அருணாசலேஸ்வரர் -
தர்மசவர்த்தினி அம்பாள் (அபிதகுஜாம்பாள்). நெருப்புத்தலம்
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நகர் மற்றும் சுற்றிலும் சில புராதான தலங்களை பஞ்ச பூத தலங்களாக எண்ணி வணங்குகிறார்கள்.
💫முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த வந்த சிவனடியர் ஒருவர், சிவனடியார்கள் ஒரே நாளில் சமுத்திர நீராடி, பஞ்ச பூத ஸ்தலங்களை கண்டு சிவனை மனமுருகி வணங்கினால், வேண்டிய அருள் பெறலாம். எண்ணியது திண்ணம் பெறலாம். என்பதை உணர்ந்தார். இருந்தாலும், எவ்வாறு ஒரே நாளில் பஞ்ச பூத தலங்கள் சென்று வணங்குவது என்று எண்ணி மயங்கியபோது அடியார் முன் முனிவர் ஒருவர் வந்து வழிகாட்ட, அவ்வாரே சடையான் மேடு என்ற இடம் துவங்கி தஞ்சையின் மாரியம்மன் கோவில் வரை பெரிய ஏரி வெட்டி, அருகிலேயே பஞ்ச பூத தலங்களை அமைத்தார்.
பஞ்சபூத தலங்கள்:
1. கீழக்கோவில் பத்து (அம்மாப்பேட்டை) - பூலோக நாதரை பூமித் தலமாகவும்,
2. அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரரை நெருப்புத் தலமாகவும்,
3. காலஸ்தீஸ்வரன்பட்டி (சாலியமங்கலம்) காலஹஸ்த்திஸ்வரரை வாயு தலமாகவும்
4. நெல்லித்தோப்பு, பிரம்ம ஞானபுரீஸ்வரர் -வான் தலமாகவும்,
5. உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் ஆலயம், - நீர் தலமாகவும் அமைத்து வழிபடத் தெடங்கினார்.
பஞ்சபூத தலங்களில் இது நெருப்புத்தலம்.
⛳இருப்பிடம்
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில், அம்மாப்பேட்டை நகரில், வட கிழக்கு பகுதியில், அவளிவநல்லூர் (பாடல் தலம்) செல்லும் வழியில் உள்ளது.
கிழக்குப் பார்த்த ஆலயம்
🛕 ஆலய அமைப்பு:
ஆலயம் தென்புறம் ஒரு குளம் உள்ளது.
வடகரையில் கிழக்கு நோக்கிய பழம்பெருமை மிக்க ஆலயம்.
3 நிலை ராஜகோபுரம் தற்போது புதிதாக 2025 கும்பாபிஷேகம் போது கட்டப்பட்டுள்ளது.
ராஜகோபுரம் முன் கோபுரம் அருகில் இருபுறமும் ஒரு சிறிய விநாயகர், மற்றும் முருகர். உள்ளனர்.
ராஜகோபுரம் கடந்தவுடன் பலிபீடம் மற்றும் முன் மண்டபம்.
மன்டபத்தின் முகப்பில் விநாயகர், முருகர், சுவாமி அம்பாள் ரிஷபத்துடன் காட்சி தரும் அமைப்பும் உள்ளது.
மண்டபத்தில் சுவாமி நோக்கி ஒரு நந்தியும் உள்ளது. உள்நந்தி சுவாமி கருவரை அர்த்தமன்டபத்திலும் உள்ளது.
சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி (கருவரை களுடன்) சன்னதிகள் உண்டு.
சுவாமி கருவரை இடது புறம் தனி சன்னதியில் வீரமா காளியம்மன் சன்னதி சிறப்பு ஒன்றும் உள்ளது.
பிரகாரத்தில், நால்வர் சன்னதி , மேற்கு கன்னிமூலையில் தனி விநாயகர், மேற்கில் வள்ளி, தெய்வானையுடன் முருகர் சன்னதி, மேலும், காசிலிங்கம், மகாலெட்சுமி, ராமலிங்கம் மூன்றும் சேர்த்து, ஒரு சன்னதியும் உண்டு.
கோஷ்ட்டத்தில், நர்த்தன விநாயகர், தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கையம்மனுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பகுதியில், மேற்கு நோக்கியவாறு, தனி பைரவர், மற்றும், சனிஸ்வரர், பைரவர், சிவ சூரியன் மூவரைக் கொண்டு தனி சன்னதியும் உள்ளது.
🏵️ஆலய சிறப்பு:
அம்பாள் திருமுடிக்கு மேல், ஸ்ரீசக்கர பிரதிஸ்டை உள்ளது சிறப்பு.
வித்ரமாதித்ய மன்னன் வழிபட்ட வீரமாகாளியம்மன்,
ஸ்தலவிருஷம் வண்ணி மரம், மற்றும் விநாயகர், மேலும் வில்லேந்திய வேலவர், சோமஸ்கந்தர். இவர்களை
தனித்த சிறப்புகளால், பிரார்த்தனை செய்து பக்தர்கள் பரிகாரம் செய்து அருள் பெற்று வருகிறார்கள்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#Subbram🔱🇮🇳
ஆலயம் வரை சாலை வசதி உள்ளது.
நல்ல பராமரிப்புடன் உள்ளது. பூசை காலங்களில், சென்று தரிசிக்கலாம்.
வேறு எந்த கடைகள், வீடுகள் அருகில் இல்லை. வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.
அம்பாள் சன்னதி தெற்கு புறவாசல் வழியாக ஆலயம் உள்நுழைவு .
கும்பாபிஷேகம் 2025ல் நடைபெற்றவுடன், 15.09.2025ல் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் அருட்பணி மன்றத்தின் கடும் முயற்சியால், பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆலயம் புணரமைப்பு செய்யப்பட்டு, புதியராஜகோபுரம் ஏற்படுத்தப்பட்டு, ஆலயம் சீரமைக்கப்பட்டும் கும்பாபிஷேகம் பெருஞ்சிறப்பாக நடைபெற்றது.
10.07.25 பெளர்னமி முதல் ஆலயம் சுற்றி கிரிவலம் செல்கிறார்கள்.
18.2.2023 சிவராத்திரி / சனிபிரதோஷம் தரிசனம். மேலும், 28.10.23 அன்னாபிஷேகம். மற்றும் 8.3.26 ல் தரிசனம் செய்துள்ளோம்.
8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
No comments:
Post a Comment