Saturday, May 1, 2021

சீர்காழி 12 பெயர்கள் 66 பதிகங்கள்

🏔️சீர்காழிப்பதியின் 
12 தலப் பெயர்களும் பிரமபுரம்
66 பதிக சிறப்புகளும்.
📖நமக்குக் கிடைத்த பதிகங்களைக் கொண்டு ஆராயும்போது
தமிழ் ஞானப்பெருமான் 229 தலங்களில் அருளிய பதிகங்களில் 66 பதிகங்கள் இத்தலத்திற்கு மட்டுமே உரியதாம்.  
🌀சீர்காழியின் புராண வரலாற்றை மேற்கொண்டு சம்பந்தப் பெருமான் 12 தலங்களாகச் சீர்காழி பதியை 12 வெவ்வேறு பெயர்களில்,
1.பிரமபுரம், 2.வேணுபுரம், 3.புகலி, 4.வெங்குரு, 5.தோணிபுரம், 6.பூந்தராய், 7.சிரபுரம், 8.புறவம், 9.சண்பை, 10.காழி, 11.கொச்சைவயம், 12.கழுமலம் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டு,
மொத்தம் 66 தனி பதிகங்கள் அருளியிருப்பதும்;  
இதில் 55 பதிகங்கள், தனித்தனி தலப் பெயர் பெருமை கொண்டு அமைந்த பதிகங்கள். 11 பதிகங்கள் வித்தியாசமான முறையில் அருளப்பெற்றுள்ளதும் தெரியும்.

🛡️சீர்காழி தலப் பெயர் பெருமைகளும் சம்பந்தர் அருளிய இப்பதிகங்களின் தனிச் சிறப்புகள் பற்றியும் சில அரிய நூல்கள் மற்றும் வளைதளங்களில் கிடைக்கப் பெற்ற தகவல்களையும் கொண்டு படிக்க முயன்றபோது மிக மிக அற்புத, ஆச்சரியமான #ஆன்மீகத்தமிழ் - தமிழ் மொழியின் - வளர்ச்சிக்கும் பொக்கிஷமாகத் எவ்வாறு திருமுறை விளங்குகிறது என்பது தெரியவருகிறது.
ஒவ்வொரு தலத்தின் பதிகங்களையும் வரிசையாகக் கொண்டு , இக்குறிப்புகளைத் தொகுத்துள்ளேன்.

1.பிரமபுரம், 6+5+4 = 15
2.வேணுபுரம், 1+2+0 = 03 
3.புகலி, 2+4+2= 08
4.வெங்குரு, 1+0+1=02
5.தோணிபுரம், 1+0+2=03
6.பூந்தராய், 0+1+3=04
7.சிரபுரம், 2+1+0=03
8.புறவம், 2+1+0=03
9.சண்பை, 1+0+1= 02
10.காழி, 4+7+2=13
11.கொச்சைவயம், 0+2+1= 03
12.கழுமலம் 4+0+3 = 07
மொத்தம் .= 24 + 22+20 = 66
இறையருளும், காலமும் உள்ளவர்கள் பொறுமையாகப் படித்து மேலும், மேலும் சிந்தித்துணர்வோம்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
🏔️1. பிரமபுரம்:
பிரம்மன் வழிபட்டுப் பேறுபெற்றதால் இப்பெயர்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
தனிப்பதிகங்கள்:
முதல் திருமுறையில் 6ம்
இரண்டாம் திருமுறையில் 5ம்
மூன்றாம் திருமுறையில் 4ம்
மொத்தம் 15 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
(1/66)
முதல் திருமுறை: 6 பதிகங்கள்
1.பதிகம்:1. 
பண் : நட்டபாடை
⏺️"தோடுடைய செவியன்" எனத் தொடங்கும் பதிகம்
⏺️
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(2/66)
2. பதிகம் எண். 63பண் : தக்கேசி
முதல்வரி தொடக்கம்: 'எரியார் மழு' 
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு:
#'பல்பெயர்பத்து'
#'பனுவல் மாலை' என்று சிறப்பிக்கப்பட்ட பதிகம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(3/66)
3. பதிகம் எண் :90.
பண் : குறிஞ்சி
'அரணை உள்குவீர்'  
எனத் தொடங்கும் பதிகம்.
சிறப்பு: 
#திருவிருக்குறள் என்னும் சிறப்பான குறள் அமைப்பு, இரண்டு வரிகள் உடைய 12 பாடல்களுள்ள பதிகம்.
பாடல்களில் சீர்காழியின் 12 பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது.

'தொழு மனத்தவர் கழுமலத் துறை

பழுதில் சம்பந்தன் மொழிகள் பத்துமே.'

என்று அமைத்துள்ளார்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(4/66)
4. பதிகம் எண் : 117.
பண் : வியாழக் குறிஞ்சி
'காடது அணிகலம்'  
எனத் தொடங்கும் பதிகம். 
👄 பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.
சிறப்பு:
#மொழிமாற்று என்ற இந்த அமைப்பில் உள்ளது.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(5 / 66)
5. பதிகம் எண் :127
பண் :வியாழக் குறிஞ்சி
'பிரம்மபுரத்துறை பெம்மான்'
எனத் தொடங்கும் பதிகம்.
பாடல் 1370 முதல் 1381 வரை 12 பாடல்கள்
சிறப்பு: 
#ஏகபாதம் என்ற இலக்கிய அமைப்பில் உள்ளது,
மேலும் விரிவான விளக்கம் இப்பொருள் பற்றிய என்னுடைய முந்தைய பதிவு காண்க:
#ஏகபாதம்
https://m.facebook.com/story.php?story_fbid=3986657008076193&id=100001957991710
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(6/66)
6.பதிகம் எண் :128
பண் :வியாழக் குறிஞ்சி
'ஒரு உருவாயினை'  
எனத் தொடங்கும் பாடல். 
சிறப்பு: 
#திருஎழுக் கூற்றிருக்கை.🛑
திரு + எழு + கூற்று + இருக்கை என்ற
தேர் அமைப்பில் பாடல் உருவாகும்.
பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும் அடுக்கில்

முதல் 7 வரை படிப்படியாக   

      ஒன்று, இரண்டு, ஒன்று,  

              1 2 1

ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று

            1 2 3 2 1

என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.
இதுபற்றிய தனிவிளக்கம் என்னுடைய முன்பதிவு காண:
#திருஎழுகூற்றிருக்கை:
https://m.facebook.com/story.php?story_fbid=4128933983848494&id=100001957991710
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
இரண்டாம் திருமுறை : 5 பதிகங்கள்
(7/66)
1.பதிகம் எண் :176 (40)
பண் : இந்தளம் (சீகாமரம்)
'எம்பிரான் எனக்கு அமுதம்'
எனத் தொடங்கும் பதிகம். 
11 பாடல்கள் உடையது
சிறப்பு: 
தருவானைத் தத்துவனைக்

கன்னடைந்த மதிற்பிரம

புரத்துறையுங் காவலனை

பலவடைந்தார் புண்ணியரே.

என்று திருக்கடைக்காப்பு செய்தருளியுள்ளார்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(8/66)
2. பதிகம் எண் : 201 (65)
பண் : காந்தாரம்
'கறையணி வேலியர்'
எனத் தொடங்கும் பதிகம்
11 பாடல்கள் கொண்ட பதிகம்.
சிறப்பு: 
திருக்கடைக்காப்பில், பலனுரைத்துள்ளதை உணர வேண்டும்.

பெண்ணுரு ஆணுரு வல்லாப் 
பிரமபுரநகர் மேய

அண்ணல் செய்யாதன வெல்லாமறிந்து
வகை வகையாலே

நண்ணிய ஞானசம் பந்தன் 
நவின்றன பத்தும் வல்லார்கள்

விண்ணவரோடு இனிதாக 
வீற்றிருப் பாரவர் தாமே.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(9/66)
3. பதிகம் எண் : 206 (70)
பண் : காந்தாரம்
'பிரமனூர் வேணுபுரம்'  
எனத் தொடங்கும் பதிகம். 
சிறப்பு: 
☸️#சக்கரமாற்று #திருச்சக்கரமாற்று
☸️#பனுவல்மாலை

