Showing posts with label சூரியனார்கோவில் அருகில். Show all posts
Showing posts with label சூரியனார்கோவில் அருகில். Show all posts

Friday, February 6, 2026

சூரியனார் கோவில்சிவசூரியனார் ஆலயம்.சூரியனார் கோவில் - சூரிய பகவானின் புனித நவக்கிரக கோவில்

சூரியனார் கோவில்
சிவசூரியனார் ஆலயம்.
சூரியனார் கோவில் - சூரிய பகவானின் புனித நவக்கிரக கோவில்

தமிழ்நாட்டின் கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கும்பகோணம்-மயிலாடுதுறை வழித்தடத்தில் ஆடுதுறைக்கு அருகில் அமைந்துள்ளது

சூரியனுக்கு (சூரியக் கடவுள்) நவகிரக ஸ்தலமாகும். ஒரே வளாகத்தில் உள்ள தனித்தனி சன்னதிகளில் மற்ற எட்டு நவக்கிரகங்களோடும் சூரியன் முக்கிய தெய்வமாக வழிபடப்படுவதால், இந்த கோயில் தனித்துவமானது. மற்ற நவக்கிரக கோவில்களைப் போல் இல்லாமல், இங்கு பக்தர்கள் ஒன்பது கிரகங்களையும் ஒரே இடத்தில் வழிபடலாம்.

மேற்கு பார்த்த ஆலயம்.

3 நிலை ராஜகோபுரம். ஆலயம் வலதுபுரம் சிறிய தீர்த்தக்குளம்.

ராஜகோபுரம் உள் நுழைந்தவுடன் கொடிமரம், குதிரை, தென் மேற்கு மூலையில் விநாயகர்.

கருவரை மாடக்கோவில் அமைப்பு.

கருவரை முன்மண்டபத்தில், விநாயகர், காசிவிசுவநாதர், விசாலாட்சி, சண்டிகேஸ்வரர், பைரவர்.

சூரியன் கருவரையில் மேற்கு பார்த்து, எதிரில் வியாழன் (குரு).

கோயில் கட்டிடக்கலை பாரம்பரிய திராவிட பாணியில் ஒரு சிறிய அமைப்பு மற்றும் சக்திவாய்ந்த கருவறைகளுடன் உள்ளது. சூரியனின் சிலை அவரது துணைவிகளான உஷா மற்றும் பிரத்யுஷாவுடன் ஏழு குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் சவாரி செய்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நவகிரகங்கள் சூரியனை எதிர்கொள்கின்றன, கிரகங்களின் ராஜாவாக அவரது முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
சிவசூரியனார் தரிசித்து பின் கோஷ்ட்ட பிரகாரத்தில், சூரியனை சுற்றி உள்ள நவகிரகங்கள் தனித்தனி கருவரை சன்னதிகள்.

தென்புறம், சனிஸ்வரர் தொடங்கி,
வடக்குபுரம் சண்டிகேஸ்வரர் வரை சுற்றி வலம் வந்து வழிபடுகிறார்கள்.

பிரகாரத்தில் வடபுரத்தில் உள்ள பெரிய நீண்ட மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் உற்சவர் அபிஷேகம் நடைபெறும். தென்புறமும் நீண்ட மன்டபம் உள்ளது.

மாசியில் ரதசப்தமி உற்சவம். அனைத்து சுவாமிகளுக்கும் சந்தனகாப்பு அலங்காரம்.
பிரார்த்தனை தலம்.

சூர்யன் ஆரோக்கியம், உயிர், அதிகாரம், நம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் தந்தையின் ஆசீர்வாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது. சூரிய தோஷம், நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகள், தொழில் தடைகள், அங்கீகாரம் இல்லாமை மற்றும் நம்பிக்கை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.

தினசரி பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் கடுமையான சடங்குகளுடன் நடத்தப்படுகின்றன. சூரிய வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ரத சப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளின் போது இந்த கோவில் மிகவும் சிறப்பாக இருக்கும்.

🕰️ கோவில் நேரங்கள்
காலை: 6:00 AM - 12:30 PM
மாலை: 4:00 PM - 8:00 / 8:30 PM
(திருவிழா நாட்களில் நேரம் மாறலாம்)

🚗 இருப்பிடம் & எப்படி அடைவது
கும்பகோணத்தில் இருந்து தூரம்: ~15 கி.மீ
தஞ்சாவூரில் இருந்து தூரம்: ~45 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம்: கும்பகோணம்
பேருந்து, டாக்சி அல்லது தனியார் வாகனம் வழியாக சாலை வழியாக எளிதில் அடையலாம்

🙏 சிறப்பு பூஜைகள் & நம்பிக்கைகள்

ஞாயிறு பூஜை மிகவும் சக்தி வாய்ந்தது
சிவப்பு மலர்கள், கோதுமை, வெல்லம், தாமிர பாத்திரங்கள் மற்றும் நெய் விளக்குகள் ஆகியவை பிரசாதங்களில் அடங்கும்.

பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்:
நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆற்றல்
தொழில் வெற்றி மற்றும் அதிகாரம்
நம்பிக்கை மற்றும் தலைமை
சூரிய தோஷத்தில் இருந்து நிவாரணம்
அமைதியான தரிசனத்திற்கு அதிகாலையில் வருகை தரவும்
ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்
🔱 சூரியனார் கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?
✔ நவகிரகங்களில் சூரிய கடவுளுக்கான முக்கிய கோவில்
✔ ஒன்பது கிரகங்களும் ஒரே இடத்தில் வழிபாடு
✔ வலுவான ஆன்மீக அதிர்வுகள்
✔ உடல்நலம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு முக்கியமானது
தமிழகத்தின் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது.

மீள் தரிசனம் 23.11.2022 கார்த்திகை அம்மாவாசை

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருமாந்துறை அட்சய நாத சுவாமி கோயில்.

திருமாந்துறை அட்சய நாத சுவாமி கோயில்.

கும்பகோணம் மைலாடுதுறை சாலையில் திருப்பனந்தாள் செல்லும் வழியில் சூரியனார் கோயிலுக்கு கிழக்கில் 2 கி.மீ தூரத்தில் உள்ளது.

பாடல் பெற்ற தலம் என்ற கருத்து உள்ளது.
பல ஆதாரங்கள் இருந்தும், திருச்சி அருகில் உள்ள திருமாந்துறையை திருமுறை தலமாக குறிப்பிடுகிறார்கள்.

திருமாந்துறை அட்சய நாத சுவாமி கோயில் . இங்குள்ள சந்திர கிணறு தீர்த்தத்தில் குளித்து காலமாமுனிவரும்  நவகிரஹங்களும் ரோக நிவர்த்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது .

முகப்பு ராஜ கோபுரம் இந்த கோயிலில் இல்லை .
கிழக்கு நோக்கிய ஆலயம்..
தனிக் கொடிமரம் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.

நந்திக்கு சிறு மண்டபத்துடன் சுவாமி ஆலயம் முன்புறம் உள்ளது.

இந்த கோயிலில் உள்ள 
இறைவர்: அட்சயநாத சுவாமி,
 இறைவியின் பெயர் ஸ்ரீ யோகநாயகி . கருவறையில் தட்ஷிணாமுர்த்தி பிரம்மா துர்கை ஆகியோர் உள்ளனர் .

சுவாமி, அம்பாள்  ஆலயம் கிழக்கு நோக்கி
தனித்தனி ஆலய அமைப்பில் உள்ள பெரிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.

இப்பிரகாரத்தில் விநாயகர் மனைவியுடன் காட்சி அளிப்பது சிறப்பம்சமாகும். உட்பிரகாரத்தில் நால்வர் சன்னிதி உள்ளது .
திருக்கஞ்சனூர் சப்த்த ஸ்தானத்தில் உள்ள ஏழு தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
அம்பாள் தனி ஆலயமாக, சுவாமி ஆலயத்தின் இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.

