Tuesday, September 15, 2026

தாராபுரம் அகத்தீஸ்வரர் ஆலயம் - தாராபுரம் அகத்தீஸ்வரர் ஆலயம்விடாராபுரம் - தாராபுரம் - வைப்புத்தலம்தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் 5.06 9

தாராபுரம் 
அகத்தீஸ்வரர் ஆலயம்

விடாராபுரம் - தாராபுரம் - வைப்புத்தலம்
தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் அகஸ்தீஸ்வரர் சுவாமி, அகிலாண்டேஸ்வரி சன்னதிகளும், சனீஸ்வரர், காசி விஸ்வநாதர், விநாயகர், பாலதண்டாயுதபானி, பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள்
இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி, மார்கழி, ஆணி, புரட்டாசி, ஐப்பசி, ஆடி, மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.
தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் வரலாறு:-
பராந்தசுபுரம் என்றும் இராஜபுரம் என்றும் விராடபுரம் என்றும் பெயர்கொண்டு விளங்கும் தாராபுரம் நகர் சரித்திர புகழ் பெற்ற ஸ்தலமாகும். இந்நகரில் அமராவதி நதிக்கரையில் (ஆண் பொருணை நதி) கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆவார்.
 முன்பு ஒரு காலத்தில் பார்வதி தேவியார் திருமண நாளில் பிரம்மா, திருமால் முப்பத்தி முக்கோடி தேவர்கள்
முதல் யாவரும் மேரு மலையில் ஒன்று சேர்ந்தார்கள். சுமை ஏறிய மேரு மலையின்; வடதிசை இறங்கியது. இதனால் தென்புலி மேல் எழுந்தது. பூமியை சமநிலை ஆக்க சிவபெருமான் அகஸ்தியரை தென் மலையான பொதிகைக்கு செல்லுமாறு கட்டளையிட்டார். அகஸ்தியரும் பொதிகை மலை செல்லும் வழியில் உள்ள கொங்கு நாடான தாராபுரத்தில் அமராவதி நதிக்கரையில் தங்கினார்.

தினசரி ஒவ்வொரு நாளும் ஆர்மாத்த பூஜையை தங்கும் ஊர்களில் நடத்தி வந்தார். அச்சமயத்தில் அமராவதி ஆற்றங்கரையில் தன்னுடைய பூஜைக்கு உரிய சிவலிங்கத்தை காசியில் இருந்து சீடர்கள் கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்பட்டு விட்டதால் சிவ பூஜையை முடிக்க தன்னுடைய திருக்கரங்களால் அமராவதி புனித நீரின் மணலை பிடித்து வைத்து பூஜித்தார். ஆகவே அதற்கு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என பெயர் வர காரணமாயிற்று. மேலும் தனது சீடர்கள் காசியில் இருந்து லிங்கத்தை தாமதமாக எடுத்து வந்ததால் இவர் பிடித்து வைத்த லிங்கமே மூலஸ்தானம் ஆகியது. சீடர்கள் கொண்டு வந்த லிங்கம் வலது பக்கம் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மேலும் மகாபாரத புராண கதையில் அஞ்ஞான வாசம் பாண்டவர்கள் இவ்வூரில் தங்கி வழிபட்டனர். இத்திருக்கோயிலானது மூர்த்தி தீர்த்தம் ஸ்தலம் ஒருங்கே அமைந்தது.

இக்கோவிலை புத்தூர் திருமலைசாமி பகவான் போன்றோர் வழிபட்டுள்ளனர். இக்கோவிலின் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மனம் உருகி பிரார்த்தனை செய்தால் திருமண தடை, வேலைவாய்ப்பு, புத்திர தோஷம் மற்றும் சித்த பிரமை தோஷம் நிவர்த்தி ஆகும். சுகல ஷேமங்களும் பெறுவார்கள். புண்ணிய நதியாகிய அமராவதியல் நீராடி தரிசனம் செய்தால் சகல நன்மைகளும் அடைவர்.
5.09.2026 
5.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

https://www.facebook.com/share/p/1ByLj8aQh8/

Check out this review of Easwaran Temple on Google Maps
https://goo.gl/maps/vwCZ2JjKtj8unKLB6?g_st=ac
Check out this review of Easwaran Temple on Google Maps
https://goo.gl/maps/66XhwcPnpn9s955j9

கோதைமங்கலம் பெரியவுடையார் ஆலயம் 5.09.2026

கோதைமங்கலம் 
பெரியவுடையார் ஆலயம்
🌺#திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகில் சண்முக நதிக்கரையில் அமைந்துள்ள கோதைமங்கலம் அருள்மிகு பெரிய ஆவுடையார் (பெருவுடையார்) திருக்கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலமாகும்.🌺

🌺#அமைவிடம் & பஸ் வசதி
அமைவிடம்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில், சண்முக நதிக்கரையில் கோதைமங்கலம் பகுதியில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது 🌺

🌺#தலவரலாறு & சிறப்புகள்
சுயம்பு லிங்கம்: மூலவர்
#பெரியஆவுடையார் (பிரகதீஸ்வரர்/பெருவுடையார்) ஒரு சுயம்பு லிங்க மூர்த்தியாக வழிபடப்படுகிறார். 🌺

🌺#போகர் காலத்திற்கு முந்தைய தலம்: நவபாஷாண முருகர் சிலையை பிரதிஷ்டை செய்த போகர் சித்தரின் காலத்திற்கும் முற்பட்ட பழமையான வரலாற்றைக் கொண்ட தலமாக இது கருதப்படுகிறது. 🌺

🌺#பழனி தேவஸ்தான நிர்வாகம்: இக்கோவில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. 🌺

🌺#கல்வெட்டுகள் & சிற்பங்கள்: சோழர் மற்றும் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 16-க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகளும்,
கோஷ்ட்டத்தில் தனி பிரும்மா பெருமாள் தட்சிணாமூர்த்தி சிற்பம் குருந்தமரம் அழகிய அமைப்பு, தனி ருத்ரன் உள்ளிட்ட அழகிய மிக அழகிய கற்சிற்பங்களும் இங்கு அமையப்பெற்றுள்ளன. 🌺
மேற்குப்பார்த்த ஆலயம்

🌺நடராஜர் பெருமானின் சிற்ப அழகு சிறப்புகள் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நடராஜர் பெருமான், சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆனந்த தாண்டவக் கோலத்தில் காட்சியளிக்கிறார். 🌺

🌺#ஆருத்ரா தரிசனம், மார்கழி திருவாதிரை மற்றும் மகா சிவராத்திரி நாட்களில் நடராஜர் பெருமானுக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் வெகு விமரிசையாக நடைபெறும். 🌺

🌺இத்தல #நடராஜரை வணங்கினால் கலைகள் சிறக்கும், மன அமைதியும் குடும்பத்தில் சுபிட்சமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 🌺

🌺(#பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற விசேஷ நாட்களில் நடை கூடுதல் நேரம் திறந்திருக்கும்).🌺

🌺பஸ் வசதி: #பழனி பேருந்து 🌺நிலையத்திலிருந்து பழைய தாராபுரம் / மானூர் செல்லும் நகரப் பேருந்துகளில் (Town Bus) ஏறி 3 கி.மீ பயணித்து, கோவில் நுழைவு வளைவில் இறங்கி 1 கி.மீ நடைபயணமாகவோ அல்லது ஆட்டோ மூலமாகவோ கோவிலை அடையலாம். பழனி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ/டாக்ஸி வசதிகள் நேரடியாக உள்ளன.🌺

🌺தரிசன & நடை திறப்பு நேரம் 🌺
🌺#காலை: 8 முதல் மாலை 6 🌺 வரை🌺

இறைவன் / இறைவி: இங்குள்ள இறைவன் பெருவுடையார் (பெரிய ஆவுடையார்) என்றும், இறைவி அண்ணாமலை உண்ணாமுலை நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். அமைப்பு: இது சண்முக நதிக்கரையின் இயற்கைச் சூழலில் அமைந்த ஒரு சிறப்பான சிவாலயமாகும்
5.09.2026 மீள் தரிசனம்
5.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Periya Aavudayaar Temple on Google Maps
https://goo.gl/maps/E9XpRGjvUjNatBRC8

பழனிபெரியநாயகி (சோமஸ்கந்தர்) கைலாசநாதர் ஆலயம் 5.09.2026

பழனி
பெரியநாயகி (சோமஸ்கந்தர்) கைலாசநாதர் ஆலயம்

கைலாசநாதர் சோமஸ்கந்தர் (வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர்) பெரிய நாயகியம்மன்
ஆலயம் - பழனி
கிழக்குப்பார்த்த சன்னதிகள் கொண்ட கற்றளி ஆலயம்
நடுவில் சோமஸ்கந்தர் - சுப்பிரமணியர் இருபுறமும் சுவாமி கைலாச நாதரும், பெரிய நாயகியம்மனும் உள்ளார்கள்
சுப்பிரமணியர் சன்னதிக்கு நேர் எதிரில் உள் நுழைவு சிதைந்து விட்ட ராஜகோபுரம் உள்ளது.
கைலாசநாதர் சன்னதிக்கு முன்பாக பலிபீடம் முன் மண்டபம் உள் மன்டபம் மற்றும் சுவாமி கருவரை உள்ளது 
இது போல சோமஸ்கந்தர் -சுப்பிரமணியர்- சன்னதிக்குமுன் மயில்வாகனம், மண்டபங்கள் தாண்டி தனிக் கருவரையில்
 முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். 
அடுத்து பெரியநாயகியம்மனுக்கும் அடுத்தடுத்த மண்டபங்களும் தனிக் கருவரையில் அம்மனும் அருள் பாலிக்கின்றார்கள்
இதை அடுத்து முத்துக் குமரசாமி - உற்சவர் மண்டபம் - கிழக்கு நோக்கி தனியாக அமைந்துள்ளது.
ஆலயம் நுழைவு கல் மண்டபத்தில் அற்புத சிலைகள் உண்டு
ராஜகோபுரம் மேல் பகுதிகள் சிதைந்து விட்டன. முன்மன்டம் முன் கல்விளக்குத்தூன்
பிரதான வாசல் சுப்பிரமணியர் நேர் வாசல் உள்ளது

எல்லா சன்னதிகளும் கிழக்கு நோக்கிய அமைப்பில் உள்ளன.
பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி
மேற்குபுறம் தலமரம் மற்றும் பைரவர் சன்னதிகளும் உண்டு.

ஆலயம் முன் பெரிய மண்டபம் அழகிய சிற்பங்களுடன் உள்ளது.

காலை முதல் தொடர்ந்து ஆலயம் திறந்து இருக்கும்.
ஆலயம் அமைதியாகவும் தரிசன பலன் கிட்டுமாறும் அமைந்துள்ளது
மதியம் நடை சாத்தப்படுவதில்லை
5.09.2026 மீள் தரிசனம்
5.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Arulmiku Periya Nayaki Amman Temple (Oorambalam) on Google Maps
https://goo.gl/maps/9EhXAzjbwXGnszYR6?g_st=ac


திருஆவினன்குடிதிருவாவினன்குடி முருகன் கோவில் 5.09.2026

திருஆவினன்குடி
திருவாவினன்குடி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில், குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்குத் தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன
அறுபடை வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா, திருவாவினன்குடி திருத்தலத்திலே கொடியேற்றத்துடன், திருக்கல்யாணம் மற்றும் தேர் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தால் நடத்தப்படுகின்றன.
பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். “தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.

வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.

திருப்பணிகள்
பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலை நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மறு கட்டுமானம் செய்தும், புதிதாக மண்டபங்கள், பிரகாரம், ராஜ கோபுரம் அமைத்தும் பெரிய கற்றளியாக எழுப்பியுள்ளனர். 1919 சூன் 26 இல் குடமுழுக்கு இடம்பெற்றது.
முறையான பராமரிப்பில் உள்ள ஆலயம்
2026 ம் ஆண்டில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
மேற்குப்பார்த்த ஆலய அமைப்பு ராஜகோபுரம் முன் மயில்வாகணம்
பிராகாரத்தில் ஒரு புறம் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனித்தனி சன்னதிகள் மறுபுறம் சொக்கநாதர் மீனாட்சியம்மன் தனித்தனி சன்னதிகள்
மேலும் துர்க்கை விநாயகர் அமைத்துள்ளர் முன்மன்டபம் அடுத்து உள் மண்டபமும் கருவரையில் குழந்தை வேலாயுதனாரும் உள்ளனர் கோஷ்ட்ட பிரகாரத்தில் துர்க்கை சண்டிகேஸ்வரர் தட்சினாமூர்த்தி உள்ளனர்
ஆலயம் நகரத்தார் திருப்பணி சிறப்பானது.
பத்தர்கள் கூட்டடம் இருந்து கொண்டு இருந்தாலும், பூசைகள் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருஆவினன்குடி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூரிய பகவானும், இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திருஆஇனன்குடி என்று பெயா் பெற்றதாக சொல்லப்படுகிறது.

சங்க காலத்தில் இந்த ஊர் திருவாவினன்குடி என்றே அழைக்கப்பட்டதாகவும், மாம்பழத்திற்காக கோபம் கொண்டு வந்தமர்ந்த முருகப்பெருமானை சிவனும், பார்வதியும், இத்திருத்தலத்திற்கு வந்து ஞானப் "பழம் நீ" என்று முருகனுக்கு சூட்டிய பெயரே, நாளடைவில் மருவி பழநி என்று ஊர் பெயர் வர காரணமானதாக தல புராணம் கூறுகின்றது.
அமைவிடம்
இத்திருத்தலம் பழநி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில், பழநி மலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வடகிழக்கு திசையில் சரவணப் பொய்கை உள்ளது. இத்தலத்தில் உள்ள பெருமானை வழிபட்ட பின்னரே, மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணித் தெய்வத்தை வழிபடுவது மரபு.

