பணாமணீசுவரர் கோயில் (பணாமணீசம்)
#காஞ்சிபுரம்நவக்கிரகஸ்தலம்
அருள்மிகு பணாமுடிஸ்வரர் (பணாமணீசுவரர்) திருக்கோயில் பல்லவ மற்றும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழமையான சிவத்தலமாகும். சிறப்பம்சங்கள்: ராகு-கேது பரிகாரம்: காஞ்சிபுரத்தில் உள்ள நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகும். இது நாக தோஷம் நீக்கும் ராகு-கேது பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
கிழக்கு நோக்கிய ஆலயம் பிரதான சாலையில் 3 நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே ஒரு சிறிய வளைவுடன் மதில் சுவரும் உடையது அடுத்து பலிபீடம் மற்றும் மண்டபத்துடன் நந்தி உள்ளது
சுவாமி கருவரை உள்நுழைவு தென்புறம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே மகா மண்டபம் உள் மண்டபம் அர்த்தமன்டபத்துடன் கிழக்கு நோக்கிய கருவரையில் ஈசன் உள்ளர்
பிரகாரத்தில் மேற்குபுரத்தில் வரசித்தி விநாயகர் சித்தீஸ்வர் தனித்தனியான சன்னதிகள் மற்றும் கோஷ்ட்டத்தில் நடனவிநாயகர், தட்சினாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர்
தல வரலாறு
திருப்பாற்கடலைக் கடைந்தபொழுது வாசுகிப் பாம்பு விஷத்தைக் கக்கி உலகைத் துன்புறுத்திய தன் தோசத்தைப் போக்கிக் கொள்ள, அனந்த தீர்த்தத்தை உண்டாக்கி, அதன் கரையில் சிவலிங்கத்தை நிறுவி, தன்னிடத்துள்ள மாணிக்கத்தைச் சுவாமிக்குச் சார்த்தி வழிபட்டு தன் தோசத்தைப் போக்கிப், பேறு பெற்றது. பாம்பின் மணியாகிய மாணிக்கத்தை கொண்டு வழிபட்டமையால், இவ்விறைவர் "பணாமணீசர்" என்று பெயர் பெற்றாரென்பது இத்தல வரலாறாக அறியப்பட்டது.
தல பதிகம்
பாடல்: (1) (பணாமணீச வரலாறு)
அத்த லத்திடைத் தன்பிழை அகலவா சுகியும்
பத்தி யிற்பணா மணீசனைப் பண்புற இருத்திச்
சுத்த நீர்நிறை அனந்ததீர்த் தத்தடந் தொட்டு
நித்தம் அக்கரைக் கண்இருந் தருச்சனை நிரப்பி.
பொழிப்புரை: (1)
அத்தவத்தின்கண் தனது பிழைதீர வாசுகி என்னும் பெரும் பாம்பும்
பேரன்பிற் பணாமணீசனை விதிப்படி தாபித்துத் தூயநீர் நிறைந்த அனந்த
தீர்த்தத் தடம் வகுத்து நாடொறும் அக்கரையிலிருந்து அருச்சனை முற்றுறச் செய்து,
பாடல்: (2)
பணாம ணீசனைத் தன்பண மணிகளாற் பரவி
நணாவ கத்தமர் நம்பனே நலிவுசெய் விடத்தை
உணாவெ னக்கொளும் உத்தமா எனத்துதித் துமையாள்
மணாளன் மேனியில் இழையெனப் பயில்வரம் பெற்றான்.
பொழிப்புரை: (2)
பணாமணீசப் பெருமானைத் தன்னுடைய படத்தின் இரத்தினங்களால்
பூசனை செய்து திருநணா என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள
விரும்பியடையத்தக்கவனே! வருத்தம் செய்த விடத்தை உணவு போலக்
கொண்டு பருகும் தலைவனே! எனத் துதி செய்து உமையம்மை மணவாளன்
திருமேனியில் அணிகலமாகத் தங்குகின்ற வரத்தினைப் பெற்றனன்.
வாசுகி பாலில் விடம் பெய்த பிழையுந் தவிர்ந்து அணிகலனாக
இறைவன் திருமேனியில் விளங்கவும் பேறு பெற்றனன்.
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் தென்கிழக்கு பகுதியில் (சிறிய காஞ்சிபுரம் (விஷ்ணுகாஞ்சி) திருவள்ளுவர் தெருவருகே உள்ள ஐயங்கார்பாளையத் தெருவில் கிழக்கு பார்த்த சந்நிதியாக இச்சந்நிதி உள்ளது. மேலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குத் தெற்கே சுமார் 3 கி.மீ தொலைவில், உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ளது.
மிக மிகப் பழமையான ஆலயம் முழுதும் புனரமைக்கப்பட்டுவருகிறது சுவாமிமட்டும் தனி சன்னதி அமைப்பில் தென்மேற்குப் பகுதியில் பூசைகளுடன் உள்ளார்.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment