Showing posts with label சம்பந்தர் அமுதம் - மாலை மாற்று. Show all posts
Showing posts with label சம்பந்தர் அமுதம் - மாலை மாற்று. Show all posts

Monday, August 17, 2020

மாலைமாற்று பதிவு - நான்கு

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
#மாலைமாற்று (பாடல் 9, 10, 11 )
பதிவு : நான்கு

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
 
📚சைவத் திருமுறைகள் தமிழின் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
சித்திரக்கவி என்னும் வகையில் சம்பந்தப்பெருமான் அருளிய 
#மாலைமாற்று பதிகம் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் பதிவு.

☣️ சம்பந்தர் அருளிய  மிக மிக அரியவகை  தமிழ் இலக்கியப் பாடல்களாகும்.

❇️சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
  #மாலைமாற்று வகை என்பது..

சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
#மாலைமாற்று வகை என்பது..

⏺️ஒரு மாலைக்கு அமைந்த இரு தலைப்புக்களுள் எதனை முதலாகக் கொண்டு நோக்கினாலும், அம்மாலை ஒரே தன்மையதாய் தோன்றுவது போல, ஒரு செய்யுளை முதலிலிருந்தோ, இறுதியிலிருந்தோ எவ்வகையில், வாசித்தாலும் அதே செய்யுளாக அமையுமாறு ஒத்த எழுத்துக்களை நிரவப் பெற்றிருப்பதே மாலைமாற்று செய்யுள் என்று இலக்கணவியலார் விளக்கியுள்ளார்கள்.

⏺️ஒரு பாடலில் உள்ள இரண்டு அடிகளை முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும், சொல்லும்  பொருளும் மறுபடாமல் இருப்பது.

⏺️ மாலை போல முதலும் முடிவும் மாறி மாறி சுற்றிவருவதால் இதை மாலைமாற்று பாடல் என்று அழைக்கப்படுகிறது.

⏺️இவ்வகைக் கவிகளை மிக முயன்று அமைத்துள்ளமையால் இவை மிகைக்கவி என்னும் கூறுவர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.

🔱தமிழில் இது பற்றிய சில வார்த்தைகள்:

சிவயவசி, விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை, தேருவருதே, மாடுஓடுமா, மோருதாருமோ, தோடுஆடுதோ, மேகராகமே, மேளதாளமே, வைபூவை, மாலாபோலாமா,

❇️இவ்வகையில் ஒரு பாடலில் இரண்டு வரிகளை அமைத்து 11 பாடல்களைக் கொண்ட ஒரு பதிகம் அற்புதமாக இயற்றி அருளிச் செய்துள்ள தமிழ் ஞானசம்பந்தர் சிறப்பு போற்றத்தக்கது. 

✳️ஒரு மெய்யெழுத்து கூட இப் பதினோறு பாடல்களிலும் இல்லை என்பது இன்னும் சிறப்பு.

❇️மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள
(117) 375வது சீர்காழி தலத்தில் அருளிய பதிகம்

✳️ #மாலைமாற்றுப் பதிகம் பற்றி மேலும் தொடர்ந்து சிந்திப்போம்.

❇️கெளசிகப் பண் அமைந்த பதிகம்.

📖 முதல்பதிவில் 1, 2, பாடல்களும்
இரண்டாம் பதிவில், 3, 4, 5, பாடல்களையும் பார்த்தோம்
மூன்றாம் பதிவில்
பாடல்கள் 6,7,8 மற்றும்
இந்த நான்காவது பதிவில் 9, 10, 11 ஆகியவற்றின் பாடல் பொருள் உரை பற்றி சிந்திப்போம். (நிறைவு பகுதி).
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
9.
பாடல்: 1265:

காலேமேலே  காணீகா  ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா  லேகாழீ   காணீகாலே மேலேகா .

பொருள் :
🏵️முதல்வரி:

காலே - காற்றாகி யெங்கும் கலந்தவனே. மாலே - எவற்றிற்கும் மாயம் செய்பவனே. மால்    - மயக்கம். 
மாயம் - மாயனென்னும் திருமாலுக்கும்
மே       - சிறந்த. 
பூ         - மலர்ந்த. 

🏵️இரண்டாம் வரி:

பூ மேல் ஏ(ய்) - பிரமனும். 
மாலே             - மாலும். 
காலே             - திருவடியையும். |
மேலே            - திருமுடியையும். 

காண்           - காணலை. 
நீ                   - ஒழித்த. 
காழீ              - வைரத்தன்மையனே. 
காழீ! காண் - கடைக்கணி. 
கால் ஈ          - திருவடியைத் தருக.

🔱பொருளுரை:

⏺️காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே.

⏺️பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! 
சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே.
எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
10.
பாடல்: 1266:

வேரியுமேணவ  காழியொயே யேனைநிணேமடளோ  காதே

தேரக  ளோடம  ணேநினையே 
யேயொழி காவண  மேயுரிவே.

பொருள் :
🏵️முதல்வரி:

வேரியுமேணவ= 
வேரி + ஏண் + நவம் +
வேரி - மணம். 
ஏண் - பெருமை. 
நவம் - புதுமை. 

காழியாயே = காழியில் வீற்றிருப்பவர்

யேனைநிணேமடளோ =
ஏனை+நீள் நேம் + அடு + அள் 

ஏனை     - துன்பத்தையும். 
நீள்நேம் - மிக்க அன்பையும். 
அடு         - முறையே ஒழி(த்தலும்) 
அள்         - அள்ளிக்கொள்ளுதலுமாகிய 
                   செய்கை. 
ஓகரது ஏ - யோகிகளுடைய செய்கையே

🏵️இண்டாம் வரி:
தேரகளோடம னேறினையே யேயொழி =
தேர்களோடு + அமனே + நினை + ஏய்

தேர்களோடு - தேரர்களின்    
                            உபதேசங்களோடு. 
அமணே         - அமணர்களின் 
                           உபதேசங்களையும். 
நினை - நினைத்தலையும். 
ஏய் - அவரோடு பொருந்துதலையும்.
ஒழி - ஒழிப்பீராக. 

காவண மேயுரிவே = காவணமே + உரிவே

காவணமே - அந்நெறிகளிற் 
                         சேராமற்காக்கும் திறம். 
உரிவே - உமக்கு உரியவேயாகும். 

🔱பொருளுரை :

⏺️நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே. 

⏺️புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
11.
பாடல் : 1267:

நேரகழாமித  யாசழிதா  யேனனியேனனி ளாயுழிகா

காழியுளானின யேனினயே தாழிசயாதமி  ழாகரனே .

பொருள் :
🏵️முதல்வரி :

நேரகழாமித= நேர் + அகழ் + ஆம்
நேர்               = நேர்மையை. 
அகழ் ஆம்    = கல்லியெறிவதாகிய. 

யாசழிதா = 
இதய ஆசு - மனத்துக் கண் எழும் (காம 
                      வெகுளி மயக்கம் என்னும்)    
                      முக் குற்றங்களையும். 

அழி            - அழிக்கவல்லவனே. 
                      
தா  யேனனியேனனி = 
தாய் ஏல் நன் நீயே = உலகுக்கெல்லாம் தாயாந் தன்மையை யேற்கத்தக்கவன் நீ ஒருவனே. 

வாழ் + ந் + அன் = வாணன் என்றாகியதுபோல ஏல் + ந + அன் = ஏனன் என்றாகியது. 

நல் - நன்மை புரிவதில். 

நீள் - மிக்கோனே. 

ஆ(ளா)யுழிகா = ஆய் + உழிகா
ஆய் உழிகா - தளர்ந்த இடத்துக் 
                          காப்பாயாக.

🏵️இரண்டாம் வரி:

காழியுளானின யேனினயே தாழிசயாதமி  ழாகரனே

காழி + உள்ளானின்+நையை + நினையே
தாழ்வு + இசையா + தமிழகரனே.

காழியுளானின் - சீகாழிப் பதியானைப்
                                பற்றிய. 
நையே      - கேட்டோர் மனம் குழைப்பதாகி         
                      இப்பாடல்களை. 
நினையே - நினைத்துப் பாடவே. 

தாழிசயா (தமி)= தாழ்வு + இசையா
தாழ்(வு)  = குறைவும் 
இசையா = உண்டாகா

தமிழாகரன் - தமிழே உடம்பாக உடைய 
                         திருஞானசம்பந்தனே. 

🔱பொருளுரை:

⏺️நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக!

 ⏺️நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ள காழிப்பதியில் வீற்றிருக்கும் பெருமானை நினத்துப் போற்றும்  திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இத்திருப்பதிகத்தை சிவபெருமானைப் போற்றி அருளிய, உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
🙏இத்துடன் #மாலைமாற்று பதிகம் பற்றிய விளக்கம் நிறைவு.

🙏திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை உணர்த்தியதும்,மறுபுறம் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட பா அமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🙏திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள்
(http://thevaaram.org/ta/index.php)
மற்றும் பல்வேறு நூல்களின் அடிப்படையில் இப்பதிவில் குறிப்புக்கள் கொண்டும்.

🙏மேலும், பேரறிஞர்களாகிய, வ. த. இராமசுப்பிரமணியம்,  முதலிய ஒப்பற்ற பல பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெற்றது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
#மாலைமாற்று 
பதிவு : ஒன்று : பாடல். 1, 2
https://m.facebook.com/story.php?story_fbid=4261517207256837&id=100001957991710
பதிவு : இரண்டு : பாடல், 3, 4, 5.
https://m.facebook.com/story.php?story_fbid=4261528527255705&id=100001957991710
பதிவு : மூன்று: பாடல், 6, 7, 8
https://m.facebook.com/story.php?story_fbid=4281187108623180&id=100001957991710
🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏

மாலைமாற்று பதிவு: மூன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
#மாலைமாற்று (பாடல் 6,7, 8 )
பதிவு : மூன்று

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
 
📚சைவத் திருமுறைகள் தமிழின் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
சித்திரக்கவி என்னும் வகையில் சம்பந்தப்பெருமான் அருளிய 
#மாலைமாற்று பதிகம் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் பதிவு.

☣️ சம்பந்தர் அருளிய  மிக மிக அரியவகை  தமிழ் இலக்கியப் பாடல்களாகும்.

❇️சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
  #மாலைமாற்று வகை என்பது..

⏺️ஒரு பாடலில் உள்ள இரண்டு அடிகளை முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும், சொல்லும்  பொருளும் மறுபடாமல் இருப்பது.

⏺️மலர்களை கொண்டு மாலை கட்டி முடிக்கும் போது ஆரம்பமும் முடிவும் ஒன்றாக முடியும் அது போல வார்த்தைகளை அடுக்கி வரிகளை முடிக்கும்போது அதே வரிசையில் திரும்ப வாசிக்க அதற்கும் பொருள் வரும்.  மாலை போல முதலும் முடிவும் மாறி மாறி சுற்றிவருவதால் இதை மாலைமாற்று பாடல் என்று அழைக்கப்படுகிறது.

⏺️இவ்வகைக் கவிகளை மிக முயன்று அமைத்துள்ளமையால் இவை மிகைக்கவி என்னும் கூறுவர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.

