Wednesday, February 12, 2025

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 6- 12.11.24 - TUESDAYபதிவு - 30#கொல்லூர் ஸ்ரீ #மூகாம்பிகை ஆலயம்

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 6- 12.11.24 - TUESDAY
பதிவு - 30
#கொல்லூர் ஸ்ரீ #மூகாம்பிகை ஆலயம்

#மூகாம்பிகை கோவில், #கொல்லூர் - ஆன்மிக மீட்பிற்கான சொர்க்கம் 

🌼மூகாம்பிகை கோயில் (Mookambika Devi Temple) இந்தியாவின், கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. இது ஒரு இந்து கோயிலாகும். இங்கு மூகாம்பிகை தேவி வழிபடப்படுகிறார். உடுப்பி மற்றும் மங்களூருவிலிருந்து கொல்லூருக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உண்டு. இசை ஞானி இளையராஜா இக்கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இக்கோவில் சக்தி பீடங்களில் மிகவும் சக்திவாய்ந்த திருத்தலமாக கருதப்படுகிறது.

🌼இக்கோயில் கோடாச்சத்ரி மலைக் குன்றுகளின் அடிவாரத்திலும், சௌபர்னிகா நதியின் தென்புறத்திலும் அமைந்துள்ளது. மேலும், இந்த இடமானது கோகர்ணம் மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி)க்கு இடையே அமந்துள்ளது. மூகாம்பிகை கோயில் அமைந்துள்ள நிலப்பகுதி புராண காலத்தில் துறவியான பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

 🌼இக் கோயிலின் பிரதான தெய்வமாக சுயம்பு மூர்த்தமான ஜோதிர்லிங்கம் ஆகும். இதன் நடுவில் தங்கத்தினாலான வரிகளையுடய ஒரு பிளவு காணப்படுகிறது. லிங்கத்தின் இடப்புறம் முப்பெரும் தேவியர்களையும் வலப்புறம் மும்மூர்த்திகளையும் குறிக்கிறது. இதனுடன் நான்கு கைகளையுடய பஞ்சலோகத்தாலான மூகாம்பிகை திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

🌟தல வரலாறு

🌼கொல்லூர் பகுதியில் கம்ஹாசூரன் என்ற அரக்கனின் தொல்லைகளிலிருந்து மக்களை காக்க, பார்வதி தேவி, அவ்வரக்கனை கொன்று மக்களை காத்தார். பார்வதி தேவியை இங்குள்ள மக்கள் மூகாம்பிகை என்று அழைத்து வழிபடுகின்றனர்.

🌼இக்கோயில் மூலவர் மூகாம்பிகை சிலையை 1200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹலுகல்லு வீர சங்கய்யா என்ற அரசன் நிறுவினார்.

🌼இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. தமிழ் மாதங்களான புரட்டாசியில் நவராத்திரி விழாவும், பங்குனி மாதத்தில் தேரோட்டமும் இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

🛐தமிழக முன்னாள் முதல்வர் திரு. M. G.ராமச்சந்திரன், முக்கிய பத்தர்களில் ஒருவர், அம்மனுக்குத் தங்க வாள் ஒன்று அவரால் காணிக்கை செலுத்தப்பட்டு, அதை அம்மன் இடதுபுறம் வைத்துள்ளர்கள்.

🌟புராணக்கதை

🌼சங்கர மடத்தை நிறுவிய ஆதி சங்கரர் மூகாம்பிகை தேவியின் தரிசனத்தைக் கண்டதால் இங்கு கோயிலை நிர்மாணித்தார் என்று நம்பப்படுகிறது.

🌼ஒரு நாள், தேவி மூகாம்பிகை ஆதி சங்கரர் முன்பாகத் தோன்றி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு பணித்தார். அதற்கு ஆதி சங்கரர், தான் கேரள மாநிலத்தில் தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்து, மக்கள் அனைவரும் வழிபாடு செய்வதற்கு, ஒரு கோயில் கட்டி வழிபட விரும்புவதாகக் கூறினார். அதற்கு தேவி ஒரு நிபந்தனையுடன் ஒத்துக்கொண்டார். அதாவது, சங்கரர் முன்னே செல்ல வேண்டும் என்றும், குறிப்பிட்ட இடம் வரும் வரை பின்னால் திரும்பி பார்க்கக் கூடாது எனவும் கட்டளையிட்டார். அதனால் ஆதி சங்கரர் முன்னே சென்றார். மூகாம்பிகை தேவி சங்கரரை சோதிக்க விரும்பியதால் தன் காலில் அணிந்த "கொலுசுகளின்" சலங்கை சத்தத்தை கேட்காதவாறு நிறுத்தினார். சலங்கை சத்தம் கேட்காததால் நிபந்தனையை மறந்து சங்கரர் திரும்பிப் பார்த்தார். அங்கு தேவி மூகாம்பிகை சிலை வடிவில் உருமாறி விட்டார். அந்த இடமே தற்போதைய "கொல்லூர்" ஆகும். கோயில் கட்டப்பட்ட இடமானது ஆதி சங்கரர் தவமியற்றிய இடமாகும். மற்றும் தேவி மூகாம்பிகை சங்கரருக்கு காட்சியளித்த இடம்.

🌼 கோடாச்சத்ரி மலை உச்சி ஆகும். இது கொல்லூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இம் மலையின் உச்சியை கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் வெளிப்புறத்திலிருந்து காண முடிகிறது

🔺ஆதி பராசக்தி, கொல்லூர் மூகாம்பிகா தேவி நமது பிரபஞ்ச தாய். அவள் உலகத்தை போஷிப்பவளாகவும், போஷிப்பவளாகவும் கருதப்படுகிறாள்.

 🔺எனவே உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள், குறிப்பாக இந்துக்கள் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வருகை தருகின்றனர். கொல்லூர் மூகாம்பிகை அம்மனை வழிபட்டு தங்கள் அதிர்ஷ்டத்தை மாற்ற பக்தர்கள் கொல்லூர் யாத்திரை மேற்கொள்கின்றனர். கொல்லூர் மூகாம்பிகையின் புனித கோவிலுக்கு ஏழை, பணக்காரர், சிறியவர், முதியவர், நோயாளிகள், ஆரோக்கியம் என அனைத்து வகை மக்களும் வந்து செல்கின்றனர். 

⚜️அனைத்து தெய்வீக சக்திகளின் உருவகமாக இருக்கிறாள். கொல்லூர் மூகாம்பிகை காளி, மஹாலக்ஷ்மி மற்றும் சரஸ்வதியைக் குறிக்கும் கைகளில் வட்டு மற்றும் சங்குடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். 

⚜️இந்து புராணங்கள் பண்டைய இந்து வேதங்களிலிருந்து தோன்றிய பண்டைய கதைகள் மற்றும் வழக்குகளின் வெளிப்பாடுகளால் நிறைந்துள்ளன. பல நூற்றாண்டுகளாக, மகாபாரதம், ராமாயணம் மற்றும் உபநிடதங்கள் போன்ற புனித நூல்கள் மற்றும் புத்தகங்கள் இந்துக்களின் பூர்வீகத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன, மேலும் ஒரு உன்னதமானவர் அல்லது கடவுள் இருக்கிறார், மற்ற அனைத்து தெய்வங்களும் கடவுளின் மறுபிறவிகள் என்ற நம்பிக்கையை நிறுவியுள்ளன. சுப்ரீம் பீயிங். எனவே, இந்து மதம் ஒரு மதமாக பல தெய்வங்களை வழிபட அனுமதிக்கிறது. இந்து புராணங்களில் சுமார் 330 மில்லியன் கடவுள்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இருப்பினும், வேதங்கள் 33 தெய்வங்கள் இருப்பதாகக் கூறுகின்றன, மற்றவர்கள் இந்த தெய்வங்களின் அவதாரங்கள் என்பதால் ஒருவர் இந்த தெய்வங்களை வணங்கலாம். 

🔺உலகில் வாழும் அனைத்து மத மரபுகளிலும், பெண் வடிவத்தில் தெய்வீகத்தின் விரிவான வழிபாடு இந்து மதத்தில் மட்டுமே செய்யப்படுகிறது.

