Thursday, May 27, 2021

சம்பந்தர் அமுதம் 01.102. பாடல் 2, 3.

#சம்பந்தர்அமுதம் 

இறைவனை ஐயா என்று சரணடைந்தால் எவ்வித அல்லல்களும் நம்மை அடையாது
என்றும்,
அரனே என்று உள்ளம் பொருந்திப் பாடுகின்ற அடியவர்களுக்கு எந்த நோயும் அண்டாது
என்பதை
மிக அருமையான பாடல்கள் மூலம் நம் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தனார் அருளியுள்ளமை எண்ணி உணரத்தக்கது.
முதலாம் திருமுறையில் சீர்காழி தலத்திற்குரிய பதிகம் எண் :102 பாடல்கள் 2 மற்றும் 3வது பாடல்களில் இவ்வாறு அருளியுள்ளதை பொருள் விளக்கத்தோடு சிந்திப்போம்.
❤️🙇🏼‍♂️🙆🏼💙
பாடல். (2).1103.
மொய்சேர்வண்டுண்  மும்மதநால்வாய் முரண்வேழக்

கைபோல்வாழை  காய்குலையீனும் கலிக்காழி

மைசேர்கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே

ஐயாஎன்பார்க்கு அல்லல்களான அடையாவே.
🙏♥️🙇🏼‍♂️
பொருள் : வண்டுகள் உண்கின்ற மும்மதம் பொருந்திய, தொங்கும் வாயைப் போன்ற வேழத்தின் துதிக்கை போன்று, நீண்டு பெருகிய வாழை, குலையீனும் காழியில், 
நீலகண்டமும், எண்தோளும், முக்கண்ணும் கொண்ட மறையவனே! ஐயா! என்று, ஈசனைப் போற்றிப் பணிபவர்களை அல்லல் அடையாது.

🤎🙏💜🙇🏼‍♂️💙🙆🏼💛🙏💚
பாடல்: 3. 1104
அரனே! என்று உள்ளம் பொருந்திப் பாடுகின்ற அடியவர்களுக்கு நோய் அடையாது.
💜🙇🏼‍♂️
இளகக்கமலத்து ஈன்கள் இயங்கும் கழிசூழக்

கனகப்புரிசை கவினார்சாரும் கலிக்காழி

அளகத்திருநல் நுதலிபங்கா 
அரனேஎன்று

உளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே.
💛🙇🏼‍♂️💚🙆🏼
பொருள் :
தாமரை மலரிலிருந்து இளகி வெளிவரும் தேன் வழியும் உப்பங்கழி சூழ, சுண்ணாம்பு பூசப்பெற்ற மதில்கள் அழகு பொலிய விளங்கும் காழியில், அழகிய கூந்தலும் நல்ல நெற்றியும் உடைய உமாதேவியைப் பாகங் கொண்டுள்ளவனே! அரனே! என்று உள்ளம் பொருந்திப் பாடுகின்ற அடியவர்களுக்கு நோய் அடையாது.

அளகம் - கூந்தல்
உளகப்பாடும் - உள்ளம் பொருந்தப்பாடும்.

பதிவும், பகர்வும்
🙏♥️🙇🏼‍♂️🙏💙🙆🏼🙇🏼‍♂️🙏💚
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏♥️🙇🏼‍♂️🙏💙🙆🏼🙇🏼‍♂️🙏💚

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...