Showing posts with label ஏகபாதம். Show all posts
Showing posts with label ஏகபாதம். Show all posts

Monday, June 7, 2021

சம்பந்தர் அமுதம் - ஏகபாதம் - பகுதி-6 பாடல் 11, 12

#திருமுறைசிந்தனைகள் :
#சம்பந்தர்அமுதம்
#ஏகபாதம் :
பதிவு : ஆறு (பாடல்:11,12)
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
'தமிழனன்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா'
என்பது வெற்றுக் கூற்றல்ல.

நம் தமிழ் மொழி உலக இலக்கியத்தில் ஒப்பற்றது என்று நாம் உண்மையில் தெரிந்து உணர வேண்டும். 

நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல்களின் அமுதத்தின்
பொருள், அமைப்புக் குறித்து சிந்தித்து ஒரு துளியேனும் பருக வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்த இந்த சிறு முயற்சியில் விளைந்ததே இந்தத் தொடர் பதிவு.
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏

தமிழ் ஞானசம்பந்தரின் பதிகங்களில் ஏகபாதம் என்னும் மிகச்சிறந்த இந்த
வகை யாப்பு அமைந்த பதிகம்

ஏகபாதம்:- ஏகபாதம் என்பது, 
ஏகம் - ஒன்று; பாதம் - அடி. 
ஏகபாதம் - ஓர் அடி.

ஓரடியே அடுத்தடுத்த அடிகளில் பொருள் வேறுபடுமாறு நான்கு முறை மடித்து மடித்து வந்து ஒரு பாடலாக அமைந்திருப்பதால் "ஏகபாதம்" எனப் பெயர் பெற்றது.

மிறைக்கவி என்பார்கள். இதன் பொருள் வருத்தஞ்செய்வது, மூளையைக் கசக்கிப் பிழிந்து உரை செய்வதாம்.

திட்டமாக உரை செய்வதியலாது
திருஞானசம்பந்தப் பெருமானின் பதிகப் பாடல்கள் இறைவன் தந்த அருளுரைகளே என்பதால் இதற்கு சம்பந்தப் பெருமானே முழுப் பொருள்
 தர இயலும் என்று கூறுகிறார்கள்.
பன்னிரு பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தில் உள்ள இன்னொரு தனிச்சிறப்பு, சீர்காழித் திருத்தலத்தின் பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு விளங்குவது.

 பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம் வாருங்கள்.
இன்றைய சிந்தனை 
பாடல்கள்: 11, 12 பற்றியது.
🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿🗻🙏

பாடல் 1380- கொச்சைவயம்
சீர்காழி பதியின் மற்றொரு பெயரிது.
கொச்சைவயம் - மச்சகந்தியை விரும்பிய
பழிச்சொல் நீங்க- (கொச்சைபடுவது) பராசரர் வழிபட்டது.
🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿

முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 11.

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿🙇🏼‍♀️🙏
பொருள் :
1. கொச்சையாம் பழியை நீக்கக் கோரி
பராசர முனிவரால் பூசிக்கப் பெற்ற கொச்சை வயம் என்னும் நிழலைப் பேணாதவர் பேதையர் ஆவர்.

2. ஈசன் புகழ் போற்றாது அவமாய்த் திரிபவர்கள்
அறியாமையுற்றவர் அஞ்ஞானத்தவராய் உலகில் உழல்வார்கள் 

3.பிறவி எடுத்ததன் பேற்றை இழந்து, 

4. குற்றத் தொகுதிக்கண் மூடப் பெற்றவராய்
 நன்னிலையை நீத்தவராவர்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
மிக மிகப் பழைய உரை மூலம்:
(தத்துவப் பொருள் குறிப்பு சுருக்கம்.)

ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும் மறைக்கப்படார்கள்.

 மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகிநின்றது. 

புலால் நாற்றத்தைப் பொருந்திய அழுக்கு மெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல்;

அதுவே தமது நிலை பெற்ற உருவாக நினைத்துத், துவராடையாலே உடம்பைச் சூழப்பட்ட புத்தரும், 

பேதைத் தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய நலத்தைக் கொள்ளும் பொருட்டு 

அவளது சரீரம் எல்லாம் சுகந்தமொய்க்கும்படி அவளுடனே பொருந்திய பராசரனாகிய மகாவிருடிவந்து சிவனைப் பொருந்தி அருச்சிக்கப்படுதலால். 
பராசரமுனிவரால் பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர்பெற்றுள்ள

 கொச்சை நகரம் என்னும் திருப்பதியிலே எழுந்தருளியிராநின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி 
வழிபடமாட்டார்களது நினைவு எவ்வாறிருக்கும் என்னில்,

 மழைக்காலிருளும் வெளிதென 
இருண்ட மயக்கத்தையுடைய
 ஆணவ போதமாயிருக்கும்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼

பாடல். 1381 - கழுமலம்

மலத் தொகுதி விலகுமாறு உரோமச முனிவர் வழிபட்ட சீர்காழி யின் மற்றெரு பெயர்

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼.

முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 12.

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼
பொருள் : 
1. குற்றத் தொகுதி நீங்குமாறு உரோமச முனிவர் வழிபட்ட கழுமல நகரில் வீற்றிருக்கும் ஞானத்தின் தலைவன்

2. கவுணியர் கோத்திர மரபில் தோன்றிய ஞானசம்பந்தரின் சொற்களாக மலர்ந்து அருள்பவன்.

3. இந்த மொழிகளைக் கொள்கின்ற நன்மனத்தினர்கள் வினைக் கட்டு அறும்.
பிறவித்தளை நீங்கும்; 

4. எக்காலத்திலும் அழியாது மூத்து நிலையாக நின்று விளங்கும் பதியாகிய கழுமலத்தின் பெருமான் திருவடியை அன்பினால் அணைந்து மேன்மையடைவீராக.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼
பழைய தத்துவ விளக்க உரை சுருக்கம்:

மிகுதிப்பட்ட தோஷமாயுள்ள சுக்கில சுரோணிதமாகிய இருவகை நீரின்கண்ணே 

சிர முதலாகிய அவயவமாகத் தோன்றிப் பூமியின்கண் செனித்துப் பரிணமித்துப் பின்பு தேய்ந்து மரிக்கின்ற சென்மத்தையும் 

(பரிணமித்தல் - வேறுபடுதல்)

கீழ்ச் சொல்லிப்போந்த சென்மத்தையும் கழுவி மலத்திரயங்களையும் கழுவாநிற்கும்.

 தனது பாதியாகிய திருவருளினாலே என்னை அகப்படுத்திக்
கவளிகரித்துக் கொண்டு 
அந்த அருள்வழியாக என திடத்தில் இடையறாமல் வாழும் 

தன்னை எனக்குத் தந்த அடிமை குலையாமல் எக்கண்ணும் விட்டு விளங்கும் கர்த்தர். 

(பாதி எனற்பாலது பதி எனக் குறுகி நின்றது)

மாயா மயக்கத்தின்கண்ணே மயங்கி பெத்த முத்தி இரண்டும் தெரியாமல் திண்டாடப்பட்ட மலபோதர்க்கு அமுதம் போன்று அரிதாயுள்ளவனுமாய் விட்டு விளங்கப்படாநின்ற

 பொன்னுருவையுடையவனாய்ச் சிருஷ்டிக்குக் கர்த்தாவாகிய பிரமனது சிரக் கபாலத்திலே பிச்சைகொண்டு நுகரும் கருணை யாளனே!

திருக்கழுமலம் என்னும் மூவாப் பழங்கிழமைப் பன்னிரு பெயர்பெற்ற அனாதி மூலமாகிய பதியிடத்துக்

கவுணிய கோத்திரத்திலே 
தோன்றப்பட்ட யான் 
நிவேதிக்கப்படும் காட்டாகிய இப்பாடலைக் 
கீழ்ச்சொன்ன வற்றிலும் 
மலத் திரயங்களிலும் அழுந்தாநின்ற ஒருத்தராகிலும் பலராகிலும்
 உரை செய்வார் உயர்ந்தாரேயாதலால் 
இப்பாடலை இடை விடாமல் உரைசெய்வீராக. 

(காட்டு என்பது கட்டு எனக் குறுகிநின்றது)

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
#தமிழரின்பொக்கிஷம் 
#திருமுறைகளில்தமிழமுதம் 
#ஆன்மீகமேதமிழ் 
முதல் பதிவு : பாடல் 1,
முதல் பாடல் முதல் பதிவில் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=5676936402381570&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3964605860281308&id=100001957991710
இரண்டாவது பதிவு: பாடல் 2, 3, 4.
https://m.facebook.com/story.php?story_fbid=5681849521890258&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3971000689641825&id=100001957991710
மூன்றாம் பதிவு : பாடல்: 5,6
https://m.facebook.com/story.php?story_fbid=5687921837949693&id=100001957991710
2
https://m.facebook.com/story.php?story_fbid=3976198605788700&id=100001957991710
நான்காம் பதிவு: பாடல்:7,8
https://m.facebook.com/story.php?story_fbid=5693519437389933&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3979457082129519&id=100001957991710
ஐந்தாம் பதிவு : பாடல்: 9, 10
https://m.facebook.com/story.php?story_fbid=5697639630311247&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3983732481701979&id=100001957991710
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐

Sunday, June 6, 2021

சம்பந்தர் அமுதம் - ஏகபாதம் பகுதி 5 பாடல்: 9, 10

#திருமுறைசிந்தனைகள் :
#சம்பந்தர்அமுதம்
#ஏகபாதம் :
பதிவு : ஐந்து (பாடல்:9, 10)

ஏகபாதம் :
ஒரே அடியில் உள்ள சொற்கள் நான்கு அடிகளிலும் வரும்போது பொருள் வேறு, வேறு பெற்று விளங்குவதுதான் திருஏகபாதம்.
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
தமிழ் ஞானசம்பந்தரின்  பதிகங்களில் ஏகபாதம் என்னும் மிகச்சிறந்த இந்த
வகை யாப்பு அமைந்த பதிக பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம் வாருங்கள்.
இன்றைய சிந்தனை 
பாடல்கள்: 9, 10 பற்றியது.
🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿

பாடல் 1378 - சண்பை

சண்பை என்னும் கோரைப் புல்லால்
மடிந்த தமது குலத்தினரால் தனக்கு நேர்ந்த பழியானது  பற்றாதவாறு கண்ணபிரான் (திருமால்) வழிபட்டதால்
சீர்காழி தலத்திற்கு சண்பை என்ற பெயர்
ஏற்பட்டது.

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿

முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 9.

தசமுக னெரிதர   வூன்று  சண்பையான்

தசமுக னெரிதர   வூன்று  சண்பையான்

தசமுக னெரிதர   வூன்று  சண்பையான்

தசமுக னெரிதர   வூன்று  சண்பையான்

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿
பொருள் :
1. சண்பை என்னும் கோரையால் விளைந்த சாபம் தீருமாறு, திருமால் (கண்ணபிரான்) வழிபட்ட சண்பை நகரில் விளங்கும் பெருமான், மலை எடுத்த தச முகனாகிய இராவணன் முடிகள் நெரியுமாறு, கயிலை மலையைத் திருப்பாதவிரலால் ஊன்றி அருள் புரிந்தவன்.

2. மன்னுயிர்களின் 10 வகையான குற்றங்களை நீக்கும் முகத்தால் ஞானம் அருள வல்லவன்.

3.பல விதமான கொடுமைகளைப் புரிந்த அசுரர்களின் கோட்டை மதில்களை எரித்தவன்.

4.நறுமணம் பொருந்தி விளங்கும் அப்பிரமனை உகந்து தொழுமின்.

தசமுகன் - இராவணன்
தசம் முகன் நெறி
தச முகன் எரித்தான்

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
மிக மிகப் பழைய உரை மூலம்:
தத்துவப் பொருள் குறிப்பு சுருக்கம்.

பத்துத்தலையுள்ள  இராவணன் முரியும்படி  திருவிரலால்  அடர்த்தவன் யாரென்னில், 
சண்பை என்னும் திருப்பதியிலே வீற்றிருக்கும் கடவுள்.

ஆத்துமாக்களிடத்துக் கருணைபிறக்கும் இடமாயுள்ளவன். 

அக்கினி வீசப்பட்டுத் திருவரையிலே அழுந்தச் சாத்தியுள்ள விரிந்த படத்தினையுடைய பாம்பை அரைஞாணாகவுடையான். 

எல்லாம் இறந்து அந்தமாயுள்ள சிவஞானிகள் குழாத்துக்கு நேரிதாகிய சூனியமாயுள்ள பொருளைத் தோற்றுவித்துள்ளானுமாய்ப்

 புலியினது ஊன்பொருந்திய தோலாடையைத் திருவரையிலே விரித்துடுத்தவன். 

நேரி எனற்பாலது நெரி எனக் குறுகிநின்றது. 

தரக்கு எனற்பாலது தர எனக் குறைந்தது.

 தூசு எனற்பாலது துசு எனக் குறுகிநின்றது. 

பாயான் எனற்பாலது
பையானெனக்குறுகிப் போலியாயிற்று.

 ஆத்தும விகாரமான அகங்காரம் போம்படி என்னறிவில் எதிர்ப்பட்டவன் கயிலாயமலையைத் திருவுள்ளத்தடைத்து எழுந்தருளியிருந்து ஆத்துமாக்களை இரட்சையாக நின்ற விசேஷத்தை உடையவன் என்றே ஏத்தும் சட்சமயங்களுக்கும்   அவரவர்   கொண்ட பயனா யுள்ளவன். 

நேரி எனற்பாலது நெரி எனக் குறுகிநின்றது.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼

பாடல். 1379
சீர்காழியின் மற்றெரு பெயர் காளிபுரம்
காளி வழிபட்டதால் ஸ்ரீ காளி - சீகாழி எனப் பெயர் பெற்றது.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼.

முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 10.
காழி யானயன்  உள்ளவா  காண்பரே

காழி யானயன்  உள்ளவா  காண்பரே

காழி யானயன்  உள்ளவா  காண்பரே

காழி யானயன்  உள்ளவா  காண்பரே

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼
பொருள் : 
1.   காளிதேவி வழிபடப் பேறு நல்கிய காழியில் விளங்கும் பெருமான், பிரமனால் பூசிக்கப் பெற்றவன்.

2. அன்பின் வயத்தால் வணங்குபவர்களுக்குக் காட்சி நல்குபவன்.

3. ஊழிக்காலத்திலும் அழியாது விளங்கும் காழியில் நிலை கொள்ளும் பெருமான்.   
அவன் தன்னைப் பற்றும் மெய்த் தொண்டர்களுக்கு உறுதியான பற்றாய் விளங்கி, உள்ளத்தில் பதிந்து இனிய காட்சி நல்குபவன்.

4. நினையாதவர்களுக்கு அயலாய் நிற்பவன்.    அவன் பெருமையை, உள்ளவாறு யாராலும் அறிந்து ஓதுதற்கு அரியவன்.   
 அவனைத் தொழுதிடுவீர்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼

பழைய தத்துவ விளக்க உரை சுருக்கம்:

நிலைபெற்றுநின்ற நின்மலமாகிய சித்தத்தையுடைய பத்தரிடத்துச்

 சத்தியப்பொருள் விளையும்பொருட்டு ஞானநாட்டத்திலே அவர்களைக் கடாக்ஷிக்கின்றவன்.

 திருமிடற்றில் களங்கமுடையானது கருணையை நினைத்து ஞானநாட்டத்தையுடைய சிவஞானிகள்

 சிவனுக்கிச்சை தன்னடியார்க்கே ஆங்காரத்தைத் தடுக்குமதே பணியெனத்தமதறிவிலே
 கருதாநிற்பர். 

விஷ்ணுவும் பிர்மாவும், திருமுடியும் திருவடியும் காணும் பொருட்டு வராகமும் அன்னமுமாகக் கருதி வடிவுகொண்டார்.

 ஐயோ! உள்ளபடி கருதிச் சிவனைப் பெறாமல் அவர் கருதியதேது எனில், அன்னியமே கண்டனர். 

கண் எனற்பாலது காண் என நீண்டது.

 என் பொருட்டால் காழி என்னும் திருப்பதியைப் படைத்தானை, 
என் ஐயனை, எனது ஆசையை, கீழ்ச் சொன்ன இருவர்களும் 
தாங்கள் தேடும் தேட்டப் பிரிவில் மயக்கத்திலே தேட்டமழித்துத் தோன்றா நிற்பவனைத் தேடி மறத்தலொழிந்து எவ்வாறு காண்பர்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
#தமிழரின்பொக்கிஷம் 
#திருமுறைகளில்தமிழமுதம் 
#ஆன்மீகமேதமிழ் 
முதல் பதிவு : பாடல் 1,2.
முதல் பாடல் முதல் பதிவில் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=5676936402381570&id=100001957991710
இரண்டாவது பதிவு: பாடல் 2, 3, 4.
https://m.facebook.com/story.php?story_fbid=5681849521890258&id=100001957991710
மூன்றாம் பதிவு : பாடல்: 5,6
https://m.facebook.com/story.php?story_fbid=5687921837949693&id=100001957991710
நான்காம் பதிவு: பாடல்:7,8
https://m.facebook.com/story.php?story_fbid=5693519437389933&id=100001957991710
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐

Saturday, June 5, 2021

சம்பந்தர் அமுதம் - ஏகபாதம் பாடல் 7,8

#திருமுறைசிந்தனைகள் :
#சம்பந்தர்அமுதம்
#ஏகபாதம் :
பதிவு : நான்கு  (பாடல்:7, 8 )

ஏகபாதம் :
ஒரே அடியில் உள்ள சொற்கள் நான்கு அடிகளிலும் வரும்போது பொருள் வேறு, வேறு பெற்று விளங்குவதுதான் திருஏகபாதம்.
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
தமிழ் ஞானசம்பந்தரின்  பதிகங்களில் ஏகபாதம் என்னும் மிகச்சிறந்த இந்த
வகை யாப்பு அமைந்த பதிக பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம் வாருங்கள்.
இன்றைய சிந்தனை 
பாடல்கள்: 7 பற்றியது.
🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿

பாடல் 1376.

சீர்காழி சிரபுரம்  
என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்படுகிறது. இராகு கிரகம் பூசித்ததால் இப்பெயர் பெற்றது.
🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿

முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 7.

செருக்கு வாய்ப்  புடையான்  சிரபுரம் என்னில்
செருக்கு வாய்ப்  புடையான்  சிரபுரம் என்னில்
செருக்கு வாய்ப்  புடையான்  சிரபுரம் என்னில்
செருக்கு வாய்ப்  புடையான்  சிரபுரம் என்னில்

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿
பொருள் :
1. சிரம் அறுபட்ட ராகு பூசித்த இந் திருத்தலத்தில் எழுந்து அருளி, பேறு நல்கும் பெருமான், யான் எனது என்னும் செருக்கு அறுமாறு செய்பவன்.

2. செருக்குன் முனைந்து ஆணவ மலம் தோன்ற நின்ற பிரமனின் சிரத்தை அறுத்துப் புடைத்தவன்.

3. என்னிடம் தலையானவனாய் விளங்கி மொழியும் பெரும் சொற்களாக மலர்பவன். மன்னுயிர்கள் செருக்குற்று நலியாதவாறு, அவர்தம் சிரத்தில் பதிந்து காத்து அருள்பவன். 

4. பக்தர்களின் உள்ளத்தில் பதிந்து நின்று விளங்கி, அச்சமற்ற செம்மையுடையவர்களாய்ச் செய்பவன்.
அவ் இறைவனை வணங்கித் துதிப்பீராக.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
மிக மிகப் பழைய உரை மூலம்:
தத்துவப் பொருள் குறிப்பு சுருக்கம்.

சேர்  வாய்ப்  புடையான்  சீர் புரம் என்னில்

சேர் எனற்பாலது செர் எனவும், 
சீர் எனற்பாலது சிர் எனவும்
குறுகிநின்றன. 

1.தனது திருவடிப் பிரசாதமில்லாதார்க்கு மல மயக்கத்தின் மேலீட்டைக் கெடாத சிவனுக்கு விசுவாதீதமான இருப்பிடம் எனது சைதன்னியமே. 

2. சத்தாதிகள் அஞ்சும் சேரப்பட்ட உலகத்தைத் தன் வாயினில் இடமாகவுடைய விஷ்ணுவின் களேபரத்தைத் திருமேனியிலே தரித்துள்ளான். 

3. ஆத்தும விகாரமாகிய கர்மத்தினாலே இந்திரியங்களுக்கு விடயமாகிய சுவர்க்கத்திலிச்சையுடையானுக்கு 
அந்தச் சுவர்க்கம் மெய்யாக விசேடித்திருக்குமன்றே.

4. இந்திரிய வன்மையாகிய யுத்தத்துக்கு இளையாமல் அந்த இந்திரியமாகிய பாணங்கள் தனது அறிவுக்குள் தைக்கப்படான். 

ஒருகால் சிரபுரம் என்று சொன்னவிடத்துப் பஞ்சேந்திரியங்களையும் அவியப்பொருது சிவனுடைய திருவடியிலே அடையாநிற்பன் என்பதாம்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼

பாடல். 1377
சீர்காழியின் மற்றெரு பெயர் புறவம்.
புறா வடிவத்தில் வந்த அக்கினியால் சிபிச் சக்கரவர்த்தி நற்கதியடைந்தது இத்தல புராணம்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼.

முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 8.

பொன்னடி மாதவர் சேர்புற  வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற  வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற  வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற  வத்தவன்

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼
பொருள் : 
1. புறா வடிவத்தில் தோன்றிய அக்கினி தேவன் வழிபட்ட பெருமான், அழகிய ஒளி பெறும் திருவடியை உடையவன்.

2. மாதவ வேந்தர்கள் சார்ந்து தொழுதற்கு உரியவன். 

3. தவத்தின் மேலாய், மாதவத்தின் சீராய், அவன் பொன்னடிக் கமலத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மேலான சிறப்புகளைத் தருபவன்.

4. உலக மாதாவாகிய உமையவளைச் சேர்ந்து அர்த்தநாரியாக இணைந்தும், வேறாகியும் விளங்குபவன். அப்பெருமான் திருவடியைப் போற்றுதல் தவமாகும்.
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼
விளக்கம்:
பொன்னடி மாதவர் சேர்புற  வத்தவன்
என்பதை பிரிக்கும் போது வரும் பொருள்...

பொன்னடி   மாது அவர்
பொன் அடி  மா  தவத்தவர்
சேர் புறம் வைத்தவன்
சேர்புற  வைத்தவன்

பழைய தத்துவ விளக்க உரை சுருக்கம்:

1. பொலிவினையுடைய  மாயா நிருத்தம் புரிகின்ற பத்திரகாளியும்  பூதபசாசும் பொருந்திய  மயானமே  திருக்கோயிலாக உள்ளவன்.

2 சுத்தமான வழியைத் தரப்பட்ட மகாரிஷிகள் திரண்டு தவம் பண்ணாநிற்கும் ஆரணியத்தில் தனித்துத் தவம் புரியாநிற்கும் தபோதனன்.

3. அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இலக்குமியையொத்த இருடி பத்தினிகள் பிச்சையிட வந்து அணையுமிடத்துத் தனக்குள்ள நிருவாணத்தை அவர்களுக்குக் கொடுத்தவன்.

4. பொன்னாற் செய்யப்பட்ட
 பாடக நூபுராதிகளைப் பாதங்களிலேயணிந்துள்ள 
கன்னியர் திரண்டு விளையாடும் 
புறவம் என்னும் திருப்பதியில் 
வாழ்கின்ற சிவன். 

புறவம் என்பதும் சீகாழி.

பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
#தமிழரின்பொக்கிஷம் 
#திருமுறைகளில்தமிழமுதம் 
#ஆன்மீகமேதமிழ் 
முதல் பதிவு : பாடல் 1,2.
முதல் பாடல் முதல் பதிவில் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=5676936402381570&id=100001957991710
இரண்டாவது பதிவு: பாடல் 2, 3, 4.
https://m.facebook.com/story.php?story_fbid=5681849521890258&id=100001957991710
மூன்றாம் பதிவு : பாடல்: 5,6
https://m.facebook.com/story.php?story_fbid=5687921837949693&id=100001957991710

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐

Friday, June 4, 2021

சம்மந்தர் அமுதம் : ஏகபாதம் பதிவு : 3 பாடல், 5, 6

#திருமுறைசிந்தனைகள் :
#சம்பந்தர்அமுதம்
#ஏகபாதம் :
பதிவு : மூன்று (பாடல் 5 மற்றும் 6)

ஏகபாதம் :
ஒரே அடியில் உள்ள சொற்கள் நான்கு அடிகளிலும் வரும்போது பொருள் வேறு, வேறு பெற்று விளங்குவதுதான் திருஏகபாதம்.
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
தமிழ் ஞானசம்பந்தரின்  பதிகங்களில் ஏகபாதம் என்னும் மிகச்சிறந்த இந்த
வகை யாப்பு அமைந்த பதிக பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம் வாருங்கள்.
இன்றைய சிந்தனை 
பாடல்கள்: 5, 6 பற்றியது.
🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿
பாடல் 1374.

சீர்காழி பதியின் 12 பெயர்களில்
தோணிபுரம் என்பதும் ஒன்றாகும்
பிரளயகாலத்தில் ஈசன் தோணியில் காட்சி தருதல் எனவே இப்பெயர் பெற்றது.

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿
தேவாரம் - முதல் திருமுறை 
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல் : 5

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏿‍♂️🙏🏾
வரி விளக்கம் - 1.

"சுடர்மணி இமம் ஆளி கைத்தோணி புரத்து அவன்;

சுடர்மணி - சூடாமணி; இமம் - ஈமம்; ஆளி - ஆள்பவன்; கைத்தோணி - தும்பை மாலையை அணிந்தவன்; புரத்தவன் - முப்புரம் எரித்தவன்.

சூடார் எனற்பாலது சுடர் எனவும், 
 ஈமம் எனற்பாலது இம் எனவும் குறுகி நின்றன.
 துரோணம் எனற்பாலது தோணி எனமருவிற்று. 
பொருள் :
சுடுகின்ற இடமாகிய மயானத்தை நடமாடும் இடமாகக்கொண்டு, முப்புரங்களையும் எரித்துத் தும்பை மாலையை அணிந்தவன்.

வரி விளக்கம் - 2.

சுடர்மணி மாளி கைத்தோள் ணிபுரத்தவன்;

சுடர்மணி - சூடாமணி; 
மாளி - மாலி - மயக்கம்; 
கைத்தோள் - தோலை உரித்துத் துதிக்கையை உடைய யானையை; ணிபுரத்தவன் - வடிவழித்தவன்.

சூடாமணி எனற்பாலது சுடர்மணி எனவும், மாலி எனற்பாலது மாளி எனவும்,
தோல் எனற்பாலது தோள் எனவும் நின்றன. 
மாலையுடையவன் - மாலி. 
தோல் - யானை. 

பொருள் :

என் உச்சியில் சூடாமணியாய்த் திகழ்பவன்; என்மேல் அன்பு என்னும் மயக்கத்தை உடையவன்; துதிக்கையை உடைய யானையை உருவழித்தவன்.

வரி விளக்கம் - 3

சுடர்மணி மாளி கைத்தோணி புரத்தவன்;

சுடர் - சூரியன்; 
மணி - கழுவி;
மாளி - கெட்டவன்; 
கைத்தோணி - தெப்பம்; 
புரந்தவன் - உபதேசிப்பவன்

பொருள் :

சூரியனது களங்கத்தைப் போக்கிய கடலைப்போன்ற பிறவியைப் போக்கும் பொருட்டுத் தெப்பமாக உதவும் பிரணவ மந்திரத்தை, ஆன்மாக்களின் செவியில் போதித்தவன்.

வரி விளக்கம் -4.

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்

சுடர் - விளக்கம்; 
மணி - நவரத்தினம்; 
மாளி(கை) - மாளிகை சூழ்ந்த; தோணிபுரம் - திருத்தோணிபுரம்.

நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகை சூழ்ந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ஆவான்.

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿
மற்றும் ஒரு பழைய உரையின் சுருக்கம்:

1. பிரளய காலத்தில் யாவும் வெள்ளத்தில் மூழ்கி நிற்கத் தோணியில் விளங்கும் பரமன், மெய்யடியார்களைத் தமது காயத்தில் ஆரோகணித்து அருள் வழங்குபவன்.

2. சுடர்விடும் வண்ணமிகு செம்மேனியனாய், மாணிக்கமாய் விளங்குகின்றவன்.

3. அடியவர் மனத்தில் சுடர்விடும் சோதியாய் விளங்குபவன். ஏகாந்த நிலையினருக்கும், விஞ்ஞானகலர் என்று பேசப்படும் ஒரு மலத்தார்க்கும் நித்தியச் சுடராய் விளங்கும் அவன்,  

4. ஒளிபொருந்திய மணிகளால் பதிக்கப் பெற்ற மாடமாளிகையுடைய தோணிபுரத்துப் பெருமான் ஆவன்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏿‍♂️🙏🏾
பாடல் 1375

சீர்காழிப்பதியின் மற்றொரு பெயர்.
பூந்தாராய்  இதன் விளக்கம்:
பூமியைப் பிளந்த இரணியாக்கதனை வதம் செய்த வராக மூர்த்தி (திருமால்) வழிபட்டது என்பதால், இப்பெயர் விளங்கிற்று.
🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿

தேவாரம் - முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 6.

பூசுரர்  சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர்  சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர்  சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர்  சேர்பூந்த ராயவன் பொன்னடி

🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿🏔️🙏🏽
பொருள் :
1.இரணியாக்கதனை வதம் செய்த வராக மூர்த்தியான திருமால் வழிபட்ட பூந்தராய் மேவிய பொன்னடி, பூவுலகத்தின் உயர்ந்தோராகிய அந்தணர்களால் வழிபடப் பெறுவதாகும்.

2. அப்பொன்னாகிய ஒளிமிக்க திருவடியைச் சார்ந்து விளங்க, மென்மை மிக்க தேவர் ஆவர்.

3. தாயாக விளங்கிப் பாதுகாக்கும் ஈசனின் பொன்னார் சேவடி, எல்லா போகத்தையும் இவ்வுலகத்தில் சேர்த்து வழங்க வல்லது. 

4. தெய்வத் தன்மையை. இவ்வுலகில் சேர்க்கும் ஈசன் திருவடிக் கமலத்தை, மலர் கொண்டு தூவிப் போற்றுவோமாக.
.
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
மற்றும் ஒரு பழைய உரையின் சுருக்கம்:

1. பூமியிலுள்ளாரையும்  
  தேவகணங்களாய் உள்ளாரையும்
  தனது நாபிக் கமலத்திலே   
  தோற்றுவிக்கப்பட்ட       
  பிரமாவிஷ்ணுவினது  போதத்திலே 
  கண்ணாடியும் நிழலும் போலப் 
  பிரதிவிம்பியா நின்றவன். 

ஆடி என்பது அடி எனக் குறுகிநின்றது.

2. மலத்திரயங்களைக் கழுவப்பட்ட சிவஞானிகள் கூட்டம் பொலிவு பெறத்தக்க வனப்பையுடைய ஆனந்த நிருத்தம் செய்தருள்பவன்.

3. சர்வாங்கமும் உத்தூளனம் பண்ணின மார்பை உடைய சிவஞானிகளும், புண்ணிய  பாவக்கட்டை அரிந்து விசுவத்தைத் தள்ளப்பட்ட சிறப்பையுடையருமாயிரா நின்றவர்களுக்கு  
 மிகுதியான மூலமாயுள்ளவன். 

உந்தராய் என்பது, ஊந்தராயென நீண்டது.

4. மறுவிலா மறையோர் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் திருப்பதியின்கண் வீற்றிராநின்ற சிவனது அழகிய திருவடித் தாமரை என்னை ஆண்டிடுகிறது.
பூந்தராய் என்பது சீகாழி பதியாகும்

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏

பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
#தமிழரின்பொக்கிஷம் 
#திருமுறைகளில்தமிழமுதம் 
#ஆன்மீகமேதமிழ் 
முதல் பதிவு : பாடல் 1,2.
முதல் பாடல் முதல் பதிவில் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=5676936402381570&id=100001957991710
இராண்டாவது பதிவு: பாடல் 2, 3, 4.
https://m.facebook.com/story.php?story_fbid=5681849521890258&id=100001957991710

Wednesday, June 2, 2021

சம்பந்தர் அமுதம் - ஏகபாதம் - பகுதி - 2

திருமுறைசிந்தனைகள் :
#சம்பந்தர்அமுதம்
#ஏகபாதம் :
பதிவு : இரண்டு

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏

ஏகபாதம் :
ஒரே அடியில் உள்ள சொற்கள் நான்கு அடிகளிலும் வரும்போது பொருள் வேறு, வேறு பெற்று விளங்குவதுதான் திருஏகபாதம்.

