நகரின் வெளிப்பட்டினம் பகுதியில் ஊருணி மேல் கரையில் உள்ளது.
ஆலயம் முன்புறம் சுதையால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி ஆலயம் நோக்கி உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் தாண்டியவுடன் பலிபீடம் கொடிமரம் நந்தி உள்ளது வெளி மண்டபம் கடந்து உள்ளே சென்றால் துவாரபாலர்கள் கருவரை மண்டபம் முன்பு அமைக்கப்பட்டுள்ளது கிழக்கு நோக்கிய கருவறையில் ஆதி ரத்தினஸ்வரர் அமைந்துள்ளார் அம்பாள் தெற்கு நோக்கிஅழகிய அமைப்பில் தனி கருவரையில் அமைந்துள்ளார்
நால்வர் சன்னதியும் சிவன் கருவரை முன் மன்டபத்தில் உள்ளார்.
பிரகாரத்தில் தென்புறம் சரஸ்வதி மகாலட்சுமி தனித்தனி சன்னதிகளில் அமைந்துள்ளார்கள் காரைக்கால் அம்மையார் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்
கருவறை கோஷ்டத்தில் விநாயகர் தட்சணாமூர்த்தி லிங்கோற்பவர் துர்க்கை
அமைந்துள்ளார் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளது
தனி சன்னதியில் சந்தானக்கிருஷ்ணன்
ஐயப்பன் வாராகி அம்மன் முதலிய தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளனர் பைரவர் சூரியன் சந்திரன் ஆகியோருக்கும் தனித்தனிசன்னதிகள் உள்ளது
ஆலயம் சமுதாய மக்கள் நிர்வாகத்தில் உள்ளதால் நல்ல பராமரிப்பில் முறையாக பூசை விழாக்கள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.
16.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment