Tuesday, July 21, 2020

மடக்கணி பதிவு : ஒன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மடக்கணி
பதிவு : ஒன்று
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
நம் தமிழ் மொழி உலக இலக்கியத்தில் ஒப்பற்றது என்று நாம் உண்மையில் தெரிந்து உணர வேண்டும். 

நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான பதிகப் பாடல்களின் அமுதத்தின்
பொருள், அமைப்புக் குறித்து சிந்தித்து ஒரு துளியேனும் பருக வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்த இந்த சிறு முயற்சியில் விளைந்ததே இந்தத் தொடர் பதிவு.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும். யமகம் என்றாலும் மடக்கு என்றாலும் ஒரு பொருளையே குறிக்கும். யமகம் என்பது வடசொல்.
திருமுறையில் வரும் நம்
தமிழ் ஞானசம்பந்தர் பாடலைப் பற்றி சிந்திப்போம். வாருங்கள்:
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1212
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 1.

உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருள் மெய்யினையே

கற்றவர் காய்வது காமனையே
கனல்விழி காய்வது காமனையே

அற்ற மறைப்பதும் உன்பணியே
அமரர்கள் செய்வதும் உன்பணியே

பெற்றம் உகந்தது கந்தனையே
பிரம புரத்தை  உகந்தனையே

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

முதல்வரியின் கடைசி வார்த்தையும்
இரண்டாவது வரியின் கடைசி வார்த்தையும் 
மெய்யினையே இதன் பொருள் :
1) திருமேனி   2) மெய்யருள்

இது போலவந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்கும். இந்த அமைப்பு பாடல்களே மடக்கு அணி வகை என்பர் அறிஞர்.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் முழு பொருள் :
1.இறைவா, உமாதேவியர் உம்மைப் பிரியாது பொருந்தி இருப்பது உமது திருமேனியே
மெய்ஞானிகள் உணர்ந்து போற்றுவது உமது மெய்த்தன்மை உடைய பேரருளையே.

2. கற்றுணர்ந்த ஞானிகள் வெறுப்பது பந்தம் உடைய மனைவி மக்கள் முதலாக மேவும், குடும்ப வாழ்க்கையே
நீவிர் நெற்றிக் கண்ணால் சினந்தது மன்மதனையே 

காமனை -1.குடும்பம்    2. மன்மதன்

3. உமது திருமேனியின் எழிலை மறைத்து விளங்குவது, பாம்பே.
தேவர்கள் செய்வதும் உமக்கு பணிவிடையே.

பணி - 1. பாம்பு     2. பணிவிடை செய்தல்

4. நீவிர் பெற்று அழகுடன் முகிழ்த்தது முருகப் பெருமானையே.
பிரமாபுரத்தினையே உகந்தவரே.

(உ)கந்தனை - மகிழ்ந்து விளங்கினை

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...