Saturday, May 30, 2026

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் 17.05.26 தரிசனம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் 
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் , அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றது. 
திருத்தளிநாதர் கோவில்
இறைவன் திருநாமம் திருத்தளி நாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி.

அமைவிடம்
இத்தலம் தமிழ்நாடு , சிவகங்கை மாவட்டம் ,திருப்பத்தூரில் மதுரை-காரைக்குடி அல்லது மதுரை-புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது.
 காரைக்குடியில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 35 கி.மி. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 65 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது. 
சிறப்புகள்
இத்தலத்தில் பெருமான் ஆடியருளிய கௌரி தாண்டவத்தைக் கண்டு இலட்சுமி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.

சுவாமி : திருத்தளி நாதர்.
அம்பாள் : சிவகாமி.
மூர்த்தி : சோமாஸ்கந்தர்.
தீர்த்தம் : ஸ்ரீதளி தீர்த்தம்.
தலவிருட்சம் : கொன்றை.
தலவரலாறு
திருப்புத்துரின் புராண பெயர் கொன்றைவனம். இவ்வூர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சரக்கொன்றை மரங்கள் நிறைந்த கொன்றை வனமாக திகழ்ந்துள்ளது. தவம் செய்வதற்கு ஏற்ற பூமியாக சிறந்த தவநிலையுடைய இடம் என்ற பேறுபெற்ற ஸ்தலமாக இருந்துள்ளது. இதனை தொடர்ந்து எண்ணற்ற முனிவர்களும் சாதுக்களும் இவ்வூரில் தொடர்ந்து தவம் செய்து வந்துள்ளனர். முனிவர்களும் சாதுக்களும் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் அசையாது அமர்ந்து தவம் செய்தமையால் அவர்களை சுற்றி கரையான் புற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்விடம் முழுவது பல புற்றுகள் காணப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் இவ்விடத்தை புத்தூர் என அழைக்க ஆரம்பித்து நாளடைவில் திரு என்ற அடைமொழி சேர்ந்து திருப்புத்தூர் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு
இக்கோயில் ராஜகோபுரம், பிரகாரங்கள், முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர், யோகநாராயணர், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், நடராஜர்-சிவகாமி, சந்திரசேகரர் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.

முன்மண்டபம்
முன்மண்டபத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பிள்ளையார், பொல்லாப்பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், பைரவர், சூரியதேவர், சரஸ்வதி, லட்சுமி, சந்திரன் ஆகியோர் காணப்படுகின்றனர். இந்த மண்டபத்தில் உள்ள ஆடல்வல்லான் சன்னதியின் தூண்கள் கலை வேலைப்பாடுகளுடன் உள்ளன.

உட்பிரகாரம்
உட்பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், 27 நட்சத்திரங்கள், வீரபத்திரர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திரானி, சாமுண்டி, விநாயகர், சேஷ்டாதேவி, பிரகார விநாயகர், வர்ணலிங்கம் ஆகியவை உள்ளன. அப்பிரகாரத்தில் கருவறைக்குப் பின்னர் சரக்கொன்றை மரம் உள்ளது. அருகே வால்மீகி தவமிருந்ததாக ஒரு இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து அகத்திய முனிவர் பூசை செய்த அகத்தியலிங்கம் ஒரு சன்னதியில் உள்ளது. தொடர்ந்து உட்பிரகாரத்தில் யோகநரசிம்மப்பெருமாள், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை ஆகியோர் உள்ளனர்.

வெளிப்பிரகாரம்
வெளிப்பிரகாரத்தில் வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதியும், வன்னிமர விநாயகர் சன்னதியும் உள்ளன. அதே பிரகாரத்தில் யோக பைரவர் சன்னதியும், திருநாகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. அதற்கடுத்து சிவகாமி அம்மன் சன்னதி உள்ளது.

ஆலயச் சிறப்பு
இங்கு உறைந்திருக்கும் இறைவன் புத்தூரீசர் என்றும் திருத்தளிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். அன்னை சிவகாமி அம்பாளாக, சௌந்தரநாயகியாக அருள் பாலிக்கிறார்.

கௌரி தாண்டவத்திருத்தலம்
திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

தலச்சிறப்பு : 
இத்தல இறைவன் தானே தோன்றிய லிங்கமாக அருள்பாலிக்கிறார். அஷ்ட பைரவர் தலம். சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 196 வது தேவாரத்தலம் ஆகும்.

யோக பைரவர்
இந்தத் தலத்தின் திருத்தளிநாதரைத் தரிசிக்க வந்த காசி பைரவரே, இங்கு யோக பைரவராக அருள்கிறார் என்பது ஐதீகம். ஆக, இவரை ஆதி பைரவர் என்றும் போற்றுகிறார்கள். நம் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அருளும் பைரவ மூர்த்திகளும் இவரிடமிருந்தே தோன்றியதாக திருத்தளிநாதர் கோவில் தல வரலாறு சொல்கிறது.

இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. . பூஜை முதலியன முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு உக்கிரமானவர்.

இவரை, குலதெய்வமாகக் கொண்ட மருது சகோதரர்கள், எப்போது போருக்குச் சென்றாலும் இந்த யோக பைரவரை வழிபட்ட பிறகுதான் செல்வார்களாம்.

இக்கோவிலில் தனிச் சன்னதியில் யோகபைரவர் எழுந்தருளி இருக்கிறார். இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் 'யோக பைரவர்' என்று அழைக்கப்படுகின்றார். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு நாய் வாகனம் கிடையாது.
இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம். இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று.

இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீ யோக நாராயணர் சந்நிதி. 
ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். 
யோக பைரவர் சந்நிதியை அடுத்து பிராகாரம் வலம் வரும்போது நாகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத்திருத்தலத்தில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இந்திரனின் மகன் ஜயந்தன் இங்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

கோவிலுள் உள்ள நடராஐரின் உருவமும் சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கன. இங்கு நடராஐர் கெளரி தாண்டவ மூர்த்தியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.

அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்களும் இங்குள்ளன.

 துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றாள். ஸ்ரீ விநாயகரும் வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால் யோகத்துக்கும் தவத்துக்கும் இதுவோர் அற்புதமான திருத்தலமாக விளங்குகின்றது. இத்தலத்திலும் பிரான்மலையில் உள்ளது போலவே நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.
காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில் கண்டராமாணிக்கம் 17.05.2026 தரிசனம்

பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில் கண்டராமாணிக்கம்

⛳அமைவிடம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் கண்டரமாணிக்கம் என்னுமிடத்தில் அமைந்துள்ள பெரிச்சி கோவில் (சுகந்தவனேஸ்வரர் கோவில்) ஒரு பழமையான சிவன் கோயிலாகும்.
பட்டமங்கலம் தட்சிணா மூர்த்தி ஆலயம் மிக அருகில் உள்ளது
திருப்பத்தூரிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது
💥சிறப்புகள்
இறைவன்: சுகந்தவனேஸ்வரர் 
  (எ) ஆண்ட பிள்ளை நாயனார் 
இறைவி: சமீபவல்லி அம்பாள்
தல விருட்சம்: வன்னி
இக்கோயில் சித்தர் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர் மற்றும் கடுமையான சக்தி வாய்ந்த காசி பைரவருக்காக மிகவும் பிரசித்தி பெற்றது.
வன்னி மரத்தடி ஒற்றை சனிஸ்வரர் தனித்துவமானது
🛕ஆலய அமைப்பு
கிழக்குப்பார்த்த அமைப்பில் உள்ளது
முன்வாசல் காட்சி கோபுர அமைப்பு
உள் நுழைவில் அகண்ட பிரகாரம் இடதுபுறம் வன்னி மரத்தடியில் விநாயகர் 
நாகர் உள்ளனர் 
கல் மன்டபத்தில் கொடி மரம் பலிபீடம் அடுத்து நந்தியம் பெருமான் உள்ளார். சுவாமியை நோக்கியிருக்கிறார். சிறிய முன்மண்டபம் தாண்டி உள்ளே
கிழக்கு நோக்கிய கருவரையில் சுவாமி
சுகந்தவனேஸ்வரர் (எ) ஆண்ட பிள்ளை நாயனார் உள்ளார். சுவாமி சுவாமி கருவறை வலது புறம் அம்பாள் சமீபவல்லி அம்பாள் தனி சன்னதி கருவறை முன் மண்டபம் நந்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது
கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி துர்க்கை தனி சண்டேஸ்வரர் சன்னதியும் உண்டு
பிரகாரத்தில் கன்னி மூலையில்
விநாயகர் சன்னதி மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தனி சன்னதியில் உள்ளார் 
காசி நவபாஷாண பைரவர் சன்னதி
வடக்கு பிரகாரத்தில் அம்பாள் சன்னதி
அடுத்து மேற்கு நோக்கி தனி சன்னதியில்
காசி நவபாஷாண பைரவர் உள்ளார்.

சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட 2 அடி உயரமுள்ள பைரவர் சிலை தனி சன்னதியில் கருவறையுடன் மேற்கு பார்த்து இங்குள்ளது. பழனி தண்டாயுதபாணி சிலைக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த சிலை, பிட்சாடணர் தோற்றத்தில் சற்று உடலைச் சாய்த்து காட்சி தருகிறது.
கபால மாலை அணிந்தவர் வலது இடது இரண்டு பக்கங்களிலும் நான்கு திருக்கரங்கள் உடையவர் ஒவ்வொரு கையிலும்தீமைகளை அழிக்கும் ஆயுதங்களை உடையவர் குறிப்பாக இடது நான்காவது திருக்கரம் ஒரு தீய அரக்கன் தலையை வெட்டி கையில் பிடித்துள்ளார்
அந்தத் தலையில் இருந்து சொட்டும் குருதியை பைரவர் வாகனமாகிய நாய் சுவைத்த வண்ணம் உள்ளது 
பைரவர் கருவறையின்முன் மண்டபத்தில் தனி பைரவர் ஒன்றும் உள்ளது

அதிசய சக்தி: மூலவர் காசி பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் மற்றும் வடை மாலை பிரசாதம் பக்தர்களுக்குத் தரப்படுவதில்லை. அவற்றின் வீரியம் மிக அதிகமாக இருப்பதால், வடை மாலைகள் கோயிலின் மேல் பகுதியில் போடப்படுகின்றன. 
தோஷ நிவர்த்தி: பித்ரு தோஷம், ஸ்திரீ தோஷம் மற்றும் கடுமையான சனி தோஷங்களை நீக்க பக்தர்கள் இங்குள்ள பைரவரை வழிபடுகிறார்கள்.
சனீஸ்வரர் சன்னதி
பைரவர் சன்னதிக்கு அடுத்து பின்புறம் வன்னி மரத்தடியில்ஒற்றை சனீஸ்வரர் எழுந்தருளி உள்ளார்
சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். வன்னி மரத்தின் அடியிலிருந்து அவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்கிறார்கள். பௌர்ணமி அன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

சிவகங்கை தேவஸ்த்தான நிர்வாகத்தில் உள்ள ஆலயம்
வழிபாட்டு நேரம்: 
தேய்பிறை அஷ்டமி நாட்கள் பைரவர் வழிபாட்டிற்கு மிகவும் விசேஷமானவையாகும். சாதாரண நாட்களில் பகலில் திறந்திருக்கும் திறந்திருக்கும் மாலை 6 மணி வரை தரிசிக்கலாம் 
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில் 17.05.2026 தரிசனம்

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, 7 கி.மீ. தொலைவில் உள்ள பட்டமங்கலம் ஒரு குருஸ்தலமாக விளங்குகிறது.
⛳அமைவிடம்: 
சிவகங்கையில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலும் பட்டமங்கலம் அமைந்துள்ளது. நல்ல சாலை வசதி உள்ளது.
 திருப்பத்தூர் மற்றும் சிவகங்கையில் இருந்து இக்கோயிலுக்குச் செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. அருகில் உள்ள காரைக்குடி மற்றும் மதுரையில் இருந்தும் சாலை வழியாக எளிதில் சென்றடையலாம்.
💥சிறப்பு
 இந்தியாவிலேயே தட்சிணாமூர்த்தி (குரு பகவான்) தெற்கு திசையைப் பார்க்காமல், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் ஒரே தலம் இதுவாகும்.
மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில் இந்தக் கோயிலைப் பற்றிப் பாடியுள்ளார்

🛕ஆலய அமைப்பு /வரலாறு
மிகப்பெரிய வளாகப்பகுதியில் ஆலமரம் படர்ந்து பல கிளை விழுதுகள் அமைப்புடன் பெருகி வளர்ந்து உள்ளது.
ஆலமரத்தின் கீழ் அதன் கிழக்குப் புறத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதியும் அதனை அடுத்து 5 நிலை கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அழைக்கப்பட்டுள்ளது.
மையக் கோயில் மிகவும் பழமையானதாகக் கருதப்பட்டாலும், இங்குள்ள அசல் கோயில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது. இன்று நாம் காணும் கட்டமைப்பு கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது, பல புதுப்பித்தல்களுடன், நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரால் வெற்றிகரமாகக் கட்டப்பட்டது. இதை ஒரு தனியார் கோயிலாக வைத்திருக்க சட்டப் போராட்டங்களை நடத்தினார். இங்குள்ள முதல் கோயில் தட்சிணாமூர்த்தி சன்னதி என்றும், பின்னர்தான் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் மற்றும் பிற தெய்வங்களின் சன்னதிகள் கட்டப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன

முன்காலத்தில் ஆலமரத்தின் அடிப்புறத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்து பின் 1930 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டியபோது ஆலயத்திற்குள் வைத்து வழிபாடு தொடர்கிறது.
🔱சிவன் ஆலயம் உள் மண்டபம் அர்த்த மன்டபம் கருவரைகள் கொண்டது. கிழக்கு நோக்கிய கருவறையில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரும், தெற்கு நோக்கிய அமைப்பில் உள்ள கருவரையிலிருந்து ஶ்ரீ மீனாட்சியம்மனும் அருள்பாலிக்கிறார்கள். 
மற்றும் நடராஜர் சன்னதி பள்ளியரை முதலியவைகள் உள்ளன. பிரகாரத்தில் விநாயகர் உள்ளார் தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரும்மா, துர்க்கை சன்டிகேஸ்வரர் மற்றும் பைரவர், நவகிரகங்கள், சூரியன் சந்திரன் உள்ளனர்
புராணங்களிலிருந்து பல்வேறு காட்சிகள்.
கல் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆலயம் நுழைவில் உள்ள காளி மற்றும் ஊர்த்துவதாண்டவர் சிலைகள் அற்புதம்.
மேலும் கண்ணப்பர் கஜசம்கார மூர்த்தி முதலிய பல்வேறு சிலைகள் மன்டபத் தூன்களில் சிறப்பு கற்களால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது 
மையக் கோயிலின் பெரும்பகுதி கருப்பு கிரானைட்டால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் விதிவிலக்கான கட்டிடக்கலையை சித்தரிக்கிறது. 

