Wednesday, February 12, 2025

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 8 - 14.11.24 - THURSDAYபதிவு - 34துங்கபத்ரா அணை

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 8 - 14.11.24 - THURSDAY
பதிவு - 34

துங்கபத்ரா அணை

🏞️கர்நாடகாவின் ஹோஸ்பேட் நகருக்கு அருகில் அமைந்துள்ள துங்கபத்ரா அணையானது, நீர்ப்பாசனம், மின்சாரம் உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு சேவை செய்யும் பல்நோக்கு அணையாகும். 

🏞️ஹம்பியில் இருந்து சுமார் 40 நிமிடங்களில், ராயலசீமாவின் உள்ளூர் பஞ்சப் பகுதியை வளமானதாக மாற்றுவதற்காக துங்கபத்ரா அணை கட்டப்பட்டது. இன்று, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான பெரும் சர்ச்சைக்குரியது.

🌟வலிமைமிக்க கிருஷ்ணா நதியின் துணை நதியான துங்கபத்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை, இப்பகுதியின் நிலப்பரப்பு மற்றும் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். 

🌟இந்த அணை ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் உள்ளது, இது நீர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது.

🌟துங்கபத்ரா அணையின் சிறப்பம்சங்கள்

🔅 இந்த அணை 49.38 மீட்டர் உயரத்திலும், 2441 மீட்டர் நீளத்துக்கும் நீண்டு நிற்கும் பொறியியலின் ஈர்க்கக்கூடிய சாதனையாகும். 

🔅135 ஆயிரம் மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் கர்நாடகாவில் மிகப்பெரியது.

🔅 அணையின் 33 ஸ்பில்வே கேட்களும், 50 முகடு கதவுகளும், குறிப்பாக தண்ணீர் திறக்கப்படும் போது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. 

🔅அணையில் 9 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து ஜெனரேட்டர்கள் கொண்ட ஒரு பவர்ஹவுஸ் உள்ளது.

🌼துங்கபத்ரா அணையைப் பார்வையிட சிறந்த நேரம். ஹம்பி, துங்கபத்ரா அணைக்கு வருகை தருவதற்கு ஏற்ற நேரம் மழைக்காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) அணை அதன் விளிம்புகளுக்கு நிரம்பியிருக்கும் போது. அணையின் கதவுகளில் இருந்து தண்ணீர் வெளியேறும் காட்சி உண்மையிலேயே கண்கொள்ளாக் காட்சி.

🌼துங்கபத்ரா அணை இரவில் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுவதில்லை.

🌟அணைக்கு செல்லும் வழியில் மலைகள் மற்றும் காபி தோட்டங்களுக்கு இடையே ஒரு அழகிய பயணத்தை நீங்கள் அனுபவிக்க முடியும். அழகிய இயற்கைக்காட்சிகளின் பரந்த காட்சிகளை வழங்கும் ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது. 

🌼 அணையில் குறைந்த வசதிகள் இருப்பதால், பார்வையாளர்கள் தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகளை எடுத்துச் செல்வது நல்லது. 

🌼மேலும், அற்புதமான இயற்கை காட்சிகளைப் படம்பிடிக்க கேமராவை எடுத்துச் செல்லலாம்

நேரம் காலை 10:00 முதல் மாலை 5:00 வரை. நுழைவு கட்டணம் Rs.10/- சிற்றுந்து அணை View Garden பார்க்க - சென்றுவர Rs.30/-

✨சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். 

✨பார்வையாளர்கள் அந்த பகுதியை மதித்து குப்பை கொட்டுவதை அறவே தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

🌟இங்கு நன்கு பராமரிக்கப்படும் தோட்டத்தைப் பார்க்கலாம்.

🌼துங்கபத்ரா அணை பற்றி மேலும் சில தகவல்கள்:

⚜️1860 வாக்கில் பெல்லாரி, அனந்தபூர், கர்னூல் மற்றும் கடப்பா மாவட்டத்தை உள்ளடக்கிய இராயலசீமை பகுதிகளில் ஏற்பட்ட பஞ்சம் பிரிட்டீஷ் பொறியாளர்கள் கவனத்திற்கு வருகிறது. பஞ்சத்திலிருந்து மீண்டு வர துங்கபத்ரா நதி நீரைத் தேக்கிக் கால்வாய்கள் மூலம் வேளாண்மைக்குப் பயன்படுத்திக் கொள்ள அணைக்கான பரிந்துரையை முன்வைக்கப்பட்டது. 

⚜️1944 இல் மெட்ராஸ் மற்றும் ஹைதராபாத் அரசுகளுக்கிடையே புரிந்துணர்வு செய்து கொண்டு துங்கபத்ரா திட்டம் தொடங்கப்பட்டது.
⚜️மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா தலைமையில் இரு மாநில பொறியாளர்கள் கூடி அணை கட்டுமானத்தின் நீர் பங்கீடு குறித்து விவாதித்து உறுதி செய்தனர்.

⚜️1947 இல் ஆற்றின் கரைகளில் அகழ்வாய்வு செய்து, 1949 ஏப்ரல் 15 ஆம் நாள் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 

⚜️சாலைப் பாலம், அணைக் கோபுரம், நீர் தேக்கும் எந்திரங்கள், வடிகால் போன்ற பணிகள் அனைத்தும் 1958 ஜூன் மாதத்தில் நிறைவு பெற்றன. பொருட்களுக்கும், பணிக்கும் சேர்த்து மொத்தம் 16.96 கோடி செலவாகியது. 1953 ஜூலை ஒன்றாம் நாள் நீர் திறந்துவிடப்பட்டது.

🔆இந்த அணை பொறியியலின் அதிசயம் மட்டுமல்ல, இப்பகுதி மக்களின் உயிர்நாடியும் கூட. இது பெல்லாரி, ராய்ச்சூர் மற்றும் கொப்பல் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் 2 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்குகிறது. வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் அணை முக்கிய பங்கு வகிக்கிறது.

🔆ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிடையே அணை நீர் பங்கீட்டில் பிணக்கு நிலவுகிறது.
 ✨ஹைதராபாத் மாகாணத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இதன் தலைமைப் பொறியாளர் ஆவார். மண்ணும் சுண்ணாம்பும் சேர்ந்து கட்டப்பட்டதால் இதன் நிலைத்தன்மையும், நீடித்து நிற்கும் தன்மையும் கொண்டுள்ளது. 

✨இதைப் போல எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நிலைத்து நிற்கும் சிமெண்ட் அல்லாத அணை இதுவெனக் கருதப்படுகிறது. 

🌟மாபெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டு இதைக் கட்டிமுடித்தனர், அதன் பிரதான ஒப்பந்ததாரராக ஹைதராபாத் மாகாண மகபூப்நகரின் கொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் ரெட்டி முலமால்லா செயல்பட்டார்.

🌟துங்கபத்ரா அணையை சுற்றி பார்க்க
இந்த அணை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ஹம்பிக்கு அருகில் அமைந்துள்ளது, இது விஜயநகரப் பேரரசின் அற்புதமான இடிபாடுகளுக்கு பெயர் பெற்றது. விருபாக்ஷா கோயில், லோட்டஸ் மஹால் மற்றும் யானை தொழுவங்கள் ஆகியவை மற்ற இடங்களாகும்.

🌟துங்கபத்ரா அணைக்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள் : ஹம்பியைத் தவிர, ஆஞ்சநேய மலை மற்றும் துங்கபத்ரா நதி முதலிய அருகிலுள்ள பிற இடங்களாகும்.
இந்த இடங்கள் 15 மற்றும் 16.11.2024 ல் கண்டு வந்தோம்.

#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

💫எமது சுற்றுலாவின் 8ம் நாள் 14.11.2024 அன்று காலையில் கோகர்னாவில் காலை சிற்றுண்டிக்குப் பிறகு புறப்பட்டு Hospet செல்லும் வழியில் பிரம்மாண்டமான துங்கபத்ரா அணைக்கட்டு கண்டு களித்தோம்.
💫அணைக்கட்டு பகுதி மலை மீது சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது.
💫மலை அடிப்பகுதியில் இருந்து செல்வதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வாளாகம் NH சாலையை ஒட்டி உள்ளது. இங்கிருந்து தனி van வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு மேலே சென்று அணைக்கட்டு மற்றும் அமைக்கப்பட்டுள்ள Garden பார்த்துவர mini bus கட்டணம் ரூ 30 /- ஒரு முறை Ticket எடுத்துக் கொண்டு மேலே சென்று கண்டு களித்து திரும்பும் போது எந்த பஸ்ஸிலும் வரலாம்.

💫கீழ்பகுதியில் வாகன நிறுத்தும் இடம் வசதி செய்யப்பட்டுள்ளது. நுழைவு வாயில் காவலுடன் அமைக்கப்பட்டுள்ளது.
💫இங்கு வரும் மக்களுக்கு பொழுதுபோக்க, இசை நீர் ஊற்று காட்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலையில் 7.00 மற்றும் 8.00 மணி அளவில் கட்டணத்துடன் நடைபெறுகிறது.
மேலும், அருகில் ஏரி பகுதியில் படகு சவாரி செய்யவும் ஏற்பாடுகள் உள்ளன.

💫நாங்கள் இங்கு சென்று முதலில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த எங்கள் மதிய உணவு எடுத்துக் கொண்டோம். இந்த பகுதியில் Hotel, கடைகள் அதிகமாக இல்லை.

💫பிறகு, அங்கிருந்து செல்லும் Mini Busல் அணைக்கட்டு View print சென்றோம்.
இந்த இடம் சற்று உயரமான பகுதி. அணைக்கட்டு, நீர்பிடிப்புப் பகுதி, Garden மற்றும் அனைத்து பகுதிகளையும் ஒரு கழுகுப்பார்வையில், கண்டு களிக்கலாம்.

💫இந்த இடத்தில் ஒரு கலங்கரை விளக்கம் அமைத்துள்ளனர். இதன் உள்ளே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் வழி சென்று உயரமான முழு இடங்களையும் நன்றாக கண்டுகளிக்கலாம்.

💫இந்தப்பகுதி மிக உயரமான பகுதியாகும். அணைக்கட்டு பகுதி, மின்சாரம் தயாரிக்கும் பகுதி மற்றும் அழகிய Ganden பகுதி, ஏரிப்பகுதிகள் முழுமையாககண்டு களித்தோம்.
இதன் அருகில் மத்திய அரசின் விருந்தினர் மாளிகை மிகப் பிரமாண்டமான அளவில் அழகுற கட்டி வைத்துள்ளனர்.

💫அருகில், Mini பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து, கீழே செல்லலாம், மேலும் அணைக்கட்டுப் பகுதி, Garden மற்ற இடங்கள் பார்த்து செல்லலாம்.

💫நாங்கள் சென்ற போது மிக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வரவில்லை. நீர்த்தேக்கத்திலேயும் நீர் குறைவாகவே இருந்தது.

💫இந்த இடங்களைப் பார்த்துவிட்டு 
Hospet சென்று அங்கிருந்து ஹம்பியில் உள்ள பிரபலமான விருபாஷிஸ்வரர் ஆலய வளாகம் சென்றோம்.

⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼14.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...