Sunday, May 3, 2026

எட்டுக்குடி முருகன் கோவில்

எட்டுக்குடி முருகன் கோவில் 

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது
800 ஆண்டுகள் பழமையானது. இது ஆடிப்படை வீடு என்று போற்றப்படுகிறது. இத்தலத்தில் முருகன் மயில் மீது அமர்ந்து, வள்ளி-தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இரத்த ஓட்டத்துடன் இருப்பதாகக் கூறப்படும் சிலையும், பக்தர்களின் மனநிலைக்கு ஏற்ப மாறும் வடிவமும் இதன் தனிச்சிறப்பு.

முக்கிய தகவல்கள்:அமைவிடம்: நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில், சீராவட்டம் அருகே உள்ளது.
தல விருட்சம்: வன்னி மரம்.
தீர்த்தம்: சரவணப் பொய்கை.
திறந்திருக்கும் நேரம்: காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை 

சிறப்பு: இக்கோவிலில் முருகனுக்குப் போருக்குச் சென்ற நவ வீரர்களின் சிலைகளும் உள்ளன.
நிர்வாகம்: இது ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது (HR&CE).வழிபாட்டு முறைகள்:பக்தர்கள் வேண்டிய வரங்களை உடனே அருளும் சக்தி வாய்ந்த தலம்.சித்ரா பௌர்ணமி மற்றும் தேரோட்டம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது

🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்,

திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்,

 சம்பந்தர் மற்றும் அப்பர் பாடல் பெற்ற தேவாரத் தலம். சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான இது, அப்பருக்கு இறைவன் "வாய்மூரில் இருப்போம் வா" என்று உணர்த்திய சிறப்பைப் பெற்றது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கோயிலின் சிறப்பம்சங்கள்:மூலவர்: வாய்மூர்நாதர் (சுயம்பு மூர்த்தி).
அம்மன்: பாலினும் நன்மொழியம்மை.
தல விருட்சம்: பலா.
தீர்த்தம்: சூரிய தீர்த்தம்.

சப்த விடங்கத் தலம்: தியாகராஜருக்குரிய 7 விடங்கத் தலங்களில் இது மூன்றாவது தலம்.

பரிகாரம்: கண் நோய்களைத் தீர்க்கும் சிறப்பு வாய்ந்த தலமாகப் போற்றப்படுகிறது.

தனிச்சிறப்பு: பங்குனி மாதத்தில் சூரிய ஒளி இறைவனின் மீது படுவது தனிச்சிறப்பு.

அமைவிடம்:திருவாரூர் - வேதாரண்யம் சாலையில், திருவாரூரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது

அமைப்பு

இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்பாக குளம் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. கிழக்குச்சுற்றில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. வடபுறம் திருமறைக்காடு இறைவன் சன்னதியும் அம்மாள் சன்னதியும் காணப்படுகின்றன.

இத்தலத்திலுள்ள இறைவன் வாய்மூர்நாதர், இறைவி பாலினும் நன்மொழியாள்.

வழிபட்டோர்
பிரமன், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டுள்ளனர். வான்மீகநாதரும் வழிபட்டுள்ளார்.

🔱🇮🇳
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

திருக்குவளை / திருக்கோளிலி பிரம்மபுரீஸ்வரர் கோயில்

திருக்குவளை / திருக்கோளிலி 
பிரம்மபுரீஸ்வரர் கோயில்

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருளில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர், தாயார் வண்டமர் பூங்குழலம்மை. இத்தலத்தின் தலவிருட்சமாக தேத்தா மரமும், தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் உள்ளன. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி

பிரம்மபுரீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 123ஆவது சிவத்தலமாகும். 
பிரமபுரீசுவரர், கோளிலி நாதேசுவரர், (புற்றிடங்கொண்ட மூர்த்தியாக அமைந்துள்ளார்) 

ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றான திருத்தலம். இத்தலத்து தியாகராஜர் அவனி விடங்கத் தியாகர்,ஊழிப்பரன் என்றும் இவரது நடனம் வண்டு நடனம் என்றும் அறியப்படுகிறது

சிறப்பு
குண்டையூரில் சுந்தரர் பெற்ற நெல் திருவாரூர் பரவையார் இல்லத்திற்குச் செல்ல இறைவனார் அருள் புரிந்த திருத்தலம்.
நவக்கிரகங்கள் ஒன்பதும் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளன
வழிபட்டோர்
பிரமன், திருமால், முசுகுந்த சக்கரவர்த்தி,பஞ்ச பாண்டவர்கள், அகத்தியர், நவக்கிரகங்கள்

🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவில்

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவில்

தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர் கோவில் ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம்.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
தூத்துக்குடி திருசெந்தூர் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் 21KM தொலைவில் இக்கோயில் உள்ளது. தூத்துக்குடியிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.
தூத்துக்குடி, புதுக்கோட்டையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஆறுமுகமங்கலம் 

தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது 
இந்தக் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ளது.

 சுற்றிலும் கிராம தேவதைகளான தோப்பாச்சி அம்மன், இளைய நாயனார், சுடலை மாடன் ஆகிய கோயில்கள் வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் அமைந்துள்ளன. 

தலவரலாறு
கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்தின் வரலாறு கூறுகிறது. 
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் சோமாற வல்லபன். ஆயிரம் யாகங்கள் செய்தவன் எனப் போற்றப்பட்டவன். 
நர்மதை நதிக்கரையில் இருந்து ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான். 
ஆனால் அங்கு வந்தவர்களோ 999 பேர்தான் ஒரு பண்டிதர் குறைந்ததால் மன்னனின் மனதில் கவலை ஏற்பட்டது. 

தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை மனமுருக வேண்டிக் கொண்டார்.
சற்று நேரத்தில் ஓர் அந்தணர் அங்கு வந்து சேர்ந்தார். யாகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. நிறைவில் அந்தணர்கள் அனைவருக்கும் காணிக்கை சமர்ப்பித்து ஆசி பெற்றார் மன்னர். 1008-வது நபராக விநாயகரே பண்டிதராக புதிய அந்தணர் போல வடிவம் கொண்டு வந்து யாகத்தை நிறைவுசெய்தார். மன்னன் தொழுது வணங்க விநாயகப்பெருமான் காட்சி கொடுத்தார். 

யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுகமங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது. விநாயகப்பெருமான் ஆசி வழங்கி, தான் அந்த ஊரிலேயே கோயில் கொண்டு எழுந்தருளத் திருவுளம் கொண்டதாகச் சொல்லி அருளினார்.

மன்னனும் மகிழ்ந்து யாகத்தைப் பூர்த்தி செய்த விநாயகருக்கு ஆலயம் எழுப்பி வழிபட்டான். அந்தணர்களும் தாமிரபரணியிலிருந்து நீர் வரத்து இருந்ததால் அங்கேயே விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினர். 
1008-வது அந்தணராக பிள்ளையார் வந்ததால், ஆயிரத்தெண் விநாயகர் என்று திருப்பெயர் ஏற்றார் இந்தப் பிள்ளையார்.

அவர்கள் குடியிருந்த பகுதி 'சதுர்வேதிமங்கலம்' என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இங்கு முருகன் வழிபாடு சிறப்பானதால் 'ஆறுமுகமங்கலம்' எனப் பெயர் மாற்றம் கண்டது. 

ஆலய சிறப்பு💥
ஆதிசங்கரருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது, அவர் திருச்செந்தூர் சென்று சுப்ரமணிய புஜங்கம் பாடி, முருகனருளால் வயிற்றுவலி நீங்கப் பெற்றார் அல்லவா... அதற்கு முன்னதாக அவர் இந்தக் கோயிலுக்கு வந்து பிள்ளையாரை வழிபட்டு, கணேச பஞ்சரத்ன கீர்த்தனை பாடி வணங்கினார் என்கிறார்கள். இந்தப் பாடல்களின் ஓலைச்சுவடி, செப்புப்பட்டயத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்டு தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இது ஒரு முக்கியமான கோயிலாகும்.

💥பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். வைணவ ஆலயங்களில் நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. ஆனால்
விநாயகருக்குப் பிரதோஷ வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும் தலம்
108 அல்லது 1008 தேங்காய்கள் சாற்றி வழிபடுவது இவ்வாலயத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும்

ஆலய அமைப்பு🛕
மன்னர் காலத்திற்குப் பின் காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மனுக்கு தனிச்சன்னதிகள் அமைக்கப்பட்டு மண்டபம் கட்டப்பட்டது. பின் முருகன், வள்ளி, தெய்வானை சன்னதி கட்டப்பட்டது. பலரது உதவிகளால் விரிவாக்கப்பட்டு கோவில் இன்று ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. மண்டபத்தூணில் உள்ள ஆஞ்சநேயர் உருவம் சிறப்பு.
நுழைவாயிலைக் கடந்தால் கொடிமரம், மூஷிக வாகனம், மண்டபத்தில் சில படிகள் ஏறினால் கருவறைக்கு வடக்கில், தனிச் சந்நிதியில் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்கிறார் பஞ்சமுக விநாயகர். அவரை வணங்கிப் பணிந்து மகா மண்டபத்துக்குள் நுழைந்தால், ஆயிரத்தெண் விநாயகர் தரிசனம்.

மூலவர் சந்நிதியின் வலப்புறம் நடராஜரும் இடப்புறம் முருகனும் அருள்கிறார்கள். அதேபோல், காள ஹஸ்தீஸ்வரர், கல்யாண சுந்தரி அம்பிகை ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள்.

பஞ்சமுக நர்த்தன விநாயகரின் தோற்றம் அற்புதம். கேதுவின் அதிதேவதை விநாயகர் என்பதால் இது கேது பரிகார ஸ்தலமாகவும், காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி அம்மையுடன் காட்சி தருவதால் இது காலசர்ப்ப தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. 

திருவாவடுதுறை மடத்தினர், நாயக்க மன்னர்கள், அவர்கள் வழி வந்தவர்கள், பொதுமக்கள், உபயதாரர்கள் எனப் பலர் இந்த ஆலய வளர்ச்சிக்கு உதவி வருகின்றனர்
ஆலயத்தின் அருகே ஆடுதுறை மடத்தினரின் ஈசான மடம் அமைந்துள்ளது. அவர்களால் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. 

ஆலயத்தில் உள்ள பஞ்சலோகத்தாலான நடராஜர் சிலை கிரீடம், திருவாச்சியுடன் வெகு அழகாக விளங்குகிறது. ஆலயம் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பிரார்த்தணை🛐
வாகன விபத்து, பயண பிரச்சினை, வழக்கு இழுபறி ஆகியவை சுமூகமாக முடிய இந்த விநாயகரை வேண்டினால் நடந்துவிடும் என்று நம்பும் பக்தர்கள் அப்படி நடந்த பிறகு 1008,108 தேங்காய்களை உடைத்து 108 தீபங்களும் ஏற்றி வழிபடுகிறார்கள்.

பக்தர்கள் வேண்டிக்கொண்டு வேண்டுதல் நிறைவேறியதும் சன்னதியில் மணி கொண்டுவந்து கட்டுகின்றனர். 108 அல்லது 1008 தேங்காய் மாலை அணிவித்தும், தீபமேற்றியும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சிறப்பு ஹோமங்களும் செய்யப்படுகின்றன. தொழில் சிறக்க, குடும்ப வாழ்வு மேம்பட, திருமணத் தடை நீங்க, வீடு கட்ட, குழந்தை பிறக்க எனப் பல வேண்டுதல்களுடன் மக்கள் வந்து செல்கின்றனர், விநாயகர் மிகுந்த வரப்ரசாதி என்பதால் பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேற அருள் புரிகிறார்.
பலன்கள்⭐:
அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும் மோட்டார் வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்னை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை.

திருவிழா⭐
சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடக்கிறது. அமாவாசையன்று தீப வழிபாடு அற்புதக் காட்சி
சித்திரைத் திருவிழாவிழாவின் போது விநாயகருக்குப் பட்டாபிஷேகப் பெருவிழா இங்கே விசேஷமாக நடக்கும். அப்போது ‘கணேச
பஞ்ச ரத்ன கீர்த்தனை’ கொண்ட ஓலைச்சுவடி, செப்புப் பட்டயம் ஆகியவை வைக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அன்று மட்டும் ஓலைச்சுவடி - செப்புப் பட்டயத்தை பக்தர்களும் தரிசிக்கலாம்.

சித்திரை 7-ம் திருநாளன்று ஸ்ரீநடராஜ மூர்த்தியுடன் பஞ்சமுக கணபதி திரு வீதி உலா வருவார். 7-ம் நாளன்று விநாயகர் உருக்கு சட்ட சேவை, மாலையில் சிவப்பு சாத்தி நடராஜ பெருமானுக்கு எதிர்சேவை காட்சி வைபவம் நிகழும். 8-ம் நாளன்று காலையில் `வெள்ளை சாத்தி’ அலங்காரம், மாலையில் `பச்சை சாத்தி’ அலங்காரத்தில் அருள்வார். 10-ம் நாளன்று திருத்தேர் உலா நடைபெறும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:💥
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

கோயில் முகவரி:
அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர், திருக்கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் – 628 802.

🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ஏரல் அருகில்
🔱🇮🇳

பெருங்குளம் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் திருக்கோயில்.

பெருங்குளம் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் திருக்கோயில்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெருங்குளம் என்னும் ஊரில் திருவழுதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது

ஆலய சிறப்புகள்⭐
இந்த கோவில் பெருங்குளம் கிராமத்தில் திவ்ய தேசம் பெருமாள் மாயக்கூத்தர் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

இக்கோயில் பசுமையான நிலப்பரப்பின் நடுவில் அமைந்துள்ளதுடன், அமைதியான தியானத்திற்கு ஓர் நிம்மதியான புகலிடத்தையும் வழங்குகிறது. 

இக்கோயில், உத்தம பாண்டியன் என்றழைக்கப்பட்ட வழுது பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் காலத்தில் கட்டப்பட்டது (இருப்பினும், இது வரகுண பாண்டியனின் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற முரண்பட்ட தகவலும் உள்ளது ).

தமிழ் கவிஞரும் ஞானியுமான திருவள்ளுவரின் தலைசிறந்த படைப்பான திருக்குறளின் அரங்கேற்றம் இங்குதான் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது .
இத்தலம் வாலைக்குமரன் சித்தர், செங்கோல் ஆதீனம் போன்ற சிறப்புக்களுடன், பாண்டியர் கால கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது.

மூலவரின் பெயர் வழுது பாண்டியன் அல்லது இங்குள்ள திருவள்ளுவர் கதையிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது (ஆகையால் மூலவர் சில சமயங்களில் திருவள்ளுதீஸ்வரர் என்றும் குறிப்பிடப்படுகிறார்).
மண்டபங்களிலும் தூண்களிலும் தெளிவாகத் தெரிவது போல, இக்கோயில் செவ்வியல் பாண்டிய பாணி கட்டிடக்கலையால் நிறைந்துள்ளது . இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கோயில்களைப் போலவே, இக்கோயிலிலும் ராஜகோபுரம் இடம்பெறவில்லை, மாறாக மொட்டைக் கோபுரமே உள்ளது.

