Tuesday, April 20, 2021

அப்பர் அமுதம் - திருமுறைக்காட்சி - 6.25. (பாடல் 253)

#திருமுறைகாட்சி
#அப்பர்அமுதம்
கற்பனையே இது எனக் கருத்தினில் கொள்க.

ஆரூரார் தரிசனம்.

கதிரொளி கடுமை கரைந்து போயிற்று
மிச்ச வெப்பம் சில கீற்றாய் ஒளிர்ந்தது.
திருக்கோவில் ஆலயமணி ஒலித்தது.

'முசுகுந்த அர்ச்சனையாம் மாலையில் கோவிலில் கூட்டம் மொய்த்திருக்கும் 
சென்று நாம் அப்போது தரிசனம் செய்யலாம் என்று எண்ணி தனியனாய் புறப்பட்டேன்.

அடைபட்டிருந்த கிழம் எங்கோ புறப்பட்டுவிட்டதே என்றே பதைத்து
எதிர்வந்தாள் என் உறவு.

முசுகுந்த அர்ச்சனை தரிசனம்
கண்டு வருவேன் என்ற கூறி
வேக நடை எடுத்தேன்.

சன்னதித்தெரு திரும்ப
கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்
கண்களினால் கண்டவுடன்
 கரங்கள் இரண்டும் கைகூப்பின ஆவலினால்
'ஆரூரா தியாகேசா' 
மனம் மெல்ல முனு முனுத்தது.

கோபுரவாசல் அடைந்தபோது எங்கும்
பெருங்கும்பல் வழி அடைத்த மக்கள் ஒழுங்கமைதியில்லா மகளீர் கூட்டம்

ஓவியம்போலிருந்த ஒப்பனை மிக்க
மகளிரணி கூட்டமொன்று
சளசளவென்ற பேச்சொலி முழங்க வந்தது.
கவனமெல்லாம் தம் தம் கைப்பேசி மீது.

சடசடவென வந்தவர் தாம் சட்டெனவே
தட்டிவிட்டனர் 
என் காலினை 
நான் வீழ தங்கிப் படித்தது 
கல் தூணொன்று.

பின் வந்து முன் செல்லக் கடந்தவர்தாம்
என் மீது குறைரைப்பார்

'ஏன் பெரிசு இந்த வயதில் வீட்டில் இருக்கலாகாதா  வந்தென்செய்தாய்'? என்று ஏளனமாய் கேட்டிடுவார்.

'ஏனம்மா நீங்களுமே பாதையிலே
கண் வைத்துக் கவனமாய் வந்து விட்டால்
இந்த நிலை வந்திடுமோ',
என்று பதிலுரையாய் எண்ணிவிட்டேன் பட படவென்று வார்த்தைகளினால் கொட்டிவிட்டால்
'வீண் வம்பு வந்திடுமே  நமக்கு இது ஆகாது'  என்று மனம் எண்ணி வாய் மூடி தயங்கி பின் செல்வேன்.

அதிலொருத்தி அழுத்தமுடன்கூறிடுவார்
போகும் காலம் வந்திட்ட போதிலுமே போகாமல் இருக்கின்றீர், ஏன் பெரிசு இருக்கின்றீர் இங்கு வந்து இடைஞ்சல் செய்கிறீர்கள் என்றெல்லாம் ஆர்பரித்தனர்.

மாயக் கூட்டம் அந்த மகளீர் கூட்டம் கூறிய வார்த்தைகளால்
 சற்றே என் மனமும் சங்கடபட்டது உண்மையிது. சற்றே
தடுமாறி பேதலித்தது.

சிதறிட்ட மனம் ஒன்றிடவே உள் கோபுரம்
சென்றடைந்தேன்.
புதிய கொடிமரம் புனரமைத்து இப்போது எழுப்பியுள்ளார் அது வணங்கி
குழப்பம் நீங்கிடவே புற்றிடங்கொண்டார் தாள் வணங்கி உட் புகுவேன்.

முசுகுந்த அர்ச்சனையில் தியாகேசப்பெருமான் வணங்கி நின்றோம். 
தேவர்கள் முடிவணங்கி பூசை செய்யும் தெய்வம் அல்லவா.

