Tuesday, July 21, 2020

தமிழிசைப்பொக்கிஷம் வழிமொழிதிருவிராகம் பகுதி : நான்கு

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்

#தமிழரின்பொக்கிஷம்:
பதிவு : நான்கு

#வழிமொழி_திருவிராகம், பற்றிய பதிவு.

மூன்றம் திருமுறை பதிகம்: 325
பாடல்கள் 5, 6, 7, 8

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🙇‍♂️நன்றி🙏

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

#தமிழரின்பொக்கிஷம்.

#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்:  714 - 725
பதிகம் 325    தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.

⚜️வழிமொழி திருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :

⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

இப்பதிகத்தின் 1, 2, 3, 4 பாடல்கள் பற்றி முன்பதிவில் பார்த்தோம்.
இப்பதிவில்
இப்பதிகத்தின் 5, 6, 7, 8 பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🔹சாதாரி என்ற பண் வகையினது.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

பாடல் : 5
💠தோணிபுரம் : அர்ச்சுனன் வழிபட்ட இடம்.
பிரளய காலத்தில் தோனி போல் விளங்கி காத்ததால் இத்தலம் தோணிபுரம் என விளங்கிற்றது.

✳️'ண'  சீர் அமைப்பில் உள்ள பாடல்.

பாடல். 718

ஆணியல்பு   காணவன    வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற       நாணியற    வேணுசிலை பேணியற       நாணிவிசயன்
பாணியமர்     பூணவருண்  மாணுபிர மாணியிட      மேணிமுறையிற்
பாணியுல       காளமிக        ஆணின்மலி தோணிநிகர்  தோணிபுரமே.
         
                                        -03.325:05 (718)
பொருள் :

ஆண் இயல்புகாண ( விசயனுடைய ) வீரத்தன்மையை உமைகாண.
வன வாணஇயல் - வனத்தில் வாழ்பவர்களாகிய வேடர் வடிவம். 
பேணி - கொண்டு, 
எதிர். அவனுக்கு எதிராக. ( போர் தொடங்கி ) 
பாணமழை - ( அவன் சொரியும் ) மழைபோன்ற அம்புகளும்.
சேர் - அவ்வம்புகள் தங்கிய. 

தூணி - அம்பறாத் தூணியும். 
அற - நீங்கவும். 
நாணி அற - வில்நாண் அறுபடவும். வேணுசிலை பேணி - அவனது மூங்கிலால் ஆகிய வில்லின் வளைவு. அற - நீங்கவும். 
விசயன் - அவ்வர்ச்சுனன். 
நாணி - நாணமுற்று. 

பாணி அமர் பூண - கையால் அடித்துச் செய்யும் மற்போரைச் செய்ய வர. 
அருள் மாணு - அவனுக்கு மிகவும் அருள் புரிந்த, 
பிரமாணி இடம் - கடவுட்டன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் சிவபெருமானின் இடம். 
ஏணி முறையில் - மிக்கது என்ற முறையினால். 

பாணி - பிரளயகால வெள்ளமானது. உலகு ஆள - உலகம் முழுதும் மூழ்கச் செய்ய. 
மிக ஆணின் - அதனின் மிகவும் பொருந்திய ஆண்மை வலிமையினால். மலி - சிறந்த. 
தோணி நிகர் - அதனைக்கடக்கவல்ல தோணியை யொத்த ( தோணிபுரம் ஆம் ).

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 6.
💠பூந்தாராய் : திருமால் வழிபட்ட இடம்.
பூந்தாராய் என்றும் இப்பதி.

✳️'ரா' என்னும் சீர் அமைப்பு அமைந்துள்ளது.

பாடல். 7 19

நிராமய     பராபர          புராதன  
பராவுசிவ  ராகவருளென்று
இராவுமெ  திராயது      பராநினை 
புராணன்    அராதிபதியாம்
அராமிசை   யிராதெழில்  தராயர        பராயண     வராகவுருவா
தராயனை   விராயெரி      பராய்மிகு தராய்மொழி  விராயபதியே.

                                       -03.325:06 (719)
பொருள் :

திருமால் வெள்ளைப் பன்றி உருவெடுத்து இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொம்பிலேற்றி அவனை வருத்திய பழிபோகச் சிவனை வழிபட்ட புகழ்மிக்க பூந்தராய் என்னும் திருத்தலமாகும்.

நிராமய - நோயற்றவனே. 
பராபர - உயர்வுடையதும், உயர்வற்றதும் ஆனவனே ; 
புராதன - பழமையானவனே. 
பராவு - அனை வரும் துதிக்கின்ற. 
சிவ - சிவனே. 
ராக - விரும்பத்தக்கவனே. 
அருள் என்று - அருள் வாயாக என்று. 

இராவும் - இரவிலும். 
எதிராயது - பகலினும். 
பரா - பரவி. 
நினை - உயிர் அனைத்தும் தியானிக்கின்ற. 
புராணன் - பழமையானவனும். 
அமர ஆதி - தேவர்களுக்குத் தலைவனுமாகிய சிவபெருமானின். 
பதி - இடமாகும். 

அராமிசை - ஆதிசேடனாகிய பாம்பின்மேல். 
இராத - இல்லாத. ( இரணியாக்கனாற் கொள்ளப்பட்டுக் கடலிற் கிடந்த ) 
எழில் - அழகிய பூமியை. 
தரு - கொம்பினால் கொண்டு வந்த. 
ஆய - அத்தகைமை பொருந்திய. அரபராயண - சிவனைத் துதிக்கின்ற. வராக உரு - வெள்ளைப் பன்றி வடிவுகொண்ட. 

வாதராயனை - திருமாலை. 
விராய + எரி
விராய் - கலந்த. 
எரி - தீப்போன்ற பழி நீங்குதற்பொருட்டு. பராய் - அவனால் வணங்கப்பட்டு. ( அதனால் ) 
மிகு - புகழ்மிகுந்த. 
தராய் மொழி - பூந்தராய் என்னும் பெயர். விராய - கலந்த, 
பதி ஆம். 

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 7.

💠சிரபுரம் : திருமால் சிலம்பன் என்ற அசுரனை சிரம் அறுக்க, அந்த சிரம் இரு கிரகமாக நின்று வழிபட்டு நின்று பூசித்த தலம்.

✳️'ர' சீரில் அமைத்துள்ளார்.

பாடல். 720.

அரணையுறும்  முரணர்பலர்   மரணம்வர  இரணமதில்     அரமலிபடைக்
கரம்விசிறு       விரகன்அமர    கரணனுயர் பரனெறிகொள்  கரனதிடமாம்
பரவமுது          விரவவிடல்     புரளமுறும் அரவையரி   சிரம்   அரியஅச்
சிரம்அரன        சரணம்அவை   பரவஇரு கிரகம்              அமர் சிரபுரமதே.

                                         -03.325:07 (720)
பொருள் :

அரணையுறும் - மதிலைப்பொருந்திய, முரணர் - திரிபுரத்தசுரர்களால். 
பலர் மரணம்வர - பலருக்கு மரணம் நேர. இரணம் - காயங்கள் முதலியன உண்டாக்கித் துன்புறுத்தும், 
மதில் - அம்மதிலின்மேல். 
அரமலி படை - அரத்தால் அராவப்பட்ட ஆயுதத்தை, 

கரம் - கையினால். 
விசிறு - ஏவிய, 
விரகன் - சமர்த்தனும், 
அமர் கரணன் தன்னை அடைந்தவருக்கு கரணங்களின் சேட்டையை அடக்குவிப்போனும். 
உயர்பரன் - யாவரினும் உயர்ந்த மேன்மை உடையவனும் ). 
நெறி கொள்கரன் அது - உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமாகிய சிவபெருமானின், 
இடமாம் - தலமாகும். 

பரவு - துதிக்கத்தக்க. 
அமுது - அமிர்தம், 
விரவ - தனக்குக்கிடைக்கும்படி 
உறும் அரவை - பந்தியில் வந்த பாம்பை. விடல் - விடத்தோடு. 
புரளம் உறும் - புரளுதல் உறும், 
அரிசிரம் அரிய - திருமால் அதன்தலையை வெட்ட. 
அச்சிரம் - அந்தத் தலையானது, 
அரன் - சிவபெருமானது, 
சரணமவை - பாதங்களை, 
பரவ - துதித்ததினால் 
இருகிரகம் - இரண்டு கிரகங்களாக, 
அமர் - நவக்கிரக வரிசையில் அமரச்செய்த, 
சிரபுரம் - சிரபுரமாம். 

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 8.
💠புறவம் :  இந்திரன் பருந்தாகவும், அக்னி புறாவாகவும் சென்று சிபிச்சக்கரவர்த்தியிடம்  சோதிக்க புறாவின் எடைக்காக உடல் அறுத்து ஈடு செய்தான். பாவம் நீக்க புறா வழிபட்டதால் புறவம் எனப்பட்டது.

✳️ ' ற '  சீர் அமைப்புள்ளது.

பாடல் : 721.

அறமழிவு    பெறவுலகு     தெறுபுயவன் விறல்அழிய   நிறுவிவிரல்மா

மறையினொலி    முறைமுரல்செய் பிறையெயிறன்   
உறஅருளும்  இறைவனிடமாம்

குறைவின்மிக   நிறைதையுழி மறையமரர்    
நிறையருள முறையொடுவரும்

புறவனெதிர்   நிறைநிலவு பொறையனுடல்    
பெறவருளும் புறவமதுவே.
     
                                     - 03.325.08 (721)
பொருள் :

புறாவின் எடைக்குச் சமமாகத் தன் சதையை அறுத்து வைத்த சிபிச்சக்கரவர்த்தி குறையில்லா உடம்பைப் பெற அருள் புரிந்ததும், தான் செய்த பழிபோக புறா உருவில் வந்த தீக்கடவுள், தவறு உணர்ந்த ராவணனுக்கு அருள்புரிந்த சிவபெருமானை, 
பூசித்து அருள்பெற்ற புறவம் என்னும் திருத்தலமாகும்.

அறம் அழிவுபெற - தர்மம் அழியும் படியாக. 
உலகு - உலகத்தை, 
தெறு - அழித்த, 
புயவன் - தோள்களையுடைய இராவணனது. 
விறல் அழிய - வலிமை யொழியும்படி, விரல் நிறுவி - விரலை அழுத்தி ; ( பின் )

மாமறையின் ஒலி - சிறந்த சாமவேத கானத்தை, 
முறை - வரிசையாக, 
முரல் செய் - பாடிய, 
பிறை எயிறன் - பிறை போன்ற பற்களையுடைய அவ்விராவணன். 
உற - நாளும், வாளும் பெற. 
அருளும் இறைவன் இடமாம். 

மறை அமரர் - வேதங்களுக்கும் தேவர்களுக்கும் ஒத்ததாகிய, 
நிறை - நீதியை. 
அருள - வழங்கும்படி. 
முறையொடு வரும் - முறையிட்டு வந்த,

புறவன் - புறாவிற்குரியவனாகிய வேடன், எதிர் - எதிரே, 
குறைவில் - புறாவின் எடைக்குச் சரியாக இட்ட மாமிசத்தின் குறைவில். 
மிக - அதிகரிக்க, 
நிறைதை உழி - நிறைவுவேண்டியிருந்த பொழுது. 
நிறைதை - நிறைவு. 
பொறை - பாரம், எடை
நிறை நிலவு - அந்த எடையின் நிறை சரியாகப் பொருந்த இட்ட. 
பொறையன் - உடலின் அரிந்த மாமிசத்தை எடையாக்கினவனாகிய சிபி, உடல் பெற - தன் உடம்பைப்பெற, 
அருள் - அவன் வந்து பணிய அருள் புரிந்த 
புறவம் அது - புறவம் என்னும் பெயருடைய திருத்தலமாம். 

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

#வழிமொழிதிருவிராகம் என்னும் இவ்வற்புத பதிகத்தின் பாடல்களின் விளக்கத்தையும் சிறப்புகளையும் அடுத்தடுத்த பதிவில் தொடர்ந்து சிந்திக்கலாம்.

🙏நன்றி.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

மூன்றம் பதிவின் #வழிமொழிதிருவிராக பாடல்கள்: 1 முதல் 4 வரை விளக்கம் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=4176651552410070&id=100001957991710

தமிழிசைப்பொக்கிஷம் வழிமொழிதிருவிராகம் பதிவு : மூன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்

#தமிழரின்பொக்கிஷம்:
பதிவு : மூன்று

#வழிமொழிதிருவிராகம், பற்றிய பதிவு.
மூன்றம் திருமுறை பதிகம்: 325 
பாடல் 1 முதல் 4 பாடல்கள்.

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🙇‍♂️நன்றி🙏

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

#தமிழரின்பொக்கிஷம்:

#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்:  714 - 725
பதிகம் 325    தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.

⚜️#வழிமொழிதிருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :

⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🔹சாதாரி என்ற பண் வகையினது.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

பாடல்: 01   -
💠 திருப்பிரமபுரம்: படைப்புத் தொழில் வேண்டி, பிரம்மன் தங்கி வழிபட்டு இறையருளைப் பெற்றதால் இப்பெயர்.

🔹இந்தப் பதிகத்தின் முதல் பாடல் பிரம்மபுரம் என்ற சீர்காழி பதியின் பெயர் வந்த வழியை சொல்லும்  

✳️பாடலில் 'ர' கரமாக சீர் அமைத்துள்ளார்.

பாடல் : 714

சுரர்உலகு   நரர்கள்பயில்  தரணிதல
           முரன் அழிய   அரணமதில்முப்

புரம்எரிய  விரவுவகை  சரவிசைகொள்
           கரமுடைய  பரமன்  இடமாம்

வரம்அருள  வரன்முறையின் 
     நிரைநிறைகொள்
           வருசுருதி  சிரவுரையினாற்

பிரமன்உயர்  அரன்எழில்கொள் 
      சரணஇணை
              பரவவளர்  பிரமபுரமே.

                                             - 0:3:325:01
பொருள் :

சுரர் உலகும் - தேவலோகமும்
நரர்கள் பயில் - மனிதர் வாழும்.
தரணி தலம் - பூலோகமும், 
முரண் அழிய - வலிமை அழியும்படி. ( அதனால்,) 
அரணம் - காவலாகிய. 

முப்புரம் - முப்புர முடிய. 
விரவுவகை எரிய - கலந்து பல இடமும் எரியும்படி. 
சரவிசை - அம்பின் விசையால்
கொள் - ( அவ்அம்பைக் ) கொண்ட, 
கரம் உடைய, பரமன் இடமாம். 

நிரை - வரிசையாக, 
வரன்முறையின் வரு - வரன்முறையில் ஓதிவருகின்ற. 
நிறைகொள் - நிறைவையுடைய.
சுருதி சிரம் - வேத முடிவாகிய உபநிடதங்களின், 
உரையினால் - வசனங்களினால். 

உயர் - எவரினும் உயர்ந்த, 
அரன் - சிவபெருமானின். 
எழில் கொள் - அழகையுடைய, 
சரண இணை - இரு திருவடிகளையும். வரம் அருள - தனக்கு வரம் அருள்வான் வேண்டி, (பிரமன்)
பரவ - துதிக்க. 
வளர் - புகழால் ஓங்கிய. 
பிரமபுரமே - பிரமபுரம் என்னும் பெயர்பெற்ற தலமாம்

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

♦️இதே முறையில் வரும் அடுத்தடுத்தப் பாடல்களையும் சீர் அமைப்பு முறையும் கவனிக்க வேண்டும்.

🔹இரண்டாவது பாடலில் வேணுபுரம் என்ற பெயர் வருவதால் 'ண' கரவரிசை வருமாரு அமைத்துள்ளார்.

பாடல் : 02. (வேணுபுரம்): 

💠இந்திரனுக்காக, விநாயகரைப் படைத்து
கஜாசுரனை அழித்து, இறைவன் அருளியதால், மூங்கில் உருவம் கொண்டு இந்திரன் தவம் செய்த தலம்.

பாடல் : 715

தாணுமிகு  ஆணிசைகொடு   ஆணுவியர்
பேணுமது    காணுமளவிற்
கோணுநுதல்  நீள்நயனி       கோணில்பிடி
மாணிமது    நாணும்  வகையே
ஏணுகரி       புணழிய     ஆணியல்கொண்
மாணிபதி    சேண்அமரர்      கோன்
வேணுவினை  யேணிநகர்   காணிதிவி
காணநடு  வேணுபுரமே.
               
                                  -03.325.02 (715)
தாணு - சிவபெருமான்
ஆணு - ( தன் ) அன்பர்களாகிய தேவர்கள். 
வியர் பேணு மது - (கயமுகாசுரனால்) அச்சம் கொள்வதை. 
காணும் அளவில் - அறிந்ததும்.
மிகு - வலிமை மிகுந்த. 
ஆண் இசைகொடு - ஆண் யானையின் வடிவைக்காண இசைந்து. ( நிற்க - அதற்கேற்ப.) 

கோணுநுதல் - வளைந்த நெற்றியை. நீள்நயனி - நீண்ட கண்ணையுமுடையவளாகிய அம்பிகை. கோண்இல் - குற்றமில்லாத படி. 
பிடி - பெண் யானையின் உருவை. 
மாணி - பெருமையையுடையவளாய்க் காண. 
மது - மது என்ற அசுரனும். 
நாணும் வகை ஏணு - வெட்கும்படி வலிமைகொண்ட. 

கரி - கயமுகாசுரன். 
பூண் - தான் மேற்கொண்ட தீய தொழில்கள். 
அழிய - அழியும்படி. 
ஆண் - ஆண் தகையாகிய விநாயகக் கடவுள். ( கயமுகாசுரனுக்குப் பேடியர் போல் அஞ்சிய தேவர் துயரந் தவிர்த்த வீரம் குறிக்க ஆண் என்றனர் ) 
இயல் - ( அன்பர்க்கு அனுக்கிரகிக்கும் ) அருளை, 
கொள் - கொள் வித்த. 
மாணி - பெருமையுடையோனாகிய சிவபெருமானின். 
பதி - இடம். 
சேண் - வானுலகில் உள்ள, 
அமரர்கோன் - இந்திரன். 

வேணு வினை - மூங்கிலை. 
ஏணி - ஏணியாகக்கொண்டு. 
காண்இல் - தான் நேரேகாண முடியாத. திவி - தேவலோகத்தின் நிலையைக் காண - ஒளிந்து காணும் பொருட்டு. 
நடு - நட்ட, 
வேணுபுரம் - வேணுபுரமாம் 
ஆணு - அன்பு

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

பாடல்: 3:  புகலி (என்பதால் 'ல' கர சீர்)
சனகாதி முனிவர்களுக்கு அருள குருமுகமாய் அருளிய இடம்.  தேவர்கள் புகலிடமான இடம்.

பாடல் : 716

பகல்ஒளிசெய்  நகமணியை முகைமலரை
        நிகழ்சரண  அகவு  முனிவர்க்கு
அகலமலி  சகலகலை  மிகவுரைசெய்
        முகமுடைய  பகவன்இடமாம்
பகைகளையும்  வகையில்அறு  
முகஇறையை
          மிகஅருள   நிகரில்  இமையோர்
புகவுலகு  புகழஎழில்   திகழநிகழ்
           அலர்பெருகு  புகலிநகரே.

                               -03:325:03 (716)
பொருள் :

நகம் = மலை
முகை மலர் = தாமரை மலர்
பகவன் = சிவபெருமான்

பகல் ஒளி செய் - சூரியனைப்போற் பிரகாசிக்கும். 
நகம் மணியை - மலையிற் பிறக்கும் பத்மராக மணிகளையும். 
முகை மலரை - அரும்பு விரிந்த செந்தாமரை ( நாண் ) மலரையும். 
நிகழ் - போன்ற. 
சரண - திருவடிப் பேற்றுக்குரிய. 
அகவு - விருப்பம் மிக்க. 
முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு,

அகலம்மலி - விஸ்தார மாகிய, 
சகலகலை - கலைகளனைத்தையும். 
மிக - ( தெளிவு ) மிகும்படி. 
உரை செய் - உபதேசித்தருளிய. 
முகம் உடைய - திருவருள் நோக்கம் உடைய. 
பகவன் இடமாம் - சிவபெருமானின் இடம் ஆகும். 
முகை மலர்ந்த மலர் - புதுப்பூ. பகவன் - சிவபெருமான் 
 முகம் - என்னும் சொல் திருவருள் நோக்கம் என்னும் பொருளில் வந்தமை காண்க. 

பகை - தேவர் பகைவர்களாகிய அரக்கர் முதலாயினோரை. ` பகை ` பகைவருக்கு ஆயினமையின் பண்பாகுபெயர்.
இறை - கடவுள். 
மிக - அறச்செயல்கள் அதிகரிக்க. 
அருள - தர. அதனால். 
நிகரில் இமையோர் - மகிழ்ச்சியில் நிகர் இல்லாத தேவர்கள். 

புக - சரண்புக, 
எழில் திகழ - அழகு விளங்க. 
நிகழ் - ( இவற்றால் ) நேர்ந்த ( புகலியெனும் பெயர் ). 
அலர்பெருகு - அனைத்துலகினும் மிக்குப் பெருகிய ( புகலி நகர் என்க.)

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல்:04 - வெங்குரு  =
💠குருபகவான் வழிபட்ட இடம்.
✳️('ங்' - சீர் அமைப்பில் பாடல்)

பாடல்: 717

அங்கண்மதி   கங்கைநதி    வெங்கண்அர
வங்கள்எழில்  தங்கும்  இதழித்
துங்கமலர்        தங்குசடை    அங்கிநிகர்
எங்கள்இறை   தங்கும்  இடமாம்
வெங்கதிர்வி   ளங்குலகம்    எங்கும்எதிர்
பொங்கெரிபு    லன்கள் களைவோர்
வெங்குருவி     ளங்கிஉமை   பங்கரசர
ணங்கள்பணி  வெங்குருவதே.

                                    -03.325:04 (717)
பொருள் :

இதழி=கொன்றை மலர்
வெங்குரு விளங்கி = குருபகவானைச் சுட்டியது.
வெம்மை = விருப்பம் என்னும் பொருள்.

அங்கண்மதி - அழகிய ஆகாயத்தினிடத்தில் உள்ள சந்திரனும், வெங்கண் அரவங்கள் - கொடிய பாம்புகளும். 
எழில் தங்கும் இதழித் துங்கமலர் - அழகு தங்கிய கொன்றையின் தூயமலரும். தங்கு சடை - பொருந்திய சடையானது. 
அங்கி நிகர் - தீயையொக்கும். 
எங்கள் இறை - எங்கள் தலைவன்.  

வெங்கதிர் - சூரியனால், 
விளங்கும் - விளங்குகின்ற. உலகமெங்கும் - உலகில் உள்ள அனைவரும். 
எதிர் - நல் வழிக்குமாறாக. 
பொங்கு - மிக. எரி - வருத்துகின்ற. புலன்கள் - மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையை. 
களைவோர் - நீக்க விரும்புவோர். 

வெங்குரு - கொடிய தேவ குருவினால். விளங்கி - தமது துயர் களைதற்கிடமிதுவேயென்று தெளிந்து. உமைபங்கர் - சிவபெருமானின் - சரணங்கள் பணி - பாதங்களைப்பணிந்த. 
வெங்குரு அது - வெங்குரு என்னும் அத்தலமாம்.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

#வழிமொழிதிருவிராகம் என்னும் இவ்வற்புத பதிகத்தின் பாடல்களின் விளக்கத்தையும் சிறப்புகளையும் அடுத்தடுத்த பதிவில் தொடர்ந்து சிந்திக்கலாம்.

நன்றி.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு : ஒன்று
https://m.facebook.com/story.php?story_fbid=4163567850385107&id=100001957991710
பதிவு : இரண்டு
https://m.facebook.com/story.php?story_fbid=4167871086621450&id=100001957991710

தமிழிசைப் பொக்கிஷம் திருவிராகம் பதிவு : இரண்டு

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்
பதிவு : இரண்டு

#திருவிராகம்   
#வழிமொழிதிருவிராகம் 
#வண்ணகம்
#முடுக்கியல்
#அடுக்கியல் 

தேவார இசைப்பாடல்கள் பற்றியது
பதிவு : இரண்டு.

பக்தியும், தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾

ஞானசம்பந்தரின்  தமிழ் இசை மற்றும் தாள சந்தங்கள் சிறப்புக்கள்
கொண்டு அமைந்த பதிகப் பாடல்களைப் பற்றி மேலும் சிந்திக்கலாம்.

#வண்ணகம்
#முடுகியல்
#அடுக்கியல் 

 🔽இவ்வுறுப்பு இசை, இனிமை, உடையது. அதனால் #வண்ணகம் எனவும் பெயர் பெறும். 

🔼விரைந்து செல்லும் ஓசையுடையது என்பதனால் #முடுகியல் எனவும் பெயர் பெறும். 

குறில் அல்லது நெடில் கலந்த விரைவு நடைப் பாடல்வரிகளில் அமைந்தது. இதில் குறில் தாளச் சிறப்பையும் நெடில் ஓசை நயத்தையும் உணர்த்தும்.

 🔽ஓசை அடுக்கி வருவது என்பதனால் #அடுக்கியல் எனவும் பெயர் பெறும்.

♦️சந்தவாய்பாடுகளைக் கொண்டு அமையும் பாடல்கள். இந்த வகைப் பாடல்களுக்குரிய சந்தவாய்ப்பாடுகள் பல சேர்ந்து துள்ளலாகவும் வரும்.

இந்த சந்த அமைப்புப் பாடல்களை
 #வண்ணகம் - வண்ணப்பாக்கள் என்கிறார்கள் இசை இலக்கண ஆராய்ச்சியாளர்கள்*.

⚜️ #வண்ணகம் : சந்தத்துடன் தொடர்புடையது. 
'எந்தக் கவியினும் சந்தக் கவி மேல்'
வல்லிசை, மெல்லிசை, நெடுஞ்சீர், குறுஞ்சீர், அமைப்பு வண்ணம், இயைபு வண்ணம் என்றல்லாம் வகைப்படுத்துகிறார்கள்; இசையிலக்கணவிலார்கள்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

🎶இந்த வகையில் சந்தப்பாடல்களுக்கு எடுத்துக்காட்டாக,

'பிறையணி   படர்சடை    முடியிடை
பெருகிய    புலனுடை    யவனிறை'
                  01.19.01
எனும் பாடலில்வரும் சந்தம் :

தனதன   தனதன   தனதன
        தனதன   தனதன   தனதன

என்று வருகிறது.

💠இந்த வகையில் இன்னோரு பாடல்
மூன்றாம் திருமுறையில் பதிகம்: 326 தலம்: திருக்கைலாயம். பாடல் 1.

💠 (தயவு செய்து ஒரு முறையாவது திரு சம்பந்தம் குருக்கள் அய்யாவின் 'கயிலைப் பதிக'த்தில் வரும் இந்தப் பாடல்களைக் கேட்டு அவசியம் கேட்டு உணரவேண்டும்).

✳️பாடலில் 'ள' கரத்தை வைத்து அமைத்துள்ள திறன் சிந்திக்கத்தக்கது.

வாளவரி  கோளபுலி  கீளதுரி
     தாளின்மிசை   நாளுமகிழ்வர்

ஆளுமவர்  வேளநகர்  போளயில
       கோளகளிறு   ஆளிவரவில்

தோளமரர்  தாளமதர்  கூளியெழ
        மீளிமிளிர்  தூளிவளர்பொன்

காளமுகில்  மூளும் இருள்  கீளவிரி
         தாளகயி  லாய  மலையே.

🔸மூன்றாம் திருமுறை பாடல்: -726- (3.326.1).

🎶பொருள் :

சிவபெருமான் ஒளிபொருந்திய வரிகளையுடைய புலியின் தோலை உடுத்தவர். அது பாதத்தில் பொருந்த எக்காலத்திலும் ஆனந்தமாய் இருப்பவர். அடியவர்களை ஆட்கொள்பவர். எதிரிட்ட விலங்குகளைக் கிழிக்கும் கூரிய பற்களை யுடைய திரண்ட வடிவுடைய யானையை அடக்கியாண்டவர். சிறந்த வில்லினை ஏந்திய தோளர். கூளிகள் தாளமிட நடனம் புரிபவர். திருவெண்ணீற்றினை அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் கயிலாய மலையானது கரிய மேகங்களால் மூண்ட இருட்டை ஓட்டும் வெண்பொன்னாகிய ஒளியை விரிக்கும் அடிவாரம் உடையதாகும்.

🎶பொருள் விளக்கம்:

வாள - ஒளி பொருந்திய. 
வரி - கீற்றுக்களையுடைய. 
கோள - கொலைபுரிவதாகிய. 
புலி - புலியை. 
கீளது - கிழித்ததாகிய. 
உரி - தோல் ( உடுப்பதால் ) 
தாளின் மிசை - ( அது ) பாதத்தில் பொருந்த. 
நாளும் மகிழ்வர் - என்றும் மகிழ்வர்.

வேள் - கண்டவர் விரும்பும். 
அநகர் - தூயோர். 
ஆளுமவர் - ஆள்பவர். 
போள் - ( எதிரிட்ட விலங்குகளை ) கிழிக்கும்படியான. 
அயில - கூரிய பற்களையுடைய. 
கோள - திரண்டவடிவையுடையதான. களிறு - யானையை. 
ஆளி - அடக்கியாண்டவர். 
வர வில் - சிறந்த வில்லைத் தாங்கிய.

தோள் - தோளையுடைய. 
அமரர் - தேவராவர். 
மதர் - செருக்கிய. 
கூளி - கூளிகள். 
தாளம் எழ - தாளத்தை எழுப்ப. 
மீளி - ( நடனமாடும் ) வலியர். 
மிளிர் - பிரகாசிக்கின்ற. 
தூளி - திருநீற்றைப் பூசியவர். 

காளமுகில் - கரிய மேகங்களாய். 
மூளும் - மூண்ட. 
இருள் - இருட்டை. 
கீள - ஓட்ட. 
பொன் - வெண்பொன்னாகிய. 
விரி - ஒளியை விரிக்கும். 
தாள - அடிவரையையுடைய கயிலாயமலை. 
போழ் - போள் என எதுகை நோக்கி நின்றது.

♦️இந்தப் பாடலின் சந்த அமைப்புமுறையும் மிக அற்புதமானது.

தானதன  தானதன  தானதன  
      தானதன   தானதன  தானதனன.

🔶#வழிமொழிதிருவிராகம் இலக்கனமும் பொருந்தியிருக்கிறது.

🔸பல்வேறு பண், தாளம், இராகத்தில் சுமார் 40 பதிகங்களை திருவிராக அமைப்பில் அருளிச்செய்துள்ளார்.  இவை எல்லாம் திருஞானசம்பந்தர் அருளிய புதிய இசை வடிவம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

#திருவிராகம் - இதன் இலக்கணம்:

⏺️வழியெதுகை பெறாது முடுகியல் மட்டும் பெற்ற திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகங்கள் திருவிராகம் எனப்படும்.

💠#திருவிராகப்பதிகங்களில் இசைத்தன்மையும் தாளச் சிறப்பும் 
பெற்ற சில பாடல்களை மிகவும் சிறப்பானதாக இசை நூல் ஆராய்ச்சியாளர்கள்* குறிப்பிட்டு     சிறப்பித்துள்ளார்கள்.

திருவிராக பதிகங்கள் :

முதலாம் திருமுறை : 

பதிகங்கள்   தலம்
      பண் : நட்டப்பாடை
19                 திருக்கழுமலம்
20                 திருவிழிமிழலை
21                 திருச்சிவபுரம்
22                 திருமறைக்காடு

      பண் :  வியாழக்குறிச்சி
120               திருவையாறு
121               திருவிடைமருதூர்
122               திருவிடைமருதூர்
123               திருவலிவலம்
124               திருவிழிமிழலை
125               திருச்சிவபுரம்

இரண்டாம் திருமுறை:

       பண் : இந்தளம்
165               திருப்புகலி
166               திருப்புரம்பயம்
167               திருக்கப்பறியலூர்
168               திருவையாறு
169               திருநள்ளாறு
170               திருப்பழுவூர்

       பண்: நட்டராகம்
233               சீர்காழி
234               திருத்துருத்தி
235               திருக்கோவிலூர் வீரட்டானம்
236               திருஆரூர்

மூன்றாம் திருமுறை :
       பண் : கௌசிகம்
310               திருஆலவாய்
311               திருவாணைக்காக்கா

        பண் : சாதாரி
325               திருபிரம்மபுரம்*
(இது #வழிமொழிதிருவிராகம் எனப்படும்; இது பற்றி தனிப் பதிவில் விளக்கம் பெறலாம்)
326                திருக்கயிலாயம்
327                திருக்காளத்தி
328                திருமயிலாடுதுறை
329                திருவைக்காவூர்
330                திருமாறகல்
331                திருப்பட்டிஸ்வரம்
332                திருத்தேவூர்
333                திருசண்பைநகர்
334                திருவேதவனம்
335                திருமாணிக்குழி
336                திருவேதிக்குடி
337                திருக்கோகரணம்
338                திருவிழிமிழலை
339                திருத்தோணிபுரம்
340                அவளிவனல்லூர்
341                திருநள்ளாறு
342                திருப்புறவம்
343                திருவிழிமிழலை
344                திருச்சேறை
345                திருநள்ளாறு
346                திருவிளமர்

⏹️மேற்கண்ட பதிகங்கள் திருவிராகப் பதிகங்கள் என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது. இவைகள் தமிழ் இசைப்பாடல்களுக்குப் பொக்கிஷமாகத் திகழ்கின்றன.

🔹தமிழ் மொழியில் - இது போன்ற அமைப்பில் - இவ்வகை சந்த இசை அமைப்பில் - பல்வேறு பண்களில் இசைப் பாடல்களை அமைத்து முதன் முதலாக ஏராளமான பதிகங்களை இயற்றியவர் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ஞானசம்பந்தரே. 

✳️இதனால் இவரை இசைத்தமிழ் இறைவர் என்று போற்றுகிறார்கள்;
   அவ்வழி நின்று நாமும் போற்றுவோம்.

🙏நன்றி.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு : ஒன்று
https://m.facebook.com/story.php?story_fbid=4163567850385107&id=100001957991710

தமிழிசைப்பொக்கிஷம் - திருவிராகம் பதிவு: ஒன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்

#தமிழரின்பொக்கிஷம்

#திருவிராகம்   #முடுகியல்   #அராகம்           பற்றிய பதிவு.
தேவார இசைப்பாடல்கள் பற்றியது
பதிவு : 1.

பக்தியும், தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾

'இசைத்தமிழ் ...  நீ செய்த பெருஞ்சாதனை .....'

ஏழாம் நூற்றாண்டில் வேத நெறி தழைத்தோங்க, அவதாரம் செய்த ஆளுடையப் பிள்ளையாம் அருள் ஞானசம்பந்தர் இயற்றிய திருக்கடைக் காப்பு என்னும் தேவாரத் திருமுறைகளே தமிழரின் பிற்கால சிற்றிலக்கியத்திற்கு  அடிப்படையாய் அமைந்திருக்கிறது.

சம்பந்தர் , புதிய புதிய பாவகைகளை அமைத்து அருளிய பல பதிகங்கள், தமிழின் சிறப்புக்கு மகுடமாய் ஒளிர்கிறது.

சம்பந்தர் இசைத்தமிழுக்குச் சிறப்பான பதிகங்கள் பல அருளிச் செய்துள்ளார். அவரின் சிறப்புகளை, சாதனைகள் பற்றி இப்பதிவில் தொடர்ந்து சிந்திப்போம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

🔷 #திருவிராகம், #அராகம், #முடுகியல்

#அராகம்
#திருவிராகம்:

❇️விளக்கம்:

முதல் திருமுறையில் வரும் ...
123 வது பதிகம். தலம்: திருவலிவலம்
'பூவியல் புரிகுழல்' எனத் தொடங்கும் பதிகத்தில் வரும் 5வது பாடல்

பிடியதன் உருஉமை  கொளமிகு  கரியது
வடி கொடு  தனதடி  வழிபடும் அவர்இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி  வலம்உறை      
              இறையே.
                                              01.123.05
(முதல் திருமுறை - 1330).

❇️ மேல எடுத்துக்காட்டப்பட்டுள்ள பாடல்
அமைப்பு திருவிராகம் எனப்படும்.
வியாழக் குறிஞ்சி என்னும் பண்ணில் அமைந்துள்ள பாடல். 

✴️பிடியதன் என்று ஆரம்பித்து, தொடர்ந்து வரும் வார்த்தைகள் சந்த அமைப்பில் ஓசையும் நயமும் கொண்டு வேகமாக கடகடவென அடுத்தடுத்த வார்த்தைகள் வந்து பாடல் இனிமை தருகிறது அல்லவா? 

🔼இது போன்றுவிரைந்து செல்லும் ஓசையும் நடையும் கொண்ட பாடல்கள் அராகம் என்று பழந்தமிழ் இலக்கணத்தில் இருந்தாலும்,  இதுவே பின் இராகம் எனப்பட்டது என்பார்  அறிஞர்*

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

#திருவிராகம்:

🔼திருஞானசம்பந்தரால் இவ்வகைப் பதிகங்கள், இயற்றப்பெற்றதால் திருவிராகம் எனப்பட்டது.

