ஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேத
ஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்)
அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்,
பெருங்குடி கிராமம்,
ஸ்ரீரங்கம் (திருச்சி, சோமரசம்பேட்டை) வட்டம்,
திருச்சி மாவட்டம்.
சுந்தரசோழரால் 969-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட, இந்த பழமைமிகு ஆலயத்தின் கருவறையில்,அகத்திய மாமுனிவரால்வழிபடப்பட்ட ஆதிகாலத்தினைச்சார்ந்த,
நம் இனிய சுயம்புலிங்க ஈசனார்,வடக்கு திசை நோக்கி சற்றே சாய்ந்த நிலையில் 'ஆனந்த சயன' திருக்கோலத்தில்அருட்காட்சியளிப்பது காண்பதற்கு இனியதிருவருள்தரிசனமாகும்.
அம்பிகை
நின்ற திருக்கோலத்தில்,
சாந்த சொரூபினியாய்
தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள்.
(அகத்திய மாமுனிவர் பூஜைசெய்த சிவத்தலங்களில் இத்தலமும் ஒன்று என்பது தலச்சிறப்பு)
கூத்தனின் மகள் நல்லமங்கைக்கு
பார்வை கிடைக்கப்பெற
செய்த தலமாதலால்,
பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தல இறைவனை வழிபடுதல் நன்மை பயக்குமாம்.
ஶ்ரீ வள்ளி அரூபமாக காட்சிதருவதாக கூறப்படும் இத்தலத்தில்,
ஶ்ரீ தேவசேனாவுடன் மட்டும் வீற்றிருக்கும்
எம்பெருமான் முருகனைப்பற்றி
அருணகிரிநாதர்
தன் திருப்புகழில்
போற்றிப்பாடியுள்ளார்
969-ஆம் ஆண்டில்
சுந்தர சோழ மன்னரால்
கட்டப்பட்டு, தற்போது சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இத்திருத்தலத்தின் கருவறையில்,
நம் இனிய ஈசன்
(சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவராக)
சுயம்பு லிங்க திருமேனியராய், வடக்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில், கிழக்குதிசை பார்த்து
ஆனந்த சயனத்திருக்கோலத்தில் அருட்காட்சியளிப்பது தலவிசேஷம்.
தனி சன்னதியில்,
நம் அம்பிகை
நின்ற திருக்கோலத்தில்
சாந்த சொரூபியாக
திருவருள்புரிகின்றாள்.
(திருச்சி to வயலூர் சாலையில், சோமரசம்பேட்டைக்கு
அருகில், சிறப்புமிக்க இச்சிவன் கோயில் உள்ளது)
அகத்திய மாமுனிவர்
நம் ஈசனை எண்ணி வழிபட்ட சில சிவத்தலங்களுள் இத்திருத்தலமும்
ஒன்று என்பது தலச்சிறப்பாகும்.
(மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
இத்திருக்கோயில்,
இரண்டாம் ஆதித்தசோழர்,
போசள மன்னர்,
வீரராமநாதன், விஜயநகர மன்னர் விருப்பணன் மற்றும்
பாண்டிய மன்னர்கள் காலங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக
கல்வெட்டு பதிவுகள் கூறுகின்றன)
பிரதோஷ வழிபாடும், வியாழக்கிழமை நாட்களில் நடைபெறும்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடும் தலச்சிறப்புக்களில் சிலவாகும் .
செவ்வாய், சனி தோஷங்கள் மற்றும் கண் சம்பந்தமான பிரச்சினை தீர்க்கும் பரிகார தலமாக போற்றப்படும்
5.07.26 தரிசனம்
நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment