Friday, February 6, 2026

வாழ்மங்கலம் அ/மி. வீரகாளியம்மன்

வாழ்மங்கலம் அ/மி. வீரகாளியம்மன் 
பூசை விழா 4, 5 பிப்ரவரி 2026 தரிசனம்.

திட்டச்சேரி- T.R. பட்டினம் சாலையில் உள்ளது.

செங்குந்த முதலியார் வகையறாவுக்குச் சொந்தமான ஆலயம். வருடம் ஒருமுறை எடுத்து வைத்து பூசை செய்து, 2 நாட்கள் தரிசனம் செய்யப்படும்.
கிழக்குப் பார்த்த ஒரே ஒரு கருவரை நீண்ட அகல மண்டபத்துடன் உடையது.
காளி நின்றகோலம். 
பூசை தரிசனம் முடிந்த பிறகு எடுத்துப் பெட்டியில் வைத்து விடுவார்கள். மீண்டும் வருடம் முடிந்த பிறகே
பூசை.

தினமும், மற்றும் முக்கிய நாட்களில் பெட்டிக்குள் உள்ள காளிக்கே பூசை வழிபாடு நடைபெறும்.

ஏராளமான மருளாளிகளும், பக்தர்களும் இருநாட்களும் தொடர்ந்து வந்து தரிசித்து அருள் பெற்று செல்வார்கள்.

அருகில் தனி (செங்குந்த) விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் ஆலங்கள் உள்ளன.

திட்டச்சேரியிலிருந்து Auto வில் செல்லலாம். அல்லது, காரைக்கால் - திருப் பட்டிணம் - திட்டச் சேரி வழியில் ப.கொந்தகை அருகில் வாழ்மங்கலம் உள்ளது.
சிறிய கிராமம். 
வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு. வேறு எந்தவித கடைகளும், ஓட்டல்களும் கிடையாது.
பூசை வழிபாடு நடைபெறும் நேரம் விசாரித்து செல்ல வேண்டும்.
வருட பூசை தரிசனம் போது மட்டும் விழாக் கடைகள் இருக்கும்.
காலமுறை பூசைக்காளி, மிகுந்த சக்திவாய்ந்த தெய்வம் என்பதால் பயபக்தியுடன் வணங்கி அருள் பெறுகிறார்கள்.
2026ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4, மற்றும் 5ம் தேதிகளில் முழு நாளும் தரிசனம் செய்யலாம்.
நன்றி🙏

4.02..2026
சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
4.2.2026

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...