(நேரக்கோவில்)
மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி எனும் கிராமத்தில் உள்ளது காலதேவி கோவில். கோவிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் ’நேரமே உலகம்.’
மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ செல்லமுடியும்.
புராணங்களில் வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக வணங்குகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகின்றன. காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்கள் இவை அனைத்துக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி இந்த காலதேவிக்கு உண்டு
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான்.
பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாகவும் இவை கருதப்படுகின்றன.
கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும். கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை.
காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு போன்ற வேண்டுதல்கள் இல்லாமல், “எனக்கு எது நல்லதோ அதைக் கொடு" என வேண்டினால் போதும்.
இந்த கோவிலில் கால தேவிக்கு மட்டுமே சந்நிதி உள்ளது. மற்ற எந்த தெய்வத்திற்கும் சன்னதி கிடையாது. காலதேவி அம்மன் எண்கோண வடிவ கருவறையில், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் என அனைத்தும் சூழ, காலசக்கரத்தைக் குறிக்கும் விதத்தில், வட்டவளையங்களின் நடுவில் நட்சத்திர நாயகியாக அபய, வரதஹஸ்த முத்திரைகளுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
கெட்ட நேரத்தை மாற்றும் கால தேவி அம்மன்
இந்த கால தேவி அம்மன், இங்கு வரும் பக்தர்களின் காலத்தில் உள்ள கெட்ட நேரங்களை நீக்கி அருள்புரிகிறார். இக்கோவிலில் ஒரு அபூர்வமான கால சக்கரம் உள்ளது. இந்த கால சக்கரத்தில் அனைவரும் 11 நொடிகள் நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நிற்கும் நேரத்தில் நமது கால சக்கரமானது சுழன்று நமக்கு நல்ல நேரத்தை தரும் என்ற நம்பிக்கை இங்கு உள்ளது. இதற்கு நபருக்கு 50 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த கோவிலில் மாலை ஆறு மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. எவர் ஒருவர் தன்னுடைய வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை போக்க வேண்டும் என்று நினைத்தாலும், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு, கால சக்கரத்தில் நின்று பிரார்த்தனை செய்தால், தங்களது வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை நல்லா நேரமாக மாற்றிக்கொள்ளலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
பயன அனுபவக்குறிப்புகள்🕊️
ஆலயம் நூதனமாகக் கட்டப்பட்டுள்ளது. புரான வரலாறு தெரியவில்லை. தனியார் கூட்டுப்பாட்டில் உள்ள ஆலயம் மிக அருகில் சுற்றுப்புறங்களில் கடைகள் வீடுகள் எதுவும் இல்லை
சாதாரண நாட்களின் இரவிலும் ஆலயம் திறந்து காட்டுகிறார்கள்.
ஆலயம் பெரிய வளாகம் நடுவில் ஆலயம் உள்ளது அம்பாள் கருவரை சன்னதி ஒரு முன்மன்டபத்துடன் கூடியது.
அம்பாள் அருள் தரிசனம் செய்ய வரிசைமுறை ஏற்படுத்தி உள்ளனர்.
Rs.50/- நுழைவு சீட்டு வாங்கிச் சென்று, ஆலயம் உள் சன்னதியில் அம்பாள் முன் உள்ள சக்கரப்பகுதியில் நின்று வழிபடலாம்.
சற்று நேரம் காலச்சக்கரத்தில் நிற்கும் போது கால் பாதம் வழியாக ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது என்பது ஒரு அனுபவ உண்மை.
ஆலயக்கருவரை மன்டபம் முன்புறம் பெரிய மன்டபம், அன்னதானக் கூடம் பக்தர்களின் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வாகன நிறுத்தம் கட்டணம் இல்லை
பௌர்ணமியில் அன்னதானம் செய்கிறார்கள்.
நன்றி🙏 18.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment