Sunday, May 30, 2021

திருமுறை சிந்தனைகள் - சம்பந்தர் தூது பகுதி - 3.

#திருமுறைசிந்தனைகள்:
#சம்பந்தர்தூது
பகுதி - மூன்று

முடங்கிய உலகத்தில்  உறவுகளை பிரிந்து
வாடும் உள்ளம் அமைதி பெற வேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வைத்து வணங்குவோம்.

🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

இன்றைய சிந்தனை:

பக்தி இலக்கியத்தில் ஞாலம் உய்ந்திட ஞானம் உண்ட நாம் தமிழ்ஞானசம்பந்தர் அருளிய முதலாம் திருமுறையில் வரும் 
60-வது பதிகம். தலம்: திருத்தோணிபுரம். (சீர்காழி பதியின் 12 பெயர்களில் ஒன்று)
வண் தரங்கப் புனற்கமல ... எனத் தொடங்கும் பதிகம்   தூது பற்றியது.

 இதன் பாடல்கள் 1 முதல் 3 பாடல்களில் 
வண்டு, இளங்குருகு, கோழி இவற்றின் மூலம் தூது அனுப்பியத் திறன் பற்றி முதல் இரு பதிவுகளில் சிந்தித்தோம்.

இதன் தொடர்ச்சியாக... ... 

ஆளுடையப் பிள்ளை அடுத்தடுத்து  
அங்கு வசிக்கும், நாரை, புறா, ஆகியவற்றின் மூலம் தூது அனுப்பும் கவித் திறன் பற்றி சிந்திக்கலாம்.

🙏🐾🙇🐾🙇🐾🙇🙏🐾🙇🐾🙇🐾🐾🙏

காட்சி 4  :   நாரை மூலம் தூது.

உப்பங்கழியில் வாழும் அழகுமிக்க சிவந்த கால்களை உடைய நாரையைப் பார்த்து வேண்டுகிறார்

தூதுசொல்லவேண்டிய இன்றியமையாமையையும் விளக்குகிறார்.
 
இன்றே திருத்தோணிபுரம் சென்று,
என்தூதை இரகசியமாய்ச் சொல்லுதற்கேற்ற அவகாசம் கிட்டும்வரைத் அங்கு தங்குவதற்கு வானோங்கி வளர்ந்துள்ள அழகிய மணிமாடங்கள் நிறைந்த மாடவீடுகளைக் கொண்டுள்ளது.

'நாரையே நீ சென்றால் பிறர்கண்ணில் படாமல் அங்குள்ள மாடங்களில் தங்கி, 
அங்கு எழுந்தருளியுள்ள என்னை ஆட்கொண்டவனாகிய, ஆண்மக்களில் சிறந்தவராய் விளங்கும் சிவபிரானை இன்றே சென்று அடைந்து`உடல் மெலிந்து பசலை நோய் பூக்கப்பெற்று உன் அடியவள் வருந்துகிறாள்` என்று
என் மெலிவுக்குரிய காரணத்தை அவர் அறியுமாறு உணர்த்துவாயாக. என்றார்.

பாடல் 4.. (648): 

காண்தகைய  செங்கால்ஒண்
     கழி  நாராய்  காதலால்
பூண் தகைய முலை மெலிந்து
     பொன் பயந்தாள்  என்று வளர்
சேண்தகைய  மணிமாடத்
     திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற்கு  இன்றே  சென்று
     அடியறிய  உணர்த்தாயே.

- தேவாரம் - முதல் திருமுறை 01.60:04

உள்ளக்கிடக்கையும் அடி முதல் தற்போது உள்ளவரையில் கூறவும் என்றும் ஈசனார் திருவடி அறியவும் உணர்த்தலும் உணரவேண்டும்
🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

காட்சி 5 : புறா  மூலம் தூது

இங்ஙனம் வண்டு, இளங்குருகு, சேவல், நாரை முதலானவற்றை இவர் வேண்ட, அவையும் இவரைத் திரும்பியும் பாராமல் ஒழிய,  இன்னது செய்வது என்று தோன்றாத நிலையில், 

மாடப்புறாக்களை அழைத்துக் கூறுகிறார்

அழகியதாய் அமைந்துள்ள கருமை நிறைந்த செழுமையான நிறத்தினையும் பவளம் போன்ற கால்களையும் உடைய புறாக்களே!
உங்களைத் தொழுகின்றேன்.
யான் அழைத்த வண்டு, இளங்குருகு, சேவல், நாரை முதலியவர்கள் என்னை ஒருமுறையும் திரும்பிவந்து என்னைப் பாராது உள்ளனர்.

நீவிர் தேரோடும் அகலமான வீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையினை உடைய சிவபிரானிடம் சென்று என் பிரிவாற்றாத நிலையைக் கூறுவீர்களாக.
என்கிறார்.

பாடல் : (649) 

பாராரே  எனை  ஒருகால்
     தொழுகின்றேன்  பாங்கமைந்த
காராரும்  செழு  நிறத்துப்
      பவளக்காற்   கபோதங்காள் 
தேராரு   நெடுவீதித்
      திருத்தோணி புரத்துரையும்
நீராரும் சடையாருக்கு
       என்நிலமை   நிகழ்த்தீரே.

- தேவாரம் - முதல் திருமுறை 01.60:05
(கபோதம் - புறா)
🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

நமக்கு விருப்பமானவர்கள் தொலைதூரத்தில் இருக்கும் நிலையில் அவர்களுடைய நினைவுகளால் வாடும் உள்ளம் விளங்கவே இந்த தூதுயியல் பாடல்கள் மூலம் நமக்கு  உணர்த்தப்படுகிறது.

🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
தொடர்புடைய பதிவுகள்:

பதிவு : ஒன்று: பாடல் 1 பற்றியது.
https://m.facebook.com/story.php?story_fbid=3913167225425172&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5653593588049185&id=100001957991710

பதிவு: இரண்டு:பாடல் 2 மற்றும் 3 பற்றியது
https://m.facebook.com/story.php?story_fbid=3916498978425330&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5657246011017276&id=100001957991710
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...