Sunday, May 3, 2026

திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்,

திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்,

 சம்பந்தர் மற்றும் அப்பர் பாடல் பெற்ற தேவாரத் தலம். சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான இது, அப்பருக்கு இறைவன் "வாய்மூரில் இருப்போம் வா" என்று உணர்த்திய சிறப்பைப் பெற்றது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கோயிலின் சிறப்பம்சங்கள்:மூலவர்: வாய்மூர்நாதர் (சுயம்பு மூர்த்தி).
அம்மன்: பாலினும் நன்மொழியம்மை.
தல விருட்சம்: பலா.
தீர்த்தம்: சூரிய தீர்த்தம்.

சப்த விடங்கத் தலம்: தியாகராஜருக்குரிய 7 விடங்கத் தலங்களில் இது மூன்றாவது தலம்.

பரிகாரம்: கண் நோய்களைத் தீர்க்கும் சிறப்பு வாய்ந்த தலமாகப் போற்றப்படுகிறது.

தனிச்சிறப்பு: பங்குனி மாதத்தில் சூரிய ஒளி இறைவனின் மீது படுவது தனிச்சிறப்பு.

அமைவிடம்:திருவாரூர் - வேதாரண்யம் சாலையில், திருவாரூரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது

அமைப்பு

இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்பாக குளம் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. கிழக்குச்சுற்றில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. வடபுறம் திருமறைக்காடு இறைவன் சன்னதியும் அம்மாள் சன்னதியும் காணப்படுகின்றன.

இத்தலத்திலுள்ள இறைவன் வாய்மூர்நாதர், இறைவி பாலினும் நன்மொழியாள்.

வழிபட்டோர்
பிரமன், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டுள்ளனர். வான்மீகநாதரும் வழிபட்டுள்ளார்.

🔱🇮🇳
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

No comments:

Post a Comment

எட்டுக்குடி முருகன் கோவில்

எட்டுக்குடி முருகன் கோவில்  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது 800 ஆண்டுகள் பழமையானது. இது ஆடிப்படை வீடு என்று போற்றப்படுகிறது....