Monday, March 30, 2026

காருகுடி கைலாசநாதர் கோயில்🪷திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி வட்டத்தில், தாத்தையங்கார்பேட்டை அருகில் அமையப் பெற்றுள்ளது; காருகுடி அருள்மிகு கருணாகரவள்ளி அம்மன் உடனுறை கைலாசநாதர் சுவாமி திருக்கோயில்.

காருகுடி கைலாசநாதர் கோயில்
🪷திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி வட்டத்தில், தாத்தையங்கார்பேட்டை அருகில் அமையப் பெற்றுள்ளது; காருகுடி அருள்மிகு கருணாகரவள்ளி அம்மன் உடனுறை கைலாசநாதர் சுவாமி திருக்கோயில்.
ஆகும்.

🌿திருச்சியிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

🍁சுவாமி : கைலாசநாதர்
🪷அம்பாள்: கருணாகரவல்லி

🍀நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சந்திரபகவான், 27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திர தேவியான ரேவதி ஆகியோர் வழிபட்ட தலமாகும். சந்திர பகவான் ரேவதி நட்சத்திர தேவியை மணந்த பின்னர், இருவரும் சிவபெருமானை தரிசித்து அருள் வேண்டியதால், சந்திரனோடு 27 நட்சத்திர பத்தினிகளையும் ஒருசேர, மூன்றாம் பிறைச் சந்திரனைச் சூடிய கைலாசநாதப் பெருமானை சூரிய ஹோரை நேரத்தில் வணங்குவதற்குக் கருணை புரிந்த திருக்கோயில் என்ற சிறப்புக்குரியது காருகுடி. இறைவன் கைலாசநாதர், இறைவி கருணாகரவல்லியுடன் அவர்களுக்கு காட்சி தந்த இடமே இத்திருத்தலம் ஆகும்.

🍀ரேவதி என்ற பெயரைக் கொண்ட பெண்கள், ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காருகுடி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து இறைவன், இறைவியை வழிபட்டால், அவர்களின் சுமங்கலித்துவம் பெருகும் என்பது ஐதீகம். மேலும், கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன என்பதும் ஐதீகமாக உள்ளது. 

🍀ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது தோசம் நீங்க இக்கோயிலில் வழிபாடு செய்கின்றனர். மேலும், கண், நீர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இக்கோயிலில் பரிகார பூசைகள் நடைபெறுகின்றன.
🌟கோயில் வரலாற்றுச் சிறப்பு

சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைப் பகுதியை வல்வில் ஓரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் இக்கோயிலைப் புனரமைத்துக் கட்டியுள்ளான்.‌ அதன் பின்னர் கி. பி. 1266ஆம் வருடங்களில் கருநாடக அரசன் போசல வீரராமநாதன் இக்கோயிலுக்கு நிறைய நிலங்களைத் தானமாகக் கொடுத்து பூசைகள் தடையின்றி நடைபெறுமாறு செய்துள்ளான். கி. பி. 1541 மற்றும் 1619ஆம் வருடங்களில் இராமச் சக்கரவர்த்தி என்னும் அரசன் நில தானங்கள் வழங்கியுள்ளது;
இக்கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

💥காரிகுடி என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், பின்னர் மருவி காருகுடியானது. 

🛕ஆலய அமைப்பு:
3 நிலை ராஜகோபுரம் தெற்குப்புறம் இருக்கிறது. ஆலய நுழைவு வாசலாக உள்ளது. உள்பிரகாரத்தில், தென்புறம் ஒரு காட்சி கோபுரம் உள்ளது.
கிழக்கு நோக்கிய ஆலயம். சுவாமி அம்பாள் கருவரைகளுக்கு முன்புறம் பெரிய முன் மண்டபம் உள்ளது.

🌾முன் மன்டபத்தில், போடி நாயக்கர் திருமேனியும் அமைந்துள்ளது. 
மேலும், பெரிய நந்தி சுவாமியின் கருவறை நோக்கியவாறு உள்ளார்.  
முன்மண்டபத்தின் வட கிழக்குப் பகுதியில் நவகிரகங்கள் உள்ளன.
மண்டபத்திலிருந்து கருவரை நுழைவு மண்டபத்தில் துவாரபாலகர்கள் சிலைகள் கம்பீரமான கல்சிலை அமைப்பு.

🍂அடுத்து உள் மண்டபம். சுவாமி கிழக்கு நோக்கிய கருவரை அமைப்பும், அம்பாள் தெற்கு நோக்கிய அமைப்பும் உடையது.

🛐கைலாசநாதர் சுவாமி
இறைவன் கைலாசநாதர் சுவாமி
கருவறையில் சிவலிங்க வடிவில் கைலாசநாதர் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். அழகான பெரிய லிங்க மூர்த்தத்தை இந்த இறைவன் கொண்டிருக்கிறார்.

❄️சந்திர பகவானுக்கும், ரேவதி நட்சத்திர தேவிக்கும் இக்கோயில் இறைவன், இறைவி கருணைக் கொண்டு காட்சியளித்த சிறப்புக்குரியதால், இறைவனுக்கு கைலாசநாதர் எனப் பெயர் ஏற்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் கருணைமிக்க இறைவனாக கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார்,

🛐இறைவி கருணாகரவள்ளி அம்மன்
மிகுந்த வரப்பிரசாதியான கருணாகரவள்ளி அம்மன் பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர். சூரியன்-ரேவதி நட்சத்திர தம்பதி மீது கருணை கொண்டு, காருகுடிக்கு அழைத்து வந்து சுவாமியுடன் காட்சியளித்த சிறப்புக்குரிய கருணாகரவள்ளி அம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும் இறைவியாகத் திகழ்கிறார்.