என்றெல்லாம் பெருமையுடைய கவி அமைப்பு சார்ந்தது.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(10/66)
4. பதிகம் எண் : 209 (73)
பண் : காந்தாரம்
'விளங்கிய சீர்'  
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: 
☸️#சக்கரஞ்சீர் அமைப்பு.
12 பாடல்கள் உடையது
சீர்காழியின் 12 பெயர்களை உள்ளடக்கியது.
☸️சித்திரக்கவி வரிசையில் அருளப்பெற்றது.
☸️ #மிகைக்கவி என்றும் கூறுவர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(11/66)
5. பதிகம் எண் : 210 (74)
பண் : காந்தாரம்
'பூமகனூர் புத்தேள்'
எனத் தொடங்கும் பாடல். 
சிறப்பு: 
#கோமூத்திரி அந்தாதி அமைப்பு.
12 பாடல்கள் உடையது
🕉️சீர்காழியின் 12 பெயர்களை உள்ளடக்கியது. 
☸️கோமூத்திரி அந்தாதி வகையில் அமைந்துள்ளது. 
☸️ '#வழிமுடக்குமாவின்பாச்சல்,' என்று அருளியது எண்ணத்தக்கது.
☸️#சித்திரக்கவி வரிசையில் அருளப்பெற்றது.
☸️ #மிகைக்கவி என்றும் கூறுவர்.
இதுபற்றிய மேலும் தனிவிளக்கம் என்னுடைய முன்பதிவு காண:

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
12/66
மூன்றாம் திருமுறை: 4 பதிகங்கள்
1.பதிகம் எண் : 295 (37)
பண் : கொல்லி
'கரமுணம்'
எனத் தொடங்கும் பதிகம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
13/66
2. பதிகம் எண் : 314 (56)
பண் : கெளசிகம்
'இறையவன்'
எனத் தொடங்கும் பதிகம்
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
14/66
3. பதிகம் எண் : 325 (67)
பண் : சாதாரி
'சுரர் உலகு'
எனத் தொடங்கும் பாடல். 
சிறப்பு: 
#வழிமொழிதிருவிராகம்
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
15/66
4. பதிகம் எண் : 368 (110)
பண் : பழம்பஞ்சுரம்
'வரமதே'
எனத் தொடங்கும் பதிகம்.
சிறப்பு: 
#ஈரடி அமைப்பு வகை
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️2. வேணுபுரம்.

இந்திரன் மூங்கில் உருகொண்டு தவம் செய்து அருள் பெற்றதால் இப்பெயர்.
தனிப்பதிகங்கள்:
1 + 2 + 0 = 3.
முதல் திருமுறையில் 1ம்
இரண்டாம் திருமுறையில் 2ம்
மொத்தம் 3 பதிகங்கள்.

🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
16/66
முதல் திருமுறை
1. பதிகம் எண் : 9 
பண் : நட்டப்பாடை
'வண்டார் குழல்'
எனத் தொடங்கும் பதிகம்.

இரண்டாம் திருமுறை
17/66
1. பதிகம் எண் : 153 (17)
பண் : இந்தளம்
'நிலவும் புனல்'
எனத் தொடங்கும் பதிகம்

18/66
2. பதிகம் எண் : 217 (81)
பண் : காந்தாரம்
'பூதத்தின் படையினீர்'
எனத் தொடங்கும் பதிகம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️3. புகலி :

அசுரர்களுக்கு அஞ்சித் தேவர்கள் புகலிடம் பெற்றதால் இப்பெயர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
தனிப்பதிகங்கள்:
2 + 4 + 2 = 8 (19, 20 / 21-24 / 25, 26)
முதல் திருமுறையில் 2 ம்
இரண்டாம் திருமுறையில் 4ம்
மூன்றாம் திருமுறையில் 2ம்
மொத்தம் 8 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
19/66
முதல் திருமுறை:
1. பதிகம் எண் : 30
பண் : தக்கராகம்
'விதியால் விளைவாய்'
எனத் தொடங்கும் பதிகம்

20/66
2. பதிகம் எண் : 104
பண்: வியாழக் குறிஞ்சி
'ஆடல் அரவசைத்தான்'
எனத் தொடங்கும் பதிகம்

இரண்டாம் திருமுறை:

21/66
1.பதிகம் எண் : 161 (25)
பண் : இந்தளம்
'உகலியாழ் கடல்'
எனத் தொடங்கும் பதிகம்.

22/66
2. பதிகம் எண் : 165 (29)
பண் : இந்தளம் (மாயா மெளளி)
'முன்னியகலை'
எனத் தொடங்கும் பதிகம்

23/66
3. பதிகம் எண் : 190 (54)
பண் : காந்தாரம்
'உருவார்ந்த மெல்லிய '
எனத் தொடங்கும் பதிகம்

24/66
4. பதிகம் எண் : 258 (122)
பண் : செவ்வழி
'விடைய தேரி '
எனத் தொடங்கும் பதிகம்

மூன்றாம் திருமுறை

25/66
1. பதிகம் எண் : 261 (3)
பண் : காந்தாரப் பஞ்சமம்
'இயலிசை'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: #நாலடி மேல் வைப்பு என்ற அமைப்பு.

26/66
2. பதிகம் எண் : 265 (7)
பண்: காந்தாரப் பஞ்சமம்
'கண்ணுதலானும் '
எனத் தொடங்கும் பதிகம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿

🏔️4. வெங்குரு:

குருவழிபட்டு அருள் பெற்றதால் இப்பெயர்.

தனிப்பதிகங்கள்:
1 + o+1 = 2
முதல் திருமுறையில் 1ம்
மூன்றாம் திருமுறையில் 1ம்
மொத்தம் 2 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
1+0+1 = 02 (27 / 0/ 28)
27/66
முதல் திருமுறை
1. பதிகம்: 75
பண் : குறிஞ்சி
'காலை நன்மா மலர், '
எனத் தொடங்கும் பதிகம்.

28/66
மூன்றாம் திருமுறை

1. பதிகம் 352 (94)
பண் : சாதாரி
'விண்னவர்' 
எனத் தொடங்கும் பதிகம்.
சிறப்பு: #'திருமுக்கால் ' என்னும் அமைப்பு
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️5. தோணிபுரம்

ஊழி காலத்தில் தோணியாய் இருந்ததால் இப்பெயர் கொண்டது.

தனிப்பதிகங்கள்:
1 +0 + 2 = 3
முதல் திருமுறையில் 1ம்
 மூன்றாம் திருமுறையில் 2ம்
மொத்தம் 3 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
1+0+2 = 3 (29 / 0/ 30 - 31)
29/66
முதல் திருமுறை
1. பதிகம் எண் : 60
பண் : பழந்தக்க ராகம்
'வண்டரங்கப்புனல்'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: தூதுவகை பாடல்

30/66

மூன்றாம் திருமுறை

1. பதிகம் எண்: 339 (81)
பண் : சாதாரி
'சங்கு அமருமுன் கை'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: திருவிராகம் அமைப்பு

31/ 66

2. பதிகம் எண்: 358 (100)
பண் : பழம்பஞ்சுரம்
'கரும்பமர்'
எனத் தொடங்கும் பதிகம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️6. பூந்தாராய்

சங்கநிதி, பதுமநிதி என்ற இரு அதிதேவதைகள் பூந்தாராய் (தார் = மாலை) இருந்து வழிபட்டதால் இப்பெயர்.

தனிப்பதிகங்கள்:

இரண்டாம் திருமுறையில் 1ம்
மூன்றாம் திருமுறையில் 3ம்
மொத்தம் 4 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
0+1+3= 4 (0 / 32/ 33 - 35)

32/66
இரண்டாம் திருமுறை

1. பதிகம் எண் : 137 (1)
பண்: இந்தளம்
'செந்நெல் அங்கழனி'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு : #வினாவுரை அமைப்பு

மூன்றாம் திருமுறை

33/66
1. பதிகம் எண் : 260 (2)
பண் : காந்தாரப் பஞ்சமம்
'பந்து சேர்'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: இத்தலம் 6வது பதியெனக் குறிப்புள்ள பாடல் உள்ளது.

34/66
2. பதிகம் எண் : 263 (5)
பண் : காந்தார பஞ்சமம்
'தக்கன் வேள்ளி'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: ஈரடிமேல் வைப்பு என்ற அமைப்பு.

35/66
3. பதிகம் எண் : 271 (13)
பண் : காந்தாரப் பஞ்சமம்.
'மின்னன எயிறு'
எனத் தொடங்கும் பதிகம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️7. சிரபுரம்:

சிலம்பன் என்ற அசுரன் வேற்றுருவுடன் வந்து அமுதம் பெற, திருமால் அவனது தலைய (சிரம்) வெட்டிவிட அது ராகுவாக நின்று பூசை செய்ததால் இப்பெயர். திருமாலும் பாவம் நீங்க வழிபட்டுப் பேறு பெற்ற இடம்.

தனிப்பதிகங்கள்:

முதல் திருமுறையில் 2ம்
இரண்டாம் திருமுறையில் 1ம்
மொத்தம் 3 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
2 + 1 +0=03 (36,37 / 38 / 0)
36/66
முதல் திருமுறை

1.பதிகம் எண் : 47
பண் : பழந்தக்க ராகம்
"பல்லடைந்த'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: 6 வது பாடல் முக்கன் மூன்று

37/66
2. பதிகம் எண் : 109
பண்: வியாழக் குறிஞ்சி
'வாரு நு வனமுலை'
சிறப்பு: எதுகை சிறப்பு மிக்கது
38/66

இரண்டாம் திருமுறை

1. பதிகம் எண் : 238 (102)
பண் : நட்டராகம்
'அன்னமென்னடை'
எனத் தொடங்கும் பதிகம்.

🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️8. புறவம் :

சிபி சக்கரவர்த்தியிடம் அக்கினி தேவன் புறாவாகச் சென்று சோதித்த அரசரும் உடல் தசை அறுத்து ஈடு செய்தது. பின் அவரும் வழிபட்டுப் பேறுபெற்று, அக்கினியும் தன் பாவம் போக்கிக் கொண்டதால் புறவம் எனப் பெயர்.

தனிப்பதிகங்கள்:

முதல் திருமுறையில் 2 ம்
மூன்றாம் திருமுறையில் 1 ம்
மொத்தம் 3 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
2 + 0 + 1 = 03 (39,40 / 0/ 41)
39/66
முதல் திருமுறை

1. பதிகம் எண் : 74
பண் : தக்கேசி
'நறவ நிறைவண்டரை'
எனத் தொடங்கும் பதிகம்

40/66
2. பதிகம் எண் : 97
பண் : குறிஞ்சி
'எய்யா வென்றி '
எனத் தொடங்கும் பதிகம்

41 / 66

மூன்றாம் திருமுறை
1. பதிகம் எண் : 342 (84). 
பண்: சாதாரி
'பெண்ணிய உருவினர்'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: திருவிராக அமைப்பு
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️9. சண்பை:

கண்ணன், கபில முனிவர் சாபத்தால், யாதவன் வயிற்றில் உதித்த இரும்பை பொடியாக்கிக் கொட்டிட அது சண்பைப் புற்களாய் முளைத்து, அப்புற்களால் யாதவர் சண்டையிட்ட மாண்டிட, பழி நீங்கக் கண்ணனும், கபில முனிவரும் வழிபட்ட இடம்.

தனிப்பதிகங்கள்:
முதல் திருமுறையில் 1ம்
மூன்றாம் திருமுறையில் 1ம்
மொத்தம் 2 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
1+0+1=2 (42 / 0/ 43)
42/66

முதல் திருமுறை

1. பதிகம் எண் : 66
பண் : தக்கேசி
'பங்கமேறுமதி சேர்'
எனத் தொடங்கும் பதிகம்

43/66
மூன்றாம் திருமுறை

1. பதிகம் எண் : 333 (75)
பண் : சாதாரி
'எந்தமது '
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: திருவிராகம் அமைப்பு
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️10. காழி:

காளிதன் என்ற பாம்பும், காளியும் வழிபட்டதால் இப்பெயர்.

தனிப்பதிகங்கள்:
முதல் திருமுறையில் 4ம்
இரண்டாம் திருமுறையில் 7ம்
மூன்றாம் திருமுறையில் 2 ம்
மொத்தம் 13 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
4+7+2=13 (44 - 47 /48 - 54/ 55-56)
44/66
முதல் திருமுறை

1. பதிகம் எண் : 24
பண் : தக்கராகம்
'பூவார் கொன்றை '
எனத் தொடங்கும் பதிகம்

45/66

2. பதிகம் எண் : 34
பண் : தக்கராகம்
'அடலேற மருதம்'
எனத் தொடங்கும் பதிகம்

46/66
3. பதிகம் எண் : 81
பண் : குறிஞ்சி
'நல்லோர் தீ மேவு'
எனத் தொடங்கும் பதிகம்

47/66
4. பதிகம் எண் : 102
பண் : குறிஞ்சி
'உரவார் கலையின்'
எனத் தொடங்கும் பதிகம்

இரண்டாம் திருமுறை

48/66
1. பதிகம் எண் : 147 (11)
பண் : இந்தளம்
'நல்லாணை நான் மறை'
எனத் தொடங்கும் பதிகம்

49/66

2. பதிகம் எண் : 185 (49)
பண் : சீகாமரம்
'பண்ணினேர் மொழி'
எனத் தொடங்கும் பதிகம்

50/66
3. பதிகம் எண் : 195 (59)
பண் : காந்தாரம்
'நலங்கொள் முத்து'
எனத் தொடங்கும் பதிகம்