♦️ #திருவிராகம்: இதன் இலக்கணம்:

⏺️வழியெதுகை பெறாது முடுகியல் மட்டும் பெற்ற திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகங்கள் திருவிராகம் எனப்படும்.

#முடுகியல்:

🔷#முடுகியல் அல்லது முடுகியல் ராகம் என்பது விரைவு நடையும், ஓசையும் அமைந்த சந்தப்பாடல்.

🔼நெகிழ்ந்த ஓசையாகிய நெட்டெழுத்துக்கள் விரவாது குற்றெழுத்துக்களால் இயன்று இடையறவு படாது பாடப்படுவது.

🔸இசை நீட்டத்திற்கு இடமின்றிப் பாடலுக்குரிய நடையில் ஒரு வகைச் சந்த ஓசையுடன்  விரைந்து செல்லுமாறு அமைக்கப்பட்ட சீர்களை உடையது முடுகியல் அடியாகும்.

🔷 பின்னாளில் தோன்றிய திருப்புகழ் போன்ற சந்த விருத்தங்கள் தோன்றக் காரணமாயிற்று என்பது அறிஞர் கூற்று*
 
♦️இவ்வாறு இசையும், தாளமும் இணைந்து சந்த வேகத்துடன் பாமரரும் சேர்ந்து பாட பதிகங்கள்  அமைத்து அருளியவர் நம் தமிழ் ஞானசம்பந்தரே,

🔹இவையே திருவிராகப் பதிகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

⚜️திருவிராகப் பதிகங்களில்
     இசைத்தன்மையும்,
     தாளச் சிறப்பும் 
பெற்ற சில பாடல்களை   
     மிகவும் சிறப்பானதாக இசை நூல்    
     ஆராய்ச்சியாளர்கள்* குறிப்பிட்டு     
     சிறப்பித்துள்ளார்கள்.

🎵இசைத்தன்மை  மிகவும் சிறப்புப் பெற்றதாக குறிக்கப்படும் பாடல்கள்*....

🎼முதல் திருமுறை :

🎶பதிக எண்: 19.  தலம் : திருக்கழுமலம் பாடல் :  05 
பாடல் :  தலைமதிபுனல்...
பண்   :  நட்டபாடை
இராகம் : கம்பீர நாட்டை
தாளம்   : ஆதி (சதுச்சர நடை)

 பாடல் :

🎼இரண்டாம் திருமுறை : 

🎶பதிக எண்: 165 .  தலம் : திருப்புகலி
 பாடல் : 04
பாடல்  : மை தழுவும்...
பண்     : இந்தளம்
இராகம் : மாயாமாவை கெளவ
தாளம்   : கண்ட சாபு

🎶பதிக எண்: 236 .  
தலம்  : திருக்கோவலூர் வீரட்டம்
பாடல் : 09
பாடல் : ஆறுபட்ட ...
பண்    : நட்டராகம்
இராகம் :  பந்துவராளி
தாளம்   :  ஆதி (திசர நடை)

🎼மூன்றாம் திருமுறை :

🎶பதிக எண்: 310  தலம்: திரு ஆலவாய்
பாடல் : 07
பாடல்: கறையிலங்கு...
பண் : கெளசிகம்
இராகம் : பைரவி
தாளம் : ரூபகம்

🎶பதிக எண்: 345  தலம் : திருநள்ளாறு பாடல் : 05
பாடல் : பண்ணியல்...
பண்    : சாதாரி
இராகம் : பந்துவராளி
தாளம்    : சதுச்ர நடை

🥁தாள ரீதியில் சிறப்பு பெற்ற சில பாடல்கள் **..

⚜️முதல் திருமுறை :

🎶பதிகங்கள்: 120 - 125
பண் : வியாழக்குறிச்சி
ஜதி :  தக  திமி 
            தக ஜூனு
நடை: சதுச்ர நடை

பதிகம்: 01:123: (திருவையாறு)
பாடல் :  05
பாடல் :  பிடியதன் ...

⚜️இரண்டாம் திருமுறை :

🎶பதிகங்கள்: 165 - 170
பண் : இந்தளம்
ஜதி  : தக  தகிட
            தக  தகிட
நடை: கண்ட நடை

பதிகம்: 165     தலம்: திருப்புகலி
பாடல் : 01
பாடல் :  
முன்னிய காலை ...

🎶பதிகங்கள்: 233 - 237
பண் : நட்டராகம்
ஜதி  : தகிட தகிட
நடை: திச்ர  நடை

பதிகம்: 236   தலம்: திருக்கோவலூர்.
பாடல் :01
பாடல் :  
படைகொள்கூற்றம்    வந்துமெய்ப் 
பாசம்விட்ட    போதின்கண்

இடைகொள்வா    ரெமக்கிலை 
யெழுகபோது  நெஞ்சமே

குடைகொள்வேந்தன்    மூதாதை
குழகன்கோவ    லூர்தனுள்

விடையதேறுங்   கொடியினான் 
வீரட்டானஞ்   சேர்துமே.

⚜️மூன்றாம் திருமுறை :

🎶பதிகங்கள்: 310 - 311
பண் :  கெளசிகம்
ஜதி  :  தகிட தகிட
நடை:  திச்ர  நடை

பதிகம்: 310   தலம்: திருஆலவாய்
பாடல்  : 01

வீடலால    வாயிலாய்   விழுமியர்கள் 
நின் கழல்
பாடலால   வாயிலாய்    பரவநின்ற பண்பனே
காடலால   வாயிலாய்    கபாலிநீள்க டிம்மதில்
கூடலால    வாயிலாய்    குலாயதென்ன
கொள்கையே.

🎶பதிகங்கள்: 325 - 346
பண் : சாதாரி
ஜதி  : தகதகிட  தகதகிட
நடை: கண்ட  நடை

பதிகம்: 325  தலம்: திருப்பிரமபுரம்
பாடல்  : 01
பாடல்  : சுரர் உலகு🔹....
இந்தப்பதிகப் பாடல்கள் பற்றியும் இதன்  சிறப்புகள் பற்றி மிக விரிவாக வேறு வேறு பதிவில் காணுவோம்*

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

மேற்கண்ட பதிகங்கள் திருவிராகப் பதிகங்கள் என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது.

🔹தமிழ் மொழியில் - இது போன்ற அமைப்பில் - இவ்வகை சந்த இசை அமைப்பில் - பல்வேறு பண்களில் இசைப் பாடல்களை அமைத்து முதன் முதலாக ஏராளமான பதிகங்களை இயற்றியவர் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ஞானசம்பந்தரே.

✳️இதனால் இவரை இசைத்தமிழ் இறைவர் என்று போற்றுகிறார்கள்;
அவ்வழி நின்று நாமும் போற்றுவோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள் மற்றும் 

🙏இசை பேரறிஞர்களாகிய,  வீ.ப.கா.சுந்தரம்,  ஞானகுலேந்திரன், சுப்பிரமணியன், அங்கையர்கண்ணி, மு.கவிதா  முதலிய ஒப்பற்ற பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது.
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு உணர்வோம்.

🙏நன்றி.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

திருஎழுக்கூற்றிருக்கை பதிவு : ஆறு

திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#திருஎழுகூற்றிருக்கை

பதிவு : ஆறு
முதலாம் திருமுறை: 01.128:
(தேர்தட்டு பீடம்) வரிகள் 43 - 47 வரை.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பக்தியும் தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்...
   🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
❇️  நாம் இந்த பதிவுகளில் #திருஎழுக்கூற்றிருக்கை என்ற அமைப்பில் உள்ள பாடல் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்

💠ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில் திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும்.
 🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🛡️ பாடல் அமைப்பு முறை, பொருள் விளக்கம், சிறப்பு பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

📝 #திருஎழுக்கூற்றிருக்கை:

🛑அமைப்பு :

திரு + எழு + கூற்று + இருக்கை

பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும்  அடுக்கில்
முதல் 7 வரை படிப்படியாக     
           ஒன்று, இரண்டு, ஒன்று,  
                            1  2  1
ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று
                        1  2  3  2  1
என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்
                       1  2  1
இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்
                   1  2  3  2  1
மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்
                1  2  3  4  3  2  1
நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்
            1  2  3  4  5  4  3  2  1
ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி, 
         1  2  3  4  5  6  5  4  3  2  1
ஆறாம் கூற்றிலும், ஏழாம் கூற்றிலும்
   பதிமூன்று அறைகள்  அமைப்பர்
     1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1

🎎இவற்றை சித்திரக்கவி, ரதபந்தம் என்பர்.இது தேர் போன்ற அமைப்பும் 

எண்களைக் கூட்டி பின் ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி, மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. 

அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி
தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும்.

✴️முடிவில் பாடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும்.
              
                        o
                    1  2  1 
                1  2  3  2  1
            1  2  3  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
             ⏫மேலடுக்கு
                    நடு பீடம்
                    கீழடுக்கு ⏬
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
            1  2  3  4  3  2  1
                1  2  3  2  1
                    1  2  1 
                        o
          
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

☸️ திருஞானசம்பந்தர் அருளிய திருமுறையில் வரும் இந்த அமைப்பு பதிகப் பாடல் வரிகள் அமைந்துள்ள முறைமை பற்றியும், பாடல், பொருள், சிறப்பும் விளக்கமும் பற்றி ... ...

முதல் பதிவில்*
முதல் அடுக்கு வரிசையில் அமைந்துள்ள பாடல் வரிகள் 1 மற்றும் 2 பற்றியும்,

இரண்டாவது பதிவில்**
இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
   பாடல்கள் வரிகள் 3 முதல் 5 வரை  
   மற்றும் வரிகள் 6 முதல் 9 வரையிலும்

மூன்றாவது பதிவில்,***
நான்காவது மற்றும் ஐந்தாவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
    பாடல் வரிகள் 10 முதல் 13 வரை
    பாடல் வரிகள் 14 முதல் 19 வரை

நான்காவது பதிவில்****
ஆறவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
     பாடல் வரிகள் 19 முதல் 31வரை

ஐந்தாவது பதிவில் *****
ஏழாவது மேலடுக்குவரிசையில் அமைந்துள்ள 
பாடல் வரிகள்  32 முதல் 42வரை 

பற்றியும் சிந்தித்தோம்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

📔இனி

✳️ இப்பதிகத்தில் அமைந்துள்ள
(தேர்தட்டு பீடம்) வரிகள் 43 - 47 வரை.

அமைப்பு, பொருள், விளக்கம் பற்றியும் இந்தப் பதிவில் சிந்திப்போம்;
 வாருங்கள்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

நடு பீடம்: பாடல்வரிகள் : 43- 47:

மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

💠பாடல் அமைப்பு :

தேர் அமைப்பின் நடு பீடத்தில் இவ்வரிகளை அமைத்து இப் பாதிகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியருளினார்.

☣️ பொருள்: (வரிகள் - 43- 47)

மறையோர் வாழும் கழுமல முதுபதியின் பெருமையை, ஞானசம்பந்தர் உரைத்த இவ்வருள் பதிகத்தை ஒத நினைய வல்வர்கள் பிரவா நிலமையை
அடையார்.

🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘

♦️மேலும் இவ்விடத்தில்
மிகப் பழைய உரை ஆசிரியர்கள் குறிப்பு உரைகளின் சிறப்புகளையும் சுருக்கமாக சிந்திப்போம்.
🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘

🔹மறு இலா மறையோர்- தங்களுக்கு உள்ள கடமைகளை(வேதங்களை முறையாய் படிப்பது, வேள்விகளை செய்து எல்லாருக்காகவும் பிரார்த்திப்பது) என்று வாழும் குறை இல்லாத மறையவர்கள் 

🔸கவுணியர் என்பது சம்பந்தரின் குலம்

🔽இது வரை சம்பந்தர் சொன்ன கருத்துகளை அவருடைய தந்தை அறிவார்.
🔼இந்த கருத்துகளை அறிந்தவர் யாரும் நீள்நிலத்தில் (இந்த பூமியில்), இறைவனை,நினைக்காமல் இருக்க மாட்டார்கள்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⏺️மறுவற்ற பிர்ம வமிசத்தில் தோன்றித் தீக்கைகளாலே மலத்தைக் கழுவப்பட்ட கவுணியர் கோத்திரத்திலே வந்த சீகாழிப்பிள்ளை கட்டுரையை விரும்பிக் கழுமலம் என்கின்ற முதுபதியிலே உறைகின்ற இறைவனை நினைக்க வல்லார்களுக்குப் பிறப்பு இல்லை என்றவாறு.
  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

💥இப்பதிக சிறப்பு:

⏺️சிவபெருமானின் பல்வேறு பராக்கிரமங்களையும் சிறப்புகளையும் மனம் ஒன்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்களையும் குறிப்பால் உணர்த்தி யருயது.

🔹இத்தலத்தின் பெருமையையும், பல்வேறு சிறப்புகளையும் தல புராணங்களை உணர்த்தி எடுத்துக் கூறியது.

🔸சிவபாத இருதயர், திருஞானசம்பந்தர் ஓதிவரும் திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்வதை நியமமாகக் கொண்டிருந்தார். பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில் தம் தந்தையார் இடர்ப்படுதலைக் கண்ட திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை அருளி இதனை ஓதி வந்தாலே அனைத்துத் திருப்பதிகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக் கூறினார் என்பர்.
  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🛐அருள் ஞானசம்பந்தர், நம் தமிழ் மொழியில் தந்தருளிய ஒப்பற்ற முறையில் அமைந்த இந்த #திருக்கூற்றெழுக்கை என்னும் பதிகப் பாடல்களில் மூலம் பெறப்பட்ட பொருள், விளக்கம், சிறப்புக்களை இதுவரை தொடர்ந்து சிந்திக்க இறையருள் துணை செய்தமைக்கு இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தி வணங்குவோம்.

 நன்றி. வணக்கம்.
  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
சிந்தனையும் தொகுப்பு ஆக்கம்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பதிவு ஒன்று : முதல் வரிசை: வரி 1, 2:
https://m.facebook.com/story.php?story_fbid=4051843124890914&id=100001957991710
பதிவு : 2, வரிசை 2,3 பாடல்வரி: 3 - 9:
https://m.facebook.com/story.php?story_fbid=4066646166743943&id=100001957991710 ப
பதிவு : 3 ல் வரிசை 4, 5 பாடல் வரிகள்:
    பாடல் வரிகள் 10 முதல் 13 வரை
    பாடல் வரிகள் 14 முதல் 19 வரை
https://m.facebook.com/story.php?story_fbid=4084714111603815&id=100001957991710 ப
பதிவு : 4 ல் வரிசை 6, 
     பாடல் வரிகள் 19 முதல் 31வரை
https://m.facebook.com/story.php?story_fbid=4093885337353359&id=100001957991710
பதிவு : 5 ல் வரிசை 7.
     பாடல் வரிகள் 32 முதல் 42 வரை
https://m.facebook.com/story.php?story_fbid=4107334149341811&id=100001957991710

திருஎழுக்கூற்றிருக்கை பதிவு : ஐந்து

திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#திருஎழுகூற்றிருக்கை
பதிவு : ஐந்து.
முதலாம் திருமுறை: 01.128:
வரிசை 7 வரிகள் 32 - 42 வரை.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பக்தியும் தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்...
   🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
❇️  நாம் இந்த பதிவுகளில் #திருஎழுக்கூற்றிருக்கை என்ற அமைப்பில் உள்ள பாடல் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்

💠ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில் திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும்.
 🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🛡️ பாடல் அமைப்பு முறை, பொருள் விளக்கம், சிறப்பு பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

📝 #திருஎழுக்கூற்றிருக்கை:

🛑அமைப்பு :

திரு + எழு + கூற்று + இருக்கை

பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும்  அடுக்கில்
முதல் 7 வரை படிப்படியாக     
           ஒன்று, இரண்டு, ஒன்று,  
                            1  2  1
ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று
                        1  2  3  2  1
என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்
                       1  2  1
இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்
                   1  2  3  2  1
மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்
                1  2  3  4  3  2  1
நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்
            1  2  3  4  5  4  3  2  1
ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி, 
         1  2  3  4  5  6  5  4  3  2  1
ஆறாம் கூற்றிலும், ஏழாம் கூற்றிலும்
   பதிமூன்று அறைகள்  அமைப்பர்
     1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1

🎎இவற்றை சித்திரக்கவி, ரதபந்தம் என்பர்.இது தேர் போன்ற அமைப்பும் 

எண்களைக் கூட்டி பின் ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி, மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. 

அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி
தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும்.

✴️முடிவில் பாடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும்.
              
                        o
                    1  2  1 
                1  2  3  2  1
            1  2  3  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
             ⏫மேலடுக்கு
                    நடு பீடம்
                    கீழடுக்கு ⏬
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
            1  2  3  4  3  2  1
                1  2  3  2  1
                    1  2  1 
                        o
          
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

☸️ திருஞானசம்பந்தர் அருளிய திருமுறையில் வரும் இந்த அமைப்பு பதிகப் பாடல் வரிகள் அமைந்துள்ள முறைமை பற்றியும், பாடல், பொருள், சிறப்பும் விளக்கமும் பற்றி ... ...

முதல் பதிவில்*
முதல் அடுக்கு வரிசையில் அமைந்துள்ள பாடல் வரிகள் 1 மற்றும் 2 பற்றியும்,

இரண்டாவது பதிவில்**
இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
   பாடல்கள் வரிகள் 3 முதல் 5 வரை  
   மற்றும் வரிகள் 6 முதல் 9 வரையிலும்

மூன்றாவது பதிவில்,***
நான்காவது மற்றும் ஐந்தாவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
    பாடல் வரிகள் 10 முதல் 13 வரை
    பாடல் வரிகள் 14 முதல் 19 வரை

நான்காவது பதிவில்****
ஆறவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
     பாடல் வரிகள் 19 முதல் 31வரை

பற்றியும் சிந்தித்தோம்.
  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

📔இனி

✳️ இப்பதிகத்தில் அமைந்துள்ள
பாடல் வரிகள்  32  முதல் 42 வரை ஏழாவது மேலடுக்குவரிசையில் அமைந்துள்ள பாடல் வரிகளின் 

அமைப்பு, பொருள், விளக்கம் பற்றியும் இந்தப் பதிவில் சிந்திப்போம்; வாருங்கள்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

 7️⃣ அடுக்கு : 7
              (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)

☢️ பாடல்: (வரிகள் - 32-42)

ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்.

💠பாடல் அமைப்பு :
          1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1

(1) ஒருமலை எடுத்த

(2) இருதிறல் அரக்கன் விறல் கெடுத்து 
          அருளினை புறவம் புரிந்தனை

(3)  முந்நீர்த் துயின்றோன்

(4) நான்முகன் அறியாப்பண்பொடு 
           நின்றனை சண்பை அமர்ந்தனை

(5) ஐயுறும் அமணரும்

(6) அறுவகைத் தேரரும் ஊழியும்     
          உணராக் காழி அமர்ந்தனை எச்சன்

(7)  ஏழ் இசையோன் கொச்சையை 
            மெச்சினை
(6) ஆறுபதமும்

(5) ஐந்து அமர் கல்வியும் மறைமுதல்

(4) நான்கும்

(3) மூன்று காலமும்தோன்ற நின்றனை

(2) இருமையின் ஒருமையும்

(1) ஒருமையின் பெருமையும்

☣️ பொருள்: (வரிகள் - 32-42)

(1) இராவணன் இமய மலையை எடுத்தான்

 (2) வலிமை-பெருவலிமையுடைய அரக்கன் வெற்றியைக் கெடுத்து, நான் என்ற ஆணவத்தை அழித்து அருளினார்.
சிபி ராஜாவுக்கும், புறவுக்கும் முக்தி கிடைத்த புறவம் ஆகிய சீர்காழியில் இருப்பவர்.

(3) பாற்கடலில் உறங்கும் விஷ்ணு ,
(முந்நீர்த் துயின்றோன்- முந்நீர்(கடல்)
பாற்கடலில் உறங்கும் விஷ்ணு)பிரம்மன்
இவர்கள் அறியமுடியாத ஆற்றலைப் போற்றுகிறது.

(4) நான்கு மறைகளிலும் தோய்ந்தவன்.

(5) ஐந்து எழுத்தாகும் ஞானத்திலும் சிறப்பானவன்.

(6) சமணரும் தேரரும் உணராதவராய் காழியில் வீற்றிருப்பார்.

(7) ஏழ் இசையோன் கொச்சை என்ற காழியில் இருப்பாவர்.

(6) ஆறுபதமும்- ஆறு விதமான விழிப்புநிலைகளை இது குறிக்கிறது. ஆழ்ந்த உறக்கம், துரியம்,துரியாதீதம் முதலியன.

(5) ஐந்து அமர் கல்வியும்- அவர் காலத்தில் ஐந்து வகையான கல்வி ஞானத்தில் விளங்கியவர்.

(4) நான்கு மறைகளையும் அருளியவர்.

(3)கடந்த/நிகழ்எ/திர் காலம் என்ற முக்காலத்தையும் தோன்ற வைத்து நின்றவர்.

(2) இறைவன் வேறு, நாம் வேறு என்பது ஒரு கொள்கை.அனைத்தும் ப்ரஹ்மம் என்பது அத்வைதக்கொள்கை. 

(1) எல்லாமாக, எல்லா உயிர்களுமாக பிரபஞ்சமாக நீக்கமற நிறைந்த ஒருமை இறைவனின் பெருமையும்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘

♦️மேலும் இவ்விடத்தில்
மிகப் பழைய உரை ஆசிரியர்கள்  உரைகளின் சிறப்புகளையும் சுருக்கமாக சிந்திப்போம்.
🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘
🛐குறிப்புரையும், விளக்கமும்: (மிகப் பழமையான நூல்களில் உள்ள விளக்கம்)

வரிசை - 7: வரிகள்: 32 - 42

ஒப்பற்ற கயிலை மலையைப் பெயர்த்த பெருந்திறல் படைத்த இராவணனின் வலிமையை அழித்தாய்.
புறவம் என்னும் தலத்தை விரும்பினாய்,
கடலிடைத் துயிலும் திருமால் நான்முகன் ஆகியோர் அறிய முடியாத பண்பினை உடையாய்.
சண்பையை விரும்பினாய்.
ஐயுறும் சமணரும் அறுவகையான பிரிவுகளை உடையபுத்தரும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்கக் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளாய்.
வேள்வி செய்வோனாகிய ஏழிசையோன் வழிபட்ட கொச்சை வயத்தை விரும்பி வாழ்கின்றாய்,
ஆறு பதங்கள், ஐந்து வகைக் கல்வி, நால் வேதம், மூன்று, காலம், ஆகியன தோன்ற நிற்கும் மூர்த்தியாயினாய்,
சத்தி சிவம் ஆகிய இரண்டும் ஓருருவமாய் விளங்கும் தன்மையையும் இவ்விரண்டு நிலையில் சிவமாய் ஒன்றாய் இலங்கும் தன்மையையும்,
பெருமையுடையது.

🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘
பழைய உரை ஆசிரியர்கள் தந்த குறிப்புரை என்ற விளக்க உரைகளின் சுருக்கம். 
🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘

வரிசை - 7: வரிகள்: 32 - 42

பாடல் வரி: 32

பெருமையுள்ள கயிலாயம் என்னும் பேரையுடைத்தாய் உனக்கே ஆலயமாயிருப்பதொரு வெள்ளிமலையை எடுத்த பெரிய புசபலங்கொண்ட இராவணனுடைய கர்வத்தைக் கெடுத்தருளினை.

பாடல் வரி: 33

🔘தலப் பெருமை:

புறவும்:

பிர்மரிஷி, கௌதமரிஷியை நோக்கி நீ ஸ்திரீபோகத்தைக்கைவிடாமல் இருக்கின்றவன்  என்று அவமதிக்க,   கவுதமரிஷியும் பிரசாபதி பகவானைப் பார்த்து நீ புறா என்னும் ஒரு பக்ஷியாய் நரமாமிசம் புசிப்பாயாக என்று சபித்தார்.
பிரசாபதியும் ஒரு புறாவாய்ப் போய்ப் பலவிடத்தினும் நரமாமிசம் புசிக்கையிலே;    ஒரு நாள் மாமிசந்தேடிச் சோழவம்சத்திலே சிபி என்னும் சக்கரவர்த்தி பெரும் கொடையாளி என தெரிந்து  இந்தப் புறாவாகிய ரிஷியும் போய் ராசாவைப்பார்த்து எனக்கு அதிக தாகமாயிருக்கின்றது சற்று நரமாமிசம் இடவல்லையோ என்ன ராசாவும் உனக்கு எவ்வளவு மாமிசம் வேண்டும் எனப் புறாவும், உன்சரீரத்திலே ஒன்று பாதி தரவேண்டும் என்று கேட்க,  ராசாவும் தன் உடலின்  பாதியை அரிந்தி தந்திட அது புறாவுக்கு நிறையப் போதாமல், முழு உடலையும் தர முன்வந்தார் ராஜா.
இதனால் புறாவாகிய மகரிஷி 
பரமேசுவரனை வேண்டி சீர்காழி தலம் வந்து தவம் செய்தார். ஈசனும் தன் சரீரத்தைப் புறாவிற்காக தானம் செய்யவந்த சிபிச்சக்கரவர்த்திக்கு உடலும், அருளும் தந்து,  புறாவின் சாபத்தையும் நீக்கி வரம் தந்தருளியது.
இதனால் இப்பதிக்கு புறவம் என்ற பெயர்.

