Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் 01.98.05

#சம்பந்தர்அமுதம் 

உண்மை உணருங்கள்

முப்புர அசுரரை மேருவை வில்லாக எடுத்து அழித்த ஈசனே தலையாயவர். அவர் தலைமை ஏற்காதவர் உண்மையை மறைத்தவர் என்றுணர்க. என்றும் உணருங்கள்.

 வெண்மையான வட்டத்தின் மையப்பகுதியில் நீல வண்ணத்தால் வரைந்த கோடுகளை சற்று தொலைவிலிருந்து பார்த்தால், ஒரே வெண்மை நிறமாகத் தோன்றும். இது இயல்பானதே. உண்மைத் தோற்றத்தை மறைத்தாலும், உள்ள நிறத்தின் உண்மையான நிறத்தினை மறைக்க இயலாது. இதுபோலவே, ஆழ்ந்து நோக்கி, உண்மையை உணருதல் வேண்டும். 
என்று விளக்குகிறார் நம் தமிழ் விரகனார், ஞானசம்பந்தப்பெருமான்.

முதலாம் திருமுறை 
தலம் - திருச்சிராப்பள்ளி
பதிகம் 98 பாடல் 5. 1.98.5
🙏❤️🙏❤️🙏❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏❤️🙏❤️🙏❤️

No comments:

Post a Comment

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...