Tuesday, July 21, 2020

மடக்கணி பகுதி : மூன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மடக்கணி
பதிவு : மூன்று (பாடல் 4, 5)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙇🙏🏻🙇‍♀️

🛐 தேவார பதிகங்களில் உள்ள பாடல்களில் உள்ள தமிழமுத சுவைப் பாடங்களை சுவைத்து வருகிறோம் 
இப் பாடல்களின் திறன் வியந்தும் பக்தி உணர்வுடனும் சிந்தித்து வருகிறோம்.
இன்று மேலும் சில பாடல்களைப் பற்றி சிந்திப்போம்.

🙇🏻‍♀️அந்த வகையில் யாப்பு அமைப்பில் வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்கும் மடக்கணி என்ற இந்த வகைப் பாடல்களை தமிழ் ஞானசம்பந்தரின் பதிகப்பாடல்கள் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1215
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 4
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
மைத்திகழ் நஞ்சுமிழ்  மாசுணமே
        மகிழ்ந்து அரை சேர்வது  மாசுணமே

மெய்த்துடல் பூசுவர்  மேல்மதியே
        வேதமது ஓதுவர்   மேல்மதியே

பொய்த்தலை  யோடுஉறு  மத்தமதே
        புரிசடை  வைத்தது  மத்தமதே

வித்தகர் ஆகிய  எங்குருவே
         விரும்பி  அமர்ந்தனர்  வெங்குருவே

🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🛐

பொருள் விளக்கம்:
1.  ஈசன், கரிய நஞ்சினை உமிழும் பாம்பை மகிழ்ந்து அறையில் சேர்த்துக் கட்டியவர்.
திருவெண்ணீற்றைத் திருமேனியில் சந்தணத்தை அரைத்துப் பூசியவர்
☀️மாசுணம் = 1. பாம்பு 
            2. மா+ சுண்ணம் - திருநீறு
மைத்திகழ் நஞ்சு உமிழ்மாசுணமே - கரிய நிறம் விளங்கும் நஞ்சைக் கக்கும் பாம்பே. 
மகிழ்ந்து அரை - இடுப்பில் சேர்வது அரை ஞாணாகவும் கோவணமாகவும் சேர்வது. மாசு ( ண் ) ணமே மெய்த்து உடல் பூசுவர் - சிறந்த திரு நீற்றையே உடம்பின்மேற் பூசுவதாகிய சந்தனமாகத் திருமேனியிற் பூசுவர். சுண்ணம், பொடி, திருநீறு.

2. சடை முடியின் மீது சந்திரனைத் தரித்தவர்.
மேன்மையான ஞானம் அருளும் வகையில் வேதப்பொருளை ஓதுபவர்.

🌟மெய்த்து - உடம்பிற் பூசுவதாகிய சந்தனத்தைக் குறித்தது, ` சாந்தமும் வெண்ணீறு ` என்ற திரு விசைப்பாவின் கருத்து. மேல் மதியே - ( தலை ) மேல் ( இருப்பதும் ) சந்திரனே. மேல் மதியே வேதமது ஓதுவர் - மேலான புத்தியைத் தரும் கருத்துக்களை வேதம் முதலிய நூல்களால் ஓதியருளியவர்

3.மண்டை ஓடு ஏந்தி மயானத்தில் விளங்குபவர்; 
சடை முடியின் மீது  ஊமத்த மலர் சூடியவர்

4. வித்தகர் ஆகிய அவர், எம் குருவானவர்;
அவர் விரும்பி அமர்ந்து இருப்பது வெங்குருவே.

