Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் 1.50.1. (537)

#சம்பந்தர்அமுதம் 
மனம் கசிந்து உருகி மாயை நீக்கிடவும், உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, நல்லவாறு உரைத்திடவும் அருள் வேண்டியருளிய அருமையான பாடல் இது.                                                                  
பொருள்.
வலிவலத்தில் விளங்கும் ஈசனே. 
🤎1. உலக பொருள்களின் மேல் பற்றுக்கொண்டு, பரபரப்பு எய்தி, மனமானது வேகத்தில் இயங்குவதைச்
சாந்தப்படுமாறு செய்து, நின்பால் ஒன்றிப் பொருந்தி இருக்குமாறு நல்கிடுவாய்.

💜 மனம், வஞ்சனை அற்ற நிலையையும், 

💙பிறரிடம் கொடிய உரைகளை நவிலாதவாறும், 

💚தூய்மைப்படுத்திச் சுயவிருப்பின் மேல் செய்யப்படும் செயல்களை அகற்றவும்

❤️ இறை நாமத்தை எந்த நெறியில் நவில வேண்டுமோ அந்த நன்னெறியில் நவிலுமாறும் அருள் புரியவும்.

💛 அவரவர் தரத்தின் அளவினை அறிந்து, எவ்வழியில் உரை செய்தால் ஈடேற முடியுமோ அந்த நிலையை அறிந்து அவற்றை நல்கி அருள்புரிக.   

தேவாரம் : முதல் திருமுறை : 
தலம்: வலிவலம்
பதிகம்   50
பாடல்.. 1 (537)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...