Showing posts with label திருமுறை அமுதம் - பதிகக்காட்சி. Show all posts
Showing posts with label திருமுறை அமுதம் - பதிகக்காட்சி. Show all posts

Tuesday, July 21, 2020

திருமுறைக் காட்சி பகுதி: ஏழு

#திருமுறைக்காட்சி:
காட்சி  - 7
#அப்பர்அமுதம்

அரச கட்டளை
விஷம் நிறைந்த குளம் 
விலகி இரு  என்றது 

காவலர் கண்விழித்து காத்தனர். 
சற்றும் பயமின்றி முன் சென்றார் அவர்.     காவலர் வந்து கனிவுடன் தடுத்தனர் எடுத்தும் உரைத்தனர் பணிந்து: 
வேண்டாம்   விபரீதம் 

ஆணவமலம் மறைத்தது அகங்காரம் முன்வந்து அழைத்தது:
யாராலும் என்னை ஏதும் செய்யலாகாது
கயம் (குளம்) புகல்வேன் பார்    எனப் பகர்ந்து உள் புகுவார்.

காவலர் தடுத்தும் கரையிலிருந்த மாந்தரும் மருளிட வீழ்ந்தார் விஷக்குளத்தில்.

விதித்ததை மாற்றிட முடியுமா வீழ்ந்துவிட்டார்   வேதனையில் துடிதுடித்தார்:

காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள்  என்று சொல்லி 
 நீத்து ஆய கயம்புக நூக்கியிட
நிலைக் கொள்ளும் வழித்துணை
ஒன்று அறியேன்,

(நான்காம் திருமுறை. பதிகம் 1. திருவதிகை வீரட்டானம் - பாடல் - 5)

என்று ஆர்த்தார்  அலரினார்  வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தார்.

விதிவசத்தால் வீழ்ந்தவர்
 மதிமயக்கம் தெளிந்தார்
 வஞ்ச மனம் ஒன்றும் இலாதவர் 
 அப்பர் அவர்

இரவும் பகலும்  பிரியாது வணங்கி நின்றார்  மெய் ஞானமுனிவர்
 உண்மை ஞானம் அறிவு பெற்றார்.

அரச கட்டளை அது மீறி 
வேதனையால் துடித்திட்டு பின் 
கதறி அழுது மீண்ட கதையிதுவே.

முனிவர்களும் ஞானிகளும் நாயன்மார்களும் ஆழ்வாரடிகளும்
வாழ்ந்து காட்டி வழி அமைத்த பூமி இது அவர் தம் வார்த்தைகளை போற்றி நிற்போம் விதி மாறும் வினை அகலும் இறை துணை நின்று காக்கும்
இது உண்மை என்று உணர்வோம்.

விஷ பினியால் சூழ் உலகம்

தொற்று விலகிடவே சூழ்ந்துவரும்
இன்னலை  எதிர்த்து நின்று
அவனியிலே  உள்ள அரசுகள்
நாளும் எடுத்துவரும் நடவடிக்கை
மதித்து ஏற்றிடுவீர்.

பகலிரவு பாராமல் பணிபுரியும் காவலர்தம் கடமையினை
கண்டு உணர்வீர்

மாந்தர்தம் இன்னுயிரைக் காத்திடவே
தம்முயிரை துச்சமென தந்திடும்
மருத்துவ பணியாளரிடம்
கண்ணியம் நீ காத்திடுவீர்.

நாளெல்லாம் தன்னலமின்றி
களப்பணி ஆற்றிவரும் பணியாளர்,
தன்னார்வ தொண்டரிடம் 
கட்டுப்பாடு கொண்டிடுவீர்

பதவி வெறியால் பகுத்தறிவு
இதுஎனவே பல பேசி பகர்ந்திடுவார்
உறவுகளைத் தவிர்த்திடுவீர்

சமூக இடைவெளி கடைபிடிப்பீர் விலகியிடுவீர் தனித்திருப்பீர்.

உற்றாரும் மற்றாரும் உயிர் வாழ நீ
ஊர் சுற்றாமல் உன் வீட்டிலியே இருந்திடுவீர்.

அரசகட்டளை அது மதிப்போம்
அரன் நம்மை வந்து காப்பான்
நிச்சயம் விதி மாறும் வினை அகலும்.

நன்றி : சுப்ராம் அருணாசலம்.

Monday, June 22, 2020

திருமுறைகாட்சி #சம்பந்தர்அமுதம் காட்சி - 6

#திருமுறைகாட்சி
 #சம்பந்தர்அமுதம்
காட்சி - 6
(முதலாம் திருமுறை
பதிகம்: 78 பாடல். 3.)
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
'அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா... ...'

என்ற ஒரு ஒரு பிரபல பாடல்

அடுத்த வீட்டு சமாச்சாரங்களை எட்டிப் பார்த்து பலவித உணர்வுகளை ஏற்படுத்தி அல்லது ஏற்படுத்திக் கொண்டு அல்லல்படுவது மனிதர்களுக்கு வழக்கம்.
காலங்காலமாய் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது பற்றிய ஒரு கனவன் மனைவி சம்பவம் இப்பாடலில் வரும்.

நம் மனிதர்களில் தம் வீட்டு பிரச்சனைகளை விட இது போல அடுத்த வீட்டு பிரச்சனைகளில் அதிகம் ஈடுபாடு கொள்வர் பலர் உள்ளனர்

அதுவும் அடுத்த இடத்தில் நடக்கும் சண்டை என்றால்... ரொம்ப முக்கியமான வேலையைக் கூட விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க நினைக்கும்.

நம்மால் சமாதானப் படுத்த முடியாது என்று தெரிந்தும் வீனே மூக்கை நுழைப்பார்கள் சிலர்.

இப்படி ஒரு சண்டை காட்சியும் அதை வேடிக்கைப் பார்ப்பவர்கள் யார் என்றும்
திருமுறைப் பாடல் ஒன்றில் வரும் இது பற்றிய காட்சியில் பார்ப்போம்.

நம்முடைய பக்தி இலக்கியங்களில் பக்தி மட்டுமல்லாது, ஏராளமான வாழ்வியல் யதார்த்தங்கள், தமிழ் மொழியின் இலக்கண மான்புகளும் ஏராளமாகப் புதைந்துள்ளது.  அவற்றை கண்டுணர்ந்து மக்களிடம் பரவ செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் காரணத்தால் இந்த சிறு முயற்சி.

🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
இது மனிதர்கள் பற்றியது அல்ல.

மீன்கள் பற்றியது.  மீன்களில் பல வகை உண்டு. சேற்றில் வளரும் கயல், வாளை, முதலிய பல்வேறு வகைகள் உண்டு.
கயல் சற்று சாது, வாளை சற்று முரட்டுத்தனம் உடையது.  சேறு பகுதியில் குதித்து விளையாடுகிறது. கயலும், வாளையும் சேர்ந்து காணப்பட்டாலும், அவை ஒன்றுக்கு ஒன்று முட்டி மோதி போர் செய்து கொண்டிருக்கிறது.

இதன் அருகில்
ஒரு ஆண் குரங்கும் ஒரு பெண் குரங்கும் கூடி உற்று நோக்கி இந்த மீன்களின் சண்டையை மிக ஆர்வத்துடன்  அதன் போக்கை வேடிக்கை பார்ப்பதற்கு அங்கே
கூடியிருந்தது.

இதோ அந்த தேவார பாடல் பற்றிய குறிப்பு.

🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
தமிழ் ஞானசம்பந்தர் திருவிடைச்சுரம் (திருவடி சூலம்) என்ற தொண்டை நாட்டுத் தலத்தை அடைந்து அவ்வூரின் சிறப்பு பற்றியும், அங்குள்ள இறைவரைப் பற்றியும் ஒரு பதிகம் பாடுகிறார். பத்துப் பாடல்களில் ஐந்து வகையான,
மருதம், முல்லை, பாலை, குறிஞ்சி, நெய்தல் நிலச் சிறப்புக்கைளயும் வடித்துள்ளார்

