Monday, March 30, 2026

3.சாலியமங்கலம்ஸ்ரீஞானாம்பிகை உடனுறைஸ்ரீகாளகஸ்த்தீஸ்வரர் ஆலயம்வாயு தலம்

3.சாலியமங்கலம்
ஸ்ரீஞானாம்பிகை உடனுறை
ஸ்ரீகாளகஸ்த்தீஸ்வரர் ஆலயம்
வாயு தலம்

⛳ இருப்பிடம்
 இது மிகப்பழமையான ஆலயம்.
(சாலியமங்கலத்தில் ஊருக்குள் மேலும் ஒரு சிவன் ஆலயமும் உண்டு).
திருவாரூர் - தஞ்சாவூர் பிராதான சாலையில் (பைபாஸ் சாலை அல்ல அதற்கும் தெற்கில் பழைய சாலைக்கு தென்புறம். FCI குடோனுக்கு பின்புறம் வாய்க்கால் ஒட்டிய கப்பி சாலையில் 500 மீட்டர் செல்ல வேண்டும்.

⭐ஆலய சிறப்பு - பஞ்ச பூததலம் (வாயு தலம்)
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நகர் மற்றும் சுற்றிலும் சில புராதான தலங்களை பஞ்ச பூத தலங்களாக எண்ணி வணங்குகிறார்கள்.

💫முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த வந்த சிவனடியர் ஒருவர், சிவனடியார்கள் ஒரே நாளில் சமுத்திர நீராடி, பஞ்ச பூத ஸ்தலங்களை கண்டு சிவனை மனமுருகி வணங்கினால், வேண்டிய அருள் பெறலாம். எண்ணியது திண்ணம் பெறலாம். என்பதை உணர்ந்தார். இருந்தாலும், எவ்வாறு ஒரே நாளில் பஞ்ச பூத தலங்கள் சென்று வணங்குவது என்று எண்ணி மயங்கியபோது அடியார் முன் முனிவர் ஒருவர் வந்து வழிகாட்ட, அவ்வாரே சடையான் மேடு என்ற இடம் துவங்கி தஞ்சையின் மாரியம்மன் கோவில் வரை பெரிய ஏரி வெட்டி, அருகிலேயே பஞ்ச பூத தலங்களை அமைத்தார்.
பஞ்சபூத தலங்கள்: 
1. கீழக்கோவில் பத்து (அம்மாப்பேட்டை) - பூலோக நாதரை பூமித் தலமாகவும்,

2. அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரரை நெருப்புத் தலமாகவும்,

3. காலஸ்தீஸ்வரன்பட்டி (சாலியமங்கலம்) காலஹஸ்த்திஸ்வரரை வாயு தலமாகவும்

4. நெல்லித்தோப்பு, பிரம்ம ஞானபுரீஸ்வரர் -வான் தலமாகவும்,

5. உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் ஆலயம், - நீர் தலமாகவும் அமைத்து வழிபடத் தெடங்கினார்கள்.

🛕 ஆலய அமைப்பு
ஸ்ரீஞானாம்பிகை உடனுறை
ஸ்ரீகாளஹஸ்த்தீஸ்வரர் ஆலயம்.
கிழக்கு பார்த்த ஆலயம்
காட்சி கோபுரம் உள்ளது.
உள்ளே பலிபீடம், நந்தி மண்டபம் அடுத்து, முன்மண்டப நுழைவில் மேல் பகுதியில் விநாயகர், சுவாமி அம்பாள் நந்தியுடன் அமர்ந்த கோலம், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சுதை அமைப்பு.

உள் மண்டபம் வெளவால் நெற்றி அமைப்பு. சுவாமி, அம்பாள் கருவரைகள் இணைப்பு. மண்டபத்தின் தென்புறத்தில் அடியார்களால் 2002 ல் அமைக்கப்பட்ட நால்வர் சிலைகள். மற்றும், கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அமைந்த கருவரைகள்.

ஏகப்பிரகாரம், கோஷ்ட்ட தட்சினாமூர்த்தியும், தனி விநாயகர், வள்ளிதெய்வானையுடன் முருகர் சண்டிகேஸ்வரர், துர்க்கை உள்ளனர்.
வடபுறத்தில் சிறிய ஆஞ்சனேயர் சன்னதி. மேலும், சூரியர், நவகிரகம் உள்ளன.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 

சாலை வசதி சுமாராக உள்ளது.
பூசை காலங்களில், மட்டும் சென்று தரிசிக்கலாம். ஆலயம் அருகில் வேறு எந்த கடைகளோ, குடியிருப்புகள் ஏதும் இல்லை. சிறிய வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம். தரிசித்துப் பலன் பெற வேண்டிய பழமையான ஆலயங்களின் ஒன்று. மிகச்சிறப்பு வாய்ந்த புராதானத்தலம்.

ஒரு கால பூசை ஆலயம்.
அர்ச்சகருக்கு முன் தகவல் கண்டிப்பாக
கொடுத்து செல்ல வேண்டும்.
பல முறை முயன்றும் முதன்முறையாக 08.3.2024 (சிவராத்திரி) அன்று ஸ்ரீ காளஹஸ்த்தீரர் ஆலயம் தரிசனம் கிடைத்தது.

(இந்த ஊருக்கு வடகிழக்குப் பகுதியில் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள அ/மி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு 12.02.2020ல் நடைபெற்றுள்ளது. ) ஊரில் உள்ள இரண்டு ஆலயங்களுக்கும், ஏகக் குருக்கள்.

8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...