Showing posts with label தஞ்சை பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள். Show all posts
Showing posts with label தஞ்சை பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள். Show all posts

Saturday, January 17, 2026

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:3. வீரசிங்கம்பேட்டை . ஸ்ரீ ஆதி வைத்திநாத சுவாமி ஆலயம்.

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:

3. வீரசிங்கம்பேட்டை . ஸ்ரீ ஆதி வைத்திநாத சுவாமி ஆலயம்.

🛕கண்டியூர் - பசுபதி கோவில் பிரதான வழியில் வரும், கல்யாணபுரம் அருகில் தென்புறம் சுமார் 700 மீட்டர் உட்புறம் உள்ளது ஸ்ரீ வைத்திநாத சுவாமி ஆலயம்,
276 சிவலிங்கங்கள் உள்ள ஆலயம்.

🛕தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து 14 கிமீ தொலைவில், வீரசிங்கம்பேட்டையில் ஸ்ரீ ஆதி வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது வீரசிங்கம்பேட்டை ஆதி வைத்திநாதஸ்வாமி ஆலயம். 

🏵️மூலவர்: ஆதி வைத்தியநாதர்; அம்பாள் : வாலாம்பிகை. இரண்டுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. 

🏵️வரலாற்றுப்படி அகஸ்தியர் முனிவரால் நிறுவப்பட்ட தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:
 1.வைத்தியநாதர், பூமாலை. கீழவாசல், தஞ்சாவூர்.
2.ஆதி வைத்தியநாதர், வீரசிங்கம்பேட்டை, 3.ஔஷதபுரீஸ்வரர், மாத்தூர்
4.ராஜராஜேஸ்வரர், கடகடபை,
(தற்போது கூடலூர் - மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் உள்ளது)
5.பூஜாபதீஸ்வரர், சொரைக்காயூர் 

🏵️ஐந்து கோவில்களில் மிக தொன்மையானது வீரசிங்கம்பேட்டையில் உள்ள ஆதி வைத்தியநாதர் கோவில். இது 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோவில்

🛕கோயில், கிபி 8ஆம் நூற்றாண்டின் மத்தியில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டதால், இதற்கு முன்பு நந்திபுரம் என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலில் உள்ள பல்லவர் பாரம்பரியத்தின் சான்றாக, வழக்கமான பல்லவர் பாணியில், மகா மண்டபத்தின் நுழைவாயிலில் உள்ள விநாயகர் உள்ளது.

🍀கிபி 750 இல் கட்டப்பட்ட இந்த கோயில், 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் காலம் வரை பல்லவர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்களிடமிருந்து வலுவான ஆதரவைக் கண்டுள்ளது.

🌟 பாண்டியர்களின் காலத்தில் இந்த கோவிலுக்கு அருகில் ஒரு அரண்மனை இருந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் 1311 இல் மாலிக் கஃபூர் தலைமையிலான முகலாயர்களின் படையெடுப்பின் போது இடிக்கப்பட்டது.

🛕 கோவிலுக்கு கிழக்கிலிருந்து ஒரு நுழைவாயில் உள்ளது, ஆனால் இது சிறப்பு சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற நேரங்களில் பூட்டப்பட்டுள்ளது. அரிதாகவே திறக்கப்படுகிறது. 

🍀மாறாக கோயிலின் வடக்குப் பகுதியில் சிறிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. எளிய மகா மண்டபம் - வவ்வால்- நெத்தி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது 

🌼பல்லவர் கால விநாயகர் மற்றும் இரண்டு துவாரபாலகர்கள் உள்ளனர். உள்ளே சிவன் மற்றும் பார்வதி சன்னதிகள் உள்ளன. மகா மண்டபத்தின் தெற்குப் பக்கத்தில் ஒரு சிறிய வாயில் உள்ளது, அது நேராக அம்மன் சன்னதிக்கு செல்கிறது - பாண்டியர்களின் சீர் செய்து இருக்கலாம்.