இந்தக் கோயிலுக்கும் மதுரைக்கும் இடையே சில தொடர்புகள் உள்ளன. திருவிளையாடல் புராணத்தின் வீடாகக் கருதப்படும் மதுரையிலிருந்து சிவன் இங்கு வந்ததால், இந்தக் கோயிலில் உள்ள மூலவரும் அம்மனும் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி என்று அழைக்கப்படுகிறார்கள். கோயிலின் மேற்கில் மிகப் பெரிய கோயில் குளம் உள்ளது, நடுவில் ஒரு தனி மண்டபம் உள்ளது. மதுரையைப் போலவே, இந்த குளத்திலும் பண்டைய காலத்தில் ஒரு தங்கத் தாமரை (போர்-தாமரை) இருந்ததாகக் கூறப்படுகிறது.

முருகன் கோயிலின் நுழைவாயிலில், அஷ்டம-சித்தி சுப்பிரமணியராக இருக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறமுள்ள உள்கோயிலில், ஐந்து தலைகளுடன் கூடிய சண்முகநாதர், வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
🔱 தட்சினாமூர்த்தி ஆலயம்
சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வடக்கே தனி ஆலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி உள்ளது, சிவன் கோயில்களில், தட்சிணாமூர்த்தி பொதுவாக கோஷ்டத்தில் காணப்படுகிறார். கர்ப்பகிரகம் தெற்கு நோக்கி உள்ளது. இருப்பினும், இங்கே, கோஷ்டத்தைத் தவிர, தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கிய ஒரு தனி சன்னதியில் இருக்கிறார், இது தமிழ்நாட்டில் தட்சிணாமூர்த்தியின் ஒரே பிரதிநிதித்துவமாக இருக்கலாம்,
பொதுவாக எல்லாத் தலங்களிலும், கல்லால் ஆன ஆலமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்குதான் உண்மையான ஆலமரத்தடியில் உள்ளார்.
கருவறையில் தட்சிணாமூர்த்தி, புன்னகை தவழும் முகத்துடன் பிறைமதி, கொன்றை மலர்களால் ஆன கிரீடம், நான்கு கரங்களுடன் அக்னி, ஞான-முத்திரை மற்றும் பாம்பைக் காட்டுகிறது, அவரது கீழ் இடது கை அவரது தொடையில் உள்ளது. வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞான முத்திரையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, இடது கீழ்க்கரத்தை தொடையில் வைத்தபடி காட்சியளிக்கிறார்.

மேலும் சன்னதிக்குப் பின்னால் ஒரு பெரிய ஆலமரம் உள்ளது, அதன் கீழ் ஆறு கிருத்திகைகளின் மூர்த்திகள் உள்ளன.

இக்கோவிலின் மூலவராக தட்சிணாமூர்த்தி உள்ளார். தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரை குளமும் உள்ளது.

🛐தலசிறப்புகள்
மூலவர்: இக்கோயிலின் மூலவராக சிவபெருமான் வீற்றிருந்தாலும், குரு தட்சிணாமூர்த்தியே பிரதான தெய்வமாக வழிபடப்படுகிறார்.
தல விருட்சம்: கற்பனை அல்லாமல், கோயிலின் பின்புறம் உண்மையான பெரிய ஆலமரம் தலவிருட்சமாக உள்ளது.

சிவனின் பாதங்கள் இந்த இடத்தைத் தொட்டதாலும் (பட்ட, தமிழில்) கிருத்திகைகள் கன்னிகைகளாக இருந்ததாலும் (தமிழில் மங்கை), இந்த இடத்திற்கு பட்டமங்கை என்ற பெயர் வந்தது. காலப்போக்கில், இது பட்டமங்கலம் என்று அழைக்கப்பட்டது. இங்கிருந்து குறிப்பை எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் பட்டமங்கலம் என்று அழைக்கப்படும் பல இடங்கள் உள்ளன.
இருப்பினும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டில் மிகவும் பிரபலமான தெய்வமாக இருக்கும் பிற கோயில்கள் உள்ளன. இந்த கோயில் ஒரு குரு ஸ்தலம், மேலும் ஒரு குரு பரிகார ஸ்தலம்.

📚தல புராணம்
ஒருமுறை, கைலாசத்தில், சிவனும் பார்வதியும் பிருங்கி முனிவருக்கு முருகனின் மகத்துவம் மற்றும் அஷ்டம-சித்திகளைப் பற்றிய அறிவைப் பற்றி உபதேசித்துக் கொண்டிருந்தனர். மிக இளம் வயதிலேயே. அந்த நேரத்தில், ஆறு கிருத்திகைகளான – அம்பா, அபரகேந்தி, தேகாந்தி, நிதர்தானி, வர்தயேந்தி, மற்றும் துலா – இறைவனை அணுகி, அஷ்டம சித்திகளைப் பற்றி தங்களுக்குக் கற்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆரம்பத்தில் சிவன் தயங்கினாலும், பார்வதியின் வற்புறுத்தலுக்கு இணங்க, அவர் சம்மதித்து தனது அறிவுறுத்தலைத் தொடங்கினார். ஆனால் கன்னிப்பெண்கள் திசை திருப்பப்பட்டு, கவனத்தை இழந்தனர். சிவன் அவர்களை இந்த இடத்திற்கு வந்து ஆயிரம் ஆண்டுகள் பாறைகளின் வடிவத்தில் தவம் செய்ய சபித்தார். அந்தக் காலத்திற்குப் பிறகு, சிவனே மதுரையிலிருந்து தட்சிணாமூர்த்தி வடிவில் இங்கு வந்து, கிருத்திகர்களின் தவத்தை ஏற்றுக்கொண்டு, அவரது உபதேசத்தை நிறைவு செய்தார்.

எட்டு சித்திகளும் அல்லது அறிவின் அம்சங்களும் உள்ளன, அவை கூட்டாக அஷ்டம-சித்தி என்று அழைக்கப்படுகின்றன, அவற்றின் அறிவு ஒருவருக்கு சில அம்சங்களின் சக்தியை அளிக்கிறது. இயற்கை. (எட்டு சித்திகளும்: அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாம்யா, இசித்வா மற்றும் வசித்வா).

கிருத்திகைகளை சிவனிடம் பரிந்துரைத்தது பார்வதி தேவி என்பதால், அவளும் இங்குள்ள நாவல் மரத்தடியில் காளியாக தவம் செய்ய வேண்டியிருந்தது. சிவன் தட்சிணாமூர்த்தியாக இங்கு வந்தபோது அவள் மீட்கப்பட்டாள்.
இந்தக் கதை 64 திருவிளையாடல்களில் 33வது கதையாகவும் கருதப்படுகிறது
(அல்லது தெய்வீக நாடகங்கள்) சிவனின் மேலும் இந்த ஸ்தல புராணத்தின் காரணமாக, இந்த இடம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் என்று பிரபலமாக அறியப்படுகிறது.

📚தலபுராணம் 2
ஒருமுறை, ஹிரண்யகசிபு கடம்ப ரிஷியின் தவத்தைத் தொந்தரவு செய்தார், மேலும் அவர் இங்கு வருகை தரும் போது அவரது வீழ்ச்சி தொடங்கும் என்று சபிக்கப்பட்டார், அது (சுவாரஸ்யமாக, இங்கிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இரணியூர் கோயிலின் புராணம், ஹிரண்யகசிபுவை வதம் செய்யும் நரசிம்மராக விஷ்ணுவுடன் தொடர்புடையது). கோயிலுக்கு மிக அருகில் அடைக்கலம் காத்த அய்யனாருக்கான அய்யனார் கோயில் உள்ளது, அவர் கடம்பனின் வெளிப்பாடாக நம்பப்படுகிறது.
🛐வழிபாட்டு முறைகள் மற்றும் பலன்கள்
108 முறை வலம் வருதல்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி மற்றும் தலவிருட்சமான ஆலமரத்தையும் சேர்த்து 108 முறை வலம் வந்தால் உயர்கல்வி, நல்ல வேலை, திருமணத்தடை நீங்குதல், மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத்தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி பெருவளம் ஏற்படும் என்பது நம்பிக்கை. விரும்பிய காரியம், வாழ்க்கையில் அமைதி, குழந்தை பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளால் அடையலாம் என்பது ஐதீகம்.
குரு ஓரை: வியாழக்கிழமை வரும் குரு ஓரை நேரத்தில் (மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரை) செய்யப்படும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் மிகவும் விசேஷமானவை.
இந்த தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். பக்தர்கள் இந்த ஆலமரத்தில் பிரார்த்தனையை கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும், மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன.
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயம் 17.05.2026 தரிசனம்

திருகோஷ்டியூர்
சௌமிய நாராயணப்பெருமாள் ஆலயம்

தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி.
⛳அமைவிடம்
மதுரையிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் திருக்கோஷ்டியூரில் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
⭐சிறப்பு:
நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தல் விஷ்ணு எழுந்தருளினார். தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.

⭐கோபுர விமானத்தின் சிறப்பம்சம்

மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. மேல் பகுதி தங்கத்தால் கவசம் அணியப்பட்டுள்ளது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம் ஒரு சில கோயில்களில் மட்டும் அமைந்துள்ளது.

விளக்கு நேர்த்திக்கடன்
மகப்பேறு கிடைக்க, திருமகள் தாயாருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் அப்பேறு கிடைப்பதாக தொன் நம்பிக்கை.
🛕ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய ஆலய அமைப்பு கிழக்கு கோபுரம் 5 நிலை உடையது
ஆலயம் உள்ளே பிரகார மண்டபம் Sheet போடப்பட்டு உள்ளது. நீண்ட பெரிய மண்டபம் அடுத்து ஆலயம் உள் நுழைவில் இடது புறம் தனி சன்னதியில் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் கிழக்கு நோக்கி அருள்காட்சி தருகிறார் 
கருவரை முன்புறம் முனிவர்கள் மற்றும் 
கருவரை இரு புறங்களிலும் சிறிய விநாயகர் நாகர் மற்றும் சற்று பெரிய உருவத்துடன் தண்டாயுதபாணி உள்ளனர். பிரகாரத்தில் கன்னி மூலையில் தனி விநாயகர் உள்ளார்.
இவர்களை வணங்கிய பின்னர் ஆலயம் உட்புறத்தில், கிழக்கு நோக்கிய சன்னதியில் வேணுகோபாலர் தரிசித்து
இடதுபுறம் உள்ளபடிகட்டுகளில் ஏறி
முன்மண்டபத்தில் உள்ள கருடாழ்வார்
மற்றும் கிழக்கு நோக்கிய கருவரையில் கிடந்து அருள்பாலிக்கும் செளமிய நாராயணர் சயன கோல தரிசனம் செய்ய வேண்டும். பின் படிகள் இறங்கி கிழக்கு நோக்கிய அமைப்பில் உள்ள
 மகாலெட்சுமி தாயார் சன்னதியில் அவரை வணங்கி அதன்பின் குறுகிய படிகள் வழி ஏறி விமானத்தில் நடுவில் உள்ள நின்ற கோலத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேதரராக இருக்கும் பெருமாளை தரிக்க வேண்டும். இதை அடுத்து மேலும் சில குறுகிய படிகளில் மேல் ஏறி அஷ்ட்டாங்க விமானத்தின் உள்ள அமர்ந்த கோலப்பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.
அதன் பின் அஷ்ட்டாங்க விமானத்தில் உள்ள மிகக் குறுகிய வாசல் வழியாக நுழைந்து சென்று தெற்குப்புறத்தில் நின்று ஸ்ரீ ராமானுஜர் மோட்சத்தை தரும் மந்திரத்தை பொதுமக்களுக்கு அறிவித்த இடத்தைக் கண்டு தரிசித்து அங்கிருந்து திருக்கோஷ்ட்டியூர் நம்பிகளின் மடத்தை  
கண்டு தரிசிக்க வேண்டும். பின் வந்த வழியே படிகள் இறங்கி மீண்டும் மகாலெட்சுமி சன்னதி சுற்றி ஆலய பிரகாரம் வலம் வர வேண்டும்.

💥குறுகலான படிகள் குனிந்து நிமிர்ந்து செல்லும் பாதை உடல் நலத்தில் தகுந்த அக்கரையுடன் எச்சரிக்கையுடன் மேலே சென்று தரிசித்து வர வேண்டும்.

⭐பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் . அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மருக்கு அருகில் ராகு, கேது உள்ளனர்.
⭐இவ்வாலயத்தை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் திருமழிசையாழ்வார் பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
💥விழாக்கள்
சித்திரை பிரம்மோற்சவம், மாசியில் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு. மேலும் வைகுண்டஏகாதசி நவராத்திரி

💥சிறப்பான ஆலயம் சிவகங்கை சமஸ்த்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆலயம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
💥108 திவ்ய தேசத்தில் இவ்வாலயம் முக்கியானது என்பதால் பக்தர்கள் வருகை எப்போதும் உண்டு.

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

மானாமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி சோமநாத சுவாமி திருக்கோயில், 17.05.26

மானாமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி சோமநாத சுவாமி திருக்கோயில், சிவகங்கை மாவட்டம்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ள ஆனந்தவல்லி சமேத சோமநாதசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு வரலாற்று மற்றும் ஆன்மீகத் தலமாகும். வைகை ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது.
அமைவிடம்: மதுரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பிரதான சாலையில் சுமார் 50 கி.மீ தொலைவில் மானாமதுரை அமைந்துள்ளது. மானாமதுரை பேருந்து நிலையம் மற்றும் தொடருந்து நிலையத்திலிருந்து எளிதாக இக்கோவிலை அடையலாம்.
கோவிலின் சிறப்பம்சங்கள்:
மூலவர்: சோமேஸ்வரர் (சோமநாதர்) 
அம்மன்: ஆனந்தவல்லியம்மன்

தல சிறப்பு: இங்கு சிவன் வெள்ளை சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருவிழா:
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாள் நடைபெறும் திருவிழாவும், ஆடியில் தேர்த் திருவிழாவும் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், பிரதோஷ நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.
ஆலய அமைப்பு
🛕பஞ்சநிலை கோபுரம், கோயிலின் ராஜகோபுரத்தில் இத்தலத்தில் நடந்த அற்புத சம்பவங்களை விளக்கும்படியாக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
🛕திருத்தலவிமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சந்திரன் 
தனிச்சன்னதியில் தனது மனைவியரில் இருவருடன் ஒரே கல்லில் காட்சி தரும் அற்புதத்தலம்.

🛕 பிற்காலத்தில் இந்த ‌கோயில் பிரளயத்தால் அழிந்திட இறைவனின் அருட்கட்டளைப்படி ஸ்தூலகர்ண மகாராஜா மீண்டும் இக்கோயி்லை புதுப்பித்துக் கட்டினார்.

🛕மானாமதுரை வைகை நதி மேற்குக்கரை ஓரத்தில் கிழக்கு முகமாக ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் அமைந்துள்ளது. தனித்தனி சன்னதிகளில் சுவாமி, அம்பாள் காட்சி தருகின்றனர்.

🛕மூலவர் சோமநாதர் சுயம்புலிங்கமாக வெள்ளை நிறத்தில் (அமர்நாத் பனிலிங்கத்தை போல) காட்சி அளிப்பது இத்தலத்தில் மட்டுமே. 

 🛕இக்கோவிலில் சந்திரன் வழிபட்டதன் அடையாளமாக, ராஜகோபுரத்தில் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
🛕மகாயோகி சித்த புருஷரான சதாசிவ பிரம்மேந்திராள் இத்தலத்தில் ஜோதி ரூபமாக காட்சி தந்து சமாதி அடைந்துள்ளார். அவரது சன்னதி,
சோமநாதர் சன்னதிக்கு பின்புறம் உள்ளது. மேலும் இவர் சமாதி அடைந்த ஐந்து இடங்களில் இத்தலமும் ஒன்று
🛕சிவபெருமானுக்கு மேற்குப்பகுதியில் விருஷபம், சூலத்துடன் கூடிய சிலை உள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.

தலபெருமை: 
💥சிவபெருமான் தனது 64 திருவிளையாடல்களில் ஒன்றாக, மாணிக்கவாசகப் பெருமானுக்கு சிவபெருமான் அருட் கருணை புரியும் பொருட்டு நரிகளைப் பரிகளாக மாற்ற கயிறு செய்தது இந்த தலத்தில் தான்

💥ஸ்ரீராமர், அகத்தியரின் ஆலோசனைப்படி இங்கு வந்து இறைவனைப் பூஜித்து அதன் பின்பு சேது அமைத்து இலங்கைக்குச் சென்று முடிசூடினார். 

💥ராமன் ராவணனுடன் போர் புரிந்த போது ராமருடன் வந்த வானர சேனைகள் இங்கு பசி தீர்த்து இளைப்பாறினர். அதனால் வானரவீரமதுரை என்று அழைக்கப்பட்டது. தற்போது மருவி மானாமதுரை என்றும் அழைக்கப்படுகிறது.

💥 பலராமர் தனது தீர்த்த யாத்திரையின் போது சூரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தினை, இத்தலத்திற்கு வந்து வில்வ வனத்தில் இருந்த லிங்க‌த்தினைப் பூஜித்து பாவவிமோசனம் பெற்று பின் துவாரகை மீண்டார்.  

💥வில்வ மரங்கள் நிறைந்து இருந்ததால் முற்காலத்தில் வில்வ வன சேத்திரம், வில்வவன காடு என்று அழைக்கப்பட்டது. இன்றும் வில்வ மரங்கள் சூழ மத்தியில் சோமநாதர் அருள்புரிகிறார்

💥மூர்த்தி, தீர்த்தம் தலம் என சிறப்பு பெற்ற இத்தலத்தில் சந்திரன் சயரோகம் தீர தனது கலைகளால் அபிஷேகம் செய்து பூஜித்ததால் இங்கு உள்ள சுயம்புலிங்கம். வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறது. 

தல வரலாறு: இருபத்‌தேழு நட்சத்திர தே‌வதையர்களின் கணவனான சந்திரன், ஒரு முறை தனது ஊழ்வினை காரணமாக ‌ரோகிணியின் மீது மட்டும் கூடுதலான அன்பு காட்டி பிற மனைவியரைப் புறக்கணித்து வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் மிகுந்த துன்பமுற்று, தம் கணவன் சகோதரி ஒருத்தியிடம் மட்டும் அன்பு காட்டி வருவதை தங்களது தந்தை தட்சனிடம் முறையிட்டனர். இதனால் கடும்கோபங்‌க‌ொண்ட அவன், தனது தவ வலிமையால் சந்திரனுக்கு சயரோகம் (தொழுநோய்) பீடிக்கும் படி சாபம் கொடுத்தான். இதனால் சந்திரன் சயரோக நோயினால் பாதிக்கப்பட்டு நாள்பட அவனது கலைகள் சிறிது சிறிதாக ‌தேயத்‌தொடங்கின.
இதனால் அச்சமுற்ற சந்திரன் தனது சாபம் நீங்கி பழைய பொலிவு பெற்றிட அகத்தியரிடம் வழி கேட்டான். அவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் நதியின் மேற்கு கரையில் அமைந்த வில்வவனத்தில் அருட்காட்சி தரும் லிங்கத்திற்கு தனியே கோயில் எழுப்பி பூஜிக்க அவனது பிணி தீர்ந்து பழைய நிலை கிட்டும் என கூறி அருளினார்.

தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதியில் அகத்தியர் கூறியது போல லிங்கம் அமைந்திருப்பதைக் கண்ட சந்திரன் பெருமகிழ்வுற்று தனிய‌ே தீர்த்தம் ஒன்றினை அமைத்து அத்தீர்த்தத்திலும், வைகையிலும் நீராடி சிவன‌ை மனம் உருகி தனது கலையினால் ‌தொடர்ந்து பூஜித்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வந்தான். அவனது பக்தியில் அகம் மகிழ்ந்த சிவபெருமான் அருட்காட்சியளித்து, அவனது நோயைப் போக்கி அருளினார். மேலும், சந்திரனின் வேண்டுகோளை ஏற்று அவரே இத்தலத்தில் உமையவள் ஆனந்தவல்லியுடனாய சோமநாதராக காட்சி தருகிறார்.
பிரார்த்தனை: இத்தலத்தில் உள்ள சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி இறைவனை மனம் உருகி வேண்டிக்கொள்ள ‌தொழுநோய்கள் குணமாகின்றன.
ஆடித்தபசு தினத்தில் சுவாமிக்கு அணிந்த மாலையை அணிந்து ‌கொள்ள திருமணத்தடை நீங்குகிறது. புத்திரபாக்கியம் கிடைக்கிறது.

நேர்த்திக்கடன்: வேண்டிய காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன

வழிபாட்டு நேரம்:இக்கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பரமக்குடி ஸ்ரீவிசாலாட்சியம்பிகா சமேத ஸ்ரீ சந்திரசேகரசுவாமி ஆலயம் 17.05.26

பரமக்குடி ஸ்ரீவிசாலாட்சியம்பிகா சமேத ஸ்ரீ சந்திரசேகரசுவாமி ஆலயம்
நகர் மத்தியில் கிழக்குப் பார்த்த அமைப்பில் உள்ளது.
3 நிலை ராஜ கோபுரம் உடையது.
விநாயகர் மற்றும் பால தண்டாயுதபானி இருபுறமும் மாடங்களில் உள்ளார்கள்.
ஆலய நுழைவு அடுத்து உள்ள நீள் மன்டபத்தில் பலிபீடம் கொடிமரம் மற்றும் நந்தியம் பெருமாள் அமைந்துள்ளது
ஆலய உள் மன்டபத்தில் தெற்கு நோக்கிய அமைப்பில் தனிக்கருவறையில் விசாலாட்சியம்மன் உள்ளார்கள்
கிழக்குப்பார்த்த கருவரையில் சந்திரசேகரசுவாமி அருள்பாலிக்கிறார்.
பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் மற்றும் கோஷ்ட தெய்வங்களுடன் அமைந்துள்ளது
கிழக்கில் பைரவர் நவகிரகம் யாகசாலை மண்டபம் உள்ளது சூரியன் சந்திரன் உள்ளது
சிறப்பான முறையில் பராமரிப்பதுடன் பூசைகள் ஆலய விழாக்கள் அணைத்தும் நடைபெற்று வருகின்றது.
பரமக்குடி ஸெளராஷ்ட்ர பிராஹ்மன மகா ஜனங்களுக்கு சொந்தமானது
அருகில் உள்ள ஸ்ரீ கல்யாண ஸெளந்தரவல்லித் தாயார் சமேத ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்த்தானம் இந்த ஆலயத்தையும் இணைத்து நிர்வாகம் செய்கிறது.
பரமக்குடியில் உள்ள முக்கிய ஆலயங்களில் இதுவும் ஒன்று
நகரின் மத்தியில் எல்லா ஆலயங்களும் நடைதூரத்தில் இருப்பது சிறப்பு
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பரமக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் ஆலயம் 17.05.2026 தரிசனம்

பரமக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் ஆலயம்
பரமக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள பெரிய ஆலயம் 

கிழக்கு நோக்கிய அமைப்பு. சுவாமிக்கு 5 நிலை ராஜகோபுரத்துடன் வாயில் உள்ளது. சுமார் 12 படிகள் உயரே ஏறினால் ஆலயம். வெளி மண்டபம் நீண்ட உயரமான கட்டுமானம். 

மண்டபத்தில் பலிபீடம் கொடிமரம் மற்றும் நந்தியம் பெருமாள் உள்ளனர். மேலும் கருவரை உள் நுழைவு வாசலில் விநாயகர் பாலதண்டாயுதபாணி இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளனர்.

கருவரையில் கிழக்கு நோக்கி சுந்தரேஸ்வராள் சுவாமி அருள்பாலிக்கின்றார்.
உள் மண்டபத்தில் நால்வர் சிலைகள் எதிர்புரத்தில் நடராஜர் சிவகாமியம்மன், அம்மையார், மற்றும் மணிவாசகர் உலோக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது

கருவரை கோஷ்ட்ட பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி லிங்கோத்பவர் பிரும்மா துர்க்கை தனி சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்கள்.

 மேல் பிரகாரத்தில் விநாயகர் வள்ளி தெய்வாணையுடன் முருகன் சரஸ்வதி மகாலெட்சுமி ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன

வடக்குப்பிரகாரத்தில் தலவிருட்சமும் எதிரில் தனி சிவலிங்கம் நந்தி உள்ளது .

கிழக்கில் பைரவர், நவகிரகம் சூரியன் சந்திரன் சன்னதிகள் உள்ளன.

ஆலயத்தின் தென்புறம் பெரிய திருமண மண்டபம் அமைத்துள்ளனர்.
எதிரில் கிழக்குப் புறம் சிறிய நீர்த்தொட்டி அமைத்து சிவன் சிலை அமைத்துள்ளார்கள்

அடுத்து மீனாட்சியம்மன் தனி ஆலயம்
கிழக்கில் 3 நிலை ராஜகோபுரம்
நீண்ட உள் மண்டபம் அடுத்து உள்கோபுரத்துடன் தனி ஆலயமாக அம்மன் உள்ளார். முன் மண்டபத்தில் வடக்குப்புறம் பள்ளியரையும், கிழக்கு நோக்கிய உயரமான தனிக்கருவரையும் உள்ளது கருவரை முன் தனி விநாயகர் பால தண்டாயுதபாணி சிறிய சிலைகள் இருபுறம் உள்ளது.
கோஷ்ட்ட சுவரில் அம்பாள் படம் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது
முழுவதும் கற்றளி ஆலயம்
இரண்டு பெரிய ஆலயங்களும் பெரிய சுற்றுச்சுவருடன் அமைந்துள்ளது.
ஆயிர வைசிய செட்டியார் பெருமக்களுக்கு முழுவதும் பாத்தியதைப்பட்ட ஆலயம்

நகருக்குப் பெருமை தரும் அளவில் ஆலயம் சிறப்பாக உள்ளது எல்லா பூசை காலங்கள் மற்றும் முறையான விழாக்கள் அணைத்தும் கொண்டாடப்பட்டு வருகிறது

பரமக்குடி செல்பவர்கள் இவ்வாலயம் தரிசனம் செய்வது சிறப்பு

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பரமக்குடி முத்தாலம்மன் ஆலயம் 17.05.26 தரிசனம்

பரமக்குடி  முத்தாலம்மன் ஆலயம்
நகரின் நடுவில் உள்ள ஆலயம்
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் மிக அழகுற அமைந்துள்ளது.
எதிர்புறம் மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் உள்ள செல்வ சக்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

முத்தாலம்மன் ஆலயம் சாலையிலிருந்து
10 படிகள் மேலே ஏறினால் ஆலயம் மிக நீண்ட வெளிமண்டபம் இது அழகிய ஓவியங்கள் அமைந்தது.
அடுத்துள்ள உள் மண்டபத்தில் விநாயகர் பலிபீடம் கொடிமரம் சிங்கம் உள்ளது. 

கிழக்குப் பார்த்த உயரமான கருவறையில் முத்தாலம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். கருவரை முன்பாக இருபுறமும் விநாயகர் மற்றும் திரெளபதை சன்னதிகள் உள்ளன
ஆலயம் முழுவதும் கற்றளியால் கட்டப்பட்டு அழகிய வடிவமைப்பில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது.
கருவரை பின்புறம் ஆதி முத்தாளம்மன் சன்னதி உள்ளது. 
பிரகாரத்தின் முன்பகுதியில் கருப்பண்ணசுவாமி, போத்திராஜா, துர்க்கை மற்றும் வடக்குப்புரத்தில் ஆஞ்சநேயர், மற்றும் பைரவர் உள்ளனர்.

இந்த ஆலயம் முழுமையும் பரமக்குடி மஞ்சப்புத்தூர் ஆயிர வைசிய செட்டியார் சமூகத்திற்கு சொந்தமானது   அவர்கள் சமூகத்தினரின் உதவியால் இந்த ஆலயத்தை எழுப்பி பராமரித்து அனைத்து பூசை விழாக்கள் எடுத்து வருகிறார்கள். அவர்களின் குலதெய்வ ஆலயம் என்று போற்றி வணங்கி வருகிறர்கள்.
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Friday, May 29, 2026

நயினார் கோவில் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் 17.05.2026 தரிசனம்

நயினார் கோவில் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் 
அமைவிடம்
 பரமக்குடியிலிருந்து வடகிழக்கே வைகை ஆற்றைத் தாண்டி சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நயினார்கோயில். 
இங்குள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், நாக தோஷ நிவர்த்திக்கும், குழந்தை பாக்கியத்திற்கும் புகழ்பெற்ற ஒரு சக்திவாய்ந்த பரிகார ஸ்தலமாகும்.
கோயில் சிறப்பம்சங்கள்:
மூலவர்: நாகநாதசுவாமி 
அம்மன்: சௌந்தரநாயகி.
தல தீர்த்தம்: வாசுகி தீர்த்தம்.
சிறப்பு: ஆதிகாலத்தில், 'சேது நாட்டுத் திருமருதூர்’ என்று பெயர் பெற்றிருந்த இந்தத் தலத்தில், ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாளுடன் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநாகநாத ஸ்வாமி.

சர்வமத வழிபாட்டுத் தலமாக விளங்கும் இக்கோயிலில், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக 'தவிடு' வைத்து வழிபடும் நேர்த்திக்கடன் முறை மிகவும் பிரசித்தம்.

விசுவாமித்திர முனிவரால் சாபம் பெற்ற ஆயிரம் முனிவர்களுக்கு விமோசனம் அருளிய அற்புதமான திருத்தலம் இது.

தல வரலாறு
1 முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தைச் சேர்ந்த திரிசங்கு என்ற மன்னன், பூத உடலோடு சொர்க்கம் செல்ல விரும்பினான். இதைத் தன்னுடைய குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் தெரிவித்தான். அவர், ''ஒரு வருட காலம் சிறந்ததொரு வேள்வியை நடத்தினால், தேவர்களே நேரில் வந்து உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார்கள்'' என்று அறிவுறுத்தினார்.
மன்னனோ, ''அவ்வளவு நாட்கள் என்னால் காத்திருக்க முடியாது. இப்போதே என்னை பூத உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்பும் வல்லமை பெற்றவர்கள் உண்டு. அவர்களை அணுகி எனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறேன்'' என்றான். இதனால் வசிஷ்டர் கோபம் கொண்டார். ''குருவை இழிவுபடுத்திய நீ சண்டாளன் ஆகக் கடவாய்!'' என்று மன்னனைச் சபித்தார். பின்னர், திரிசங்கு விசுவாமித்திர முனிவரைச் சந்தித்து, நடந்ததை விவரித்தான். அவன் மீது இரக்கம் கொண்ட விசுவாமித்திரர், ''வருந்தாதே! பஞ்சாட்சர மந்திரத்தால் உனது சாபத்தை நீக்கி, உனது விருப்பத்தையும் நிறைவேற்றுகிறேன்'' என்று வாக்களித்தார். பிறகு, தனது சீடர்களை அனுப்பி, வசிஷ்டரின் மைந்தர்கள் மற்றும் சீடர்கள் ஆயிரம் பேரை, தான் நடத்தவிருக்கும் வேள்விக்கு உதவி செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார். அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் கோபம் கொண்ட விசுவாமித்திரர், அவர்கள் ஆயிரம் பேரையும் வேடர்களாகும்படி சபித்தார். அவர்கள் அனைவரும் விசுவாமித்திரரை நேரில் சந்தித்து வணங்கி, சாபத்தைத் தீர்த்தருளும்படி வேண்டினர்.

அவர்களிடம், ''என்னை அவமதித்த குற்றத்துக்காக உங்களுக்குச் சாபம் கிடைத்தது. நீங்கள் ஆயிரம் வருடங்கள் வனங்களில் வேடர்களாக அலைந்து திரிந்து, பிறகு மருதூர் சென்று நாக தடம் பதிந்து நற்பதவி பெறுவீர்கள்'' என்று வழிகாட்டினார். அதன்பிறகு, தன் மைந்தர்களோடு யாகம் செய்து, அவர் திரிசங்குவை சொர்க்கத்துக்கு அனுப்ப முயற்சித்ததும், தேவர்கள் எட்டி உதைக்க திரிசங்கு அந்தரத்தில் தவித்ததும், பிறகு அவனுக்காகத் தனியே விசுவாமித்திரர் 'திரிசங்கு சொர்க்கம்’ உருவாக்கி விட்டார் 

இங்கே, சாபம் பெற்ற ஆயிரம் முனிவர்களும் ஆயிரம் வருடங்கள் வேடர்களாக அலைந்து திரிந்த பிறகு, மருதூர் தலத்துக்கு வந்து ஸ்ரீநாகநாத ஸ்வாமியை வழிபட்டு நற்கதி அடைந்தனர்.

2. தென்னாட்டில் முகம்மதியர் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலம் அது. வடக்கே இருந்த முல்லா சாகிப் என்ற மன்னன் ஒருவன், அவரது மகளுக்கு பேச்சுவரவில்லை. இதனால் தெற்கே உள்ள ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வணங்கினால், இப்பிரச்னை தீரும் என சிலர் சொல்லவே வாய் பேச இயலாத தன் மகளுடன் இவ்வூர் வழியாக வருகை தந்தபோது, இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் அவர்கள் நீராடினர். அப்போது, அந்தப் பெண் நயினார் என கத்தினாள். நயினார் என்றால் தலைவர். அவ்வூர் நாகநாதர் அருளாலேயே அவளுக்கு பேச்சு வந்ததாக முல்லாசாகிப் கருதினார். அன்று முதல் அவ்வூரின் பெயரும் நயினார்கோயில் என்றாயிற்று. 

அல்லா நயினார் ஆண்டவர்’ என்று வாய் திறந்து பேசினாளாம். இதனால் மகிழ்ந்த முல்லா சாகிப்பும், 'நீரே நயினார் நிஜம் தெரிந்தேன்!’ என்று ஸ்ரீநாகநாதரைப் போற்றி பூஜித்தாராம். அன்று முதல் இந்தக் கோயில், 'நயினார் கோவில்’ என வழங்கலாயிற்று என்கிறார்கள்.
தோஷ நிவாரணம் மற்றும் பிரார்த்தனைத் தலமாகத் திகழும் நயினார் கோவிலுக்கு
'மங்காத முல்லாவின் மகளான ஊமையை வாய் பேச வைத்த லிங்கம்’ என்று நாகாபரணம் என்ற நூலும், 'முல்லா மகளா மூங்கையள் முன்னாள் அல்லா நயினார் ஆண்டவர் என்ன நல்வாக்குரைத்திடு தன்மை உண்டாக்கியும்’ என்று ஸ்ரீநாகநாதர் சதகமும், 'தாய் பேசு பேசெனவே சாற்றினும் பேசாமூங்கை வாய் பேச வத்த மகா மந்திரமே...’ என சேதுபதி விறலிவிடு தூது எனும் நூலும் விவரிக்கின்றன. இன்றைக்கும் இஸ்லாமிய அன்பர்கள் பலரும் இந்தக் கோயிலுக்கு வந்து பிரார்த்தித்துச் செல்கிறார்கள்.
ஆலய அமைப்பு
மேற்குப்பார்த்த ஆலயம் முன்புறம் ராஜகோபுரம் பதிலாக சிவன் அருள் கொடுத்த காட்சி சுதையில் உள்ளது.
ஆலயம் எதிரில் புன்னிய தீர்த்தம் உள்ளது
கற்றளி ஆலயம். முன்புறம் ஒரு நாகர் சிலை உள்ளது அதில் உப்பு கொட்டி வழிபடுகிறார்கள். அடுத்து பலிபீடம் கொடிமரம், நந்தி உள்ளது. முன் மண்டபம் பெரிய அளவில் உள்ளது. அடுத்து மேற்கு நோக்கிய கருவறை உள் மண்டபம் அர்த்தமன்டபம் கருவரையுடன் உள்ளது மூன்று விநாயகர் 3 வாகனத்துடன் உள்ள சன்னதி கருவரை உள் நுழைவு இடது புறம் உள்ளது.
கருவறையில் லிங்கத் திருமேனியராக மேற்குமுகமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீநாகநாத ஸ்வாமி. ஸ்ரீநாமதேவரின் கீதம் கேட்க, ஸ்வாமி மேற்கு முகமாகத் திரும்பியதாக ஐதீகம். 'நாமதேவர் நல்லிசை கேட்டு போற்றுமவர்க்காய் மேற்றிசை திரும்பியும்...’ என்று நாகநாதர் சதகம் குறிப்பிடுகிறது.

கருவறை முன்புரம் சிறிய நந்தி உள்ளது. அம்பாள் தனி கருவரை தெற்கு நோக்கிய அமைப்பில் உள்ளார்.
கோஷ்ட்ட பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி லிங்கோத்பவர், பிர்மா, மகாலெட்சுமி வள்ளி தெய்வாணையுடன் முருகப்பெருமான் உள்ளார். மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளார்.
இரண்டாம் பிரகாரம் வட பகுதியில் பல இடங்கள் முற்றிலும் சிதைந்துக் காணப்படுகிறது.
வட கிழக்கில் பைரவர், நவகிரகம் துர்க்கை சன்னதிகளும் உண்டு. மேலும்
தனி சன்னதியில் சனீஸ்வரர் மேற்கு பார்த்து உள்ளார். சூரியர் சந்திரன் கிழக்குப்பகுதியில் உள்ளார்கள்.
மேலும் ஏகதசலிங்கம் உள்ளது

இந்த ஆலயத்தில் மருதம், வில்வம் என இரண்டு விருட்சங்கள் உள்ளன. ஆலய உட்பிராகாரத்தில் மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் 'புற்றடி’ காணப் படுகிறது. மருத மரத்தடியில் ஒரு புற்று இருந்ததாகவும், அதில் நாக ரூபமாக ஸ்வாமி காட்சி தந்ததாகவும் கூறுவர்.

இப்புற்று மேடையில் நாகர் உள்ளார். அதனைச்சுற்றி குழந்தை கட்டில்கள் பிரார்த்தனையாகக் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகில் பால், முட்டை , அரிசி முதலியவற்றை வைத்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள்.

பக்தர்கள் இந்தப் புற்றடியில் திருமணத் தடை, புத்திர பாக்கியம் இல்லாமை, நோய், வேலை கிடைக்காமை ஆகிய தங்களின் மனக் குறைகள் நீங்க பிரார்த்தித்து மஞ்சள் கயிறு கட்டுகிறார்கள்; பிரார்த்திக்கிறார்கள். இதனால் பிரச்னைகள் யாவும் சூரியனைக் கண்ட பனியாக விலகி ஓடும் என்பது நம்பிக்கை. மேலும், இந்தப் புற்று மண்ணை எடுத்துச் சென்று நீரில் குழைத்து நோய் கண்ட இடங்களில் தடவ, பிணி தீர்வதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.

தெற்குப்பிரகாரத்தில் அறுபத்தி மூவர், சப்தமாதர்கள், வீரபத்திரர், ரிஷபாருடர் காசிலிங்கம் உள்ளார்கள்.
மேலும் சுந்தரராஜ பெருமாள், நவநீத கிருஷ்ணர், மகாலெட்சுமி தாயார் நந்தகோபாலன் சன்னதியும் இங்கு உள்ளது. முன்புறம் அனுமான் சிலையும் உண்டு
இங்குள்ள நாகநாதர் துலாக்கோல் போல் உள்ளவர் என்று கூறுகின்றனர்.
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

பரிகாரத்தலம்
இக்கோவிலில் மற்ற நாட்களை விட அமாவாசையன்று விரதம் இருந்து வரும் பக்தர்கள் அதிகம். அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
நோய்வாய்ப்பட்ட சிறு குழந்தைகளை சுவாமி சன்னதி அருகே தவிடு கொடுத்து கோவிலில் ஒப்படைத்து மீண்டும் திரும்ப வாங்குகின்றனர். இதன் மூலம் சுவாமியின் பிள்ளையாகவே பாவித்து எந்த நோய் நொடியும் இல்லாமல் சுவாமி காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை.

இதற்கு மட்டுமல்லாமல் திடீரென்று முகத்தில் தோன்றும் மருக்கள், கட்டிகள், போன்றவை நீங்கவும், சரியான பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரவும். கடும் நாகதோஷம் நீங்க ஒவ்வொரு அமாவாசையன்றும் பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

இக்கோவிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது ஐதீகம்.
வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டாலும் இக்கோவிலுக்கு விரதம் இருந்து நாகநாதரை வழிபட்டு வருவதை இப்பகுதி மக்கள் வழக்கமாகவைத்துள்ளனர்.
.அனுதினமும் இந்த ஆலயத்தில், முறைப்படி பணம் கட்டி பதிவு செய்து, ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். குழந்தைகளுக்கு முடியெடுப்பதும், காதுகுத்து வைபவமும் நிகழ்கின்றன.

திருவிழாக்கள்
தைப்பூசத்தன்று நயினார் கோயிலில் இருந்து ஸ்வாமியும் அம்மனும் தெற்கே 3 கி.மீ. தூரத்தில், வைகையின் வடகரையில் உள்ள ஸ்ரீகுணதீஸ்வரர் ஆலயத்துக்கு எழுந்தருள்வார்கள். அங்கே ஆற்றில் தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெறும். இது தவிர, கார்த்திகை மகாதீபமும், நவராத்திரி விழாவும் விமரிசையாக நடக்கும்.

இறைவிக்கு ஆடியில் 15 நாளும், இறைவனுக்கு வைகாசியில் 10 நாளும் பிரம்மோற்சவம் நடத்தப்பெறுகின்றன. இவை தவிர பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் காரணாகம முறைப்படி காலப் பூசை நடக்கின்றது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை: 07:00 மணி முதல் 01:00 மணி வரைமாலை: 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை விஷேச நாட்கள் மாறும்.

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

எமனேஸ்வரம் : அருள்மிகு எமனேஸ்வரமுடையவர் திருக்கோயில் 17.05.2026 தரிசனம்

எமனேஸ்வரம் : அருள்மிகு எமனேஸ்வரமுடையவர் திருக்கோயில்
பரமக்குடியை அடுத்த எமனேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருத்தலம் அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில் ஆகும்.

அமைவிடம்: பரமக்குடியிலிருந்து இளையான்குடி செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் எமனேஸ்வரம் அமைந்துள்ளது. பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன
தல சிறப்பு
திருக்கடையூரில் எமனை சம்ஹாரம் செய்த "கால சம்ஹாரமூர்த்தி'யாக அருளும் சிவன், இத்தலத்தில் "அனுக்கிரமூர்த்தி'யாக இந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.ஆயுள் விருத்தி பெறவும், சனிதோஷம் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது, எண்பதாம் திருமணம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

தலபுராணம்
சிவபக்தனான மார்க்கண்டேயர், அற்ப ஆயுளில் உயிர் பிரியும்படியான வரம் பெற்றிருந்தார். அவரது இறுதிக் காலத்தில் எமதர்மன், அவரது உயிரை எடுக்க வந்தார். அப்போது மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.

திருக்கடையூர் தலத்திற்கு அவர் சென்றபோது, எமன் பாசக்கயிறை வீசினான். அவ்வேளையில் அவர், சிவபெருமானை தழுவிக்கொள்ளவே பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. பணியை சரியாக செய்யாத எமதர்மனை, சிவபெருமான் இடது காலால் எட்டி உதைத்தார்.
அவ்வாறு எமன் வந்து விழுந்த இந்த இடத்தில், அவர் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டுத் தனது தவறை மன்னிக்குமாறு சிவலிங்கத்தை வேண்டி வழிபட்டார். இதனை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், எமதர்மரை மன்னித்ததுடன், அவருக்கு மீண்டும் பதவியைக் கொடுத்தார். பின்பு எமன் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். இந்த நிகழ்வுக்கு பின்னர் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பப்பட்டு, எமனேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்டது
எனவே, இங்குள்ள சிவபெருமான் "எமனேஸ்வரமுடையார்" என்றும், 'அனுக்கிரக மூர்த்தி' என்றும் அழைக்கப்படுகிறார். என்பது புராணம்.
ஆலய அமைப்பு:
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
ராஜகோபுரம் கிடையாது. ஒரு சிறிய நுழைவு வாயிலும், அதன் மேல் காட்சி நாயகர் சுதையில் அமைக்கப்பட்டுள்ளார்.
உள் நுழைவில் முன்புறம் பெரிய வளாகமாகக் காணப்படுகிறது.
பலிபீடம் கொடி மரம் நந்தி தனி கல் மன்டபத்தில் உள்ளார்.
பெரிய மண்டபத்தின் தெற்கு பார்த்து ஸ்ரீசொர்ன குஜாம்பிகை அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்
சுவாமி முன் மண்டபம் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. கருவறை முன்புறம் ராஜகணபதி கிழக்கு நோக்கியும் வள்ளி தெய்வானையுடன் முருகரும் இருபுறம் உள்ளார்கள். கருவரையில் தனித்துவமாக 
ஸ்ரீ எமனேஸ்வரர் இருந்து அருள் பாலிக்கிறார்.
மண்டபத்தில் வடபுறம் நடராஜர் சபை உள்ளது.
வெளிப்பிரகாரத்தில் தலவரலாறு கல்வெட்டும் ஆலய உபயதாரர்கள் விபரமும் உள்ளன.
தென் பிரகாரத்தில் தனிசன்னதியாக கிழக்குப் பார்த்து ஸ்ரீ மல்லிகார்ஜுனர் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் ஒரு நந்தியும் உள்ளார்.
மூலவர் கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரும்மா துர்க்கை மற்றும் தனிசன்னதியில் சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்கள். 
பிரகாரத்தின் வடகிழக்கில் தென்திசை நோக்கி தனி பைரவர் நாய் வாகனம் இன்றி தன்டம் சூலத்துடன் உள்ளார். 

வடகிழக்கில் தனி நவகிரக சன்னதியும் கிழக்கில், சந்திரன் மற்றும் சூரியன் உள்ளனர்.
கோயில் சிறப்புகள்:
ஆயுள் விருத்தி: எமதர்மன் வழிபட்ட தலம் என்பதால், நீண்ட ஆயுள் பெறவும், சனிதோஷம் நீங்கவும் இங்கு சிறப்பு வழிபாடுகள்செய்யப்படுகின்றன. திருமண மற்றும் குழந்தை வரம்: இங்குள்ள அன்னை 'சொர்ணகுஜாம்பிகை' சன்னதியில் பெண்கள் தங்களின் மாங்கல்யம் மற்றும் வளையல்களைக் கட்டி வழிபடுவதால் திருமணத் தடைகள் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. வாழ்நாள் சடங்குகள்: அறுபதாம் கல்யாணம், எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்வதற்கு இது மிகவும் உகந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.
பரமக்குடியில் உள்ள சௌராஷ்ட்ரா இன மக்கள் பெரும் உதவியும் ஆலய வளர்ச்சியிலும் பங்குபெற்று வருகிறார்கள்.
பூசைகள் விழாக்கள் நடைபெற்றுக் கொண்டும் பராமரிப்பிலும் உள்ள ஆலயம்

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

இளையான்குடி மாறனார் மடம் /கோவில் 17.05.2026

இளையான்குடி மாறனார் மடம் /கோவில்.

இறையான்குடி சிவன் ஆலயம் எதிரில் உள்ள சிறிய தெருவில் உள்ளது.
இந்த இடம் நாயனார் வாழ்ந்த இடமாகக் கருதி இந்த புனித இடத்தை அடியார்கள் வந்து தொழும் மடமாக மாற்றி உள்ளனர்
இது ஒரு நீள் செவ்வக மண்டபம் கிழக்குமேற்கு அமைப்பில் தெரு இருந்தாலும் மடத்தின் வாசல் தென்புறம் உள்ளது.
உள்ளே நாயன்மார் துணைவியுடன் உள்ள சிலை வைத்து வணங்கப்படுகிறது.
மேலும், மன்டபத்தின் ஒரு பகுதியில்மேற்கில் சிறிய அளவில் விநாயகர்,மீணாட்சி சொக்கநாதர், நந்தி மற்றும் பாலமுருகன் ஒரு பெரிய மேடையில் வைத்து வணங்கி வருகிறார்கள்.
63 நாயன்மார்களில் ஒருவரான மாறநாயனார் அவதரித்த மற்றும் முத்தி பெற்ற இடம்.  

அடியவர் வேடத்தில் வந்த
நம் ஈசனாருக்கு உணவளித்த இடம் என்பது சிறப்பு 

அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு தொண்டு இன்றும் நடைபெறுகிறது.

நாயன்மார் குரு பூசை ஆவணி மகம் அன்று மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
தனியார் டிரஸ்ட் மூலம் இந்தக்கோயில் /மடம் பராமரிக்கப்பட்டு வருகிறது

இளையான்குடி சிவன் ஆலயம் மிகவும் அருகாமையில் இருப்பதால், நடந்து வந்து இந்தமடம் தரிசனம் செய்து பக்தர்கள் செல்வது வழக்கம்.

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

இளையான்குடி அருள்மிகு ஶ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் 17.05.2026 தரிசனம்

இளையான்குடி அருள்மிகு ஶ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் 

இளையான்குடி எனும் சிற்றூர், சிவகங்கை மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ளது . பரமக்குடி - காரைக்குடி செல்லும் பிரதான சாலையில் உள்ளது.
சுமார் 1000-ஆண்டுகள் பழமையான,
சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.
ஆலய அமைப்பு
பிரதான சாலையில் கிழக்கு நோக்கிய ஆலயம் வடபுறம் பெரிய குளம் உள்ளது. குளத்தின் தென்கிழக்கில் பெரிய அரசமரம் மற்றும் ஒரு விநாயகர் ஆலய வளாகத்தின் முன் உள்ளது.
கிழக்குப்பார்த்து மூன்று நிலை ராஜகோபுரம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயம் முன்புறம் புத்தர் சிலை ஒன்றும் கண்டு எடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது
அம்மன் சன்னதிக்கு தனி நுழைவு வாயிலும் காட்சி கோபுரத்துடன் அமைந்துள்ளது.
ஆலய ராஜகோபுரம் நுழைவில் விநாயகர் முருகர் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன
உட்புறம் சூரியன் சந்திரன் மேற்கு நோக்கிய அமைப்பில் உள்ளன.
ஆலயம் உள்ளே பெரிய மண்டபத்தில் பலிபீடம் கொடிமரம் நந்தி அமைக்கப்பட்டுள்ளது

சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்த்தானம் கட்டுப்பாட்டில் இளையான்குடி ஆயிர வைசியசபையினரின் பேராதரவுடன் ஆலயம் பராமரிக்கப்படுகிறது.