51/66
4. பதிகம் எண்: 211 (75)
பண் : காந்தாரம்
'விண்ணியங்கு மதி'
எனத் தொடங்கும் பதிகம்

52/66
5. பதிகம் எண் : 232 (96)
பண் : பிந்தைக்காந்தாரம்
'பொங்கு வெண்புரி'
எனத் தொடங்கும் பதிகம்

53/66

6. பதிகம் எண்: 233 (97)
பண்: நட்டராகம்
'நம் பொருள் நம் மக்கள் '
எனத் தொடங்கும் பதிகம்

54/66
7. பதிகம் எண் : 249 (113)
பண் : செவ்வழி
'பொடியிலங்கு திருமேனி'
எனத் தொடங்கும் பதிகம்

மூன்றாம் திருமுறை

55/66
1. பதிகம் எண் : 301 (43)
பண் : கௌசிகம்
'சந்தமார்'
எனத் தொடங்கும் பதிகம்

56/66
2. பதிகம் எண் : 375 (117)
பண் : கெளசிகம்
'யா மாமா'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: #மாலைமாற்று என்ற அமைப்பு
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️11. கொச்சைவயம் :

பராசர முனிவர் தன் உடல் துர்நாற்றம் பழியும் போக்கும் பொருட்டுப் பூசித்துப் பேறு பெற்றதால் இப்பெயர்.

தனிப்பதிகங்கள்:
இரண்டாம் திருமுறையில் 2ம்
மூன்றாம் திருமுறையில் 1ம்
மொத்தம் 3பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
0+2+1 = 3 (/0/ 57-58 / 59)

இரண்டாம் திருமுறை
57/66
1. பதிக எண்: 219 (83)
பண் : பியந்தைக் காந்தாரம்
'நீலநன் மாமிடற்ற '
எனத் தொடங்கும் பதிகம்

58/66
2. பதிக எண்: 225 (89)
பண் : பியந்தைக் காந்தாரம்
'அறையும் பூம்புனலோடு'
எனத் தொடங்கும் பதிகம்

மூன்றம் திருமுறை
59/66
1. பதிக எண்:347 (89)
பண் : சாதாரி
'திருந்துமா'
எனத் தொடங்கும் பதிகம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️12. கழுமலம்:

உரோமச முனிவர் உபேதசம் பெற்ற உலக உயிர்களின் மலங்களைக் நீக்கம் வரம் பெற்றதால் இப்பெயர்.

தனிப்பதிகங்கள்:
முதல் திருமுறையில் 4ம்
மூன்றாம் திருமுறையில் 3ம்
மொத்தம் 7பதிகங்கள்.
மொத்தம் 66 பதிகங்களாகும்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
4 +0+ 3 = 7 (60-63 / 0/ 64-66)
60/66
முதல் திருமுறை
1. பதிக எண்:19
பண் : நட்டப் பாடை
'பிறையணி படர்'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: திருவிராகம் அமைப்பு

61/66
2. பதிக எண்: 79
பண்: குறிஞ்சி
'அயில் உறுபடையினர்'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: #எண்ணலங்கரம் கொண்டது

62/66
3. பதிக எண்.126
பண் : வியாழக்குறிஞ்சி
'பந்தத்தால் வந்ததப்பால்'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: #திருத்தாளச்சதி என்னும் இசை வகை சிறப்பு

63/66
4. பதிக எண்:129
பண் : மேகராகக் குறிஞ்சி
'சேவுயருந்திண் கொடி'
எனத் தொடங்கும் பதிகம்

மூன்றாம் திருமுறை

64/66
1. பதிக எண்: 282 (24)
பண் : காந்தார பஞ்சமம் (கொல்லி)
'மன்னில் நல்ல'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: மதுரையில் அருளியது

65 /66
2. பதிக எண் : 371 (113)
பண் : பழம்பஞ்சரம்
'உற்றுமை'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: திருஇமயகம் என்னும் அமைப்பு
மடக்கணி சிறப்பு, 12 பெயர்களுள்ள பாடல்கள்.

66/66
3. பதிக எண்:376 (118)
பண் : புறநீர்மை
'மடல்மலி '
எனத் தொடங்கும் பதிகம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
முதல் திருமுறை : 24
இரண்டாம் திருமுறை : 22
மூன்றாம் திருமுறை : 20
மொத்தம் :66
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
இனி இப்பதிகங்களின் சிறப்புகளைத் தனித்தனியாகச் சிந்திப்போம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐


No comments:

Post a Comment