🌼தனி தட்சிணாமூர்த்தி உள்ளது. வெளி கோஷ்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள விஷ்ணு துர்கைக்கான சந்நிதி, பின்னர் சேர்க்கப்பட்ட அமைப்பு.  

🌼 பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், கால பைரவர், சூரியன், சந்திரன் ஆகிய சன்னதிகளும், வட்ட வடிவ பீடத்தில் தனி நவக்கிரகம் சன்னதியும், அதனை அடுத்து பால தண்டாயுதபாணியாக முருகனுக்கு மற்றொரு சன்னதியும் உள்ளன.

🏵️கோவில் உள்ள மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாடவீதியில் 276 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

 🛕இந்த 276 லிங்கங்கள் எல்லாம், கோவில் தென்புறத்தில் உள்ள கிராமத்தில் தோண்ட தோண்ட கிடைத்து அதை இங்கு வைத்து வழிபடுகிறார்கள்.

🔱இவை சிவபெருமானின் 276 பாடல் பெற்ற ஸ்தலங்களைக் குறிக்கும். பூமிக்கு அடியில் மொத்தம் 1000 லிங்கங்கள் புதைந்திருப்பதாக நம்பப்படுவதால், இது வடிவமைப்பா அல்லது தற்செயலானதா என்பது தெரியவில்லை, 

🔱மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த கோயில் கட்டப்பட்டபோது இந்த இடத்தை தோண்டியபோது, ​​​​ இந்த லிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

🏵️மேற்கில் விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகளுக்கு இடையே ஒரு நீண்ட நடைபாதை உள்ளது, இதில் 3 செட் லிங்கங்கள் உள்ளன. முதலாவது 12 ராசிகளைக் குறிக்கும் 12 லிங்கங்களின் தொகுப்பு. இரண்டாவது, ஒரு பெரிய லிங்கம் - நடுநாயகமாக விஸ்வநாதர், மற்றும் 14 லிங்கங்களின் மற்றொரு தொகுப்பு. 276 லிங்கங்களைக் கொண்ட மேற்கு மண்டபத்தின் மற்ற பகுதியிலிருந்து இது தனித்தனியாக உள்ளது.

🍀மருத்துவத்துடன் தொடர்புடைய கோயில் என்பதால் தென்கிழக்கில் சந்திரனுக்குப் பக்கத்தில் தன்வந்திரி, போகர் சித்தர், அகஸ்திய முனிவர் ஆகியோர் தனிச் சந்நிதி உள்ளது. இவை மூன்றும் பொதுவாக மூலிகைகள் மற்றும்/அல்லது மருத்துவத்துடன் தொடர்புடையவை.

🪴 அவற்றை அடுத்து கோயிலின் ஸ்தல விருட்சம் - ஒரு வில்வம் மரம். 
 ஒரு கிளையில் 9, 13 அல்லது 16 இலைகள் கொண்ட வில்வம் இலைகளை துளிர்ப்பது மகா வில்வம் என்று அழைக்கப்படுகிறது.

🔰தற்போது இங்கு ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.

💥இக்கோயிலுக்கு அருகில் (2 கி.மீ. தொலைவில்) புகழ்பெற்ற பாடல் பெற்ற ஸ்தலங்கள் உள்ளன - திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருவையாறு போன்ற தலங்கள் உள்ளன.

# 28.12.2025 மீள் தரிசனம்
#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/17gR3nwvNF/
வீரசிங்கம் பேட்டை

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:🛕 2.1.கடகடப்பை: ஸ்ரீ ராஜராஜேஸ்வரர்

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:

🛕 2.1.கடகடப்பை: ஸ்ரீ ராஜராஜேஸ்வரர்

🏵️ புராண வரலாற்றுப்படி அகஸ்தியர் முனிவரால் நிறுவப்பட்ட தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:

 1.வைத்தியநாதர், பூமாலை. கீழவாசல், தஞ்சாவூர்.
2.ஆதி வைத்தியநாதர், வீரசிங்கம்பேட்டை, 3.ஔஷதபுரீஸ்வரர், மாத்தூர்
4.ராஜராஜேஸ்வரர், கடகடபை,
(தற்போது கூடலூர் - மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் உள்ளது).
5.பூஜாபதீஸ்வரர், சுரைக்காயூர் 

