Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் -1.50.3

#சம்பந்தர்அமுதம் 
மனம் உருகினால் ஈசன் அருள் நிச்சயம்.
பெண்டிர், பிள்ளைகள், சுற்றம் என்னும் மாயைப் பெருங்கடல் சூழ்ந்து, திளைத்து, முந்தைக் காலத்திலும் கிடந்து, நன்மை தருகின்ற நெறியான வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளாதவனாயினேன். அதனால் வேதனையான நோய்களில் வீழ்ந்தேன். இப்போது உன் நாம மகிமையின் சிறப்பினை உணர்ந்தேன். உள்ளம் உருகினேன்.
அருள்புரிக என் ஈசனே.
தேவாரம் : முதல் திருமுறை: தலம்: திருவலிவலம்: பதிகம்: 50 பாடல் 3. (539)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்,
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏

No comments:

Post a Comment

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...