💢கருவரைக் கோஷ்ட்டத்தில் 
தட்சினாமூர்த்தி, பெருமான், பிரம்மன்,
மற்றும், கோமுக துர்க்கை என்னும் சிறப்பு வாய்ந்த துர்க்கை அம்மனாக எழுந்தருளியிருக்கிறார். அதாவது பசுவின் முகத்தின் மேல் (கோமுகம்) துர்க்கை எழுந்தருளி, காட்சியளிப்பது தனிச் சிறப்புக்குரியது. இந்த அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

✨தனிசன்னதியில் சன்டிகேஸ்வரரும் உள்ளார்கள்.

⚡பிரகார மன்டப உள் சன்னதிகளில்
 தனித்தனியாக, பெரிய விநாயகர், 
காசி விசாலாட்சி, பஞ்ச லிங்கங்கள் உள்ளனர். குங்குமவல்லி, மகாலெட்சுமி அமைந்துள்ளனர்.

⚡வள்ளி-தேவசேனா சமேத முருகப்பெருமான்
வள்ளி-தேவசேனா சமேதராய் மயில் வாகனம் கொண்டு இக்கோயிலில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.

💫பழைமையான இத்திருக்கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. 

⭐கபால பைரவர், ராகு-கேது ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.

🌼சக்திவாய்ந்த பஞ்சமுக பைரவர் 
பைரவர் சன்னதி இல்லாத சிவாலயங்கள் இல்லை. ஒவ்வொரு திருக்கோயிலிலும் பைரவர் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டு எழுந்தருளியிருப்பார். ஆனால், காருகுடி கோயிலில் எழுந்தருளிய பைரவர் பஞ்சமுக பைரவர் என அழைக்கப்படுகிறார். பஞ்ச வக்தர பைரவர் எனவும் போற்றப்படுகிறார். சூலம், சக்கரம், மழு, கதை, கத்தி, கபாலம், டமருகம், சங்கு, பாசம், கேடயம் ஆகிய பத்துத் திருக்கரங்களுடனும், ஐந்து திருமுகங்களுடனும் கபாலமாலை அணிந்து, கம்பீரமாகக் காட்சி தருகிறார் பைரவர். இந்த சன்னதியில் பைரவருக்கு பின்னால் யாளி வாகனம் அமைந்திருப்பதும் சிறப்புக்குரியது.

🏵️தனி சன்னதியில் அகோர வீரபத்திரர் 
திருக்கோயில் உள் பிரகாரத்தில் அகோர வீரபத்திரர் தனி சன்னதி கொண்டு காட்சியளித்து வருகிறார்.

⚡இக்கோயில் கோபுரத்தையொட்டி விநாயகர் எழுந்தருளியுள்ள நிலையில், உள்ளே தனி சன்னதி கொண்டு பெரிய விநாயகர் காட்சியளித்து வருகிறார்.

🌿 தெற்கு பிரகாரத்தில் நால்வர் திருமேனிகள் உள்ளன.
இக்கோயிலில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய 4 சமயக் குரவர்களும் எழுந்தருளியுள்ளனர்
இவர்களின் திருநட்சத்திரத்தன்று சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

🌴மேலும் கோயில் திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வம் மரம் அமைந்துள்ளது. .

பரிகாரம் / பிரார்த்தணை

🍂ரேவதி நட்சத்திரம் முடிந்து அசுவினி நட்சத்திரம் தொடங்கும் முன்பாகவுள்ள 12 நிமிஷங்களின்போது, காருகுடி கைலாசநாத சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
🍂மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்றும், ரேவதி நட்சத்திரத்தன்றும் இங்கு வருண பகவானுக்கு ஹோமம் செய்தால், மழை பெய்யும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

🍂ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்திருக்கோயில் இறைவனை வழிபடுகின்றனர். நீர், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், நாள்பட்ட நோய்கள் குணமாக இக்கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. 

🍂எந்த நட்சத்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இத்திருக்கோயிலில் வழிபடலாம். இங்குள்ள இறைவனை வணங்கி, கோயிலை பிரதட்சிணம் செய்தால் பாவங்கள் விலகும், சிவனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

⛳வழித்தடம் :
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவு கொண்ட இக்கோயிலுக்கு, பெரம்பலூர் வந்து, அங்கிருந்து துறையூர் வழியாக தாத்தையங்கார்பேட்டை வர வேண்டும். தொடர்ந்து இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள காருகுடி கோயிலைச் சென்றடையலாம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
நாமக்கலிலிருந்து கிழக்கில் தாத்தையங்கார்பேட்டை வரும் வழியில் தாத்தையங்கார்பேட்டைக்குச் சற்று வடமேற்கில் உள்ளது. சிற்றூர்.
திருச்சி - தாத்தையங்கார்ப்பேட்டை வந்தும் வரலாம்.
நாங்கள் கொல்லிமலை சென்று வரும் போது இந்த ஆலயம் தரிசித்தோம்.
ஆலயம் மிகவும் பழமையானது.
ஊரின் வடகிழக்குப் பகுதியில் அமைதியான சூழ்நிலையில் உள்ளது.
தெற்குப்பக்கம் சாலை வசதி உள்ளது. ராஜகோபுரமும் உள்ளது. வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் உள்ளது. மேலும் வசதிகள் செய்யப்பட வேண்டும்.
பெரும்பாலும் கற்றளி மண்டபங்கள், பிரகாரங்கள். சில பகுதிகள் பழுதடைந்து உள்ளன. சீர்திருத்தி கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும்.  
பக்தர்கள் சபை உள்ளது. வழிபாடுகள் பூசைகள் நடைபெற்று வருகின்றன.
அமைதியும், ஆன்மீக உணர்வும் தரும் புராதான ஆலயம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
வலைதள தகவல்களுடன் 💻📡📚 
#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏 22.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱 22.02.2026

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...