மூன்றாம் படைவீடு விளக்கம்
மூன்றாம் படைவீடு என்பது பழநி மலைக்கோவிலா அல்லது திருவாவினன்குடி திருத்தலமா என்பதில் பலருக்கும் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது.

திருவாவினன்குடி கோவிலையே நக்கீரர் பெருமான், திருமுருகாற்றுப்படையிலே முருகனின் மூன்றாம் படைவீடாக

"தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவி னன்குடி அசைதலும் உரியன்: அதாஅன்று"

அதாவது, குற்றம் இல்லாத கோட்பாடுடன், யாவர்க்கும் நன்மையே விளைவிக்கும் உயர்ந்த கொள்கை உடைய தன் துணைவியோடு சிலகாலம் ஆவினன்குடியில் தங்கியிருப்பதற்கு உரிமை உடையவன் என்று போற்றி பாடியுள்ளார் என்பதாக சொல்லப்படுகிறது.

கோபம் கொண்டு வந்து அமர்ந்த இடமான பழநி மலைக்கோவிலில் தண்டாயுதபாணித் தெய்வமாகவும், திருவாவினன்குடி திருத்தலத்தில் மயில் மீது அமர்ந்த குழந்தை வேலாயுத சுவாமியாகவும் காட்சியளிக்கிறார். சங்க காலத்தில் இந்த இரண்டு திருத்தலங்களையும் சேர்த்தே இந்த ஊரின் பெயர் திருவாவினன்குடி என்று இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

ஆக நக்கீரர் பெருமகனார் பாடிய திருத்தலம் பழநி மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி கோவில் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு தலமாகவே கொள்ளலாம். எனவே மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி திருத்தலம் இரண்டையுமே மூன்றாம் படைவீடாகக் கொள்ள வேண்டும்.

ஆனால் சிலகாலம் முன்பு வரை இக்கோவிலின் சன்னதிக்கு வெளியே மூன்றாம் படைவீடு என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அப்பெயர்ப்பலகை நீக்கப்பட்டுவிட்டது. இன்றும் பழநி மலை அடிவாரத்தில் படிக்கட்டு நடைபாதை முடிந்து வெளியே வரும் இடத்தில் அரசாங்கத்தால் மூன்றாம் படைவீடு திருவாவினன்குடி செல்லும் வழி என்று வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது

அறுபடை வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா, திருவாவினன்குடி திருத்தலத்திலே கொடியேற்றத்துடன், திருக்கல்யாணம் மற்றும் தேர் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தால் நடத்தப்படுகின்றன

பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலை நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மறு கட்டுமானம் செய்தும், புதிதாக மண்டபங்கள், பிரகாரம், ராஜ கோபுரம் அமைத்தும் பெரிய கற்றளியாக எழுப்பியுள்ளனர். 1919 சூன் 26 இல் குடமுழுக்கு இடம்பெற்றது.

அருணகிரியால் திருப்புகழ்பாடப்பெற்றதலம்

பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முதலில் திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
இது பழமையான கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு முன்பே தோன்றியதாக நம்பப்படுகிறது.

இங்குள்ள முருகப்பெருமான் குழந்தை வேலாயுதசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

பழனி மலைக்கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

சங்க காலத்தில் இந்த ஊர் திருஆவினன்குடி என்று அழைக்கப்பட்டது.

அகத்தியர் இங்கு தவம் செய்து முருகனிடம் தமிழ் இலக்கணம் கற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த தகவல்கள் திருஆவினன்குடி கோயிலின் முக்கியத்துவத்தையும் வரலாற்று சிறப்பையும் விளக்குகின்றன.
நன்றி 🙏வலைதளம்🌐
#மீள் தரிசனம் 14.09.25 மற்றும் 
5.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

தாராபுரம் அகத்தீஸ்வரர் ஆலயம் - தாராபுரம் அகத்தீஸ்வரர் ஆலயம்விடாராபுரம் - தாராபுரம் - வைப்புத்தலம்தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் 5.06 9

தாராபுரம்  அகத்தீஸ்வரர் ஆலயம் விடாராபுரம் - தாராபுரம் - வைப்புத்தலம் தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட...