எட்டுக்கை அம்மன் ஆலயம்
பயண அனுபவக் குறிப்புகள்🕊️
சுப்ராம்.அருணாசலம், காரைக்கால் 🔱🇮🇳
கொல்லிமலை - பதிவு - 2.
கொல்லிப்பாவை
எட்டுக்கை அம்மன் ஆலயம்
🪔தேவர்களும், மகரிஷிகளும் கொல்லிமலை பகுதியில் தவமிருந்தபோது அசுரர்கள் அவர்களை தொந்தரவு செய்தனர் எனவே, அசுரர்களின் கவனத்தை திசை திருப்ப, ரிஷிகள் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு தெய்விகச் சக்தி வாய்ந்த பெண் சிலை செய்து, அதற்கு சக்தியூட்டினர்.
இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு. அதற்கு 'கொல்லிப்பாவை' என்ற பெயர் ஏற்பட்டது அதன் மீது மோகம் கொண்டு அசுரர்கள் அருகில் நெருங்கினர். அவர்களை அந்த அம்பிகை வதம் செய்தாள். எட்டு கைகளுடன் இருப்பதால் இவளை, "எட்டுக்கை அம்மன்" என்று அழைக்கிறார்கள்.
🪔முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள
கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
🪔இக் கொல்லிப் பாவையால் இன்றும் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர்.
🪔சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்..
🪔கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.
🪔கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.
🪔கொல்லி மலையில் கருநெல்லி, கருநொச்சி ஜோதிப்புல் போன்ற எண்ணற்ற மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே சித்த மருத்துவர்கள் இந்த மலைக்கு குறிப்பிட்ட நாட்களில் மூலிகைகளை சேகரிப்பதற்காக வருகிறார்கள்.
🪔இவர்கள் முதலில் கொல்லி பாவை கோவிலுக்குச் சென்று அவளிடம் அனுமதி பெற்று மந்திரம் சொல்லி பின்னரே மூலிகைகளைச் சேகரிக்கின்றனர் . அவ்வாறு சேகரித்த மூலிகைகளை கொல்லி பாவை சன்னதியில் வைத்து வழிபடுகின்றனர்.
# பயண அனுபவக் குறிப்புகள்🕊️
✨அறப்பளீஸ்வரர் ஆலயத்திலிருந்து மேற்கில் 4 கி.மீ. தூரத்தில் கொல்லிப்பாவை ஆலயம், பிரதான சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ளது.
✨பிரதான சாலையில் வாகனம் நிறுத்துமிடம் உள்ளது.
✨கீழே இறங்கி ஏற நல்ல சாய்தள சிமிண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதியோர்களும் எளிதாக சென்று வரும் வகையில் உள்ளது.
✨கட்டன வரிசை இல்லை. உள்நுழைவு கட்டணம் எதுவும் வசுல் இல்லை. பிரதான சாலையில் ஒரு பழமையான போர்டு எட்டுக்கை அம்மன் ஆலயம் என்று உள்ளது. அம்மன் மண்டபத்திற்கு சில படிகள் ஏறி செல்லும் முகப்பிலும் போர்டு உள்ளது.
✨ஆலயம் உள்ள பகுதி பெரிய இயற்கை வெட்ட வெளி பகுதியில் உள்ளது. ஒரு காலத்தில் ஆழமானக்காட்டுப்பாதையாக இருந்திருக்கக்கூடும்.
✨உயரமான மலைகளில் இடையே நல்ல பள்ளமான இடம் பெரிய குளம் போன்ற இடத்தின் மேட்டுப்பகுதியில் கிழக்குப் பார்த்து அமைக்கப்பட்டுள்ள சிறிய கருவரை சன்னதி அமைப்பு, முன்புறம் மண்டபத்தில் கூரை அமைக்கப்பட்டுள்ளது.
✨மிக அழகான தேஜஸான முக அமைப்பில் அம்பாள் அலங்கரிக்கப்பட்டுள்ளார். பூசாரிகள் பூசை செய்து தருகிறார்கள்.
✨மலைவாழ் மக்களின் வாழ்க்கையின் ஒரு ஆன்மீக அங்கமாக இந்த அம்மன் அமைந்துள்ளதை நாம் கண்டு உணரலாம்.
✨பக்தர்கள் காப்புக்கயிறு கட்டிக் கொள்கிறார்கள்.
🌟பெரிய வெட்டவெளியாக பசுமையான மலைப்பகுதி. நேர்த்திக்கடன், வழிபாடுகள் செய்தும், மாலை போட்டுக் கொள்வதும், பிரார்த்தனைகளும் நடைபெறுகிறது.
✨ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி செல்கிறார்கள்.
✨முடிகாணிக்கை பல்வேறு பிரார்தனைகள், நேர்த்திக்கடன்கள் செய்து கொள்கிறார்கள்.
✨வழியில் பத்ரகாளியம்மன் சிலை ஒன்றும் வைக்கப்பட்டு பக்தர்களால் பூசிக்கப்பட்டு வருகிறது.
✨படிகளில் செல்லும் போது எளிய வியாபாரிகளால், மலைப்பகுதியில் விளையும் பழங்கள், மூலிகைப் பொருட்கள், மூலிகை பானங்கள் விற்பனையும் நடைபெறுகிறது.
✨ஒரு கட்டண கழிப்பறையும் வைத்து பராமரிக்கிறார்கள்.
கொல்லிமலை அனுபவங்கள்
⭐பொதுவாக, கொல்லிமலை சிறந்த அருமையான ஆன்மீக உணர்வுகள் தரும் அற்புதமான சுற்றுலா தலம்.
⭐கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடிகள் (1400 மீட்டர்) உயரத்தில், சுமார் 20 கிமீ. பரப்பளவில் மலைப்பகுதி சாலை வசதிகளுடன் உள்ள பகுதி.
ஆலயம் தவிர, நிறைய அருவிகள் பல இடங்களில் உள்ளன. அரசும் தங்குமிட வசதிகள் ஏற்பாடுகள் செய்துள்ளது. தனியார் ஹோட்டல்கள் தங்கும்மிடங்களும் இந்தப் பகுதியில் உள்ளன.
⭐அறப்பளீலவரர் ஆலயம் அமைத்துள்ள மலைப்பகுதி சிறந்த ஆன்மீக உணர்வுகளை தரும் இடம்.
⭐ஆலயம் சுற்றி மூலிகை சாமான்கள் நிறைய கிடைக்கிறது. மலையின் கீழ் உள்ள சிற்றூராகிய பேளுக்குறிச்சியில் இது போன்ற பொருட்கள் விற்பனை செய்ய சந்தை அமைப்பு செயல்படுகிறது. வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை காலை வரை விடியவிடிய சந்தை நடைபெறுகிறது.
⭐பல்வேறு பொருட்கள் பழங்கள் முதலிய மலைப்பொருட்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கிறது.
படிகள் தான் அளவு முறை, 5 விதமான பொருட்கள், ஒவ்வொன்றும் 2 படி அளவில் ரூ 1000 லிருந்து ரூ1800 வரை அளவு, தரம் பொருத்து விற்பனை செய்கிறார்கள்.
⭐சந்தை நாட்கள் / நேரம் தவிர, இந்தப்பகுதிகளில் மூலிகைப்பொருட்கள் விற்பனை செய்து வரும் கடைகள் அதிகம் உள்ளன.
⭐✨அருமையான அமைதியாக இயற்கை சூழலில் அமைந்த அற்புத ஆன்மீக உணர்வு தரும் சக்திமிக்க இடம்.
🏵️தமிழகத்தில் உள்ள, இயற்கையுடன் இணைந்த ஆன்மீக சுற்றுலாவுக்கு
மிகமுக்கியமான இடம் அவசியம் ஒரு முறையாவது சென்று அனுபவித்து உணர வேண்டிய இடம்.
வலைதள தகவல் 💻📡📚
பயண அனுபவக் குறிப்புகள்🕊️
#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏 22.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱 22.02.2026
No comments:
Post a Comment