Friday, February 6, 2026

திருமாந்துறை அட்சய நாத சுவாமி கோயில்.

திருமாந்துறை அட்சய நாத சுவாமி கோயில்.

கும்பகோணம் மைலாடுதுறை சாலையில் திருப்பனந்தாள் செல்லும் வழியில் சூரியனார் கோயிலுக்கு கிழக்கில் 2 கி.மீ தூரத்தில் உள்ளது.

பாடல் பெற்ற தலம் என்ற கருத்து உள்ளது.
பல ஆதாரங்கள் இருந்தும், திருச்சி அருகில் உள்ள திருமாந்துறையை திருமுறை தலமாக குறிப்பிடுகிறார்கள்.

திருமாந்துறை அட்சய நாத சுவாமி கோயில் . இங்குள்ள சந்திர கிணறு தீர்த்தத்தில் குளித்து காலமாமுனிவரும்  நவகிரஹங்களும் ரோக நிவர்த்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது .

முகப்பு ராஜ கோபுரம் இந்த கோயிலில் இல்லை .
கிழக்கு நோக்கிய ஆலயம்..
தனிக் கொடிமரம் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.

நந்திக்கு சிறு மண்டபத்துடன் சுவாமி ஆலயம் முன்புறம் உள்ளது.

இந்த கோயிலில் உள்ள 
இறைவர்: அட்சயநாத சுவாமி,
 இறைவியின் பெயர் ஸ்ரீ யோகநாயகி . கருவறையில் தட்ஷிணாமுர்த்தி பிரம்மா துர்கை ஆகியோர் உள்ளனர் .

சுவாமி, அம்பாள்  ஆலயம் கிழக்கு நோக்கி
தனித்தனி ஆலய அமைப்பில் உள்ள பெரிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.

இப்பிரகாரத்தில் விநாயகர் மனைவியுடன் காட்சி அளிப்பது சிறப்பம்சமாகும். உட்பிரகாரத்தில் நால்வர் சன்னிதி உள்ளது .
திருக்கஞ்சனூர் சப்த்த ஸ்தானத்தில் உள்ள ஏழு தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
அம்பாள் தனி ஆலயமாக, சுவாமி ஆலயத்தின் இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.

ஆலயம் முன்புறம் பெரியகுளம் உள்ளது.
தட்ஷன் நடத்திய யாகத்தில் சிவனின் விருப்பத்தை மீறி கலந்து கொண்டதால் ஷய ரோகத்தால் பாதிக்கப்பட்டார். உடனே சந்திரன் தன் குருவிடம் சென்று பரிகாரம் கேட்க இதற்கு பரிகரமாக மாந்துறை என்கிற இந்த தலத்தில் அட்சய நாத சுவாமியை வழிபட கூறினார் அதே போல் சந்திரன் இங்கு வந்துவழிபட்டு சாப விமோசம் பெற்றதாக புராணம் கூறுகிறது . இன்றும் இத்தலத்தில் உள்ள இறைவனை சந்திரன் தினமும் வழிபடுவதாக நம்பப்படுகிறது . ஜாதக ரீதியாக சந்திரன் உச்சம் நீசம் சத்ரு மற்றும் ரோக ஸ்தானத்தில் இருக்க பெற்றவர்கள் வணங்க வேண்டிய தலம் இது .

ரோகிணி திருவோணம் மற்றும் கடக ராசிக்காரர்கள் இந்த தலத்தில் வழிபாடு செய்யலாம் . சந்திர தோஷத்திற்கு பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் வழிபட்டால் விவசாயம் மற்றும் நீர் வளம் போன்றவையும் மேலோங்கும். ஒரு முறை தேவ லோகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை தீர்க்க இந்திரனும் வருணனும் இந்த தலத்தில் வழிபட்டு பரிகாரம் செய்தார்கள் . எனவே இந்த தலத்தில் வழிபட்டால் விவசாயம் செழிக்கும் .

பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள வாஸ்து நாள் கீழ் நோக்கு நாள் மற்றும் ஏர் கலப்பை பிடிக்க உகந்த நாள் போன்ற நாட்களில் கலப்பை மற்றும் விவசாய பொருட்களுக்கு மஞ்சள் குங்குமம் மற்றும் சந்தனம் வைத்து பூஜை செய்து விவசாயம் தொடங்குவது வழக்கமாக உள்ளது .

சந்திரன் நீர் ராசி , இந்த தலமும் சந்திரன் சம்பந்தப்பட்டது அதன் தாக்கம் இந்த கோவிலில் காண முடிகிறது எப்படி என்றால் கோயிலின் சந்திர கிணற்றில் வளர்பிறையில் நீர் பொங்கி பெருகுகிறது தேய்பிறையில் குறைகிறது. இந்த அதிசயம் இங்கு தவறாமல் நடக்கிறது .

சில வருடங்கள் முன்பு,  கார்த்திகை அம்மாவாசை அன்று ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில், உள்ள சந்திர தினத்தில் கங்கை பொங்கி வந்து கினறு நிரம்பி வழிந்தது. ஏராளமானவர்கள் வந்து தரிசித்தார்கள். இது தொடர்ந்து, கார்த்திகை அம்மாவசை அன்று தீர்த்த பூசை செய்து நீராடி வருவது தொடர்கிறது.

அட்சய த்ரிதியை அன்று இங்குள்ள இறைவனை வழிபடுவதால் குபேர சம்பத்து ஏற்படும், அன்று 64 பொருட்களால் பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இதை பிரசாதமாக உண்பதன் மூலம் அனைத்து விதமான உடல் குறைகள் நீங்கும்.
அன்று பகலில் விஷேச பூசைகள் வருடாவருடம் நடைபெற்று வருகிறது.

சூரியனார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் திருமாந்துறை, அட்சய நாத சுவாமியை வணங்க வேண்டும்.

பிறகு சூரியனார் கோயில் ஆலயத்தின் வடபுறம் உள்ள கைலாசநாதர் ஆலயம் (சூரிய தீர்த்தம் உள்ளது) வணங்கி செல்லவேண்டும்.

பிறகு, திருமங்கலக்குடி ஆலயமும் சேர்ந்து தரிசிப்பது மிகச்சிறப்பு.
மிகப் பழமையான ஆலயம் புரைமைத்து குடமுழுக்கு செய்யப்பட வேண்டிய சூழலில் உள்ளது.

ரதசப்தமியில் சுவாமி, அம்பாள் சந்தனகாப்பு அலங்காரம் சிறப்பு தரிசனம்.

பல முறை தரிசனம் செய்தும் மீள் தரிசனம்.
கார்த்திகை அம்மாவாசை தீர்த்தம்

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம், திருப்புகழ்த்தலம்

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம்,  திருப்புகழ்த்தலம் தலம்: சோழவள நாட்டில் ...