கடகடப்பை: ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் ஆலயம்

🛐தஞ்சை புறவழி சாலையில் வெண்ணாற்றங் கரையில் கிழக்கில் 2 கி.மீ.வந்து, கொளமங்கலம் பிரிவுப்பாதையில் (கரையில் ஒரு அய்யனார் ஆலயம் உள்ளது - அதன் அருகில்) பிரியும் பாதையில் மேலும் 1 கி.மீ சென்றால், வரும் கூடலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் கருவரை அருகில் தனியரையில் கடகடப்பை ஆலய மூர்த்தங்கள் உள்ளது.

🛐 கூடலூர் - கடகடப்பை கிராமத்தில் அஹ்ரகாரத்தில் இருந்த சிவாலயம் முற்றிலும் சிதைந்து விட, அங்குள்ள மூலவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் மற்றுமுள்ள மூர்த்தங்கள் கூடலூரில் வைத்து வணங்கப்பட்டு வருகிறது.

🛕 2.2. கூடலூர் - சொக்கநாதர் - மீனாட்சியம்மன் ஆலயம்

🛐தஞ்சாவூர்...வெண்ணற்றங்கரை வடகரையில் உள்ள சிற்றூர். புண்னைநல்லூர் வழியில் வந்து கும்பகோணம் By Pass வழியில் சிறிது தூரத்தில் வரும் வெண்ணாற்றங்கரையில் வடகரையில் 2 கிமீ. அய்யனார் ஆலயம் எதிரில் வடகிழக்கில் இறங்கும் பாதையில் சென்றால் கூடலூர் அடையலாம்.

🛐 தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள பழமையானசிவாலயங்களில் ஒன்று. திருப்பணிகளை எதிர்நோக்கியுள்ளது. இத்திருத்தலத்தில் மேற்கு நோக்கி சுவாமியும், தனி சன்னதியில் அம்பிகை தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர்.

🏵️ஆனித்திருமஞ்சனம் நடைபெறுகின்ற
பஞ்ச ஆதித்ய தலங்களில் ஒன்றானஇச்சிவன் கோயில், சூரிய தோஷம் போக்கிடும் தலம் என்பதும், இங்குள்ள பைரவருக்கு ஒவ்வொரு அஷ்டமியிலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பின்விசேஷ வழிபாடுகள் நடைபெறுவதும் தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும்.

🏵️மாசி மாதம் 27,28,29 -தேதி நாட்களில், சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள்
இறைலிங்க திருமேனியில் படர்ந்து வழிபட்டு செல்வது மற்றுமொரு சிறப்பு.

🏵️தஞ்சை பெருவுடையாரின் ஆணைப்படி,அநபாய சோழர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட இத்தலத்திற்கு, மதுரை சொக்கநாதர்
ஒரு ஆனி மாதம் உத்திர நாளில் வருகை தந்து அருள்புரிந்ததாக தலவரலாறு கூறுகிறது.

🏵️நம் ஈசன் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில், சித்திரை தமிழ் வருடப்பிறப்பும், சித்ரா பவுர்ணமியும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

🏵️இரண்டு பிரகாரம் முழுதும் வெளவால் நெற்றி மண்டபம் கொண்டது.

🌟நுழைவு வாசல் தெற்கு புறம் காட்சி கோபுரத்துடன் அமைந்துள்ளது.

💥திருப்பனி வேலைகள் நடைபெற்று வருகிறது.

🏵️சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு பார்த்தும் தனி தனி சன்னதிகளில் 
முழுவதும் செங்கற்கள் கொண்ட திருச்சுற்று மதில் சுவரும் உள்ளது. அலங்கார மண்டபம், உள் மண்டபம். அனைத்தும் உடையது.

https://www.facebook.com/share/p/1DciRQvGWa/
#சுப்ராம் - 28.12.2025
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...