Showing posts with label திருத்தலங்கள் தரிசனம் 2021. Show all posts
Showing posts with label திருத்தலங்கள் தரிசனம் 2021. Show all posts

Saturday, January 30, 2021

திருத்தலங்கள் தரிசனம் 2021 கடுவெளி

கடுவெளி : திருவையாறு காவிரி வடகரையில் தில்லைஸ்தானம் பாடல் தலம் கடந்து
 (திருக்காட்டுப்பள்ளி) - கல்லணை சாலை 4 கி.மீ. தூரத்தில் உள்ள கடுவெளி யில் உள்ள
புகழ்பெற்ற கடுவெளி சித்தர் அமைத்த
ஸ்ரீ ஆசாசபுரீஸ்வரர் ஸ்ரீமங்களாம்பிகை
ஆலயம் உள்ளது.
ஆலயம் முன்பும் ஒரு நந்தி மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் தரிசித்து, பின் 5 நிலை இராஜகோபுரம் கடந்தால்,
வரும் நந்தியை வணங்கி ஆலயம்
முன் முன் மண்டபம் அழகுற அமையப்பெற்றிருக்கிறது.
2013 ல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. நல்ல பராமரிப்பில் உள்ளது. முன்மண்டபம் கடந்தால் .உள் மண்டபம் தெற்கு நோக்கிய அம்பாள், கிழக்கு நோக்கிய சிவனும் உள்ளார்கள். அம்பாளுக்கு தனி நந்தியும் தென்புறம் உள்ளது.
பெரிய அளவில் ஏகப்பிரகாரமாக இருந்தாலும், வினாயகர், முருகன், தனி சன்டிகேஸ்வரர்  சன்னதிகள் சுற்றி அமைந்துள்ளது.  ஆலயம் வடபுறத்தில் கிழக்குப் பார்த்து கடுவெளி சித்தருக்கு தனி சன்னதியும் அருமையான சூழலில் அமைந்துள்ளது.
ஆலயம் இராஜகோபுரம் அருகில் இவ்வாலயம் உபய குறிப்புகள் உள்ள தனிகல்லில் பொறித்துள்ளது.

ஆலயம் முன்புறத்தில் ஆலயக் காப்பாளரிடம் சாவி வாங்கி உடன் தரிசனம் செய்யலாம்.
#அற்புதத்திருத்தலங்கள் 
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்

திருத்தலங்கள் தரிசனம் 2021 கூத்தூர் - திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி வழியில்

கூத்தூர்: 
திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள சிறிய ஊர். இங்கிருந்து வடக்கில் வானரங்குடி என்ற கொள்ளிடம் ஆறு அருகில் உள்ள ஊருக்கு செல்லும் வழியில் 
உள்ளது.
1. ஸ்ரீ நாராயனேஸ்வரர், 
ஸ்ரீ அதலாம்பிகை சிவன் ஆலயம்,
2. ஸ்ரீ லெட்சுமிநாராயணர் ஆலயம்,

மேலும் ஒரு சிறிய காளியம்மன் ஆலயமும் உள்ளது.
சிவன் ஆலயம் சுவாமி, அம்மன், நந்தி க்கு தனிதனி மண்டபமும், ஆலயத்தில் உள்ளது. விநாயகர், முருகனுக்கு சுவாமி சன்னதிக்கு முன்பு வைத்து வழிபாடு நடை பெறுகிறது.  
ஒரு காலம் என்பதால்,
அருகில் உள்ள ஒரு அடியார் வீட்டில் சாவி வாங்கி தரிசிக்கலாம்.

பெருமாள் ஆலயம் முன் மண்டபம் மேல் கூறை இடிந்து வெட்டவெளியாக இருக்கிறது.
ஆலயம் முன் மிக உயரமான புராதானமான அரசமரம் உள்ளது.
 20.01.2021
 #சிற்றூர்ஆலயதரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.

திருத்தலங்கள் தரிசனம் 2021 பேரளம் அருகே : மேனாங்குடி, அகிலாம்பேட்டை.

மேனாங்குடி
திருநள்ளாறு - கொல்லாபுரம் கடந்து பேரளம் சாலையில் உள்ள ஊர்.
ஊர் நடுவில் மிக அழகிய சிறிய ஆலயம். 
ஸ்ரீ நாகநாதர் ஸ்ரீ பிரத்யஷ்ட நாயகி, 
சுவாமி கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்கு நோக்கிய தனி சன்னதியும் உடையது.
தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், தனிதனி சன்னதிகள்.
ஆலயம் முன்பு தனி பஞ்சமுக தசபுஜ ஆஞ்சனேயர் சன்னதி உண்டு.
23.01.2021
#சிற்றூர்ஆலயதரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்,