🔱தமிழில் இது பற்றிய சில வார்த்தைகள்:

சிவயவசி, விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை, தேருவருதே, மாடுஓடுமா, மோருதாருமோ, தோடுஆடுதோ, மேகராகமே, மேளதாளமே, வைபூவை, மாலாபோலாமா,

❇️இவ்வகையில் ஒரு பாடலில் இரண்டு வரிகளை அமைத்து 11 பாடல்களைக் கொண்ட ஒரு பதிகம் அற்புதமாக இயற்றி அருளிச் செய்துள்ள தமிழ் ஞானசம்பந்தர் சிறப்பு போற்றத்தக்கது. 

✳️ஒரு மெய்யெழுத்து கூட இப் பதினோறு பாடல்களிலும் இல்லை என்பது இன்னும் சிறப்பு.

❇️மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள
(117) 375வது சீர்காழி தலத்தில் அருளிய பதிகம்

✳️ #மாலைமாற்றுப் பதிகம் பற்றி மேலும் தொடர்ந்து சிந்திப்போம்.

❇️கெளசிகப் பண் அமைந்த பதிகம்.

📖 முதல்பதிவில் 1, 2, பாடல்களும்
இரண்டாம் பதிவில், 3, 4, 5, பாடல்களையும் பார்த்தோம்
இந்த மூன்றாம் பதிவில்
பாடல்கள் 6,7,8 ஆகியவற்றின்
பாடல் பொருள் உரை பற்றி சிந்திப்போம்.

தொடர்ந்து  அடுத்தடுத்த பதிவுகளிலும் தொடர்ந்தும் சிந்திக்கலாம்).
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
6
பாடல்: 1262
மேலேபோகா  மேதேழீ  காலாலேகா லானாயே
யேனாலாகா  லேலாகா  ழீதேமேகா  போலேமே.

பொருள் :
🏵️முதல் வரி:

மேலேபோகாமே - மார்க்கண்டேயர் மீது எமன் போகாமல். 

தேழீ - கடுங்குரலால் உரப்பினவனாய். 

காலாலே - காலினாலே. 

கால் ஆனாயே - (அவ்வெமனுக்கு) காலன் ஆனவனே. 

🏵️இரண்டாம் வரி:
யேனாலாகா லேலாகா ழீதேமேகா= 
எல் + நால் + ஆகி + ஆல்+ஏலா +காழி + மேகா.

ஏல் - பொருந்திய. 
நால் - சனகர் முதலிய நால்வருக்கும். 
ஆகி - குருவாகிய. 
ஆல் - கல்லால மரத்தில். 
ஏலா - ஏற்றவனே. 
காழீதே - சீகாழியிலுள்ள தெய்வமே. 
மேகா - (திருமால் மேகவடிவங்கொண்டு வாகனமாகி நிற்க) அந்த மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவனே.

போலேமே - யாங்கள் உமது பல்கணத்தில் ஒருவராக எண்ணப்படுதற்கு அத்திருமாலை ஒத்திலோமோ?

🔱பொருளுரை:

⏺️மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே.  உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே.

⏺️சனகர் முதலிய நால்வர்க்கும்  சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் மெய்ப்பொருள் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே.  சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தைப் போல் குளிர்ச்சியாக விளங்கி உயிர்களுக்கு இனிமை செய்பவர். உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் நாம் ஆவோம்.

🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
7
பாடல் 1263

நீயாமாநீ  யேயாமா  தாவேழீகா நீதானே
நேதாநீகா  ழீவேதா  மாயாயேநீ  மாயாநீ .

பொருள் :
🏵️முதல் வரி:

நீயா    மாநீ   ஏயா   மாதா  ஏழீ  கா நீதானே

நீயா - (உம்மை) நீங்குதல் அறியாத 

மான் - மானைப்போன்றவர். 
மாநீ - மானை உடையவன். 
மாநீ (மானீ) - உமா தேவியை உடையவனே. 

ஏயா - ஒப்பற்ற. 

மாதா - தாயே. 

ஏழீ - ஏழிசை வடிவாய் உள்ளவனே. 
ஏழீ - ஏழ்தொகைக் குறிப்பாக இசையை உணர்த்தியது. 

காநீதானே - `அழையாமே அருள் நல்குமே
காநீதானே - நீயே வலியவந்து என்னைக் காப்பாயாக. 
தாநீ - தானத்தை (இடத்தை உடையவனே) எங்களைக் கொல்லும் துன்பத்தை நீ கொல்லமாட்டாயா? என்பது ஓர் நயம்

🏵️இரண்டாம் வரி:

நே   தாநீ  காழிவேதா மாய் ஆநீ  மாயாயே

நே - அன்பார்ந்த இடத்தை.

தாநீ - இடமாக உடையவனே. 

காழிவேதா - சீகாழியில் எழுந்தருளியுள்ள வேத சொரூபியே. 

மாய் - எம்மைக்கொல்லும். 

ஆநீ - துன்பங்களை. 

நீ மாயாயே - நீ கொல்ல மாட்டாயா? 

🔱பொருளுரை:

⏺️மானைக் கரத்தில் வைத்துள்ள ஈசனே, உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே.  ஒப்பற்ற தாயானவனே. ஏழிசை வடிவானவனே. நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! 

⏺️பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாகஉடையவனே.  சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுபவர். வேதங்களைஅருளிச்செய்து வேதங்களின் உட்பொருளாக விளங்குபவனே.  எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீகொன்று அருள்செய்யாயோ?
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
8
பாடல் : 1264

நேணவராவிழ  யாசைழியே வேகதளேரிய   ளாயுழிகா

காழியுளாயரி  ளேதகவே 
யேழிசை  யாழவி   ராவணனே.

 பொருள் :

🏵️முதல்வரி:

நேணவராவிழயாசைழியே, =
நே +அணவர் +ஆ + விழ  + யா  +ஆசை  + இழியே. 

நே அணவர் - (உமது திருவடியில்) நேயம் பொருந்தும் அடியவராம், 

ஆ - பசுக்கள். 

விழ - தன் வயமற்றுக் கிடக்க. 

யா - (யாத்த) கட்டிய, 

ஆசை - ஆசையாகிய கயிற்றை. 

இழியே - அவிழ்த்து விடுபவனே.

(அடியவரைப் பசுவென்று, ஆசையைக் கயிறென்னாமையால் ஏகதேச உருவகம்.
நேணவர் - நே + அணவர் எனவும், யாசைழியே - யா, அசை, இழியே எனவும் பதம் பிரித்துக் கொள்க. 
யா + ஆசை = வினைத்தொகை.
நேணவர் - யாசைழியே இல்விரு தொடரும் மரூஉ முடிபின)

அன்பான அடியவர்கள் ஈசன் திருவடியின் மீது இருந்து ஆசை முதலிய குற்றங்களைத் துறந்து விளங்குகின்றனர்.

வேகதளேரியளாயுழிகா =
வேக(ம்) + அதரி + ஏரி +அளாய + உழி + கா

வேகம் - விலங்குகளில் வேகமாய் 
                ஓடவல்ல மானின், அதன்
                தோலையணிந்த, 

ஏரி - அழகனே. (ஏர் - அழகு)

அளாய உழி - துன்பங்கள் எம்மைச் 
                          சூழ்ந்தவிடத்து. 

கா - காப்பாற்றுவாயாக.

🏵️இரண்டாம் வரி:

காழியு(ள்)ளாய் = காழியில் உள்ளவரே

அரிளேதகவே =
அரு + இளவு + ஏது + அகவே. 

அருஏதம் = மன்னித்தற்கரிய குற்றங்கள்.
இளவு      = (எமது) சிறுமைத் தன்மையால் 
                    செய்தனவாதலின், 
அஃகவே = அவை மன்னிக்கத்தக்கன  
                    ஆகுக.

ஏழிசை இராவணனே = ஏழிசை பாடிய 
               இராவணனுமல்லவா பெரும் 
               பிழையும் மன்னிக்கப் பெற்றுத் 
               திருவருளுக்குப் 
               பாத்திரமாயினான். 

⏏️செருக்கினால் செய்த பெரும் பிழையை மன்னித்த கருணை, சிறுமையாற் செய்த பிழைகளை மன்னிக்கவும் தகும் என மன்றாடியவாறு.

🔱பொருளுரை:

⏺️இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவர் கட்டிய ஆசை என்று சொல்லப்படும் -பெருங்கயிற்றைத்- குற்றங்களைத் துறந்து அவிழ்த்தருள்பவரே. 
   மிக வேகமாக ஓடும் மானின் தோலை   
   அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. 
   பொறுக்கலாகாத் தீவினைத்   
   துன்பங்கள்  தாக்க வரும்போது  
   காத்தருள்வீராக!

⏺️காழிப்பதியில் வீற்றிருக்கும் நாதனே
   மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின்   
   சிறுமைத் தன்மையால் 
   செய்தனவாகலின் அவற்றைப்  
   பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் 
   கொண்டு பொறுத்தருள்வீராக!
   ஏழிசைவல்ல இராவணன்   
   செருக்கினால் செய்த பெரும்பிழையை 
   மன்னித்து அருளியது போல எமக்கும் 
   அருள் புரிவீராக.

🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
இதன் தொடர்பதிவில் அடுத்தடுத்த பாடல்களின் பொருளும் உரையும் பற்றி சிந்திக்கலாம்.

⏺️திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை உணர்த்தியதும்,மறுபுறம் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட பா அமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள்
(http://thevaaram.org/ta/index.php)
மற்றும் பல்வேறு நூல்களின் அடிப்படையில் இப்பதிவில் குறிப்புக்கள் கொண்டும் தொகுக்கப்பட்டது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே.
மேற்படி நூல்களையும் அறிஞர்கள் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை  பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு : ஒன்று : பாடல். 1, 2
https://m.facebook.com/story.php?story_fbid=4261517207256837&id=100001957991710

பதிவு : இரண்டு : பாடல், 3, 4, 5.
https://m.facebook.com/story.php?story_fbid=4261528527255705&id=100001957991710
🙏🙇‍♂️🎪🙇‍♂️🙏🙇‍♂️🎪🙇‍♂️🙏🙇‍♂️🎪🙇‍♂️🙏

மாலைமாற்று பதிவு : இரண்டு

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
#மாலைமாற்று (பாடல் 3, 4, 5 )
பதிவு : இரண்டு

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
 நமது பாரம்பரிய தமிழரின் கலாச்சாரங்களும் பண்பாடுகளும் சிதைந்து இருந்ததை மீட்டு சீர்திருத்தியவர், திருஞானசம்பந்தர்.

📚சைவத் திருமுறைகள் தமிழின் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
சித்திரக்கவி என்னும் வகையில் சம்பந்தப்பெருமான் அருளிய 
#மாலைமாற்று பதிகம் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் பதிவு.

☣️ சம்பந்தர் அருளிய  மிக மிக அரியவகை  தமிழ் இலக்கியப் பாடல்களாகும்.

❇️#சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
  #மாலைமாற்று வகை என்பது..

⏺️ஒரு பாடலில் உள்ள இரண்டு அடிகளை முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும், சொல்லும்  பொருளும் மறுபடாமல் இருப்பது.

⏺️மலர்களை கொண்டு மாலை கட்டி முடிக்கும் போது ஆரம்பமும் முடிவும் ஒன்றாக முடியும் அது போல வார்த்தைகளை அடுக்கி வரிகளை முடிக்கும்போது அதே வரிசையில் திரும்ப வாசிக்க அதற்கும் பொருள் வரும்.  மாலை போல முதலும் முடிவும் மாறி மாறி சுற்றிவருவதால் இதை மாலைமாற்று பாடல் என்று அழைக்கப்படுகிறது.

⏺️இவ்வகைக் கவிகளை மிக முயன்று அமைத்துள்ளமையால் இவை #மிகைக்கவி என்னும் கூறுவர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.

⏺️சொல்லணியில் இது #வண்ணகம் என்ற அமைப்பு  வகையில்   நெட்டெழுத்து மிகுதியும் பெற்று வரும்
 'நெடுஞ்சீர் வண்ணம்"  என்றும் வகைப்படுத்துகின்றனர்: 

🔱தமிழில் இது பற்றிய சில வார்த்தைகள்:

சிவயவசி, விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை, தேருவருதே, மாடுஓடுமா, மோருதாருமோ, தோடுஆடுதோ, மேகராகமே, மேளதாளமே, வைபூவை, மாலாபோலாமா,

"பூவாளை நாறு நீ பூ மேக லோகமே
பூநீறு நாளை வா பூ"
இதன் பொருள் :
= பூச்சூடி, திருநீறு கொண்டு, நாளை வா'

❇️இவ்வகையில் ஒரு பாடலில் இரண்டு வரிகளை அமைத்து 11 பாடல்களைக் கொண்ட ஒரு பதிகம் அற்புதமாக இயற்றி அருளிச் செய்துள்ள தமிழ் ஞானசம்பந்தர் சிறப்பு போற்றத்தக்கது. 

✳️ஒரு மெய்யெழுத்து கூட இப் பதினோறு பாடல்களிலும் இல்லை என்பது இன்னும் சிறப்பு.

❇️மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள
(117) 375வது சீர்காழி தலத்தில் அருளிய பதிகம்

✳️ #மாலைமாற்றுப் பதிகம் பற்றி மேலும் சற்று விரிவாக சிந்திப்போம்.

❇️கெளசிகப் பண் அமைந்த பதிகம்.

📖 முதல்பதிவில் முதலிரண்டு பாடலைப் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் 3 முதல் 5 வரை உள்ள  பாடல் பொருள் உரை பற்றியும் சிந்திப்போம்.

தொடர்ந்து  அடுத்தடுத்த பதிவுகளிலும் தொடர்ந்தும் சிந்திக்கலாம்).
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
3
பாடல் 1259:

தாவரமூவா   தாசாகா  ழீநாதாநீ  யாமாமா
மாமாயாநீ  தாநாழீ  காசாதாவா  மூவாதா.

🏵️முதல்வரி:

தாவா - அழியாத. 
தாவம் - நெருப்பு

மூவா - மூப்பில்லாத (என்றும் 
              இளமையாய் உள்ள) 

தாசா - தசகாரியத்தால் அடையும் 
             பொருளாக உள்ளவனே.
             ஆசானாகத் திகழ்பவர்
          
காழீநாதா - சீகாழிக்குத்தலைவனே! 

நீ - எவரும் சஞ்சரிப்பதற்கு அஞ்சி 
      நீக்குகின்ற, 

யாமா - நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் 
              நாதனே. 

மா - பெருமை வாய்ந்தவனே

🏵️இரண்டாவது வரி:

மா = பெரிய
மா - ஐராவணமாகிய பெரிய 
         யானையின்மேல்,

யா நீ - ஏறி வருபவனே! 

தானாழி - (தான + ஆழி) = கொடையில் 
                    கடல் போன்றவனே. 

சா - சாவதினின்றும். 
கா - காப்பாற்றுவாயாக. 

காசா - இரத்தினம் போன்ற ஒளியை உடையனே!  
காசு = (குற்றம்) குற்றம் இல்லாதவன்

தா - கேட்டவரங்களை எல்லாம் தருவாயாக. 

வா - என் முன் எழுந்தருள்வாயாக. 

மூ - எவற்றினும் முன்னே தோன்றிய.

வாதா - காற்று முதலாக உள்ள ஐம்பூத வடிவாய் உள்ள. 

🔱பொருளுரை:

⏺️அழியாத நெருப்பாகவும், மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாகவும், குருவாகவும் உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. 
   எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற   
   சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் 
   நாதனே. 

⏺️மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. 
   கொடையில் கடல் போன்றவனே.     
   சாவினின்றும் எங்களைக்    
   காத்தருள்வாயாக. குற்றம் இல்லாத    
   ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே.
   வேண்டும் வரங்களைத்    
   தந்தருள்வாயாக. எங்கள்முன் 
   எழுந்தருள்வாயாக.
   முன்னைப் பழம்பொருளே. 
   காற்று முதலான ஐம்பூதங்களின்   
   வடிவானவனே!
🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
4
பாடல் 1260 :

நீவாவாயா  காயாழீ  காவாவானோ வாராமே
மேராவானோ  வாவாகா  ழீயாகாயா
வாவாநீ

பொருள் :
🏵️முதல்வரி:

நீவா - என்றும் மாறாத. 

வாயா - உண்மைப் பொருளானவனே. 

கா - தாங்கிய. 

யாழீ - வீணையினையுடையவனே.

காவா - (காகா) வந்து காத்தருள்வாயாக, 

வான் - தேவர்கள். 

நோவாவா - துன்பமடையாவாறு.

வான்நோவாராமே - கொடிய பிறவித் துயரம் எம்மை எய்தாமல், 

🏵️இரண்டாம் வரி:

மேரா - மேரு மலையை ஏந்தியவனே. 

காழீயா - சீகாழிப் பதியுள் எழுந்தருளியுள்ளவனே. 

காயா - ஆகாய சொரூபியே. 

வாவா நீ - நீ விரைந்து வருவாயாக. 

வாய் - உண்மை. 

🔱பொருளுரை :

⏺️என்றும் மாறுதலில்லாத நீக்கப் பெறாத மெய்ப்பொருளானவனே.  தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. 

⏺️விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே,  ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.
🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
5
பாடல்: 1261

யாகாலாமே யாகாழீ  யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ  தாமேயா ழீகாயாமே லாகாயா

பொருள் :
🏵️முதல்வரி:

யா - எவையும் வணங்கத்தக்க. 
யா - எவற்றிற்கும். 

காலா - கால வடிவமாக உள்ளவனே. 

மேயா - எவற்றினுள்ளும் எள்ளில் 
               எண்ணெய் போல் வியாபித்து 
               இருப்பவனே. 

மேதாவீ - அறிவில் மேம்பட்டவனே. 

தாய் ஆவி - எவ்வுயிருக்கும் தாயாகவும் உயிராகவும் உள்ளவனே. 

🏵️இரண்டாம் வரி

வீயாதா - என்றும் அழிவில்லாதவனே. 

வீ - கின்னரம் முதலிய பறவைகள் (தாம் - அசை) 

மே - தன்னருகில் வந்து விழும்படியாக. 

யாழீ - வீணைவாசிப்பவனே. 

யாம் - நாங்கள் மேல் - மேற்கொண்டு. 

ஆகு - ஆவனவற்றிற்கு.

ஆயா - ஆயாதவாறு. 

கா - எம்மைக் காப்பாயாக.

⚜️பொருளுரை:

⏺️யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே!  அறிவில் மேம்பாடு உடைய ஞான பூரணமானவனே!
   அனைத் துயிர்கட்கும் தாயாகவும், 
   உயிராகவும் உள்ளவனே! 

⏺️என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. 
   பிறவா நிலை அடைய, யாங்கள்      
   மேற்கொண்டு ஆவனவற்றிற்கு   
   ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் 
   வாயாக.
🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
இதன் தொடர்பதிவில் அடுத்தடுத்த பாடல்களின் பொருளும் உரையும் பற்றி சிந்திக்கலாம்.

⏺️திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை உணர்த்தியதும்,மறுபுறம் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட பா அமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள்
(http://thevaaram.org/ta/index.php)
மற்றும் பல்வேறு நூல்களின் அடிப்படையில் இப்பதிவில் குறிப்புக்கள் கொண்டும், பேரறிஞர்  வ. த. இராமசுப்பிரமணியம்,  முதலிய ஒப்பற்ற பல பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முதல் பதிவு: பாடல் 1, 2:
https://m.facebook.com/story.php?story_fbid=4247201255355099&id=100001957991710

மாலைமாற்று பதிவு : ஒன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
#மாலைமாற்று (பாடல் 1, 2 )
பதிவு : ஒன்று

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முதலில் திருஞானசம்பந்தர் பற்றிய சிறு குறிப்பு:

திருஞானசம்பந்தர் :

⚛️கி.பி.6 ம் நூற்றாண்டு இறுதியில் திருஞானசம்பந்தர் அவதரித்தார். இவரின் வருகைக்கு முன்புவரை,  பிற மதங்கள் குறிப்பாக சாக்கியம், சமணம் போன்ற  இறையுணர்வை மறுத்தும், வேறுபட்ட  இறைக் கொள்கைகளையும் கொண்ட, வட ஆதிக்க கலாச்சார பண்புகள் பரவி, சீர்கேடுகள் நிறைந்தும் இருந்து வந்தன.

 🔯இந்த  பிற மதங்களின் பொய்யுரைகளும், போலி வாதங்களையும் கேட்டு அதற்கு கட்டுண்டு கிடந்த மன்னர்களின் அறிவற்ற  அரச நெறிகளையும் நமது பாரம்பரிய தமிழரின் கலாச்சாரங்களும் பண்பாடுகளும் சிதைந்து இருந்ததை மீட்டு சீர்திருத்தியவர், திருஞானசம்பந்தர்.

📝"மூவரருளிய தேவாரக் காலம் பிறகே சிற்றிலக்கியங்கள் எழுந்தன" - பேராசிரியர் மா.ச. அறிவுடை நம்பி.

📚சைவத் திருமுறைகள் தமிழின் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
ஏற்கனவே, சம்பந்தர் பாடல்களில் #ஏகபாதம், #எண்ணலங்காரம், 
#மொழிமாற்று, #மடக்கணி, #திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
மற்றும் #திருவெழுக்கூற்றிருக்கை இவை பற்றி ஏற்கனவே சிந்தித்து இருந்தோம் அந்த வகையில் இப்பதிவு #மாலைமாற்று பற்றியது.

'📦தேவாரத்தினை பொக்கிசம் என்று சொல்ல காரணம், அந்த பாடல்களில் தவழும் பக்தி மனம் மட்டுமல்ல படைப்பின் நயமும் தான்'. 

📓'தமிழில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட அதிசயதக்க செய்யுள் முறைகள் காணப்படுகின்றன. அந்த வகையில்  #சித்திரக்கவி எனப்படும் செய்யுள் வகை மிகச்சிறப்பு'.

📿#மாலைமாற்று 

☣️திருஞானசம்பந்தர் பாடல்களின் அமைப்பு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதில் சிலவற்றை சித்திரக்கவிகளாக வகைப்படுத்தியிருக்கின்றனர்.   

   #திருவெழுக்கூற்றிருக்கை,
   #மாலைமாற்று, #சக்கரமாற்று.
   #கோமூத்திரி, #கூடச்சதுக்கம், மற்றும்
    இதன் எழுச்சியாக 
    எழுத்து வருத்தனம்(வளருதல்), 
    நாகபந்தம்,  முரசுபந்தம் என்று பல 
    வகைகள் தமிழில் #சித்திரக்கவிகள் 
    இலக்கியத்தில் உண்டு.