கோயில் வளாகம் ஒப்பீட்டளவில் பெரியதாக இருந்தாலும், கர்ப்பகிரகம் மிகவும் சிறியதாக உள்ளது. அர்த்த மண்டபத்திற்குப் பிறகு, அக்னி பிரகாரம் என்றழைக்கப்படும் ஒரு உள் பிரகாரம் உள்ளது, இது பிரத்தியேகமாக மூலவர் வழுதீஸ்வரருக்கென ஒதுக்கப்பட்டுள்ளது

இக்கோயிலில் அக்னி வளையம் மற்றும் சித்தர் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆலய அமைப்பு🛕

கிழக்கு நோக்கிய பெரும் ஆலயம்
மிக விசாலமான பரப்பளவில் பெரிய மதில் சுவரும் இருக்கிறது. இக்கோவிலில் இராஜ கோபுரம் இல்லை. காட்சி கோபுரத்தில் விநாயகர், சுவாமி அம்பாள் மற்றும் முருகர் உள்ள நுழைவு முன் மன்டப முகப்பில் சுதையில் உள்ளனர்
அடுத்து உள்ளே நுழைந்தால், இருபுறங்களும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி உள்ளனர்
நந்தி தனி மன்டபத்தில் ஆலயம் நோக்கியுள்ளார்
இங்கு உள்ள மூலவர் சன்னதி தரையில் இருந்து உயர்ந்து காணப்படுகிறது 
தென்புறம் அதிகார நந்தி மற்றும் சிவசூரியன் உள்ளார் 

தென்கிழக்கில் தீர்த்தக் கினறு ஒன்று உள்ளது.
சில படிகள் ஏறினால் நீண்ட உள் பிரகாரம் அதில் நடராஜர் தெற்கு நோக்கிய ஒரு சன்னதியில் உள்ளார். உற்சவர் சிலைகளும் பாதுகாப்புடன் உள்ளன.

மற்றும் நிருத்த மண்டபம் தாண்டி கிழக்கு நோக்கிய கருவரையில் சுவாமி திருவழுதீஸ்வரர் உன்னார் சிறிய முன் நந்தியும் உண்டு

கருவரை மிகவும் வித்தியாசமாக குறுகிய ஒரு உள் பிரகார அமைப்புடன் உள்ளது பிரம்மாண்ட அகலமான மூல கோபுரத்தோடு இருக்கிறது.
வேறு எங்கும் இல்லாத அமைப்பு.
முன்புறம் அனுஞை விநாயகர் மயில்வாகனத்துடன் பாலமுருகர் சிறிய அளவில் உள்ளனர்  

கோஷ்ட்ட பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி தெற்கு நோக்கி மிக உயரத்தில் உள்ளார். படிகள் அமைப்புகள் உண்டு.
பிரகார மண்டபத்தில் சப்தமாதர்கள் ஜுரதேவர் உள்ளனர் பிரகார கன்னி மூலையில் விநாயகர் அடுத்து சொக்கநாதர் மீனாட்சி நந்தியுடன் உள்ளார்.

வித்தியாசமான கருவரையின் உயர கோபுர அமைப்பில் வடகிழக்கு மூலையில் பைரவர் சுதையில் உள்ளார்

வடக்குப்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் தனி சன்னதி மற்றும் சனீஸ்வரர், பைரவர் உள்ளனர்
கிழக்கில் சிவசந்திரர் உள்ளார்.

சுவாமி ஆலயம் அடுத்து வலது புறம் கோமதி அம்பாள் தனி சன்னதி உள்ளது 
நீண்ட முன் மண்டபம் உள் மண்டபம் கடந்தால்
கிழக்கு நோக்கிய தனி கருவரையில் அம்பாள் நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகிறார்.
சிறிய முன் நந்தியும் உள்ளது

முன்மன்டபத்தில் வட பகுதியில் பள்ளியரையும்
தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய முனிவர் - திருவள்ளுவ நாயனார் - சிற்பமும் உள்ளது

பயண அனுபவக்குறிப்புகள்🕊️
ஆலய வளாகத்தில் சுற்றி மிகப் பெரிய மாமரங்கள் இன்றும் காய்கின்றன. ஆலய தென்கிழக்கில் அம்மன் ஆலய முன்புறம் அழகிய வடிவில் ஒரு குளம் உள்ளது. சுவாமி அம்பாள் ஆலய நடுவில் பிரகாரத்தில் பூமி அடிமட்ட சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.

இந்த கோவில் நன்கு பராமரிக்கப்பட்டு, அமைதியாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. 

மிகவும் பழமையான இந்த கோவிலில் கூட்டம் குறைவாக காணப்படுவதால் ஈசனை எந்தவித இடர்பாடுஇன்றி நிம்மதியாக தரிசிக்கலாம்

சுவாமி சன்னதிக்கு முன்பு இருக்கும் மேடையில் நிற்கும் போது வரும் காற்று மனதுக்கு அமைதி தருகிறது. கோவில் சுத்தமாக பராமரிப்பு செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் பக்தர்கள் வருகை குறைவு

கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த, இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்திப் பெற்ற சிவன் கோயிலாகும். 
கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஒரு கோயிலாகும்.
🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ஏரல் அருகில்
🔱🇮🇳

ஏரல் மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி ஆலயம்

ஏரல் மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி ஆலயம்

ஏரல் பிரதான சாலையில் உள்ளது. ஆலயம் கிழக்குப்பார்த்த ஆலயம்
திருமணக்கோலம் அமைப்பில் முகப்பு கோபுரம் அமைப்பு கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது.
உள் மன்டபத்தில் சுவாமி கிழக்குப்பார்த்தும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனிதனி கருவரைகள் ஏகப் பிரகாரம் சுவர்களில் நாயன்மார்கள் வரலாற்று ஓவியம் வடபுறத்தில் தெய்வப்படங்களும் உள்ளன.
கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தியும்
கன்னி மூலையில் தனி அய்யப்பன் சன்னதி னுடன் சிறிய விநாயகர் 
மேற்கு பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய பெருமாள் லெட்சுமியுடன் தனி சன்னதி எதிரில் அனுமார் சன்னதி உள்ளது.
சண்டிகேஸ்வரர் உள்ளார்.

நவகிரகங்கள் தனி மண்டபத்தில் மற்றும் பைரவர் உள்ளனர் சிறிய ஆலயம்
தனியாருக்குச் சொந்தமான ஆலயம்
தூய்மையாகவும் பூசை விழாக்களுடனும் ஆலயம் பொலிவுடன் உள்ளது.
🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ஏரல் அருகில்
🔱🇮🇳

அங்கமங்கலம் நரசிங்க நாதர் ஆலயம்

அங்கமங்கலம் நரசிங்க நாதர் ஆலயம்

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மேற்குப்பார்த்த புராதான சிவாலயம்

அமைவிடம்:⛳
 தூத்துக்குடி மாவட்டத்தில், ஏரல் தாலுக்கா ஆழ்வார் திருநகரி வட்டத்தில் அங்கமங்கலம் என்ற கிராமத்தில்  இந்த நரசிங்க நாதர் ஆலயம் அமைந்துள்ளது அன்னை அருள்மிகு ஆவுடையம்மாள்

தல சிறப்பு / வரலாறு
நரசிங்கநாதர் கோவில் ஒரு பழமையான மற்றும் தனித்துவமான சிவத்தலமாகும். இது மேற்கு நோக்கிய சிவாலயமாகவும், சைவ-வைணவ
ஒற்றுமையை விளக்கும் தலமாகவும் போற்றப்படுகிறது.
நரசிம்மர்கோபம் தீரவும் தன் கடமையினை தொடரவும் ஒரு ஆழ்ந்த பூஜை தேவைப்பட்டது
நரசிம்மமரின் தங்கை அன்னபூரணி ஒரு தீர்த்தம் உருவாக்கி அங்கே சிவலிங்கமும் உருவாக்கி அவரை பூஜை செய்ய சொன்னாள்
அங்கு பூஜை செய்தார் நரசிம்மர், இரணியன் அசுரன் சந்தேகமில்லை ஆனால் அவன் மாபெரும் பக்தன் பிரம்மாவிடம் வரம் எற்ற பக்தன் என்பதால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது
அந்த தோஷத்தை போக்கி தன் ஆவேசத்தை போக்கி இங்கு தன் அவதாரம் முடித்து அமைதியாக தன் இடம் சென்றார்

அவர் பாவம் போக்கிய தலமே அங்க மங்கலம், அன்னை உருவாக்கிய சிவலிங்கமே நரசிங்க நாதர்

இந்த ஆலயம் கிரியா தலம், அதாவது இந்த லிங்கம் கிரியா லிங்கம் என அழைக்கபடுகின்றது, அதாவது படைப்பு தத்துவம்
இந்த ஆலயத்தில் வழிபட்டால் அங்கம் நலமாகும் வாழ்வு மங்கலமாகும், அதனாலே இது அங்க மங்கலமாயிற்று

ஆலய அமைப்பு🛕
சமீபத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டு ஆலயம் பொலிவுடன் உள்ளது.
ராஜகோபுரம் கொடி மரம் கிடையாது. பலீபீடம் உள்ளது அடுத்து சுவாமி மேற்கு பார்த்த ஆலயம்
ஏகப் பிரகாரம்   முழு அளவிலான கற்றளி ஆலயம்   
கன்னி மூலையில் விநாயகர் சன்னதி
வடமேற்கில் வாகன மண்டபம்  வடக்குப்
பிரகாரத்தில் வள்ளி தெய்வாணை முருகர் தனி சன்னதி மற்றும் அகத்தியர் சனீஸ்வரர், வடகிழக்கு மூலையில் பைரவர் தென்கிழக்கில் சூரியன் தனி தனி சன்னதிகளில் உள்ளனர்
சன்டிகேஸ்வரர் உள்ளார்

கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி
உள்ளார் இங்குள்ள தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வர வடிவில் வீற்றிருப்பது மிகவும் அரிதானது.

ஆலய தென் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி
தனி கருவரை அம்பாள் ஆவுடையம்பாள் 

சுவாமி ஆலயம் முகப்பில்  உள் முன் மண்டப முகப்பில் சுவாமி அம்பாள், விநாயகர் முருகர் சுதையில் உள்ளனர் அடுத்து முன்மண்டபம் கடந்தால் உள் மன்டபத்தில் தனி கருவரையில் மேற்கு நோக்கி சுவாமி நரசிங்கநாதர் தனி கருவரையில் மேற்குப்பார்த்து உள்ளார்
 சுவாமியை நோக்கிய ஒரு சிறிய நந்தியம் பெருமான் உள்ளார்    கருவரை முன் துவாரபாலகர்கள் உள்ளனர்.   நடராஜர் சன்னதியும் உள்ளது 

தரிசனபலன்கள்
'இந்த சிவன் நல்ல கர்மாவினை செய்ய கெட்டதை அழித்து தருவார், அந்த நரசிம்ம சாஸ்தா எல்லா வகை அருளையும் தருவார், நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் , நல்ல கர்மா நல்ல சிந்தனையுடன் வந்து சேரும் எல்லோருக்கும் வழிகாட்டும், எல்லோருக்கும் பயனடையும் வெகு உயர்ந்த வாழ்வினை வாழ்ந்து தெய்வமாய் வழிகாட்டி நிற்பீர்கள், "

பயண அனுபவக்குறிப்புகள்🕊️

இந்து அறநிலையத்துறையின் ஆலயம்
ஊர் பெருமக்கள், மற்றும் அடியார் பராமரிப்பில் பூசையில் உள்ள ஆலயம்
முன் தகவல் கொடுத்து தரிசிக்க வேண்டிய புராதான தலம்

ஆலயம் ஒரு அமைதியான இடத்தில் உள்ளது. ஆலய வளாகத்தில் மரங்கள் அதிகம் காணப்படுகின்றதால், குளுமையாகவும், அமைதியாகவும் உள்ளது.

ஆலய முன்புறம் வாகனங்கள் நிறுத்த இடங்கள் உள்ளன

26.04.26 சுப்ராம்  தரிசனம்
🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ஏரல் அருகில்
🔱🇮🇳

இராஜபதி - சௌந்தர நாயகி சமேத கைலாச நாதர் ஆலயம் நவகைலாச ஆலயங்களில் இது கேதுஸ்தலம்.

இராஜபதி - சௌந்தர நாயகி சமேத கைலாச நாதர் ஆலயம் நவகைலாச ஆலயங்களில் இது கேதுஸ்தலம்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் - தென் காளஹஸ்தி ராஜபதி கேது தலமாகப் போற்றப்படுகிறது. 

அமைவிடம்⛳
இந்தத் திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜபதி என்ற ஊரில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் உள்ள குரும்பூர் என்ற ஊரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இராஜபதி கைலாசநாதர் கோவில். 
இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. இச்சிவாலயம் நவகைலாயங்களில் 8வது தலம்.

தலவரலாறு📚
அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பினார். தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டபோது அவர், தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று தனது சீடருக்கு உபாயம் சொன்னார். உரோமச முனிவர் 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டு, அந்த மலர்களை தொடர்ந்து சென்றார். அந்த தாமரை மலர்கள் ஒதுங்கிய தலங்களில் வழிபட்டு, உரோமச முனிவர் முக்தி அடைந்தார். அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உரோமச முனிவரால் மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது.

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 
4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம்
7. தென்திருப்பேரை 8. ராஜாதிபதி
9. சேர்ந்தபூமங்கலம் ஆகிய கோவில்கள், நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு🛕
ராஜபதி ஆலயம் சிதலமடைந்து விட்டது தற்போது முழு அளவில் புனருத்திரானம் செய்யப்பட்டு புதிய 5 நிலை ராஜ கோபுரத்துடன் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆலய முன்பகுதியில் 5 நிலை
ராஜகோபுரம் கடந்து ஆலயம் உள் நுழைவில் சூரியன் சந்திரன் அடுத்துள்ளது
கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன
கிழக்கு முன் பகுதியில் கண்ணப்ப நாயனாருக்கு 4.5 அடி உயரத்தில் தனிச் சன்னதி
குடுமித் தேவர் உள்ளார். மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று இவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

ஆலயம் முன்பகுதி முழுமையும் அழகிய கூரையால் மூடப்பட்டு உள்ளது 
நவகிரகலிங்கம் தனி மண்டபத்துடன் உள்ளது
சுவாமி கருவரை முன் முன் மன்டபத்தின் முகப்பில் திருக்கல்யாண காட்சிக் கோலம் சுதை வடிவத்தில் உள்ளது

சுவாமி கருவரை உள் மண்டபத்தில்
ஒரு முன் நந்தியுடன் துவாரபாலகர்களுடன் கிழக்கு நோக்கி அருள் தருகிறார்

கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மன் தனி சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளனர்.

பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் தொடர்ந்து கேது விநாயகர் மற்றும் கேதீஸ்வர், கௌரி அம்மை அமைந்துள்ளனர் காளத்தி விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் முருகர் தனி சன்னதியில் உள்ளனர்  

மேற்கு பிரகாரத்தில் ஆதிகைலாசநாதர் மற்றும் காளத்தீஸ்வரர் சன்னதியும் உள்ளன

சுவாமி அடுத்து தனி மண்டபத்துடன் கருவரை சன்னதியில் கிழக்கு நோக்கி சௌந்தரநாயகி அம்மன் உள்ளார். முன் நந்தி உள்ளது பள்ளியறையும் உள்ளது

வடகிழக்கில் தனி பைரவர் சன்னதியும் உள்ளது

நவலிங்க சன்னதி: பொதுவாகக் கோயில்களில் நவகிரக சன்னதி இருக்கும். ஆனால், இங்கு நவகிரகங்களுக்குப் பதிலாக ஒன்பது லிங்கங்கள் (நவலிங்கம்) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

💥ஆலயசிறப்புகள்
சுய அபிஷேகம்: பக்தர்கள் தங்கள் கைகளாலேயே நவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து தோஷ நிவர்த்தி செய்துகொள்ளும் வசதி இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். இங்கு நவ லிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இப்படி நவகிரகங்கள் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இந்த லிங்க வடிவில் இருக்கும் நவகிரகங்களுக்கு பக்தர்கள் தம் கைகளாலேயே அபிஷேகம் செய்யலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்

திருமணத் தடை & பிதுர் தோஷம்: நீண்ட நாள் திருமணத் தடை உள்ளவர்கள் மற்றும் பிதுர் தோஷம் நீங்க விரும்புவோர் இங்குப் பரிகார பூஜைகள் செய்கின்றனர்.

​மரண பயம் & நரம்பு வியாதிகள்: மரண பயம் நீங்கவும், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகவும் இத்தல வழிபாடு சிறந்ததாகக் கருதப்படுகிறது.

​💥முக்கியத் திருவிழாக்கள்:
​மகா சிவராத்திரி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம், பிரதோஷம் மற்றும் கார்த்திகை சோம வாரங்களில் (108 சங்காபிஷேகம்) சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தல விருட்சம்: நெல்லி மரம்
​தீர்த்தம்: பாலாவி தீர்த்தம்

பயண அனுபவக்குறிப்புகள்🕊️
ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாகக் கருதப்படுவதால், இது "தென் காளஹஸ்தி" என்று அழைக்கப்படுகிறது.

இத்திருக்கோயிலை வழிபடுவது கும்பகோணம் அருகில் உள்ள, கேதுத் தலமான கீழப்பெரும்பள்ளம் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது.

26.4.26 இன்று வருஷாபிஷேகம் அன்று தரிசனம் பெற்றோம்

குரும்பூரிலிருந்து ஏரல் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ராஜபதி ஆலயம் சாலை மிகவும் குறுகியது தாமிரபரணி கிளை ஓடைக்கரையில் பாதை.
ராஜபதி ஆலயம் அருகில் வேறு கடைகள் எதுவும் இல்லை
ஆலயம் முழுவதும் தூய்மையாக நல்ல பராமரிப்பில் உள்ளது பத்தர்கள் பிரார்த்தணை செய்து வழிபட்டு பலன்பெற்று செல்கிறார்கள்

நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ஏரல் அருகில்
🔱🇮🇳

திருச்செந்தூர் ஆனந்தவல்லி அம்மன் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம்

திருச்செந்தூர்
ஆனந்தவல்லி அம்மன் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் 

திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி ஆலய மேற்கு நுழைவு வாயில் எதிரில் உள்ள பழமையான சிவ தலம்

திருச்செந்தூர் முருகாலயத்திற்கும் முற்பட்ட ஆலயமாக திகழும், சற்றே பிரமாண்டமான 
நீண்ட மண்டபங்கள் கடந்து சற்று உயரமான வா அலங்கார மண்டபம் அதை அடுத்து நீண்ட உள் மன்டபம் சுவாமி கிழக்குப்பார்த்த அமைப்பு
இச்சிவத்தலத்தின் கருவறையில், ஈசன்,சுயம்பு லிங்க மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார்.

சுவாமி முன் மன்டபத்தின் வடபுறம் தனி நடராஜர் 
அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி கருவரை அடுத்து வடபுறம் கிழக்கு நோக்கி அம்பாள் சன்னதி உள்ளது. அம்பிகை ஶ்ரீ ஆனந்தவல்லி தனி சன்னதியில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அழகு திருக்காட்சியளிக்கிறாள்.

இரண்டு கருவரைகளையும் ஏகமாய் வலம் வரலாம்.
கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி வடபுறம் தனி சன்டிகேஸ்வரர் உள்ளனர்

அடுத்துள்ள வெளிப் பிரகாரத்தில் வடபுறம் கிழக்கு நோக்கிய கல்யாண விநாயகர் தனி சன்னதியில் உள்ளார்.

இரவில் அர்த்தஜாம பூசையில் அம்பாள் சன்னதியிலிருந்து அம்பாள் புறப்பட்டு சுவாமி சன்னதிக்கு வரும் நடைமுறை சுவாமி ஜோதியாக இருப்பதால், இந்தமுறையில் நடைபெறுகிறதாக குறிப்பிட்டனர்.

கால பூசையில், சுவாமி அம்பாள் பால் அபிஷேகம் பிறகு அலங்காரம் பூசைகள் சுவாமி நடராஜர் அம்பாள் என்ற பூசைகள் வரிசை

இவ்வாலத்தில் திருமணங்கள் முதலிய சுபகாரியங்கள் நடந்து வருகின்றன
திருமணம் வரம் அமைய, ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் தனி சன்னதியில் அமர்ந்திருக்கும் ஶ்ரீ கல்யாண விநாயகர் தரிசனமும், வளம்பெற அருகிலேயே
சிறு சன்னதியின் மிகச்சிறு 'கருவறையில்', ஶ்ரீ லக்ஷ்மி தாயார் சமேதராய் சயன திருக்கோலமாக வீற்றிருக்கும் ஶ்ரீ பள்ளி கொண்ட பெருமாள் தரிசனம் காண்பதும் சிறப்பு.

1995, 2009, ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
கருப்புசாமி பேச்சியம்மன் முதலிய வழிபடு தெய்வங்களும் ஆலய முன்பகுதி தூண்களில் உள்ளன.

பரபரப்பான ஊரின் மத்தியில், ராஜகோபுரம் இல்லாத, அமைதியும் பழமையும் மிகுந்த இந்த பெரிய சிவாலயத்தை, உள்ளூர் மக்கள் மற்றும் சிவத்தொண்டர்களைத்தவிர, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இத்தலம்தான், ஆதி முருகன் கோயில் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆவணி மூலம் மற்றும் மாசி மகம் அன்றைய நாட்களில், திருச்செந்தூர் ஆலயத்திலிருக்கும் ஆறுமுகப்பெருமான் இச்சிவத்தலத்தில் எழுந்தருள்வதும், அவருக்கு 48-பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவதும், ஆறுமுகனார் பச்சை சாத்தி பச்சை சப்பரத்தில் எழுந்தருளி ஶ்ரீ மகாவிஷ்ணுவாக மக்களுக்கு அருள்பாலித்து, பின்பு நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்து மீண்டும் திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கே எழுந்தருள்வதும் மிகவும் சிறப்புமிகு விழாகாலமாகும்.
சிவராத்திரி, நவராத்திரி. என, சிவபெருமான் தம்பதியருக்கு உரிய அத்தனை விழாக்களும் தவறாமல், இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடைபெறுவது தல விசேஷம்.

26.04.26 அன்று காலசந்தி பூசை தரிசனம் கிடைத்தது.
நிறைவான பயனம் இனிதாக புறப்பட்டோம்.
எத்தனை முறை வந்தாலும்
கருணைக்கடல் அருள் இருந்தால் மட்டுமே எல்லாம் பெறலாம்.
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

திருச்செந்தூர் மூவர் சமாதி வைகுண்ட பதி துண்டுகை விநாயகர்

திருச்செந்தூர்
மூவர் சமாதி
திருச்செந்தூர் ஆலயத்தின் தென்புறம் அமைந்துள்ள நாழிக்கினறு தாண்டி அமைக்கப்பட்டுவரும் நடை பாதையில் 200 மீட்டர் தூரம் சென்று மூவர் சமாதி தரிசித்தோம்

மௌன சாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமி இம்மூவர்களும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தை ஆதிகாலத்தில் புரைமைப்பு செய்து பராமரித்தவர்கள். இவர்களுடைய சிலைகள் ஆலயத்தின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது.
செந்தூர் கடற்கரையில் இவர்களின் ஜீவசமாதிகள் உள்ளது. இங்குள்ள பனை மரங்கள் மட்டுமே இந்த இடத்தை அடையாளம் காணக்கூடிய அளவில் இருந்தன. 
தனித்தனி ஆலய அமைப்பில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைத்து சுற்று சுவருடன் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் அடியார் முயற்சிகளால் இவைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போது இந்த இடங்கள் முழுவதுமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது ஆலயத்திலிருந்து நாழிகினறு வழியாக புதிய நடை பாதை அமைத்தும், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டும், ஆலயப்பகுதி முழுவதுமாகப் புனரமைப்பும் பல்வேறு பணிகளும் செய்யப்பட்டு வருகிறது

திருச்செந்தூர்
அய்யா வைகுண்டர்பதி
திருச்செந்தூர் ஆலயம் தென்புறத்தில் உள்ள அய்யா வைகுண்டர்பதி தற்காலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆலயம்.
மூவர் சமாதியிலிருந்து 100 மீட்டர் தென்பகுதியில் உள்ளது.
அய்யா வைகுண்டர் சிவன் விஷ்ணு பிரும்மா மூவரின் அம்சமுமாக புதிய அவதாரம் செய்து நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
இந்த ஆலயம் மிகப்பெரிய மண்டபத்துடன் கூடியது. கருவறையில் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் அலங்கார வேல் உள்ளது. கருவரை சுற்றிவர ஆண்கள் மேல் ஆடைகள் கழற்றிக்கொண்டு சென்று தரிசித்து வர வேண்டும்

அய்யா வைகுண்டர்பதி ஆலயம் மிக அருகில் தனித்தனியாக 3 ஜீவசமாதிகள் உள்ளன.

சம்ஹார மூர்த்தி, ஆவுடையப்பர், சங்கர சுவாமிகள் என்று மூன்று மடங்கள் உள்ளன. 
இவையெல்லாம் தனியார் அறக்கட்டளைகள் மூலம் ஏற்படுத்தி பரிபாலணை செய்யப்பட்டுவருகிறது.

திருச்செந்தூர்
துண்டுகைவிநாயகர் ஆலயம்
 திருச்செந்தூர் ஆலயம் மேற்கு வாசல் வழியாக சுப்பிரமணியர் ஆலயம் செல்லும் வழியில் துண்டுகைவிநாயகர் ஆலயம் உள்ளது
பிரதான சாலையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலிலிருந்து முருகன் கோவில் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது.

இவ்விநாயகப் பெருமான் தம் தம்பியாகிய செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிக்கும் வகையில் எழுந்தருளியுள்ளதால் இப்பெயர் பெற்று விளங்குகின்றார். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முதலில் தூண்டுகை விநாயகரை வணங்கி தேங்காய் உடைத்து விட்டு, பின்பு முருகனை தரிசிப்பது என்பது வழக்கமாக உள்ளது. முருகனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் தூண்டுகை விநாயகர் கோயிலில் இருந்துதான் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வருகின்றனர்.

திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தபோது, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு நிதி தட்டுப்பாடு இருந்தது. எனவே கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி பிரசாதத்தை பன்னீர் இலைகளில் வைத்து சம்பளமாக கொடுத்தனர். வேலை நாளின் முடிவில் தூண்டுகை விநாயகரிடம் பிரார்த்தனை செய்த பிறகு, தொழிலாளர்கள் பன்னீர் இலை விபூதி பொட்டலத்தைத் திறந்து பார்த்தால், அதில் இருக்கும் விபூதியானது அன்றைய தினம் அவர்கள் செய்த வேலைக்கு ஏற்ப தங்க நாணயங்களாக மாறி இருக்கும் அதிசயம் நிகழ்ந்தது.

ஆலயம் சிறிய முன் மன்டபமும் முகமன்டபம்முன்பு விநாயகர் சிலையும் உள்ளது.
கிழக்கு நோக்கிய கருவரையில் விநாயகர் அருள்புரிகிறார். பின்புறம் உள்ள ஆலய தலமரத்தில் ஏராளமான பிரார்த்தனை குழந்தை தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன.

25.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்

திருச்செந்தூர்
 ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர் ஆகும். 

பலமுறை வந்து தரிசனம் பெற்றாலும் ஒவ்வொரு பயணத்தையும் சிறப்பு செய்வது கண்கண்ட தெய்வம் செந்திலாண்டவர் கருணையே.

பயண அனுபவக்குறிப்புகள்
சுப்ராம் 🔱🇮🇳 26.04.26
விடியற்காலை 3.30 க்கு சிறப்பு தரிசனம் ரூ 100/- வரிசையில் நுழைந்தோம். பொருள் வைப்பு அறை 4.30 க்குத்தான் திறப்பார்கள் என்று கூறியதால், உடமைகளுடன், கைப்பேசி எல்லாவற்றையும் சுமந்து கொண்டே வரிசையில் நின்று 5.30 அளவில் விஸ்வரூப தரிசனம் மிகவும் அற்புதமாக கிடைத்தது நிதானமாக மிகவும் திருப்தியாக அருகில் நின்று தரிசனம் பெற்றோம். 
மேலும், ஜெயந்திநாதர், சண்முகர் தரிசனம் முடித்து, இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சூரனை வதம் செய்யும் சத்ருசம்ஹார மூர்த்தி முருகரை அபிஷேகத்துடன் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  
மேலும், ஆலய முதல் பிரகாரத்தில் உள்ள தட்சினாமூர்த்தி வள்ளி தெய்வாணை சஷ்ட்டி மண்டபம் மற்றும் சண்டிகேஸ்வரர், நடராஜர், பைரவர் தரிசித்து கொடி மரம் வணங்கி இரண்டாம் பிரகாரம் சகஸ்கரலிங்கம் சம்ஹார மூர்த்தி விநாயகர்பெருமாள் பெருமாள் தரிசனம் செய்து ஆலயம் வலம் வந்து காலை 6.00 மணி அளவில் கோவில்யானை தென்புறம் கோபுரம் அருகில் வணங்கும் காட்சியையும் கண்டோம். 

அடுத்து நாழி கினறு நடை பாதையில் சென்று, மூவர் சமாதி தரிசித்து, அடுத்து 100 மீட்டர் தூரத்தில் தற்போதுள்ள எழுப்பப்பட்டுள்ள அய்யா வைகுண்டர் பதி சென்று தரிசித்து பக்கத்தில் உள்ள சத்ருசம்ஹர மூர்த்தி மடம், ஆவுடையப்பர் மடம், சங்கர சுவாமி மடங்களையும் தரிசித்தோம்.

மேலும், ஆலயம் வந்து மேற்கு வழி பாதையில் சென்று துண்டுகைவிநாயகர் ஆலயம்
தரிசித்தோம்

பிறகு, ஆலய மேற்குமுன் நுழைவு வளைவுக்கு எதிரில் உள்ள பழமையான 
சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் சென்று கால பூசை தொழுது பின் எங்கள் வாகனம் சென்று அடைந்தோம்.

நிறைவான தரிசனம் தந்து மகிழ்வுடன் பயணம் நிறைவு செய்ய கருணை கடலின் அன்புதான் முழுமுதல் காரணமாகும். நன்றி நன்றி🛐🙏🛐

திருச்செந்தூர் தரிசனத்திற்கு செல்பவர்களுக்கு மேலும் சில குறிப்புகள்

ஆலய தரிசன வசதிகள்

⚡பேருந்து, ரயில் பயணிகள் இறங்கும் இடங்களில் இருந்து ஆலயம் தென்புறம் அருகில் வர வாகன வசதிகள் உண்டு
முடிந்தவர்கள் நடந்து வந்து மேற்கு புற ஆலய நுழைவு வாயில் வழியாகவும் வரலாம்.
⚡வாகனங்கள் ஆலய தென்புறம் நிறுத்த இடம் இருந்தாலும், வேன்கள் சிறிய பேருந்துகளை தெப்பக்குளம் அருகில் நிறுத்த செய்யப்படுகிறது.

