வெண்ணி மலை முருகன்
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசி - திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில், தென்காசிக்குக் கிழக்கே சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
பாவூர்சத்திரம், காமராஜ் நகரில் அமைந்துள்ள வெண்ணிமலை சுப்ரமணியசுவாமி கோயில் ஒரு புகழ்பெற்ற முருகன் குன்றாகும்.
பாவூர்சத்திரம் என்ற ஊரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்த விமன்மலைக்குன்றின் மீது இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில், சுப்ரமணிய சுவாமியாக வழிபடப்படும் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு முருகப்பெருமான் தனது தேவியர்களான வள்ளி மற்றும் தேவசேனாவுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நுழைவாயில் வளைவு :
கட்டுமானத்திற்காக உள்ளூர் தனவந்தர்களால் உருவான இந்த வளைவில் நாரதர், முருகப்பெருமான், வள்ளி மற்றும் தேவசேனா தேவியர்கள் மற்றும் முனிவர் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
இந்த வளைவு, அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான தனவேல் அவர்களால் 1.3.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த அற்புதமான நகரத்தை நோக்கியவாறு ஒரு குன்றின் மீது அமைந்துள்ள அழகான கோயில். பாவூர்சத்திரத்தில் உள்ள வெண்ணிமலை சுப்ரமணியசுவாமி கோயில்.
இந்தக் கோவில் ஊரில் உள்ள பொது மக்களின் பேருதவியால் கட்டப்பட்டுள்ளது. நிதி உதவி செய்த ஊர் பெருமக்களை கல்வெட்டில் பெயர் பொருத்தியுள்ளார்கள்
மிகப்பெரிய முன் மன்டபம் அடுத்து 7 அடுக்கு ராஜகோபுரம் உள் நுழைவில் ராஜ கோபுரத்தின்கீழ் ஒரு புறம் ராஜகணபதியும் மறுபுறம் மகாலெட்சுமியும் உள்ளார்கள். இராஜ கோபுரம் தொடர்ந்து பெரிய வெளி மண்டபம் அதில் பலிபீடம், கொடிமரம் உள்ளது
வெளிமண்டபம் மற்றும் உள் மண்டபம் அடுத்த கிழக்கு நோக்கிய கருவரையில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி அருள் தரிசனம் தருகிறார்.
கோஷ்ட்டத்தில் தென் பகுதியில் கல்யாண குருதட்சிணா மூர்த்தி, கன்னி மூலையில் தனி கணபதியும், விஷ்ணுதுர்க்கையம்மன் மற்றும் நவகிரகங்கள் உள்ளன.
வடக்குப்பகுதியில் தெற்கு நோக்கிய மகாகால பைரவர் தனி சன்னதியில் உள்ளார்.
ஆலயம் தூய்மையாகவும் சிறப்பாகவும் முறையான பூசைகளுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆலயம் உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் தொலைவில் உள்ள இடங்கள் மிக ரம்யமான காட்சிகள் காணலாம்.
பரபரப்பு இல்லாத தனிமையான இடத்தில் அமைதியும் பக்தியும் நிறைந்த ஆலயமாக விளங்குகிறது.
அனைத்து விஷேச நாட்களிலும் ஆலயம் விழாகாணுகிறது. மாசி மாதத்தில் நடைபெறும் விழா மிகவும் பிரசித்தம் ஆயிரக்கணக்கான மக்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபடுகிறார்கள்.
நன்றி🙏 18.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் #ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment