Thursday, July 23, 2026

பெருங்குடி : அருள்மிகுஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேதஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்)அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், 5.06.26

பெருங்குடி : அருள்மிகு
ஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேத
ஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்)
அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்,
பெருங்குடி கிராமம்,
ஸ்ரீரங்கம் (திருச்சி, சோமரசம்பேட்டை) வட்டம்,
திருச்சி மாவட்டம்.

சுந்தரசோழரால் 969-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட, இந்த பழமைமிகு ஆலயத்தின் கருவறையில்,அகத்திய மாமுனிவரால்வழிபடப்பட்ட ஆதிகாலத்தினைச்சார்ந்த,
நம் இனிய சுயம்புலிங்க ஈசனார்,வடக்கு திசை நோக்கி சற்றே சாய்ந்த நிலையில் 'ஆனந்த சயன' திருக்கோலத்தில்அருட்காட்சியளிப்பது காண்பதற்கு இனியதிருவருள்தரிசனமாகும்.

அம்பிகை
நின்ற திருக்கோலத்தில்,
சாந்த சொரூபினியாய்
தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள்.

(அகத்திய மாமுனிவர் பூஜைசெய்த சிவத்தலங்களில் இத்தலமும் ஒன்று என்பது தலச்சிறப்பு)

கூத்தனின் மகள் நல்லமங்கைக்கு
பார்வை கிடைக்கப்பெற
செய்த தலமாதலால்,
பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தல இறைவனை வழிபடுதல் நன்மை பயக்குமாம்.

ஶ்ரீ வள்ளி அரூபமாக காட்சிதருவதாக கூறப்படும் இத்தலத்தில்,
ஶ்ரீ தேவசேனாவுடன் மட்டும் வீற்றிருக்கும்
எம்பெருமான் முருகனைப்பற்றி
அருணகிரிநாதர்
தன் திருப்புகழில்
போற்றிப்பாடியுள்ளார்

969-ஆம் ஆண்டில்
சுந்தர சோழ மன்னரால்
கட்டப்பட்டு, தற்போது சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இத்திருத்தலத்தின் கருவறையில்,
நம் இனிய ஈசன்
(சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவராக)
சுயம்பு லிங்க திருமேனியராய், வடக்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில், கிழக்குதிசை பார்த்து
ஆனந்த சயனத்திருக்கோலத்தில் அருட்காட்சியளிப்பது தலவிசேஷம்.

தனி சன்னதியில்,
நம் அம்பிகை
நின்ற திருக்கோலத்தில்
சாந்த சொரூபியாக
திருவருள்புரிகின்றாள்.

(திருச்சி to வயலூர் சாலையில், சோமரசம்பேட்டைக்கு
அருகில், சிறப்புமிக்க இச்சிவன் கோயில் உள்ளது)

அகத்திய மாமுனிவர்
நம் ஈசனை எண்ணி வழிபட்ட சில சிவத்தலங்களுள் இத்திருத்தலமும்
ஒன்று என்பது தலச்சிறப்பாகும்.

(மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
இத்திருக்கோயில்,
இரண்டாம் ஆதித்தசோழர்,
போசள மன்னர்,
வீரராமநாதன், விஜயநகர மன்னர் விருப்பணன் மற்றும்
பாண்டிய மன்னர்கள் காலங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக
கல்வெட்டு பதிவுகள் கூறுகின்றன)

பிரதோஷ வழிபாடும், வியாழக்கிழமை நாட்களில் நடைபெறும்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடும் தலச்சிறப்புக்களில் சிலவாகும் .

செவ்வாய், சனி தோஷங்கள் மற்றும் கண் சம்பந்தமான பிரச்சினை தீர்க்கும் பரிகார தலமாக போற்றப்படும்

5.07.26 தரிசனம்
நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருச்செந்துறை,ஸ்ரீ சந்திரசேகர சுவாமி கோவில் 5.07.26

திருச்செந்துறை,ஸ்ரீ சந்திரசேகர சுவாமி கோவில்
திருச்சி அருகே அந்தநல்லூருக்கு அருகில் திருச்செந்துறை என்ற ஊரில் இப்போது “சந்திர சேகர ஸ்வாமி கோயில்“ என்று அழைக்கப்படும் இக்கோயிலானது திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றது. இக்கோயில் பல்லவர் காலத்தில் இருந்த போது மண் தளியாக இருந்திருக்கலாம். இதை கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியின் மகளும், அரிஞ்செயன் மனைவியாகிய ஆதிச்ச பிடாரியால் கற்றளியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலானது கல்வெட்டுகளில் ஆதித்தன் காலத்தில் திருச்செந்துறை பரமேஸ்வர் என்றும் முதலாம் பராந்தகன் காலத்தில் திருச்செந்துறை கற்றளி பரமேஸ்வர் , “திருச்செந்துறை கற்றளி பெருமானடிகள்“ ,திருச்செந்துறை மகாதேவர் என்றும் ராஜேந்திரன் காலத்தில் திருச்செந்துறை உடைய மஹாதேவன் என்றும், குலோத்துங்கன் காலத்தில் திருச்செந்துறை மஹாதேவர் என்றும் விக்ரம சோழன் காலத்தில் திருச்செந்துறை உடையார் என்றும், இரண்டாம் ராஜராஜன் காலத்தில் திருச்செந்துறை தேவர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் உள்ள இறைவன் சந்திரசேகரர் ஆவார். இறைவி “மானேந்தியவல்லி“ ஆவார். மானும் மழுவும் ஏந்தி இருப்பதால் இப்பெயர். மூலவர் சுயம்பு வடிவானவர்.
இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லூர் வாய்க்கால் இன்றும் இருப்பது சிறப்புக்குரியதாகும். இக்கோயில் இருக்குமிடத்தை ‘உறையூர் கூற்றத்து பிரம்மதேயம் ஈசானமங்கலம்’ என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.
இக்கோயிலின் சுவர்ப்பகுதியில் ஏராளமான கல்வெட்டுகள் பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. அக்காலத்தில் நிலமளக்கப் பயன்படுத்தப்பட்ட அளவுகோல் ஒன்று கருவறையின் தென்சுவரில் செதுக்கப்பட்டு அதன் அருகிலேயே ‘நிலமளந்த கோல்‘ என்று கல்வெட்டாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகோல் பற்றி இவ்வூருக்கு அருகில் உள்ள அந்தநல்லூர் வட தீர்த்த நாதர் கோயில் கல்வெட்டில் ‘திருச்செந்துறை ஸ்ரீ் விமானத்து வெட்டிக்கிளடக்கும் பெருங்கோலால் நிலம் மூன்று மாவும்‘ என்று குறிப்பிடுவதால், இப்பகுதியில் நிலமளக்க இந்த அளவுகோலே பயன்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
செம்பியன் இருங்கோவேளான் என்ற பூதி ஆதித்தன் பிடாரன் என்பவன் இக்கோயிலில்“பஞ்ச மகா சப்தம் “ என்ற இசை வழி பாட்டிற்குத் தானம் அளித்துள்ளான். கரடிகை, சங்கு, மத்தளம், காளம், வாய்ப்பாட்டு என்ற ஐந்தும் இக்கோயிலில் இசைக்கப்பட்டு உள்ளதை கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.
#கோயிலமைப்பு
கருவறை, பிரதி பந்த அதிட்டானத்துடன், சுவர்பகுதியில் தேவ கோட்டத்துடன் உள்ளது. இதில் பழமையான ரிஷபாந்திகர் சிற்பம் உள்ளது. தூண்கள் பிரம்ம காந்தமாகவும், வலபியில் பூத வரியும், கபோதத்தில் நேத்ர நாஸியும் உள்ளது.
இரு தள விமானமாக ஏறு சாலையும், விருத்தஸ்புடிதமும், கர்ண கூட்டின் நடுவேயும், அஹாரை, சாலையின் நடுவேயும், கிரீவம் மற்றும் கிரிவ கோட்டங்களில் சிற்பங்கள் மற்றும் நாட்டிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இவ்விமானம் நாகரமாக அமைந்துள்ளது.நான்கு புறமும் இடபங்கள் அமர்ந்த நிலையில் உள்ளது.
அர்த்த மண்டபம், மஹா மண்டபம், இறைவிக்கு சன்னதி என்றும், முன்னால் ராஜகோபுரமும் கொண்டு இக்கோயில் அழகுற அமைந்துள்ளது. இக்கோபுர சிற்பங்கள் அழகானவை.
#கல்வெட்டுகள்
முதலாம் ஆதித்தனின் நான்கு கல்வெட்டுகள்,அதில் மூன்றாம் ஆண்டில் பூதி ஆதிச்ச பிடரி ஐந்து கழஞ்சு பொன் கொடுத்து ஈசான மங்கலத்து சபையாரிடம் இடம் வாங்கி இசைக்கருவிகள் வாசிப்பவரின் நலனுக்காக தானமளித்துள்ளார். இதுவே காலத்தால் முந்தியது.
முதலாம் பராந்தகனின் இருபத்தியொரு கல்வெட்டுகள் உள்ளன. இவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் பூதி ஆதிச்ச பிடாரியால் இக்கோயில் கற்றளியாக எடுப்பிக்க பட்ட செய்தி உள்ளது.
பூதி ஆதிச்ச பிடாரி, இக்கோயிலுக்கு அமுது படைக்கவும், நொந்தா விளக்கெரிக்கவும், திருவிழா மற்றும் சூரிய கிரகணத்தின் பொது திருவிழா நடத்தவும் நிலங்களும், பொன்னும் தானமாக அளித்துள்ளார்.
செம்பியன் இளங்கோ வேளார் 7 வேலி நிலமும் வரி நீக்கி கொடுத்துள்ளார்.
இந்நிலம் 4 நொந்தா விளக்கிற்கும், இவர் பிறந்த உத்திராடம் ஒவ்வொரு மாதத்திலும் இறைவனுக்கு நெய்யால் அபிஷேகம் செய்யவும் அப்போதேல்லாம் பயிற்று போனகம் படைக்கவும் , பஞ்ச மாசப்தம் செய்யவும் தந்துள்ளார். இவர் மனைவியும் 20 கழஞ்சு பொன்னை தானமளித்துள்ளார்.பூதி கலிச்சி தன கணவனின் நன்மைக்காக விளக்கெரிக்க தானமளித்துள்ளார் .
முதலாம் ராஜேந்திரனின் 21 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று இவ்வூரை சேர்ந்த வாச்சியன் கண்டனும் அவன் தாயும் சேர்ந்து நிலமளித்து அதில் வரும் வருமானத்தை கொண்டு வேதம் வல்ல பிராமணருக்கு உணவளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
குலோத்துங்கனின் 16,46 ஆட்சியாண்டின் இரண்டும் கல்வெட்டும் உச்சிப்போதில் அமுதளிக்க சட்டி சோறு இரு நாழி அரிசியால் அளிக்கப்பட்டுள்ளது.
விக்ரம சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டும், இரண்டாம் ராஜராஜனின் 6, 14 ஆட்சியாண்டு கல்வெட்டும் விளக்கெரிக்க பசு முப்பதும், எருமை பன்னிரெண்டு, வெள்ளாடு நூறும் கொடுக்கப்பட்டுள்ளது.

 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுயம்பு லிங்கம், சோழர் கால கோவில். 

மூலஸ்தான தெய்வம் சந்திரசேகர ஸ்வாமி என்றும், தாயார் மானேந்திய வல்லி/மிருகதாரம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திருச்செந்துறை தற்போது ஜீயபுரம் என்று அழைக்கப்படுகிறது.

மூலவர்: சந்திரசேகரர்
அம்பாள்: மிருத்ராம்பிகை

கிழக்கு நோக்கிய ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது.

சூரியன் மற்றும் பைரவர் சிலைகள் கருவறையை நோக்கி காணப்படுகின்றன. அவை ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. தட்சிணாமூர்த்தியின் உபசன்னதி வ்ருஷபந்திகா மூர்த்திக்கு அருகில் அமைந்துள்ளது. இது ஒரு புதிய தேவையற்ற சேர்க்கையாகத் தோன்றுகிறது. ஸ்தல விருட்சம் என்பது பலா மரமாகும். இக்கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தம் காவிரி நதியாகும்.

இக்கோயில் சோழர் காலக் கோயில். இக்கோயிலில் சுமார் 50 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகள் பராந்தக சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் I, ராஜாதிராஜ சோழன், விக்ரம சோழன், இரண்டாம் ராஜராஜ சோழன், கோனேரி தேவராயா மற்றும் விஜயநகரத்தின் ஸ்ரீ ரங்க தேவ மகாராயா உள்ளிட்ட பல்வேறு மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை. 9ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்த சோழனால் மோட்டார் அல்லது செங்கல்லைப் பயன்படுத்தி இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இது பின்னர் 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குந்தவையால் கற்கோயிலாக மீண்டும் கட்டப்பட்டது.

இக்கோயில் HR & CE தமிழ்நாடு அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

கோவில் காலை 06:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மீள் தரிசனம் 5.7.26
நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ஆலந்துறை வடதிருத்தளிநாதர் வைப்புத் தலம் 5.07.26

ஆலந்துறை
தேவார வைப்புத்தலம்
வடதிருத்தளிநாதர், வட தீர்த்தநாதர். ஆலந்துறையார், திருச்சி - கருவூர் ரோடு, காவிரி தென்கரையில் பிரதான சாலையில் உள்ளது
இது திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவில். கிரானைட் கோவிலான இந்த கோயில் பராந்தக சோழனால் கட்டப்பட்டது, பின்னர் ராஜராஜ சோழன் கோயிலுக்கு பல நன்கொடைகள் மற்றும் சேவைகளை செய்தார். சண்டிகேஸ்வரர் மூல சோழர் கால சிலை போல் தெரிகிறது. ஸ்தல விருட்சம் என்பது ஆலமரம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் உள்ளன.
மீள் தரிசனம் 5.7.26
நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

வயலூர் முருகன் ஆலயம் 5.07.26

வயலூர்
ஒவ்வொரு முருக பக்தரும் தரிசிக்க வேண்டிய ஆழமான ஆன்மீக மற்றும் பழமையான கோவில். 1,200 ஆண்டுகள் பழமையான இந்த சோழர் காலக் கோயில், முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு அருள்பாலித்து, திருப்புகழ் இயற்றும்படி அருளிய தலமாகப் புகழ் பெற்றது.
தனிச்சிறப்பு: இங்குள்ள நடராஜர் சிலை மிகவும் அரிதானது, ஏனெனில் அவர் ஒரு காலில் நிற்காமல் இரு காலிலும் நிற்கிறார்.
நவகிரகங்கள்: சுவாரஸ்யமாக, அனைத்து கிரக தெய்வங்களும் இங்கு முருகப்பெருமானை எதிர்கொள்கின்றன, இது அவர்கள் மீது அவர் கட்டளையிட்டதைக் குறிக்கிறது.
புனித குளம்: முருகப்பெருமானின் வேள்வியால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் சக்தி தீர்த்தக் குளத்தைத் தவறவிடாதீர்கள்.
முருகப் பெருமானுக்குப் பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்பார் அருணகிரிநாதர். ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சி வயலூர். திருச்சியில் இருந்து மேற்கே, 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். குமாரவயலூர் என்னும் வயலூர், வயல்கள் சூழ்ந்த இடம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது என்பர். இவ்வூரை 'உறையூர் கூற்றத்து வயலூர்', 'தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்' 'ராஜகம்பீர வளநாடு' 'மேலைவயலூர்' என்று குறிப்பிடுகின்றன. அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் கம்பத்து இளையவராக தடுத்தாட்கொண்ட முருகப் பெருமான் முதன்புதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்கள் புனைந்த பெருமை கொண்ட தலம் இது. இங்கிருந்தே திருப்புகழ் எனும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று. முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு. காலமறியா காலத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ மன்னன், இங்கிருந்த கரும்பு ஒன்றை ஒடிக்க வாளால் வெட்டினான். அப்போது ஒடிந்த கரும்பிலிருந்து ரத்தம் வடிந்தது. இதனால் பதறிய சோழன் வயலைத் தோண்டிப் பார்க்கையில், அங்கே ஈசன் லிங்கமேனியாக காட்சி அளித்தான். அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி, ஆதிநாதர் என்ற திருநாமம் இட்டு வணங்கினான் என்று சொல்லப்படுகிறது. 9-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டது. ராஜகேசரிவர்மன், குலோத்துங்கச் சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் திருப்பணிகள் கண்ட இந்த கோயிலின் கல்வெட்டுகள் ஆலயத்தின் பழைமையை எடுத்துக் கூறுகின்றன. இங்குள்ள ஆதிநாதர் தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் மறப்பிலி நாதர் என்றும் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரன் என்றும், விடங்கப் பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளிப் பெருமான் என பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இங்கு அம்பிகையின் திருநாமம் ஆதிநாயகி. இங்கே வீற்றிருக்கும் கணபதியைப் பொய்யாக் கணபதி என்பர். கைத்தல நிறைகனி... எனத் துவங்கும் அருணகிரிநாதரின் விநாயகர் ஸ்தோத்திரப் பாடல் உருவானதும் இவரால்தான்.

வயலூர் முருகப்பெருமான் என்று உலகெங்கும் பிரசித்தமான இந்த ஆலயத்தில் தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் முருகப்பெருமான் இணைந்து ஈசனை இங்கு பூஜிக்கிறார்கள் என்பது ஐதீகம். தனி சந்நிதியில் வள்ளி - தெய்வானை சமேதராக காட்சி தருகிறார் வயலூர் முருகப்பெருமான். முயலகன் இல்லாத சதுர தாண்டவ நடராஜர், முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம், வைகாசி விசாக சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் சட்டத்தேர் விழா என இந்த ஆலயத்தில் அதிசயங்கள் அநேகம். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்பணிகள் செய்து வழிபட்ட திருத்தலம் இந்த வயலூர் முருகன் கோயில். திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. ஆண்டு முழுக்க பக்தர்கள் இங்கு வந்து கூடி முடி இறக்குதல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், காது குத்தல், சஷ்டி விரதம் இருத்தல், ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தல், பெண்கள் கும்பிடு தண்டமும், அடிப் பிரதட்சணமும் செய்வது என பல நேர்த்திக்கடன்கள் செய்கின்றனர். நாக தோஷம் மற்றும் குழந்தை வரம் இல்லாதோர் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் அடைவர் என்பது நம்பிக்கை.

நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பெருங்குடி : அருள்மிகுஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேதஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்)அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், 5.06.26

பெருங்குடி : அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேத ஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்) அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்குடி கிராமம்,...