Showing posts with label திருமருகல் அருகில். Show all posts
Showing posts with label திருமருகல் அருகில். Show all posts

Tuesday, February 24, 2026

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம், திருப்புகழ்த்தலம்

திருப்புகழூர்
அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர்
நாயன்மார்தலம்
திருமுறைத்தலம்,  திருப்புகழ்த்தலம்
தலம்: சோழவள நாட்டில் காவிரித்தென்கரையில் அமைந்துள்ள 75 ஆவது தலம். நாகை மாவட்டத்தில் நன்னிலம் கோட்டத்தைச் சேர்ந்தது. நன்னிலம், சன்னாநல்லூர், நாகையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
நாகை - நன்னிலம் பாதையில் உள்ளது.

புன்னாகவனம், சரண்யபுரம், ரத்தனாரண்யம் என்பன புராணங்களில் வழங்கும் மறுபெயர்கள். இத்தலத்தின் திருக்கோயில் நாற்புறமும் அகழிசூழ நடுவில் இருக்கிறது.

 திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.

சிறப்பம்சங்கள்:
இறைவன் பெயர் அக்னிபுரீஸ்வரர்; இறைவி கருந்தாள் குழலியம்மை.(சூளிகாம்பாள்).
 இறைவன் திருநாமம் தேவாரங்களில் `கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே` `கருந்தாள் குழலியும் தாமும் கலந்து` என்பன அம்மையப்பர், திருநாமங்களை அறிவிக்கும் அகச்சான்றுகள்.

அக்னி தலம்: அக்னி பகவான் தனது பாவங்களைப் போக்க, இங்குள்ள சிவனை நோக்கி தவம் செய்துள்ளார்.
அப்பர் முக்தி தலம்: அப்பர் பெருமான் சிவபெருமானின் திருவடியில் கலந்த (முக்தி) தலம்.
மூன்று மூர்த்திகள்: வாதீஸ்வரர், வர்த்தமானீஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் என முக்காலங்களையும் உணர்த்தும் வகையில் லிங்கங்கள் உள்ளன.
சனிபகவான்: நளச்சக்கரவர்த்திக்கு அருளிய 'அனுகிரக சனி' இங்கு தனிச் சன்னதியில் அருள்கிறார். 
முருக நாயனார் அவதாரத் தலமாகவும் இது போற்றப்படுகிறது
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் திருமுறை பாடல்கள் பெற்றது.

சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கிய திருத்தலம். மேகங்கள் பூசித்த தலம்.

வாஸ்து தலம்: வீடு கட்டத் தொடங்குபவர்கள் இங்கு 6 செங்கற்களை வைத்து வழிபடுவது சிறப்பு.
வாஸ்து தோஷ நிவர்த்தி மற்றும் வீடு, மனை அமைய வழிபடப்படும் சிறப்புமிக்க தலம். 

வழிபாடு:
நான்கு தட்டுக்களைக் கொண்ட ராஜகோபுரம் மற்றும் அக்னி தீர்த்தம் உள்ளது.
பாம்பன் சுவாமிகள் பல காலம் தங்கியிருந்த தலம் இதுவாகும்.
குழந்தை வரம் வேண்டி சூளிகாம்பாளை வழிபடும் வழக்கம் உள்ளது. 
திருப்புகலூர், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வாஸ்து குறைபாடுகளை நீக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.

விழா:

சித்திரைச் சதயத்தைப் பத்தாம் நாளாகக்கொண்டு விழா நடைபெறுகிறது. பத்துநாளிலும் அப்பர் சுவாமிகள் வரலாற்றை ஒட்டிய ஐதீகமே நினைவூட்டப்பெறுகின்றது. வைகாசி மாதம் பருவ இறுதியாகப் பிரமோற்சவம் நடைபெறுகிறது. சந்திரசேகரர் விசேஷ மான மூர்த்தி.

தீர்த்தம்:
அக்னிதீர்த்தம். இதற்குப் பாணதீர்த்தம் என்றும் ஒரு பெயருண்டு. முடிகொண்டான்ஆறு, கோயிலுக்குத் தென்பக்கத்தில் ஓடு கிறது.
தல விருட்சம்: புன்னை. `புன்னைப் பொழிற்புகலூர்`, `புன்நாகம் மணங் கமழும் பூம்புகலூர்` என்ற திருமுறைகள் இதற்கு மேற்கோள்.

ஆலய அமைப்பு:
கோயிலின் முன்பே குளம் உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து, உள் கோபுரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறத்தில் திருநாவுக்கரசர் சன்னதி உள்ளது. 

கோஷ்டத்தில் அகத்தியர், நடராஜர், கணபதி, அண்ணாமலை, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் வாதாபி கணபதி, திருநாவுக்கரசர், காசிவிசுவநாதர், சோமநாயகர் சன்னதிகள் உள்ளன. திரிமுகாசுரன், காலசம்காரமூர்த்தி ஆகியோரும் உள்ளனர். அருகில் தலவரலாறு கல்வெட்டாக உள்ளது. 

வெளியே இடதுபுறத்தில் சூளிகாம்பாள் (கருந்தார்குழலி) சன்னதி உள்ளது. கோயில் வளாகத்தின் வெளியில் திருநாவுக்கரசர் மண்டபம் 22 சூன் 1958இல் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டதற்கான கல்வெட்டோடு உள்ளது. மண்டபத்தின் முன்பாக குளம் காணப்படுகிறது

பிற சிறப்புகள்
திருப்புகலூர் முருக நாயனார் அவதாரத்தலம். இவரது திருமடம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள் இவருடன் தொண்டர்குழாமாக இருந்து மகிழ்ந்த மடம்.சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவனார் செங்கல்லைப் பொன் கல்லாக மாற்றிய தலம்.

திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம்

மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, அதன் இடது புறத்தில் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் கோயிலுக்குள் கோயிலாக உள்ளது. மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் வாயில் வழியாகவே அடுத்துள்ள வர்த்தமானீஸ்வரர் சன்னதிக்குச் செல்லமுடியும். அதற்கு தனியாக வேறு வாயில் காணப்படவில்லை. அதில் வர்த்தமானீஸ்வரர் உள்ளார். அவருக்கு அருகில் பலி பீடம் உள்ளது. எதிரில் முருக நாயனார் சிற்பம் உள்ளது. 

வேளாக்குறிச்சி ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது.

நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.

#மீள்தரிசனம் 4.2.2026
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Friday, February 6, 2026

இரமணதீச்சரம் அருள்மிகு சரிவார்க் குழலி உடனுறை இராமநாதர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 77-ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்றது. திருமுறை தலம்

இரமணதீச்சரம்
அருள்மிகு சரிவார்க் குழலி உடனுறை இராமநாதர்
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 77-ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்றது.

நாகப்பட்டினம் - நன்னிலம் - கும்பகோணம் சாலையில் உள்ள திருப்புகழுரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
 நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள திருப்புகலூருக்கு தெற்கில் 2. கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் தலம் திருப்புகலூரிலிருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, திருக்கண்ணபுரம் சென்று 1/2 கி.மீ. கிழக்கே சென்றால் இத்தலத்தை அடையலாம்.

அருளோடு பொருளும் அள்ளித் தரும் திருத்தலங்கள் சோழ நாட்டில் எண்ணற்றவை. அவற்றுள் ஸ்ரீராமபிரான் வழிபட்ட தலமாகப் பேசப்படுவது இராமனதீஸ்வரம். ""இராம நந்தீஸ்வரம்'' என்று முன்பு அழைக்கப்பட்டது இந்தத் தலம். திருக்கண்ணபுரம் ஊரின் சைவ ஆலயமாக இந்த இராமனதீஸ்வரமும், வைணவாலயமாக ஸ்ரீசெளரிராஜப் பெருமாள் ஆலயமும் அமைந்திருப்பது சிறப்பாகும்.

தல வரலாறு
சீதையை கடத்திச் சென்று சிறை வைத்தான் ராவணன். அவன் மீது போர் தொடுத்து, அவனை அழித்தார் ராமன். பரமேஸ்வரனின் அதிதீவிர பக்தனான ராவணேஸ்வரனைக் கொன்ற பாவம் பிரம்மஹத்தியாய் ராமபிரானை பற்றிக் கொண்டது. பிரம்மஹத்தி தோஷம் விலக வேண்டி, சேதுக் கரையில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டார் ராமர். இதுவே "இராமேஸ்வரம்' ஆனது. 

ராவண சம்ஹார பாவம் தீர ராமன் சிவலிங்க வழிபாடு செய்ததாக தலபுராணம் கூறுகின்றது. அந்த பாவம் நீங்குவதற்காக பல தலங்களுக்குச் சென்ற ராமன், அதன் ஒரு பகுதியாக இந்த தலத்திற்கும் வந்தார். 

ரகுராமர் இங்கே தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி சிவபெருமானை வழிபட்டுள்ளார். இதனால் ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளம் "இராமதீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. 

அவர் இத்தலத்தில் உள்ள புஷ் கரணி தீர்த்தத்தில் நீராடி, பின் அய்யனை தரிசிக்க வரும் போது நந்தி தேவன் அவரை மறித்து நிற்கிறார். ‘ராவணனை கொன்ற பாவம் உங்களுக்கு நீங்கவில்லை. எனவே தாங்கள் உள்ளே செல்லக்கூடாது' என்பது அவரின் வாதம். ஆனால் அம்பிகை அந்த சம்பவத்தைப் பார்த்து திகைத்தார். உடனே அங்கு வந்து நந்தியை தனது திருக்கரத்தால் பிடித்து, ராமனை உள்ளே செல்ல வழி விடுகிறார். ராமபிரானும் உள்ளே சென்று லிங்கத்தை வழிபடுகிறார். அதன் பின் சாப விமோசனம் பெறுகிறார். ராமனுக்கு சாப விமோசனம் கொடுத்த ஈசன், ‘ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர்’ என பெயர் பெற்றார். நந்தி வழி மறித்தும் ராமன் உள்ளே வந்து சிவனை வணங்கி நின்ற காரணத்தினால், இந்த திருத்தலம் ‘ராமநந்தீஸ்வரம்’ என்று பெயர் பெற்றது. அதுவே நாளடைவில் மருவி தற்போது ‘ராமனதீச்சரம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை உண்மை என நிரூபிக்கும் வகையில், சான்றாக இத்தல உற்ஸவ மூர்த்தியான சோமாஸ்கந்தர் விக்கிரகத்தில், அம்பாளின் இடது கரத்தில் நந்தி உள்ளதைக் காணலாம். இந்த விக்கிரகம் பாதுகாப்பு காரணமாக திருப்புகலூர் சிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ராமபிரானால் வழிபாடு செய்யப்பெற்ற ராமேஸ்வரத்தைப் போல, ராமனதீச்சரமும் ராமனால் பூஜை செய்யப் பெற்றது. மேலும் இங்குள்ள சிவலிங்கத் திருமேனியில் ஜோதி புலப்படுவதாலும், ராமன தீச்சரமும் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களுக்கு ஒப்பானதாக போற்றப்படுகிறது. இந்த தலத்தில் அருள்பாலிக்கும் இறைவனை வணங்கினால், இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர் லிங்கங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். 

துர்வாச முனிவர் இங்கே தவம் புரிந்ததால் தவ பூமியாகத் திகழ்கிறது.
துர்வாசர் பூஜித்த லிங்கம் : இந்த ஆலயத்தில் மற்றுமொரு சிறப்பு துர்வாச முனிவர். இவர் அத்ரி மகரிஷியின் மகன் ஆவார். இவர் பல இடங்களுக்குச் சென்று சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்துள்ளார். இவர் சென்ற இடங்களை எல்லாம், காளகஸ்தி கோவிலுக்கு இணையான கோவில் என்பார்கள். அந்த வகையில் இந்த திருத்தலத்திற்கும் வந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளார் துர்வாச முனிவர். அந்த வகையில் இந்தத் திருத்தலமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துர்வாச முனிவர் பூஜித்த சிவலிங்கம், பைரவர் திருமேனிக்கு அருகில் அமைந்திருக்கிறது. 

தலசிறப்புகள்

மூலவர் பெரிய திருவுருவம். உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணம். சுவாமியின் விமானம் வேசர அமைப்புடையது. கல்வெட்டில் சுவாமியின் பெயர் இராமனதீச்சர முடையார் என்று காணப்படுகிறது. குலோத்துங்கன் இக்கோயிற் பூசைக்காக சிவபாதசேகர மங்கலம் என்னும் பெயருடைய நிலப்பகதியை தானமாக அளித்த செய்தியும் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.

ஆலய அமைப்பு

பேருந்து சாலையின் தென்புறமாய் முதலில் இராமதீர்த்தக் குளம் அமைந்திருக்க, எதிரே தோரண வாயிலுடன் ஆலயம் திகழ்கிறது.
உள்ளே நுழைந்தால், வாயிலுக்கு வெளியே நந்தியெம்பெருமான் வீற்றிருக்கின்றார். பலிபீடம், உள்ளது

வலது புறம் அன்னை கருவார் குழலியம்மை, ராமருக்கு தடை நீங்க நந்தியை கையில் பிடித்தது போல், அனைவர் வாழ்விலும் உள்ள இடர்பாடுகளை களைய இன் முகத்தோடு காத்திருக்கிறார்.
அம்பாள் ‘குழலி’ என்ற பெயரில் இந்த சுற்று வட்டாரத்தில் மட்டுமே அழைக்கப் படுகிறார். நந்தியை தடுத்து ராமரை தரிசனம் செய்ய அனுமதித்த தலம் என்பதால் இத்தலம் ராமேஸ்வரத்துக்கு இணையானது

 ஒரே பிராகாரம் கொண்ட விசாலமான ஆலயம். ஆலயத்தின் மையமாக அமைந்த அகண்ட மேடை. அதன் மேற்குப் பகுதியில் சுவாமி சந்நிதியும், வட புறத்தில் அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. தென்முகம் கொண்டது அம்பாள் சந்நிதி. அதனுள் ரம்மியமாய் காட்சி தருகின்றாள் அன்னை ஸ்ரீசூளிகாம்பாள். "சரிவார்க்குழலி' என்றும், "கருவார்க்குழலி' என்றும் அழைக்கப்படுகிறாள். கரத்தினில் ருத்ராட்ச மாலை ஏந்திக் காணப்படுகிறாள்.

பின், சுவாமி சந்நிதி அடையும் முன் இரண்டாம் வாயிலின் மேல் கயிலை தரிசனம் காணலாம். உள்ளே பெரியதொரு மகா மண்டபம். அடுத்து இடை மண்டபம். பின்னர் ஈசன் கருவறை. கருவறையுள் பளபளக்கும் கல்லாலான பச்சை இழையோடும் பாண லிங்கம் வட்ட ஆவுடை நடுவே உள்ளது. இவர் இராமநாதீஸ்வரர் என்றும் இராமலிங்கேஸ்வரர் என்றும் போற்றப்படுகின்றார். பக்தர்களை ஈர்க்கும் வண்ணம் ஜோதி வடிவாய் ஜொலிக்கின்றார். 

சுவாமி கருவறை விமானம் பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கின்றது. 
இக்கோவில் விமானத்தை மாதிரியாக வைத்துதான் தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது என்பர். எனவே இந்த கோவில் தஞ்சைக்கு நிகரானதாகும்.
இந்த ஆலயமானது, 32 அடி உயரத்தில் நான்கு தளங்களை கொண்ட விமானத்தோடு அமைந்துள்ளது. இதன் கலசம் செம்பினால் அமைக்கப்பட்டுள்ளது. 

கோவிலைச் சுற்றி வந்தால்

 இரண்டு தூண்களைக் கொண்ட தனி மண்டபமாக, தட்சிணாமூர்த்தி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை இரண்டு யாழிகள் தாங்குவது போன்ற அமைப்பு சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும், சின்முத்திரையைக் காட்டி சிவ ரகசியத்தை அருளும் வண்ணம் வீற்றிருக்கிறார்கள். 

ஆலய வலம் வருகையில் கன்னி மூலையில் தனிச் சந்நிதியில் கணபதியையும், வருண பாகத்தில் கந்தனையும், வாயு திக்கில் கஜலக்ஷ்மியையும் வணங்கி மகிழ்கின்றோம். மேலும்,, லிங்கோத்பவர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், திருமால், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகங்கள், பைரவர், துர்வாச முனிவர் வணங்கிய லிங்கம், மற்றொரு லிங்கம், அகத்தியர், அப்பர், திருஞானசம்பந்தர், காமதேனு, சூரியன் ஆகிய திருமேனிகள் காணப்படுகின்றன. 

அம்மன் சன்னிதியில் கோவில் தல புராணத்தை விளக்கும் வண்ணம், ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

தல விருட்சமாக மகிழமரம் மணம் பரப்புகின்றது.. அம்பாள் சன்னிதிக்கு நேரில் எதிரில் பிரகாரத்தில் இந்த தல விருட்சம் இருக்கிறது.

மகிழ மரத்தை தல விருட்சமாக கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘மகிழம்பூவனநாதர்’ என்ற பெயரும் உண்டு. மகிழ மரத்துக்கு என்று தனிச் சிறப்புகள் பல இருக்கின்றன.

 திருவொற்றியூரில் சுந்தரமூர்த்தி சுவாமி களுக்காக சிவபெருமான் காட்சியளித்தது, மகிழ மரத்தின் அடியில் என்று பெரிய புராணம் கூறுகிறது. எனவே இந்த மரம் இருக்கும் இடத்தில் சிவபெருமானின் அருள் பல மடங்காக பெருகி இருக்கும் என்பது ஐதீகம். 

இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டில் இறைவன் பெயர் இராமநதீச்சர முடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை, ராமநந்தீஸ்வரர், ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர் போன்ற பெயர்களில் அழைக்கிறார்கள். அதே போல் இறைவியையும், கருவார்குழலியம்மை, சூளிகாம்பாள், சரிவார்குழலி என்ற திருநாமங்களில் போற்றுகிறார்கள். 

சூரிய புஷ்கரணி, சூரிய பூஜை ஆகியவை இந்த ஆலயத்தின் தீர்த்தங்கள் ஆகும்
மணிகங்கை என்றொரு தீர்த்தமும் இத்தலத்துக்கு உண்டு.
இத்தலம் ஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலமாகும். தேவாரப்பாடல்கள்: சம்பந்தர் : சங்கொளிர் முன்கைய....

திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்தின் மூலமாக இந்தக் கோவில் பராமரிக்கப்பட்டு, அனைத்து பூஜைகளும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நந்தன ஆண்டு ஐப்பசி 26-ஆம் நாள், 11.11.2012 ஞாயிறு அன்று குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது.

இந்த ஆலயத்தில் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டியை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தில் சுப்பிரமணியர் தீர்த்தவாரி நடக்கிறது. இங்குள்ள சுப்பிரமணியர் திருச்செந்தூர் முருகனுக்கு இணையானவர். எனவே இங்கு வந்து வணங்கினால் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ததற்கு சமமாகும். கார்த்திகை மாதம் சஷ்டி திதியில் சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெறும். இந்த கோவிலை பொறுத்தவரை சகல தோஷமும் நீங்கும் தலமாகும். ராமர் வழிபட்ட தலம் என்பதால் இந்த தலம் ராஜராஜ சோழன் ஆட்சிக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. 

 அம்மனை வழிபட்டு சுமங்கலி பூஜை செய்தால், அவர்கள் குடும்பம் செழிப்படையும். கணவர்கள் நோய் பிடியில் இருந்து விடுபடுவார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். பெண்களுக்கு சுக பிரசவம் நடை பெறும். திருமணத் தடை நீங்கி, குழந்தை பேறு கிடைக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும்.

நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.

#மீள்தரிசனம் 
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🌼

செங்காட்டாங்குடிஅருள்மிகு திருக்குழல் நன்மாது உடனுறை கணபதீச்சரத்தார்திருமுறைத்தலம், திருப்புகழ் தலம்

செங்காட்டாங்குடி
அருள்மிகு திருக்குழல் நன்மாது உடனுறை கணபதீச்சரத்தார்
திருமுறைத்தலம், திருப்புகழ் தலம்

திருச்செங்காட்டங்குடி (Thiruchenkattankudi), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கிராமம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 79-வது சிவத்தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் உத்தராபதீசுவரர் திருக்கோயில் எனப்படுகிறது. 

 நாகைமாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. 
இறைவன் - கணபதீச்சரத்தார். பைரவ கோலத்துடன் உத்திராபதியார் எழுந்தருளியிருக்கிறார். ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், கணபதீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.  
இறைவியார் திருப்பெயர்: சூளிகாம்பாள் (குழலம்மை), திருகுகுழல் உமைநங்கை.  

தல மரம்: ஆத்தி மரம் தீர்த்தம் : சூரிய தீர்த்தம், தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது.   

வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர் , சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், விநாயகர், பிரமன், சத்பாஷாடர் முதலியோர். Sthala Puranam

விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்றகாலத்து அவன் உடலினின்றும் பெருகிய இரத்தவெள்ளத்தால் இவ்விடம் முழுதும் செந்நிறமாயிற்று. ஆதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது. விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் தாபித்து வழிபட்டார். அதனால் `கணபதீச்சரம்` எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவ தாயிற்று. இவ்வரலாற்றைக் கந்தபுராணத்து,

ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத் தவுணன் மார்பில்
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றிற் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர்பெற் றின்னுங் காண்டக இருந்த தம்மா!
மீண்டும்செங் காட்டில் ஓர்சார் மேவிமெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப்
பூண்டபேர் அன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக்
காண்டகும் அனைய தானம் கணபதீச் சரம தென்பர்.
என்ற செய்யுட்களான் அறியலாம்.
மிகப் பழமையான திருவாத்திவிருக்ஷம் ஒன்று, எழுந்தருள் நாயகர் திருமுன்பு இருக்கின்றது. பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் இத்தலத்து வாழ்ந்த சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை இவர்கள் திருவுருவங்கள் இருக்கின்றன. சிறுத்தொண்டர், உத்தராபதியினின்றும் வந்த பைரவ வேடம் தாங்கிய பரமனுக்குத் தம்மகன் சீராளனையே கறிசமைத்திட்டு முத்தியடைந்தனர் என்பது வரலாறு. 

இந்த அடியார் பெருமகனார், திருஞானசம்பந்தப் பெருமானும், அப்ப மூர்த்திகளும் எழுந்தருளியகாலத்து அவர்கள் நட்பைப்பெற்று அவர்கள் பதிகத்துச் சிறப்பிக்கப்பெறும் தகுதியைப்பெற்றவர். சித்திரைப் பூர்ணிமையில் சிறுத்தொண்டர் திருவமுதுபடைத்த திருவிழா நடைபெறும். அமுதுபடையல் என்றே அது வழங்குகிறது.

சிறப்பம்சங்கள்:
மூலவர்: உத்தராபதீசுவரர் (இத்தலம் மந்திரபுரீசம், ஆத்திவனம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது).
சிறப்பு: பார்வதி தேவிக்கு சிவபெருமான் நர்த்தனமாடிக் காட்டிய தலம். விநாயகர், "வாதாபி கணபதி"யாகப் போற்றப்படுகிறார்.
வரலாறு: சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலம். இவரது மகனைப் பலியிட்டு சிவனுக்கு உணவு படைத்த பக்தி கதை இத்தலத்துடன் தொடர்புடையது.
திருவிழா: கணபதிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் உத்தராபதீசுவரர் வெள்ளை சாத்தி உலா போன்றவை முக்கிய நிகழ்வுகளாகும்.

சந்தான பாக்கியம் (குழந்தை வரம்) அருளும் தலமாகவும், ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம். 

திருச்செங்காட்டங்குடி கோயில் தலவரலாறு Sthala puranam of Thiruchengattangudi Temple

கணபதி இறைவனை வழிபட்டதால் இக்கோயிலுக்கு "கணபதீச்சரம்" என்று பெயர். ஆலயம் கணபதீச்சுரம் எனவும், ஊர் திருச்செங்காட்டங்குடி எனவும் வங்கி வருகிறது. விநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார். அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆயினமையின் 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது

. பைரவ வேடத்தில் இறைவன் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் அவர் மனைவி, மகன், வேலைக்காரி ஆரியோருக்கும் அருள்புரிந்து தலம். 

"உத்ராபதியார் " திருமேனி உருவான விதம் பற்றி சொல்லப்படும் வரலாறாவது - ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத் தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாட்கள் தங்கி வழிபட்டு வந்தார். உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், "இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் கட்சி தருவோம்" என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள் உத்ராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்பாடுகள் - கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்க கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். இறைவன் சிவயோகியார் வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள், "உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது; வேண்டுமானால் ஊற்றுகிறோம்" என்றனர். சிவயோகியார், "நல்லது; அதையே ஊற்றுங்கள்" என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார் - உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து - கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர்கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச, காட்சித் தந்தருளினார். (ஆதாரம் - கோயில் வரலாறு.)

இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய நான்காலும் சிறப்புடையது. சிறுத் தொண்டர் அருள் பெற்றத் தலம். மந்திரபுரி, செங்காடு, சத்தியபுரி, பிரமபுரி, தந்திரபுரி, ஆத்திவனம், பாஸ்கரபுரி, சமுத்திரபுரி, கணபதீச்சரம் ஆகிய ஒன்பது திருநாமங்களைக் கொண்டு விளங்குகின்றது. 

தல தீர்த்தம் - தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது; இத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உண்டென்று சொல்லப்படுகிறது; அவை:- சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்பன அவ்வொன்பதாகும். இறைவனார், அடியார் பொருட்டு பூமியில் வந்து, தம் பாதம் தோய நடந்து அருள் செய்தத் திருத்தலங்களான சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருக்கச்சூர் ஆலக்கோயில், திருகுருகாவூர் வெள்ளடை, திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய தலங்கள் வரிசையில் இத்தலம் இறைவன் உத்திராபதீஸ்வரராகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்புடையது. 

இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. 

விநாயகர், பிரமன், வாசுதேவன், சூரியன், சந்திரன், சத்யாஷாட முனிவர், சிறுத்தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வழிபாடு செய்து பேறு பெற்ற தலம்.

 நாயன்மார்கள் வரலாற்றில், சரவணத்துத் தனயரான முருகப் பெருமானுடன் கூட இறைவியாரும் இறைவரும் சோமாஸ்கந்தர் திருக்கோலம் காட்டி அருளியது இத்திருத்தலத்தில்தான் என்ற தனிச் சிறப்பு பெற்றத் திருத்தலமாகும்.

 சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. மூலவர் கணபதீச்சரமுடையார். இங்கு பேழையில் மரகத லிங்கம் உள்ளது. 

சிறுத்தொண்டர் பல்லவ மன்னனின் தளபதியாக 'வாதாபி ' சென்று சாளுக்கியரோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது உடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில்தான் பிரதிஷ்டை செய்துள்ளார். 

சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர், உத்ராபதீஸ்வரர் (உற்சவ காலங்களில் வீதி உலா வருபவர் இவரே),

 திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன. இத்தலத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனும் பிரசாதம் - அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும்; மக்கட்பேறில்லாதவர்கள் உத்ராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர். 

கல்வெட்டுக்களில் இறைவன், 'செங்காடுடைய நாயனார் ', 'கணபதீச்சரமுடைய மகாதேவர் ', 'கணபதீஸ்வரமுடையார் ' எனவும்; தலத்தின் பெயர் "கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி" என்று குறிப்பிடப்படுகிறது.

நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.

#மீள்தரிசனம் 4.2.2026
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of SCN079 Sri Uthirapasupatheeshwarar Swamy Temple, Thiruchengattangudi, Thevaram padal pettra sthalam on Google Maps
https://goo.gl/maps/VXDrd7SjrQJVLgv96

செங்காட்டாங்குடிஅருள்மிகு திருக்குழல் நன்மாது உடனுறை கணபதீச்சரத்தார்திருமுறைத்தலம், திருப்புகழ் தலம்

செங்காட்டாங்குடி
அருள்மிகு திருக்குழல் நன்மாது உடனுறை கணபதீச்சரத்தார்
திருமுறைத்தலம், திருப்புகழ் தலம்

திருச்செங்காட்டங்குடி (Thiruchenkattankudi), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கிராமம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 79-வது சிவத்தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் உத்தராபதீசுவரர் திருக்கோயில் எனப்படுகிறது. 

 நாகைமாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. 
இறைவன் - கணபதீச்சரத்தார். பைரவ கோலத்துடன் உத்திராபதியார் எழுந்தருளியிருக்கிறார். ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், கணபதீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.  
இறைவியார் திருப்பெயர்: சூளிகாம்பாள் (குழலம்மை), திருகுகுழல் உமைநங்கை.  

