Friday, April 9, 2021

உஜ்ஜயினி - ராம் GHAT - ஜோதிர்லிங்கதரிசனம் 2021

ராம் GHAT -உஜ்ஜியினி ஆலயங்கள்:
10.03.2021.
உஜ்ஜியினியில் உள்ளது ஷிப்ரா நதி
ஷிப்ரா நதிக்கரையில் உள்ள ஒரு முக்கிய ஸ்தான கட்டம். ராம் GHAT.
சிப்ரா நதி புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று.
புராதானமானது.
தேவாமிர்தம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று.
12 ஆண்டுகளுக்கு 1 முறை கும்பமேளவிழா நடைபெறுவது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு 
 ஒருமுறை கும்பமேளா விழாவின் போது  லட்சக்கணக்காண பக்தர்கள் பாரதம் முழுதும் இருந்து இங்கு வந்து நீராடுகிறார்கள். 
பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக
நீளமான படித்துறைகள் இருபுறமும் உள்ளன.  
பெரிய சிறிய ஆலயங்கள் இருகரைகளிலும் உள்ளது.
தினம் மாலையில் ஆர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.
பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்யவும், பூசை செய்யவும் பண்டாக்கள் உதவுகிறார்கள்.
எல்லா பொழுதிலும் மனிதர்கள் நடமாட்டம் உள்ளது. 
இங்கு நீராடி வழிபடுதல் மிகவும் புனிதமானது.
மகாகாளேஸ்வரர் ஆலயப்பகுதியை அடுத்து இருக்கும்  மிகப்பெரிய ருத்ரசாகார் என்ற ஏரி பகுதி உள்ளது. இதை அடுத்து சுமார் 1 கி.மீ. தூரத்தில்தான் ஷிப்ரா நதி உள்ளது.
பொதுவாக  உஜ்ஜியினியின் பெரும்பகுதியில் ஷிப்ரா நதி உள்ளது.
(விடியற்காலையில் சென்று நீராடி ஸ்ரீமகாகாளேஸ்வரரை தரிசித்தோம்) 
10.03.2021
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Wednesday, April 7, 2021

ஜோதிர்லிங்கதரிசனம் 2021 உஜ்ஜியினி மகாகாளேஸ்வரர்

உஜ்ஜயினி :
மத்திய பிரதேசத்தில் உள்ள பாரதத்தின் மிக முக்கியமான தலம்.
இங்கு பல கோவில்கள் நிறைந்து உள்ளது. புனிதமான ஷிப்ரா நதி இவ்வூரில் உள்ளது. கரையெல்லாம் பல பல கோவில்கள் உண்டு. 84 லிங்கங்கள். பல புராண, புராதான ஆலயங்கள் நிறைந்த ஊர்.
ஏழு மோட்ச நகரங்களுள் இதுவும் ஒன்று. அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை. மற்ற தலங்கள்.

புராணம்:
சுதார்வா என்ற ஜைன அரசன் தான் அவந்திகை என்ற இந்த நகருக்கு உஜ்ஜயினி என்று பெயர் வைத்தார்.

 முக்கிய தீர்த்தமாகிய சிப்ரா நதியில் மூழ்கி நீராடி மகாகாளரை வணங்க வேண்டும்.
 காளி தரிசனம் செய்ய வேண்டும்.

 உத்+ஜைன =ஜைன சைமயத்தை உத்தம நிலைக்கு கொண்டுவந்த நகரம் 

தேவாமிர்தம் சிந்திய 4 புண்ணிய இடங்களில் இதுவும் ஒன்று.

12 ஆண்டுகளுக்கு 1 முறை கும்பமேளவிழா நடைபெறுகிறது.

இங்குதான் கிருஷ்ணர், பலராமர், சுதாமர் முதலியோர் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றனர்.

சிவபுராணத்தில் அவந்தி மாநகரில் விலாசன் என்ற சிவபக்தன் சிவபூசை செய்து கொண்டிருந்தபோது, இரத்தின மாலை என்ற மலையில்
வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன்,
 பூசைப்பொருள்களை எரிந்து தாக்கினான். சிவன் கோபம் கொண்டு அரக்கனை வீழ்த்தினார். 
மக்கள் வேண்டுதலை ஏற்று, 
மகாகாளர் என்ற பெயரில் லிங்க உருவில் இங்கு சிவன் இருக்கிறார்.

மாகாகாளேஸ்வரம் :

12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று.

இந்த லிங்கமானது தென்புறம் பார்த்து உள்ளது.
 இதன் கருவரையில் ஸ்ரீ பார்வதிதேவி, ஸ்ரீ சுப்பிரமணியர், நந்தி இவர்கள் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.

இவ்வாலயம் 3 அடுக்குகள் கொண்டது. கீழ் அடுக்கில் மகாகாளேஸ்வரர் தென்புறம் நோக்கியும்.
2வது தரைதளத்தில் ஓம்காரேஸ்வரரும், 
அடுத்த மேல் அடுக்கில் நாக சந்திரேஸ்வரரும் உள்ளனர்.

வேறு பல சன்னதிகளும் சுற்றிலும் உள்ளன.

விடியற்காலையில் சுடுகாட்டு சாம்பல் கொண்டு செய்யப்படும் விபூதி அபிஷேகம் மிகவும் சிறப்பு.

இந்த பிரதான ஆலயத்தைச் சுற்றிலும் மேலும் பல லிங்கங்களும் சன்னதிகளும் உள்ளன.

முக்கியமான ஆலயமாக இருப்பதால் மிகப்பெரிய பாதுகாப்பும் கட்டிட அமைப்பும் உள்ளது. 

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் சாரி சாரியாக வந்து வழிபடுகிறார்கள். 

இவருக்கு பால் அபிஷேகம், செய்தும், விதவிதமான அலங்காரங்கள் செய்தும் ஆர்த்தி வழிபாடு நடைபெறுகிறது. 

மிகப்பெரிய (q Rows) வரிசைகள் அமைத்தும், படிகள் அமைத்தும் உள்ளனர். சிறப்பு வழிபாடு செய்பவர்கள் தனி பணம் கட்டி கருவரை உள்ளே சென்று தொட்டும் வணங்குகிறார்கள்.

 பல நிமிடங்கள் தொடர்ந்து பூசை செய்தும், ஆர்த்தி செய்கிறார்கள்.
மக்கள் குரல் ஒலி எழுப்பியும், கைகளைத் தட்டியும் ஒலி எழுப்புவது வித்தியாசமான வழிபாடு.

கைப்பேசி அனுமதிக்கப்படுவதால் எல்லோரும் கைப்பேசியில் புகைப்படம் எடுப்பதும் வித்தியாசமாகப்பட்டது.

ஆலயம் உள் செல்லவும், வெளியில் வரவும் தனித்தனி பாதைகள்.

மகாகாளேஸ்வரர் தரிசித்தபின் கூட்டம் நெரிசல் இல்லாமல் மற்ற சன்னதிகளை தரிசிக்கலாம்.

இன்னும் பல சிறப்புகள் உள்ள இவ்வாலயத்தை இரண்டாவது முறையாக தரிசனம் செய்யக் கூடியது இறையருளே.
10.03.2021
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
முதல் பதிவு.. 

இந்த பதிவு. படங்களுடன் காண:

Saturday, April 3, 2021

திருத்தலங்கள் தரிசனம் APRIL - 2021 கீழ்வேளுர், கடம்பர வாழ்க்கை, இளங்கடம்பனூர்

கீழ்வேளுர்
அ/மி. ஸ்ரீசுந்தர குஜாம்பிகை ஸ்ரீ அட்ச லிங்கேஸ்வரர். (கேடிலியப்பர் ஆலயம்),  
பிரசித்திப் பெற்ற அஞ்சு வட்டத்தமாள் பங்குனி உற்சவம் நடைபெற்று வருகிறது.
🌼கீழ்வேளுர் பாடல் பெற்ற தலம்
🏵️அட்சயலிங்கேஸ்வரர். பீடம் மட்டுமே உள்ளது. 🌸குவளை பகுதியால் மூடி தரிசனம்.
🌺நடராஜர் வலது பாதம் தூக்கி ஆடும் வித்தியாசமான அமைப்பு.
🌷மாடக்கோவில்
🥀ஏராளமான சுவாமி சன்னதிகள் கொண்டது.
🌹நவக்கிரகங்கள் ஆலய தெமேற்கு மூலையில் வடக்குப் பார்த்த அமைப்பு.
☘️பிரகதீஸ்வரர், காயாரோகணேஸ்வர், 
மற்றும் பஞ்ச லிங்கங்கள் எல்லாம் தனித்தனி சன்னதிகள்.
🍁அ/மி. அஞ்சு வட்டத்தம்மாள் ஆலயம் உட்பிரகாரத்தில் வடகிழக்கில், வடக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.

31.03.2021
#அற்புதஆலயம்.
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

கடம்பரவாழ்க்கை:
 1. நாகப்பட்டிணம் - கீழ்வேளூர் சாலையில் வரும் ஆழியூரிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் பாதையில் 2 கி.மீ தூரத்தில் உள்ளது.

2. நாகூரிலிருந்து ஆழியூர் செல்லும் பாதையில் சிராங்கம்புலியூர் அருகில் தேமங்கலத்திலிருந்து செல்லும் பாதையில் 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.

முருகன் வணங்கிய பஞ்ச கடம்பத்தலங்களில் இதுவும் ஒன்று.

புராதனமான தலம். தற்போது புதிய முறையில் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீவிசாலாட்சியம்மன் ஆலயம்.
சுவாமி கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்கு பார்த்தும் அமர்ந்த ஆலயம்.
தனித்தனி கருவரை மண்டபங்கள் இணைக்கப்பட்டு ஏகமண்டபமாக புதிய முறையில் கட்டப்பட்டுள்ள ஆலயம்.

சுற்றுப் பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி சிறப்பான அமைப்புடன் உள்ளார்.

 விநாயகர், சுப்ரமணியர், மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீவரதராஜபெருமாள் மற்றும் கருடாழ்வார், ஆஞ்சனேயர் இணைந்த தனி சன்னதிகளும் உள்ளன.

பைரவர் இரண்டும், சந்திரன் சன்னதிகளும் சிறிய அளவில் உள்ளது.

அர்ச்சகர் நாகையிலிருந்து வருகிறார்.
சிறிய ஆலயத்தை ஊர்மக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பராமரித்து வருவது சிறப்பு.
01.04.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

இளங்கடம்பனூர்:
பஞ்ச கடம்ப தலங்களில் ஒன்று.
நாகூர் - ஆழியூர் செல்லும் வழியில் உள்ள சிற்றூரில், அமைந்துள்ளது; அ/மி சோழிஸ்வரமுடையார், ஸ்ரீசெளந்தரநாயகி அம்பாள் ஆலயம்.
கிழக்குப் பார்த்த ஆலயம்.
3 நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது. ஆலயம் பிற்காலத்தில் எடுத்து கட்டியுள்ளார்கள். 
சுவாமி, அம்பாள் தனித்தனி கருவறை அமைப்பில் இருந்தும், ஏகமண்டபத்தால் இணைத்துள்ளனர். ஒரே பிரகாரம், விநாயகர், பாலமுருகன், மகாலட்சுமி நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர். தனித்தனி கருவறை மண்டபங்கள்.
சிறிய கிராமமாக இருப்பதால், பக்தர்கள் வருகை சுமாராக இருப்பினும் பரமரிக்க ஊர்மக்கள் ஒன்றுகூடி இன்னும் முயற்சி செய்தால் ஆலயம் நல்ல நிலையை கட்டாயம் எட்டும்.
01.04.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

ஜோதிர்லிங்கதரிசனம் 2021 பதிவு : 1. 10.03.2021 - உஜ்ஜயினி

வணக்கம் 
#ஜோதிர்லிங்கதரிசனம்2021 அனுபவக்குறிப்புகள்.

தனி ரயிலில் TRAVEL TIMES மூலம்
 IRCTC ரயில் Tour ஏற்பாடு  சில ஜோதிர்லிங்கள் தரிசனம் செய்துவந்த அனுபவங்கள் இந்த பதிவுகள்:

10.03.2021.
 உஜ்ஜயினி Railway Station அடைந்ததும், தனி பேருந்தில் அழைத்துச் சென்று விடியற்காலையில் நீண்ட Hall கொண்ட சத்திரம் இடத்தில் தங்க வசதி செய்திருந்தனர்.
(நாங்கள் பக்கத்தில் இருந்த Hotel லில் தனியாக Room Rs.1750 4.AM to 4.AM. 3 Beded Room. Attached bathroom, Non A.C.)
தங்கிக் கொண்டோம்.

10.03.2021.
நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து விடியற்காலையில் Ramkund Shipra River சென்று நீராடி வந்தோம்.
காலை உணவு முடிந்து,
பிறகு மகாகாளேஸ்வரர் தரிசனம்.
ஆலயம் வெளியில் வந்து
கணபதி ஆலயம்,
பாரதமாத ஆலயம்
தரிசித்து வந்த பின்
அங்குள்ள ஆலங்களை Auto மூலம் சென்று பார்த்துவந்தோம். 
6 ஆலயங்கள் Rs.150
1 Bhatrihari Caves
2.மங்களநாத் மந்தீர்
3.காலபைரவர்
5. Sri Sethiman Ganesh temple
6.Gadhkaika Mata (பிரார்த்தனை ஸ்தலம்)
மேற்படி ஆலயங்கள் தரிசனம் முடிந்து, (Meals  and rest)

மாலையில் கால்நடையாகவே சென்று கீழ்கண்ட ஆலயங்கள் தரிசித்தோம்.
ஊர் முழுதும் சிவராத்திரி உற்சவம் மிக சிறப்பான கொண்டாடம்.
காவல் துறையும், அரசும் பலத்த பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தியிருந்ததனாலும், கூட்டம் அதிகம் இருந்ததாலும். ஊரின் மிகப் பெரிய திருவிழா களை எங்கும் இருந்தது. 

1.SAKTHI PEEDAM - HARSIDDI MADHA
2. விக்ரமாதித்தியன் Temple
3. Ram Temple
4.Shree Rudrashwar Mahadev (mini temple)
மீண்டும் ஹரிசித்தி மாதா ஆலயம் மற்றும் பெரிய கணபதி ஆலயம் தரிசித்தோம். 
தங்கி இருந்த இடம் அருகில் உள்ள vighnharta Ganapati temple. விநாயகர் ஆலயம் தரிசித்து மீண்டும் இரவு 
Night tiffen இரவு தங்கல்.

11.03.2021

Early Morning (room vacated)and went temple area சிவராத்திரி உற்சவம் மிகமிக அதிக கூட்டம் பக்தர்கள் எங்கும் ஆலய வளாகம் சுற்றி பெரிய பெரிய TV மூலம் கருவறையில் நடப்பதை LIVE ஆக ஒளிபரப்பிக்கொண்டே இருந்தார்கள். அபிஷேகம், ஆராதனைகள் நடந்தபோது பக்தர்கள், குறிப்பாக இளைஞர்கள் பெரும்பாலும் ஆடியும், கைத்தட்டியும் உற்சாகமாக வணங்கியது புதிய அனுபவம்.
அரசின் பலத்த பாதுகாப்பு வரிசை ஒழுங்கு சிறப்பாகஏற்பாடுகள் செய்திருந்தனர்.
காலை 6. மணி அளவில் தங்குமிடம் வந்து காலை உணவு முடித்து Auto மூலம் பஸ் பார்க்கிங் சென்று
ஓம்காரேஸ்வரர் புறப்பட்டோம். 
வழியில் உணவு. ஓம் காரேஸ்வரர் சென்று தரிசனம் முடித்து இரவு நேரடியாக ரயிலுக்கு சென்றுவிட்டோம்.
(அடுத்த பதிவில்)
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...