🔺 பெண் தெய்வங்கள் ஆண்களுடன் ஒப்பிடும்போது அதிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உண்மையில், இந்து மதத்தில் தேவிக்கான வார்த்தை சக்தி, இது "சக்தி" அல்லது "ஆற்றல்" என்றும் பொருள்படும். முக்கிய இந்து தெய்வங்கள் - லக்ஷ்மி, சரவதி, பார்வதி, காளி, துர்கா ஆகியோர் பல நூற்றாண்டுகளாக கவிதை கவிதைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். எல்லாப் பழைய வேதங்களும், பேய்களின் தீய செயல்களை உலகம் கைவிட வேண்டிய போதெல்லாம் தேவி சக்தி எவ்வாறு வலுவாக வெளிப்பட்டது என்பதை தெளிவாகக் கூறுகிறது. பெண்மையின் தெய்வீகம் பற்றிய கருத்து ஆரம்பத்திலிருந்தே அடையாளம் காணப்பட்டது, உயிர் சக்தி, சிற்றின்ப அழகு, பாலியல் கருவுறுதல், தாய்மை மற்றும் சக்தி. அவள் தாய், அவள் உயர்ந்த சக்தி, அவள் கொடுப்பவள், எடுப்பவள், அவள் வாழ்க்கையின் ஆதாரம், உலகை இயக்குவதற்கும் சமநிலையை மீட்டெடுப்பதற்கும் பின்னால் உள்ள சக்தி.

🔺அத்தகைய தேவி மூகாம்பிகை இந்தியாவின் தென் பகுதியில் அழகிய மலைகளுக்கு மத்தியில் வசிக்கிறாள். ஸ்ரீ மூகாம்பிகை கோயில் இந்தியாவில் ஆதி சக்தியை (முழு சக்தி) வழிபடும் மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும், மேலும் இது தேவி மகாலட்சுமி, பார்வதி மற்றும் சரஸ்வதியின் உருவகமாக நம்பப்படுகிறது. 

🔺மூகாம்பிகை கோவிலின் உத்பவ லிங்கம் (தன்னை வெளிப்படுத்திய பல்லஸ்) புருஷன் (ஆண்) மற்றும் சக்தி (பெண்) இருவரையும் குறிக்கிறது. 

🔺இக்கோவில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கொல்லூர் பகுதியில் அமைந்துள்ளது. இது சௌபர்ணிகா நதிக்கரையில் அமைந்துள்ளது. கொல்லூரில் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த இந்த கோவில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறது.
(நன்றி🙏🏻 வலை தளங்கள்)

#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

🔹நாங்கள் 12.11.2024 மாலை 3.00 மணி அளவில் இவ்வாலயம் வந்தோம். 🔹பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்ததால், எளிதாக சுவாமி தரிசனம் செய்தோம்.
🔹கிழக்குப் பார்த்த ஆலயம். உட்பிரகாரத்தில் வரிசையில் சென்று கர்ப்பகிரகம் தரிசனம் செய்ய வேண்டும்.
உட்பிரகாரத்தில் பிரார்த்தனை மண்டபம், பூசை மண்டபம், மற்றும் பெரிய தேர் உள்ளது.
🔹ஆலயம் , காலையில் 5 மணி முதல் நண்பகல் 1.30 வரையிலும், மதியம் 3 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

🛐எமக்கு மூன்றாவது முறையாக இவ்வாலயம் தரிசனம் கிடைத்துள்ளது. 

🕉️ஸ்ரீமூகாம்பிகையின் அருள்சக்தி போற்றுதலுக்குரியது; அளவிட முடியாதது.

🕉️செளபர்னிகா என்ற புன்னிய ஆறு வடபுறத்திலும், கிழக்கிலும் ஒடுகிறது.

🔺வாகனங்கள் நிறுத்த தனி இடவசதி உள்ளது.
🔺அதிக கூட்ட நேரங்களில் வரிசையில் வந்து தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
🔺இந்த ஆலயம் தரிசித்துவிட்டு, அடுத்ததாக முருடேஸ்வரம் சென்றோம்

⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
12.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...