தமிழ் ஞானசம்பந்தரின் பதிகங்களில் ஏகபாதம் என்னும் மிகச்சிறந்த இந்த வகை யாப்பு அமைந்த பதிக பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம் வாருங்கள்.
இன்றைய சிந்தனை 
பாடல்கள்: 2, 3, 4 பற்றியது.
🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿
பாடல் 1371.

சீர்காழி பதியின் 12 பெயர்களில் வேணுபுரம் என்பதும் ஒன்று.
இறைவன் மூங்கில் வடிவில் தோன்றியதாலும்,
தேவேந்திரன் மூங்கில் வழியாகவந்து பூசித்ததாலும்,
வேணுபுரம் என்னும் பெயர் பெற்றது.

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿
தேவாரம் - முதல் திருமுறை 
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல் : 2.

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏿‍♂️🙏🏾
பொருள் : 
1. ஈசன் மூங்கில் (வேணு) வடிவில் தோன்றி விளங்கியவன்.

2.விரிந்த மலர்கள் கொண்ட சோலைகள் அழகுற விளங்கும் வேணுபுரத்தில் விளங்குபவன், ஈசன்.

3. அழகிய வேணுபுரத்தில் விஷ்ணுவால்
பூசிக்கப்பெற்றவன்.

4. விஷ்ணுவின் உந்திக்கமலத்தின் மீது அலர்ந்த தாமரையில் விளங்கும் நான்முகனுக்கு அணியாகி விளங்கி, படைத்தல் தொழில் செய்பவன்.
🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿
மற்றும் ஒரு பழைய உரையின் சுருக்கம்:

1.சிலம்பினைத் தரித்துள்ளவர் 2.முப்புரத்தை எரித்தவர்
3. தேவர்களால் கற்பகப் பூஞ்சோலை மலர்கள் கொண்டு அர்ச்சிக்கப்படுகின்றவர்.
4. பூஞ்சோலைகள் சூழ்ந்த வேணுபுரத்தில் வீற்றிருக்கும் இறைவர்.
என்றும் பொருள் உரைப்பர்.
🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿

பாடல் 1372.

சீர்காழிப்பதியின் மற்றொரு பெயர்.
திருப் புகலி என்பது.
தேவர்களின் புகலிடமாய் விளங்கியதால் இப்பெயர் அமைந்துள்ளது.
🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿

தேவாரம் - முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 3.

புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே

🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿
பொருள் :
1.இதய கமலத்திலிருந்து இடையறாத ஆனந்தம் பொழியப்பட்டு என்னை மலபோதத்தில் தள்ளாமல் எனக்கு அடைக்கலப் பொருளாயுள்ளவன்.

2.சிவன் தனது இச்சையால் பொருந்தியிருக்கும் ஊர் தாமரை மலர் மேவிய பிரமாபூசித்த புகலி என்னும்திருப்பதி.

3. திருமாலால் வணங்கப்படுபவன்.

4. நெற்றித் திலகமாக விளங்கும்
திருநீறு போன்றவன்.
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏

பாடல் 1373

சீர்காழி பதிக்கு வெங்குரு என்று ஒரு பெயர் உண்டு.
குருபகவான் வழி பட்டதால்
இத்தலத்திற்கு இப்பெயராம்.

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿

முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 4.

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.
🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿
பொருள் :
1. பிரகஸ்பதியாகிய வியாழபகவான்
பூசித்துப் பேறு பெற்ற வெங்குரு என்னும் பதியில் மேவியவன்.

2. விளங்குகின்ற ஒளியின் வண்ணம் பெருக வீற்றிருக்கின்றனன்.

3. அறியாமை என்னும் வெம்மை தவிர்க்கும் குருவாகவும், ஆல் நிழல் நின்ற நிலையை ஒத்த குளிர்ச்சி மிக்க தெய்வ பீடமாகிய வெங்குருவில் வீற்றிருந்து ஞானம் வழங்குபவனாய் உள்ளவன். 

4.ஒளி வண்ணமாகத் திகழ்தரும் ஈசன், அவன் அருள் வடிவாய் மேவி விளங்குபவன்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
மிக மிகப் பழைய உரை மூலம்
எடுத்து பொருள் குறிப்பு சுருக்கம்.

குருமூர்த்தியாய் வந்து என் பிறவியை ஒழித்துத் தனது பேரின்பமாகிய பரிபூரணத்திலே எனது அடிமை குலையாமல் இரண்டற வைத்தவன். 
எங்கும் பிரகாசியா நின்ற கீர்த்தியினால் சிறக்கப்பட்டுள்ளவன்.
இயமனால் பூசிக்கப்பட்டவர்.
வெங்குரு என்னும் சீகாழி திருப்பதியை விரும்பியுள்ளான்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏

பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐


சம்பந்தர் அமுதம் - ஏகபாதம் பகுதி - 1

#திருமுறைசிந்தனைகள் :
#சம்பந்தர்அமுதம்
#ஏகபாதம் :

'தமிழுக்கு அமுதென்று பேர்...' 
என்று வெறும் கூற்று மட்டும் நமக்குப்
போதாது. உண்மையில் நாம் தமிழ் இலக்கியங்களைப்பற்றி சிந்திக்க வேண்டும். அமுதத்தைப் பருக வேண்டும் என்ற நோக்கில்தான் இந்தப் பதிவு.

நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐

சீர்காழிப்பதியில் அவதரித்து, இறைவரால் அமுது ஊட்டப்பெற்ற 
தமிழ் ஞானசம்பந்தர்  தமிழுக்கு அணி செய்தவர்.  செந்தமிழினால் இறைவனை எண்ணித் துதி செய்தவர். பக்தி இசைப் பாடல்கள் அருளிச் செய்தவர். 

தமிழ் ஞானி திருஞானசம்பந்தர் என்னும் இந்த ஞான பிள்ளையாரின் பாடல்களில் 
நமக்கு தற்போதுவரை கிடைத்துள்ளவை;
226 தலங்களைப் பற்றிய, 386 பதிகங்களில் உள்ள 4146 பாடல்கள் மட்டுமே.  இவர் பாடல்களை முதல் மூன்றுத் திருமுறைகளாகத் தொகுத்துள்ளார்கள்.

தமிழுக்கு புதிய புதிய யாப்பு வகைகளை இவரே முதன் முதலாகக் கையாண்டார் என்பது மிகச் சிறப்பு.

இதில் ஏகபாதம் என்னும் தனி சிறப்புப் பெற்ற யாப்பமை பதிகம் ஒன்றைப் பற்றிய சிந்தனையே இப்பதிவு.

முதல் திருமுறையில் உள்ள 127 வது பதிகம் சீர்காழி என்கிற திருப்பிரமபுரம்  என்ற தலத்தில் அருளப்பட்டது. இது ஏகபாதம் என்ற யாப்பு முறையில் பெற்ற 12 பாடல்கள் கொண்டது. இது பற்றி சிந்திப்போம்.

ஏகபாதம்:- ஏகபாதம் என்பது, 
ஏகம் - ஒன்று; பாதம் - அடி. 
ஏகபாதம் - ஓர் அடி.

ஓரடியே அடுத்தடுத்த அடிகளில் பொருள் வேறுபடுமாறு நான்கு முறை மடித்து மடித்து வந்து ஒரு பாடலாக அமைந்திருப்பதால் "ஏகபாதம்" எனப் பெயர் பெற்றது.

சித்திரக்கவியின் ஒரு வகை.

மிறைக்கவி என்பார்கள். இதன் பொருள் வருத்தஞ்செய்வது, மூளையைக் கசக்கிப் பிழிந்து உரை செய்வதாம்.

திட்டமாக உரை செய்வதியலாது.

15ம் நூற்றாண்டின் வாழ்ந்த சீர்காழி கண்ணுடைய வள்ளலார், சம்பந்தப் பெருமானை மானசீக குருவாக போற்றியவர், தம் ஒழுவில் ஒடுக்கம் என்ற சித்தாந்த நூல் மூலம் விளக்கியுள்ளார்.

திருஞானசம்பந்தப் பெருமானின் பதிகப் பாடல்கள் இறைவன் தந்த அருளுரைகளே என்பதால் இதற்கு  சம்பந்தப் பெருமானே முழுப் பொருள் தர இயலும் என்று கூறுகிறார்கள்.

பெருமறிஞர் வ.த. இராமசுப்பிரமணியம்
பெரும் அறிஞர் திரு S.வெங்கடேஸ்வன்
பெரும் புலவர் கி.மஞ்சுளா முதலியவர்கள்  பாடல்களுக்கு உரை செய்துள்ளார்கள்

பன்னிரு பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தில் உள்ள இன்னொரு தனிச்சிறப்பு, சீர்காழித் திருத்தலத்தின் பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு விளங்குவதுதான்.
(பதிகத்தின் 12 பாடல்களில் முதல் பாடல் மட்டுமே இப்பதிவில்)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐

பாடல்: 1.
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்

முதலாம் திருமுறை. பதிகம்: 127
பாடல். 1370
 4 வரிகளுக்கும் பொருள் விளக்கம்:
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
1.
பிரமம்   புரத்துறை பெம்மான் எம்மான் 

பிரம்மத்தை பரிபூரணமாக உணர்ந்த பெருமகன் எம் தலைவன்.

பிரம்மம் = ஞானம்
புரத்து உரை = ஞானத்தை வியந்து நிற்கும்
பெம்மான் = பெருமைக்குரியவன்
எம்மான் = எம் தலைவன்
--- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
2.
பிரமபுரத்து உறை பெம் மான் எம் ஆன்

மேல் உலகில் உள்ள ஆகாயகங்கையை விரும்பி முடியில் வைத்தவர் எம் ஆன்மாவில் உறைபவன்.

பிரமபுரம்=மேலே உள்ள மேலுலகம்; உறை=இருந்த தண்ணீர், கங்கை நதி; பெம்=விருப்பம்; 
மான்=மான் போன்ற சாயலை உடைய       கங்கை நங்கை; 
எம்=எமது; 
ஆன்=ஆன்மா.
 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
3.
பிரம்ம  புரத்துறை பெம்மான் எம்மான்

பிரம்மன் ஈசனைப் பூசித்த தலம் பிரமபுரம். அந் நகருக்குரிய பெருமானே எம் தலைவன்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  - - 
4.
பிரம்ம  புரத்து  (உ)றை பெம்மான் எம்மான்

யாவருக்கும் பெருமானாகிய ஈசன் எம் தலைவன். அவன் பிரம்மபுரத்தில் விளங்குவன்.   
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 
வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
#தமிழரின்பொக்கிஷம்
#ஆன்மீகமேதமிழ்
#திருமுறைகளில்தமிழமுதம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...