கள்ளழகர் கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் மதுரை மாநகரின் மையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது
தமிழ் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்தக் கோவில், . 6-லிருந்து 9-ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தில் போற்றிப் பாடப்பட்டுள்ளது. இது திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.
மூலவர் - அழகர் அல்லது அழகியத்தோளுடையான், சுந்தரபாஹூ
தாயார் - சுந்தரவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
காட்சி - மாண்டூக முனிவர், தர்மதேவன், மலையத் துவசப் பாண்டியன்
திசை - கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் - நூபுர கங்கை எனும் சிலம்பாறு
விமானம் - சோமசுந்தர விமானம்
உற்சவர் - கள்ளழகர்
மூலவர் சிறப்பு
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் பரமசுவாமிக்கு நடத்தப்படும் தைலப்பிரதிஷ்டை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரதிஷ்டை உற்சவம் தை அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை ஆறுமாதக் காலத்துக்கு நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் உற்சவரை மட்டும் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்
இக்கோயிலில் பெருமாள் கள்ளழகர் என்றும் தாயார் லட்சுமி திருமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சங்க இலக்கியங்களிலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் இக்கோயில் திருமாலிருஞ்சோலை என்று குறிக்கப்படுகிறது.
கோயிலைச் சுற்றியுள்ள கருங்கல்லாலான மதில் சுவர் இக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்துள்ளது. ஏழடுக்கு ராஜகோபுரத்தைக் கொண்ட இக்கோயில் ஒரு பெரிய கோட்டையால் சூழப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி பாழடைந்துள்ளது.
துர்வாச முனிவரிடமிருந்து சுதபவ முனிவர் பெற்ற சாபத்தைப் போக்க பெருமாள் கள்ளழகராகத் தோன்றியதாக நம்பப்படுகிறது. இக்கோயில் தென்கலை வழிபாட்டு முறையை பின்பற்றுகிறது.
அழகர் கோயில் என்ற 'திருமாலிருஞ்சோலை' என்று ஆழ்வார்களால் பாடப் பெற்ற அருள்மிகு சுந்தர ராசப் பெருமாள் என்கின்ற கள்ளழகர் திருக்கோவில், . இது உலகளவில் பிரசித்தி பெற்ற ஓர் திருமால் கோவிலாகும். 108 வைணவ திவ்யதேச திருப்பதிகளுள் அதிகமாகப் பாடல்கள் (129) பெற்ற மூன்றாம் திவ்யதேசம் இதுவே ஆகும்.
தமிழ் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், போற்றும் இத்திருத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, பழமுதிர் சோலை, மாலிருங்குன்றம், அழகர்மலை என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நங்கள் குன்றம் என்று அழைக்கப்படும் வட்ட வடிவ கருவறையில் (கேரள கோவில்கள் போன்ற அமைப்பு) இறைவனாகிய பெருமாள் ஸ்ரீபரமசுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்தி அழகர் பெருமாள், அல்லது சுந்தரராச பெருமாள் எனப்படுகிறார்.
பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகிய பல மன்னர்கள் இத்திருக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர்.
மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது. ஆர்யன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இ. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது. கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சன்னதி கலைநயத்துடன் உள்ளது. திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.
வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஓவியங்கள் உள்ளன. கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது. கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை, அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.
புதிய தேர்
ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் புகழ் பெற்றது.
இந்தக் கோவிலுக்கு 300 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேர் கிடைத்தது, 15 கைவினைஞர்களைக் கொண்ட குழுவைக் கொண்டு வேங்கை மர மரத்தையும், சிற்பங்களுக்கு பர்மா தேக்கு மரத்தையும் பயன்படுத்திக் கட்டப்பட்டது. சோதனை ஓட்டம் 6 ஜூலை 2015 அன்று நடைபெற்றது.
நாராயண வாவி தெப்பக்குளம் நுபரகங்கை மலைப்பாதை
கள்ளழகர் ஆலயம் பெரியவாச்சான் நுழைவுவழி வடபுரம் வழியாக அழகர் மலைமேல் 3 கிலோமீட்டர் நடந்து செல்லும் பாதையில் நாராயணவாவி தெப்பக்குளம் மற்றும் மலை மேல் உள்ள பழமுதிர்சோலை ஆலயம், ராக்காயி அம்மன், நுபுர கங்கை முதலிய இடங்களுக்கு காட்டு மலைப்பாதையில் நடந்து சென்றுவரலாம் அற்புத பயண அனுபவங்கள் கிடைக்கும்.
நன்றி🙏 19.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment