை அல்லாமல், கோயிலின் பின்புறம் உண்மையான பெரிய ஆலமரம் தலவிருட்சமாக உள்ளது.

சிவனின் பாதங்கள் இந்த இடத்தைத் தொட்டதாலும் (பட்ட, தமிழில்) கிருத்திகைகள் கன்னிகைகளாக இருந்ததாலும் (தமிழில் மங்கை), இந்த இடத்திற்கு பட்டமங்கை என்ற பெயர் வந்தது. காலப்போக்கில், இது பட்டமங்கலம் என்று அழைக்கப்பட்டது. இங்கிருந்து குறிப்பை எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் பட்டமங்கலம் என்று அழைக்கப்படும் பல இடங்கள் உள்ளன.
இருப்பினும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டில் மிகவும் பிரபலமான தெய்வமாக இருக்கும் பிற கோயில்கள் உள்ளன. இந்த கோயில் ஒரு குரு ஸ்தலம், மேலும் ஒரு குரு பரிகார ஸ்தலம்.

📚தல புராணம்
ஒருமுறை, கைலாசத்தில், சிவனும் பார்வதியும் பிருங்கி முனிவருக்கு முருகனின் மகத்துவம் மற்றும் அஷ்டம-சித்திகளைப் பற்றிய அறிவைப் பற்றி உபதேசித்துக் கொண்டிருந்தனர். மிக இளம் வயதிலேயே. அந்த நேரத்தில், ஆறு கிருத்திகைகளான – அம்பா, அபரகேந்தி, தேகாந்தி, நிதர்தானி, வர்தயேந்தி, மற்றும் துலா – இறைவனை அணுகி, அஷ்டம சித்திகளைப் பற்றி தங்களுக்குக் கற்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆரம்பத்தில் சிவன் தயங்கினாலும், பார்வதியின் வற்புறுத்தலுக்கு இணங்க, அவர் சம்மதித்து தனது அறிவுறுத்தலைத் தொடங்கினார். ஆனால் கன்னிப்பெண்கள் திசை திருப்பப்பட்டு, கவனத்தை இழந்தனர். சிவன் அவர்களை இந்த இடத்திற்கு வந்து ஆயிரம் ஆண்டுகள் பாறைகளின் வடிவத்தில் தவம் செய்ய சபித்தார். அந்தக் காலத்திற்குப் பிறகு, சிவனே மதுரையிலிருந்து தட்சிணாமூர்த்தி வடிவில் இங்கு வந்து, கிருத்திகர்களின் தவத்தை ஏற்றுக்கொண்டு, அவரது உபதேசத்தை நிறைவு செய்தார்.

எட்டு சித்திகளும் அல்லது அறிவின் அம்சங்களும் உள்ளன, அவை கூட்டாக அஷ்டம-சித்தி என்று அழைக்கப்படுகின்றன, அவற்றின் அறிவு ஒருவருக்கு சில அம்சங்களின் சக்தியை அளிக்கிறது. இயற்கை. (எட்டு சித்திகளும்: அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாம்யா, இசித்வா மற்றும் வசித்வா).

கிருத்திகைகளை சிவனிடம் பரிந்துரைத்தது பார்வதி தேவி என்பதால், அவளும் இங்குள்ள நாவல் மரத்தடியில் காளியாக தவம் செய்ய வேண்டியிருந்தது. சிவன் தட்சிணாமூர்த்தியாக இங்கு வந்தபோது அவள் மீட்கப்பட்டாள்.
இந்தக் கதை 64 திருவிளையாடல்களில் 33வது கதையாகவும் கருதப்படுகிறது
(அல்லது தெய்வீக நாடகங்கள்) சிவனின் மேலும் இந்த ஸ்தல புராணத்தின் காரணமாக, இந்த இடம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் என்று பிரபலமாக அறியப்படுகிறது.

📚தலபுராணம் 2
ஒருமுறை, ஹிரண்யகசிபு கடம்ப ரிஷியின் தவத்தைத் தொந்தரவு செய்தார், மேலும் அவர் இங்கு வருகை தரும் போது அவரது வீழ்ச்சி தொடங்கும் என்று சபிக்கப்பட்டார், அது (சுவாரஸ்யமாக, இங்கிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இரணியூர் கோயிலின் புராணம், ஹிரண்யகசிபுவை வதம் செய்யும் நரசிம்மராக விஷ்ணுவுடன் தொடர்புடையது). கோயிலுக்கு மிக அருகில் அடைக்கலம் காத்த அய்யனாருக்கான அய்யனார் கோயில் உள்ளது, அவர் கடம்பனின் வெளிப்பாடாக நம்பப்படுகிறது.
🛐வழிபாட்டு முறைகள் மற்றும் பலன்கள்
108 முறை வலம் வருதல்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி மற்றும் தலவிருட்சமான ஆலமரத்தையும் சேர்த்து 108 முறை வலம் வந்தால் உயர்கல்வி, நல்ல வேலை, திருமணத்தடை நீங்குதல், மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத்தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி பெருவளம் ஏற்படும் என்பது நம்பிக்கை. விரும்பிய காரியம், வாழ்க்கையில் அமைதி, குழந்தை பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளால் அடையலாம் என்பது ஐதீகம்.
குரு ஓரை: வியாழக்கிழமை வரும் குரு ஓரை நேரத்தில் (மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரை) செய்யப்படும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் மிகவும் விசேஷமானவை.
இந்த தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். பக்தர்கள் இந்த ஆலமரத்தில் பிரார்த்தனையை கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும், மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன.
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயம் 17.05.2026 தரிசனம்

திருகோஷ்டியூர்
சௌமிய நாராயணப்பெருமாள் ஆலயம்

தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி.
⛳அமைவிடம்
மதுரையிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் திருக்கோஷ்டியூரில் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
⭐சிறப்பு:
நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தல் விஷ்ணு எழுந்தருளினார். தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.

⭐கோபுர விமானத்தின் சிறப்பம்சம்

மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. மேல் பகுதி தங்கத்தால் கவசம் அணியப்பட்டுள்ளது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம் ஒரு சில கோயில்களில் மட்டும் அமைந்துள்ளது.

விளக்கு நேர்த்திக்கடன்
மகப்பேறு கிடைக்க, திருமகள் தாயாருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் அப்பேறு கிடைப்பதாக தொன் நம்பிக்கை.
🛕ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய ஆலய அமைப்பு கிழக்கு கோபுரம் 5 நிலை உடையது
ஆலயம் உள்ளே பிரகார மண்டபம் Sheet போடப்பட்டு உள்ளது. நீண்ட பெரிய மண்டபம் அடுத்து ஆலயம் உள் நுழைவில் இடது புறம் தனி சன்னதியில் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் கிழக்கு நோக்கி அருள்காட்சி தருகிறார் 
கருவரை முன்புறம் முனிவர்கள் மற்றும் 
கருவரை இரு புறங்களிலும் சிறிய விநாயகர் நாகர் மற்றும் சற்று பெரிய உருவத்துடன் தண்டாயுதபாணி உள்ளனர். பிரகாரத்தில் கன்னி மூலையில் தனி விநாயகர் உள்ளார்.
இவர்களை வணங்கிய பின்னர் ஆலயம் உட்புறத்தில், கிழக்கு நோக்கிய சன்னதியில் வேணுகோபாலர் தரிசித்து
இடதுபுறம் உள்ளபடிகட்டுகளில் ஏறி
முன்மண்டபத்தில் உள்ள கருடாழ்வார்
மற்றும் கிழக்கு நோக்கிய கருவரையில் கிடந்து அருள்பாலிக்கும் செளமிய நாராயணர் சயன கோல தரிசனம் செய்ய வேண்டும். பின் படிகள் இறங்கி கிழக்கு நோக்கிய அமைப்பில் உள்ள
 மகாலெட்சுமி தாயார் சன்னதியில் அவரை வணங்கி அதன்பின் குறுகிய படிகள் வழி ஏறி விமானத்தில் நடுவில் உள்ள நின்ற கோலத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேதரராக இருக்கும் பெருமாளை தரிக்க வேண்டும். இதை அடுத்து மேலும் சில குறுகிய படிகளில் மேல் ஏறி அஷ்ட்டாங்க விமானத்தின் உள்ள அமர்ந்த கோலப்பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.
அதன் பின் அஷ்ட்டாங்க விமானத்தில் உள்ள மிகக் குறுகிய வாசல் வழியாக நுழைந்து சென்று தெற்குப்புறத்தில் நின்று ஸ்ரீ ராமானுஜர் மோட்சத்தை தரும் மந்திரத்தை பொதுமக்களுக்கு அறிவித்த இடத்தைக் கண்டு தரிசித்து அங்கிருந்து திருக்கோஷ்ட்டியூர் நம்பிகளின் மடத்தை  
கண்டு தரிசிக்க வேண்டும். பின் வந்த வழியே படிகள் இறங்கி மீண்டும் மகாலெட்சுமி சன்னதி சுற்றி ஆலய பிரகாரம் வலம் வர வேண்டும்.

💥குறுகலான படிகள் குனிந்து நிமிர்ந்து செல்லும் பாதை உடல் நலத்தில் தகுந்த அக்கரையுடன் எச்சரிக்கையுடன் மேலே சென்று தரிசித்து வர வேண்டும்.

⭐பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் . அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மருக்கு அருகில் ராகு, கேது உள்ளனர்.
⭐இவ்வாலயத்தை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் திருமழிசையாழ்வார் பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
💥விழாக்கள்
சித்திரை பிரம்மோற்சவம், மாசியில் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு. மேலும் வைகுண்டஏகாதசி நவராத்திரி

💥சிறப்பான ஆலயம் சிவகங்கை சமஸ்த்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆலயம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
💥108 திவ்ய தேசத்தில் இவ்வாலயம் முக்கியானது என்பதால் பக்தர்கள் வருகை எப்போதும் உண்டு.

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் 17.05.26 தரிசனம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் , அப்பர் ஆகியோரின் பாடல்...