காலம் : 7ம் நூற்றாண்டு
இடம் : திருவிடைச்சுரம் (திருவடி சூலம்)
சுவாமி : ஞான புரீஸ்வரர்
அம்பிகை : இமய மடக்கொடியம்மை.
தேவாரம் : முதலாம் திருமுறை
பதிகம்: 78 பாடல். 3.
பாடல் :
ஆற்றையும் ஏற்றதோர்  அவிர்சடை யுடையர்
        அழகினை அருளுவர்  குழகு அலது அறியார்

கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை உடையர்
         நடுஇருள் ஆடுவர் கொன்றையந்தாரார்

சேற்றயன் மிளிர்வன கயல்இள வாளை
        செருச்செய ஓர்ப்பன செம்முக மந்தி

ஏற்றையோடு  உழிதரும் எழில்திகழ்  சாரல்       
       இடைச்சுர  மேவிய இவர்வணம்  என்னே.

பொருள் :
கங்கையை முடியில் வைத்த இளம் அழகர். கூற்றுவனை உதைத்தவர், நள்ளிருளில் ஆடுபவர், கொன்றை சூடியவர் இறைவர்.
இவர் வசிக்கும் எழில் மிக்க இடைச்சுரத்தில்

சேற்றில் கயல்களும், வாளை மீன்களும் முட்டிக்கொண்டு போர் செய்வதைப் போன்ற காட்சியை ஆண்குரங்கும் பெண் குரங்கும் கூர்ந்து நோக்கும்

 என்று விளக்கி எழில் திகழ் சாரலில் இடைச்சுரத்தில் மேவிய ஈசனார் வண்ணம்தான் என்னே! என்று வினவுகின்றார். விளக்குகிறார்.
மந்தி - பெண்குரங்கு
ஏற்றை - ஆண்குரங்கு.

இதை மருத நிலச் சிறப்பாக கூறுவர்.
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
இந்தக் காலத்திலும் அடுத்தவர்களைப் பார்த்து, அவர்கள் செயல்களை உற்று நோக்கும் குனம் மனிதர்களிடையேயும்
பரவியுள்ளது.

இது நல்லதா தீமையானதா என்பதை அவரவர்களே தீர்மானித்துக் கொள்வதே சரியானது. இல்லையா.

யாதார்த்த வாழ்வியல் காட்சிகளை பக்தி இலக்கியத்தில் வைத்து அமைத்துள்ள ஆளுடையபிள்ளையின் சிறப்பையும் சிந்திக்க வேண்டும்.

வணக்கம்,
நன்றி.
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
என்றும் அன்புடன்.
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏

#திருமுறைக்காட்சி: #சேக்கிழார்அமுதம் பகுதி - 5.

#திருமுறைக்காட்சி:
#சேக்கிழார்அமுதம்
பகுதி - 5.
(30. காரைக்காலம்மையார் புராணம்
- பாடல் 1774.)

#அன்னையர் தினம்:

வரும்இவள் நம்மைப் பேணும் அம்மை காண்   உமையே  மற்றிப்

பெருமைசேர்  வடிவம் வேண்டிப்  பெற்றனள்  என்று   பின்றை

அருகுவந் தணைய  நோக்கி  அம்மையே
என்னுஞ் செம்மை

ஒரு மொழி உலகம்  எல்லாம்  உய்யவே 
அருளிச் செய்தார்.

(எம்பெருமான், "உமையே வரும் இவள் நம்மைப் பேணும் அம்மையே ஆவாள்.
இந்தப் பேய் வடிவத்தை நம்மை வேண்டிப் பெற்றாள்"
நெருங்கி வந்த அம்மையைப் பார்த்து,
"நம் அம்மையே" என்ற செம்மை தரும்
ஒப்பிலா ஒரு சொல்லை உலகம் எல்லாம் உய்யும் பொருட்டு அருளினார்.
- தெய்வச்சேக்கிழார்
- திருத்தொண்டர் புராணம்
- முதற் காண்டம்
- 5. திருநின்ற சருக்கம்
- 30. காரைக்காலம்மையார் புராணம்
- பாடல் 1774.
               (அன்னையர் தினம்)
நன்றியுடன்
சுப்ராம் அருணாசலம்

#திருமுறைகாட்சி: #சம்பந்தர்அமுதம் பகுதி - 4 (தேவாரம் : 3:80:07)

#திருமுறைகாட்சி:
#சம்பந்தர்அமுதம்
பகுதி - 4
(தேவாரம் : 3:80:07)

7ம் நூற்றாண்டில் ஒரு லேசர் ஒளிவிளக்கா!!!

தேவார பதிகத்தில் ஒரு காட்சி:

திருவீழிமிழலை:

7ம் நூற்றாண்டு

அந்நகர்  ஆகாயத்தின் மேலே எங்கும் கரும்புகை கவிழ்ந்து  மனம் கலந்து மிக இருள்  சூழ்ந்து அடர்ந்து பரவியிருந்தது.

அவ்விருளில் கதிர் விட்ட ஒளி போல் விளக்கு ஒன்று எரிவது போன்ற ஒளி காட்சி ஒன்றும் அற்புதமாக இருந்தது.

(இக்காலத்தில் லேசர் ஒளி போலக் கொள்வோம்)

 அந்தப்புகை எங்கிருந்து வருகிறது என்று நெருங்கி பார்க்கும் போது
வேத மந்திரங்கள் ஓதி வேதியர்கள் செய்யும் யாக வேள்வியிலிருந்து வரும் புகை என்று புரிந்தது.

சரி நீண்ட விளக்கொளி எப்படி என்று ஆராய்ந்தால்

அம்மாநகரில் உள்ள உயர்ந்த மாடமாளிகையில் பதித்து வைக்கப்பட்ட இரத்தினம் முதலிய கற்களின் மிளிரும் ஒளியானது இந்த புகை இருளைப் போக்கி வீசுகிறது.

 இந்த ஒளிக்கதிர் தான்  தழலில் ஏற்றிய விளக்குப் போன்று தோன்றுகிறது.

இந்த அரிய காட்சியைக் கண்ட அங்கு வரும் ஞானசம்பந்த பெருமான் தம் பதிகத்தில் குறித்துள்ள பாடல் இது:

மந்திர நன்  மாமறையி னோடு வளர்
வேள்விமிசை  மிக்கபுகை போய்

அந்தர விசும்பணவி   அற்புதம்
எனப்படரும்   ஆழியிருள்வாய்

மந்தரநன்    மாளிகை    நிலாவுமணி
நீடு கதிர்  விட்ட  ஒளி போய்

வெந்தழல் விளக்கு என   விரும்பினர்
திருந்து பதி   வீழிநகரே.

- தேவாரம்  பதிகம் (338)
- மூன்றாம் திருமுறை
- பதிகம்: 80 - திருவீழிமிழலை
- பாடல் - 7.

பொருள்.
இத்திருப்பாட்டு திருவீழிமிழலை நகரின் அக்கால  சிறப்பை உணர்த்தியது.
தெய்வீக அருள் நலமும் செல்வ நலமும் இணைந்து இப்பதி விளங்கிற்று என்று உணரலாம்.
திருஞானசம்பந்தர் : கி.பி. 609 - 642 வரையுள்ள காலத்தில் 16 ஆண்டுகள் நிலவுலகில் வாழ்ந்திருந்தார் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐

திருவீழிமிழலை - தலம் பற்றிய சில குறிப்புகள்:

நாச்சியார் கோவில் - பூந்தோட்டம் செல்லும் பாதையில் உள்ள தேவார மூவரால் பாடல் பெற்ற திருத்தலம்.

திருமால் தனது கண்ணை இடந்து  அருச்சித்துச் சக்கராயுதம் பெற்ற திருத்தலம்.
வீழிநாதர்
அம்பாள் கார்த்தியாயினியாக அவதரித்து தவமிருந்து மணம் கொண்ட கல்யாணசுந்தரர்
விண்ணிலிருந்து திருமாலால்
கொண்டுவரப்பட்ட விண்ணிழி விமானம் தாங்கிய கருவரை
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் படிக்காசு பெற்று அமுது அளித்த பதியிது.
🙏🙏🙏🙏🙏
சிந்தனை ஆக்கம்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
 🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏

#திருமுறைக்காட்சி: #சம்பந்தர்அமுதம் தேவாரம்:02:184:04 பகுதி: 3

#திருமுறைக்காட்சி:
#சம்பந்தர்அமுதம்
தேவாரம்:02:184:04
பகுதி: 3
திருவெண்காடு:
குளிர்ந்த முல்லை நிலம். அதில்
ஓர் அழகிய மலர்ச்சோலையில்
ஒரு சிறிய நீர் நிலை. அருகில் கடல் முத்துக்கள்.

மடல் அவிழ்த்த தாழையின் நிழல் அந்த நீர்நிலையில் மீது விழுகின்றது.
அதில் வாழும் கெண்டை மீன்
தாழையின் நிழலை தம்மைக் கொத்திச் செல்ல வந்த பறவைகள் என்று எண்ணி அஞ்சி மிக வேகமாக அருகில் உள்ள தாமரைப்பூவின் இடையில் சென்று ஒளிந்து கொள்கிறது.
அங்கு கிடக்கும் கடல் முத்துக்கள் 
மீன் செய்யும் இந்த செய்கையைக் கண்டு நகைக்கின்றது.

இவ்வரிய காட்சியைக் கண்ட அங்கு வந்த நமது ஞானப்பிள்ளையார் தமது பாடலை இவ்வாறு அமைக்கிறார்.

விட முண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்

மடல் விண்ட முடத்தாழை  மலர் நிழலைக் குருகென்று

தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூ மறையக்

கடல் விண்ட கதிர் முத்த நகைகாட்டும்
காட்சியதே.

விளங்கு பொருள் :

மனதில் ஏற்படும் மன அயற்சி யன்றி உண்மையான அச்சம் ஒன்றுமில்லை என்று உணர்த்துகிறது

தன் புற = குளிர்ந்த முல்லைநிலம்
தடம் = குளம்

இயற்கையும் தமிழும் தேவாரப் பதிகத்தில் இணைந்த இந்த பாடல்

திருஞானசம்பந்தர் இயற்றியருளியது.

- தேவாரம் இரண்டாம் திருமுறை
- பதிகம் 184. திருவெண்காடு
- பாடல் - 4

சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்

#திருமுறைக்காட்சி: #சம்பந்தர்அமுதம் பகுதி - 2

#திருமுறைக்காட்சி:
#சம்பந்தர்அமுதம்
பகுதி - 2
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
அழகிய நீர் நிறைந்த சுனை ஒன்று அதில் சிறு சிறு பறவைகள் கூட்டம் கூடி  நிற்கும்.

அடுத்திருக்கும் மாஞ்சோலை அதில்
மாங்கனிகள் கொத்துக் கொத்தாய் தொங்கி நிற்கும் அதன் வழியெங்கும்
மலர் கொம்பில் மனம் வீசும் மலர்கள்

அது வழி சென்ற தவம் கொண்ட பக்தர் தம் பூசைக்கு ஏற்ற அம்மலர் கண்டார்.

நீண்ட அந்த மலர்க்கொம்பு வளைத்து அதன் தலை நிறைந்த மலர் பறித்து அம்மலர் கொம்பை விட்டுவிட அதுமீண்டு நிமிர்ந்து அங்கிருந்த மாஞ்சோலையில் கனிந்து நின்ற மாங்கனிகள் மேல் பட
அவை கவண் எறிகல் போல் அந்த சுனைக்கரையில் போய் வீழ,
அங்கிருந்த பறவைகள் அஞ்சி அகலும்.

இந்தக் காட்சியைக் கண்டு தம்தேவாரப்  பதிகத்தில் வைத்து அருளுரைத்தார்
நம் தமிழ்ஞானசம்பந்தர் :
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
அப்பாடல்:
புவி முதல் ஐம் பூதமாய்ப் புலன் ஐந்தாய்
நிலன் ஐந்தாய்க்  கரண நான்காய்
அவையவை சேர் பயனுருவாய் அல்லவுரு
வாய்நின்றான் அமரும் கோயில்

தவ முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு
கொம்புதைப்பக் கொக்கின் காய்கள்
கவண் எறிகல் போல்சுனையிற் கரை சேரப்
புள்ளிரியும் கழுமலமே.
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
கொக்கின் காய்கள்= மாங்காய்கள்
புள் இரியும்= பறவை அஞ்சி விலகும்

மேலும் சில பொருள் உரைகள்:
ஐம்பூதம் : நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
ஐம்புலன் : மெய், வாய் கண் மூக்கு செவி
ஐ நிலங்கள்: குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல், பாலை
அந்தக்கரணங்கள்: மனம், புத்தி, அகங்காரம், சித்தம்
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
பொருள் குறிப்புரை :
ஐந்து பூதங்களாய், நிலங்களாய், கரணங்களாய், அவ்வவற்றின்  பயனாய் அரு உரு வாய் அல்லாதாய் நின்ற ஈசன் அமரும் கோவில்   கழுமலம் என்ற சீர்காழி தலமே.
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
- தேவாரம் - முதல் திருமுறை
- பதிகம்: 129 - திருக்கழுமலம் (சீர்காழி)
- பாடல்: 7
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
சிந்தனையாக்கம்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏

#திருமுறைக்காட்சி: #சம்பந்தர்அமுதம் பகுதி : ஒன்று மனதில் வந்த காட்சி பதிகம் 1.118

#திருமுறைக்காட்சி:
#சம்பந்தர்அமுதம்
பகுதி : ஒன்று

மனதில் வந்த காட்சி

ஊரடங்கு வேளையிலே
வேலை ஒன்றுமில்லை வேதனையில் வெளியில் சென்றேன்.

சாலை எங்கும் சுட்டெரிக்கும்
சூரியனின் சுடு வெப்பம்
தாகமும் வேட்கையும்
தானேதான் வந்து நிற்கும்.

வேட்கையெல்லாம் தீர்த்திடுவோம்
வேதனையும் மாற்றிடுவோம்
என்று கூறி என் அருகில்
வந்து நின்றார்   அயலார் தான்.

சற்றே தான் மதி மயங்கி
பின்சென்றேன்   இருந்தாலும்
சந்தேகம் வந்ததுமே
நீர் எங்கே அது எனக்கு முதல்
காட்டிடுவீர் என்றவுடன்

சாலை நடுவினிலே அழைத்து சென்று
தூரத்தே கை காட்டி பார் அங்கே நீரதுவே
எனப் பகர்ந்தார்.

கதிரவனின் கடும் வெப்பம்
கண்டு கண்டு புவியெல்லாம்
வெந்து நிற்கும் உருகி ஓடும்
நீரோடை போல அதுநீண்டு நிற்கும்
கானல் நீர்

குடம் குடமாய்  நீர் மொண்டிடலாம் கொண்டு வந்தால் நன்றாக
 நீர் குளிர் பெறலாம் இதுவே தாகம் தீர்க்க எளிய வழிஎன்றுரைத்தார்.

அவர் குறைமதிகண்டு இவ்வாறே இவர் ஞானமுமே பெற்றுய்ய வழி உரைப்பார்
வேதனை தீர்த்திடும் வழியென்றே கூறி
போகாத பாதையும் காட்டிடுவார்.

 இவர் பின் செல்வார் எவர் அவர்
 மதியிழந்த மூடரென உணர்ந்து
அக்கணமே தெளிவு பெற்றேன் நானும்.

இது நம் திருஞானசம்பந்தர் அருளிய
தேவாரப் பாடல் ஒன்றெடுத்து சிந்தித்தப்போது என் மனதில் வந்த
காட்சியிது.

அந்தப் பாடல்:

- முதல் திருமுறை 
- பதிகம் 118 - பாடல் 10.
- தலம்: திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)

சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

சடம் கொண்ட சாத்திரம் - பொருளற்ற உரை
பேய்த்தேர் - கானல் நீர்
குஞ்சரம் - யானை
பொருள் :
அறிவு சார்ந்த பொருள்களைப் புகலாத சாக்கியர் சமணர் சொற் சாத்திரங்களை விரும்பி பேதையராய் மயங்கி கானல்நீர் போன்று தோன்றும் காட்சியில் பதிந்து யாரும் செல்ல மாட்டார்கள்.    பருப்பதம் பரவும் அடியவர்கள் நன்மையடைவார்.

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...