கருவறை மண்டபம் முன்பு வெளி சுவற்றில் இளையான்குடி மாற நாயன்மாரின் வாழ்க்கைச் சித்திரம் பழமையான ஓவியம் உள்ளது.
 நுழைவில் ஒரு விநாயகர் உள்ளார்.
உள் மன்டபத்தில் நால்வர் மற்றும் சேக்கிழார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் 
சோமஸ்கந்தர் மற்றும் நாயன்மார் தம்பதியுடன், விநாயகர், முருகன் வள்ளி தெய்வானையுடன், உலோக சிலைகளும் உள்ளன. பதஞ்சலி வியாக்கிரபாதருடன் நடராஜர் சபையும் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கிய கருவரை.
 நுழைவு முன் மண்டபத்தில் சிறிய நந்தி கிழக்கு நோக்கிய விநாயகர் மற்றும் முருகன் அமைத்துள்ளனர்.
கருவரையில் ஸ்ரீ இராசேந்திர சோழீஸ்வரர் அருள்பாலிக்கின்றார்.

பிரகாரத்தில் இளையான்குடி மாற நாயனார் மற்றும் புனிதவதியார் தம்பதிகளுக்கு வடக்கு நோக்கி தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
வாழ்கை வரலாறும் புடைசிற்பமாக கல்லில் சுவற்றில் அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய புராணம் நாயனார் வரலாறு கல்வெட்டாக பாடல்கள் சிறப்பாக அமைத்துள்ளனர்.
ஆலய தென்பிரகாரத்தில் முன்மண்டபத்துடன் தனி சன்னதியாக கிழக்கு நோக்கி ஸ்ரீ ஞானம்பிகை அருள் தருகிறார்.

சுவாமி கருவரை கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி லிங்கோத்பவர் துர்க்கை தனி சன்டிகேஸ்வரர் உள்ளார்.

ஆலய பிரகார கன்னிமூலையில் தனி விநாயகர் சன்னதி உள்ளது.
தனி சரஸ்வதி சன்னதியும், வெங்கடேஸ்வரர் சன்னதியும் மற்றும் முன்மன்டபத்துடன் தனி சன்னதியாக வள்ளி தெய்வானையுடன் முருகன் உள்ளன.

தெற்கு நோக்கிய கால பைரவர் தனி சன்னதி ஆலயம் வடகிழக்கில் உள்ளது.
அருகில் நவகிரகம் தனி சனிஸ்வரர் உள்ளார்
சிறப்புகள்
63 நாயன்மார்களில் ஒருவரான மாறநாயனார் அவதரித்த மற்றும் முத்தி தலம். அடியவர் வேடத்தில் வந்த
நம் ஈசனாருக்கு உணவளித்த தலம் என்பது தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும்.

தேவார வைப்புத்தலமாக போற்றப்படும்
இத்திருத்தலத்தில்,
இந்திரன் பூஜித்ததால், முற்காலத்தில்
(இத்திருத்தலத்தின் ஊர் பெயர்)
'இந்திர அவதாரநல்லூர்' என அழைக்கப்பட்டனவாம்.

சோழர்களால் கட்டப்பட்ட பழமையான இத்திருத்தலத்தில், மூலவரின் சன்னதியின் பின்னே, ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பதும்,
சுவாமி கருவரை முன் ஸ்ரீவள்ளி இல்லாமல்
எம்பெருமான் முருகன் 
திருவருள்புரிவதும்
தலச்சிறப்புக்களில் சிலவாகும்.
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

உத்திரகோச மங்கை ஆலயம் 16.05.2026

உத்திரகோச மங்கை ஆலயம்

உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-
1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில்தான் அபூர்வமான மரகதக் கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.
2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.
4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.
5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.
6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்
சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.
7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,
பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.
8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.
9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.
10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய
திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.
12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.
13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான
அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.
14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண
காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.
15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்
வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.
16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.
17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.
18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்
என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.
19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.
20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த
கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.
21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.
22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.
23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.
24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே.
அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர
சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.
26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன
பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.
27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.
28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்
சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.
29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை
தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.
30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்
நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.
32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.
33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.
34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.
35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்
தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்
இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.
37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.
38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பத்துநாள் சிவ உற்சவம், ஐப்பசி மாதம்
அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.
41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு 
சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.
42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.
44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.
46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.
47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சரபேஸ்வரர் சிலை உள்ளது.
48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.
49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.
50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.
51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.
52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்
முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.
53. வேதவியாசரும், பாராசரரும் காகபுஜண்டரிஷி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.
54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.
55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா
56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.
57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.
59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.
60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்
உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
அப்பா அண்ணாமலையாரே உன் மலர் பாதம் சரணம் 
நன்றி🙏 வலைதளம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
மீள் தரிசனம் 16.05.2026
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ராமநாதபுரம் ஸ்ரீசெளபாக்கிய நாயகி சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் 16.05.2026 தரிசனம்

ராமநாதபுரம் ஸ்ரீசெளபாக்கிய நாயகி சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம்

நகரின் வெளிப்பட்டினம் பகுதியில் ஊருணி மேல் கரையில் உள்ளது.
ஆலயம் முன்புறம் சுதையால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி ஆலயம் நோக்கி உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் தாண்டியவுடன் பலிபீடம் கொடிமரம் நந்தி உள்ளது வெளி மண்டபம் கடந்து உள்ளே சென்றால் துவாரபாலர்கள் கருவரை மண்டபம் முன்பு அமைக்கப்பட்டுள்ளது கிழக்கு நோக்கிய கருவறையில் ஆதி ரத்தினஸ்வரர் அமைந்துள்ளார் அம்பாள் தெற்கு நோக்கிஅழகிய அமைப்பில் தனி கருவரையில் அமைந்துள்ளார்
நால்வர் சன்னதியும் சிவன் கருவரை முன் மன்டபத்தில் உள்ளார்.
பிரகாரத்தில் தென்புறம் சரஸ்வதி மகாலட்சுமி தனித்தனி சன்னதிகளில் அமைந்துள்ளார்கள் காரைக்கால் அம்மையார் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்
கருவறை கோஷ்டத்தில் விநாயகர் தட்சணாமூர்த்தி லிங்கோற்பவர் துர்க்கை
அமைந்துள்ளார் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளது
தனி சன்னதியில் சந்தானக்கிருஷ்ணன்
 ஐயப்பன் வாராகி அம்மன் முதலிய தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளனர் பைரவர் சூரியன் சந்திரன் ஆகியோருக்கும் தனித்தனிசன்னதிகள் உள்ளது

ஆலயம் சமுதாய மக்கள் நிர்வாகத்தில் உள்ளதால் நல்ல பராமரிப்பில் முறையாக பூசை விழாக்கள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. 

16.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ராமநாதபுரம் முத்தாலம்மன் / முத்தால பரமேஸ்வரி ஆலயம் 16.05.2026 தரிசனம்

ராமநாதபுரம் முத்தாலம்மன் / முத்தால பரமேஸ்வரி ஆலயம்

ராமநாதபுரம், வெளிப்பட்டனம் பகுதியில் உள்ள முத்தால பரமேஸ்வரி ஆலயம்
ஆயிர வைசிய மகாஜன சபைக்கு சொந்தமானது.
அருகில் தர்ம தாவள விநாயகர் ஆலயம் இணைந்து உள்ளது.
இரண்டும் கிழக்குப் பார்த்த அமைப்பில் உள்ளது  தனித்தனி ராஜ கோபுரங்களுடன் உள்ளன.

முத்தால பரமேஸ்வரி அம்மனை ஆயிர வைசிய செட்டியார் இன மக்கள் குல தெய்வமாக வழிபடுகிறார்கள் 
ராமநாதபுரம், பரமக்குடி  இளையான்குடி, காரைக்குடி மதுரை முதலிய ஊர்களில் பெரும் ஆலயங்கள் தனியாக உள்ளது மிகச் சிறப்பான பூசைகள் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாலய நுழைவில் வாயில் மேல் பகுதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில் சுதையில் உள்ளார்.
உட்புறம்  கொடி மர விநாயகர் சிங்க வாகனம் பலிபீடம் உள்ளது
சில படிகள் உயரத்தில் உள் மண்டபமும் கருவறையும் உள்ளன  கிழக்குப் பார்த்த கருவரையில் அம்மன் நின்ற கோலத்தில் மிக அற்புதமாக உள்ளார்

கருவரை பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய அமைப்பில் பாமா ருக்குமனி சமேத கிருஷ்ண பரமாத்மா தனி சன்னதியில் உள்ளனர் முன்புறம் கருடாழ்வார்  தெற்கு நோக்கிய சிறிய ஆஞ்சனேயர் உள்ளனர்

பிரகாரத்தில் தனி சன்னதியில் நாகலிங்கேஸ்வரர் மற்றும் அம்பாள்
மற்றும் வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. பைரவர் சன்னதியும் உள்ளது.
 தர்ம தாவள விநாயகர் ஆலயம்
முத்தாலம்மன் ஆலயத்துடன் இணைந்து வலது புறம் கிழக்கு நோக்கி தனி கருவரையில் தர்ம தாவள விநாயகர் உள்ளார் 
கருவரை முன்பு பலிபீடம் வாகனம் உண்டு.
எண்கோண வடிவில் முன்புறம் மன்டபமும் உள்ளது
முன்புறம் அநுக்கை விநாயகர் தண்டபாணியும் உள்ளனர்
மூலவிநாயகர் தனி அமைப்பில் சற்று உயரமான கருவரையில் உள்ளார்.

சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட ஆலயம் என்பதால் சிறந்த முறையில் பூசை விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
16.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவில். 16.05.26 தரிசனம்

ராம நாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவில்.
இராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில்.

பதினொரு முகங்கள் கொண்ட அபூர்வ முருகன்
மனக்குறைகளை போக்கும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி

சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் இத்தலத்து உற்சவர் முருகன் தரிசனம் தருகிறார். இப்படி பதினொரு முகங்கள் கொண்ட முருகனை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
முருகன் குன்றின் மீது அமர்ந்து தந்தைக்கு உபதேசம் செய்யும் அரிய காட்சி
சுவாமிமலை ஞானம் வழங்கும் ஆலயம். அங்கு தந்தைக்கு மகன் சுவாமியாய் நின்று போதித்த காட்சி இடம் பெற்றுள்ளது. முருகப்பெருமான் அந்த ஞானமூர்த்தியாகவே இங்கும் எழுந்தருளியிருக்கின்றார். ஆனால், மற்ற ஆலயங்களில் முருகப்பெருமான் சிவன் மடியில் அமர்ந்து, தந்தைக்கு போதிப்பது போன்ற சிலை அமைந்திருக்கும்.
ஆனால் இந்த தலத்தில் அந்த காட்சிக்கு மாற்றாக தகப்பன் சுவாமியான முருகப்பெருமான் ஒரு குன்றின் மேல் அமர்ந்து, தனது தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளுக்கு விளக்கம் அளிக்க, அதை சிவபெருமான் கீழே நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச் சிறப்பு ஆகும்.

சுவாமிநாத சுவாமி கோவில் என பெயர் வந்த வரலாறு.

300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார்.

ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார்.
ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலை முருகனின் பெயரான சுவாமிநாதன் என்பதையே இத்தலத்து முருகனுக்கும் சூட்டினார்.

ஐப்பசி கந்த சஷ்டி சந்தன காப்பு அலங்காரம்

மூலவர் கவாமிநாத சுவாமிக்கு ஐப்பசி கந்த சஷ்டியன்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்று மட்டும் பதினோரு முகங்களுடன் தரிசனம் தரும் அவரது திருஉருவம் பார்ப்போரை பரவசம் அடையச் செய்யும்.
ஆலயத்தின் முன்பு ராஜகோபுரம் அழகுற காட்சியளிக்கிறது. ஆலயம் நுழைவு பகுதியில் நந்தியும், வேல், மயில், பாம்புடன் கொடிமரம் ஆகியவை பக்தர்களைக் கவரும் அம்சமாகக் காணப்படுகின்றன. ஜெயதுர்கா தேவி அம்மன், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், விநாயகர், பாலமுருகன், நவக்கிரகங்கள், பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், வீரபாகு ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இத்தலத்து விநாயகர் 12 கரங்களுடன் மடியில் சித்தி புத்தியுடன் காட்சியளிக்கிறார்.

இந்த ஆலயத்தில் அஷ்ட கஜபுஜ மகாலட்சுமியாக காட்சியளிக்கும் 7 அடி உயரமுள்ள துர்க்கை 18 திருக்கரங்களைக் கொண்டு பிரமாண்டமான வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இந்த அன்னைக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப் படுகிறது. தைப் பொங்கல் தினத்தன்று, துர்க்கா தேவிக்கு ‘சாகம்பரி’ என்று அழைக்கப்படும் அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அம்மன், காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்படுகிறார். சித்திரை முதல் தேதி அன்று இந்த துர்க்கை அம்மனுக்கு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும்.
திருச்செந்தூருக்குப் பிறகு, சூரசம்ஹாரத்தின் பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு இந்தக் கோவில்தான் பெயர் பெற்றது. மூலவர் கவாமிநாத சுவாமிக்கு ஐப்பசி கந்த சஷ்டியன்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பார்ப்போரை பரவசம் அடையச் செய்யும். இங்குள்ள முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.
நவராத்திரி விழாவும், வெள்ளிக்கிழமை குடும்ப நலனுக்காக நடைபெறும் வழிபாடும் வெகுவிசேஷம்

தடைபெறும் சுபநிகழ்வுகள் தடை நீங்கப்பெறவும், குழந்தைகள்
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும்
இத்தல இறைவனை
வழிபடுகிறார்கள்

முருகனுக்கு அபிஷேகம் செய்தல், ஆடைகளை வழங்குதல் மற்றும் உண்டியலில் காணிக்கை செலுத்துதல் மூலம் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள். மனக்குழப்பம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் மனக்குழப்பம் நீங்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிந்தை தெளிவடையும் என்கிறார்கள் பக்தர்கள், இந்த முருகப்பெருமானை வேண்டுவதும், வேண்டியது நிறைவேறிய பின் முருகனுக்கு பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், முடி காணிக்கை அளித்தல் உள்ளிட்டவற்றை செய்வதும் வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கோவில், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.

நன்றி 🙏ஆலயத் துளிகள் மற்றும் பல இணையதளங்கள்
16.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ராமநாதபுரம்மீனாட்சி சொக்கநாத சுவாமி ஆலயம் 16.05.2026 தரிசனம்

ராமநாதபுரம்
மீனாட்சி சொக்கநாத சுவாமி ஆலயம்
இராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்டது.

கிழக்குப்பார்த்த அமைப்பில் ஆலயம் உள்ளது. ராஜகோபுரம் பதிலாக காட்சிக் கோபுரம் உள்ளது. ஒரு புறம் வல்லபை விநாயகர் மறுபுறம் பால தண்டாயுதபானி தனித்தனி சன்னதிகளில் ஆலய முகப்பு ஒட்டி அமைக்கப்பட்டுள்ளார்கள்.

உள்நுழைவில் நீண்ட பெரிய அகல மண்டபத்தில், பலிபீடம் கொடிமரம் நந்தி அமைந்துள்ளது. 
மன்டபம் கடந்தால் சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி கருவரைகளில் முன்மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தனி
நடராஜர் சபை உள்ளது.
பிரகாரத்தில் தெட்சினாமூர்த்தி கன்னிமூலை விநாயகர் லிங்கோத்பவர்
துர்க்கை சன்டேஸ்வரர், சன்னதிகள் அமைந்துள்ளது மேலும் வள்ளி தெய்வாணையுடன் முருகன், மற்றும் சரஸ்வதி மகாலெட்சுமி தனி தனி சன்னதிகள் உள்ளன
பைரவர், சூரியன் சந்திரன் கிழக்கில் உள்ளனர்

கோதண்டராமர் ஆலயம்
சிவன் ஆலயம் ஒட்டி தென்புறத்தில் தனியாக கோதண்டராமர் தனி ஆலயம் உள்ளது.
ராஜகோபுரம், நந்தவனம்,கருடாழ்வார்
உள்ளனர். நீண்ட வெள்வால் நெற்றி முன் மண்டபம் கடந்து சுமார் 10 படிகள் ஏறினால் கிழக்கு நோக்கிய தனி கருவரையில் கோதண்டராமர் உள்ளார். சிறிய மாடக்கோவில் அமைப்பில் உள்ளது
பிரகாரத்தில் சிறிய அளவில் சக்கரத்தாழ்வார் உள்ளார். வடக்குப் பிரகாரத்தில் பெருமாள் அவதாரங்கள் படங்கள் உள்ளன.
இரண்டு ஆலயங்களும் அரண்மணை தேவஸ்தானத்திற்கு கட்டுப்பட்டது.
முறையான பூசைகளுடன் தூய்மையாக ஆலயங்கள் நல்ல பராமரிப்பில் உள்ளன.

16.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம் 16.05.2026 தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம்
இராமாயண காலத்திற்குச் சமமான பழமையான திருத்தலமான இராமேஸ்வரம், இந்தியாவின் மிகப் புனிதமான சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு ஸ்ரீ ராமபிரான், இராவணனை சம்ஹரித்த பின் ஏற்பட்ட தோஷத்தை நீக்க சிவபெருமானை வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. சீதாதேவி மணலில் உருவாக்கிய சிவலிங்கமே இங்குள்ள மூலவர் ராமநாதசுவாமி.

இந்தத் தலம் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், நான்கு முக்கிய புண்ணிய தலங்களில் தெற்குத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு அக்னிதீர்த்தத்தில் நீராடி, 22 தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது மிகப் புனிதமாக கருதப்படுகிறது.
865 அடி நீளமும், 657 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான கோவில், உலகப்புகழ் பெற்ற 1212 தூண்கள் கொண்ட மூன்றாம் பிரகாரத்தால் சிறப்பு பெறுகிறது. மேலும், பித்ரு தோஷ நிவர்த்திக்கான முக்கிய பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.

காசி யாத்திரை முடிவடைய, இராமேஸ்வரம் தரிசனம் அவசியம் என்று கருதப்படுகிறது.

கிழக்குப்பார்த்த ஆலயம் 
முதலில் அக்னி தீர்த்தத்தில் நீராடி பின் வடக்கு வாசல் வழியாக நுழைந்து 25 ரூபாய் கட்டனம் செலுத்தி 22 தீர்த்தங்களில் புனித நீர் தெளித்துக்கொண்டு 
ஈரஆடை நீக்கி உலர்ந்த ஆடைகளை அனிந்து கிழக்கு வாசல் வழியாக ஆலயம் உள் செல்ல வேண்டும்.
உள் நுழையும் வழியில் காசி ஹனுமான் சன்னதி மற்றும் விநாயகர் சுப்பிரமணியர் சன்னதிகள் தரிசிக்க வேண்டும். அதன் பின் ஆலயம் உள் சென்று சீதாபிராட்டி பிரதிஸ்ட்டை செய்த மனல் லிங்கமாகிய ராமநாதர் வணங்கி பின் அனுமான் கொண்டு வந்து வைத்த விஸ்வநாதர் லிங்கம் மற்றும் விசாலாட்சி பர்வதவர்த்தினி சன்னதிகள் தரிசனம் செய்து வரவேண்டும்.
மேலும் பிரகாரத்தில் உள்ள சேது மாதவர் சன்னதியும் வணங்கி வர வேண்டும்.
வாழ்நாளில் ஒருமுறை கண்டே ஆக வேண்டிய தெய்வீகத் திருத்தலம் இதுவே!
  நன்றி.
16.05.2026 மீள் தரிசனம்
என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Sunday, May 3, 2026

எட்டுக்குடி முருகன் கோவில்

எட்டுக்குடி முருகன் கோவில் 

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது
800 ஆண்டுகள் பழமையானது. இது ஆடிப்படை வீடு என்று போற்றப்படுகிறது. இத்தலத்தில் முருகன் மயில் மீது அமர்ந்து, வள்ளி-தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இரத்த ஓட்டத்துடன் இருப்பதாகக் கூறப்படும் சிலையும், பக்தர்களின் மனநிலைக்கு ஏற்ப மாறும் வடிவமும் இதன் தனிச்சிறப்பு.

முக்கிய தகவல்கள்:அமைவிடம்: நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில், சீராவட்டம் அருகே உள்ளது.
தல விருட்சம்: வன்னி மரம்.
தீர்த்தம்: சரவணப் பொய்கை.
திறந்திருக்கும் நேரம்: காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை 

சிறப்பு: இக்கோவிலில் முருகனுக்குப் போருக்குச் சென்ற நவ வீரர்களின் சிலைகளும் உள்ளன.
நிர்வாகம்: இது ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது (HR&CE).வழிபாட்டு முறைகள்:பக்தர்கள் வேண்டிய வரங்களை உடனே அருளும் சக்தி வாய்ந்த தலம்.சித்ரா பௌர்ணமி மற்றும் தேரோட்டம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது

🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்,

திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்,

 சம்பந்தர் மற்றும் அப்பர் பாடல் பெற்ற தேவாரத் தலம். சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான இது, அப்பருக்கு இறைவன் "வாய்மூரில் இருப்போம் வா" என்று உணர்த்திய சிறப்பைப் பெற்றது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கோயிலின் சிறப்பம்சங்கள்:மூலவர்: வாய்மூர்நாதர் (சுயம்பு மூர்த்தி).
அம்மன்: பாலினும் நன்மொழியம்மை.
தல விருட்சம்: பலா.
தீர்த்தம்: சூரிய தீர்த்தம்.

சப்த விடங்கத் தலம்: தியாகராஜருக்குரிய 7 விடங்கத் தலங்களில் இது மூன்றாவது தலம்.

பரிகாரம்: கண் நோய்களைத் தீர்க்கும் சிறப்பு வாய்ந்த தலமாகப் போற்றப்படுகிறது.

தனிச்சிறப்பு: பங்குனி மாதத்தில் சூரிய ஒளி இறைவனின் மீது படுவது தனிச்சிறப்பு.

அமைவிடம்:திருவாரூர் - வேதாரண்யம் சாலையில், திருவாரூரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது

அமைப்பு

இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்பாக குளம் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. கிழக்குச்சுற்றில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. வடபுறம் திருமறைக்காடு இறைவன் சன்னதியும் அம்மாள் சன்னதியும் காணப்படுகின்றன.

இத்தலத்திலுள்ள இறைவன் வாய்மூர்நாதர், இறைவி பாலினும் நன்மொழியாள்.

வழிபட்டோர்
பிரமன், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டுள்ளனர். வான்மீகநாதரும் வழிபட்டுள்ளார்.

🔱🇮🇳
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

திருக்குவளை / திருக்கோளிலி பிரம்மபுரீஸ்வரர் கோயில்

திருக்குவளை / திருக்கோளிலி 
பிரம்மபுரீஸ்வரர் கோயில்

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருளில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர், தாயார் வண்டமர் பூங்குழலம்மை. இத்தலத்தின் தலவிருட்சமாக தேத்தா மரமும், தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் உள்ளன. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி

பிரம்மபுரீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 123ஆவது சிவத்தலமாகும். 
பிரமபுரீசுவரர், கோளிலி நாதேசுவரர், (புற்றிடங்கொண்ட மூர்த்தியாக அமைந்துள்ளார்) 

ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றான திருத்தலம். இத்தலத்து தியாகராஜர் அவனி விடங்கத் தியாகர்,ஊழிப்பரன் என்றும் இவரது நடனம் வண்டு நடனம் என்றும் அறியப்படுகிறது

சிறப்பு
குண்டையூரில் சுந்தரர் பெற்ற நெல் திருவாரூர் பரவையார் இல்லத்திற்குச் செல்ல இறைவனார் அருள் புரிந்த திருத்தலம்.
நவக்கிரகங்கள் ஒன்பதும் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளன
வழிபட்டோர்
பிரமன், திருமால், முசுகுந்த சக்கரவர்த்தி,பஞ்ச பாண்டவர்கள், அகத்தியர், நவக்கிரகங்கள்

🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவில்

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவில்

தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர் கோவில் ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம்.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
தூத்துக்குடி திருசெந்தூர் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் 21KM தொலைவில் இக்கோயில் உள்ளது. தூத்துக்குடியிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.
தூத்துக்குடி, புதுக்கோட்டையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஆறுமுகமங்கலம் 

தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது 
இந்தக் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ளது.

 சுற்றிலும் கிராம தேவதைகளான தோப்பாச்சி அம்மன், இளைய நாயனார், சுடலை மாடன் ஆகிய கோயில்கள் வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் அமைந்துள்ளன. 

தலவரலாறு
கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்தின் வரலாறு கூறுகிறது. 
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் சோமாற வல்லபன். ஆயிரம் யாகங்கள் செய்தவன் எனப் போற்றப்பட்டவன். 
நர்மதை நதிக்கரையில் இருந்து ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான். 
ஆனால் அங்கு வந்தவர்களோ 999 பேர்தான் ஒரு பண்டிதர் குறைந்ததால் மன்னனின் மனதில் கவலை ஏற்பட்டது. 

தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை மனமுருக வேண்டிக் கொண்டார்.
சற்று நேரத்தில் ஓர் அந்தணர் அங்கு வந்து சேர்ந்தார். யாகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. நிறைவில் அந்தணர்கள் அனைவருக்கும் காணிக்கை சமர்ப்பித்து ஆசி பெற்றார் மன்னர். 1008-வது நபராக விநாயகரே பண்டிதராக புதிய அந்தணர் போல வடிவம் கொண்டு வந்து யாகத்தை நிறைவுசெய்தார். மன்னன் தொழுது வணங்க விநாயகப்பெருமான் காட்சி கொடுத்தார். 

யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுகமங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது. விநாயகப்பெருமான் ஆசி வழங்கி, தான் அந்த ஊரிலேயே கோயில் கொண்டு எழுந்தருளத் திருவுளம் கொண்டதாகச் சொல்லி அருளினார்.

மன்னனும் மகிழ்ந்து யாகத்தைப் பூர்த்தி செய்த விநாயகருக்கு ஆலயம் எழுப்பி வழிபட்டான். அந்தணர்களும் தாமிரபரணியிலிருந்து நீர் வரத்து இருந்ததால் அங்கேயே விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினர். 
1008-வது அந்தணராக பிள்ளையார் வந்ததால், ஆயிரத்தெண் விநாயகர் என்று திருப்பெயர் ஏற்றார் இந்தப் பிள்ளையார்.

அவர்கள் குடியிருந்த பகுதி 'சதுர்வேதிமங்கலம்' என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இங்கு முருகன் வழிபாடு சிறப்பானதால் 'ஆறுமுகமங்கலம்' எனப் பெயர் மாற்றம் கண்டது. 

ஆலய சிறப்பு💥
ஆதிசங்கரருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது, அவர் திருச்செந்தூர் சென்று சுப்ரமணிய புஜங்கம் பாடி, முருகனருளால் வயிற்றுவலி நீங்கப் பெற்றார் அல்லவா... அதற்கு முன்னதாக அவர் இந்தக் கோயிலுக்கு வந்து பிள்ளையாரை வழிபட்டு, கணேச பஞ்சரத்ன கீர்த்தனை பாடி வணங்கினார் என்கிறார்கள். இந்தப் பாடல்களின் ஓலைச்சுவடி, செப்புப்பட்டயத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்டு தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இது ஒரு முக்கியமான கோயிலாகும்.

💥பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். வைணவ ஆலயங்களில் நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. ஆனால்
விநாயகருக்குப் பிரதோஷ வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும் தலம்
108 அல்லது 1008 தேங்காய்கள் சாற்றி வழிபடுவது இவ்வாலயத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும்

ஆலய அமைப்பு🛕
மன்னர் காலத்திற்குப் பின் காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மனுக்கு தனிச்சன்னதிகள் அமைக்கப்பட்டு மண்டபம் கட்டப்பட்டது. பின் முருகன், வள்ளி, தெய்வானை சன்னதி கட்டப்பட்டது. பலரது உதவிகளால் விரிவாக்கப்பட்டு கோவில் இன்று ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. மண்டபத்தூணில் உள்ள ஆஞ்சநேயர் உருவம் சிறப்பு.
நுழைவாயிலைக் கடந்தால் கொடிமரம், மூஷிக வாகனம், மண்டபத்தில் சில படிகள் ஏறினால் கருவறைக்கு வடக்கில், தனிச் சந்நிதியில் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்கிறார் பஞ்சமுக விநாயகர். அவரை வணங்கிப் பணிந்து மகா மண்டபத்துக்குள் நுழைந்தால், ஆயிரத்தெண் விநாயகர் தரிசனம்.

மூலவர் சந்நிதியின் வலப்புறம் நடராஜரும் இடப்புறம் முருகனும் அருள்கிறார்கள். அதேபோல், காள ஹஸ்தீஸ்வரர், கல்யாண சுந்தரி அம்பிகை ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள்.

பஞ்சமுக நர்த்தன விநாயகரின் தோற்றம் அற்புதம். கேதுவின் அதிதேவதை விநாயகர் என்பதால் இது கேது பரிகார ஸ்தலமாகவும், காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி அம்மையுடன் காட்சி தருவதால் இது காலசர்ப்ப தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. 

திருவாவடுதுறை மடத்தினர், நாயக்க மன்னர்கள், அவர்கள் வழி வந்தவர்கள், பொதுமக்கள், உபயதாரர்கள் எனப் பலர் இந்த ஆலய வளர்ச்சிக்கு உதவி வருகின்றனர்
ஆலயத்தின் அருகே ஆடுதுறை மடத்தினரின் ஈசான மடம் அமைந்துள்ளது. அவர்களால் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. 

ஆலயத்தில் உள்ள பஞ்சலோகத்தாலான நடராஜர் சிலை கிரீடம், திருவாச்சியுடன் வெகு அழகாக விளங்குகிறது. ஆலயம் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பிரார்த்தணை🛐
வாகன விபத்து, பயண பிரச்சினை, வழக்கு இழுபறி ஆகியவை சுமூகமாக முடிய இந்த விநாயகரை வேண்டினால் நடந்துவிடும் என்று நம்பும் பக்தர்கள் அப்படி நடந்த பிறகு 1008,108 தேங்காய்களை உடைத்து 108 தீபங்களும் ஏற்றி வழிபடுகிறார்கள்.

பக்தர்கள் வேண்டிக்கொண்டு வேண்டுதல் நிறைவேறியதும் சன்னதியில் மணி கொண்டுவந்து கட்டுகின்றனர். 108 அல்லது 1008 தேங்காய் மாலை அணிவித்தும், தீபமேற்றியும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சிறப்பு ஹோமங்களும் செய்யப்படுகின்றன. தொழில் சிறக்க, குடும்ப வாழ்வு மேம்பட, திருமணத் தடை நீங்க, வீடு கட்ட, குழந்தை பிறக்க எனப் பல வேண்டுதல்களுடன் மக்கள் வந்து செல்கின்றனர், விநாயகர் மிகுந்த வரப்ரசாதி என்பதால் பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேற அருள் புரிகிறார்.
பலன்கள்⭐:
அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும் மோட்டார் வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்னை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை.

திருவிழா⭐
சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடக்கிறது. அமாவாசையன்று தீப வழிபாடு அற்புதக் காட்சி
சித்திரைத் திருவிழாவிழாவின் போது விநாயகருக்குப் பட்டாபிஷேகப் பெருவிழா இங்கே விசேஷமாக நடக்கும். அப்போது ‘கணேச
பஞ்ச ரத்ன கீர்த்தனை’ கொண்ட ஓலைச்சுவடி, செப்புப் பட்டயம் ஆகியவை வைக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அன்று மட்டும் ஓலைச்சுவடி - செப்புப் பட்டயத்தை பக்தர்களும் தரிசிக்கலாம்.

சித்திரை 7-ம் திருநாளன்று ஸ்ரீநடராஜ மூர்த்தியுடன் பஞ்சமுக கணபதி திரு வீதி உலா வருவார். 7-ம் நாளன்று விநாயகர் உருக்கு சட்ட சேவை, மாலையில் சிவப்பு சாத்தி நடராஜ பெருமானுக்கு எதிர்சேவை காட்சி வைபவம் நிகழும். 8-ம் நாளன்று காலையில் `வெள்ளை சாத்தி’ அலங்காரம், மாலையில் `பச்சை சாத்தி’ அலங்காரத்தில் அருள்வார். 10-ம் நாளன்று திருத்தேர் உலா நடைபெறும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:💥
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

கோயில் முகவரி:
அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர், திருக்கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் – 628 802.

🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ஏரல் அருகில்
🔱🇮🇳

பெருங்குளம் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் திருக்கோயில்.

பெருங்குளம் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் திருக்கோயில்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெருங்குளம் என்னும் ஊரில் திருவழுதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது

ஆலய சிறப்புகள்⭐
இந்த கோவில் பெருங்குளம் கிராமத்தில் திவ்ய தேசம் பெருமாள் மாயக்கூத்தர் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

இக்கோயில் பசுமையான நிலப்பரப்பின் நடுவில் அமைந்துள்ளதுடன், அமைதியான தியானத்திற்கு ஓர் நிம்மதியான புகலிடத்தையும் வழங்குகிறது. 

இக்கோயில், உத்தம பாண்டியன் என்றழைக்கப்பட்ட வழுது பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் காலத்தில் கட்டப்பட்டது (இருப்பினும், இது வரகுண பாண்டியனின் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற முரண்பட்ட தகவலும் உள்ளது ).

தமிழ் கவிஞரும் ஞானியுமான திருவள்ளுவரின் தலைசிறந்த படைப்பான திருக்குறளின் அரங்கேற்றம் இங்குதான் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது .
இத்தலம் வாலைக்குமரன் சித்தர், செங்கோல் ஆதீனம் போன்ற சிறப்புக்களுடன், பாண்டியர் கால கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது.

மூலவரின் பெயர் வழுது பாண்டியன் அல்லது இங்குள்ள திருவள்ளுவர் கதையிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது (ஆகையால் மூலவர் சில சமயங்களில் திருவள்ளுதீஸ்வரர் என்றும் குறிப்பிடப்படுகிறார்).
மண்டபங்களிலும் தூண்களிலும் தெளிவாகத் தெரிவது போல, இக்கோயில் செவ்வியல் பாண்டிய பாணி கட்டிடக்கலையால் நிறைந்துள்ளது . இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கோயில்களைப் போலவே, இக்கோயிலிலும் ராஜகோபுரம் இடம்பெறவில்லை, மாறாக மொட்டைக் கோபுரமே உள்ளது.

கோயில் வளாகம் ஒப்பீட்டளவில் பெரியதாக இருந்தாலும், கர்ப்பகிரகம் மிகவும் சிறியதாக உள்ளது. அர்த்த மண்டபத்திற்குப் பிறகு, அக்னி பிரகாரம் என்றழைக்கப்படும் ஒரு உள் பிரகாரம் உள்ளது, இது பிரத்தியேகமாக மூலவர் வழுதீஸ்வரருக்கென ஒதுக்கப்பட்டுள்ளது

இக்கோயிலில் அக்னி வளையம் மற்றும் சித்தர் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆலய அமைப்பு🛕

கிழக்கு நோக்கிய பெரும் ஆலயம்
மிக விசாலமான பரப்பளவில் பெரிய மதில் சுவரும் இருக்கிறது. இக்கோவிலில் இராஜ கோபுரம் இல்லை. காட்சி கோபுரத்தில் விநாயகர், சுவாமி அம்பாள் மற்றும் முருகர் உள்ள நுழைவு முன் மன்டப முகப்பில் சுதையில் உள்ளனர்
அடுத்து உள்ளே நுழைந்தால், இருபுறங்களும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி உள்ளனர்
நந்தி தனி மன்டபத்தில் ஆலயம் நோக்கியுள்ளார்
இங்கு உள்ள மூலவர் சன்னதி தரையில் இருந்து உயர்ந்து காணப்படுகிறது 
தென்புறம் அதிகார நந்தி மற்றும் சிவசூரியன் உள்ளார் 

தென்கிழக்கில் தீர்த்தக் கினறு ஒன்று உள்ளது.
சில படிகள் ஏறினால் நீண்ட உள் பிரகாரம் அதில் நடராஜர் தெற்கு நோக்கிய ஒரு சன்னதியில் உள்ளார். உற்சவர் சிலைகளும் பாதுகாப்புடன் உள்ளன.

மற்றும் நிருத்த மண்டபம் தாண்டி கிழக்கு நோக்கிய கருவரையில் சுவாமி திருவழுதீஸ்வரர் உன்னார் சிறிய முன் நந்தியும் உண்டு

கருவரை மிகவும் வித்தியாசமாக குறுகிய ஒரு உள் பிரகார அமைப்புடன் உள்ளது பிரம்மாண்ட அகலமான மூல கோபுரத்தோடு இருக்கிறது.
வேறு எங்கும் இல்லாத அமைப்பு.
முன்புறம் அனுஞை விநாயகர் மயில்வாகனத்துடன் பாலமுருகர் சிறிய அளவில் உள்ளனர்  

கோஷ்ட்ட பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி தெற்கு நோக்கி மிக உயரத்தில் உள்ளார். படிகள் அமைப்புகள் உண்டு.
பிரகார மண்டபத்தில் சப்தமாதர்கள் ஜுரதேவர் உள்ளனர் பிரகார கன்னி மூலையில் விநாயகர் அடுத்து சொக்கநாதர் மீனாட்சி நந்தியுடன் உள்ளார்.

வித்தியாசமான கருவரையின் உயர கோபுர அமைப்பில் வடகிழக்கு மூலையில் பைரவர் சுதையில் உள்ளார்

வடக்குப்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் தனி சன்னதி மற்றும் சனீஸ்வரர், பைரவர் உள்ளனர்
கிழக்கில் சிவசந்திரர் உள்ளார்.

சுவாமி ஆலயம் அடுத்து வலது புறம் கோமதி அம்பாள் தனி சன்னதி உள்ளது 
நீண்ட முன் மண்டபம் உள் மண்டபம் கடந்தால்
கிழக்கு நோக்கிய தனி கருவரையில் அம்பாள் நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகிறார்.
சிறிய முன் நந்தியும் உள்ளது

முன்மன்டபத்தில் வட பகுதியில் பள்ளியரையும்
தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய முனிவர் - திருவள்ளுவ நாயனார் - சிற்பமும் உள்ளது

பயண அனுபவக்குறிப்புகள்🕊️
ஆலய வளாகத்தில் சுற்றி மிகப் பெரிய மாமரங்கள் இன்றும் காய்கின்றன. ஆலய தென்கிழக்கில் அம்மன் ஆலய முன்புறம் அழகிய வடிவில் ஒரு குளம் உள்ளது. சுவாமி அம்பாள் ஆலய நடுவில் பிரகாரத்தில் பூமி அடிமட்ட சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.

இந்த கோவில் நன்கு பராமரிக்கப்பட்டு, அமைதியாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. 

மிகவும் பழமையான இந்த கோவிலில் கூட்டம் குறைவாக காணப்படுவதால் ஈசனை எந்தவித இடர்பாடுஇன்றி நிம்மதியாக தரிசிக்கலாம்

சுவாமி சன்னதிக்கு முன்பு இருக்கும் மேடையில் நிற்கும் போது வரும் காற்று மனதுக்கு அமைதி தருகிறது. கோவில் சுத்தமாக பராமரிப்பு செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் பக்தர்கள் வருகை குறைவு

கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த, இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்திப் பெற்ற சிவன் கோயிலாகும். 
கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஒரு கோயிலாகும்.
🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ஏரல் அருகில்
🔱🇮🇳

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் 17.05.26 தரிசனம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் , அப்பர் ஆகியோரின் பாடல்...