🗻தல  குறிப்பு: வெங்குரு:
அசுர குருவாகிய சுக்கிரன் இத்தலத்தை வழிபட்டு பேறு பெற்ற தலம். இயமன் வழிபட்டு பழி நீக்கிக் கொண்டதாலும் இப்பெயர்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1216
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 5
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

உடன்பயில்  கின்றனன்  மாதவனே
       உறுபொறி காய்ந்து இசை மாதவனே

திடம்பட மாமறை கண்டனனே
       திரிகுண மேவிய கண்டனே

படங்கொள் அரவு அரை செய்தனனே
     பகடுஉரி  கொண்டு அரை செய்தனனே

தொடர்ந்த துயர்க்குஒரு  நஞ்சுஇவனே
      தோணி புரத்துறை நம் சிவனே
      
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் பொருள் விளக்கம்:

1 ஈசன், திருமாலைத் தம்முடன் இருக்கும்படி செய்பவர்
இந்திரியங்களை அடக்கிப் பெருமையுடன் மேவும் சிறந்த தவத்தை உடையவர்.
🔘மாதவன் = 1. திருமால்,
                          2. மா  தவத்தினர் 
🔘 உடன் பயில்கின்றனன் மாதவன் -                   தம்மோடு கூடவேயிருக்கும் பேறுடையவன் திருமால். ஏனெனில், 
உறு - தம் வழியிற் செல்லுகின்ற. 
பொறி - இந்திரியங்களை. 
காய்ந்து இசை - கோபித்து மடக்கிச் செலுத்திய. 
மாதவன் - பெருந்தவஞ்செய்தோனாதலினால் பொறிகளை யடக்குதல் அவற்கு ஆகும்
 என்க. ` சென்ற விடத்தாற் செலவிடா தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு ` என்னும் திருக்குறள் கொண்டு அறிக.

2. உறுதி பயக்கும் சிறந்த வேதங்களைக் கண்டவர்.
முக்குண வயத்ததாய் மேவிக் குற்றத்தைப் பெருக்கும் கொள்கைகளைக் கண்டனம் செய்பவர்.

☮️மாமறை கண்டனன் = வேதங்களைக் கண்டவர்.  
மேவிய கண்டனனே = கண்டனம் செய்பவர்.
திடம்பட - உறுதிப்பாடு அமைய. 
மாமறை - சிறந்த வேதங்களை. கண்டனன் - செய்தருளியவர். 
வேதத்தை யருளியவரும் சிவபெருமானேயென்பது 
இதனை ` உம்பரின் நாயகன் திருவாக்கிற் பிரணவம் உதித்தது, அதனிடை வேதம் பிறந்தன ` என்னும் திருவிளையாடற் புராணத்தால் அறிக. 
திரிகுணம் மேவிய - முக்குண வயப்பட்டுச் செய்தனவாகிய புறச்சமயக் கொள்கைகளை. 
கண்டனன் - கண்டனம் செய்வோன் 

3. படம் கொண்ட அரவத்தை அரையில் பொருத்திக் கட்டியவர்;
யானையின் தோலை உரித்துப் போர்வையாகத் தரித்துக் கொண்டவர்.

☸️பகடு - யானையின்.
 உரிகொண்டு - தோலையுரித்து. 
அரை செய்தனன் - அதை அழித்தவன். 

4. விணைப் பயனால் நேரும் துன்பங்களால் அடியவர்கள் நலியாதவாறு காப்பவர்.
இவர், தோணிபுரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானே.

🔯தொடர்ந்த ) துயர்க்கு - துன்பங்களுக்கு ஒரு நஞ்சு இவனே - ஒருவிடம்போல் நின்று அழிப்பவன் இவனே.

🛐தல குறிப்பு: தோணிபுரம் = ஊழிக்காலத்தில் உலகமெல்லாம் நீரில் மூழ்கினாலும் இத்தலம் மட்டும் அழியாமல் பிரணவ உருவாகத் தோணி போல் மிதந்ததால் சீர்காழிக்கு இப்பெயர்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
முதல் பதிவில் பாடல் 1. விளக்கம்
https://m.facebook.com/story.php?story_fbid=3991943280880899&id=100001957991710
பதிவு : இரண்டு பாடல். 2,3. விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=3995772097164684&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...