Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் 1.50.1. (537)

#சம்பந்தர்அமுதம் 
மனம் கசிந்து உருகி மாயை நீக்கிடவும், உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, நல்லவாறு உரைத்திடவும் அருள் வேண்டியருளிய அருமையான பாடல் இது.                                                                  
பொருள்.
வலிவலத்தில் விளங்கும் ஈசனே. 
🤎1. உலக பொருள்களின் மேல் பற்றுக்கொண்டு, பரபரப்பு எய்தி, மனமானது வேகத்தில் இயங்குவதைச்
சாந்தப்படுமாறு செய்து, நின்பால் ஒன்றிப் பொருந்தி இருக்குமாறு நல்கிடுவாய்.

💜 மனம், வஞ்சனை அற்ற நிலையையும், 

💙பிறரிடம் கொடிய உரைகளை நவிலாதவாறும், 

💚தூய்மைப்படுத்திச் சுயவிருப்பின் மேல் செய்யப்படும் செயல்களை அகற்றவும்

❤️ இறை நாமத்தை எந்த நெறியில் நவில வேண்டுமோ அந்த நன்னெறியில் நவிலுமாறும் அருள் புரியவும்.

💛 அவரவர் தரத்தின் அளவினை அறிந்து, எவ்வழியில் உரை செய்தால் ஈடேற முடியுமோ அந்த நிலையை அறிந்து அவற்றை நல்கி அருள்புரிக.   

தேவாரம் : முதல் திருமுறை : 
தலம்: வலிவலம்
பதிகம்   50
பாடல்.. 1 (537)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...