திருவாலீஸ்வரர் சிவகாமி அம்பாள் ஆலயம்
கீழப்பாவூர் திருவாலீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம்,ஆலங்குளம் வட்டம், கீழப்பாவூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில்,சுரண்டை - பாவூர்சத்திரம்
பிரதான சாலையிலேயே உள்ளது
கீழப்பாவூர் வரலாற்றில் மிகப் பழமையான ஒன்று ராஜராஜ சோழன் வழி வந்த சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட திருவாலீஸ்வரர் ஆலயம் சிவன் கோவில்,இந்த ஆலயம் 11-ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுப்பப்பட்டது. இவ்வாலயம் அருகில் முனை எதிர் மோகர்கள் (போர் முனையில் ஆர்வம் கொண்டவர்கள்) கோட்டை உள்ளது.
கோயில் அமைப்பு
ஆலயம் கிழக்குப் பார்த்த அமைப்பு
மிக மிகப் பழமையான ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு 25.3.26 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இராஜகோபுரம் இல்லை மதில்உள்வாயில் மேல் இரண்டு நந்திகள் மட்டும் உள்ளன.
பெரிய மரங்கள் சோலைகளாக இருந்து ஆலய வசதிக்காக சரிபடுத்தப்பட்டுள்ள இடம்.
ஆலயம் தென்பகுதியில் அம்பாளும் சுவாமி வட பகுதியிலும் தனித்தனி அமைப்பில் இரண்டும் கிழக்கு நோக்கிய அமைப்பில் உள்ளன. நடுவில் நீண்ட மண்டபம் உள்ளது.
ஆலயம் உட்பகுதியில் பழமையான விநாயகர், சுவாமி சன்னதி முன்புறத்தில் விநாயகர் முருகன் மற்றும் மன்டபத்தில்
அதிகார நந்தி சூரியன் சந்திரன் சனீஸ்வரர் உள்ளனர்.
வடகிழக்கில் பைரவர் தனி சன்னதியில் உள்ளார்.
மிகவும் பழமையான சிலைகள் கொண்டது
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிருவகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
நன்றி🙏 18.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் #ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment