Tuesday, May 25, 2021

சம்பந்தர் அமுதம் 01.59.8.

#சம்பந்தர்அமுதம் 

முதுமையான பிறகு வாழ்வை பழியென்றும், இழியென்றும் நினைத்து தன் நிலை  குறைவென்றும்,  தயங்கி யார்யார் சொல்லும் கேட்டுநிலைகுலையாமல்,  நிற்பவர்கள் செய்ய வேண்டியது எது என்பதை உணர்த்தும் பாடல்
நம் தமிழ் விரகனார் அருளியது.

💜முதல் திருமுறை:
பதிகம்: 59 பாடல்: 8 (641)
தலம் : திருத்தூங்கானைமாடம் (பெண்ணாகடம்)
💙
பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் 
பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்

இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம் இறையே பிரியா தெழுந்துபோதும்

கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் காதலியுந் தானுங் கருதிவாழும்

தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்  
தூங்கானை மாடந் தொழுமின்களே.
                         -01.59.08 (641)
❤️
பொருளுரை

மூப்பு, பிணி உற்ற தன்மையால் பற்கள் வீழ்ந்தும், நாவானது தளர்ச்சியுற்று வாய் சொற்கள் குழறியும், மெய்யாது (தேகம்) சுருங்கி வாட்டம் கொண்டும், பிறரால் கிழம் என்று பழிக்கப்பட்டும் இழிக்கப்படும் இவ்வாழ்க்கை ஒழிய வேண்டும் என்று கருதி, அதனால், பொருத்தமற்ற இடங்களில் நிற்காமல் சிறிதும் தாமதியாது பழமையான சிறப்பும், நற்கதியும் அருளும் சக்தியுடன் அருள்புரியும்  சிவன் உறையும் பதியாகிய தூங்கானைமாடம் சென்று தொழுதால் இறையருள் பெற்று நலமுடன் இருக்கலாம்.
🛐

🛐தலம். திருத்தூங்கானைமாடம்
பெண்ணாகடம்
❤️விருத்தாச்சலம் - திட்டக்குடி சாலையில் தொழுதூரிலிருந்து 15 கி.மீ.  திட்டக்குடிக்கு கிழக்கில் 15 கி.மீ
🧡நடுநாட்டுத்தலம்
💚தேவகன்னியர், காமதேனு, வெள்ளையானை (பெண் +ஆ+ கடம்)
வழிபட்டது
💜கடந்தை நகர் எனவும் பெயர்
🤍கலிக்கம்ப நாயனார் (பணியாள் சிவனடியாராக வர, நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டியவர்) அவதாரத்தலம்
🤎அப்பர் சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்றத்தலம்.
💛'பொன்னார் திருவடிக் ஒன்றுண்டு
விண்ணப்பம் போற்றி செய்யும்

என்னாவு காப்பதற்கு  இச்சையுடன் இரு கூற்று அகல

மின்னாரு மூவிலைச் சூலம் என்மேற்பொறி மேவு கொண்டல்

துன்னார் கடந்தை  தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே.
(நாவுக்கரசர்)
💙மெய்கண்டார் அவதாரத்தலம்
🙏🙆🏼🙇🏼‍♂️
சுவாமி : சுடர்க்கொழுந்திஸ்வரர், பிரளயகாலேஸ்வரர்.
அம்பிகை: கடந்தைநாயகி
சுவாமி, கிழக்கு நோக்கியவர்
அம்பிகை தெற்குநோக்கி தனி அமைப்புடன்.
🛐கஜபிருஷ்ட விமானம்
⚛️மூலவர் நான்கு புறமும் பலகணி (சன்னல்) உள்ளது
🔯மூலவர் வடக்கில் கட்டு மலைமேல் செளந்தரேஸ்வரர் சன்னதி தனி வித்யாசமான திருக்கோவில் அமைப்பு.
☸️பிரளயம் காத்த அதிகார நந்தி கிழக்கு நோக்கியது.
🕉️பெரிய ஆலயம். மிக சிறப்பான தலம்.
❤️🙏💙🙏💜🙏💛🙏💚
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏💙🙏💜🙏💛🙏💚

No comments:

Post a Comment

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...