பாடல் வரி: 34

ஆற்றுநீர் வேற்றுநீர் ஊற்றுநீர் என்று சொல்லப்பட்ட முந்நீராகிய சமுத்திரத்திலே துயிலாநின்ற நாராயணனும் நான்முகத்தினையுடைய பிர்மாவும் அடியும் முடியும் தேடற்கு அரிதாய் நின்ற பண்பினையுடையையாய் எழுந்தருளியிருந்த இறைவன்.

பாடல் வரி: 35

🔘தலப் பெருமை:

சண்பை:

துர்வாச மகரிஷி ஆசிரமத்தில், கிருஷ்ண அவதார காலத்தில், யாதவ சிறுவர்கள் ரிஷியை கேலி செய்ய எண்ணி 
 ஒருவனைக் கர்ப்பிணியாகப் பாவித்துச்சென்று அவள் பெறுவது ஆணோ பெண்ணோ என்று அந்த ரிஷியைக் கேட்க அவர் கோபித்து இவள் பெறுவது ஆணுமல்ல பெண்ணுமல்ல உங்கள் வமிசத்தாரைக் கொல்ல, ஒரு இருப்புலக்கை பிறக்கக்கடவதென்று சபித்து விடுகிறார்.  இதன்படி பிறந்த இருப்புலக்கையை கிருஷ்ணர் பொடியாக்கி சமுத்திரத்தில் கலந்துவிட செய்துவிடுகிறார்.  சமுத்திரத்தில் உள்ள 
ஒரு வேப்பம் விதைப் பிரமாணமுள்ள இரும்பை ஒரு மீன் விழுங்கி ஒரு வலைக்காரன் கையிலே அகப்பட்டது.

அதன் வயிற்றில் கிடந்த இரும்பைத் தன் அம்புத் தலையிலே வைத்தான். மற்றுஞ் சமுத்திரத்திற்போட்ட இரும்புப் பொடிகளெல்லாம் அலையுடனே வந்து கரைசேர்ந்து சண்பையாக முளைத்துக் கதிராய் நின்ற இடத்தில்;
யாதவர்கள் விளையாடி வருவோமென்று இரண்டு வகையாகப் பிரிந்து சென்று அந்தச் சண்பைக்கதிரைப் பிடுங்கி எறிந்துகொண்டு அதனாலே பட்டுவிழுந்தார்கள்.

இதைக் கிருஷ்ணன் கேட்டு இதனாலே நமக்கு மரணமாயிருக்குமென்று ஊகித்து ஆலின்மேலே ஒரு இலையிலே யோகாசனமாக ஒரு பாதத்தை மடித்து ஒரு பாதத்தைத் தூக்கி அமர்ந்திருக்கிற சமயத்திலே 

அந்த மீன்வேடன் வேட்டைக்கு வருகிறபோது தூக்கிய பாதத்தை ஒரு செம்பருந்து இருக்கிறதாகப் ஊகித்து அம்பைத் தொடுத்தெய்யக் கிருஷ்ணனும் பட்டுப் பரமபதத்தை அடைந்தான். 

இந்தத் சாபதோஷம் துர்வாச மகரிஷியைச்சென்று நலிகையாலே இந்தத் தோஷத்தை நீக்கப் பரமேசுவரனை நோக்கி தவம் செய்து

 துர்வாச மகரிஷிக்குச் சண்பை சாபத்தினாலுள்ள தோஷத்தை நீக்கியருளுகிறார்.
இதனால் துர்வா கெமுனிவருக்கு சண்பைமுனி என்கின்ற நாமத்தையும் தரித்தருளினார்.  துர்வாசரும் சீர்காழி பதியில் தவம் செய்ததால் சண்பை என்றே தலத்தின் பெயராகிறது.

பாடல் வரி 36
ஐயுறும் அமணரும் அறுவகைத்தேரரும் ஊழியும் உணராக் காழியமர்ந்தனை - என்றது, 

🔘தலப் பெருமை:
காழி:

வேதாகம புராண சாத்திரங்களிலுள்ள பலத்தை இல்லை என்று ஐயமுற்றிருக்கின்ற அமணரும்
 கைப்புப் - புளிப்புக் - கார்ப்பு - உவர்ப்பு - துவர்ப்புத் - தித்திப்பு என்கின்ற அறுவகை ரசங்களையும் 
உச்சிக்கு முன்னே புசிக்கின்றதே பொருளென்றிருக்கின்ற புத்தரும்,
ஊழிக்காலத்தும் தங்கள் அறியாமையால்  உணராமல் இருந்தவர்கள்.
மிகவும் காளிதமான விஷத்தையுடைய காளி என்கின்ற நாகம் பூசிக்கையாலே 
சீகாழி எனப்படுகிறது.

பாடல் வரி: 38
 ஏழிசையோன்

ஏழிசை : குரல் - துத்தம் - கைக்கிளை - உழை - இளி - விளரி - தாரம் என்பது ஏழிசை..
குரல் =சங்கத்தொனி, 
துத்தம் = ஆண்மீன்பிளிறு,
கைக்கிளை= குதிரையின்குரல். 
உழை = மானின்குரல், 
இளி = மயிலின்குரல்
விளரி = கடலோசை, 
தாரம் = காடையின்குரல் 

இவ்வகையான நாதங்களையும் மெச்சினை,

🔘தலப் பெருமை:
கொச்சை: 

பராசரப் பிரமரிஷியானவர் , கோபத்தினால் மற்ற ரிஷிகள் எல்லோரையும் முறையான விரதங் கொள்ளார் என்று தூஷனம் செய்துவிட,

 அவர்களும் நீ மச்சகந்தியைப் புணர்ந்து மச்சகந்தமும் உன்னைப்பற்றி,விடாமல் அனுபவிப்பாயென்று சபிக்கையாலே அந்தச் சாபத்தின்படி போய் மச்சகந்தியைப் புணர்ந்து அந்தத் துர்க்கந்தம் பற்றியது.
இதனால் பராசர முனிவர் சீர்காழிப் பதிவந்து தவம் செய்தார். ஈசன் இவர் மேண பற்றிருந்த துர்க்கந்தத்தையும் போக்கிச் சுகந்தத்தையும் தந்தருளிக் கொச்சை என்கின்ற சந்தான நாமத்தை அருளியதால், இத்தலம் கொச்சை என்கின்ற சிறப்படைந்தது. 

பாடல் வரிகள் : 39-41

பிரத்தி - பிரத்தியா காரம் - துல்லியம் - துல்லியாதீதம் - வித்தை - அவித்தை என்கின்ற ஆறுபதங்களும்,

 ஆசு - மதுரம் - சித்திரம் - வித்தாரம் - விரையம் என்கின்ற ஐந்தும்

,இருக்கு - யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற நாலுவேதங்களும், 

செல்காலம் - வருங்காலம் - நிகழ்காலம் என்கின்ற மூன்று காலம்
தோன்றாநின்ற திரிமூர்த்தியாயினை 

சத்திசிவங்களா யிருந்துள்ள இரண்டும் ஒன்றாய் அர்த்தநாரீசுவரவடிவமாய் இருந்துள்ளார் என்பதாகும்.

பாடல் வரி: 42
ஒருமையின் பெருமை = தானே ஒரு எல்லையில்லாத சிவமாயிருந்துள்ளதை உணர்த்தும்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

💥இப்பதிக சிறப்பு:

⏺️சிவபெருமானின் பல்வேறு பராக்கிரமங்களையும் சிறப்புகளையும் மனம் ஒன்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்களையும் குறிப்பால் உணர்த்தி யருயது.

🔹இத்தலத்தின் பெருமையையும், பல்வேறு சிறப்புகளையும் தல புராணங்களை உணர்த்தி எடுத்துக் கூறியது.

🔸சிவபாத இருதயர், திருஞானசம்பந்தர் ஓதிவரும் திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்வதை நியமமாகக் கொண்டிருந்தார். பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில் தம் தந்தையார் இடர்ப்படுதலைக் கண்ட திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை அருளி இதனை ஓதி வந்தாலே அனைத்துத் திருப்பதிகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக் கூறினார் என்பர்.
  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

இது போன்று ஒவ்வொரு அடுக்கிலும் செந்தமிழ் பாக்களை அடுக்கி இந்த பாடல் அமைகிறது இப்பாடல்களின் அமைப்பு பொருள், விளக்கம், சிறப்புக்களை பதிவின் நீளம் கருதி தொடர்ந்துவரும் பதிவுகளில் சிந்திப்போம்.
  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
சிந்தனையும் தொகுப்பு ஆக்கம்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பதிவு ஒன்று : முதல் வரிசை: வரி 1, 2:
https://m.facebook.com/story.php?story_fbid=4051843124890914&id=100001957991710
பதிவு : 2, வரிசை 2,3 பாடல்வரி: 3 - 9:
https://m.facebook.com/story.php?story_fbid=4066646166743943&id=100001957991710
பதிவு : 3 ல் வரிசை 4, 5 பாடல் வரிகள்:
    பாடல் வரிகள் 10 முதல் 13 வரை
    பாடல் வரிகள் 14 முதல் 19 வரை
https://m.facebook.com/story.php?story_fbid=4084714111603815&id=100001957991710
பதிவு : 4 ல் வரிசை 6, 
     பாடல் வரிகள் 19 முதல் 31வரை
https://m.facebook.com/story.php?story_fbid=4093885337353359&id=100001957991710

திருஎழுக்கூற்றிருக்கை பகுதி : நான்கு

திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#திருஎழுகூற்றிருக்கை
பதிவு : நான்கு
முதலாம் திருமுறை: 01.128:
வரிசை 6 வரிகள் 19-31 மற்றும்
வரிசை 7 வரிகள் 32 - 42 வரை.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பக்தியும் தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்...
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
❇️  நாம் இந்த பதிவுகளில் #திருஎழுக்கூற்றிருக்கை என்ற அமைப்பில் உள்ள பாடல் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்

💠ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில் திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🛡️ பாடல் அமைப்பு முறை, பொருள் விளக்கம், சிறப்பு பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

📝 #திருஎழுக்கூற்றிருக்கை:

🛑அமைப்பு :

திரு + எழு + கூற்று + இருக்கை

பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும்  அடுக்கில்
முதல் 7 வரை படிப்படியாக     
           ஒன்று, இரண்டு, ஒன்று,  
                            1  2  1
ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று
                        1  2  3  2  1
என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்
                       1  2  1
இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்
                   1  2  3  2  1
மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்
                1  2  3  4  3  2  1
நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்
            1  2  3  4  5  4  3  2  1
ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி, 
         1  2  3  4  5  6  5  4  3  2  1
ஆறாம் கூற்றிலும், ஏழாம் கூற்றிலும்
   பதிமூன்று அறைகள்  அமைப்பர்
     1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1

🎎இவற்றை சித்திரக்கவி, ரதபந்தம் என்பர்.இது தேர் போன்ற அமைப்பும் 

எண்களைக் கூட்டி பின் ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி, மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. 

அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி
தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும்.

✴️முடிவில் பாடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும்.
              
                        o
                    1  2  1 
                1  2  3  2  1
            1  2  3  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
             ⏫மேலடுக்கு
                    நடு பீடம்
                    கீழடுக்கு ⏬
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
            1  2  3  4  3  2  1
                1  2  3  2  1
                    1  2  1 
                        o
          
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

☸️ திருஞானசம்பந்தர் அருளிய திருமுறையில் வரும் இந்த அமைப்பு பதிகப் பாடல் வரிகள் அமைந்துள்ள முறைமை பற்றியும், பாடல், பொருள், சிறப்பும் விளக்கமும் பற்றி ... ...

முதல் பதிவில்*
முதல் அடுக்கு வரிசையில் அமைந்துள்ள பாடல் வரிகள் 1 மற்றும் 2 பற்றியும்,

இரண்டாவது பதிவில்**
இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
   பாடல்கள் வரிகள் 3 முதல் 5 வரை  
   மற்றும் வரிகள் 6 முதல் 9 வரையிலும்

மூன்றாவது பதிவில்,***
நான்காவது மற்றும் ஐந்தாவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
    பாடல் வரிகள் 10 முதல் 13 வரை
    பாடல் வரிகள் 14 முதல் 19 வரை
பற்றியும் சிந்தித்தோம்.

📔இனி

✳️ இப்பதிகத்தில் அமைந்துள்ள பாடல் வரிகள் .. 19 முதல் 31வரையுள்ள 6வது அடுக்கு வரிசையில் அமைந்த பாடல்கள்:

அமைப்பு, பொருள், விளக்கம் பற்றியும் இந்தப் பதிவில் சிந்திப்போம்; வாருங்கள்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

6️⃣மேல் அடுக்கு : 6
             (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)

☢️ பாடல் : (வரிகள்: ...19- 31)

... ... ..... ....       ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நான்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆரங்கம்முதல்எழுத் தோதி,
வரன்முறை பயின்றுஎழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்குநால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;
வரபுரம் என்றுஉணர் சிரபுரத்து உறைந்தனை;

💠பாடல் அமைப்பு : 
              1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1

(1) ஒருங்கிய மனத்தோடு 
(2) இரு பிறப்பு ஓர்ந்து
(3) முப்பொழுது குறை முடித்து
(4) நால்மறை ஓதி
(5) ஐவகை வேள்வி அமைத்து,
(6) ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி, வரல் 
            முறை பயின்று,
(7) எழுவான்தனை வளர்க்கும்
             பிரமபுரம் பேணினை
(6) அறுபதம் முரலும் வேணுபுரம்    
            விரும்பினை இகலிய
(5) அமைந்து உணர் புகலி அமர்ந்தனை
            பொங்கு 
(4) நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை
(3) மூஉலகும் புதைய, மேல் மிதந்த
            தோணிபுரத்து உறைந்தனை
(2) இருநிதி வாய்ந்த பூந்தராய் 
            ஏய்ந்தனை
 (1) வரபுரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை

☣️ பொருள் :(வரிகள்: ...19- 31)

மேல் தட்டு 6: (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)

(1) மனதை ஒருநிலைப்படுத்தி ,

(2) அன்னையின் கருவில் ஒரு முறையும், பூணூல் அணியும்போது ஒரு முறையும் என அந்தணர்களுக்கு இப்பிறப்பு என்பதை சொல்கிறார் சம்பந்தர்.

 (3) மூன்று பொழுதும் முறையான கிரியைகளை செய்து (சந்தியா வந்தனம்)

(4) நான்கு வேதங்களாகிய
இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை ஓதி,

(5) ஐவகை வேள்வியாகிய சிவபூசை, குருபூசை, மகேஸ்வர பூசை, பிராமண உபசரிப்பு, அதிதி உபசாரம், ஆகியன ஆற்றி,

(6)  ஷடங்கம் எனப்படும் வேதத்தின் ஆறு அங்கங்களாகிய  சந்தசு, கற்பம், வியாகரணம், சிட்சை, சோதிடம், நிருத்தி ஆகியவற்றின் பிரதானமான முதல் எழுத்தாகிய பிரணவத்தை ஓதியும்
எப்படி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற சொல்முறை பயின்று  

(7) அந்தனர்கள் வேள்வியில் வளர்க்கும் அக்கினி பிழம்பு எழும் சீர்காழி நகரில் விரும்பி இருப்பவர் இறைவன்.

(6) அறுபதம்(வண்டு) ரீங்காரமிடும் சீர்காழியை விரும்பினை  

(5) நரகர்கள் தன்னைக் கொடியவன் என்று இகழும் பழி நீங்க யமன் வழிபட்ட சீர்காழி நகரில் அமர்ந்தவர்.

(4) பொங்கும் நால்கடல் சூழ் வெங்குரு நகரில் விளங்கும்

(3) மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை-

(2) இருநிதி வாய்ந்தந்தராய் ஏய்ந்தனை-சங்கநிதி,பதுமதி என்ற இருநிதிகளோடு பொருந்தியவராக இறைவன் இருக்கிறார்

 (1) அமுதம் பெற வந்த ஒரு அரக்கனின் சிரம் கொய்யப்பட்டு பின் வரம்பெற்ற சிரபுரம் சீர்காழியாம்.

🔘பொருள் விளக்கம்::(வரிகள்: ...19- 31)

வரிசை - 6

ஒருமித்த மனத்தோடு, இரு பிறப்பினையும் உணர்ந்து முச்சந்திகளிலும் செய்யத்தக்க கடன்களை ஆற்றி நான்மறைகளை ஓதி ஐவகை வேள்விகளையும் செய்து ஆறு அங்கங்களையும் ஓதி, பிரணவத்தை உச்சரித்து தேவர்களுக்கு அவி கொடுத்து மழை பெய்விக்கும் அந்தணர் வாழும் பிரமபுரத்தை விரும்பினாய்,

ஆறுகால்களை உடைய வண்டுகள் இசைபாடும் பொழில் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பினாய்,

தேவர்கள் புகலிடம் என்று கருதி வாழ்ந்த புகலியை விரும்பினாய். 

நீர் மிகுந்த கடல் சூழ்ந்த வெங்குரு என்னும் தலத்தை விரும்பினாய்.

மூவுலகும் நீரில் அழுந்தவும் தான் அழுந்தாது மிதந்த தோணிபுரத்தில் தங்கினாய்.

வழங்கக் குறையாத செல்வவளம் மிக்க பூந்தராயில் எழுந்தருளினாய்.

வரந்தருவதான சிரபுரத்தில் உறைந்தாய்.

🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘

♦️மேலும் இவ்விடத்தில்
மிகப் பழைய உரை ஆசிரியர்கள்  உரைகளின் சிறப்புகளையும் சுருக்கமாக சிந்திப்போம்.
🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘
🛐குறிப்புரையும், விளக்கமும்: (மிகப் பழமையான நூல்களில் உள்ள விளக்கம்)

பாடல்வரிகள்: 19-31

ஒருங்கிய மனத்தோடு இருபிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறைமுடித்து நான்மறை ஓதி ஐவகை வேள்வியமைத்து ஆறங்க முதலெழுத்தோதி வரன்முறை பயின்றெழுவான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை - என்றது, 

ஒருங்கிய மனம்: ஆகாரம் - நித்திரை - பயம் - மைதுனம் இவற்றில் செல்லும் மனத்தைப் இறைவன் பாதங்களிலே ஒருங்கி.

இரு பிறப்பு: முன்பு தாம் மாதாவின் உதரத்திலே பிறந்த பிறப்பும், உபநயனத்தின் பின்பு உண்டான பிறப்புமாகிய இரண்டையும் விசாரித்து

முப்பொழுதும்: மூன்று சந்தியும், செபதர்ப்பண - அனுட்டான - ஓமங்களையுமுடிப்பது

நான் மறை: இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்கின்ற நாலு வேதங்களையும் ஓதி,

5 வகை வேள்வி : சிவபூசை, குருபூசை, மகேசுரபூசை, பிராமண போசனம், அதிதி புசிப்பு என்கின்ற ஐந்து வேள்விகள்.

 6 அங்கங்கள்: ஓதல் - ஓதுவித்தல் - வேட்டல். வேட்பித்தல் - ஈதல் - ஏற்றல் என்னும் ஆறங்கங்கள்.

பிரம்மபுரம் :இவைகளுக்கு முதலாயிருந்துள்ள பிரணவத்தையும் உச்சரித்துத் தேவலோகத்திலுள்ள தேவர்களுக்கும் அவிகொடுத்து மழையைப் பெய்விக்கும் பிராமணராலே பூசிக்கப்பட்ட பிரமபுரம்.

ஆறங்கமாவன மந்திரம் - வியாகரணம் - நிகண்டு - சந்தோபிசிதம் - நிருத்தம் - சோதிடம் என இவ்வாறு வழங்கப்படு கின்ற முறையொன்று.

🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘

♦️மேலும் இவ்விடத்தில் சீர்காழி பதியின் பல பெயர்களும் சிறப்புகளும் எடுத்துரைக்கிறார்கள் மிகப் பழைய உரை ஆசிரியர்கள் அவற்றின் சுருக்கம் :

📝சீர்காழிப்பதியின் பல பெயர்களும் அதன் தலப்பெருமைகளும்:
🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘

🔘தலப் பெருமை:
❄️வேணுபுரம்:

⏺️அறுகாலுடைய வண்டுகளிசைபாடும் பொழில்சூழ்ந்த வேணுபுரம் என்பது,இந்திரன் இறைவனை வேண்டியதால்,  கணபதி அழைத்து, கஜமுகாசுரனை தன் வலக்கொம்பை முறித்தெறிந்து அவனையுங்கொன்று வேணு என்கின்ற இந்திரனையும் சுவர்க்கலோகத்திலே குடிபுக வைத்தது.

🔘தலப் பெருமை:
☸️புகலி :

🔹தேவர்கள் முன்பு சூரபத்மனால் துன்புறுத்தப்பட ஈசனை புகலிடமென்று புகுதலால், ஈசன் சுப்ரமணியரை அழைத்து அரக்கனை வெற்றி கொண்டு தேவர்களை புகலியில் அமர வைத்ததனால்  திருப்புகலி என்றும் பெயர்.

🔘தலப் பெருமை:
🔯வெங்குரு:

🔼பொங்கு நாற்கடல் சூழ்ந்த வெங்குரு நகரில் தேவகுருவாகிய பிரகஸ்பதியின் கர்வத்தை அடக்கி பின் அவர் தவம் செய்து வரம் பெற்ற இடம் என்பதால் வெங்குரு என்றும் பெயர் பெற்றது.

🔘தலப் பெருமை:
✡️தோணிபுரம் :

🔽பாணி என்கின்ற சலம் பிரளயமாய்ப் பூமி அந்தரம் சுவர்க்கம் மூன்று லோகங்களையும் புதைப்ப அதைச்சங்காரம் பண்ணியருளி அதின்மேலே தோணிபோல மிதந்த வெங்குருவாகிய தோணிபுரம் என்றதே

🔘தலப் பெருமை:
⚛️பூந்தராய் :

⏺️வேண்டினார் வேண்டியது கொடுத்துத் தொலைவறச் சங்கநிதி பத்மநிதி என்று சொல்லப்பட்ட இரண்டு நிதிகளும் பூவும் தராயும் பூசிக்கையாலே திருப்பூந்தராயென்னப்பட்ட சீர்காழி தலம்.

🔘தலப் பெருமை:
☮️வரபுரம் :

🔸வேண்டும் வரத்தைத் தருவதான புரமென்றுணரத்தக்க சிரபுரமென்பதால்
இப்பதிக்கு வரபுரம் என்று பெயர்.

🔘தலப் பெருமை:
✳️சிரபுரம் :

🔹தேவர்களும் பிர்ம விஷ்ணுக்களுமாகக்கூடி அமிர்தத்தையுண்டாக்கித் தேவர்களை இருத்தி விஷ்ணுபகவான் அமிர்தம் படைத்துக்கொண்டு வருகிற வேளையில் ராகு கேது என்கிற இரண்டு பாம்புங்கூடிக் கரந்திருந்து அமிர்தபானம் பண்ணுவதாக இருப்பதுகண்டு விஷ்ணு பகவான் அமிர்தம் படைத்துவருகின்ற சட்டுவத்தைக் கொண்டு தலையற வெட்டுகையால் உடலிழந்து நாகமிரண்டும் நம்முடல் தரக்கடவான் பரமேசுவரனொழிய வேறேயில்லை என்று திருப்பூந்தராயிலே வந்து பரமேசுவரனை நோக்கி இரண்டு சிரங்களும் பூசித்ததால் சிரபுரம் என்று பெயருண்டாயது.
  
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

💥இப்பதிக சிறப்பு:

⏺️சிவபெருமானின் பல்வேறு பராக்கிரமங்களையும் சிறப்புகளையும் மனம் ஒன்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்களையும் குறிப்பால் உணர்த்தி யருயது.

🔹இத்தலத்தின் பெருமையையும், பல்வேறு சிறப்புகளையும் தல புராணங்களை உணர்த்தி எடுத்துக் கூறியது.

