பழமுதிர்சோலை முருகன் கோயில்
முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது.மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதான் என்று நம்பப்படுகிறது.
மதுரைக்கு வடகிழக்கில் சுமார் 25 கி.மீயில் உள்ள அழகர்மலைக்காடுகளின் இடையே அழகர்கோவில் எனப்படும் 108 திவ்விய தேச ஆலயம் அமைந்துள்ள மலை அடிவாரத்திலிருந்து 3 கிலோமீட்டர் நல்ல பாதை வசதிகளுடன் அமைந்து உள்ளது. தற்போது புதிய பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்று. மலையும் காடும் சேர்ந்த அற்புதமான இயற்கையோடு கலந்துள்ளது.
கிழக்கு நோக்கிய ஆலயம் 5 நிலை இராஜ கோபுரம் உடையது.
உள் மன்டபத்தில் பலிபீடம், கொடிமரம் உள்ளது
கருவரை மூன்று பிரிவாக உள்ளது
விநாயகர் வள்ளி தெய்வானையுடன் முருகர் மற்றும் வேல் வைத்து அமைக்கப்பட்ட ஆலயம். கருவரை அடுத்துள்ள மண்டபத்தில் உற்சவர்கள் அமைத்துள்ளனர்.
அருகில் ராக்காயி அம்மன் மற்றும் நுபர கங்கை தீர்த்தம் சற்று மேலே மலை மீதுள்ளது.
மலைக்கு அழகர் கோவிலின் வட பகுதி லிருந்து மலைப்பாதை வழியாக மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தும் வரலாம்.
அழகர் கோவில் (அடிவாரத்திலிருந்து)
ஆலய நிர்வாகத்தின் மூலம் சிறிய பேருந்து விடப்படுகிறது. மலைக்கு செல்ல கட்டணம் ரூ 10 மட்டும்.
(20.02.2020,19.7.2026)
நன்றி🙏 19.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment