Sunday, May 3, 2026

காயல்பட்டினம் மெய்கண்டீஸ்வரர் கோயில்

காயல்பட்டினம் மெய்கண்டீஸ்வரர் கோயில் 

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான சிவன் கோயில் ஆகும்.

காயல்பட்டினம்;
முற்கால பாண்டியர் ஆட்சிகாலத்தில்,
மதுரை தலைநகரமாகவும், காயல்பட்டினம் அதன் துறைமுகமாகவும் திகழ்ந்ததாம்.

ஆலய அமைப்பு🛕
தென் தமிழ்நாட்டின் நவ லிங்கபுரங்களில் ஒன்றாகும். 
கோயில் சிறப்பம்சங்கள்:
மூலவர்: மெய்கண்டீஸ்வரர் /மெய்கண்டேஸ்வரர் (சிவன்).
மேற்கு பார்த்த சிவஸ்தலம்
முன் பகுதி கூறை அமைக்கப்பட்டுள்ளது.
உள்மன்டபம் கற்றளியாக உள்ளது.
மேல் விதானம் முழுதும் அழகிய சிறிய அளவில் புராதன சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருவரையில்  சுமார்1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவராக லிங்க வடிவில் மெய்கண்டீஸ்வரர் அருட்காட்சியளிக்கிறார்.
அவருக்கு முன்பாக நந்தியம்பெருமாள் அமைந்து இருக்கிறார்.  மீதி ஆலய இடங்கள் எழுப்பப்பட வேண்டியதுள்ளது.

பிள்ளயார் அம்மன் வழிபாடு இல்லாத கோவில். உள் மன்பத்தில் வடபுறம் நடுவில் நடராஜர் சன்னதியில் ஒரு சிறிய உலோக நடராஜர் திவ்யமாய் இருந்து அருள்பாலிக்கிறார்.
மிகவும் அமைதியாக உள்ளது  
ஆலயம் வெளிமண்டபம் பெரிய Shed போடப்பட்டு தனி கதவுடன் உள்ளது
அம்மனுக்கு தனி சன்னதி கிழக்குப்புறத்தில் சிறிய கட்டிடம் ஆரம்ப வேலையில் உள்ளது

பிரதோஷம் நடைபெறுவதாக தெரிகிறது.
பிற மதத்தவர்கள்  வீடுகள் சூழ அமைந்துள்ளார்
அடியவர்கள் பெருமுயற்சியில் வழிபாடு பூசைகள் நடைபெற்று வருகின்றன.
முழுவதுமான மீட்பும் வழிபாடுகள் சிறக்கவும் இறைவன் அருள்புரிய வேண்டும்

அருகில் உள்ள பழமையான  கணபதீஸ்வரர் சிவாலயம் திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலய நிர்வாகத்தில் உள்ளது என்று கூறுகிறார்கள்.   தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன
உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் முற்றிலும் அறியப்படாத மிகவும் பழமையான ஆலயங்களில் இத்தலமும் ஒன்று.
🔱
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🔱🇮🇳
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில்கள்,
நீண்டகாலமாக திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு விழாவினை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

பிரதோஷ வழிபாடு தவிர, மற்ற நேரங்களில்
பக்தர்கள் கூட்டம் வருகையின்மையால்
தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.

தூத்துக்குடியிலிருந்து காயல்பட்டினம் சென்று நகரின் உள் பகுதியில் உள்ளதால் குறிப்பிட்ட வழியில் விசாரித்து செல்ல வேண்டும் ஆலயம் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன

ஆலயம் அருகில் செல்வதற்கு சற்று நெருக்கடியான பாதையில் செல்ல வேண்டியுள்ளது

காயல்பட்டினத்தில் மெய்கண்டேஸ்வரர் மற்றும் கணபதீஸ்வரர் ஆகிய சிவன் கோயில்கள் தரிசித்து பலன் பெறுவோம்.
அடியாருக்கு முன் தகவல் தந்து சென்று தரிசித்து வரலாம்

25.04.2026 சுப்ராம்🔱🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்

மேலும் சில தகவல்கள்
பிரும்ம ரிஷியார் பதிவுகளிலிருந்து .....
நன்றி🛐
தச வீரட்டானம் ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போராட்டத்தில் மனதிற்கும் உடலுக்கும் வெற்றியினைத் தருபவை, நலம் தருபவை. நிம்மதியும் தெளிவும் தருபவை.

இந்த ஆலயம் சருமம் சம்பந்தபட்ட மேனி சம்பந்தபட்ட சிக்கல்களை உடலாலும், மனம் சம்பந்தபட்ட சிக்கல்களை சூட்சுமமாகவும் தீர்க்கும் சக்தி கொண்டது. வேண்டிய வரத்தை தரக் கூடிய சக்திமிக்க தலம்.

ஒருமுறை இந்த மெய்கண்டேஸ்வரரை தரிசித்துப் பாருங்கள். அவரே உங்களை மீட்டெடுத்து தன் ஆலயத்தின் வழமையான பக்தர்களாக சாட்சிகளாக மாற்றிக்கொள்வார். இது சத்தியம்.

💥....... துர்வாசர்...உண்மை எனும் மெய்பொருளை அறியாமல் அவர் அடிக்கடி தானே பெரியவர் எனச் சாபமிட்டதால் இந்நிலை வந்தது. அப்படியான நிலையில்தான் இங்கு அவர் சிவன் அருளில் குணமானார்.

அவரின் மெய் எனும் உடலை குணமாக்கி அப்படியே மெய்பொருளாவது சிவமே, சிவமே எக்காலமும் மெய்பொருள் தன் தவமோ வலிமையோ அல்ல என அவர் உண்மை உணரவைத்ததால் அந்தச் சிவன் மெய்கண்டேஸ்வரர் என்றானார்.

இந்த ஆலயம் முன்பு மிகப் பிரமாண்டமாய் இருந்தது. அதன் சொத்துக்களும் வருமானமும் பாண்டியர் காலத்தில் மிக மிக பெரிதாக இருந்தது.

பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்தை மிக மிக பெரிதாகக் கொண்டாடினார்கள். மூன்று பிரகாரம் கொண்டு திருசெந்தூர் கோவில் போல் அது பெரிதாக இயங்கிற்று.

💥 .......சுமார் 400 வருடங்கள் கிழக்கு கடற்கரைகள் அந்நியர்வசம் சிக்கிய சீரழிவின் சாட்சிகள் இவை...........

...... காயல்பட்டண மெய்கண்டேஸ்வரர் ஆலயமும் அழிய ஆரம்பித்தது.

40 ஏக்கர் கோவில், அதனைச் சுற்றி 200 ஏக்கர் நிலம் இன்னும் அதன் எதிரே ஒரு பெருமாள் கோவில் இடையில் அக்ரஹாரம் என பிரமாண்டமாக இருந்த இந்த ஆலயம் பின் மாற்றுமத காலத்தில் சிக்கி சீரழிந்து அடையாளமே இல்லாமல் போயிற்று.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் சில பக்தர்கள் ஒன்று கூடி அதனை ஓரளவு மீட்டு கூரையிட்டு வழிபாடுகளைத் துவக்கினார்கள். அதுவும் அவ்வப்போது நடக்கின்றது.

இப்போதைக்கு ஆலயம் அழியாமல் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றதே அன்றி முழுமையான வரலாறும் வரவில்லை,
பூஜைகளுக்கும் பெரிதாக வழியில்லை. அறநிலையத்துறை ஒருகால பூஜைக்குக் கூட இங்கு ஒத்துழைக்கவில்லை.

.......இந்த ஆலயம் சக்தி வாய்ந்தது. சுமார் 700 ஆண்டுகள் போராட்டத்திலும் மீண்டு எழுந்து தன்னை நிறுத்திக் கொண்ட ஆலயம். ஒருமுறை வழிபட்டால் மீண்டும் மீண்டும் உங்களை இழுக்கும் ஆலயம்.

இங்கு ஒரு சித்தர் வலுவாக உண்டு அவர் துர்வாசமுனியா அகத்தியர் வழியா என்பது இன்னும் அறியபடவில்லை அந்த சித்தர்தான் அவரின் சூட்சும காவல்தான் இக்கோவில் முழுக்க அழியாமல் நிற்கின்றது

இன்று அது துலங்கி நிற்க அந்த சித்தர்தான் காரணம், அந்த சித்தர் ஆறு அடி நாகமாக அங்கு உண்டு, இப்போதும் சிவனை வழிபட்டு செல்லும் நாகமாக அங்கு உண்டு

அந்த சித்தரின் அருளும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்

மேற்கு நோக்கி வீற்றிருக்கும் இந்தச் சிவனே துர்வாசரின் கர்மவினை மட்டுமல்ல தன்னை நாடிவரும் ஒவ்வொருவர் கர்மவினையும் அகற்றுகின்றார். நல்வாழ்வு தருகின்றார்.

....இந்த ஆலயம் வழிபாட்டு நேரம் தவிர இதர நேரம் பூட்டியிருக்கும். இதனால் இந்த ஆலயத்தை தரிசிக்க விரும்புவோர் ரமேஷ் ஐயர் என்பவரை 9442306662 எனும் எண்ணில், முத்து செல்வம் என்பவரை 9843999869 எனும் எண்ணில் தொடர்பு கொண்டுவிட்டு சென்றால் எளிதில் தரிசிக்கலாம்.

திருசெந்தூர் செல்லும் போது, குலசேகரபட்டணம் பக்கம் செல்லும் போது இந்த மெய்கண்டேஸ்வரரை தரிசிக்க மறவாதீர்கள்....
தகவல்கள் பிரம்மரிஷியார் பதிவுகளிலிருந்து
நன்றி🛐

#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECR #திருச்செந்தூர்-தூத்துக்குடி அருகில்

No comments:

Post a Comment

எட்டுக்குடி முருகன் கோவில்

எட்டுக்குடி முருகன் கோவில்  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது 800 ஆண்டுகள் பழமையானது. இது ஆடிப்படை வீடு என்று போற்றப்படுகிறது....