Friday, February 6, 2026

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம், திருப்புகழ்த்தலம்

திருப்புகழூர்
அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர்
நாயன்மார்தலம்
திருமுறைத்தலம்,  திருப்புகழ்த்தலம்
தலம்: சோழவள நாட்டில் காவிரித்தென்கரையில் அமைந்துள்ள 75 ஆவது தலம். நாகை மாவட்டத்தில் நன்னிலம் கோட்டத்தைச் சேர்ந்தது. நன்னிலம், சன்னாநல்லூர், நாகையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
நாகை - நன்னிலம் பாதையில் உள்ளது.

புன்னாகவனம், சரண்யபுரம், ரத்தனாரண்யம் என்பன புராணங்களில் வழங்கும் மறுபெயர்கள். இத்தலத்தின் திருக்கோயில் நாற்புறமும் அகழிசூழ நடுவில் இருக்கிறது.

 திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.

சிறப்பம்சங்கள்:
இறைவன் பெயர் அக்னிபுரீஸ்வரர்; இறைவி கருந்தாள் குழலியம்மை.(சூளிகாம்பாள்).
 இறைவன் திருநாமம் தேவாரங்களில் `கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே` `கருந்தாள் குழலியும் தாமும் கலந்து` என்பன அம்மையப்பர், திருநாமங்களை அறிவிக்கும் அகச்சான்றுகள்.

அக்னி தலம்: அக்னி பகவான் தனது பாவங்களைப் போக்க, இங்குள்ள சிவனை நோக்கி தவம் செய்துள்ளார்.
அப்பர் முக்தி தலம்: அப்பர் பெருமான் சிவபெருமானின் திருவடியில் கலந்த (முக்தி) தலம்.
மூன்று மூர்த்திகள்: வாதீஸ்வரர், வர்த்தமானீஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் என முக்காலங்களையும் உணர்த்தும் வகையில் லிங்கங்கள் உள்ளன.
சனிபகவான்: நளச்சக்கரவர்த்திக்கு அருளிய 'அனுகிரக சனி' இங்கு தனிச் சன்னதியில் அருள்கிறார். 
முருக நாயனார் அவதாரத் தலமாகவும் இது போற்றப்படுகிறது
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் திருமுறை பாடல்கள் பெற்றது.

சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கிய திருத்தலம். மேகங்கள் பூசித்த தலம்.

வாஸ்து தலம்: வீடு கட்டத் தொடங்குபவர்கள் இங்கு 6 செங்கற்களை வைத்து வழிபடுவது சிறப்பு.
வாஸ்து தோஷ நிவர்த்தி மற்றும் வீடு, மனை அமைய வழிபடப்படும் சிறப்புமிக்க தலம். 

வழிபாடு:
நான்கு தட்டுக்களைக் கொண்ட ராஜகோபுரம் மற்றும் அக்னி தீர்த்தம் உள்ளது.
பாம்பன் சுவாமிகள் பல காலம் தங்கியிருந்த தலம் இதுவாகும்.
குழந்தை வரம் வேண்டி சூளிகாம்பாளை வழிபடும் வழக்கம் உள்ளது. 
திருப்புகலூர், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வாஸ்து குறைபாடுகளை நீக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.

விழா:

சித்திரைச் சதயத்தைப் பத்தாம் நாளாகக்கொண்டு விழா நடைபெறுகிறது. பத்துநாளிலும் அப்பர் சுவாமிகள் வரலாற்றை ஒட்டிய ஐதீகமே நினைவூட்டப்பெறுகின்றது. வைகாசி மாதம் பருவ இறுதியாகப் பிரமோற்சவம் நடைபெறுகிறது. சந்திரசேகரர் விசேஷ மான மூர்த்தி.

தீர்த்தம்:
அக்னிதீர்த்தம். இதற்குப் பாணதீர்த்தம் என்றும் ஒரு பெயருண்டு. முடிகொண்டான்ஆறு, கோயிலுக்குத் தென்பக்கத்தில் ஓடு கிறது.
தல விருட்சம்: புன்னை. `புன்னைப் பொழிற்புகலூர்`, `புன்நாகம் மணங் கமழும் பூம்புகலூர்` என்ற திருமுறைகள் இதற்கு மேற்கோள்.

ஆலய அமைப்பு:
கோயிலின் முன்பே குளம் உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து, உள் கோபுரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறத்தில் திருநாவுக்கரசர் சன்னதி உள்ளது. 

கோஷ்டத்தில் அகத்தியர், நடராஜர், கணபதி, அண்ணாமலை, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் வாதாபி கணபதி, திருநாவுக்கரசர், காசிவிசுவநாதர், சோமநாயகர் சன்னதிகள் உள்ளன. திரிமுகாசுரன், காலசம்காரமூர்த்தி ஆகியோரும் உள்ளனர். அருகில் தலவரலாறு கல்வெட்டாக உள்ளது. 

வெளியே இடதுபுறத்தில் சூளிகாம்பாள் (கருந்தார்குழலி) சன்னதி உள்ளது. கோயில் வளாகத்தின் வெளியில் திருநாவுக்கரசர் மண்டபம் 22 சூன் 1958இல் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டதற்கான கல்வெட்டோடு உள்ளது. மண்டபத்தின் முன்பாக குளம் காணப்படுகிறது

பிற சிறப்புகள்
திருப்புகலூர் முருக நாயனார் அவதாரத்தலம். இவரது திருமடம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள் இவருடன் தொண்டர்குழாமாக இருந்து மகிழ்ந்த மடம்.சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவனார் செங்கல்லைப் பொன் கல்லாக மாற்றிய தலம்.

திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம்

மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, அதன் இடது புறத்தில் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் கோயிலுக்குள் கோயிலாக உள்ளது. மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் வாயில் வழியாகவே அடுத்துள்ள வர்த்தமானீஸ்வரர் சன்னதிக்குச் செல்லமுடியும். அதற்கு தனியாக வேறு வாயில் காணப்படவில்லை. அதில் வர்த்தமானீஸ்வரர் உள்ளார். அவருக்கு அருகில் பலி பீடம் உள்ளது. எதிரில் முருக நாயனார் சிற்பம் உள்ளது. 

வேளாக்குறிச்சி ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது.

நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.

#மீள்தரிசனம் 4.2.2026
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம், திருப்புகழ்த்தலம்

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம்,  திருப்புகழ்த்தலம் தலம்: சோழவள நாட்டில் ...