தல மரம்: ஆத்தி மரம் தீர்த்தம் : சூரிய தீர்த்தம், தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது.   

வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர் , சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், விநாயகர், பிரமன், சத்பாஷாடர் முதலியோர். Sthala Puranam

விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்றகாலத்து அவன் உடலினின்றும் பெருகிய இரத்தவெள்ளத்தால் இவ்விடம் முழுதும் செந்நிறமாயிற்று. ஆதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது. விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் தாபித்து வழிபட்டார். அதனால் `கணபதீச்சரம்` எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவ தாயிற்று. இவ்வரலாற்றைக் கந்தபுராணத்து,

ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத் தவுணன் மார்பில்
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றிற் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர்பெற் றின்னுங் காண்டக இருந்த தம்மா!
மீண்டும்செங் காட்டில் ஓர்சார் மேவிமெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப்
பூண்டபேர் அன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக்
காண்டகும் அனைய தானம் கணபதீச் சரம தென்பர்.
என்ற செய்யுட்களான் அறியலாம்.
மிகப் பழமையான திருவாத்திவிருக்ஷம் ஒன்று, எழுந்தருள் நாயகர் திருமுன்பு இருக்கின்றது. பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் இத்தலத்து வாழ்ந்த சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை இவர்கள் திருவுருவங்கள் இருக்கின்றன. சிறுத்தொண்டர், உத்தராபதியினின்றும் வந்த பைரவ வேடம் தாங்கிய பரமனுக்குத் தம்மகன் சீராளனையே கறிசமைத்திட்டு முத்தியடைந்தனர் என்பது வரலாறு. 

இந்த அடியார் பெருமகனார், திருஞானசம்பந்தப் பெருமானும், அப்ப மூர்த்திகளும் எழுந்தருளியகாலத்து அவர்கள் நட்பைப்பெற்று அவர்கள் பதிகத்துச் சிறப்பிக்கப்பெறும் தகுதியைப்பெற்றவர். சித்திரைப் பூர்ணிமையில் சிறுத்தொண்டர் திருவமுதுபடைத்த திருவிழா நடைபெறும். அமுதுபடையல் என்றே அது வழங்குகிறது.

சிறப்பம்சங்கள்:
மூலவர்: உத்தராபதீசுவரர் (இத்தலம் மந்திரபுரீசம், ஆத்திவனம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது).
சிறப்பு: பார்வதி தேவிக்கு சிவபெருமான் நர்த்தனமாடிக் காட்டிய தலம். விநாயகர், "வாதாபி கணபதி"யாகப் போற்றப்படுகிறார்.
வரலாறு: சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலம். இவரது மகனைப் பலியிட்டு சிவனுக்கு உணவு படைத்த பக்தி கதை இத்தலத்துடன் தொடர்புடையது.
திருவிழா: கணபதிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் உத்தராபதீசுவரர் வெள்ளை சாத்தி உலா போன்றவை முக்கிய நிகழ்வுகளாகும்.

சந்தான பாக்கியம் (குழந்தை வரம்) அருளும் தலமாகவும், ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம். 

திருச்செங்காட்டங்குடி கோயில் தலவரலாறு Sthala puranam of Thiruchengattangudi Temple

கணபதி இறைவனை வழிபட்டதால் இக்கோயிலுக்கு "கணபதீச்சரம்" என்று பெயர். ஆலயம் கணபதீச்சுரம் எனவும், ஊர் திருச்செங்காட்டங்குடி எனவும் வங்கி வருகிறது. விநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார். அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆயினமையின் 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது

. பைரவ வேடத்தில் இறைவன் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் அவர் மனைவி, மகன், வேலைக்காரி ஆரியோருக்கும் அருள்புரிந்து தலம். 

"உத்ராபதியார் " திருமேனி உருவான விதம் பற்றி சொல்லப்படும் வரலாறாவது - ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத் தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாட்கள் தங்கி வழிபட்டு வந்தார். உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், "இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் கட்சி தருவோம்" என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள் உத்ராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்பாடுகள் - கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்க கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். இறைவன் சிவயோகியார் வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள், "உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது; வேண்டுமானால் ஊற்றுகிறோம்" என்றனர். சிவயோகியார், "நல்லது; அதையே ஊற்றுங்கள்" என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார் - உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து - கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர்கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச, காட்சித் தந்தருளினார். (ஆதாரம் - கோயில் வரலாறு.)

இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய நான்காலும் சிறப்புடையது. சிறுத் தொண்டர் அருள் பெற்றத் தலம். மந்திரபுரி, செங்காடு, சத்தியபுரி, பிரமபுரி, தந்திரபுரி, ஆத்திவனம், பாஸ்கரபுரி, சமுத்திரபுரி, கணபதீச்சரம் ஆகிய ஒன்பது திருநாமங்களைக் கொண்டு விளங்குகின்றது. 

தல தீர்த்தம் - தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது; இத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உண்டென்று சொல்லப்படுகிறது; அவை:- சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்பன அவ்வொன்பதாகும். இறைவனார், அடியார் பொருட்டு பூமியில் வந்து, தம் பாதம் தோய நடந்து அருள் செய்தத் திருத்தலங்களான சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருக்கச்சூர் ஆலக்கோயில், திருகுருகாவூர் வெள்ளடை, திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய தலங்கள் வரிசையில் இத்தலம் இறைவன் உத்திராபதீஸ்வரராகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்புடையது. 

இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. 

விநாயகர், பிரமன், வாசுதேவன், சூரியன், சந்திரன், சத்யாஷாட முனிவர், சிறுத்தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வழிபாடு செய்து பேறு பெற்ற தலம்.

 நாயன்மார்கள் வரலாற்றில், சரவணத்துத் தனயரான முருகப் பெருமானுடன் கூட இறைவியாரும் இறைவரும் சோமாஸ்கந்தர் திருக்கோலம் காட்டி அருளியது இத்திருத்தலத்தில்தான் என்ற தனிச் சிறப்பு பெற்றத் திருத்தலமாகும்.

 சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. மூலவர் கணபதீச்சரமுடையார். இங்கு பேழையில் மரகத லிங்கம் உள்ளது. 

சிறுத்தொண்டர் பல்லவ மன்னனின் தளபதியாக 'வாதாபி ' சென்று சாளுக்கியரோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது உடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில்தான் பிரதிஷ்டை செய்துள்ளார். 

சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர், உத்ராபதீஸ்வரர் (உற்சவ காலங்களில் வீதி உலா வருபவர் இவரே),

 திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன. இத்தலத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனும் பிரசாதம் - அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும்; மக்கட்பேறில்லாதவர்கள் உத்ராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர். 

கல்வெட்டுக்களில் இறைவன், 'செங்காடுடைய நாயனார் ', 'கணபதீச்சரமுடைய மகாதேவர் ', 'கணபதீஸ்வரமுடையார் ' எனவும்; தலத்தின் பெயர் "கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி" என்று குறிப்பிடப்படுகிறது.

நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.

#மீள்தரிசனம் 4.2.2026
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of SCN079 Sri Uthirapasupatheeshwarar Swamy Temple, Thiruchengattangudi, Thevaram padal pettra sthalam on Google Maps
https://goo.gl/maps/VXDrd7SjrQJVLgv96

திருமருகல் அருள்மிகு வண்டுவார்குழலி உடனுறை மாணிக்கவண்ணர்திருமருகல், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம். திருமுறைத்தலம் திருப்புகழ்தலம்

திருமருகல்
அருள்மிகு வண்டுவார்குழலி உடனுறை மாணிக்கவண்ணர்
திருமருகல், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.
திருமுறைத்தலம்
திருப்புகழ்தலம்
இத்தலம் நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியில், திட்டச்சேரிக்கு அடுத்து உள்ளது. (நாகப்பட்டினத்திலிருந்து 22 கி.மீ). 
நன்னிலம், நாகை, திருவாரூர், மயிலாடுதுறைகளிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
இறைவன் மாணிக்கவண்ணர் (ரத்தினகிரீஸ்வரர்). இறைவி வண்டுவார்குழலி (ஆமோதள நாயகி) .

திருமருகல் கோவில் சிறப்பம்சங்கள்:

கோச்செங்கட் சோழநாயனார் எழுப்பிய எழுபது மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. யானையேறாப் பெருங்கோயில்.

இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இங்கு, ஞானசம்பந்தப் பெருமான் விஷம் நீங்கப் பாடிய பதிகம், திருமணத் தடை நீக்கும் பதிகமாகவும் விளங்குகிறது. இதன்படி, விநாயகர், சுவாமி, அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி, சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் என்ற பதிகத்தைப் பாராயணம் செய்வோருக்கு, தடைகள் அனைத்தும் அகன்று திருமணம் கைகூடும் என்பது இத்தலத்தின் சிறப்பு

பாடல் பெற்ற தலம்: திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பதிகம் பாடப்பட்டது. சோழநாட்டுக் காவிரித்தென்கரைத்தலங்களில் 80ஆவது தலம்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உள்ளது.

தல விருட்சம்: மருகல் (ஒரு வகை கல் வாழை). தீர்த்தம்: லட்சுமி தீர்த்தம் / மாணிக்க தீர்த்தம்.
அமைப்பு :
கோச்செங்கோட்சோழனின் திருப்பணியுடன் மாடக்கோயிலாக அமைந்துள்ளது இக்கோயில். இரு பிராகாரங்கள், 5 நிலை ராஜகோபுரம், அதன் எதிரே நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தம் என எழில் சூழ் திருத்தலமாக உள்ளது இத்தலம். மருகல் என்ற வாழை நிறைந்திருந்த பதி என்பதால், இப்பகுதிக்கு திருமருகல் எனப் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இக்கோயில் வளாகத்தில் உள்ள மருகல் வாழை மரங்கள், அங்கிருந்து வெளியே கொண்டு சென்றால் வளராது என்ற நம்பிக்கை உள்ளது.

கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மர விநாயகரைக் கொண்ட கொடி மரம் உள்ளது. உயரமான மேடை மீது வித்தியாசமான நந்தி பலிபீடத்துடன் உள்ளது. தென்புறம் வன்னி மரம் மேடையுடன் அமைந்துள்ளது. 

அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் முன்மண்டபத்துடன் உள்ளது
வண்டுவார்குழலி (ஆமோதளநாயகி) தனி சன்னதியும் உள்ளன.
அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் யமுனா சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.

மூலவர் சன்னதியின் நுழைவாயிலின் வலப்புறம் சனீஸ்வரர், 
மேலே படி ஏறினால், மூலவர் ரத்னகிரீஸ்வரர் சன்னதியின் வலது புறம் சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கிய கருவரையில் உள்ளார். மூலவர் கோஷ்டத்தில் கணபதி, 63 மூவர், தட்சிணாமூர்த்தி, , பிரம்மா, துர்க்கை உள்ளனர். வள்ளிதெய்வானையுடன் முருகர் அமைந்துள்ளார். திருப்புகழ் பாடல் பெற்ற தலம். மேலும், மகாலெட்சுமி, , சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் உண்டு. தீர்த்தக்கினறு வடகிழக்கில் உள்ளது. தலமரம் கல்வாழையும் உள்ளது.

அடுத்து சுவாமி வெளிமண்டபம். , நடராஜர் சன்னதியும்,
கிழக்கில், நவகிரகம், பராசரர் பூசித்த லிங்கம், செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை,
பைரவர், சூரியன் உள்ளனர்.

வெளிச்சுற்றில் தென்புறம் சாஸ்தா, பிராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டி, சுரம் தீர்த்த விநாயகர், வடக்கில் சந்தான விநாயகர் ஆகியோர் உள்ளனர். வடகிழக்கில் தனி சன்னதியில் மேற்குப் பார்த்த மருகல் உடையார், தெற்கு பார்த்த சவுந்தரநாயகி சன்னதியும் இச்சுற்றில் உள்ளது. 
மற்றும் யாக சாலை, அலங்கார மண்டபம் உடையது.

தல புராணம்.
முன்னொரு காலத்தில் மருகல் நாட்டை குசகேது என்ற மன்னன் ஆட்சி செய்துள்ளான். ஒருமுறை இப்பகுதியில் காடு திருத்தும் பணி நடைபெற்றபோது, சுயம்புவாக தோன்றியிருந்த சிவலிங்கத் திருமேனியின், பாணத்தில் மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டுள்ளது. இதையறிந்த மன்னன் ஓடோடி வந்து, மனம் மொழி மெய்களால் இறைவனைத் துதித்து, இறைத் திருவருளால் எழுப்பித்த ஆலயமே, இக்கோயில் எனப்படுகிறது. 

நீதி நெறி தவறாத குசகேது மகாராஜாவின் ஆட்சிக் காலத்தில், விதியின் பயனாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 9 ஆண்டுக் காலம் மழையில்லாததால் மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு உள்ளாகினர். பசிப் பிணியாலும், வாட்டிய வறுமையாலும் மக்கள் நீதி நெறிகளைப் புறந்தள்ளினர். இதனால், மனமுடைந்த மன்னன் குசகேது, மக்களின் பசியைப் போக்க முடியாமல், மக்களை நீதி நெறி நடத்த முடியாமல் வாழ்வதை விட, இறப்பதே மேல் எனக் கருதி, தன் துயரை எல்லாம் இறை திருமுன் நின்று கதறிய அவன், இறுதியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றான். 

தன்னலம் கருதாமல், தன் குடிகளின் நலனுக்காக தன்னுயிரையும் துறக்கத் துணிந்த மன்னனைத் தடுத்தாட்கொண்டு, சிவகணங்களுடன் காட்சியளித்த சிவபெருமான், மருகல் நாட்டின் வறுமை தீர திருமருகல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மாணிக்கம், நெல், முத்து, நீர் ஆகிய மழைகளைப் பொழியச் செய்து அருளியுள்ளார். மாணிக்க மழை பெய்யச் செய்து மக்களின் வறுமையைப் போக்கிய வள்ளல் என்பதால் இத்தல இறைவனுக்கு அருள்மிகு மாணிக்கவண்ணர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருமணம்

வைப்பூரைச் சேர்ந்த வணிகன் ஒருவனுக்கு 7 பெண் பிள்ளைகள். ஆண் மகவு இல்லாத அவன், தன் தமக்கையின் மகனை தன்னுடன் அழைத்து வந்து வளர்த்துள்ளான். மேலும், தன் பெண் பிள்ளைகளில் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகவும் தமக்கைக்கு அவன் வாக்களித்திருந்தான். ஆனால், காலப்போக்கில் தன் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியவனாக அந்த வணிகன், தன்னுடைய 7 பெண்களில் 6 பெண்களை செல்வந்தர்களாகத் தேடிப்பிடித்து மணம் முடித்தான். 

தன் தந்தையின் வாக்குத் தவறிய இச்செயலைக் கண்டு வருந்திய 7-ஆவது பெண், தன் தந்தை தன்னையும் தன் மாமனுக்கு மணம் முடிக்கமாட்டார் என்பதையறிந்து, தன் மாமனை மதுரைக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வது எனத் திட்டமிட்டு, அவனுடன் உடன்போக்குப் புறப்பட்டாள். ஒரு நாள் இரவு, இத்திருத்தலத்தின் தெற்குவீதியில் அவர்கள் இருவரும் தங்கியிருந்தனர். அப்போது, விதி வசத்தால் அந்தச் செட்டிப்பிள்ளை அரவம் தீண்டி இறந்தான். 

இதனால், பெரும் துயருற்ற அந்தச் செட்டிப்பெண், கண்ணீர் விட்டுக் கதறி புலம்பினாள். மணமாகா கன்னிப் பெண் என்ற எல்லையை மீறாமல், இறந்து கிடந்த மாமனின் உடலைத் தீண்டாமல் அருகிலிருந்தே அழுது புலம்பினாள். அரவம் அணிந்த நிமலா, அடியவர் தம்கூட்டம் உய்ய நஞ்சுண்ட அமுதே காத்தருள வருவாய்! என இறைவனை பலவாறு அழைத்தாள், அரற்றினாள்.

தன் அவல நிலையிலும் ஆண்டவனின் மீது நம்பிக்கைக் கொண்டு துதித்த அந்தப் பெண்ணின் அழுகுரல், அங்குத் தங்கியிருந்த ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தரின் செவிகளை அடைந்தது. அப்பெண்ணை சந்தித்து, அவளது அவலங்களைக் கேட்டறிந்த சம்பந்தப் பெருமான் மனம் கனிந்தார். மாணிக்கவண்ணரின் திருவருளை வேண்டி பதிகம் பாடத் தொடங்கினார். 

"சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்

விடையா யெனுமால் வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே"

என்ற பாடலுடன் தொடங்கி 11 பாடல்களைப் பாடி பதிகத்தை நிறைவு செய்தார் சம்பந்தர் பெருமான். 

ஞானக் குழந்தையின் பாடல்களால் மகிழ்ந்த மாணிக்கவண்ணரின் திருவருளால், இறந்து கிடந்த செட்டிப்பிள்ளை உயிர்பெற்று, துயில் எழுந்தவன் போல எழுந்தான். பரம்பொருளின் பெரும் கருணையால் புணர்வாழ்வு பெற்ற செட்டிப்பெண்ணும், செட்டிப்பிள்ளையும் இறைவனை பலவாறு வேண்டித் துதித்தனர்

அப்போது, இறைவன் திருவுளப்படி வண்டுவார்குழலி உடனுறை மாணிக்கவண்ணர் திரு முன்னிலையில், வன்னி மரத்தையும், கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு செட்டிப்பெண் - செட்டிப்பிள்ளை இருவருக்கும் மணமுடித்து வைத்தார் சம்பந்தர் பெருமான் என்பது இத்தல புராணம் உணர்த்தும் ஆன்மிக அற்புதம்.  

மகாலட்சுமி தவம்

புராண காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி கங்கைக் கரையில் வேள்வி மேற்கொள்ளத் திட்டமிட்டனர். அந்த வேள்வியின் முதன்மையான பயனை மும்மூர்த்திகளில் யாருக்கு அர்ப்பணிப்பது என்பதில் அவர்களுக்கிடையே பேதம் ஏற்பட்டது. பின்னர், பிரம்மனின் மகனான பிருகு முனிவரை மூலோகத்துக்கும் அனுப்பி, தங்கள் கேள்விக்கு விடையறிந்து வரச் செய்ய முடிவெடுத்தனர். 

அதன்படி, பிருகு முனிவர் வைகுந்தம் சென்றார். அங்கு, திருமகளோடும், நித்திய சூரியர்களோடும், விஷ்வக்நேசர் முதலியரோடு வீற்றிருந்த திருமால், பிருகு முனிவரின் வரவை கவனிக்கவில்லை. இதனால், பெரும் கோபமடைந்த பிருகு முனிவர், பள்ளி கொண்ட பெருமாளின் திருமார்பில் உதைத்தார். 
உடனடியாக, பிருகு முனிவரை வரவேற்று உபசரிக்கத் தொடங்கிய திருமால், தன்னை உதைத்த முனிவரின் கால்களுக்கு ஏற்பட்ட வலியைப் போக்கக் கருதி பிருகு முனிவரின் கால்களையும் பிடித்துவிட்டார். 

தன் இருப்பிடமான பெருமாளின் திருமார்பில் உதைத்த பிருகு முனிவருக்குப் பெருமாள் பணிவிடை செய்வதைக் கண்டு கடும் சினம் கொண்ட திருமகள், தான் இருந்த இடத்தை உதைத்தவரை உபசரித்தது நியாயமற்றது எனக் கூறி, தான் இருக்கும் இடம் தேடி வந்து தன்னை அடையும் வரை வைகுந்தத்தை விட்டு விலகியிருந்து கடுந்தவம் இயற்றப் போவதாகக் கூறி பூலோகம் புறப்பட்டார். 

பல தலங்களைக் கண்ட திருமகள், மாணிக்கவண்ணரின் கோயிலைக் கண்டார். இத்தலமே தன் தவத்துக்கு ஏற்றத் தலம் எனக்கருதி திருமருகல் அடைந்தார். மாணிக்கவண்ணர் கோயிலின் கிழக்குப் பக்கத்தில் குளத்தை ஏற்படுத்திய திருமகள், அக்குளத்தில் தீர்த்தமாடி, வில்வங்களைக் கொண்டு மாணிக்கவண்ணரை பூஜித்தார். 

ஆவணி மாதம் பௌர்ணமி திதியுடன் கூடிய வெள்ளிக்கிழமை நாளில், மாணிக்கவண்ணரின் திருவருளால், திருமால் திருமகளை அடைய திருமருகல் வந்தார். வண்டுவார்குழலியுடன் காட்சியளித்த மாணிக்கவண்ணர், திருமாலையும், திருமகலையும் இணைத்து வைத்து அருள்புரிந்தார் என்பது இத்தலத்து ஐதீகம். இதன்படி, இத்தலமே வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது. மகாலட்சுமி தாயார் உருவாக்கிய தீர்த்தமாதலால், இத்தீர்த்தம் அவரது பெயராலேயே மகாலட்சுமி தீர்த்தம் என்றே விளங்குகிறது.  

மேலும், மன பேதங்களால் பிரிந்த தம்பதிகள் இத்தலத்தில் மகாலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, மாணிக்கவண்ணரையும், வண்டுவார்குழலி அம்மையும் வழிபாடாற்றினால், மீண்டும் கூடி வாழ்வர் எனப்படுகிறது.