⚜️இந்த #சித்திரக்கவி அமைப்பில்,
#திருவெழுக்கூற்றிருக்கை, #சக்கரமாற்று 
#மாலைமாற்று முதலியவை சம்பந்தர் அருளிய  மிக மிக அரியவகை  தமிழ் இலக்கியப் பாடல்களாகும்.

❇️சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
  #மாலைமாற்று வகை என்பது..

⏺️ஒரு பாடலில் உள்ள இரண்டு அடிகளை முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும், சொல்லும்  பொருளும் மறுபடாமல் இருப்பது.

⏺️மலர்களை கொண்டு மாலை கட்டி முடிக்கும் போது ஆரம்பமும் முடிவும் ஒன்றாக முடியும் அது போல வார்த்தைகளை அடுக்கி வரிகளை முடிக்கும்போது அதே வரிசையில் திரும்ப வாசிக்க அதற்கும் பொருள் வரும்.  மாலை போல முதலும் முடிவும் மாறி மாறி சுற்றிவருவதால் இதை மாலைமாற்று பாடல் என்று அழைக்கப்படுகிறது.

⏺️இவ்வகைக் கவிகளை மிக முயன்று அமைத்துள்ளமையால் இவை மிகைக்கவி என்னும் கூறுவர்.

⏺️சொல்லணியில், #கூடசதுக்கம், #கோமூத்திரி, #மாலைமாற்று இவைகளை மிறைக்கவி என்பர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.

⏺️இது #வண்ணகம் என்ற அமைப்பு  வகையில்   நெட்டெழுத்து மிகுதியும் பெற்று வரும் 'நெடுஞ்சீர் வண்ணம்"  என்றும் வகைப்படுத்துகின்றனர்: "யாமாமா  நீ  யாமாமா யாழீகா" என்று நெட்டெழுத்து மிகுந்து வருவதை கவணிக்கவேண்டும். 

🔱தமிழில் இது பற்றிய சில வார்த்தைகள்:

சிவயவசி, விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை, தேருவருதே, மாடுஓடுமா, மோருதாருமோ, தோடுஆடுதோ, மேகராகமே, மேளதாளமே, வைபூவை, மாலாபோலாமா,

"பூவாளை நாறு நீ பூ மேக லோகமே
பூநீறு நாளை வா பூ"
இதன் பொருள் :
= பூச்சூடி, திருநீறு கொண்டு, நாளை வா'

🔰ஆங்கிலத்தில் இவ்வகையை PALINDROME என்பர்.
Civic, Radar, Level, Madam, pop, Noon, Refer, Malayalam, Tattarrattat, Anna. Ada, bob, Eve, MAHAMAHAM.
சில வகை சொல்லாடல்களையும் கூட இவ்வகைப் படுத்த முயலுகின்றனர்.
- I am Adam
- A nut for jar  of tuna,
- A Toyota's a Toyota
- Do gees see God, 
- was it a cat I saw

🔱திருஞானசம்பந்தர் அருளிய #மாலைமாற்று பதிகத்தின் எழுச்சியால், பிற்கால அருட்செல்வர்கள் மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணத்திலும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப் புராணத்திலும் இவை போன்ற கவிதைகளை இயற்றி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

❇️இவ்வகையில் ஒரு பாடலில் இரண்டு வரிகளை அமைத்து 11 பாடல்களைக் கொண்ட ஒரு பதிகம் அற்புதமாக இயற்றி அருளிச் செய்துள்ள தமிழ் ஞானசம்பந்தர் சிறப்பு போற்றத்தக்கது. 

✳️ஒரு மெய்யெழுத்து கூட இப் பதினோறு பாடல்களிலும் இல்லை என்பது இன்னும் சிறப்பு.

❇️மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள
(117) 375வது சீர்காழி தலத்தில் அருளிய பதிகம்

✳️ #மாலைமாற்றுப் பதிகம் பற்றி மேலும் சற்று விரிவாக சிந்திப்போம்.

❇️கெளசிகப் பண் அமைந்த பதிகம்.

📖(இந்தப் பதிவில் முதல் இரண்டு பாடல் பொருள் உரை பற்றியும் இந்த பதிவிலும், அடுத்தடுத்த தொடர்ந்தும் சிந்திக்கலாம்).

முழு பதிகம்:
1
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
2
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
3
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
4
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
5
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா
6
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா பொலேமே
7
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
8
நேணவரா விழயாசைழியே வேகதளோய ளாயுழிகா
காழியுளாய ளேதகவே யேழிசையாழவி ராவணனே
9
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா
10
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே

தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுவே
11
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயா தமிழாகரனே

திருச்சிற்றம்பலம்.

❇️இப்பாடல்களின் பொருளும் உரையும் பற்றி சிந்திப்போம்

✳️*திருநாவுக்கரசரொடு திருக்காழியில் வழிபட்டிருந்து, பிரியாத நண்பொடும் அவர் பலதலங்களைத் தரிசிக்கப் போந்த பின் செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களை அருளினார் சண்பைவேந்தர். அவற்றுள் ஒன்றாக வந்த சொற்சீர் மாலைமாற்று இத்திருப்பதிகம்.*
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
1
முதல் பாடல்: 1257
முதல் வரி - 1-2.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

பொருள்:
🏵️முதல்வரி:
யாமாமாநீ   யாமா..
= யாம் ஆமா  நீ ஆம் ஆம்

யாம்  -   ஆன்மாக்களாகிய நாங்கள்         
              கடவுளென்றால். 
ஆமா -  அதுபொருந்துமா? 
நீ        -   நீயே கடவுளென்றால். 
ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும்.  

⏺️ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும்

மாயாழீகாமா
= மா+ யாழ்   காமா

மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை     
                  வாசிப்பவனே. 
காமா - யாவரும் விரும்பத்தக்க     
              கட்டழகனே. 

⏺️பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே!

காணாகா
= காண்  +  நாகா

காண் -     (தீயவும் நல்லவாம் சிவனைச் 
                  சேரின் என்பதை யாவரும்) 
                  காணுமாறு பூண்ட. 
நாகா -     பாம்புகளை யுடையவனே.

⏺️(பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை) யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே.

🔯இதன் பிறகு கடைசி எழுத்திலிருந்து மாற்றி வார்த்தைகளைக் கோத்து  இரண்டாவது வரியாக  அமைத்துள்ளார்.

🔱இது போன்றே எல்லா பாடல்களும் அமைந்துள்ளதை கவணிக்க வேண்டும்.

வரி : 2.

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

காணாகாமா
= காண (மல்) + காமா =காமன்)

காணாகாமா - கை, கால் முதலிய 
                           அவயவங்கள்     
                           காணாதனவாச் 
                           செய்தகாமனை 
                           உடையவனே. (மன்மதனை
                           அழித்தவனே)

காழீயா - சீகாழிப்பதியில் 
                எழுந்தருளியிருப்பவனே. 

மாமாயா = மா + மாயா
மாமாயா - உயிர்களுக்கு யாவும் 
                    மெய்யென்று தோன்றுமாறு    
                    மாயத்தை புரிபவர்
நீ -     எம்மை விடுவிப்பாயாக.  
மா -       அரியதாகிய. 
மாயா - மாயைமுதலிய 
              மலங்களினின்றும். 

🔱இரண்டாவது வரியின் முழுப் பொருள் :

⏺️மன்மதனை அழித்தவரே
   காழிப்பதியில் விளங்குபவரே
   உயிர்களுக்கு யாவும் மெய்யென்று 
   தோன்றுமாறு மாயத்தை புரிபவரே.
   மாயமலத்திலிருந்து எம்மை  
   விடுவிப்பீராக.
🙏
முழு பொருள் : 1-2 :

⏺️யாம் உயிர்கள். நீவிர் தலைவர்
   யாழ் கொண்டு எம்மை வசீகரிப்பீர்
   
⏺️மன்மதனை காணாமல் செய்தீர்.
   நாகத்தை அணிந்திருப்பவர்.
   காழிப்பதியில் விளங்குவீர்.
   மாயத்தைப் புரிபவர்.
   எம்மை மாயயை மலத்திலிருந்து    
   வீடுவிப்பீராக.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
2
பாடல். 1258
🔱இரண்டாம் பாடல்:

யாகாயாழீ  காயாகா  தாயாராரா தாயாயா
யாயாதாரா  ராயாதா காயாகாழீ  யாகாயா

⚜️முதல்வரி.
யாகாயாழீ  காயாகா  தாயாராரா தாயாயா

யாகா + யாழி
யாகா - யாகசொரூபியே. 
யாழீ   - யாழ்வாசிப்பவனே. 

காயா (கா)
காயா - அடியாருக்கு அருள வருகையில் உருவத்திருமேனி கொள்பவனே.

(கா)தாயாராரா = கா+தா+ யார் + ஆர் + ஆ
(கா)தா - துன்பத்தை கொல்பவர்
 (அடியார் துன்பம் நீக்குபவர்).
 (காதுதல் -     கொல்லுதல். வடசொல்)
யார் ஆர் - எவரெவருக்கும். 
ஆ - (பெற்றவள்) ஆகும்.

தாயாயா   = தாய் + ஆயாய் 
தாய் ஆயாய் - தாயானவனே.

🔰முதல் வரி பொருள் :

⏺️வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. துன்பத்தை நீக்கும் கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே

🔰இரண்டாவது வரி:
யாயாதாரா  ராயாதா காயாகாழீ  யாகாயா

யாயா தாரா = உயிர்களுக்கு ஆதாயம் 
            செய்து நற்கதிக்கு உரித்தாக 
             செய்பவர்
(ஆ) ராயாதா = ஆய்ந்து அறிவதற்கு 
              அப்பற்பட்ட உயர் பொருளாய் 
              விளங்குபவர்.
ஆயா - ஆராய முடியாத. 
தார்    -  மாலை. 
ஆர் ஆயா - ஆத்திப்பூவாகக் 
               கொண்டவனே. (சிவனுக்குரிய 
                மாலைகளில் திருவாத்தியும்       
                 ஒன்று) 
காயா = எல்லா வடிவங்களிலும் விளங்குபவர்
காழீயா = காழியில் வீற்றிருப்பவனே
காயா =கா + ஆய் =-எம்மைக் காப்பாயாக.

🔱இரண்டவது வரிபொருள் :

⏺️ஆத்திப்பூ மாலைஅணிந்துள்ளவனே.
   உயிர்களுக்கு ஆதாயம் தரும் நற்கதி   
   செய்பவர்.  சீகாழி என்னும்      
   திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே.    
   துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் 
   காப்பாயாக.
🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
இதன் தொடர்பதிவில் அடுத்தடுத்த பாடல்களின் பொருளும் உரையும் பற்றி சிந்திக்கலாம்.

⏺️திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை உணர்த்தியதும்,மறுபுறம் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட பா அமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள்
(http://thevaaram.org/ta/index.php)
மற்றும் பல்வேறு நூல்களின் அடிப்படையில்  குறிப்புக்கள் கொண்டும்
மற்றும் பேரறிஞர்களாகிய, வ. த. இராமசுப்பிரமணியம்,  முதலிய ஒப்பற்ற பல பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே ; மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...