மனம் பின்சென்றது

அக்காலம் அறியாத சிறு வயது. 

மாயை மறைத்திருந்திட்டிருந்த காலமது
ஆரூரார் பெருமான் அருள் உணராக் காலம்.
ஏரோட்டம் தேரோட்டம் என்றெல்லாம் எதுகை மோனைப் பேசி எள்ளிநகையாடிய காலமது.
தில்லைநடராஜரையும் ஸ்ரீரங்கநாதரையும் ஒருமையிலே உரைப்பேசி பொறுப்பெற்று வெற்றுப் பெருமை பேசியிருந்த கருப்புக்காலம்

உண்மை உணர்ந்து உருப்படவே 
நாள் வந்தது
காலத்தின் கோலத்தால் மாயை எதுவென புரியும் காலம் வந்தடைந்தோம். 
உண்மைபகுத்தறிவு எதுவென்று
பக்குவம் உணர்ந்தபோது
பாதி வயதும் வாழ்வும் முடித்திருந்தேன்.
கதறி அழுதாலும் காலம் வருமோ
இளமை வருமோ கேட்டிடுவீர் இளைஞர்களே காலத்தோடு வந்து நின்று கடவுளை நீ கண்டு வணங்கிடுவீர்.

இன்று வந்த மாய(யு)வதிகளால்
 மனம் புன்பட்டதெல்லாம் மிச்ச விணைகள்தான் என்று உணர்ந்தேன்.

மணி ஒலித்தது
கவனம் மீண்டது

தியாகேசர் சன்னதி
கண்ணீர் மல்க தலைவணங்கி 
உற்று பார்த்தேன் ஒளி ஆராதனை
உளமார நினைக்கின்றேன் 
உன்னையே வணங்கி நின்றேன்
வினை நீக்கம் வேண்டுமென்றேன்.

பின் உள்சென்று தரிசித்து வெளிவந்தேன்
பிரகார சுற்றில்
நாவுக்கரசரின் ஞானப் பதிகம் பாடல் ஒன்றுகண்டு கருத்தினில் வைத்தேன்

- தேவாரம். 6ம் திருமுறை
25. திருவாரூர் திருத்தாண்டகம்
பாடல் (253)

எழுது கொடியிடையார் ஏழை மென் தோள்
இளையார்கள் நம்மை யிகழா முன்னம்
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே
பண்டு தான் என்னொடு பகைதான் உண்டோ

முழுதுலகில் வாணவர்கள் முற்றுங் கூடி முடியால் உறவணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் 
ஆரூர் தானே.

(நெஞ்சமே மகளிரும்  நகை கொண்டு நம்மை இகழும் முன்னர், வாணவர்கள் வணங்கும் ஆரூரானை வணங்கிடுங்கள்)
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
மனம் மெல்ல முனு முனுத்தது.

கோபுரவாசல் அடைந்தபோது எங்கும்
பெருங்கும்பல் வழி அடைத்த மக்கள் ஒழுங்கமைதியில்லா மகளீர் கூட்டம்

ஓவியம்போலிருந்த ஒப்பனை மிக்க
மகளிரணி கூட்டமொன்று
சளசளவென்ற பேச்சொலி முழங்க வந்தது.
கவனமெல்லாம் தம் தம் கைப்பேசி மீது.
சடசடவென வந்தவர் தாம் சட்டெனவே
தட்டிவிட்டனர் என் காலினை நான் வீழ தங்கிப் படித்தது கல் தூணொன்று.

பின் வந்து முன் செல்லக் கடந்தவர்தாம்
என் மீது குறைரைப்பார்
என் பெரிசு இந்த வயதில் வீட்டில் இருக்கலாகாதா? இங்கு வந்தென் செய்தாய். என்று ஏளனமாய் கேட்டிடுவார்.

ஏனம்மா நீங்களுமே பாதையிலே
கண் வைத்துக் கவனமாய் வந்து விட்டால்
இந்த நிலை வந்திடுமோ
என்று பதிலுரையாய் எண்ணிவிட்டேன் பட படவென்று வார்த்தைகளினால் கொட்டிவிட்டால்
வீண் வம்பு வந்திடுமே நமக்கு இது ஆகாது என்று மனம் எண்ணி வாய் மூடி தயங்கி பின் செல்வேன்.

அதிலொருத்தி அழுத்தமுடன்கூறிடுவார்
போகும் காலம் வந்திட்ட போதிலுமே போகாமல் இருக்கின்றீர், ஏன் பெரிசு இருக்கின்றீர் இங்கு வந்து இடைஞ்சல் செய்கிறீர்கள் என்றெல்லாம் ஆர்பரித்தனர்.

மாயக் கூட்டம் அந்த மகளீர் கூட்டம் கூறிய வார்த்தைகளால்
 சற்றே என் மனமும் சங்கடபட்டது உண்மையிது. சற்றே
தடுமாறி பேதலித்தது.

சிதறிட்ட மனம் ஒன்றிடவே உள் கோபுரம்
சென்றடைந்தேன்.
புதிய கொடிமரம் புனரமைத்து இப்போது எழுப்பியுள்ளார் அது வணங்கி
குழப்பம் நீங்கிடவே புற்றிடங்கொண்டார் தாள் வணங்கி உட் புகுவேன்.

முசுகுந்த அர்ச்சனையில் தியாகேசப்பெருமான் வணங்கி நின்றோம். 
தேவர்கள் முடிவணங்கி பூசை செய்யும் தெய்வம் அல்லவா.

மனம் பின்சென்றது

அக்காலம் அறியாத சிறு வயது. 

மாயை மறைத்திருந்திட்டிருந்த காலமது
ஆரூரார் பெருமான் அருள் உணராக் காலம்.
ஏரோட்டம் தேரோட்டம் என்றெல்லாம் எதுகை மோனைப் பேசி எள்ளிநகையாடிய காலமது.
தில்லைநடராஜரையும் ஸ்ரீரங்கநாதரையும் ஒருமையிலே உரைப்பேசி பொறுப்பெற்று வெற்றுப் பெருமை பேசியிருந்த கருப்புக்காலம்

உண்மை உணர்ந்து உருப்படவே 
நாள் வந்தது
காலத்தின் கோலத்தால் மாயை எதுவென புரியும் காலம் வந்தடைந்தோம். 
உண்மைபகுத்தறிவு எதுவென்று
பக்குவம் உணர்ந்தபோது
பாதி வயதும் வாழ்வும் முடித்திருந்தேன்.
கதறி அழுதாலும் காலம் வருமோ
இளமை வருமோ கேட்டிடுவீர் இளைஞர்களே காலத்தோடு வந்து நின்று கடவுளை நீ கண்டு வணங்கிடுவீர்.

இன்று வந்த மாய(யு)வதிகளால்
 மனம் புன்பட்டதெல்லாம் மிச்ச விணைகள்தான் என்று உணர்ந்தேன்.

மணி ஒலித்தது
கவனம் மீண்டது

தியாகேசர் சன்னதி
கண்ணீர் மல்க தலைவணங்கி 
உற்று பார்த்தேன் ஒளி ஆராதனை
உளமார நினைக்கின்றேன் 
உன்னையே வணங்கி நின்றேன்
வினை நீக்கம் வேண்டுமென்றேன்.

பின் உள்சென்று தரிசித்து வெளிவந்தேன்
பிரகார சுற்றில்
நாவுக்கரசரின் ஞானப் பதிகம் பாடல் ஒன்றுகண்டு கருத்தினில் வைத்தேன்

- தேவாரம். 6ம் திருமுறை
25. திருவாரூர் திருத்தாண்டகம்
பாடல் (253)

எழுது கொடியிடையார் ஏழை மென் தோள்
இளையார்கள் நம்மை யிகழா முன்னம்
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே
பண்டு தான் என்னொடு பகைதான் உண்டோ

முழுதுலகில் வாணவர்கள் முற்றுங் கூடி முடியால் உறவணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் 
ஆரூர் தானே.

(நெஞ்சமே மகளிரும்  நகை கொண்டு நம்மை இகழும் முன்னர், வாணவர்கள் வணங்கும் ஆரூரானை வணங்கிடுங்கள்).

🙏🙇🏽‍♂️🙏🙇🏼🙏🙇🏼‍♂️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்,

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...