சனிதோஷ நிவர்த்தி
இக்கோயிலில் மூலவர் சன்னதிக்குச் செல்லும் பாதையில் ஶ்ரீ சனீஸ்வர பகவானுக்குத் தனி சன்னதி உள்ளது. இங்குள்ள சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார். "மந்தனார் கொட்ட மடங்குங்கு கோயிலிது" என்று காக புஜண்டர் குறிப்பிட்டுள்ளார். 
 
"மந்தனுக்குற்ற பெரும் பேறுங் 
கீர்த்தியும் மருகலானுக் கல்லால் 
வேறில்லை நல்லன வேல்லாந் 
தந்தே வேதனை யறுப்பான் 
கொடுமையை யெடுத்துண்பனே" 

என கோரக்கச் சித்தர் அருளியுள்ளார் என்பதால், இத்தலம் சனிதோஷத்தின் உக்கிரம் போக்கும் தலமாகக் குறிப்பிடப்படுகிறது. 

பராசரர் வழிபாடு

புலன்களை வென்ற புண்ணியராக இருந்தவர் பராசரர் முனிவர். கங்கையில் தீர்த்தமாடச் சென்ற அவர், அங்கு தோணி ஓட்டும் பெண் ஒருவளின் அழகில் மயங்கினார். தன்னை மணந்துகொள்ள வேண்டி, அவளின் இசைவைப் பெற்றார். அவர்களுக்கு வியாசர் குழந்தையாக அவதரித்தார். பின்னர், அப்பெண்ணிடம் விடைபெற்ற பராசரர் மீண்டும் தவமியற்ற பதகாச்சிரமம் சென்றார். ஆனால், அவர் மனதை கவலை சூழ்ந்திருந்ததால், அவரால் நிலைகொள்ள இயலவில்லை. 

அப்போது, ஓர் அசிரீரி தோன்றி, கதலி வனத்தை சுற்றி மாணிக்கவண்ணரை வழிபட மனத்தூய்மை கிட்டும் என அருளியது. அதன்படி, பராசர முனிவர் இத்தலத்தில் வன்னி இலையைக் கொண்டு சிவலிங்க வழிபாடு மேற்கொண்டார். சித்திரை மாத பௌர்ணமி நாள் நண்பகலில் மாணிக்கவண்ணர் தோன்றி பராசர முனிவருக்குக் காட்சியளித்தார் என்பது இத்தல ஐதீகம். இதன்படி, இத்தலம் மனக்குழப்பங்கள் போக்கும் தலமாகக் குறிப்பிடப்படுகிறது. 

இக்கோயிலின் முக்கியப் பெருவிழா, சித்திரைத் திருவிழா ஆகும். இத்திருவிழாவின் 7-ஆம் நாளில் செட்டிப்பெண்- செட்டிப்பிள்ளை திருமணமும், மாலையில் மணக்கோலத்துடன் தம்பதியர் பல்லக்கில் வீதிவலம் வரும் உத்ஸவமும் நடைபெறும்.

அளப்பரிய ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்ட இத்திருக்கோயிலில் மகா குடமுழுக்கு விழா 2025ல் நடைபெற்றுள்ளது.
11 செப்டம்பர் 1974இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டும் உள்ளது.

பதிகங்கள்: அங்கமும்வேதமு -1 -6 திருஞானசம்பந்தர்
சடையா யெனுமால் -2-18 திருஞானசம்பந்தர் பெருகலாந் 
-5 -88 திருநாவுக்கரசர்

பெருகல்ஆம்,தவம்
  பேதைமை தீரல்ஆம்;
திருகல்ஆகிய
  சிந்தை திருத்தல்ஆம்;
பருகல்ஆம்,பரம்
  ஆயதுஓர்ஆனந்தம்-
மருக லான்அடி
  வாழ்த்தி வணங்கவே.
- சம்பந்தர்

நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.

#மீள்தரிசனம் 4.2.2026
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

வாழ்மங்கலம் அ/மி. வீரகாளியம்மன்

வாழ்மங்கலம் அ/மி. வீரகாளியம்மன் 
பூசை விழா 4, 5 பிப்ரவரி 2026 தரிசனம்.

திட்டச்சேரி- T.R. பட்டினம் சாலையில் உள்ளது.

செங்குந்த முதலியார் வகையறாவுக்குச் சொந்தமான ஆலயம். வருடம் ஒருமுறை எடுத்து வைத்து பூசை செய்து, 2 நாட்கள் தரிசனம் செய்யப்படும்.
கிழக்குப் பார்த்த ஒரே ஒரு கருவரை நீண்ட அகல மண்டபத்துடன் உடையது.
காளி நின்றகோலம். 
பூசை தரிசனம் முடிந்த பிறகு எடுத்துப் பெட்டியில் வைத்து விடுவார்கள். மீண்டும் வருடம் முடிந்த பிறகே
பூசை.

தினமும், மற்றும் முக்கிய நாட்களில் பெட்டிக்குள் உள்ள காளிக்கே பூசை வழிபாடு நடைபெறும்.

ஏராளமான மருளாளிகளும், பக்தர்களும் இருநாட்களும் தொடர்ந்து வந்து தரிசித்து அருள் பெற்று செல்வார்கள்.

அருகில் தனி (செங்குந்த) விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் ஆலங்கள் உள்ளன.

திட்டச்சேரியிலிருந்து Auto வில் செல்லலாம். அல்லது, காரைக்கால் - திருப் பட்டிணம் - திட்டச் சேரி வழியில் ப.கொந்தகை அருகில் வாழ்மங்கலம் உள்ளது.
சிறிய கிராமம். 
வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு. வேறு எந்தவித கடைகளும், ஓட்டல்களும் கிடையாது.
பூசை வழிபாடு நடைபெறும் நேரம் விசாரித்து செல்ல வேண்டும்.
வருட பூசை தரிசனம் போது மட்டும் விழாக் கடைகள் இருக்கும்.
காலமுறை பூசைக்காளி, மிகுந்த சக்திவாய்ந்த தெய்வம் என்பதால் பயபக்தியுடன் வணங்கி அருள் பெறுகிறார்கள்.
2026ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4, மற்றும் 5ம் தேதிகளில் முழு நாளும் தரிசனம் செய்யலாம்.
நன்றி🙏

4.02..2026
சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
4.2.2026

சீயாத்தமங்கைஅ/மி.நீலாத்பவ அம்பாள் சமேதஅ/மி வன்மீகநாதர், காலபைரவர் ஆலயம்.

சீயாத்தமங்கை
அ/மி.நீலாத்பவ அம்பாள் சமேத
அ/மி வன்மீகநாதர், காலபைரவர் ஆலயம்.
நாகூர் - நன்னிலம் சாலையில் பிரதான சாலையை ஒட்டி, கிழக்கு நோக்கிய ஆலயம். முன்கோபுரம் இல்லை. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பாள் கருவரை தனியாக தெற்கு நோக்கியும் உள்ளது. பைரவர் மேற்கு நோக்கி தனி சன்னதியில் உள்ளார். சோழ மன்னர்கள்ஆட்சியில் கட்டப்பட்ட ஆலயம்.
காலபைரவர் மிகவும் விசேஷம் பிரார்த்தனை தலம்.
கோஷ்ட்டத்தில், தட்சினாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மn, துர்க்கை.
விநாயகர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் இருக்கின்றன.
28.1.2026 குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
#மீள்தரிசனம்
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
4.2.2026

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...