ஆலயம் முன்புறம் பெரியகுளம் உள்ளது.
தட்ஷன் நடத்திய யாகத்தில் சிவனின் விருப்பத்தை மீறி கலந்து கொண்டதால் ஷய ரோகத்தால் பாதிக்கப்பட்டார். உடனே சந்திரன் தன் குருவிடம் சென்று பரிகாரம் கேட்க இதற்கு பரிகரமாக மாந்துறை என்கிற இந்த தலத்தில் அட்சய நாத சுவாமியை வழிபட கூறினார் அதே போல் சந்திரன் இங்கு வந்துவழிபட்டு சாப விமோசம் பெற்றதாக புராணம் கூறுகிறது . இன்றும் இத்தலத்தில் உள்ள இறைவனை சந்திரன் தினமும் வழிபடுவதாக நம்பப்படுகிறது . ஜாதக ரீதியாக சந்திரன் உச்சம் நீசம் சத்ரு மற்றும் ரோக ஸ்தானத்தில் இருக்க பெற்றவர்கள் வணங்க வேண்டிய தலம் இது .

ரோகிணி திருவோணம் மற்றும் கடக ராசிக்காரர்கள் இந்த தலத்தில் வழிபாடு செய்யலாம் . சந்திர தோஷத்திற்கு பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் வழிபட்டால் விவசாயம் மற்றும் நீர் வளம் போன்றவையும் மேலோங்கும். ஒரு முறை தேவ லோகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை தீர்க்க இந்திரனும் வருணனும் இந்த தலத்தில் வழிபட்டு பரிகாரம் செய்தார்கள் . எனவே இந்த தலத்தில் வழிபட்டால் விவசாயம் செழிக்கும் .

பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள வாஸ்து நாள் கீழ் நோக்கு நாள் மற்றும் ஏர் கலப்பை பிடிக்க உகந்த நாள் போன்ற நாட்களில் கலப்பை மற்றும் விவசாய பொருட்களுக்கு மஞ்சள் குங்குமம் மற்றும் சந்தனம் வைத்து பூஜை செய்து விவசாயம் தொடங்குவது வழக்கமாக உள்ளது .

சந்திரன் நீர் ராசி , இந்த தலமும் சந்திரன் சம்பந்தப்பட்டது அதன் தாக்கம் இந்த கோவிலில் காண முடிகிறது எப்படி என்றால் கோயிலின் சந்திர கிணற்றில் வளர்பிறையில் நீர் பொங்கி பெருகுகிறது தேய்பிறையில் குறைகிறது. இந்த அதிசயம் இங்கு தவறாமல் நடக்கிறது .

சில வருடங்கள் முன்பு,  கார்த்திகை அம்மாவாசை அன்று ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில், உள்ள சந்திர தினத்தில் கங்கை பொங்கி வந்து கினறு நிரம்பி வழிந்தது. ஏராளமானவர்கள் வந்து தரிசித்தார்கள். இது தொடர்ந்து, கார்த்திகை அம்மாவசை அன்று தீர்த்த பூசை செய்து நீராடி வருவது தொடர்கிறது.

அட்சய த்ரிதியை அன்று இங்குள்ள இறைவனை வழிபடுவதால் குபேர சம்பத்து ஏற்படும், அன்று 64 பொருட்களால் பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இதை பிரசாதமாக உண்பதன் மூலம் அனைத்து விதமான உடல் குறைகள் நீங்கும்.
அன்று பகலில் விஷேச பூசைகள் வருடாவருடம் நடைபெற்று வருகிறது.

சூரியனார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் திருமாந்துறை, அட்சய நாத சுவாமியை வணங்க வேண்டும்.

பிறகு சூரியனார் கோயில் ஆலயத்தின் வடபுறம் உள்ள கைலாசநாதர் ஆலயம் (சூரிய தீர்த்தம் உள்ளது) வணங்கி செல்லவேண்டும்.

பிறகு, திருமங்கலக்குடி ஆலயமும் சேர்ந்து தரிசிப்பது மிகச்சிறப்பு.
மிகப் பழமையான ஆலயம் புரைமைத்து குடமுழுக்கு செய்யப்பட வேண்டிய சூழலில் உள்ளது.

ரதசப்தமியில் சுவாமி, அம்பாள் சந்தனகாப்பு அலங்காரம் சிறப்பு தரிசனம்.

பல முறை தரிசனம் செய்தும் மீள் தரிசனம்.
கார்த்திகை அம்மாவாசை தீர்த்தம்

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...