🔸சிவபாத இருதயர், திருஞானசம்பந்தர் ஓதிவரும் திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்வதை நியமமாகக் கொண்டிருந்தார். பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில் தம் தந்தையார் இடர்ப்படுதலைக் கண்ட திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை அருளி இதனை ஓதி வந்தாலே அனைத்துத் திருப்பதிகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக் கூறினார் என்பர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

இது போன்று ஒவ்வொரு அடுக்கிலும் செந்தமிழ் பாக்களை அடுக்கி இந்த பாடல் அமைகிறது இப்பாடல்களின் அமைப்பு பொருள், விளக்கம், சிறப்புக்களை பதிவின் நீளம் கருதி தொடர்ந்துவரும் பதிவுகளில் சிந்திப்போம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
சிந்தனையும் தொகுப்பு ஆக்கம்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பதிவு ஒன்று : முதல் வரிசை: வரி 1, 2:
https://m.facebook.com/story.php?story_fbid=4051843124890914&id=100001957991710
பதிவு : 2, வரிசை 2,3 பாடல்வரி: 3 - 9:
https://m.facebook.com/story.php?story_fbid=4066646166743943&id=100001957991710
பதிவு : 3 ல் வரிசை 4, 5 பாடல் வரிகள்:
    பாடல் வரிகள் 10 முதல் 13 வரை
    பாடல் வரிகள் 14 முதல் 19 வரை
https://m.facebook.com/story.php?story_fbid=4084714111603815&id=100001957991710

திருஎழுக்கூற்றிருக்கை பகுதி : மூன்று

திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#திருஎழுகூற்றிருக்கை
பதிவு : மூன்று 
(திருமுறை: 01.128: வரிகள்10முதல்19 வரை வரிசை 4,5)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பக்தியும் தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்...
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
❇️  நாம் இந்த பதிவுகளில் #திருஎழுக்கூற்றிருக்கை என்ற அமைப்பில் உள்ள பாடல் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்

💠ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில் திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🛡️ பாடல் அமைப்பு முறை, பொருள் விளக்கம், சிறப்பு பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

📝 #திருஎழுக்கூற்றிருக்கை:

🛑அமைப்பு :

திரு + எழு + கூற்று + இருக்கை

பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும்  அடுக்கில்
முதல் 7 வரை படிப்படியாக     
           ஒன்று, இரண்டு, ஒன்று,  
                            1  2  1
ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று
                        1  2  3  2  1
என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்
                       1  2  1
இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்
                   1  2  3  2  1
மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்
                1  2  3  4  3  2  1
நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்
            1  2  3  4  5  4  3  2  1
ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி, 
         1  2  3  4  5  6  5  4  3  2  1
ஆறாம் கூற்றிலும் ஏழாம் கூற்றிலும்     
    பதிமூன்று அறைகள் அமைப்பர்.
     1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
     1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
🎎இவற்றை சித்திரக்கவி, ரதபந்தம் என்பர்.இது தேர் போன்ற அமைப்பும் 

எண்களைக் கூட்டி பின் ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி, மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. 

அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி
தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும்.

✴️முடிவில் பாடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும்.
              
                        o
                    1  2  1 
                1  2  3  2  1
            1  2  3  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
             ⏫மேலடுக்கு
                    நடு பீடம்
                    கீழடுக்கு ⏬
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
            1  2  3  4  3  2  1
                1  2  3  2  1
                    1  2  1 
                        o
          

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

☸️ திருஞானசம்பந்தர் அருளிய திருமுறையில் வரும் இந்த அமைப்பு பதிகப் பாடல் வரிகள் அமைந்துள்ள முறைமை பற்றியும், பாடல், பொருள், சிறப்பும் விளக்கமும் பற்றி ... ...

முதல் பதிவில்*
முதல் அடுக்கு வரிசையில் அமைந்துள்ள பாடல் வரிகள் 1 மற்றும் 2 பற்றியும்,

இரண்டாவது பதிவில்**
இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
   பாடல்கள் வரிகள் 3 முதல் 5 வரை  
   மற்றும் வரிகள் 6 முதல் 9 வரையிலும்
   பற்றியும் சிந்தித்தோம்.

📔இனி

✳️ இப்பதிகத்தில் அமைந்துள்ள பாடல் வரிகள் 10 முதல் 13 வரையுள்ள 4வது அடுக்கு வரிசையில் அமைந்த பாடல்கள்:
மற்றும், 
பாடல் வரிகள் 14 முதல் 19 வரை ஐந்தாவது மேலடுக்குவரிசையில் அமைந்துள்ள பாடல் வரிகளின் 
அமைப்பு, பொருள், விளக்கம் பற்றியும் இந்தப் பதிவில் சிந்திப்போம்; வாருங்கள்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

4️⃣மேல் அடுக்கு: 4
                  (1-2-3-4-5-4-3-2-1)

☢️ பாடல்: (வரிகள் - 10 -13)

ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடுஅழித்து உரித்தனை.

💠பாடல் அமைப்பு : 
                  1  2  3  4  5  4  3  2  1
(1) ஒருதாள்
(2)  ஈரயின்
(3)  மூவிலைச் சூலம்,
(4)  நால்கால் மான்மறி
(5) ஐந்தலை அரவம் ஏந்திணை காய்ந்த

(4)  நால்வாய்
(3) மும்மதத்து
(2) இரு கோட்டு
(1) ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை.

☣️ பொருள் :

✴️வரிசை 4: பாடல் வரிகள்: 10 - 13:

(1)  திருவடி 
ஒருதாள்= தாள் (தண்டு) இறைவனின் திருவடி தாமரையை சுட்டுகிறது.  

(2) வாள், மழு போன்ற கூர்மையான இரும்பு ஆயுதம் ஏந்தியவர்.

ஈராயின் = ஈர்க்கும் கூர்மையுடையவை.
ஈர் அயில்= வாள், மழு (கோடரி போன்ற) அயில்(இரும்பினால் ஆனது. 

(3) திரி சூலம் ஏந்தியவர்

மூ இலைச் சூலம்= திரி சூலம் 

(4)  நான்கு வேதங்களும் இறைவனின் கையில் இருக்கும் மானின் கால்களாக இருக்கின்றன.

நால்வாய்-தொங்குகின்ற வாய்.
நால்கால் மான்மறி= நான்கு வேதங்களும் இறைவனின் கையில் இருக்கும் மானின் கால்களாக இருக்கின்றன.
மறி= மான் குட்டி

(5)  பஞ்சாட்சரமாகிய ஐந்து தலைகளையும் உடைய நாகத்தை இறைவன் கழுத்தில் ஏந்தி இருக்கிறார்.

ஐந்தலை அரவம் ஏந்தினை= ஐந்து தலைகளையும் உடைய நாகத்தை இறைவன் கழுத்தில் ஏந்தி இருக்கிறார். ஐந்து தலைகளும் நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்தை சுட்டுகின்றன.

(4)  நீர் வற்றித் தொங்கும் வாய் உடைய 
(3)  (மும்) மதம் பொருந்திய,
(2)   இரு தந்தங்களையுடைய,
(1)  ஒரு யானையை உரித்தது.

நால்வாய்-தொங்குகின்ற வாய்.

🔰பொருள் விளக்கம்:

✴️வரிசை 4: பாடல் வரிகள்: 10 - 13:

⏺️ஒரு தாளையும், ஈர்க்கும் கூர்மை கொண்ட மூன்று இலைகளை உடைய சூலத்தையும், நான்கு வேதங்களையும் கால்களாக உடைய மான் கன்றையும், ஐந்து தலை அரவமும் ஏந்தியவர்.

⏺️சினந்து வந்த, நீர் வற்றித் தொங்கும் வாயையும் இரு தந்தங்களையும் கொண்ட ஒப்பற்ற யானையை அதன் வலி குன்றுமாறு அழித்து அதன் தோலை உரித்துப் போர்த்தவன்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

5️⃣மேல் அடுக்கு : 5
                (1-2-3-4-5-6-5-4-3-2-1)

☢️ பாடல் : (வரிகள்: 14-19...)

ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்சக்
கொன்று தலத்துறு அவுணரை அறுத்தனை;
ஐம்புலன்  நால்ஆம் அந்தக் கரணம்,
முக்குணம் இருவலி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ... ... ....  ....   ....

💠பாடல் அமைப்பு : 
                1-2-3-4-5-6-5-4-3-2-1
(1) ஒரு தனு 
(2) இருகால் வளையவாங்கி,
(3) முப்புரத்தோடு 
(4) நானிலம் 
(5) அஞ்சக் கொன்று தலத்து உறு    
            அவுணரை 
(6) அறுத்தனை 
(5) ஐம்புலன்,
(4) நால் ஆம் அந்தக்கரணம், 
(3) முக்குணம்,
(2) இருவலி, 
(1) ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை 

☣️ பொருள் : (வரிகள்: 14-19...)

(1)  மேருமலையை
(2) வில்லாகக் கொண்டு வளைய வாங்கி
(3) முப்புரங்களையும் 
(4) உலகம்
(5) அஞ்சி வியக்குமாறு அழித்து 
           அதிலிருந்த தீய அசுரர்களை 
(6) அழித்தவர்.
(5) மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய    
           ஐம்புலன்களையும்,
(4) அந்தக் கரணங்கள் நான்கும்,
(3) முக்குணங்களாகிய (சாத்துவிகம், 
           ரஜோகுணம், தாமோ குணம் ஆகிய 
           முக்குணங்களும்,
(2) இருவகையான (உள்/வெளி மூச்சு) 
           காற்றும் ஒருங்கி
(1)  ஒன்றிய மனத்தினராய், மேவிய 
           வானோர் ஏத்த நின்ற ஈசன்.

🔰பொருள்  விளக்கம்:
✴️ பாடல் வரிகள்: 14-19...

⏺️மேருமலையை ஒப்பற்ற வில்லாக்கிக் கொண்டு வளையுமாறு செய்து உலகம் அஞ்சி வியக்குமாறு  கணை தொடுத்து முப்புரத்தசுரர்களை இவ்வுலகம் அஞ்சுமாறு கொன்று தரையில் அவர்கள் இறந்து கிடக்குமாறு அழித்தவர்.

⏺️மெய், வாய்,கண், மூக்கு, செவியாகிய ஐம்புலன்களையும், நான்கு அந்தக் கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் மற்றும்முக்குணங்களாகிய ரஜோ குணம், தாமோ குணம், ஆகியவற்றையும், மேலும், பிராணன், அபானன் என்றும் இரு வாயுக்களையும் ஒடுக்கியவர்களான, தேவர்கள் ஏத்த நின்றவன்.

☸️முதல் பாதி திரிபுரம் எரித்த வரலாற்றையும் (வெளிப்புறமாக), அடுத்தபாதி உட்புறமாக , எப்படி ஐம்புலன்களை அடக்கி, மனம் , புத்தி,  ஒடுக்கி முதலியவற்றை மனதை கொண்டு ஒருநிலைப்படுத்திநம்மை வெற்றிகொள்ள வேண்டும் என்பதை சொல்கிறது இந்த அடிகள் . 
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

💥இப்பதிக சிறப்பு:

⏺️சிவபெருமானின் பல்வேறு பராக்கிரமங்களையும் சிறப்புகளையும் மனம் ஒன்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்களையும் குறிப்பால் உணர்த்தி யருயது.

🔸சிவபாத இருதயர், திருஞானசம்பந்தர் ஓதிவரும் திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்வதை நியமமாகக் கொண்டிருந்தார். பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில் தம் தந்தையார் இடர்ப்படுதலைக் கண்ட திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை அருளி இதனை ஓதி வந்தாலே அனைத்துத் திருப்பதிகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக் கூறினார் என்பர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

இது போன்று ஒவ்வொரு அடுக்கிலும் செந்தமிழ் பாக்களை அடுக்கி இந்த பாடல் அமைகிறது இப்பாடல்களின் அமைப்பு பொருள், விளக்கம், சிறப்புக்களை பதிவின் நீளம் கருதி தொடர்ந்துவரும் பதிவுகளில் சிந்திப்போம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
சிந்தனையும் தொகுப்பு ஆக்கம்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பதிவு ஒன்று : முதல் வரிசை: வரி 1, 2:
https://m.facebook.com/story.php?story_fbid=4051843124890914&id=100001957991710
பதிவு : 2, வரிசை 2,3 பாடல்வரி: 3 - 9:
https://m.facebook.com/story.php?story_fbid=4066646166743943&id=100001957991710