Friday, July 31, 2026

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் 18.07.2026

தென்காசி 
காசி விஸ்வநாதர் ஆலயம்
தென்காசி
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசியில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது.சிற்றாறு எனும் ஆற்றங் கரையில் ஆலயம் உள்ளது.

1445-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1446-ல் சுவாமி மற்றும் அம்மன் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டன.
ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கியது.
நீளம்: கிழக்கு-மேற்கு -554 அடி
அகலம்: தெற்கு-வடக்கு-318 அடி

இராஜகோபுர அமைப்பு

மிகப்பெரிய கிழக்கு ராஜகோபுரம்178 அடி 9 நிலை கொண்டது. 
நீளம்: வடக்கு - தெற்கு -110 அடி
அகலம்: கிழக்கு-மேற்கு- 84 அடி
1456-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, பொ.ஊ. 1462-ல் குலசேகர பாண்டியரால் முற்றுவிக்கப்பட்டது.
(பரக்கிரம பாண்டிய மன்னர் காலமான பின்பு அவரது தம்பி)

இக்கோபுரத்தின் சிறப்பு " இக்கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும் பாதி பகுதி நுழைந்தபின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசுகிறது. இது போன்ற சிறப்பு வேறெந்த கோவிலிலும் கிடையாது.

மொட்டைக் கோபுரம்
பொ.ஊ. 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீ வாய்க்கப்பட்டு மொட்டையாய், இருகூறாய் பொலிவிழந்து நின்றது. 1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1963-ல் இராஜகோபுரத்திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.
கோபுர உயரம்: 180 அடி

புராதானமான ஆலயம் தமிழகத்திற்குப் பெருமைதரும் சிவன் ஆலயம்.
சுவாமி - ஶ்ரீகாசிவிஸ்வநாதர், சுயம்புலிங்கம் அம்பாள்ஸ்ரீ உலகம்மை, மற்றும் ஸ்ரீபாலகுமரன் நடுவில், தனித்தனி ஆலய சன்னதிகள் அனைத்தும் கிழக்கு நோக்கியது. சோமஸ்கந்தர் அமைப்பில் உள்ள ஆலயம்.
மிகப்பெரிய ஆலயம். முழுவதும் கற்றளி.
தல விருட்சம் - சென்பகம்
உள்பிரகாரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சகஸ்ரலிங்கம், பைரவர், சூரியன், 4வர், 64 நாயன்மார்கள், சுரதேவர், விநாயகர், ஆறுமுகர், நடராஜர், முதலிய சன்னதிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் சகஸ்ரலிங்கம் கிழக்குப் பார்த்த தனி ஆலயம். பைரவர் தனி சன்னதி தெற்கு பார்த்தது.

ஆலய முன்மண்டபத்தில் உலகப்புகழ் பெற்ற சிற்பங்கள் அமைந்துள்ளது.
அகோவீரபத்திரர், அக்னி வீரபத்திரர், மன்மதன், காளிதேவி, சகாதேவன், துவாரபாலகர்கள், கர்ணன், மகாதாண்டவர், ரதிதேவி, மதனகோபாலன், தமிழனங்கு, முதலிய நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டுள்ளன.

 நவாப் ஆட்சிக் காலத்தில், அரசாங்க ஆவணங்கள் ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்தன. தென்காசிப் பாண்டியர்கள் பற்றிய கல்வெட்டுகள் இக்கோயிலில் அமைந்துள்ளன.
பரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோயிலை கட்டும்போது 8 விநாயகர் கோயில்களையும், 8 திருமடங்களையும் அமைத்தார்.

கருவறையில் உள்ள காசி விஸ்வநாதர் நீண்ட தூரத்திலிருந்து தரிசிக்கும் அமைப்பு.
6 கால பூசை. ஆனி அனுஷம் பிரும்மோட்சவம்.
ஐப்பசி உத்திரம் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
அவசியம் தரிசிக்க வேண்டிய சிறப்பு வாய்ந்த ஆலயம்.
16.8.2025 மற்றும் 18.7.26 மீள் தரிசனம்

நன்றி🙏
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...