Friday, May 21, 2021

சம்பந்தர் அமுதம் 01.73.8 (794)

#சம்பந்தர்அமுதம் 
தமிழே சிவன் :

தமிழில் இறைநாமம் பேசிடுபவர்களிடமும், இசையுடன் பாடுபவர்களிடம் ஈசன் சிவன் என்றும் இருப்பார் என்று உணர்த்தும் பாடல்.

தமிழ் விரகன் தமிழ்ஞானசம்பந்தரின் அற்புதம்

தேவாரம் - முதலாம் திருமுறை -
தலம்: திருக்கானூர். பதிகம்: 73 பாடல்: 8 (794)
💙
தமிழின் நீர்மை பேசித் தாளம்
வீணை பண்ணிநல்ல

முழவமொந்தை மல்குபாடல்
செய்கை இடம் ஓவார்

குமிழின் மேனி தந்து கோல
நீர்மை யது கொண்டார்

கமழும் சோலைக் கானூர் மேய
பவள வண்ணரே
💚
பொருள் :
தமிழ் போன்ற இனிமையாகப் பேசியும், தாளம், வீணை, முழவம், மொந்தை ஆகிய இசைக் கருவிகளுடன் விளங்கும் பாடல்களைப் பாடியும், அப்பாடல்களுக்கு ஏற்ற அசைவுகளைப் புரிவித்தும், என்னுள்ளத்தில் மகிழ்ச்சியைத் தந்து, என்னை, அவனையே நினைக்கச் செய்து, என் மேனியில் குமிழும் பூ வண்ணத்தை உண்டாக்கிக் கவர்ந்து கொண்டவர். கானூர் பவளவண்ணரே.
❤️
திருக்கானூர் - விஷ்ணம்பேட்டை
திருக்கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலம் தாண்டி, குடந்தை சாலையில் விஷ்ணம்பேட்டையிலிருந்து 2. கி.மீ தனி சாலை (கொள்ளிடம் ஆறு அருகில்):

சிவலோகநாயகி / செம்மேனிநாதர்
காவிரி வடகரைத்தலம்.

அம்பிகை சிவயோகத்தில் இருந்த போது ஈசன் தீவண்ணராகத் திருவுருவம் காட்டியருளியது.
💜
இப்பதிகம் தலைவன் - தலைவி பாவனையில் அமைந்தது.

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...