⭐சுப்பிரமணியர் ஆலயம் வரும் வழிப்பாதையில் இரண்டு புறமும் கடைகள் பல்வேறு ஆதின மடங்கள், மற்றும் பல்வேறு சாதி இனத்தாருக்குச் சொந்தமான மடங்கள் தங்கும் வசதியுடன் கூடிய இடங்கள் பொருட்கள் வைப்பு அறைகள், குளியல் அறைகள் முதலிய வசதிகள் ஏராளம் உள்ளன. பக்தர்கள் பொருட்களை / உடமைகளை பத்திரமாக வைத்துவிட்டு ஆலய தரிசனம் செய்து வரலாம். தங்குவதற்கும் வசதிகள் உண்டு வாடகை விபரங்கள் விசாரித்துக் கொள்ளலாம்.

⭐ஆலயம் சார்பாக, ஆலயம் தென்புறம் ஆலயவளாகத்திலும் பக்தர்கள் நலமாக தங்குவதற்கு புதிய புதிய கட்டிட அமைப்புகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது ஆதார் அட்டை காட்டி அறைகள் முன்பதிவு செய்யலாம் online மூலமாகவும் செய்து கொள்ளலாம் 

⭐இலவசமாக பொருட்கள் பாதுகாப்பு இடங்கள் இலவச அன்னக்கூடம், இலவச முடி வெட்டிக்கொள்ளும் இடங்கள் இலவச கழிப்பிடங்கள் இலவச குளியல் இடங்கள் முதலிய பல வசதிகள் உண்டு 

⚡தனியார் உணவு சாலைகள், தேநீர் கடைகள், ஆலய பொருட்கள் விற்பனை கடைகள் ஏராளமாக உள்ளன.

💥தரிசனம்
⚡இலவச தரிசனம் தனி வரிசை ஆலயம் வட பகுதியில் சென்று வரிசையில் வர வேண்டும்.

⚡சிறப்பு நுழைவு வரிசையில் ரூ 100/- கட்டனம் கட்டி வரிசையில் சென்று ஆலயம் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்

⚡முதியோர்கள் முக்கிய பிரமுகர்கள் ஆலய தென்புற பிரதான வாசல்வழியில் ஆதார் அட்டை அடையாளம் மூலமாக அனுமதிக்கப்பட்டு நேரடியாக ஆலயம் உள் சென்று தனி வரிசையில் தரிசனம் செய்விக்கப்படுகிறர்கள் 
(காலை 7.30 மணி முதல் என்று கூறுகிறார்கள்)

⚡அர்ச்சணைப் பொருட்கள் தேங்காய் பழம் முதலியவைகளுக்குப் பதிலாக சுவாமிக்கு வேல் மலர்மாலை முதலியவை சமர்ப்பித்து நேரடியாக சங்கல்ப அர்ச்சனை செய்து கொள்கிறார்கள்.
⚡ஆண்கள் பனியன் முதலிய மேல் சட்டைகள் அணிந்து தரிசிக்க அனுமதி இல்லை 

💥சாதாரணமாக வரிசையில் உள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்து ஆலயம் வெளியில் வர குறைந்தபட்சம் சுமார் 3 மனி நேரம் ஆகலாம் வரிசையில் உள்ளே வேறு எந்த வித வசதிகளும் கிடையாது. அவசரமாக வெளியில் வருவது கடினம்.

மிக முக்கியம்
💥குழந்தைகள் முதியவர்கள் சிகிச்சையில் உள்ளவர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் முன்னேற்பாடுகளுடனும் தரிசனத்திற்கு செல்வது மிகவும் அவசியம்

💥சாதாரண நாட்களில் கூட எங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் எந்த ஒரு செயல்பாட்டிற்கும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்
முருகன் திருவருள்🔱
நன்றி🙏

25.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

காயல்பட்டினம் மெய்கண்டீஸ்வரர் கோயில்

காயல்பட்டினம் மெய்கண்டீஸ்வரர் கோயில் 

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான சிவன் கோயில் ஆகும்.

காயல்பட்டினம்;
முற்கால பாண்டியர் ஆட்சிகாலத்தில்,
மதுரை தலைநகரமாகவும், காயல்பட்டினம் அதன் துறைமுகமாகவும் திகழ்ந்ததாம்.

ஆலய அமைப்பு🛕
தென் தமிழ்நாட்டின் நவ லிங்கபுரங்களில் ஒன்றாகும். 
கோயில் சிறப்பம்சங்கள்:
மூலவர்: மெய்கண்டீஸ்வரர் /மெய்கண்டேஸ்வரர் (சிவன்).
மேற்கு பார்த்த சிவஸ்தலம்
முன் பகுதி கூறை அமைக்கப்பட்டுள்ளது.
உள்மன்டபம் கற்றளியாக உள்ளது.
மேல் விதானம் முழுதும் அழகிய சிறிய அளவில் புராதன சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருவரையில்  சுமார்1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவராக லிங்க வடிவில் மெய்கண்டீஸ்வரர் அருட்காட்சியளிக்கிறார்.
அவருக்கு முன்பாக நந்தியம்பெருமாள் அமைந்து இருக்கிறார்.  மீதி ஆலய இடங்கள் எழுப்பப்பட வேண்டியதுள்ளது.

பிள்ளயார் அம்மன் வழிபாடு இல்லாத கோவில். உள் மன்பத்தில் வடபுறம் நடுவில் நடராஜர் சன்னதியில் ஒரு சிறிய உலோக நடராஜர் திவ்யமாய் இருந்து அருள்பாலிக்கிறார்.
மிகவும் அமைதியாக உள்ளது  
ஆலயம் வெளிமண்டபம் பெரிய Shed போடப்பட்டு தனி கதவுடன் உள்ளது
அம்மனுக்கு தனி சன்னதி கிழக்குப்புறத்தில் சிறிய கட்டிடம் ஆரம்ப வேலையில் உள்ளது

பிரதோஷம் நடைபெறுவதாக தெரிகிறது.
பிற மதத்தவர்கள்  வீடுகள் சூழ அமைந்துள்ளார்
அடியவர்கள் பெருமுயற்சியில் வழிபாடு பூசைகள் நடைபெற்று வருகின்றன.
முழுவதுமான மீட்பும் வழிபாடுகள் சிறக்கவும் இறைவன் அருள்புரிய வேண்டும்

அருகில் உள்ள பழமையான  கணபதீஸ்வரர் சிவாலயம் திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலய நிர்வாகத்தில் உள்ளது என்று கூறுகிறார்கள்.   தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன
உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் முற்றிலும் அறியப்படாத மிகவும் பழமையான ஆலயங்களில் இத்தலமும் ஒன்று.
🔱
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🔱🇮🇳
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில்கள்,
நீண்டகாலமாக திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு விழாவினை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

பிரதோஷ வழிபாடு தவிர, மற்ற நேரங்களில்
பக்தர்கள் கூட்டம் வருகையின்மையால்
தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.

தூத்துக்குடியிலிருந்து காயல்பட்டினம் சென்று நகரின் உள் பகுதியில் உள்ளதால் குறிப்பிட்ட வழியில் விசாரித்து செல்ல வேண்டும் ஆலயம் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன

ஆலயம் அருகில் செல்வதற்கு சற்று நெருக்கடியான பாதையில் செல்ல வேண்டியுள்ளது

காயல்பட்டினத்தில் மெய்கண்டேஸ்வரர் மற்றும் கணபதீஸ்வரர் ஆகிய சிவன் கோயில்கள் தரிசித்து பலன் பெறுவோம்.
அடியாருக்கு முன் தகவல் தந்து சென்று தரிசித்து வரலாம்

25.04.2026 சுப்ராம்🔱🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்

மேலும் சில தகவல்கள்
பிரும்ம ரிஷியார் பதிவுகளிலிருந்து .....
நன்றி🛐
தச வீரட்டானம் ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போராட்டத்தில் மனதிற்கும் உடலுக்கும் வெற்றியினைத் தருபவை, நலம் தருபவை. நிம்மதியும் தெளிவும் தருபவை.

இந்த ஆலயம் சருமம் சம்பந்தபட்ட மேனி சம்பந்தபட்ட சிக்கல்களை உடலாலும், மனம் சம்பந்தபட்ட சிக்கல்களை சூட்சுமமாகவும் தீர்க்கும் சக்தி கொண்டது. வேண்டிய வரத்தை தரக் கூடிய சக்திமிக்க தலம்.

ஒருமுறை இந்த மெய்கண்டேஸ்வரரை தரிசித்துப் பாருங்கள். அவரே உங்களை மீட்டெடுத்து தன் ஆலயத்தின் வழமையான பக்தர்களாக சாட்சிகளாக மாற்றிக்கொள்வார். இது சத்தியம்.

💥....... துர்வாசர்...உண்மை எனும் மெய்பொருளை அறியாமல் அவர் அடிக்கடி தானே பெரியவர் எனச் சாபமிட்டதால் இந்நிலை வந்தது. அப்படியான நிலையில்தான் இங்கு அவர் சிவன் அருளில் குணமானார்.

அவரின் மெய் எனும் உடலை குணமாக்கி அப்படியே மெய்பொருளாவது சிவமே, சிவமே எக்காலமும் மெய்பொருள் தன் தவமோ வலிமையோ அல்ல என அவர் உண்மை உணரவைத்ததால் அந்தச் சிவன் மெய்கண்டேஸ்வரர் என்றானார்.

இந்த ஆலயம் முன்பு மிகப் பிரமாண்டமாய் இருந்தது. அதன் சொத்துக்களும் வருமானமும் பாண்டியர் காலத்தில் மிக மிக பெரிதாக இருந்தது.

பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்தை மிக மிக பெரிதாகக் கொண்டாடினார்கள். மூன்று பிரகாரம் கொண்டு திருசெந்தூர் கோவில் போல் அது பெரிதாக இயங்கிற்று.

💥 .......சுமார் 400 வருடங்கள் கிழக்கு கடற்கரைகள் அந்நியர்வசம் சிக்கிய சீரழிவின் சாட்சிகள் இவை...........

...... காயல்பட்டண மெய்கண்டேஸ்வரர் ஆலயமும் அழிய ஆரம்பித்தது.

40 ஏக்கர் கோவில், அதனைச் சுற்றி 200 ஏக்கர் நிலம் இன்னும் அதன் எதிரே ஒரு பெருமாள் கோவில் இடையில் அக்ரஹாரம் என பிரமாண்டமாக இருந்த இந்த ஆலயம் பின் மாற்றுமத காலத்தில் சிக்கி சீரழிந்து அடையாளமே இல்லாமல் போயிற்று.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் சில பக்தர்கள் ஒன்று கூடி அதனை ஓரளவு மீட்டு கூரையிட்டு வழிபாடுகளைத் துவக்கினார்கள். அதுவும் அவ்வப்போது நடக்கின்றது.

இப்போதைக்கு ஆலயம் அழியாமல் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றதே அன்றி முழுமையான வரலாறும் வரவில்லை,
பூஜைகளுக்கும் பெரிதாக வழியில்லை. அறநிலையத்துறை ஒருகால பூஜைக்குக் கூட இங்கு ஒத்துழைக்கவில்லை.

.......இந்த ஆலயம் சக்தி வாய்ந்தது. சுமார் 700 ஆண்டுகள் போராட்டத்திலும் மீண்டு எழுந்து தன்னை நிறுத்திக் கொண்ட ஆலயம். ஒருமுறை வழிபட்டால் மீண்டும் மீண்டும் உங்களை இழுக்கும் ஆலயம்.

இங்கு ஒரு சித்தர் வலுவாக உண்டு அவர் துர்வாசமுனியா அகத்தியர் வழியா என்பது இன்னும் அறியபடவில்லை அந்த சித்தர்தான் அவரின் சூட்சும காவல்தான் இக்கோவில் முழுக்க அழியாமல் நிற்கின்றது

இன்று அது துலங்கி நிற்க அந்த சித்தர்தான் காரணம், அந்த சித்தர் ஆறு அடி நாகமாக அங்கு உண்டு, இப்போதும் சிவனை வழிபட்டு செல்லும் நாகமாக அங்கு உண்டு

அந்த சித்தரின் அருளும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்

மேற்கு நோக்கி வீற்றிருக்கும் இந்தச் சிவனே துர்வாசரின் கர்மவினை மட்டுமல்ல தன்னை நாடிவரும் ஒவ்வொருவர் கர்மவினையும் அகற்றுகின்றார். நல்வாழ்வு தருகின்றார்.

....இந்த ஆலயம் வழிபாட்டு நேரம் தவிர இதர நேரம் பூட்டியிருக்கும். இதனால் இந்த ஆலயத்தை தரிசிக்க விரும்புவோர் ரமேஷ் ஐயர் என்பவரை 9442306662 எனும் எண்ணில், முத்து செல்வம் என்பவரை 9843999869 எனும் எண்ணில் தொடர்பு கொண்டுவிட்டு சென்றால் எளிதில் தரிசிக்கலாம்.

திருசெந்தூர் செல்லும் போது, குலசேகரபட்டணம் பக்கம் செல்லும் போது இந்த மெய்கண்டேஸ்வரரை தரிசிக்க மறவாதீர்கள்....
தகவல்கள் பிரம்மரிஷியார் பதிவுகளிலிருந்து
நன்றி🛐

#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECR #திருச்செந்தூர்-தூத்துக்குடி அருகில்

தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர்திருக்கோயில்

தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர்
திருக்கோயில்

அமைவிடம்⛳
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
  
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, சங்கரராமேஸ்வரர் திருக்கோவில். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் மூலவர் சங்கரராமேஸ்வரர், அம்பிகை பாகம்பிரியாள்.

தல வரலாறு📚
தூத்துக்குடியின் பழம்பெயர் 'திருமந்திரநகர்' என்பதாகும். இங்குதான் சிவபெருமான் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு வரையறுத்ததாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த இடம் 'திருமந்திரநகர்' என்று அழைக்கப்பட்டது. திருச்செந்தூர் வந்த காசியப முனிவர் பசுமை நிறைந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார். அதுவே இந்த சங்கர ராமேஸ்வரர் கோவில் என்று கூறப்படுகிறது.

 இத்தல இறைவனை காசியப முனிவர், கவுதமர், பரத்வாஜர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள்பெற்றுள்ளனர்.

பிற்கால குறுநில மன்னரான சங்கரராம பாண்டியன் கயத்தாறை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தார். இவருக்கு குழந்தைப்பேறு இல்லை. இதனால் மனம் வருந்திய மன்னன், காசி போன்ற புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று புனித நீராடி வந்தார். ஒரு சமயம் மன்னன் தனது
பரிவாரங்களுடன் புனித நீராடச் செல்லும்போது, இறைவனது குரல் “பாண்டியா, திருமந்திர நகரில் உள்ள காசிக்கு நிகரான வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா" என அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து சங்கரராம பாண்டியன் வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி காசியப முனிவர் உருவாக்கிய சிவலிங்கத்திற்கு திருக்கோவில் ஒன்றை எழுப்பினார்.

ஆலய அமைப்பு🛕
கோவிலில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுற காட்சி அளிக்கிறது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. 

உயர்ந்த கொடி மரம், நந்தி உள்ளன. அதனை கடந்தவுடன் வாசலின் இருபுறமும் சூரியன், சந்திரன் உள்ளனர். சூரியனை ஒட்டி அதிகார நந்தி கைகூப்பியபடி உள்ளார்.

 இறைவன் சன்னிதி முன்பு அர்த்தமண்டபம், மகா மண்டபம் உள்ளன. இத்தல இறைவன் லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கியபடி இரண்டு திருக்கரங்களில் ஒரு கரத்தில் தாமரை ஏந்தியும், மற்றொரு கரத்தை இடையோடு தொங்கவிட்டபடியும் பார்க்க ஒரு நாட்டிய மங்கைபோல் காட்சி அளிக்கிறார்.
இறைவன் கருவறை முன் வாசலில் அழகிய விநாயகர் தனிச் சன்னிதியில் அருள்கிறார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகார சன்னிதிகளாக தென்புறம் அறுபத்துமூவர், தென்மேற்கில் விநாயகர், அடுத்து புறச்சுற்றில் கிழக்கு நோக்கிய பஞ்ச லிங்கங்கள் உள்ளன. எதிரில் சிறிய நந்திகளும் உள்ளன.
வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கியபடி உள்ளார். அருகில் தெற்கு நோக்கியபடி உற்சவ திருமேனியுடன் முருகன் சன்னிதியும் உள்ளது. வடப்புற சுற்றில் தெற்கு நோக்கிய இரு மாடங்களில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் உள்ளனர். அதே சுற்றில் தெற்கு நோக்கிய சனிபகவான் சன்னிதி உள்ளது. அழகிய மண்டபத்தில் வடகிழக்கில் நடராஜர் சிவகாமியுடன் உள்ளார். அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது. அதில் சனிபகவான் கையில் வில் அம்புடன் உள்ளார். மற்ற கிரகங்களும் கையில் ஆயுதங்களுடன் வாகனத்தில் உள்ளனர்.
இரண்டாம் பிரகாரத்தில் கன்னி விநாயகர், முருகன், ஐயப்பன் சன்னிதிகள் உள்ளன.

 இக்கோவிலில் உள்ள 'வாஞ்சா புஷ்கரணி' என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

இக்கோவிலை ஒட்டி தென்புறத்தில் வைகுந்தநாதப் பெருமாள் கோவிலும் உள்ளது. (திருப்பணி வேலை நடைபெறுகிறது)

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

நகரின் மத்தியப்பகுதியில் உள்ளதால் ஒரு வாகனங்களில் வருபவர்கள் ஒருவழிப்பாதை அனுசரித்து ஆலயம் சென்று தரிசித்து வரவேண்டும் 
 தூய்மையுடனும் நல்ல பராமரிப்புடனும், வழக்கமான பூசை விழாக்களுடனும் சிறப்பாக உள்ளது. ஏராளமான பத்தர்கள் தரிசித்து செல்கிறார்கள்.

அருகில் சிவன் ஆலயம் ஒட்டி தென்புறத்தில் வைகுந்தப்பெருமாள் ஆலயமும் உள்ளது தற்போது புனரமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஆலயத்தின் வடக்கு பிரதான வீதியில் முத்தாரம்மன் என்ற பழமையான தனியார் ஆலயமும் உள்ளது 
இவற்றையெல்லாம் தரிசித்தோம்

25.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECR #திருச்செந்தூர்-தூத்துக்குடி அருகில்

தம்பிக்கோட்டை சுந்தரநாயகி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம்

தம்பிக்கோட்டைசுந்தரநாயகி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம்

அமைவிடம்⛳
நாகப்பட்டிணம் - தூத்துக்குடி ECR சாலையில்
தம்பிக்கோட்டை பிரதான சாலையை ஒட்டியே அமைந்துள்ளது.

ஆலய அமைப்பு🛕
ஆலயம் கிழக்கு நோக்கியது முன்மன்டபத்துடன் கூடிய 3 நிலை இராஜகோபுரம் உடையது. முன்மன்டப முகப்பில் காட்சி தரும் அமைப்பில் விநாயகர் சுவாமி அம்பாள் முருகன் உள்ளனர்

கொடிமரம் பலிபீடம் நந்தியும்அடுத்து ஆலய மண்டபம் வலது புறம் அம்மன் சன்னதி தெற்கு நோக்கி சுந்தரநாயகி அருள் பாலிக்கிறார்

உள் மன்டபத்தில், சுவாமி கருவரை முன் வலது புறத்தில் லெட்சுமணர் பூசித்த மகாகணபதி, மற்றும் சுவாமி நோக்கிய நந்தியம் பெருமாள் நிருத்த மண்டபத்துடன் கருவரையில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சுந்தரேஸ்வரர் உள்ளார்.

மன்டபத்தில் தெற்கு நோக்கி உற்சவர் விக்ரகங்கள் மற்றும் நடராஜர் சன்னதி உள்ளன. நால்வர் தென்புறம் அமைக்கப்பட்டுள்ளனர்.

அம்மன் சன்னதி வாசல் வழியாக பிரகாரம் செல்லலாம். கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி தனி சன்னதி அமைப்பு. வன்னிமரம் மற்றும் தனி துர்க்கை வடக்கு நோக்கி அமைந்துள்ளார்.

கன்னிமூலையில் நிருதி விநாயகர் மேற்கு பிரகாரமேடையில் பஞ்ச பூதலிங்கங்கள், 
அன்னபூரணி விஸ்வநாதர் விசாலாட்சி 
மற்றும் ராகுகால பரிகாரலிங்கம் நாகராஜர் உள்ளனர். மற்றும் தனி சன்னதிகளில் வள்ளி தெய்வானையுடன் முருகர், மகாலட்சுமியும் அமைந்துள்ளனர்.
மேற்கு கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர்
வடக்கில் பிர்மா, தனி சன்னதியில் சண்டிகேஸ்வரர் உடன் சண்டிகேஸ்வரரி உள்ளனர். வட பிரகாரத்தில் நாகலிங்க மரம் ஒன்றும் உள்ளது. 

கிழக்கில் காலபைரவர், சிவசூரியன், சனீஸ்வரர், நவகிரகங்கள் மற்றும் பால ஆஞ்சனேயர் அமைந்துள்ளனர்.

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதால் மிகவும் பொலிவுடன் ஆலயம் விளங்குகிறது.

அமைதியும் பத்தி உணர்வுடனும் உள்ளது.
ECR பிரதான சாலையிலேயே உள்ளது ஆலயம் முன்புறம் அருகில் வாகனங்கள் நிறுத்த இடங்கள் உள்ளன. அருகில் வேறு கடைகள் கிடையாது.

25.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ECR



Friday, April 17, 2026

சின்ன ஆவுடையார் கோவில்(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள் 12.04.26

சின்ன ஆவுடையார் கோவில்
(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்
மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள்.
அமைவிடம்⛳
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராமபட்டினம்-மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ளது சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) எனும் கிராமம்..

அதிராம்பட்டினத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும்   பட்டுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

💥ஆலய சிறப்புகள்
திருப்பெருந்துறையில் யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதசுவாமி எனும் திரு நாமத்தில் அருள்பாலிக்கும்
சிவபெருமான் ஆலயம். திருப்பெருந்துறை போலவே  கொள்ளுக்காட்டில் உள்ளது
சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில்
குறித்து தல ஆராய்ச்சி செய்த உ. வே. சா. அவர்கள் தனது நூலிலும் இந்த இடத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஆவுடையார்கோயிலின் (திருப்பெருந்துறை) ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமையான சிவன் கோயிலாகும். 
மேலும் தம்பிக்கோட்டை அருகில் உள்ள பரக்கலாக்கோட்டை ஆவூடையர் கோவில் அடுத்து, ராசாமடம் அருகில் உள்ள இந்த சின்ன ஆவுடையார்  சிவத்தலம், பெரிய ஆவுடையார் கோயிலின் சார்புத் தலமாகக் கருதப்படுகிறது. 

இக்கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி, சிதிலமடைந்த நிலையில் இருந்து, பின் 28 ஜனவரி 2026 ல் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்றுள்ளது 

தலவரலாறு
மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் முதன்மை அமைச்சராக இருந்தவர் வாதவூரர். இவர் மன்னனின் ஆணைப்படி குதிரை வாங்குவதற்காக பொற்காசுகளுடன் புறப்பட்டார். அப்படிச் சென்ற அவரை, வழியில் குருந்த மரத்தின் கீழ் அமர்ந்து குரு வடிவிலான இறைவன் ஆட்கொண்டு மாணிக்கவாசகர் ஆக்கிய தலம் திருப்பெருந்துறை. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் ஆவுடையார் கோவில் என்றும், இத்தல இறைவன் ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். தன்னிடம் இருந்த பொற்காசுகளைக் கொண்டு, மாணிக்கவாசகரே எழுப்பிய ஆலயம் இது.

குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் என்னும் மாணிக்கவாசகர், காலம் கடந்தும் மதுரை திரும்பாததால் ஆத்திரமடைந்த அரிமர்த்தன பாண்டியன், தனது தளபதியை அனுப்பி பார்த்து வரச் சொன்னான். மன்னன் ஆள் அனுப்பியதை அறிந்த மாணிக்கவாசகர், ‘குதிரை வாங்க கொடுத்த பணம் கோவில் கட்ட செலவாகி விட்டதே. இப்போது என்ன செய்வது’ என்று நினைத்தவர் இறைவனிடம் தன்னுடைய நிலையை சொல்லி இறைஞ்சினார்.

இதையடுத்து இறைவன் ஒரு ஆவணி மூல நட்சத்திர நாளில் நரிகள் அனைத்தையும் பரி (குதிரை)களாக்கினார். அந்த இடம் இன்றும் நரிக்குடி என்று வழங்கப்படுகிறது. நரிகளாக மாறிய பரிகளுக்கு மாணிக்கவாசகர் கொள்ளு வாங்கிக் கொடுத்த இடம் ‘கொள்ளுக்காடு’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் திருப்பெருந்துறை பெரிய ஆவுடையார் கோவில் போன்று, சிறிய ஆவுடையார் கோவில் அமைந்திருக்கிறது.

ஆலய அமைப்பு🛕
திருப்பெருந்துறையைப் போலவே இத்தல இறைவனின் பெயரும் ஆத்மநாதர் தான். இறைவியின் திருநாமமும், யோகாம்பாள் என்பதே ஆகும். கொள்ளுக்காடு தலத்தில் ஆத்மநாதர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயம்
6ம் நூற்றாண்டில் சோழரும் 7ம் நூற்றாண்டில் பாண்டியரும் ஆலயம் பராமரிக்க உதவிய செய்திகள் கல்வெட்டுகளில் உள்ளன.

மணிவாசகர் அக்னி நதியின் தென்புறம் உள்ள இந்த ஆலயத்தை வழிபட்டார் என்று தகவல் குறிப்பு உள்ளது

இந்த பழமையான ஆலயம்  முற்றிலும் சிதைந்து போன நிலையில்   பெரும் முயற்சி செய்து தற்போது முழு ஆலயமும் புதியதாக எழுப்பி பொலிவுடன் உள்ளது. 28.1.2026ல் குடமுழுக்கு செய்யப்பெற்றுள்ளது

கிழக்கு நோக்கிய ஆலயம் முன்புறம் தென் பகுதியில் தனி வினாயகர் சன்னதி  உள்ளது.
அடுத்து, கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம் கடந்தால், பிரகாரத்தில்  நந்தி தனி மன்டபத்தில் சுவாமி நோக்கி உள்ளார். நீண்ட முன்மண்டபம் சுவாமி அம்பாள்  இரண்டு கருவரைகளையும் இணைத்துள்ளது.முன் மண்டபத்தில் வடதுபுறமாக தென்முகம் நோக்கி யோகாம்பாளுக்கு தனி கருவரை மற்றும் கிழக்கு நோக்கிய கருவரையில் சுவாமி உள்ளனர். ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவற்றுடன் உள்ளன.
சுவாமி அம்பாள் கருவரை முன் துவார பாலகர்கள் உள்ளனர். சுவாமி கருவரை முன்பு இருபுறமும் சிறிய அனுங்கை விநாயகர் மற்றும் தண்டபாணி அமைத்துள்ளனர்.

ஆலய தென்புறம் கோஷ்ட்டத்தில் பெருமாள்  மற்றும் யோகதட்சினாமூர்த்தி முன் மன்டபத்துடன் உள்ளார்

பிரகாரத்தில்தென்மேற்கில் தனி  சன்னதியில் இரண்டு விநாயகர்கள் உள்ளனர்.
மற்றும் வட புறம் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியரும் அருள்பாலிக்கின்றனர். 
மேலும், கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர்   பிரும்மா, துர்க்கை தனி சண்டிகேஸ்வரர் உள்ளனர்.

வடக்கு பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் குருந்தமரமும், அதன் கீழே மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சியும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்குப்புறத்தில் பைரவர் சூரியன் மற்றும் மேற்கு நோக்கி தனி சனீஸ்வரர் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயம் சமீபத்தில் புனரமைப்பு செய்துள்ளதால் மிகவும் பொலிவுடன் உள்ளது. திருக்கோவிலின் எதிர் புறம் தீர்த்தக்குளம் ஒன்றும் உள்ளது. 

இங்கு கார்த்திகை சோமவார விழா சிறப்பாக நடைபெறும்.

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

ECR சாலையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆலய வளாக முன்புறம் வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது.
அருகில் பெரிய கடைகள் ஏதும் இல்லை.
சிற்றூர் என்பதால் நெருக்கடிகள் இல்லை  அமைதியான இடமாக உள்ளது

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

ஆத்தாளூர் ஸ்ரீ பிரகதாம்பாள் சமேத ஸ்ரீதிருக்காளநாதர் ஆலயம் 12.04.26

ஆத்தாளூர் ஸ்ரீ பிரகதாம்பாள் சமேத ஸ்ரீதிருக்காளநாதர் ஆலயம்

பேராவூரணி நகருக்கு கிழக்கில் சுமார் 2 கி.மி. தூரத்தில் உள்ள ஆத்தாளூர் என்ற ஊரில் உள்ள பிரபலமான காளியம்மன் ஆலயத்துடன் இணைந்த ஆலயம் 

ஆலய அமைப்பு🛕
கிழக்குப்பார்த்த ஆலய அமைப்பு இராஐகோபுரம் கிடையாது. சுற்றுச்சுவர் உள்ளது.
உள்ளே நந்தி மன்டபத்தில் ஆலயம் நோக்கியுள்ளார். முன்மண்டப முகவாசல் மேல் பகுதியில் காட்சி நாயனார் சுதை சிற்பம் உள்ளது. 
சுவாமி திருக்காளநாதர் கிழக்கு நோக்கி உள்ளார். கருவரை அர்த்த மண்டபம் உள் மண்டபம் முன் மண்டபத்துடன் உள்ளது.
தெற்கு நோக்கிய தனி கருவரையில் ஸ்ரீ பிரகன்நாயகி உள்ளார்

முன்மன்டபத்தின் தென்புறம் உள்ள வாசல் வழியாக ஆலய பிரகாரம் செல்லலாம் 
தென் பகுதி கோஷ்ட்டத்தில் சிறிய அழகிய நர்த்தன விநாயகர் சிற்பமாக உள்ளார்.
தட்சினாமூர்த்திக்கு முன் முகப்பு மாடம் அமைக்கப்பட்டுள்ளது.

தனிவிநாயகர் கன்னி மூலையில், மேற்கு கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மர் துர்க்கை அமைக்கப்பட்டுள்ளது

வடமேற்கில் வள்ளி தெய்வாணையுடன் முருகர் தனி சன்னதி மற்றும் மகாலட்சுமி உள்ளனர்
கிழக்கில் பைரவர், மற்றும் நவகிரகங்கள் மண்டபத்துடன் அமைந்துள்ளது.
வரிசையாக சில நாகர்கள் ஆலயம் உள்ளே வைத்துள்ளனர்

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

ஆத்தாளூரில் உள்ள புகழ்பெற்ற காளியம்மன் ஆலயம் முன்புறம் ஒரு பெரிய குளம் உள்ளது. கிழக்குப்பகுதியில் இந்த சிவன் ஆலயம் உள்ளது. இரண்டுக்கும் ஒரே குருக்கள் ஆலயம் தூய்மையுடன் பராமரிப்பில் உள்ளது. 
வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது.
அருகில் பெரிய கடைகள் ஏதும் இல்லை.
சிற்றூர் என்பதால் நெருக்கடிகள் இல்லை பெரியவளாகம் மரங்கள் உள்ளது. அமைதியான இடமாக உள்ளது

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

பேராவூரணி - முடப்புளிக்காடு - ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோயில் 12.04.26

பேராவூரணி - முடப்புளிக்காடு - ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோயில் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி - முடப்புளிக்காடு - ஏந்தல் என்ற இடத்தில் உள்ளது புகழ் பெற்ற விநாயகர் கோயிலாகும்.

அமைவிடம்⛳
இக்கோயில் பேராவூரணி-அறந்தாங்கிசாலையில் முடப்புளிக்காடு ஏந்தல் என்னுமிடத்தில் உள்ளது. பேராவூரணியிலிருந்து 1/2 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன்
இக்கோயிலின் மூலவர் நீலகண்டப் பிள்ளையார் ஆவார்.ஆனால் விழாக்கள் வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகனுக்கு நடத்தப்பெறுகின்றன.

தலவரலாறு📚
தஞ்சாவூரை ஆண்ட துளசி மகாராஜா தன் அமைச்சருடன் ஆவுடையார் கோயிலை நோக்கிச் சென்றார். நீரழிவு நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அவருடைய அமைச்சருக்கு மருந்து காணச் சென்றார். அப்போது நீலகண்டப் பிள்ளையாரை பலர் வணங்குவதைக் கண்டார். அக்கோயிலின் திருநீற்றினை தரித்தவுடன் அமைச்சருக்கு நோய் நீங்கியது. மன்னர் மகிழ்ச்சியடைந்து கோயிலை விரிவாக்கம் செய்தார். பேராவூரணியை அடுத்துள்ள தென்னங்கொல்லையில் ஒரு வேலி நிலத்தையும் மன்னர் அளித்துள்ளார்.

விழாக்கள்
எந்த விநாயகர் கோயிலிலும் நடைபெறாத தீமிதித் திருவிழா இங்கு நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் நடைபெறுகின்ற காவடித்திருவிழாவின்போது பால் குடம், பால் காவடி, கரும்பு கட்டுதல் போன்றவை நடைபெறுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மார்கழி மாதத்தில் தினமும் காலையில் நந்திக்கு தண்ணீர் எடுத்து ஊற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

பயணஅனுபக்குறிப்புகள் 🕊️

பேராவூரணி பிரதான சாலையில் அமைந்துள்ள ஆலயம் முன்புறம் பெரிய மண்டபம் அமைந்துள்ளது.
முன்மன்டபத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.
அதை அடுத்து உயரமான கருவரை அர்த்த மண்டபத்துடன் அமைந்துள்ளது. கிழக்குநோக்கிய கருவரையில் அழகுடன் நீலகண்ட பிள்ளையார் அருள்தரும் கோலத்தில் உள்ளார் உள் சுற்றுப் பிரகரம் உள்ளது. 
வடக்குப்புறத்தில் பெரிய குளம் ஒன்று பாதுகாப்புடன் நீராட வசதியுடன் அமைந்துள்ளது. நல்ல பராமரிப்பில் உள்ளது
குளத்தின் மேல் கரையில் பொங்கல் வைத்து சமைக்க தகுந்த ஏற்பாடுகள் உள்ளன. ஏராளமான பக்தர்கள் பொங்கல் செய்து வழிபட்டு செல்கிறார்கள் குளம் சுற்றிலும் ஆலய நிர்வாகக்கட்டுப்பாடுடன் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

பிரதான சாலையிலேயே ஆலயம் உள்ளதால் வாகனங்கள் நிறுத்த தனி இடம் இல்லை பரபரப்பாக போக்குவரத்தும் உள்ளன.

ஆலயபிள்ளையார் மிகவும் சக்திவாய்ந்தவர் என்பதால், பக்தர்கள் பெருவெள்ளமாக வந்து தரிசித்து அருள்பெற்று செல்கிறார்கள்.

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்



எட்டியத்தளி அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் கோயில் 12.04.26

எட்டியத்தளி அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் கோயில்

அமைவிடம்⛳
 தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நகரத்திலிருந்து பேராவூரணி சாலையில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது, டவுன் பஸ் எண் 21 எட்டியத்தளியில் நிற்கிறது.
எட்டியத்தலியில் உள்ள கோயில் எட்டியத்தலி மெயின் ரோடு பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது. 
அறந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவிலும், ஆவுடையார்கோயிலில் இருந்து 22 கிமீ தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 41 கிமீ தொலைவிலும் எட்டியதலி உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் அரந்தாங்கி.

📚தலபுராணம்
புராணத்தின்படி, அகத்தியர் காசியில் சிவனை வழிபட்ட பிறகு, பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் சந்தியாவந்தனம் செய்வதற்காக இங்கு தங்கினார். அவர் எட்டியத்தாலியில் உள்ள இந்த சுயம்பு சிவலிங்கத்தை வழிபட்டு இரவில் தங்கினார். அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் கலிங்கராயன் இந்த இடத்தைக் கடந்து செல்கிறான். அஷ்டம சனி தோஷத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை மன்னன் அகத்தியரிடம் கேட்டபோது, ​​அகத்தியர் பதிலுக்கு சுயம்பு லிங்கத்திற்கு ஒரு கோயில் கட்டுமாறு மன்னனிடம் கூறினார். மேலும், சிவனிடமிருந்து அதிக சக்தியைப் பெறுவதற்காக நவகிரகங்களை ஈசான்ய திசையில் நிறுவுமாறும் மன்னனிடம் கூறினார். மேலும், நவகிரகங்கள் அகிலாண்டேஸ்வரி அம்பாளின் சன்னதிக்கு முன்னால் அமைந்துள்ளன, நவகிரக நாயகி என்றும் அழைக்கப்படும் அம்பாளிடமிருந்தும் அவர் அதிக சக்தியைப் பெறுகிறார். அவ்வாறு
இக்கோவில் தொண்டை நாட்டு மன்னன் காளிங்கராயனால் கட்டப்பட்டது. 

நவகிரகங்கள் குழுவில் ராகு மற்றும் கேது இருவரின் நிலைகளும் ஒன்றுக்கொன்று மாற்றப்படுகிறது. எனவே இது சனி, ராகு மற்றும் கேது தோஷ பரிகார ஸ்தலம். மேலும் இது களத்திர தோஷ நிவர்த்தி தலமாகும்.

💥தல சிறப்புகள்
சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம்

இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம். பொதுவாக, கோயில்களில் சனீஸ்வரருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறதாம். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும்.

ஆலய அமைப்பு🛕
இந்தக் கோவிலின் சில முக்கிய அம்சங்கள்...
இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இதன் நுழைவாயிலில் ராஜகோபுர அடித்தளம் மட்டுமே உள்ளது. நுழைவாயிலின் மேல் பகுதியில், ரிஷப ரூடராகக் காட்சியளிக்கும் சிவன் மற்றும் பார்வதியின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. முக மண்டபத்தில் பலிபீடமும் ரிஷபமும் உள்ளன. கருவறையின் நுழைவாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சதுர ஆவுடையார் மீது எழுந்தருளியுள்ளார். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்கை ஆகியோர் உள்ளனர்.

மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் அம்பாள் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. ஒரு அம்பாள் அகிலர என்றும், மற்றொரு அம்பாள் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். அர்த்த மண்டபத்தில் நால்வர் மற்றும் நடராஜர் சபை அமைந்துள்ளது. மகா மண்டபத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் நவகிரகங்கள் உள்ளன. ராகுவும் கேதுவும் இடம் மாறி காணப்படுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர், சந்திரன் (சூரியன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது)

பெரிய தீர்த்தக் குளம் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ளது

கட்டிடக்கலை
இக்கோயில் கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம் மற்றும் ஒரு மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது . கருவறை வ்ருத குமுதத்துடன் கூடிய பாத பந்த அதிஷ்டானத்தில் உள்ளது. ஸ்தம்ப பஞ்சரங்கள் அந்தரளப் பகுதியில் உள்ளன. பிட்டி வேதிகையில் தொடங்குகிறது. சதுர அடித்தளம் மற்றும் நாக பந்தம், விஷ்ணு காந்த உடல், மாலை தொங்கல், கலசம், குடம், தாமரை இதழ்கள் மண்டி, பலகை, வீர காண்டம் மற்றும் பூ மொட்டு பொத்தியல் ஆகியவற்றுடன் பைலஸ்டர்கள் உள்ளன. பிரஸ்தாரம் தாமரை இதழ்கள் வலபி, வெற்று நாசி கூடுகளுடன் கூடிய கபோதம் மற்றும் சந்திர மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. யாழி வரி கபோதம் மேல் உள்ளது. பூமிதேசத்தின் மீது இரண்டு அடுக்கு ஸ்டக்கோ வேசர விமானம் உள்ளது. தாளம் மற்றும் கிரீவ கோஷ்டங்களில் சிவன், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு (நரசிம்மர்), பிரம்மா ஆகியோர் உள்ளனர். முதல் தளத்தின் மேற்குப் பக்கத்தில் லிங்கோத்பவர் சுதைச்சிற்பம் உள்ளது .

சண்டிகேசுவரர், விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் பகுதியளவு செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.

வரலாறு மற்றும் கல்வெட்டுகள்
மூலக் கோயில் முற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம், பின்னர் மண்டபங்கள் சேர்க்கப்பட்டன. சுவரில் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் ஒன்று ஒரு அறக்கட்டளையையும், சிவனைத் திருவாகதீச்சுரமுடையராகவும் குறிப்பிடுகிறது . 

பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள்
வழக்கமான பூஜைகள் தவிர, பிரதோஷம், மகா சிவராத்திரி, சனிப்பெயர்ச்சி நாள் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

ஆலயத்தின் தனிச் சிறப்புகள்
இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, கல்யாண தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திருமணம் தடைப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்று கூறப்படுகிறது. இக்கோவில் நவக்கிரகத்தின் அருகில் ஜாதகத்தை வைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது
மேலும், இக்கோயில் பற்றிய முக்கியத்துவம்:

 1) நவகிரகங்களில், சனி பகவான் அகஸ்தீஸ்வரருக்கும் தேவிக்கும் தெரியும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இது எந்தவொரு கோயிலிலும் அரிதான நிகழ்வாகும். 
2)இங்கு அகிலாண்டேஸ்வரி மற்றும் அகிலா என இரண்டு தேவியர் உள்ளனர். 

 3)சனீஸ்வரரின் வலது பக்கத்தில் ராகுவும், இடது பக்கத்தில் கேதுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக அனைத்து நவகிரகக் கோயில்களிலும் ராகு மற்றும் கேதுவின் நிலைகள் தலைகீழாக இருக்கும், அதாவது சனீஸ்வரர் பெருமானின் இடப்புறத்திலும் கேது வலப்புறத்திலும் அமைந்திருக்கும்

3) இக்கோயிலின் மற்றொரு தனித்துவம் என்னவென்றால், நவகிரக நாயகி என்றும் அழைக்கப்படும் அகிலா தேவி, நவகிரகங்களுக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக, இங்குள்ள நவகிரகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன .  

4) மற்ற கோயில்களைப் போலல்லாமல், இங்கு நடராஜர் கல்லால் ஆனவர். பொதுவாக நாம் நடராஜரை உலோகத்தால் ஆன உற்சவமூர்த்தியாகவே காண்கிறோம்.

 5) மூலக்கருவறையில் உள்ள ஆவுடை, நடுவில் செவ்வக வடிவில் சந்திர ஆவுடை என்று அழைக்கப்படுகிறது.

 6) பிரகாரத்தில் உள்ள பெருமாள் சிலை லிங்கோத்பவரை நோக்கியவாறு அமைந்துள்ளது.

 7) சண்டிகேஸ்வரர் பால ரூபத்தில் உள்ளார்.

8) இக்கோயிலின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் விநாயகர் ஆவார் – இவர் “பொல்லா பிள்ளையார்” என்றும் அழைக்கப்படுகிறார். பொல்ல பிள்ளையார் என்றால், இந்த சிலை செதுக்கப்படவில்லை, மாறாக சுயம்புவாகத் தானாகத் தோன்றியது என்று பொருள். திருநாரையூரில் இதுபோல ஒன்று மட்டுமே உள்ளது, அடுத்து இந்தக் கோயிலில் உள்ளது.

 9) வாகனத்தில் சனி மட்டுமே உள்ளார்.

 10) கலிங்கராயர் மன்னனின் மனைவியின் அஷ்டமத்து சனி இங்கு வழிபட்டதால் நீங்கியதாக நம்பப்படுகிறது. 

11) அஷ்டமத்து சனியின் தீய விளைவுகள், களத்ர தோஷம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான பிரார்த்தனைகளுக்கு இந்த ஸ்தலம் பெயர் பெற்றது. 

மேலும், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது சிறந்ததாகக் கருதப்படுகிறது. 

12) இந்தக் கோயிலிலிருந்து சில அடி தூரத்தில், லட்சுமியை மடியில் வைத்தபடி ஒரு விநாயகர் இருப்பது அரிதான காட்சியாகும்.

கோவில் நேரங்கள்
கோயில் காலை 07.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 17.00 மணி முதல் 20.00 மணி வரையிலும் திறந்திருக்கும்
குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மட்டுமே திறந்திருக்கும். வருகை தரும் முன் அர்ச்சகரை தொடர்புகொள்வது நல்லது.
🙏நன்றி வலைதளம்

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

ஆலயம் முழுதும் திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன. இரண்டு பிரகாரங்கள் கொண்ட ஆலயம் முழுவதும் கற்றளியால் ஆன ஆலயம் இந்து அறநிலையத்துறையின்கீழ் உள்ளது.
ஆலயம் சிற்றூரில் உள்ளது. பெரிய வீடுகள், கடைகள் ஏதும் அருகில் இல்லை. ஆலயம் முன்புறம் வாகனங்கள் நிறுத்திக் கொள்கிறார்கள்.

பூசை விஷேச காலங்கள் அன்றி சாதாரண நாட்களில் முன் தகவல் தந்து செல்வது மிகவும் நல்லது 

புராதான பிரார்த்தணைத் தலமாக விளங்குகிறது.

பெரிய குளம் ஒன்று உள்ளது. அதையும் ஆலய திருப்பனிகளுடன் சீர் செய்து அழகு செய்தால், மிகவும் அழகாக அமைக்கலாம்.

அருகில் பெருமகளூர், விளங்குளம், மருங்கப்பள்ளம் பேராவூரணி சேதுபாவாசத்திரம் முதலிய சிறப்பு தலங்களும் உள்ளன.

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

பெருமகளூர் சோமநாதசுவாமி கோயில்ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ சுயம்பு லிங்க சோமநாத சுவாமி ஆலயம் 12.04.26

பெருமகளூர் சோமநாதசுவாமி கோயில்
ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ சுயம்பு லிங்க சோமநாத சுவாமி ஆலயம்

அமைவிடம்⛳
இக்கோயில் ECR சாலையில் சேதுபாவா சத்திரம் அடுத்து கட்டுமாவடிக்கு முன்னதாக பிரதான சாலைக்கு மேற்கில் 2 கிமீ தூரத்தில் உள்ளது. புகழ்பெற்ற சிவஸ்தலம் விளாங்குளம் அருகில் உள்ளது.
(2) தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து தென்கிழக்கே ரெட்டவயல் என்னுமிடத்தின் வழியாக வர வேண்டும் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

⭐மூலவர் சிறப்பு
தாமரைத்தண்டு லிங்கம்
#பெருமகளூர் #ஸ்ரீசோமநாதர்
அதிபழமை வாய்ந்த மிகவும் அற்புத சக்திகள் வாய்ந்த ஸ்ரீ சோமநாதர் ஆலயம்.
இங்கு அருளாட்சி புரியும் ஸ்ரீசோமநாதரின் சிவலிங்கம் கல்லால் அமையப் பெறவில்லை. தாமரைத் தோண்டினால் ஆன சிவலிங்கம் இது. பாணலிங்கமே தாமரைத் ' தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப் போல் இப்புவியில் எங்கும் காண இயலாது.
இக்கோயிலில் மூலவர் விடங்க வடிவாக உள்ளார். ’விடங்கன்’ என்றால் சிற்பியால் உளி கொண்டு செதுக்கப்படாத வடிவமாகும். உளிபடாத மூர்த்தியை சுயம்புலிங்க மூர்த்தி என்றழைப்பர். இக்கோயிலில் மூலவராய் உள்ள சோமநாத சுவாமி தாமரைத்தண்டாக இருந்து இறைவனாக மாறியவர் என்பது தொன் நம்பிக்கை.
ஆலய அமைப்பு⛳
முன்பு இருந்த பழமையான ஆலயம் முற்றிலும் புதிய ஆலயமாக பொலிவுடன் தற்போது விளங்குகிறது.
கிழக்கு நோக்கிய ஆலயம் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளே பலி பீடம் அடுத்து சிறிய நந்தி தனி மன்டபத்தில் உள்ளார். 
சுவாமி கிழக்கு நோக்கிய கருவரையிலும் அம்பாள் தெற்கு நோக்கிய கருவரையிலும உள்ளனர். முன்புறம் பெரிய மண்டபம் ஆலயம் இணைக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் இரு பகுதிகளிலும் பழைய ஆலயத்தில் இருந்த சிறிய சுவாமிகளை அமைத்துள்ளனர். 
சுவாமி கருவரை வாசல் முன்பு சிறிய நந்தி மற்றும் இருபுறமும் விநாயகர் தண்டபாணி சிறிய உருவம் வைத்துள்ளனர்.

பிரகாரங்களின் இருபுறமும் Shed போடப்பட்டுள்ளது 
நால்வர் மற்றும் கிழக்குப் பார்த்த தனி விநாயகர் சன்னதியும் உள்ளது 
சுவாமி கருவரை கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்க மூர்த்தி பிரும்மா, துர்க்கை மற்றும் தனி சன்னதி சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளனர்.
மேற்கு பிரகாரத்தில் தனி மண்டபத்தில் நந்தியுடன் பெரியலிங்கம் ஒன்றும், அம்பாள் ஒன்றும் உள்ளது. பழைய ஆலயத்தில் இருந்து எடுக்கப்பட்டு தற்போது இங்கு வைத்திருக்க வேண்டும்.
வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியில் உள்ளார். 
வடக்குபிரகாரத்தில் சுவாமி உற்சவ வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளது
வைக்கப்பட்டு உள்ளன.
வடகிழக்கில் கிழக்கு நோக்கி தனி மகாலெட்சுமி சன்னதியும் முன்புறம் வன்னி மரமும் அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு நோக்கி சிறிய சனீஸ்வரர் துணையுடன் தனி சன்னதி அமைத்துள்ளனர்.
நவகிரகங்கள் தனி மண்டபம் மற்றும் பைரவர், சூரியன் உள்ளனர்.
புராதான தலம் புனரமைக்கப்பட்டு விட்டது

கல்வெட்டு
இக்கோயிலில், தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னரான பிரதாபசிம்மன் காலத்தில் கொடை அளித்த செய்தியைக் கொண்ட மராத்திய மொழி மற்றும் மோடி எழுத்தில் அமைந்த கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மற்றொரு சிறப்பு
இக்கோயிலின் தென் பிரகாரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தென்னங்கன்றை பயிரிட நட்டுவைத்தனர். கன்று வளரத்தொடங்கியது. பின்னர், சில மாதங்களில் அதே இடத்தில் இன்னொரு கன்று பூமிக்கு மேல் துளிர்த்து வளரத் தொடங்கியது. சில மாதங்கள் கடந்ததும் மேலும் ஒரு தென்னங்கன்று அதே இடத்தில் வளரத்தொடங்கியது. இவ்வாறாக அங்கு ஒரே இடத்தில் ஐந்து தென்னை மரங்கள் ஒரே இடத்தில் வளர்கின்றன.
கோயில் வளாகத்தின் பின்புறம் ஒரு விநாயகர் கோயிலும், பிடாரி கோயிலும் உள்ளன.

#பயணஅனுபக்குறிப்புகள் 🕊️
#சுப்ராம்🔱🇮🇳
ஆலயம் பராமரிப்பில் உள்ளது. எப்போதும் திறந்து இருக்கும் என்று கூறுகிறார்கள்

ஆலயம் முன்புறம் வாகனங்கள் நிறுத்தலாம். 
பெரிய குளம் ஒன்று உள்ளது.
மிகப்பழமையான புகழ்பெற்ற ஆலயம் புனரமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது
பூசை காலங்களில் மட்டுமின்றி சாதாரன நாட்களில் எப்போதும் தரிசிக்கலாம்

மிகச்சிறிய சிற்றூர் அதிக கடைகள் வீடுகள் ஆலயம் அருகில் ஏதும் இல்லை.

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில் 12.04.26

விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்

விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

அமைவிடம் ⛳
இக்கோயில் ECR சாலையில் சேதுபாவா சத்திரம் அடுத்து கட்டுமாவடிக்குமுன்னதாக பிரதான சாலைக்கு மேற்கில் 2 கிமீ தூரத்தில் உள்ளது. 
பேராவூரணிக்கு தென் கிழக்கில் 12 கி. மீ. தொலைவில் உள்ளது. 

💥ஆலய சிறப்பு
விளா மரங்கள் அதிகம் காணப்பட்டதால் இவ்வூர் விளாங்குளம் என்றழைக்கப்படுகிறது.
இறைவன், இறைவி
திருவிளாமுடைய தம்பிரான் என்றும் அட்சயபுரீசுவரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார். குறையாத செல்வத்தை அருளச் செய்கின்ற இறைவனோடு மென்மேலும் பெருக வைக்கின்ற அபிவிருத்திநாயகி என்ற பெயரில் இறைவி உள்ளார்

📚தல வரலாறு
சூரியனின் இரு மகன்களான சனீச்சுரனுக்கும், எமதருமனுக்கும் இடையே ஏற்பட்ட பகையின் காரணமாக சனீசுவரனை எமன் அடிக்கவே, எமனின் காலில் ஊனம் ஏற்பட்டது. இதனால் சனீசுவரன் மனித உருவெடுத்து பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது இப்பகுதியைக் கடந்து சென்றார். ஒரு விளாமரத்தின் வேர் இடறியது. அப்போது ஒரு பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்த நாள் சித்திரை வளர்பிறை, பூசம் நட்சத்திரம், சனிக்கிழமை அனைத்தும் ஒன்று சேர்ந்த நாளாக அமைந்தது. சனீசுவரன் விழுந்த பள்ளம் பூசஞானவாவி என்னும் புனித தீர்த்தமானது. இறைவன் அருளால் கால் ஊனம் நீங்கியது.

ஆலய அமைப்பு:🛕
கிழக்கு நோக்கிய ஆலயம்
மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே நந்தி தனி மன்டபத்தில் ஆலயம் நோக்கியுள்ளார்.
சுவாமி அட்சயபுரீஸ்வரர், அர்த்தமண்டபம் உள்மன்டபம் மற்றும் கிழக்குநோக்கிய கருவரையில் அருள் பாலிக்கிறார்.
அம்பாள் அபிவிருத்தி நாயகி வெளி மண்டபத்தில் தனி கருவரையுடன் தெற்குப்பார்த்த சன்னதியில் உள்ளார்.
மிகவும் பழமையான கற்றளி அமைப்பில் ஆலயம் உள்ளது. 

ஏகப்பிரகாரம் கோஷ்ட்டத்தில் நர்த்தன விநாயகர் தட்சினாமூர்த்தி உள்ளனர்

கன்னிமூலையில் தனி விநாயகர் சிற்றாலயம் மேற்கு கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர் 
வள்ளி தெய்வாணையுடன் முருகர் தனி சிற்றாலயம் வடமேற்கில் 
வடக்கு கோஷ்ட்டத்தில் பிரும்மா, துர்க்கை மற்றும் தனி சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன.

வடகிழக்கு மூலையில் பைரவர் ஸூரியன் சன்னதிகள் உள்ளன.

சனிபகவான் தனது துணைவியர் இருவருடனும் தெற்கு நோக்கிய அமைப்பில் தனி சிற்றாலயமாக உள்ளது இவ்வாலயத்தின் சிறப்பு  
மகாலெட்சுமி ஆலய முன் பகுதியில் வைத்து உள்ளனர்
வண்ணி மரம்தென்கிழக்கில் அமைந்துள்ளது.
தென் பிரகாரத்தின் அம்மன் நேர் எதிர் ஞானவாவி தீர்த்த குளம் செல்ல வாயில் உள்ளது.
தீர்த்தம் குளம் மிகவும் புனிதமானது சனி கீர்த்தி பெற்றதாக ஐதீகம். 
இக்குளம் ஆலயத்தின் தென்பகுதியில் உள்ளது.

திருவிழாக்கள்
அட்சய திருதியை இக்கோயிலில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூச நட்சத்திர நாள்கள் சிறப்பு பெற்ற நாளாக இக்கோயிலில் அமைகின்றன.

#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
#சுப்ராம்🔱🇮🇳
ஆலயம் பராமரிப்பில் உள்ளது. சனிக்கிழமை மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகம் 
ஆலயம் முன்புறம் நிறைய இடம் உள்ளது வாகனங்கள் நிறுத்தலாம். 
குளமும் சுற்றி மரங்களும் உள்ளதால் குளுமையாக உள்ளது.
மிகப்பழமையான புகழ்பெற்ற ஆலயம் புனரமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது
பூசை காலங்களில் அன்றி சாதாரன நாட்களில் முன் தகவல் கொடுத்து ஆலயம் தரிசிக்கலாம்.
கிராமத்தின் தனி பகுதியில் இருப்பதால் அருகில் வீடுகள், கடைகள் எதுவும் கிடையாது.

தென் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பூச நட்சத்திர பரிகார தலமாக மிகவும் பிரபலமாக விளங்குகிறது இவ்வாலயம் 

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்மருந்து கல்வம் மற்றும் குழவியே சிவலிங்கமாக இருக்கும் தலம் 12.04.26

மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்
மருந்து கல்வம் மற்றும் குழவியே சிவலிங்கமாக இருக்கும் தலம்

அமைவிடம்⛳
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கப்பள்ளம். 
ECR சாலையில் சேதுபாவா சத்திரம் வந்து பேராவூரணி சாலையில் வர வேண்டும். குருவிக்கரம்பை என்ற ஊர் அருகில் இந்த தலம் உள்ளது.

🔱சிறப்பு
இத்தலத்து இறைவன் திருநாமம் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மருத்துவ நாயகி , பெரியநாயகி. சகல நோய்களையும் இறைவன் குணப்படுத்துவதால் இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.

📚தல புராணம்
சூரியனுக்கும் உஷா தேவிக்கும் பிறந்த குழந்தைகள் நசத்யா மற்றும் தசரா. அஸ்வினி குமாரர்கள் என்றழைக்கப்படும் இவர்கள், பிரம்மாவின் ஆணைப்படி, தேவலோக மருத்துவர் பதவியை அடைவதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, அந்த பதவியை அடைந்தார்கள். அவர்கள் முதலில் மூலிகைகளை அரைக்க பயன்படுத்திய, கல்வம் (கல்வம் என்பது கல்லினாலான ஆன முட்டை வடிவமான குழியுள்ள அம்மி) மற்றும் குழவியையே, உலக உயிர்கள் யாவும் ஆரோக்கியமாக வாழும் பொருட்டு சிவலிங்கமாக பிரதிஷ்டைசெய்து, "ஸ்ரீ மருந்தீசுவரர்" என்று திருநாமம் வைத்து வழிபட்டார்கள்.

 மருந்தீசுவரர் லிங்கத்தில், குழவியின் விளிம்பு இருப்பது, நாம் வேறு எந்த தலத்து சிவலிங்கத் திருமேனியிலும் காண முடியாது.
ஆஞ்சநேயப் பெருமான் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து செல்லும்போது மருந்தீஸ்வரர் திருவருளால் அதிலிருந்து ஒர் பெரும் பாறை இவ்வூரில் விழுந்து சிதறியது. விழுந்ததினால் ஏற்பட்ட பள்ளம், மருந்து தீர்த்தம் என்று அழைக்கப்படும் இக்கோவிலின் திருக்குளமானது. பாறையிலிருந்து சிதறிய மூலிகைகள் இவ்வூரெங்கும் மருத்துவ தாவரங்கள் ஆகவும், முக்கிய மூலிகையான பாதிரி தல விருட்சமாகவும் ஆனது. இதனாலையே இவ்வூர் மருந்து + பள்ளம் = மருந்துப்பள்ளம் என பெயர்பெற்றது. இதுவே மருவி மருங்கப்பள்ளம் என் அழைக்கப்படுகிறது. மருந்துபுரி, ஒளஷதபுரி என்றும் இத்தலம் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

சரபோஜி மன்ணனுக்கு நோய் தீர்த்த தலம் அதனால் இவ்வாலயம் அவரால் கட்டப்பட்டதாக ஆலயவரலாறு

💥ஆலய சிறப்புகள்:
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த, திருக்குளத்து நீரே( மருந்து தீர்த்தம்) தீராத நோய் தீர்க்கும் மஹாஔஷத பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. 

திங்கட்கிழமைகளில் காலை 6.00 மணிக்கு பால் அபிஷேகம் தொடர்ந்து பூசை மிகவும் விஷேசம்
மருத்துவத் துறையைச் சார்ந்த அனைவரும் வழிபட வேண்டிய தலம் மருந்தீசுவரர், அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருத்துவராக விளங்குவதால், சகல துறை வைத்தியர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும், சித்த மருத்துவர்களும், நாட்டு வைத்தியர்களும், மருத்துவத் துறையில் படிப்பவர்களும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், விற்பனையாளர்களும், செவிலியர்களும் வழிபட வேண்டிய தெய்வமாக திகழ்கிறார். மருத்துவர்கள் தங்களது மருத்துவ சாதனங்களை இறைவன் திருபாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துச்சென்றால் அவர்களது அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் வெற்றியடையும். உடல்நிலை பாதிக்கபெற்ற அன்பர்கள் தங்களது மருந்துப் பொருட்களை இறைவன் திருவடியில் வைத்து வணங்கி, மருந்துப் பொருட்களை இறைவன் திருபிரசாதமாக உண்ணும்பொழுது வியாதி உடனே நிவர்த்தியாகும்.

அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன் தரும் தலம்
அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் மற்றும் ஞாயிறு, செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் வழிபடவண்டிய தலம் இது. பிறந்தநாள், திருமண நாள், ஜன்ம நட்சத்திர நாள், ஆகிய தினங்களில் இங்குள்ள மருந்து தீர்த்தத்தில் நீராடி ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது ஐதீகம். நோய்கள் நிவர்த்தியாகும்.

ஆலய அமைப்பு🛕
ஆலயம் கிழக்கு நோக்கிய அமைப்பில் உள்ளது. ஆலயம் அருகில் பெரிய தீர்த்தக்குளம் ஒன்றும் உள்ளது. பாதிரி மரம் உள்ளது.
கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் கடந்தால் பலிபீடம் நந்தி மண்டபம் அதன் கீழ சுவாமி சன்னதி நோக்கி மன்னர் சிலை உள்ளது.

சுவாமி மருந்தீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவரையும் அம்பாள் தெற்கு நோக்கிய கருவரையும் இணைத்து அழகிய முன் மன்டபம் கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் சுவாமி அம்பாள் நடுவில் தென்முகமாக நடராஜர் சன்னதி உள்ளது.
மண்டபமேல் விதானத்தில் ஆலய தலவரலாறு வரையப்பட்ட ஓவியங்கள் 
ஒரு மூலையில் முன்பு இருந்த அம்மன் வைத்துள்ளனர் மண்டபத்தின் ஒரு பகுதி யாக பூசை செய்வதற்கான பகுதியாக அமைத்துள்ளனர்.
ஏகப்பிரகாரம் கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி முன் மண்டப அமைப்புடன் உள்ளார். மற்றும் நர்த்தன விநாயகர் உள்ளார்
மேற்கு பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய தனிசன்னதியில் விநாயகர் மற்றொரு புறம் வள்ளி தெய்வானையுடன் முருகர்
கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர்
வடக்கில் பிரும்மா, துர்க்கை தனிசன்னதியுடன், மற்றும் சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்.
வடகிழக்கில் தனி சன்னதியில் 
மகாவிஷ்ணு, காலபைரவர், அனுகிரக சனிஸ்வரர், லெட்சுமி நாராயணர், சூரியன் உள்ளனர்.

ஆலயம் வெளியில் மதில்சுவரில் ஆலய தல வரலாறு சிற்பமாகவும் டிஜிட்டல் போர்டிலும் உள்ளது.

#பயண அனுபவக்குறிப்புகள் 🕊️
#சுப்ராம்🔱🇮🇳
ஆலயம் செல்ல நல்லசாலை வசதி உள்ளது.
ஆலயம் அருகில் வாகனங்கள் நிறுத்தலாம்
பெரியகுளம் ஆலயம் எதிரில் படித்துறையும் உள்ளது. ஆலய வெளிப்பிரகாரம் மிகவும் தூய்மையாக காணப்படுகிறது 
கும்பாபிஷேகம் நடந்து சில வருடங்கள் ஆகிறதால் ஆலயம் முழுவதும் மிகவும் சுத்தமாகவும் மிகவும் அழகாகவும் உள்ளது.

திங்கட்கிழமை விஷேச பூசை,விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்

ஆலய குருக்கள் மிகவும் அருமையான முறையில் தலவரலாறு, பரிகார பூசை, ஆலய நடைமுறை பூசை , பலன் பெறும் பக்தர்களின் அனுபவங்கள் முதலியவற்றை பொறுமையாகவும் பக்தி சிரத்தையுடனும் எடுத்து உரைத்தது மிகவும் சிறப்பு 

அவசியம் தரிசித்து பலன் பெற வேண்டிய ஆலயம்
12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்


சேதுபாபாவாசத்திரம் ஶ்ரீ ஜெயவீர ஆஞ்சனேயர் ஆலயம் 12.4.2026

சேதுபாபாவாசத்திரம் ஶ்ரீ ஜெயவீர ஆஞ்சனேயர் ஆலயம்

சேதுபாவா சத்திரத்தில் உள்ள விசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் மிகப்பழமையான பெரிய வளாகத்துடன் உள்ள அன்ன சத்திரம் வேதணையான நிலையில் உள்ளது. கருவரையில் ஜெயவீர ஆஞ்சனேயருடன் ஆலயம் ஒன்றும் சிதைந்து சிர் செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகிறது.

இது பெரிய சத்திரமாக இருந்ததாகவும், இதன் காலத்தில் மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு பத்தர்கள் தங்கி செல்ல வசதியாக அன்னதான சத்திரமாக இருந்ததாகவும் வரலாறு. 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தானமாக பிரதாப் சிம்ம மகராஜா கொடுத்ததாகவும், அதைக் கொண்டு ஸ்ரீ சேதுபாவா சுவாமிகள் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் தங்கி செல்ல நித்ய அன்னதானம் செய்து வந்த வரலாறும், உள்ளது. வருமாணம் கொண்டு, அன்னதானமும், ஆலய பராமரிப்பும், ஆலய விழாக்களும் நடைபெற்று வந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. 1739 ம் ஆண்டு முதல் 1949 வரை சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் பிற இடங்களில் இருந்தும் நெல் வருவாய் பெற்று சீரோடு விளங்கியதற்கு குறிப்புகள், இதற்கான ஆவனங்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருக்கின்றன என்ற குறிப்புகள் ஆலயத்தில் காணப்பெறுகிறது.

பெரிய வளாகம் நான்கு புறமும் மண்டபம் நடுவில் சிறிய கருவரை கிழக்கு நோக்கியது அதில் வீர ஆஞ்சநேயர் உள்ளார்

ஆலயமுன்புறமும் மன்டபம் கலை நுட்பத்துடன் வாசல் அமைப்புடன் அமைந்த தூன்கள் சிதைவுற்று உள்ளது.

12.04.2026
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
ECR - தலங்கள் - பேராவூரணி அருகில்

சேதுபாவாசத்திரம் ஸ்ரீ விசாலாட்சியம்பாள் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் சிவன்கோயில் 12.04.26

சேதுபாவாசத்திரம் 
ஸ்ரீ விசாலாட்சியம்பாள் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் சிவன்கோயில் 

தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம்

அமைவிடம்
நாகப்பட்டிணம் தூத்துக்குடி ECR பிரதான சாலையில் உள்ள ஊர்
பட்டுக்கோட்டையின் நேர் தெற்கில் 21 கிமி தொலைவில் கடற்கரையினை ஒட்டி இவ்வூர் உள்ளது. 
தல வரலாறு :
ராஜமன்னார்குடியில் அனந்தமௌனி சுவாமி என்றொரு மகான் இருந்தார், அவரது சீடர்களில் ஒருவரான மேரு சுவாமிகளுக்கு சியாமராசர், சேது சுவாமிகள் ஆகிய இரு சீடர்கள் இருந்தனர். இந்த சேது சுவாமிகள் தான் சேதுபாவா சுவாமிகள் என்றும் அழைக்கப்படுகின்றார். 
தஞ்சையை 1739 முதல் 1763 வரை ஆட்சி செய்த பிரதாப சிம்மன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, தஞ்சையில் இருந்த பீமராஜ சுவாமிகளிடம் சென்று தனக்கு துறவறம் குறித்து அருளும்படி வேண்டியபோது அவர் உனக்கான குரு மன்னார்குடியில் இருக்கும் சேதுபாவா சுவாமிகள் தான் அவரிடம் சென்று ஆசி பெறக் கூறி அனுப்பி வைக்கிறார். . அதன்படி மன்னர் சேதுபாவா சுவாமிகளிடம் சென்று ஆசி பெறுகிறார். 
பிரதாபசிம்மன் தன் குருவிற்கு தஞ்சாவூர் கீழராஜவீதியில், தன் அரண்மனைக்கு எதிரில் ஒரு மடம் கட்டிக்கொடுத்து குரு காணிக்கையாக பொன்னும், பொருளும் கொடுத்து கௌரவித்தார். சுவாமிகளின் பெயரில் மன்னார்குடியில் ஓர் அன்ன சத்திரமும், அரித்ரா நதி என்னும் பெரிய குளமும் குளக்கரையில் கோயிலும் உருவாக்குகிறார். பட்டுக்கோட்டை கிழக்கில் கடற்கரை ஒட்டி சேதுபாவா சத்திரம் என்னும் ஊரையும் உருவாக்குகிறார். இது தான் சேதுபாவாசத்திரம் உருவான கதை. 

தல சிறப்புகள்:
த்ரேதா யுகத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ராமேஸ்வரம் சென்ற போது இந்த ஊரில் தங்கி கடலில் நீராடி முன்னோர்களுக்கு வழிபாடு செய்ததால் இந்த ஊருக்கு ஸ்ரீ ராமசந்திரபுரம் என பெயர் விளங்கி வந்தது. 1676 ஆம் ஆண்டு மராட்டிய மன்னர் சிவாஜி மகராஜாவின் குரு ராமதாஸ சுவாமிகள் இங்கு தங்கி கடலில் நீராடி பின்னர் ராமேஸ்வரம் சென்றார். பிரதாப சிம்ம மகாராஜாவின் குருவாகிய சேதுபாவா சுவாமிகள் இந்த ஊரில் நித்ய அன்ன சத்திரமும் ஆஞ்சநேயருக்கு ஒரு ஆலயமும், காசியில் இருந்து கொணரப்பட்ட லிங்கத்தை வைத்து 1750ல் ஒரு சிவன்கோயில் கட்டி குடமுழுக்கு செய்தார். 
இக்கோயிலுக்கு பிரதாப சிம்மன் இருபதாயிரம் ஏக்கர் நிலங்கள் தானமாக கொடுத்து அதில் கிடைக்கும் வருவாயில் அன்னதானம் செய்ய வழிவகை செய்திருந்தார். சேதுபாவாசத்திரம், ஊமத்தநாடு, ஆண்டிக்காடு மருங்கப்பள்ளம், மன்னார்குடி, வேட்டைதிடல், கீழையூர் செட்டியமூலை கீழசாந்தான்மங்கலம் அன்னவாசல் ஆகிய கிராமங்களில் இந்த நிலங்கள் உள்ளன. 
இத்தல பெருமை உணர்ந்து காஞ்சி மகா பெரியவர் இங்கு தங்கி சென்றுள்ளார்.

இங்கு வந்து வழிபடுவதன் மூலம் பித்ருசாபம் பிரேதசாபம் குருசாபம் நீங்கி முன்னோர்கள் ஆசியினை பெற்று வாழலாம்.

ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய திருக்கோயில், கோயிலின் பின்புறம் நீளவாக்கில் உள்ள ஒரு பெரிய நன்னீர் குளம் உள்ளது. 
இறைவன் காசிவிஸ்வநாதர் இறைவி காசிவிசாலாட்சி 
இறைவன் நடுத்தர அளவில் லிங்கமூர்த்தியாக உள்ளார். அவரது கருவறை கருங்கல் கொண்டு கட்டப்பட்டு உயர்ந்த விமானம் கொண்டுள்ளது. அதன்முன்னர் இடைநாழி அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் உள்ளது. அதில் தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதி இணைகிறது. முகமண்டபத்தின் வெளியில் நந்தி மண்டபம் அடுத்து உயர்ந்த கொடிமரம் உள்ளது. பிரகார சுற்றில் கோஷ்டங்களில் தக்ஷ்ணமூர்த்தி உள்ளார். முகப்பில் சிம்ம தாங்கு தூண்கள் கொண்டு ஒரு முகப்பு மண்டபம் உள்ளது. வடக்கில் துர்க்கை மட்டும் உள்ளார். பிரகார சிற்றாலயத்தில் விநாயகர் முருகன் உள்ளனர். வடகிழக்கில் நவகிரக மண்டபம் உள்ளது. ஐயப்பனுக்கு ஒரு சிற்றாலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இது சமீபத்தியதாக இருக்கலாம், மதில் சுவரை ஒட்டி, தெற்கு நோக்கி மாடத்தில் இருப்பது யாரென விளங்கவில்லை மேற்கு நோக்கிய மாடங்களில் பைரவர் சூரியன் சந்திரன் உள்ளனர். 
தலம் தீர்த்தம் மூர்த்தி சிறப்பு என்பது மட்டுமன்றி, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தொடங்கி பல மகான்கள், மகாராஜாக்கள் லட்சக்கணக்கான ராமேஸ்வர யாத்ரிகர்கள் பாதம் பட்ட மண். இதில் நம் காலடி பதிவதும் சிவானுக்ரஹம் தான். 
நன்றி🙏 வலைதள பதிவுகளில் இருந்து ....

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#சுப்ராம்🔱🇮🇳
ஆலயம் நகரின் மத்தியில் புனருத்திரானம் செய்யப்பட்டு உள்ளது 
இவ்வாலயம் ஒட்டி மிகப்பழமையான பெரிய வளாகத்துடன் உள்ள அன்ன சத்திரம் வேதணையான நிலையில் உள்ளது. கருவரையில் ஜெயவீர ஆஞ்சனேயருடன் ஆலயம் ஒன்றும் சிதைந்து சிர் செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகிறது. 
இது பெரிய சத்திரமாக இருந்ததாகவும், இதன் காலத்தில் மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு வபத்தர்கள் தங்கி செல்ல வசதியாக அன்னதான சத்திரமாக இருந்ததாகவும் வரலாறு. 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தானமாக பிரதாப் சிம்ம மகராஜா கொடுத்ததாகவும், அதைக் கொண்டு ஸ்ரீ சேதுபாவா சுவாமிகள் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் தங்கி செல்ல நித்ய அன்னதானம் செய்து வந்த வரலாறும், உள்ளது. வருமாணம் கொண்டு, அன்னதானமும், ஆலய பராமரிப்பும், ஆலய விழாக்களும் நடைபெற்று வந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. 1739 ம் ஆண்டு முதல் 1949 வரை சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் பிற இடங்களில் இருந்தும் நெல் வருவாய் பெற்று சீரோடு விளங்கியதற்கு குறிப்புகள், இதற்கான ஆவனங்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருக்கின்றன என்ற குறிப்புகள் ஆலயத்தில் காணப்பெறுகிறது.

இந்த இடத்தில் இருந்து கொண்டு தான் அருகில் உள்ள ஸ்ரீ விசாலாட்சியம்பாள் சமே ஸ்ரீகாசி விஸ்வநாதர் சிவாலயம் எழுப்பப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பலன் வேண்டி அவசியம் தரிக்க வேண்டும்.

12.04.2026
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
ECR - தலங்கள் - பேராவூரணி அருகில்

எட்டுக்குடி முருகன் கோவில்

எட்டுக்குடி முருகன் கோவில்  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது 800 ஆண்டுகள் பழமையானது. இது ஆடிப்படை வீடு என்று போற்றப்படுகிறது....