அகிலாம்பேட்டை: 
1.பேரளம் - காரைக்கால் வழியில் பேரளத்திலிருந்து 500 மீ.தூரம் தாண்டினால் தெற்கில் பிரியும் சாலையில் 1 கி.மீ. தூரத்தில் உள்ள சிற்றூர்.
2. பேரளம் - நன்னிலம் சாலையில் வரும் பேரளத்திலிருந்து தெற்கில் 2 கி.மீ. இஞ்சிக்குடி வந்து இஞ்சிக்குடிக்கு கிழக்கில் 1. கி.மீ தூரத்தில் உள்ளது.
ஸ்ரீ ஜம்புநாதேஸ்வரர், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி 
சிறிய சிவனாலயம்.
சுவாமி கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்கு பார்த்தும், தனி தனிக் கருவறைகள் இணைத்து, ஏக மண்டபம் ஆக கட்டியுள்ளார்கள்.
விநாயகர், முருகர் சுவாமி கருவரை வாசலில் உள்ளார்கள். எதிரில் நந்திபகவான். சிறிய சுற்று பிரகாரம்.
சிறிய ஆலயம். இஞ்சிக்குடியிருந்து அர்ச்சகர் வர வேண்டும். 
இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு, 02.04.2021 அன்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
02.04.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

திருத்தலங்கள் தரிசனம் 2021 ஜனவரி விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் : பூந்தோட்டம் - நாச்சியார்கோவில் பிரதான சாலையில் வரும் எரவாஞ்சேரி அருகில் உள்ள சிற்றூர்.
இவ்வூரில் இரண்டு சிறப்பு சிவன்  ஆலயங்கள், ஒரு வைணவ ஆலயம், உள்ளன.
பிரதான சாலையின் வடக்கு புறம் இந்த ஆலயங்கள் உள்ளன.
அருகில் உள்ள திருவீழிமிழலையை புராணத்தை ஒட்டியது.
சப்தரிஷிகள் வணங்கிய சப்தஸ்தானங்களில் இரண்டு ஆலயங்கள் இவை:
1. தருமபுரீஸ்வரர், தருமாம்பிகை, தரும விநாயகர் அமைந்துள்ள ஆலயத்திற்கு முன்புறம் தருமர் அருள் பெற்ற தரும குளம் மிகப்பெரியது.
தருமர் வணங்கியதால் இது இப்பெயர்பெற்றது. இவ்வாலயம் வணங்கினால், மரண பயம் இல்லை
சிறிய ஆலயம், இராஜகோபுரம் இல்லை,
முன் மண்டபத்தில்  நந்தியுள்ளது.,
சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் ,உள்ளது.
பிரதோஷம் நடைபெறுகிறது.

2. ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீஅமுர்தேஸ்வரி.
கெளதம மகரிஷி  வணங்கியது.
சற்று பெரிய ஆலயம். ஊர் நடுவில் உள்ளது. நீண்ட முன்மண்டபம் நந்தி உள்ளது. உள் மண்டபத்தில் ஓவியங்கள் உள்ளன.
தென்புறம் பார்த்து அம்மன் சன்னதி
கிழக்கு நோக்கிய சுவாமி,
பிரகாரத்தில், தட்சினாமூர்த்தி, வினாயகர் முருகர், சண்டிகேஸ்வரர் தனி சன்னதிகள் உண்டு.
கற்கோவில். சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றது. பிரதோஷ விசேஷ வழிபாடுகள் உண்டு.
இவ்வாலம் ஓட்டி நவீன பாபா ஆலயமும் வழி பாட்டில் உள்ளது.

3.வரதராஜ ஆலயம்.  மிகச் சிறிய ஆலயம், கிழக்கு நோக்கியது.
உள்புறம் சிறிய மண்படம் வினாயகர், ஆஞ்சநேயர் கருடன்
அக்ரஹாரம் ஒட்டி உள்ளதால் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
Jan.2021
#சிற்றூர்ஆலயம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

https://m.facebook.com/story.php?story_fbid=5076904975718052&id=100001957991710

திருத்தலங்கள் தரிசனம் 2021 - - காரைக்கால் மாவட்டம் முப்பைத்தாங்குடி குடமுழுக்கு

முப்பைத்தங்குடி: 
திருநள்ளாறு மேற்கில் பேரளம் செல்லும் பிரதான சாலையில் வரும் தென்னங்குடி, அரசினர் கால்நடை மருந்தகம் அருகில் தெற்கில் பிரியும் சிறிய பாதையில் 1. கி.மீ சென்றால் முப்பைத்தாங்குடி என்னும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயம்:
ஸ்ரீ கைலாசநாதஸ்வாமி, ஸ்ரீ காமாஷி அம்பாள் ஆலயம்.
சுவாமி, நந்தி, சிறப்பு. பழைய ஆலயம் முழுதும் முற்றிலும் சிதைந்துவிட்டதால்
புதியதாக  எல்லாசன்னதிகளும் அழகுற கட்டி 25-01-2021 அன்று கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
புதிய உற்சவர்களும், வாங்கி சிறப்பு செய்துள்ளனர்.
ஆலயம் பின்புறம் குளம் உள்ளது. பிரதான சாலை குளத்திற்கும் ஆலயத்தின் மேற்குப் பகுதிக்கு இடையில் உள்ளது.
24.01.2021
#சிற்றூர்ஆலயம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...