அருள்மிகு பரங்கிரிநாதர் திருக்கோவில்
🙏 மதுரைக்கு அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாடல் பெற்ற ஸ்தலம். சிவபெருமான் குன்று வடிவில் காட்சியளிக்கும் இத்தலம், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாகவும் சிறப்பு பெறுகிறது 🛕✨
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிகோயில், மதுரைக்குத் தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் முருகப்பெருமான், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
கோவில் அமைப்பு
கிழக்கு நோக்கிய ஆலயம் இராஜகோபுரம் கோயிலின் கோபுரம் 46 மீட்டர் உயரமுள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதி சிற்ப வேலைப்பாடுமிக்கது. இதன் சிகரப் பகுதியில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
அடுத்து பெரியகல் மண்டபம் ; தூண்களில் மிக நுனுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிலைகள்கோவிலின் நுழைவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண்கள், நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும். 'முருகன் தெய்வானை திருமணக்கோலம்' போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன.
அடுத்து உள் மன்டபத்தில் பெரிய கல் நந்தி, மயில், மூஷிசன் உள்ளனர் உற்சவருக்கு தனிசன்னதியும் உள்ளது. ஆலயம் கருவரை நோக்கிய வாறு ஒரு உயரமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை, ஒரு குகைக் கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.
சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத் தக்கவையாக உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர, திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன.
அர்த்த மண்டபத்தில், சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும், திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன.
'சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள், துயர் களையப் பெற்றனர். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில், இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன்-தெய்வயானை திருமணம் இந்தத் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
திருமண விழாவில் பிரம்மா, விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.
இக்கோவிலில் வீரபாகு வழித் கோன்றல்கள் என்று அறியப்படும் செங்குந்த முதலியார் மரபை சேர்ந்தவர்கள் இங்குச் சுவாமியைச் சுமந்து செல்லும் சீர்பாத சேவையைத் தொன்று தொட்டு செய்து வருகின்றனர்.
பெயர்க்காரணம்
பரம்பொருளான சிவபெருமான், குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்; திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (சிறுமலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகச் சேர்த்துத் திருப்பரங்குன்றம் என ஆயிற்று.
இக்குன்றமானது, சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால், தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர், தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.
சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின் முருகன்–தெய்வானை திருமணம் நடைபெற்ற திவ்ய ஸ்தலமாகும் 💍💖.
பௌர்ணமி அன்று கிரிவலம் மற்றும் கார்த்திகை தீபம் மிக விமரிசையாக நடைபெறும் 🔥🌕.
வியாபார முன்னேற்றத்திற்காக பக்தர்கள் வழிபடும் பரிகார ஸ்தலமாகவும் இத்தலம் பிரசித்தம் 💼📈.
திருஞானசம்பந்தர், சுந்தரர் மற்றும் அருணகிரிநாதர் பாடல் பெற்ற இந்த தலம் ஆன்மிக மகிமை நிறைந்தது 🎶📿.
நன்றி🙏 19.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment