Sunday, August 30, 2026

பழையனூர் (திருவலங்காடு) கைலாசநாதர் ஆலயம் 15.08.26

பழையனூர்
கைலாசநாதர் ஆலயம்

பழையனூரில் கிழக்குபாகத்தில் அமைந்துள்ளது
கிழக்கு நோக்கிய ஆலயம்
தென்புறம் நுழைவு வாசல் உள்ளது
கீழ்புரம் பலிபீடம் நந்தி தனி மண்டபத்துடன் ஆலயம் நோக்கியுள்ளார்.
தென்புறம் நுழைவு முன்மண்டபம் அடுத்து உன்மன்டபம் உள்ளது.
கிழக்கு நோக்கிய கருவரையில் கைலாச நாதரும், தெற்கு நோக்கிய தனி கருவரை சன்னதியில் பர்வதவர்த்தினியும் உள்ளனர்
பிரகாரத்தில் தனித்தனியாக விநாயகர் முருகர் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு சன்னதிகள் உண்டு.

கிராம சூழலில் தனியாக ஆலயம் அமைந்துள்ளது. தரிசிக்க முன் தகவல் அவசியம்.

#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பழையனூர் #திருவலங்காடு

பழையனூர்தழுவக் குழைந்த ஈஸ்வரர் 15.8.26

பழையனூர்
தழுவக் குழைந்த ஈஸ்வரர்

2800 ஆண்டுகளுக்கு முற்பட்டது. திருவலங்காடு பஸ் நிலையத்திலிருந்து தெற்கே 1 கிமீ. அ | மீ ஆனந்த வள்ளி சமேத தழுவிக் குழைந்தீஸ்வரர் ஆலயம்.
மேற்கு நோக்கிய ஆலயம் 

முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜாதி ராஜன் மூன்றாம் ராஜாதிராஜன் ஆகியோர் காலத்து கல்வெட்டுக்கள் மற்றும் செப்புபட்டையங்கள் உள்ளன.

கற்கால மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் கருவிகள் கிடைக்கப்பெற்றன. இந்தக்குறிப்புகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அம்மையார் ஆலங்காடு வழி கேட்க இறைவர் மேற்கு நோக்கி காட்டியருளிய இடமாகும். 

பிரதோஷத்தில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு

ஆலயம் முன்பு  மூர்த்தி விநாயகர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி உள்ளார் தனி முன்மன்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயம் தென்புறம் உள் நுழைவில்  தனியாக ஒரு பெருமாள் சன்னதியும் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. ஒரு சிறிய விநாயகர் நந்தி இருக்கிறது.

மேற்கு புறம் சிவன் சன்னதி நோக்கி தனியாக சற்று நடுத்தரமான அளவில் ஓரு நந்தி தனி மன்டபத்தில் உள்ளார்.

ஆலய முன்மன்டபத்தில் ஒரு நந்தியும்
இறைவன் கிழக்கு நோக்கியும் அம்மன் ஆனந்தவள்ளியம்மன் தெற்கு நோக்கியும் உள்ளார்கள்  கோஷ்ட்டத்தில் பிரும்மா  துர்க்கை விநாயகர் உள்ளனர். 

2007ல் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டுள்ளது
திருவாலங்காட்டு ஈசன் திருவாதிரை விழாவில் இவ்வூருக்கு எழுந்தருளி அருகில் உள்ள சாட்சி நாதர் ஆலயம் கைலாசநாதர் ஆலயம் வந்து மன் எடுத்து செல்லும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

கிராம அமைதியான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது.

#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#பழையனூர்-திருவலங்காடு

பழையனூர் சாட்சி பூதேஸ்வரர் ஆலயம் 15.8.26

பழையனூர்
சாட்சி பூதேஸ்வரர் ஆலயம்

திருவலங்காடு பஸ் நிலையத்திலிருந்து தெற்கே 1 கிமீ தூரத்தில் உள்ளது. 
கிழக்கு நோக்கிய ஒரு சிவலிங்கம் மட்டும் உள்ள சன்னதி சிறிய ஆலய அமைப்பு.
ஆலயம் எதிர்ப்புறம் நீலி புரானத்தில் வரும் நீதி வழுவாத 70 வேளாளர்கள் உயிர்நீத்த இடம் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது 
நீலி புராணம்
காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் இங்குள்ள இறைவன் மீது ஆணையாக சாட்சி அளித்து இறைவன் திருமுன்பாக தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.

இவ்வாறு சாட்சியாக இருந்த இறைவன் மீது செய்த சத்தியத்தை காப்பாற்ற 70 பேர் இக்கோவிலின் முன்பு உயிர் நீத்தார்கள்

#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#திருவலங்கடு #பழையனூர்

திருவாலங்காடு பத்ராகாளியம்மன் ஆலயம் 15.8.26

திருவாலங்காடு 
பத்ராகாளியம்மன் ஆலயம்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயில் (ஆலவன காளி கோயில் என்றும் குறிப்பிடப்படுகிறது) ஆழ்ந்த புராண முக்கியத்துவம் வாய்ந்தது. இது வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் (சிவன்) கோவிலின் முதன்மை வளாகத்திற்கு சற்று வெளியேயும் சற்றுப் பின்புறமும் உள்ளது.
இந்த குறிப்பிட்ட சன்னதியைச் சுற்றியுள்ள வரலாறு, புனைவுகள் மற்றும் முக்கிய விவரங்கள் அதன் தனித்துவமான ஆன்மீக நிலையை வரையறுக்கின்றன:
தெய்வீக நடன சண்டையின் புராணக்கதை
திருவாலங்காடு பற்றிய முதன்மையான புராணக்கதை முழுவதும் பத்ரகாளி தேவி மற்றும் சிவபெருமானை மையமாகக் கொண்டது. ஸ்தல புராணத்தின் படி 
அசுர அச்சுறுத்தல்: சும்பன் மற்றும் நிசும்பன் ஆகிய இரண்டு சக்தி வாய்ந்த அரக்கர்கள் இப்பகுதியை அச்சுறுத்தி வந்தனர். அவர்களின் சித்திரவதையை தாங்க முடியாமல் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமானை வேண்டினர். சக்தி தேவியின் கடுமையான பார்வையில் இருந்து, பத்ரகாளி அவர்களை அழிக்க வெளிப்பட்டார்.
போர் மற்றும் பின்விளைவுகள்: காளி பேய்களை எதிர்த்துப் போராடினார், அவர்கள் பெருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த அவர்களின் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் பிடித்துக் குடித்தார். அவளுடைய வெற்றிக்குப் பிறகு, பேய் இரத்தத்தாலும், அவளுடைய சொந்த கடுமையான சக்தியாலும் போதையில், அவள் கட்டுப்படுத்த முடியாத கோபத்தை வளர்த்து, பிரபஞ்சத்தை பயமுறுத்த ஆரம்பித்தாள்.
நடனப் போட்டி: வன்முறையின்றி அவளைச் சமாதானப்படுத்த, சிவபெருமான் காளியை முஞ்சிகேசா (சுனந்தா) மற்றும் கார்கோடகப் பாம்பு போன்ற முனிவர்களின் மேற்பார்வையில் ஒரு பிரபஞ்ச நடனப் போட்டிக்கு அழைத்தார்.
ஊர்த்துவ தாண்டவம்: மிகவும் சிக்கலான தோரணைகள் மூலம் இருவரும் ஒருவரையொருவர் படிப்படியாகப் பொருத்தினர். அவளை அழகாக அடக்க, சிவன் வேண்டுமென்றே தனது இடது காதணியை (மேனி) கைவிட்டு, அதைத் தன் இடது கால்விரல்களால் தடையின்றி எடுத்தார், மேலும் அதை மீண்டும் வைப்பதற்காக தனது காலை முழுவதுமாக காதுக்கு நேராக உயர்த்தினார் - இது ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் தோரணை. பாரம்பரிய அடக்கத்தால் (ஸ்திரீ தர்மம்) கட்டுண்ட காளி, இந்த குறிப்பிட்ட தோரணையை பிரதிபலிக்க மறுத்து தோல்வியை ஏற்றுக்கொண்டார்.
பத்ரகாளி சன்னதியின் முக்கியத்துவம்
முதல் வழிபாட்டின் வரம்: காளி போட்டியில் தோற்றாலும், இந்த புனிதமான ஆலங்காட்டில் (ஆலங்காடு) அவளது சக்தி முழுமையானது என்று சிவபெருமான் அறிவித்து அவளுடைய கோபத்தை தணித்தார். பிரதான வடாரண்யேஸ்வரர் சிவன் கோவிலுக்குள் நுழையும் முன் பக்தர்கள் முதலில் பத்ரகாளியை வழிபட வேண்டும் என்று அவர் அவளுக்கு வரம் அளித்தார்.

 இன்றுவரை, பாரம்பரிய யாத்ரீகர்கள் அவரது ஆசீர்வாதத்தைப் பெற முதலில் அவரது ஆலயத்திற்குச் செல்கிறார்கள்.

தெய்வ விவரம்: அம்மனின் பல அமைதியான அல்லது அமர்ந்த வடிவங்களைப் போலல்லாமல், இந்த சன்னதியின் உள்ளே இருக்கும் முக்கிய தெய்வம் ஒரு மாறும், வெளிப்படையான தோற்றத்தில் செதுக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்தைக் காணும் போது அவளது மேல்நோக்கிய பார்வையும் தோரணையும் வியப்பு மற்றும் பிரமிப்பு ஆகியவற்றின் சரியான புராண தருணத்தைப் படம்பிடிக்கிறது.

ஜோதிட முக்கியத்துவம்: பரணி நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு, அமைதி, பாதுகாப்பு மற்றும் தடைகளை நீக்குவதற்காக அடிக்கடி வருகை தரும் ஒரு குறிப்பிடத்தக்க பரிஹார ஸ்தலமாக இந்த கோவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மூஞ்சி கேஸ்வரர் ஆலயம் வடக்கு வீதியி லேயே உள்ளது

இந்த ஆலயம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் (HR&CE) கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

நேரம்: கோயில் பொதுவாக தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 7:45 மணி வரை திறந்திருக்கும் (நேரங்கள் சில நேரங்களில் பிரதான கோவிலின் அட்டவணையைப் பின்பற்றலாம், காலை 6:00 - 12:00 மணி வரை மற்றும் மாலை 4:00 - இரவு 8:00 மணி வரை திறக்கப்படும்). 

மஹா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை மற்றும் தமிழ் மாதங்களான ஆடி மற்றும் தை பண்டிகைகளின் போது இது அதிக கூட்டத்தை ஈர்க்கிறது.

இருப்பிடம் : இது திருவள்ளூரில் இருந்து சுமார் 17 கிமீ தொலைவிலும் அரக்கோணத்திலிருந்து 17 கிமீ தொலைவிலும் உள்ள திருவாலங்காடு கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாலங்காடு இரயில் நிலையம் (சென்னை-அரக்கோணம் புறநகர்ப் பாதையில்) அருகிலுள்ள இரயில் இணைப்பு ஆகும், இது கோயில் தளத்தில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருவலங்காடுவட ஆரண்யேஸ்வரர் ஆலயம் திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர்

திருவலங்காடு
வட ஆரண்யேஸ்வரர் ஆலயம்
திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
இச்சிவாலயத்தின் மூலவர் வட ஆரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி.
சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜ பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை ஆகும். இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம்.

கிழக்கு நோக்கியத் தலம்
 நடராஜர் இரத்தினசபை. தெற்கு நோக்கி அமைந்துள்ளது.  காரைக்கால் அம்மையர் அமர்ந்த தலம்.

மூலவர் :வட ஆரண்யேஸ்வரர், தனி சன்னதியில் தெற்கு நோக்கி அருளும் வண்டார் குழலி அம்மன். முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வட ஆரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

பிரார்த்தனை
நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.

மாந்திக்கு சிறப்பு வழிபாடு உண்டு;
கருவறை உள்சுற்று பிராகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ளார். பிரார்த்தனைத்தலமாக விளங்குகிறது.
#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#திருவலங்காடு

திருத்தணி சுப்பிரமணியர் ஆலயம் 15.O8.26

#திருத்தணி 
சுப்பிரமணியர் ஆலயம்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் (Subramaniya Swamy Temple, Tiruttani) என்பது முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.
வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.
இந்த கோயில் தணிகை மலை என்ற மலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் நான்கு வளாகங்கள் உள்ளன. இக்கோயிலுடன் தொடர்புடைய பல நீர்நிலைகள் உள்ளன. இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடி போன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞான சக்திபெற்றவராகக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது இந்த முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி ஆகும். ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும், திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. சரவணப் பொய்கை என்ற புகழ்மிக்க குமார தீர்த்தம் என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது. இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது மடம் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை அழகு திருத்தணி மலை எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு
சிறிய குன்றின் மீதுள்ள ஆலயம் 

மலைக்கு வேன் கார்கள் செல்ல அனுமதி உண்டு தனி பாதை வாகன நிறுத்துமிடம் உள்ளது. மிகவும் கூட்டம் அதிக நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உண்டு.
ஆலய பேருந்து வசதிகளும் உள்ளன.
நிறைய கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் வசதிகளுக்காக ஒய்வு அறைகள் குளியல் அறைகள் சிறிய கடைகள் உணவுக்கடைகள் உள்ளன. தனியார் குளியல் அறைகளும் தங்குமிடங்களும் சிறிய மண்டபங்களும் உண்டு. 
#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#திருத்தணி

பழையனூர் (திருவலங்காடு) கைலாசநாதர் ஆலயம் 15.08.26

பழையனூர் கைலாசநாதர் ஆலயம் பழையனூரில் கிழக்குபாகத்தில் அமைந்துள்ளது கிழக்கு நோக்கிய ஆலயம் தென்புறம் நுழைவு வாசல் உள்ளது கீழ்புரம் பலிபீடம் நந...