Friday, July 31, 2026

சுரண்டைஸ்ரீ சிவகாம சுந்தரீ அம்பிகா ஸமேத ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் சுரண்டை திருநெல்வேலி - தென்காசி 18.7.26

சுரண்டை
ஸ்ரீ சிவகாம சுந்தரீ அம்பிகா ஸமேத ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் 
சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், அத்தியூத்து விளக்கில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 
அனுமன் ஆற்றில் வடகரையில் பாவூர்சத்திரம் பிரதான சாலையில் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கியது. இராஜ கோபுரம் இல்லை காட்சி கோபுரம் அழகாக அமைத்துள்ளனர்.
முன் மண்டபத்தில் மகாகணபதி ஒருபுறமும் பாலமுருகன் ஒரு புறமும் அமைத்துள்ளார்கள். ஆலயம் உட்புறத்தில் பலிபீடம் கொடிமரம் உள்ளது. நந்தியம்பெருமாள் தனி மண்டபத்தில் உள்ளார்.
பிரதான மண்டபத்தில் துவாரபாலகர்கள் மேலும், தெற்கு நோக்கிய அம்பிகை சிவகாமி அம்பாள் நின்றகோலத்தில் தனி கருவறையில் நின்று அருள் காட்சி தருகிறார்.
சுவாமி உள் மண்டபத்தில் விநாயகர் முருகன் உள்ளனர். கருவறையில் அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
தென் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் தனி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளனர். 
கோஷ்டத்தில்தக்ஷிணாமூர்த்தி தனி மண்டபத்துடன் உள்ளார்.
கன்னி மூலையில் விநாயகர் உள்ளார் மேலும் துர்க்கை சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்
மேற்கு புறத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் தனி சன்னதியில் லட்சுமி சரஸ்வதி மகாலட்சுமி
மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகன் தனித்தனி சந்ததிகளில் உள்ளனர். கிழக்குப்புறத்தில் நவகிரகங்கள் மண்டபத்தில் உள்ளனர். மேலும் சந்திரன், சூரியன் அமைந்துள்ளனர்
ஆலயம் 2022 ஆம் வருடம் புனரமைக்கப்பட்டு பொலிவுடன் இருக்கிறது நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள்.
நன்றி🙏 18.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் #ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...