Monday, May 24, 2021

சம்பந்தர் அமுதம் முதல் திருமுறை : பதிகம்:100. பாடல் 5. (1084)

 
ஈசனை ஒன்றிய சிந்தனை உடையவர்க்கு உறுநோய் இல்லை
என்று அருளியது.
தலம்: திருப்பரங்குன்றம்.
பாண்டி நாட்டுத்தலம். மதுரைக்கு அருகில் உள்ளது. அறுபடைவீடு முருகன் தலங்களில் ஒன்று.
சுவாமி: பரங்கிநாதர்
அம்பாள் : ஆவுடைநாயகி
முருகன் தெய்வயானையை மணம் புரிந்த பதி. நக்கீரர் வாழ்ந்த இடம். பராசர முனிவரின் புதல்வர் நக்கீரர், சிபி மன்னன், பிம்மா பேறு பெற்ற தலம்.
முதல் திருமுறை : பதிகம்: 100: பாடல்..5 (1084) :

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்

துன்னியசோதி ஆகியஈசன் தொல்மறை

பன்னிய பாடல் ஆடலன்மேய பரங்குன்றை 

உன்னிய சிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.

பொருள் :
பொன்னைப் போன்று ஒளிரும் தன்மை உடைய கொன்றை மலரும், பாம்பும், ஒளி திகழும் செஞ்சடையும் உடைய ஈசன், தொன்மையான வேதப் புகழ் விளங்கும் பாடலின் இயல்பிற்கு ஏற்ப ஆடலும் கொண்டு பரங்குன்றத்தில் மேவி வீற்றிருக்கின்றான். அப்பெருமானைச் சிந்தை ஒருமித்து நினைப்பவர்களுக்கு நோய் இல்லை.
❤️🙏💜🙏💚🙏💙🙏💛
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏💜🙏💚🙏💙🙏💛

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...